என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சபாநாயகர் அவதூறாக பேசுவது அவர் வகிக்கும் பொறுப்புக்கு அழகல்ல- செல்வப்பெருந்தகை கண்டனம்
    X

    சபாநாயகர் அவதூறாக பேசுவது அவர் வகிக்கும் பொறுப்புக்கு அழகல்ல- செல்வப்பெருந்தகை கண்டனம்

    • சபாநாயகர் ஓம்பிர்லா குற்றம்சாட்டிருப்பதை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வன்மையான கண்டிக்கின்றேன்.
    • அகிம்சையே காங்கிரஸ் பேரியக்கத்தின் கொள்கை.

    காங்கிரஸ் எம்பிக்கள் ஜோதிமணி, சுதா இருவரும் பிரதமரை தாக்க திட்டமிட்டதாக சபாநாயகர் கூறியதற்கு தமிழக காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து தமிழக காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள கண்டன பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழ்நாடு காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்வி ஜோதிமணி, செல்வி சுதா மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் பிரதமர் மோடி தாக்க திட்டமிட்டிருந்தார்கள் என்று உண்மைக்கு புறம்பாக சபாநாயகர் ஓம்பிர்லா குற்றம்சாட்டிருப்பதை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வன்மையான கண்டிக்கின்றேன். அவருக்கு எனது கண்டனங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    பிரதமர் அவைக்கு வந்து சீனா ஊடுருவல் மற்றும் அமெரிக்காவின் நிபந்தனைக்கு பணிந்தது குறித்து விளக்கம் அளிக்க வேண்டுமென்று எதிர்கட்சிகள் கூறிய நிலையில், இன்று அவர் அவைக்கு வரவில்லை. அதற்கு சபாநாயகர் மேற்கண்டவாறு விளக்கமளித்திருக்கார்.

    நடுநிலையுடன் செயல்பட வேண்டிய சபாநாயகர் அவதூறாக பேசுவது அவர் வகிக்கும் பொறுப்புக்கு அழகல்ல. அகிம்சையே காங்கிரஸ் பேரியக்கத்தின் கொள்கை. எனவே, அவர் கூறிய அபாண்டமான குற்றச்சாட்டை திரும்ப பெற வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×