search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Om Birla"

    • ஓம் பிர்லாவின் இளைய மகள் அஞ்சலி பிர்லா மாடலிங் தொழிலில் ஈடுபட்டு வந்தார்.
    • அஞ்சலி பிர்லா 2019-ம் ஆண்டு தனது முதல் முயற்சியிலேயே யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றார்.

    மக்களவை சபாநாயகராக தொடர்ந்து 2 ஆவது முறையாக பாஜக எம்.பி ஓம் பிர்லா தேர்வாகியுள்ளார்.

    ராஜஸ்தானைச் சேர்ந்த மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் பல்ராம் ஜாகருக்கு பிறகு 39 வருடங்கள் கழித்து இரண்டு முறை மக்களவை சபாநாயகர் ஆகும் பெருமையை ஓம் பிர்லா பெற்றுள்ளார்.

    கடந்த 1991 ஆம் ஆண்டு அமிதா பிர்லாவை திருமணம் செய்து கொண்ட ஓம் பிர்லாவுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

    இவரது இளைய மகள் அஞ்சலி பிர்லா மாடலிங் தொழிலில் ஈடுபட்டு வந்தார். பின்னர் கடந்த 2019 ஆம் ஆண்டு தனது முதல் முயற்சியிலேயே யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றார். தொடர்ந்து அகாடெமியில் பயிற்சி பெற்று ஐ.ஏ.எஸ் ஆன அஞ்சலி பிர்லா தற்போது ரயில்வே அமைச்சகத்தின் கீழ் பணியாற்றி வருகிறார்.

    மாடலிங் துறையில் ஈடுபட்டு வந்த அஞ்சலி பிர்லா தனது தந்தையின் செல்வாக்கினால் தேர்வு எழுதாமலேயே ஐ.ஏ.எஸ் ஆனதாக சமூக வலைத்தளங்களில் பலர் குற்றம் சாட்டினர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    ஆனால், இத்தகைய குற்றச்சாட்டுகளை அஞ்சலி பிர்லா மறுத்துள்ளார். தன் மீது அவதூறு பரப்ப வேண்டும் என்று நோக்கத்தில் தான் இத்தகைய குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.

    இந்நிலையில், தன் மீது அவதூறு பரப்பும் இத்தகைய சமூக வலைத்தள பதிவுகளை நீக்கக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் அஞ்சலி பிர்லா அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

    அந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, அஞ்சலி பிர்லாவிற்கு எதிரான பதிவுகளை அடுத்த 24 மணி நேரத்திற்குள் நீக்க வேண்டும் என்று எக்ஸ் மற்றும் கூகுள் நிறுவனத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    மேலும், இந்த வழக்கில், எக்ஸ், கூகுள், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திற்கு நோட்டீஸ் அனுப்பிய உயர் நீதிமன்றம், நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

    • சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
    • இவரது இளைய மகள் அஞ்சலி பிர்லா மாடலிங் தொழிலில் ஈடுபட்டு வந்தார்.

    மக்களவை சபாநாயகராக தொடர்ந்து 2 ஆவது முறையாக பாஜக எம்.பி ஓம் பிர்லா தேர்வாகியுள்ளார்.

    ராஜஸ்தானைச் சேர்ந்த மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் பல்ராம் ஜாகருக்கு பிறகு 39 வருடங்கள் கழித்து இரண்டு முறை மக்களவை சபாநாயகர் ஆகும் பெருமையை ஓம் பிர்லா பெற்றுள்ளார்.

    கடந்த 1991 ஆம் ஆண்டு அமிதா பிர்லாவை திருமணம் செய்து கொண்ட ஓம் பிர்லாவுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

    இவரது இளைய மகள் அஞ்சலி பிர்லா மாடலிங் தொழிலில் ஈடுபட்டு வந்தார். பின்னர் கடந்த 2019 ஆம் ஆண்டு தனது முதல் முயற்சியிலேயே யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றார். தொடர்ந்து அகாடெமியில் பயிற்சி பெற்று ஐ.ஏ.எஸ் ஆன அஞ்சலி பிர்லா தற்போது ரயில்வே அமைச்சகத்தின் கீழ் பணியாற்றி வருகிறார்.

    மாடலிங் துறையில் ஈடுபட்டு வந்த அஞ்சலி பிர்லா தனது தந்தையின் செல்வாக்கினால் தேர்வு எழுதாமலேயே ஐ.ஏ.எஸ் ஆனதாக சமூக வலைத்தளங்களில் பலர் குற்றம் சாட்டினர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    ஆனால், இத்தகைய குற்றச்சாட்டுகளை அஞ்சலி பிர்லா மறுத்துள்ளார். தன் மீது அவதூறு பரப்ப வேண்டும் என்று நோக்கத்தில் தான் இத்தகைய குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.

    இந்நிலையில், தன் மீது அவதூறு பரப்பும் இத்தகைய சமூக வலைத்தள பதிவுகளை நீக்கக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் அஞ்சலி பிர்லா அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • பாராளுமன்ற விவாதத்துக்கும், தெருக்களில் நடக்கும் விவாதத்துக்கும் வித்தியாசத்தை மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
    • 10 ஆண்டுகளாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் ஒரு கேள்விக்கு கூட பதில் சொல்லாத பிரதமரை பார்த்து பேசப் பழகுங்கள் அவைத்தலைவரே.

    புதிய பாராளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி அமளியில் ஈடுபட்டன. பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதங்களிலும் அனல் பறந்தன.

    இந்தநிலையில் சபாநாயகர் ஓம்பிர்லா தனது சொந்த தொகுதியான ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவுக்கு சென்றார்.

    அங்கு செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஓம்பிர்லா, "பாராளுமன்றத்தில் சபாநாயகர் பதவிக்கு தேர்தல் நடந்தது ஜனநாயகம் செழிப்பாக இருப்பதை காட்டுகிறது. இது வரவேற்கப்படவேண்டிய ஒன்று. பாராளுமன்ற விவாதம் தெருச்சண்டை போல் இருக்கக்கூடாது. பாராளுமன்ற விவாதத்துக்கும், தெருக்களில் நடக்கும் விவாதத்துக்கும் வித்தியாசத்தை மக்கள் எதிர்பார்க்கிறார்கள்" என்று பேசியுள்ளார்.

    ஓம்பிர்லாவின் இந்த கருத்து தொடர்பாக மதுரை எம்பி சு.வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அதில், "எதிர்க்கட்சிகள் முழு பலத்துடன் நாடாளுமன்றத்தை பயன்படுத்த துவங்கியதும், விவாதம் தெருச்சண்டை போல் இருக்க கூடாது என்கிறார் ஓம் பிர்லா. 10 ஆண்டுகளாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் ஒரு கேள்விக்கு கூட பதில் சொல்லாத பிரதமரை பார்த்து பேசப் பழகுங்கள் அவைத்தலைவரே" என்று தெரிவித்துள்ளார்.

     

    • பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பலத்துடன் இருப்பது, மக்களில் குரலை பிரதிபலிக்க கிடைத்த வாய்ப்பு.
    • நாட்டை வழிநடத்தி செல்ல ஆக்கப்பூர்வ கருத்துக்களை எதிர்பார்க்கிறோம்.

    கோட்டா:

    புதிய பாராளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி அமளியில் ஈடுபட்டன. பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதங்களிலும் அனல் பறந்தன.

    இந்தநிலையில் சபாநாயகர் ஓம்பிர்லா தனது சொந்த தொகுதியான ராஜஸ்தான் மாநிலம் கோட்டவுக்கு சென்றார்.

    அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பாராளுமன்றத்தில் சபாநாயகர் பதவிக்கு தேர்தல் நடந்தது ஜனநாயகம் செழிப்பாக இருப்பதை காட்டுகிறது. இது வரவேற்கப்படவேண்டிய ஒன்று.

    சிறைக்கைதிகளாக இருக்கும் அம்ரித்பால் சிங், ரஷீத் ஆகியோர் மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்டவர்கள். அவர்கள் கோர்ட்டு வழிகாட்டுதல்படி பதவிப்பிரமாணம் எடுத்துள்ளனர்.

    பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பலத்துடன் இருப்பது, மக்களில் குரலை பிரதிபலிக்க கிடைத்த வாய்ப்பு. பல்வேறு கருத்துக்கள் இருப்பது ஜனநாயகத்துக்கு நல்லது. ஒவ்வொரு உறுப்பினரின் கருத்துக்களையும் தெரிவிக்க வாய்ப்பு வழங்கப்படும். நாட்டை வழிநடத்தி செல்ல ஆக்கப்பூர்வ கருத்துக்களை எதிர்பார்க்கிறோம்.

    பாராளுமன்ற விவாதம் தெருச்சண்டை போல் இருக்கக்கூடாது. பாராளுமன்ற விவாதத்துக்கும், தெருக்களில் நடக்கும் விவாதத்துக்கும் வித்தியாசத்தை மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

    இவ்வாறு சபாநாயகர் ஓம்பிர்லா கூறினார்.

    • இந்துக்களை தொடர்புபடுத்தி ராகுல்காந்தி பேசியது சபை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
    • எனது உரையின் கணிசமான பகுதி சபை குறிப்பு நடவடிக்கைகளில் இருந்து நீக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தேன்.

    பாராளுமன்றத்தில் நேற்று நடந்த விவாதத்தின்போது இந்துக்களை தொடர்புபடுத்தி ராகுல்காந்தி பேசியது சபை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. அதுபோல அக்னிவீர் திட்டம் பற்றி அவர் குறை கூறி இருக்கும் பகுதியும் நீக்கப்பட்டது. அதுபோல அக்னிவீர் திட்டம் பற்றி அவர் குறை கூறி இருக்கும் பகுதியும் நீக்கப்பட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது.

    இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில், பாராளுமன்றத்தில் விவாதத்தின்போது தான் பேசியது சபை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. அதை மீண்டும் சபை குறிப்பில் சேர்க்க வேண்டும் என்று கோரி உள்ளார்.

    எனது உரையின் கணிசமான பகுதி சபை குறிப்பு நடவடிக்கைகளில் இருந்து நீக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தேன்.

    எனது கருத்துகளை பதிவுகளிலிருந்து நீக்குவது பாராளுமன்ற ஜனநாயகத்தின் கொள்கைகளுக்கு எதிரானது என்று அதில் தெரிவித்துள்ளார்.




     


    • இந்துக்களின் உணர்வுகளை ராகுல் புண்படுத்துகிறார்.
    • அம்பானி, அதானி பேசிய பகுதிகளும் நீக்கப்பட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தில் கடந்த 24-ந்தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். அவரது உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் கடந்த 28-ந்தேதி தொடங்க திட்டமிடப்பட்டு இருந்தது.

    ஆனால் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் அந்த விவாதத்தை தொடங்க முடியவில்லை. இந்தநிலையில் பாராளுமன்ற மக்களவையில் நேற்று இந்த விவாதம் தொடங்கியது.

    மக்களவையில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் விவாதத்தில் பங்கேற்று சுமார் 1 மணி நேரம் 40 நிமிடங்கள் பேசினார். அப்போது அவர் பல்வேறு குற்றச்சாட்டுகளை மத்திய அரசு மீதும், பா.ஜ.க. தலைவர்கள் மீதும் ஆவேசமாக சுமத்தினார்.

    அவரது ஆவேச பேச்சுக்கு பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள் அமித்ஷா, ராஜ்நாத்சிங் ஆகியோர் உடனுக்குடன் பதிலடி கொடுத்தனர். இதன் காரணமாக பாராளுமன்றத்தில் நேற்று விவாதத்தில் அனல் பறந்தது.

    ராகுல்காந்தி பேசும் போது, "இந்துக்கள் என்று தங்களை அழைத்துக் கொள்பவர்கள் எந்த நேரமும் பயம், வன்முறை, வெறுப்புணர்வு, பொய்கள் பற்றியே பேசுகிறார்கள். அவர்கள் இந்துக்கள் என்று சொல்ல முடியாது" என்றார். அவர் அப்படி பேசும்போது பா.ஜ.க. எம்.பி.க்களை பார்த்து கைநீட்டி குறிப்பிட்டு பேசினார்.

    இதற்கு பிரதமர் மோடி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அவர் பதில் அளித்து பேசுகையில், "ஒட்டு மொத்த இந்து சமுதாயத்தை வன்முறையாளர்கள் என்று சொல்வது தீவிரமான விஷயம் ஆகும்" என்றார்.

    அதேபோல மத்திய மந்திரி அமித்ஷாவும் எதிர்ப்பு தெரிவித்தார். அவர் பேசுகையில், "கோடிக் கணக்கான இந்துக்களின் உணர்வுகளை ராகுல் புண்படுத்துகிறார். அதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று கூறினார்.

    ராகுல் தனது பேச்சின் போது அக்னிவீர் திட்டம் பற்றியும் கடுமையாக குறைகூறி பேசினார். மேலும் தொழில் அதிபர்கள் அம்பானி, அதானி பற்றியும் குறிப்பிட்டார். இந்த பேச்சுக்கள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் ராகுல்காந்தியின் பேச்சு பற்றி சபாநாயகர் ஓம்பிர்லா ஆய்வு நடத்தினார். ராகுல் காந்தியின் பேச்சு சபை விதிகளுக்கு உட்பட்டு இருக்கிறதா? என்று ஆய்வு செய்யப்பட்டது.

    இதையடுத்து ராகுல் காந்தி நேற்று விவாதத்தின் போது பேசிய பேச்சில் ஒரு பகுதியை நீக்குவதற்கு சபாநாயகர் ஓம்பிர்லா முடிவு செய்தார். அதன்படி ராகுல் காந்தி பேச்சின் ஒரு பகுதி நீக்கப்பட்டது. இன்று காலை அதுபற்றிய தகவல்கள் வெளியானது.

    இந்துக்களை தொடர்புபடுத்தி ராகுல்காந்தி பேசியது சபை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. பிரதமர் குறித்தும், பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். குறித்தும் அவர் முன்வைத்த விமர்சனங்கள் நீக்கப்பட்டன. அதுபோல அக்னிவீர் திட்டம் பற்றி அவர் குறைகூறி இருக்கும் பகுதியும் நீக்கப்பட்டது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மக்களவையை நடத்துவதற்கு சபாநாயகரும், துணை சபாநாயகரும் தேர்வு செய்யப்பட வேண்டும்.
    • துணை சபா நாயகர் பதவி தொடர்பாக விரைவில் தெளிவான முடிவு தெரியவரும்

    புதுடெல்லி:

    பாராளுமன்ற சட்ட விதிகளின்படி பாராளுமன்ற மக்களவையை நடத்துவதற்கு சபாநாயகரும், துணை சபாநாயகரும் தேர்வு செய்யப்பட வேண்டும். சபா நாயகர் இல்லாத நேரத்தில் சபையை நடத்த வேண்டிய முழு பொறுப்பும் துணை சபாநாயகருக்கு உண்டு என்று சட்ட விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    அந்த வகையில் பாராளுமன்றத்தில் சபாநாயகர் பதவியை ஆளும் கட்சியும், துணை சபாநாயகர் பதவியை எதிர்கட்சிகளும் பெறும் வகையில் ஒருமித்த கருத்து இதுவரை மரபுபோல இருந்து வந்தது.

    ஆனால் கடந்த 2014 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் மத்தியில் பா.ஜ.க. தனிப்பெரும் பான்மை பெற்று ஆட்சி அமைத்த நிலையில் காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெற இயலாத நிலைக்கு தள்ளப்பட்டது. இதனால் கடந்த 10 ஆண்டுகளாக துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிகளால் கேட்க இயலவில்லை.

    பா.ஜ.க.வும் துணை சபாநாயகர் பதவிக்கு யாரையும் தேர்வு செய்யவில்லை. அதற்கு பதில் சபையை நடத்துவதற்கு எம்.பி.க்கள் குழு அமைக்கப்பட்டது.

    இந்த நிலையில் தற்போது காங்கிரஸ் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ள நிலையில் துணை சபாநாயகர் பதவியை எப்படியாவது பெற்று விடவேண்டும் என்று தீவிரமான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்தியா கூட்டணி சார்பில் துணை சபாநாயகர் பதவிக்கு உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பிரசாத் எம்.பி.யை களம் இறக்க வேண்டும் என்று திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்துள்ளார்.

    சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த பிரசாத் எம்.பி. அயோத்தி ராமர் கோவில் இருக்கும் பைசாபாத் தொகுதியில் இருந்து தேர்வாகி இருக்கிறார். தலித் இனத்தை சேர்ந்தவரான இவரை துணை சபாநாயகர் தேர்வுக்கு முன்நிறுத்துவதன் மூலம் பா.ஜ.க.வுக்கு மிக கடுமையான சவாலை ஏற்படுத்த முடியும் என்று இந்தியா கூட்டணி தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.

    இதற்கிடையே துணை சபாநாயகர் பதவியை பற்றி பா.ஜ.க. மூத்த தலைவர்களும் ஆலோசனை நடத்தினார்கள். துணை சபாநாயகர் பதவியை தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தெலுங்கு தேசம் அல்லது ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு பா.ஜ.க. விட்டுக் கொடுக்கும் என்று முதலில் தகவல் வெளியானது.

    பிறகு துணை சபாநாயகர் பதவியையும் பா.ஜ.க.வே வைத்துக் கொள்ள முடிவு செய்திருப்பதாக ஒரு தகவல் வெளியானது. துணை சபாநாயகர் மூலம் முக்கிய முடிவுகளை எட்ட முடியும் என்பதால் பா.ஜ.க. தலைவர்கள் மிக தீவிரமாக ஆய்வு செய்து வந்தனர்.

    இந்த நிலையில் துணை சபாநாயகர் பதவியை கடந்த 10 ஆண்டுகளாக நிரப்பாமல் விட்டதுபோல இந்த தடவையும் கைவிட்டு விட பா.ஜ.க. தீர்மானித்து இருப்பதாக தெரிய வந்துள்ளது. அதை உறுதிப்படுத்துவது போல சபாநாயகர் ஓம்பிர்லா பாராளுமன்ற மக்களவையை வழிநடத்த 10 பேர் கொண்ட எம்.பி.க்கள் குழுவை அமைத்து அறிவித்துள்ளார்.

    அந்த எம்.பி.க்கள் குழுவில் ஜெதாம்பிகை பால், பி.சி.மோகன், சந்தியா ராய், திலிப்சைக்கியா (4 பேரும் பா.ஜ.க.), குமாரி செல்ஜா (காங்கிரஸ்), ஆ.ராசா (தி.மு.க.), ககோலி கோஸ் (திரிணாமுல் காங்கி ரஸ்), கிருஷ்ணபிரசாத் (தெலுங்குதேசம்), அவதேஸ் பிரசாத் (சமாஜ்வாடி) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

    என்றாலும் துணை சபா நாயகர் பதவி தொடர்பாக விரைவில் தெளிவான முடிவு தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • நாங்கள் உங்களை கைக்கொடுத்து வரவேற்கும்போது, நீங்கள் என்னிடம் நேருக்கு நேர் பார்த்தபடி கைக்குலுக்கினீர்கள்.
    • மோடி உங்களுடன் கைக்குலுக்கியபோது நீங்கள் தலை வணங்கி அவருடன் கைக்குலுக்கினீர்கள்- ராகுல் காந்தி.

    ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. மக்களவையில் இன்று எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசினார். அப்போது நீட், மணிப்பூர் வன்முறை உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் குறித்து ராகுல் காந்தி பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.

    அப்போது சபாநாயகரையும் விட்டு வைக்கவில்லை. சபாநாயகர் பிரதமர் மோடியின் முன் தலை வணங்கியதாக தெரிவித்தார்.

    இது தொடர்பாக ராகுல் காந்தி பேசும்போது கூறியதாவது:-

    நீங்கள்தான் (சபாநாயகர்) மக்களவையின் இறுதி நீதிபதி. உங்களுடையதுதான் கடைசி வார்த்தை. நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அதுதான் ஜனநாயகத்தின் அடிப்படையை வரையறுக்கிறது. சபாநாயகர் இருக்கையில் இரண்டு பேர் அமர்ந்து இருக்கிறார்கள். மக்களவை சபாநாயகர் மற்றும் ஓம் பிர்லா ஆகியோர் அமர்ந்துள்ளனர்.

    நான் சில விசயங்களை கவனித்தேன். நாங்கள் உங்களை கைக்கொடுத்து வரவேற்கும்போது, நீங்கள் என்னிடம் நேருக்கு நேர் பார்த்தபடி கைக்குலுக்கினீர்கள். மோடி உங்களுடன் கைக்குலுக்கியபோது நீங்கள் தலை வணங்கி அவருடன் கைக்குலுக்கினீர்கள்" என்றார்.

    அப்போது பாஜக எம்.பி.க்கள் அனைவரும் எழுந்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

    ஆனால் ஓம் பிர்லா நமது பாரம்பரியம்படி மூத்தவர் என்பதால் தலை வணங்கினேன் எனத் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ஓம் பிர்லா கூறுகையில் "பிரதமர் இந்த அவையின் (மக்களவை) தலைவர். நமது கலாச்சாரம், பாரம்பரியம் தன்னைவிட மூத்தவர்கள்களுக்கு தலைவணங்க வேண்டும் என சொல்கிறது. நான் அவற்றை கற்றுள்ளேன்.

    இந்த இருக்கையில் இருந்து என்னுடைய கலாச்சாரப்படி மூத்தவர்களுக்கு தலைவணங்குவது, தேவைப்பட்டால் காலை தொடுவது கூட முடியும் என்பதை என்னால் சொல்ல முடியும்" என்றார்.

    அதற்கு பதில் அளித்த ராகுல் காந்தி "மக்களவையில் சபாநாயகரை விட பெரியவர் யாரும் கிடையாது, எல்லோரும் அவருக்கு தலை வணங்க வேண்டும். நான் உங்களுக்கு தலை வணங்குவேன்" என்றார்.

    • சபாநாயகர் என்பவர் தீர்ப்பு வழங்கக் கூடியவர் அல்லது உத்தரவு பிறப்பிக்கக் கூடியவர்.
    • யாருடைய பெயர் அறிவிக்கப்படுகிறதோ, அவர்கள் எழுந்து பேசலாம். தலைவரின் அதாவது சபாநாயகரின் கட்டளைப்படி மைக் கையாளப்படுகிறது.

    மக்களவையில் எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தி உள்ளார். நீட் முறைகேடு தொடர்பாக மக்களவையில் பேசும்போது தன்னுடைய மைக்ரோபோன் ஆஃப் செய்யப்பட்டது எனக் கூறினார். எதிர்க்கட்சிகளும் சபாநாயகர்தான் மைக்கை ஆஃப் செய்ததாக விமர்சித்தினர்.

    இந்த நிலையில் இன்று மக்களவையில் ஓம் பிர்லா இது தொடர்பாக பேசினார். அப்போது மைக்கின் ரிமோட் கன்ட்ரோல் தன்னிடம் இல்லை என்று கூறினார். மேலும், எவ்வாறு செயல்படுகிறது என்றும் தெரிவித்தார். சபாநாயகர் இருக்கையின் கண்ணியம் தொடர்பான விவகாரம் என்றும் தெரிவித்தார்.

    இது தொடர்பாக அவர் கூறுகையில் "சபாநாயகர் என்பவர் தீர்ப்பு வழங்கக் கூடியவர் அல்லது உத்தரவு பிறப்பிக்கக் கூடியவர். யாருடைய பெயர் அறிவிக்கப்படுகிறதோ, அவர்கள் எழுந்து பேசலாம். தலைவரின் அதாவது சபாநாயகரின் கட்டளைப்படி மைக் கையாளப்படுகிறது. சபாநாயகர் இருக்கையில் அமரும் நபரிடம் மைக்ரோபோனை ஆஃப் செய்யக்கூடிய ரிமோட் கன்ட்ரோல் கிடையாது.

    இந்த விவகாரம் சபாநாயகர் இருக்கையின் கண்ணியம் தொடர்பானது. இந்த இருக்கையில் அமர்ந்தவர்கள் இதுபோன்ற ஆட்சேபனைகளை தெரிவிக்கக் கூடாது. கே. சுரேஷ் சபாநாயகர் இருக்கையில் அமர்ந்துள்ளார். சபாநாயகர் இருக்கை மைக்கை கட்டுப்படுத்துகிறதா?.

    இவ்வாற பிர்லா தெரிவித்தார்.

    • கடந்த 1991 ஆம் ஆண்டு அமிதா பிர்லாவை திருமணம் செய்து கொண்ட இவருக்கு தற்போது 2 மகள்கள் உள்ளனர்.
    • தந்தை ஓம் பிர்லாவின் பொது சேவையே சிவில் சர்வீஸ் எழுத தனக்கு உந்துசக்தியாக இருந்தது என்று தெரிவித்துள்ளார்.

    மக்களவை சபாநாயகர் பதவிக்கான தேர்தல் கடந்த ஜூன் 26 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஓம் பிர்லாவும், எதிர்கட்சிகள் சார்பில் மவெலிக்கரா எம்.பி. கே.சுரேஷ் ஆகியோர் போட்டியிட்டனர். சபாநாயகர் பதவிக்கான இந்தியா கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்ட கொடிக்குன்னில் சுரேஷ் தோல்வி அடைந்தார். இதனையடுத்து குரல் வாக்கெடுப்பு மூலம் சபாநாயகராக ஓம் பிர்லா செய்யப்பட்டார். ராஜஸ்தானைச் சேர்ந்த மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் பல்ராம் ஜாகருக்கு பிறகு 39 வருடங்கள் கழித்து இரண்டு முறை மக்களவை சபாநாயகர் ஆகும் பெருமையை ஓம் பிர்லா பெற்றுள்ளார்.

     

    இந்நிலையில் மக்களவையில் சபாநாயகராக பதவியேற்றுள்ள பாஜக மூத்த தலைவர் ஓம் பிர்லா கடந்த நாட்களில் பேசுபொருளாக மாறியுள்ளார். நீண்ட நெடிய அரசியல் பின்னணி கொண்ட ஓம் பிர்லா ராஜஸ்தானை சேர்நதவர் ஆவார். கடந்த 2003 முதல் 2013 வரை ராஜஸ்தான் மாநில கோட்டா சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றிய ஓம் பிர்லா கடந்த 2014 தேர்தலில் பாஜக சார்பில் கோட்டா தொகுதியின் எம்.பியாக தேர்வாகி பாராளுமன்றம் சென்றார்.

    கடந்த 1991 ஆம் ஆண்டு அமிதா பிர்லாவை திருமணம் செய்து கொண்ட இவருக்கு தற்போது 2 மகள்கள் உள்ளனர். இவரது இளைய மகள் அஞ்சலி பிர்லா கடந்த 2019 ஆம் ஆண்டு தனது முதல் முயற்சியிலேயே யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றார். தொடர்ந்து அகாடெமியில் பயிற்சி பெற்று ஐஏஎஸ் ஆன அஞ்சலி பிர்லா தற்போது ரயில்வே அமைச்சகத்தின்கீழ் பணியாற்றி வருகிறார்.

     

     தனது வெற்றி குறித்து தற்போது PTI செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்துள்ள அஞ்சலி பிர்லா, தந்தை ஓம் பிர்லாவின் பொது சேவையே சிவில் சர்வீஸ் எழுத தனக்கு உந்துசக்தியாக இருந்தது என்று தெரிவித்துள்ளார். மேலும் நாட்டு மக்களுக்காக தனது தந்தை செய்து வரும் சேவையைபோல தானும் இந்த சமுதாயத்துக்காக ஏதாவது செய்ய விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார். ஐஏஎஸ் ஆவதற்கு முன்னதாக அஞ்சலி பிர்லா மாடலிங் தொழிலில் ஈடுபட்டிருந்தார். மேலும்  தேர்வு எழுத்தமேலேயே அஞ்சலி பிர்லா ஐஏஎஸ் ஆனதாக சமூக வலைத்தளங்களில் குற்றம்சாட்டப்பட்டது வருவது குறிப்பிடத்தக்கது.

     

     

    • பதவி ஏற்றதும் எமர்ஜென்சி தொடர்பான தீர்மானம் கொண்டு வந்து ஓம் பிர்லா பேசினார்.
    • இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.

    எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி மற்றும் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் இன்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்தித்தனர். அப்போது, சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்ட உடன் எம்ர்ஜென்சி தொடர்பான தீர்மானம் கொண்டு வந்து பேசியது தங்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாக தெரிவித்ததாக காங்கிரஸ் கட்சி பொது செயலாளர் கே.சி. வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக கேசி வேணுகோபால் கூறியதாவது:-

    சபாநாயகர் ஓம் பிர்லா உடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது. ராகுல் காந்திதான் எதிர்க்கட்சி தலைவர் என்று சபாநாயகர் அறிவித்துவிட்டார். அதன்பின் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களுடன் சென்று ராகுல் காந்தி ஓம் பிர்லாவை சந்தித்தார்.

    நாடாளுமன்ற செயல்பாடு பற்றி பல விசயங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தினோம். எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி, ஓம் பிர்லாவிடம், எமர்ஜென்சி விவகாரம் குறித்து பேசினார். அப்போது சபாநாயகர் குறிப்பில் இருந்து அதை தவிர்த்திருக்கலாம். அது அரசியல் தொடர்பான குறிப்பு என்பது தெளிவாக தெரிகிறது. அது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

    இவ்வாறு கே.சி. வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

    மேலும், தனியாக வேணுகோபால் சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுத்தியுள்ளார். அதில் "பதவி ஏற்ற நிலையில் உங்கள் இருக்கையில் இருந்து சுமார் 50 வருடத்திற்கு முன்னதாக நடைபெற்ற எமர்ஜென்சி தொடர்பான தீர்மானம் கொண்டு வந்து பேசியது அதிர்ச்சி அளித்தது. தலைவர் பதவியில் இருந்து இப்படி ஒரு அரசியல் குறிப்பை வெளியிடுவது நாடாளுமன்ற வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாதவையாகும்" எனத் தெரிவித்துள்ளார்.

    • முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நாட்டில் எமர்ஜென்சியை அமல்படுத்தினார்.
    • இந்திரா காந்தி, எமர்ஜென்சிக்கு எதிரான முழக்கங்களை பாஜக எம்.பி.க்கள் எழுப்பினர்.

    மக்களவை சபாநாயகர் பதவிக்கான தேர்தல் இன்று நடைபெற்றது. இந்த தேர்தலில் மக்களவை சபாநாயகராக மீண்டும் ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இணைந்து ஓம் பிர்லாவை சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர்.

    சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு பிரதமர் மோடியும், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தனர். இதையடுத்து சபாநாயகர் உரையாற்றினார். அவர் கூறுகையில்,

    * முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நாட்டில் எமர்ஜென்சியை அமல்படுத்தினார்.

    * இந்திரா காந்தியால் சர்வாதிகாரம் திணிக்கப்பட்டது. 25 ஜூன் 1975 எப்போதும் கருப்பு தினமாக அறியப்படும்.

    * எமர்ஜென்சியின்போது நாட்டின் அதிகாரத்தை சிதைத்ததோடு ஒட்டுமொத்த தேசமும் சிறைக்குள் அடைக்கப்பட்டது.

    * எமர்ஜென்சி காலத்தில் ஊடக சுதந்திரம் நசுக்கப்பட்டது என்று கூறினார்.

    இதையடுத்து எமர்ஜென்சி காலத்தில் உயிர்நீத்தவர்களுக்கு மக்களவையில் இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

    எமர்ஜென்சியை நினைவுகூர்ந்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பேசிய நிலையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டனர். இதையடுத்து மக்களவை நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

    இதனையடுத்து, 50 ஆண்டுகளுக்கு முன் இந்திரா காந்தி ஆட்சிக்காலத்தில் அமல்படுத்தப்பட்ட அவசர நிலையை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் பாஜக எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர்.

    இந்த போராட்டத்தில் மத்திய அமைச்சர்கள் அஸ்வினி வைஷ்ணவ், பிரகலாத் ஜோஷி, கிரண் ரிஜிஜு மற்றும் லாலன் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    போராட்டத்தில் இந்திரா காந்தி, எமர்ஜென்சிக்கு எதிரான முழக்கங்களை பாஜக எம்.பி.க்கள் எழுப்பினர்.

    ×