என் மலர்
நீங்கள் தேடியது "Bihar SIR"
- அனைத்துக்கட்சி கூட்டத்தில் விவாதித்து முதலமைச்சர் உறுதியான முடிவெடுப்பார்.
- அ.தி.மு.க.வில் நடந்து கொண்டிருப்பது உட்கட்சி விவகாரம்.
சென்னை தீவுத்திடல் அருகே மாரத்தான் ஓட்டப்போட்டியை துணை முதலமைச்சர் உதயநிதி கொடியசைத்து தொடங்கி வைத்தார். துணை முதல்வர் தொடங்கி வைத்த மாரத்தான் போட்டியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் என 5,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இதையடுத்து துணை முதலமைச்சர் உதயநிதி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் மூலம் பா.ஜ.க.விற்கு பாதகமான வாக்குகளை நீக்க முயற்சி நடக்கிறது.
* பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மூலமாக என்ன நடத்தப்பட்டது என்பது தெரியும்.
* SIR-ஐ பயன்படுத்தி தமிழ்நாட்டில் எப்படியாவது வெல்ல வேண்டும் என பா.ஜ.க. நினைக்கிறது.
* அனைத்துக்கட்சி கூட்டத்தில் விவாதித்து முதலமைச்சர் உறுதியான முடிவெடுப்பார்.
* சென்னையில் தற்போது சாலைகள் செப்பனிடும் பணி நடந்து வருகிறது.
* அ.தி.மு.க.வில் நடந்து கொண்டிருப்பது உட்கட்சி விவகாரம்.
* அ.தி.மு.க.வின் நிரந்தர பொதுச்செயலாளராக இ.பி.எஸ். இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம்.
- உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத்.
இந்திய தேர்தல் ஆணையம் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, 12 மாநிலங்களில் SIR பணி மேற்கொள்ளப்படும். நாளை முதல் இந்த பணி தொடங்கும் எனத் தெரிவித்தார்.
அந்த மாநிலங்கள் விவரம் பின்வருமாறு:-
தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, உத்தர பிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், லட்சத்தீவு, குஜராத், கோவா, சத்தீஸ்கர், அந்தமான் அண்டு நிக்கோபர். மேற்கு வங்கம்.
ஆதார் கார்டு உள்பட 12 ஆவணங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். தகுதியான வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள். தகுதியற்ற வேட்பாளர்கள் நீக்கப்படுவார்கள் என்பது உறுதி செய்யப்படும். எனத் தெரிவித்தார்.
- தற்போதைய SIR பணி சுதந்திரத்திற்குப் பிறகு 9ஆவது நடவடிக்கையாகும்.
- 21 ஆண்டுகளுக்கு முன்னதாக இதுபோன்ற பணி நடந்துள்ளது.
பீகாரில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் பணியை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. அதன்பின் இந்தியா முழுவதும் SIR பணி மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது.
அடுத்த வரும் தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, அசாம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனால் இந்த மாநிலங்களில் SIR பணி மேற்கொள்ளப்படலாம் எனத் தகவல் வெளியானது.
இதற்கிடையே, SIR குறித்து இந்திய தேர்தல் தலைமை ஆணையர் நாளை (இன்று) செய்தியாளர்களை சந்திப்பார் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை ஆணையர் ஞானேஷ் குமார் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது 12 மாநிலங்களில் 2ஆம் கட்டமாக வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த பணி மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.
பீகாரில் முறையீடு ஏதுமின்றி முதற்கட்ட சிறப்பு தீவிர திருத்த பணி நடைபெற்றது. அரசியல் கட்சிகள் பல சந்தர்ப்பங்களில் வாக்காளர் பட்டியலின் தரம் குறித்த பிரச்சினையை எழுப்பியுள்ளன. தற்போதைய SIR சுதந்திரம் அடைந்த பிறகு 9ஆவது மாற்றமாகும். கடைசியாக 21 ஆண்டுகளுக்கு முன்னதாக 2002-2004-ல் வாக்காளர் பட்டியல் திருத்தம் நடைபெற்றது.
- வாக்குச்சாவடி-நிலை அதிகாரிகளுக்கு உதவ தன்னார்வலர்களை நியமிக்கலாம் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் கூறி உள்ளது.
- பயிற்சிக்காக ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள அரசு ஊழியர்களிடமிருந்து தன்னார்வலர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
புதுடெல்லி:
தமிழ்நாடு, மேற்கு வங்காளம், கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த மாநிலங்கள் உட்பட 10 முதல் 15 மாநிலங்களில் பீகாரைப் போல முதல்கட்டமாக வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணிகளை தொடங்க தேர்தல் ஆணையம் ஆயத்தமாகி வருகிறது. இது பற்றிய அறிவிப்பு இன்று மாலை செய்தியாளர் சந்திப்பில் வெளியிடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இந்த பணியின்போது வாக்குச்சாவடி-நிலை அதிகாரிகளுக்கு உதவ தன்னார்வலர்களை நியமிக்கலாம் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் கூறி உள்ளது. இந்தப் பயிற்சிக்காக ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள அரசு ஊழியர்களிடமிருந்து தன்னார்வலர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அவர்கள் வாக்குச்சாவடி -நிலை அதிகாரிகளுக்கு கணக்கெடுப்பு படிவங்களை நிரப்ப உதவுவார்கள், தேவைப்பட்டால் மாற்றாகவும் பணியமர்த்தப்படவும் வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- பீகாரில் SIR பணி மேற்கொள்ளப்பட்டு, தேர்தல் நடைபெற இருக்கிறது.
- அடுத்த வருடம் தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் நடைபெற இருக்கிறது.
பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) பணியை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. இதன்மூலம் லட்சக்கணக்கான மக்களின் வாக்கு உரிமையை தேர்தல் ஆணையம் பறிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
என்றாலும், நடைமுறைப்படுத்தி அடுத்த மாதம் 6 மற்றும் 11ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது.
வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த பணி நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், நாடு தழுவிய SIR குறித்து அறிவிக்க, நாளை மாலை செய்தியாளர்களை சந்திக்க இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அப்போது விரிவான விளக்கம் அளிக்கப்படும் என எதிர்பார்க்கலாம்.
தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, அசாம், புதுச்சேரி மாநிலங்களில் அடுத்த வருடம் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த மாநிலங்களுடன் 10 முதல் 15 மாநிலங்களில் முதற்கட்டமாக SIR பணியை மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
- லட்சக்கணக்கான வாக்குகள் நீக்கப்படலாம் என அச்சம்.
- மம்தா பானர்ஜி பேரணியில் உரையாற்றுவார் எனத் தகவல்.
இந்திய தேர்தல் ஆணையம் பீகார் மாநிலத்தில் வாக்காளர்கள் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை மேற்கொண்டது. இதனால் லட்சக்கணக்கான வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி உள்ளிட்டோர் கடுமையாக எதிர்த்தனர்.
SIR எனப்படும் சிறப்பு தீவிர திருத்தம் நடவடிக்கை எல்லா மாநிலங்களிலும் மேற்கொள்ளப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அடுத்த வருடம் கேரளா, தமிழ்நாடு, மேற்குவங்கம் மாநிலங்களில் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனால் இந்த மாநில அரசுகள் தேர்தல் ஆணையத்தின் SIR நடவடிக்கையை கடுமையான எதிர்க்கின்றன.
இந்த நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் அடுத்த மாதம் SIR-க்கு எதிராக கொல்கத்தாவில் மிகப்பெரிய பேரணி நடத்த திட்டமிட்டுள்ளது. பேரணி இறுதியில் மம்தா பானர்ஜி மற்றும் அபிஷேக் பானர்ஜி ஆகியோர் உரையாற்ற இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேற்கு வங்கத்தில் தீபாவளியைத் தொடர்ந்து காளி பூஜை, பாய் தூஜ் பண்டிகை வரவிருக்கிறது. இந்த பண்டிகைகள் முடிவடைந்த பின்னர், இந்த பேரணிக்கு திட்டமிடப்பட்டுள்ளது.
- 3.92 கோடி பேர் ஆண் வாக்காளர்கள். 3.5 கோடி பேர் பெண் வாக்காளர்கள்.
- 14 லட்சம் பேர் முதன்முறையாக வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்
பீகார் மாநிலத்தில் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம்- பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. 243 உறுப்பினர்களை கொண்ட அந்த மாநில சட்டசபையின் பதவி காலம் நவம்பர் 22-ந்தேதியுடன் முடிவடைகிறது. இதனால் தேர்தல் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.
பீகார் தேர்தல் தயார் நிலை குறித்து கடந்த 2 நாட்களாக தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பாட்னாவில் ஆய்வு மேற்கொண்டார். பீகார் தேர்தலில் 17 புதிய நடைமுறைகள் அறிமுகப்படுத்த உள்ளதாக அவர் தெரிவித்தார். இந்த நிலையில் இன்று மாலை தேர்தல் தேதியை அறிவித்தார்.
அதன்படி,
SIR-க்கு பிறகு பீகாரில் 7.42 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 3.92 கோடி பேர் ஆண் வாக்காளர்கள். 3.5 கோடி பேர் பெண் வாக்காளர்கள். 14 லட்சம் பேர் புது வாக்காளர்கள்.
தேர்தலை வெளிப்படையாகவும், அமைதியான அடிப்படையில் நடத்துவதை உறுதி செய்ய விரும்புகிறோம்.
100 வயதிற்கு மேற்பட்டோர் 14 ஆயிரம் பேர் வாக்காளர் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். 90,712 வாக்கு மையங்கள் மூலம் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்படும்.
எந்தவொரு வன்முறையையும் சகித்துக் கொள்ளக் கூடாது நிர்வாக அதிகாரிகளுக்கு கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைதளம் மற்றும் மற்ற பிளாட்பார்ம் மூலமாக போலி செய்திகள் வெளியிடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு ஞானேஷ் குமார் தெரிவித்தார்.
- முசாபர்பூர் மாவட்டத்தில் 88,108 வாக்காளர் அதிகரித்துள்ளனர்.
- பாட்னா மாவட்டத்தில் 1,63,600 வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர்.
பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தத்தை தேர்தல் ஆணையம் கொண்டு வந்தது. அப்போது அங்கு வசிப்பதற்கான ஆதாரங்களை வழங்க வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.
இதனால் தேர்தல் ஆணையம் NRC-யை மறைமுகமாக அமல்படுத்த பாஜக, தேர்தல் ஆணையத்தை பயன்படுத்துகிறது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. மேலும் பலரது வாக்குகள் நீக்கப்பட்டதாக ராகுல் காந்தி மற்றும் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் கடுமையாக குற்றம்சாட்டினர். இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது ஆதார்டு கார்டை ஆதாரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது.
இந்த நிலையில் இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. முசாபர்பூர் மாவட்டத்தில் 88,108 வாக்காளர் அதிகரித்துள்ளனர். முன்னதாக 32,03,370 வாக்காளர்கள் இருந்தனர். தற்போது 32,91,478 அதரித்துள்ளனர்.
பாட்னா மாவட்டத்தில் 1,63,600 வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர். நவடா மாவட்டத்தில் 30,491 வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர். முழு விவரத்தை https://voters.eci.gov.in/ என்ற இணைய தளத்தில் காணலாம்.
தேர்தல் ஆணையம் அக்டோபர் 4 மற்றும் அக்டோபர் 5ஆம் தேதி பீகார் சென்று தேர்தலுக்கான பணிகள் குறித்து ஆராய உள்ளது. அதன்பின் பீகார் மாநில தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம்.
- SIR தேசிய குடிமக்கள் பதிவேட்டை (NRC) செயல்படுத்துவதற்கான மறைமுக முயற்சியாகும்.
- தேர்தல் ஆணைய நடவடிக்கைக்குப் பின்னால் தீய நோக்கம் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.
கேரள மாநில சட்டசபையில் தேர்தல் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் (SIR) நடைமுறைக்கு எதிராக ஒருமித்த கருத்துடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி, வாக்கு திருட்டில் ஈடுபட்டதாக தேர்தல் கமிஷன் மீது குற்றம்சாட்டி வருகிறார். இதனால் காங்கிரஸ் தலைமையிலான UDF கூட்டணி எம்.எல்.ஏ.-க்களும் இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
தீர்மானம் குறித்து கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் கூறிகையில் "SIR-ஐ செயல்படுத்த தேர்தல் ஆணையம் எடுத்த அவசர நடவடிக்கை மற்றும் அவர்களின் நடவடிக்கைக்குப் பின்னால் தீய நோக்கம் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.
SIR நடத்துவதற்கான தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை, தேசிய குடிமக்கள் பதிவேட்டை செயல்படுத்துவதற்கான மறைமுக முயற்சியாகும்.
பீகாரில் செயல்படுத்தப்பட்ட SIR வாக்காளர் பட்டியலில் இருந்து மக்களை எந்தவித காரணமும் இல்லாமல் நீக்கப்பட்டது. தேசிய அளவில் அதே முறை பின்பற்றப்படுகிறதா என்ற சந்தேகம் நாடு முழுவதும் உள்ளது.
இவ்வாறு பினராயி விஜயன் தெரிவித்தார்.
மேலும், பீகார் மாநில SIR தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும்போது, விரைவில் தேர்தல் நடைபெற இருக்கும் கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்கம் மாநிலங்களில் SIRஐ செயல்படுத்த இருப்பது தொடர்பாக கேள்வி எழுப்பினார்.
- கர்நாடக மாநிலத்தில் உள்ள ஆலந்து தொகுதியில் வாக்கு திருட்டு நடைபெற்றதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு.
- தேர்தல் ஆணையம் systematic ஆக வாக்கு திருட்டில் ஈடுபட்டுள்ளது. இதை ஆதாரப்பூர்வமாக நிரூபித்து உள்ளேன் என்றார் ராகுல் காந்தி.
கர்நாடக மாநிலத்தில் உள்ள ஆலந்து தொகுதியில் 6,018 வாக்காளர்கள் பெயர் நீக்கமுயற்சி மேற்கொள்ளப்பட்டது. தேர்தல் ஆணையம் systematic ஆக வாக்கு திருட்டில் ஈடுபட்டுள்ளது என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த நிலையில், வாக்கு திருட்டு மெஷினை வெறுமன மேற்பார்வையிட்டு கொண்டிருக்கும் இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் "ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும். வாக்கு திருடர்களால் நிர்வகிக்கப்படும் வாக்கு திருட்டு இயந்திரத்தை தேர்தல் ஆணையம் மேற்பார்வையிட்டு கொண்டிருக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக,
கடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்கு திருட்டு நடந்ததாக பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி சமீபத்தில் சில புள்ளி விவரங்களை வெளியிட்டார். அவரது குற்றச்சாட்டை தேர்தல் கமிஷன் நிராகரித்தது. இதனையடுத்து பீகாரில், 'வாக்காளர் அதிகார யாத்திரை' என்ற பெயரில், வாக்கு திருட்டு குற்றச்சாட்டை முன்வைத்து ராகுல்காந்தி யாத்திரை நடத்தினார்.
இந்நிலையில், வாக்கு திருட்டு தொடர்பாக இன்று மீண்டும் ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது, "நான் இந்த மேடையில் 100 சதவீத உண்மையைத்தான் கூறுகிறேன். நான் என் நாட்டை நேசிக்கும் ஒருவன். என் அரசியலமைப்பை நேசிக்கிறேன், ஜனநாயக செயல்முறையை நேசிக்கிறேன், அந்த செயல்முறையை நான் பாதுகாக்கிறேன். நீங்கள் தீர்மானிக்கக்கூடிய 100% ஆதாரத்தின் அடிப்படையில் இல்லாத எதையும் நான் இங்கே சொல்லப் போவதில்லை
கர்நாடகாவில் உள்ள ஆலந்து தொகுதியில் 6018 வாக்காளர்களை நீக்க முயன்றனர். 2023 தேர்தலில் ஆலந்தில் நீக்கப்பட்ட மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை எங்களுக்குத் தெரியாது. அவை 6,018 ஐ விட மிக அதிகம். ஆனால் அந்த 6018 வாக்காளர்களை நீக்கியபோது யாரோ ஒருவர் பிடிபட்டார். அது தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்டது.
அங்குள்ள வாக்குச்சாவடி நிலை அதிகாரி தனது மாமாவின் வாக்கு நீக்கப்பட்டதை கண்டுபிடித்தார். எனவே அவர் தனது மாமாவின் வாக்கு நீக்கப்பட்டதைச் சரிபார்த்தார்.
மேலும் அந்த வாக்கை நீக்கியது ஒரு பக்கத்து வீட்டுக்காரர் என்பதைக் கண்டுபிடித்தார். அவர் தன் பக்கத்து வீட்டுக்காரரிடம் கேட்டார். ஆனால் நான் எந்த வாக்கையும் நீக்கவில்லை என்று அவர் கூறினார். இந்த விஷயம் வாக்கை நீக்கிய நபருக்கோ அல்லது வாக்கு நீக்கப்பட்ட நபருக்கோ தெரியாது. அப்படியானால் வேறு சில நபர்கள் வாக்காளர்களை நீக்கியுள்ளனர்.
ஆலந்து தொகுதியில் வாக்காளர்களைப் போல ஆள்மாறாட்டம் செய்து 6018 விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த விண்ணப்பங்களை தாக்கல் செய்தவர்கள் உண்மையில் அவற்றை ஒருபோதும் தாக்கல் செய்யவில்லை. கம்ப்யூட்டர் மென்பொருளைப் பயன்படுத்தி அவை தானாகவே தாக்கல் செய்யப்பட்டது. கர்நாடகாவிற்கு வெளியே இருந்து, பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்த மொபைல் எண்கள், ஆலந்தில் உள்ள எண்களை நீக்கப் பயன்படுத்தப்பட்டன. குறிப்பாக இது காங்கிரஸ் வாக்காளர்களை குறிவைத்து செய்யப்பட்டது.
தேர்தல் ஆணையம் systematic ஆக வாக்கு திருட்டில் ஈடுபட்டுள்ளது. இதை ஆதாரப்பூர்வமாக நிரூபித்து உள்ளேன். இனி இந்நாட்டு மக்கள், குறிப்பாக இளைஞர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். அவர்கள் தான் தேர்தல் ஆணையத்தை கேள்வி கேட்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
அதேவேளையில் தேர்தல் ஆணையம் ராகுல் காந்தி குற்றச்சாட்டை மறுத்துள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் "ராகுல் காந்தி தவறாகக் கூறியது போல, எந்தவொரு வாக்காளரையும் எந்தவொரு பொதுமக்களும் ஆன்லைனில் இருந்து நீக்க முடியாது. பாதிக்கப்பட்ட நபரின் கருத்தை கேட்காமல் எந்த வாக்காளர் நீக்கமும் நடக்காது.
2023 ஆம் ஆண்டில், ஆலந்து சட்டமன்றத் தொகுதியில் வாக்காளர்களை நீக்குவதற்கு சில தோல்வியுற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் இந்த விஷயத்தை விசாரிக்க தேர்தல் ஆணையத்தின் அதிகாரத்தால் ஒரு FIR பதிவு செய்யப்பட்டது. ஆலந்து சட்டமன்றத் தொகுதியில் 2018 இல் பாஜகவை சேர்ந்த சுபாத் குட்டேதரும் 2023 ஆம் ஆண்டு காங்கிரசை சேர்ந்த பி.ஆர். பாட்டீலும் வெற்றி பெற்றனர்" தெரிவித்துள்ளது.
- ஆலந்து சட்டமன்றத் தொகுதியில் வாக்காளர்களை நீக்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
- இந்த விஷயத்தை விசாரிக்க தேர்தல் ஆணையத்தின் அதிகாரத்தால் ஒரு FIR பதிவு செய்யப்பட்டது.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்கு திருட்டு நடந்ததாக பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி சமீபத்தில் சில புள்ளிவிவரங்களை வெளியிட்டார். அவரது குற்றச்சாட்டை தேர்தல் கமிஷன் நிராகரித்தது.
இதனையடுத்து பீகாரில், 'வாக்காளர் அதிகார யாத்திரை' என்ற பெயரில், வாக்கு திருட்டு குற்றச்சாட்டை முன்வைத்து ராகுல்காந்தி யாத்திரை நடத்தினார்.
இந்நிலையில், வாக்கு திருட்டு தொடர்பாக இன்று மீண்டும் ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது, "கர்நாடகாவில் உள்ள ஆலந்து தொகுதியில் 6018 வாக்காளர்களை நீக்க முயன்றனர். ஆனால் அந்த 6018 வாக்காளர்களை நீக்கியபோது யாரோ ஒருவர் பிடிபட்டார், அது தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்டது. அங்குள்ள வாக்குச்சாவடி நிலை அதிகாரி தனது மாமாவின் வாக்கு நீக்கப்பட்டதை கண்டுபிடித்தார். எனவே அவர் தனது மாமாவின் வாக்கு நீக்கப்பட்டதைச் சரிபார்த்தார், மேலும் அந்த வாக்கை நீக்கியது ஒரு பக்கத்து வீட்டுக்காரர் என்பதைக் கண்டுபிடித்தார். அவர் தன் பக்கத்து வீட்டுக்காரரிடம் கேட்டார். ஆனால் நான் எந்த வாக்கையும் நீக்கவில்லை என்று அவர் கூறினார். இந்த விஷயம் வாக்கை நீக்கிய நபருக்கோ அல்லது வாக்கு நீக்கப்பட்ட நபருக்கோ தெரியாது. அப்படியானால் வேறு சில நபர்கள் வாக்காளர்களை நீக்கியுள்ளனர்.
ஆலந்து தொகுதியில் வாக்காளர்களைப் போல ஆள்மாறாட்டம் செய்து 6018 விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த விண்ணப்பங்களை தாக்கல் செய்தவர்கள் உண்மையில் அவற்றை ஒருபோதும் தாக்கல் செய்யவில்லை. கம்ப்யூட்டர் மென்பொருளைப் பயன்படுத்தி அவை தானாகவே தாக்கல் செய்யப்பட்டது. கர்நாடகாவிற்கு வெளியே இருந்து, பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்த மொபைல் எண்கள், ஆலந்தில் உள்ள எண்களை நீக்கப் பயன்படுத்தப்பட்டன.
கால் சென்டர்கள், நவீன கணிப்பொறிகள், செயலிகள் கொண்டு வாக்கு திருட்டு மோசடி செய்யப்பட்டுள்ளது : வாக்காளர் நீக்கம் என்பது அனைத்து சட்டமன்ற தொகுதியிலும் நடைபெறவில்லை. மாறாக காங்கிரஸ் கட்சி எந்த இடத்தில் எல்லாம் வெற்றி பெறப் போகிறதோ? என கண்டறிந்து அந்த சட்டமன்ற தொகுதிகளில் மட்டும் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
எந்த கணிப்பொறியில் இருந்து வாக்காளர் நீக்க ஆவணங்கள் சமர்ப்பிக்கபட்டது என்ற IP முகவரி கேட்டோம். ஏனென்றால் அது கிடைத்தால் இந்த மோசடியில் ஈடுபட்டது யார் என்று நாங்கள் கண்டுபிடித்துவிடுவோம். ஆனால், இதில் சம்பந்தப்பட்டவர்களை தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஸ்வர் காப்பாற்றியுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து பிப்ரவரி 23 அன்று FIR தாக்கல் செய்யப்படுகிறது. மார்ச் மாதத்தில் இந்த எண்கள் மற்றும் இந்த பரிவர்த்தனைகள் பற்றிய அனைத்து விவரங்களையும் உடனடியாகக் கோரி கர்நாடக சிஐடி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதுகிறது. ஆகஸ்ட் மாதம், தேர்தல் ஆணையம் இதற்கு ஒரு பதிலைக் தருகிறது. ஆனால் சிஐடி கேட்ட எந்த ஆதாரங்களையும் அவர்கள் தரவில்லை.
இதனையடுத்து ஜனவரி 24 ஆம் தேதி, கர்நாடக சிஐடி மீண்டும் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதி, எங்களுக்கு முழுத் தகவலையும் அனுப்புங்கள் என்று கூறுகிறது. அதன்பின்னும் பதில் இல்லை.
செப்டம்பர் 25 ஆம் தேதிக்குள் கர்நாடக சிஐடி 18 கடிதங்களை தேர்தல் ஆணையத்திற்கு எழுதியுள்ளது. இது நடந்து கொண்டிருக்கும்போது, கர்நாடக தலைமை தேர்தல் ஆணையம் டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதி, இந்தத் தகவலை வழங்குமாறு கேட்கிறது. இப்போது ஞானேஷ் குமார் வாக்கு திருட்டில் ஈடுபடுபவர்களை பாதுகாக்கிறார் என்பதற்கு இது முழுமையான உறுதியான சான்றாகும்" என்று தெரிவித்தார்.
இந்நிலையில், ராகுல் காந்தி தெரிவித்த குற்றச்சாட்டுகள் தவறானவை மற்றும் ஆதாரமற்றவை என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள பதிவில், "ராகுல் காந்தி தவறாகக் கூறியது போல, எந்தவொரு வாக்காளரையும் எந்தவொரு பொதுமக்களும் ஆன்லைனில் இருந்து நீக்க முடியாது. பாதிக்கப்பட்ட நபரின் கருத்தை கேட்காமல் எந்த வாக்காளர் நீக்கமும் நடக்காது.
2023 ஆம் ஆண்டில், ஆலந்து சட்டமன்றத் தொகுதியில் வாக்காளர்களை நீக்குவதற்கு சில தோல்வியுற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் இந்த விஷயத்தை விசாரிக்க தேர்தல் ஆணையத்தின் அதிகாரத்தால் ஒரு FIR பதிவு செய்யப்பட்டது.
ஆலந்து சட்டமன்றத் தொகுதியில் 2018 இல் பாஜகவை சேர்ந்த சுபாத் குட்டேதரும் 2023 ஆம் ஆண்டு காங்கிரசை சேர்ந்த பி.ஆர். பாட்டீலும் வெற்றி பெற்றனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராகுல் காந்தி 40 நிமிடங்களுக்கு மேலாக செய்தியாளர்கள் முன்னிலையில் அளித்த விரிவான குற்றச்சாட்டுகளுக்கு உடனடியாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு விளக்கம் ஏற்புடையதா?
ஆலந்து தொகுதியில் வாக்காளர்கள் நீக்கப்பட்ட விவகாரம் குறித்து கர்நாடக சிஐடி 18 கடிதங்களை தேர்தல் ஆணையத்திற்கு எழுதியும் எந்த ஆதாரங்களையும் தேர்தல் ஆணையம் இதுவரை வழங்கவில்லை. 1 வாரத்திற்குள் கர்நாடக சிஐடி கேட்ட ஆதாரங்களை தேர்தல் ஆணையம் வழங்க வேண்டும் என்று ராகுல் காந்தியும் கேடு விதித்துள்ளார்.
2023 ஆம் ஆண்டில், ஆலந்து சட்டமன்றத் தொகுதியில் வாக்காளர்களை நீக்குவதற்கு முயற்சிகள் நடந்ததாகவும் இந்த விஷயத்தை விசாரிக்க FIR பதிவு செய்யப்பட்டதாகவும் தேர்தல் ஆணையமே தெரிவித்துள்ளது.
ஆனால் பதிவு செய்யப்பட்ட வழக்கில் என்ன விசாரணை மேற்கொள்ளப்பட்டது. முறைகேடு ஏதேனும் கண்டறியப்பட்டதா? இல்லையா? என்பதை குறித்து தேர்தல் ஆணையம் தனது பதிவில் எதுவும் குறிப்பிடவில்லை.
தேர்தல் ஆணையம் என்பது இந்திய ஜனநாயகத்தின் முக்கியமான தூண். அந்த தூணின் மீது மக்களவை எதிர்க்கட்சி தலைவர் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அந்த குற்றச்சாட்டுக்களுக்கு தெளிவான விரிவான பதிலை அளிக்க வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை.
ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளுக்கு அவரிடம் ஆதாரம் கேட்கும் தேர்தல் ஆணையம், முதலில் அவர் கேட்கும் ஆதாரங்களை வெளியிட்டு தன்னுடைய நம்பக தன்மையை நிரூபிக்க வேண்டும் என்பதே இந்திய ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ள ஒவ்வொரு குடிமக்களின் எண்ணமாகும்.
- வாக்குத் திருட்டு நடப்பது தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஸ்வர் குமாருக்கு தெரியும்.
- தகவல்கள் வெளிவந்த பிறகும் தேர்தல் ஆணையர் ஞானேஸ்வர் அதை மறைக்கிறார்.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்கு திருட்டு நடந்ததாக பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி சமீபத்தில் சில புள்ளிவிவரங்களை வெளியிட்டார். அவரது குற்றச்சாட்டை தேர்தல் கமிஷன் நிராகரித்தது.
இதனையடுத்து பீகாரில், 'வாக்காளர் அதிகார யாத்திரை' என்ற பெயரில், வாக்கு திருட்டு குற்றச்சாட்டை முன்வைத்து ராகுல்காந்தி யாத்திரை நடத்தினார்.
இந்நிலையில், வாக்கு திருட்டு தொடர்பாக இன்று மீண்டும் ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது, "கர்நாடகாவில் உள்ள ஆலந்து தொகுதியில் 6018 வாக்காளர்களை நீக்க முயன்றனர். 2023 தேர்தலில் ஆலந்தில் நீக்கப்பட்ட மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை எங்களுக்குத் தெரியாது. அவை 6,018 ஐ விட மிக அதிகம். ஆனால் அந்த 6018 வாக்காளர்களை நீக்கியபோது யாரோ ஒருவர் பிடிபட்டார், அது தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்டது. அங்குள்ள வாக்குச்சாவடி நிலை அதிகாரி தனது மாமாவின் வாக்கு நீக்கப்பட்டதை கண்டுபிடித்தார். எனவே அவர் தனது மாமாவின் வாக்கு நீக்கப்பட்டதைச் சரிபார்த்தார், மேலும் அந்த வாக்கை நீக்கியது ஒரு பக்கத்து வீட்டுக்காரர் என்பதைக் கண்டுபிடித்தார். அவர் தன் பக்கத்து வீட்டுக்காரரிடம் கேட்டார். ஆனால் நான் எந்த வாக்கையும் நீக்கவில்லை என்று அவர் கூறினார். இந்த விஷயம் வாக்கை நீக்கிய நபருக்கோ அல்லது வாக்கு நீக்கப்பட்ட நபருக்கோ தெரியாது. அப்படியானால் வேறு சில நபர்கள் வாக்காளர்களை நீக்கியுள்ளனர்.
ஆலந்து தொகுதியில் வாக்காளர்களைப் போல ஆள்மாறாட்டம் செய்து 6018 விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த விண்ணப்பங்களை தாக்கல் செய்தவர்கள் உண்மையில் அவற்றை ஒருபோதும் தாக்கல் செய்யவில்லை. கம்ப்யூட்டர் மென்பொருளைப் பயன்படுத்தி அவை தானாகவே தாக்கல் செய்யப்பட்டது. கர்நாடகாவிற்கு வெளியே இருந்து, பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்த மொபைல் எண்கள், ஆலந்தில் உள்ள எண்களை நீக்கப் பயன்படுத்தப்பட்டன.
கால் சென்டர்கள், நவீன கணிப்பொறிகள், செயலிகள் கொண்டு வாக்கு திருட்டு மோசடி செய்யப்பட்டுள்ளது : வாக்காளர் நீக்கம் என்பது அனைத்து சட்டமன்ற தொகுதியிலும் நடைபெறவில்லை. மாறாக காங்கிரஸ் கட்சி எந்த இடத்தில் எல்லாம் வெற்றி பெறப் போகிறதோ? என கண்டறிந்து அந்த சட்டமன்ற தொகுதிகளில் மட்டும் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
எந்த கணிப்பொறியில் இருந்து வாக்காளர் நீக்க ஆவணங்கள் சமர்ப்பிக்கபட்டது என்ற IP முகவரி கேட்டோம். ஏனென்றால் அது கிடைத்தால் இந்த மோசடியில் ஈடுபட்டது யார் என்று நாங்கள் கண்டுபிடித்துவிடுவோம். ஆனால், இதில் சம்பந்தப்பட்டவர்களை தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஸ்வர் காப்பாற்றியுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து பிப்ரவரி 23 அன்று FIR தாக்கல் செய்யப்படுகிறது. மார்ச் மாதத்தில் இந்த எண்கள் மற்றும் இந்த பரிவர்த்தனைகள் பற்றிய அனைத்து விவரங்களையும் உடனடியாகக் கோரி கர்நாடக சிஐடி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதுகிறது. ஆகஸ்ட் மாதம், தேர்தல் ஆணையம் இதற்கு ஒரு பதிலைக் தருகிறது. ஆனால் சிஐடி கேட்ட எந்த ஆதாரங்களையும் அவர்கள் தரவில்லை.
இதனையடுத்து ஜனவரி 24 ஆம் தேதி, கர்நாடக சிஐடி மீண்டும் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதி, எங்களுக்கு முழுத் தகவலையும் அனுப்புங்கள் என்று கூறுகிறது. அதன்பின்னும் பதில் இல்லை.
செப்டம்பர் 25 ஆம் தேதிக்குள் கர்நாடக சிஐடி 18 கடிதங்களை தேர்தல் ஆணையத்திற்கு எழுதியுள்ளது. இது நடந்து கொண்டிருக்கும்போது, கர்நாடக தலைமை தேர்தல் ஆணையம் டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதி, இந்தத் தகவலை வழங்குமாறு கேட்கிறது. இப்போது ஞானேஷ் குமார் வாக்கு திருட்டில் ஈடுபடுபவர்களை பாதுகாக்கிறார் என்பதற்கு இது முழுமையான உறுதியான சான்றாகும்" என்று தெரிவித்தார்.
இந்நிலையில், ராகுல் காந்தி தெரிவித்த குற்றச்சாட்டுகள் தவறானவை மற்றும் ஆதாரமற்றவை என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள பதிவில், "ராகுல் காந்தி தவறாகக் கூறியது போல, எந்தவொரு வாக்காளரையும் எந்தவொரு பொதுமக்களும் ஆன்லைனில் இருந்து நீக்க முடியாது. பாதிக்கப்பட்ட நபரின் கருத்தை கேட்காமல் எந்த வாக்காளர் நீக்கமும் நடக்காது.
2023 ஆம் ஆண்டில், ஆலந்து சட்டமன்றத் தொகுதியில் வாக்காளர்களை நீக்குவதற்கு சில தோல்வியுற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் இந்த விஷயத்தை விசாரிக்க தேர்தல் ஆணையத்தின் அதிகாரத்தால் ஒரு FIR பதிவு செய்யப்பட்டது.
ஆலந்து சட்டமன்றத் தொகுதியில் 2018 இல் பாஜகவை சேர்ந்த சுபாத் குட்டேதரும் 2023 ஆம் ஆண்டு காங்கிரசை சேர்ந்த பி.ஆர். பாட்டீலும் வெற்றி பெற்றனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.






