என் மலர்tooltip icon

    இந்தியா

    பீகாரை தொடர்ந்து 12 மாநிலங்களில் SIR பணி: தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அறிவிப்பு
    X

    பீகாரை தொடர்ந்து 12 மாநிலங்களில் SIR பணி: தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அறிவிப்பு

    • தற்போதைய SIR பணி சுதந்திரத்திற்குப் பிறகு 9ஆவது நடவடிக்கையாகும்.
    • 21 ஆண்டுகளுக்கு முன்னதாக இதுபோன்ற பணி நடந்துள்ளது.

    பீகாரில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் பணியை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. அதன்பின் இந்தியா முழுவதும் SIR பணி மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது.

    அடுத்த வரும் தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, அசாம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனால் இந்த மாநிலங்களில் SIR பணி மேற்கொள்ளப்படலாம் எனத் தகவல் வெளியானது.

    இதற்கிடையே, SIR குறித்து இந்திய தேர்தல் தலைமை ஆணையர் நாளை (இன்று) செய்தியாளர்களை சந்திப்பார் என அறிவிக்கப்பட்டது.

    அதன்படி இன்று இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை ஆணையர் ஞானேஷ் குமார் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது 12 மாநிலங்களில் 2ஆம் கட்டமாக வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த பணி மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.

    பீகாரில் முறையீடு ஏதுமின்றி முதற்கட்ட சிறப்பு தீவிர திருத்த பணி நடைபெற்றது. அரசியல் கட்சிகள் பல சந்தர்ப்பங்களில் வாக்காளர் பட்டியலின் தரம் குறித்த பிரச்சினையை எழுப்பியுள்ளன. தற்போதைய SIR சுதந்திரம் அடைந்த பிறகு 9ஆவது மாற்றமாகும். கடைசியாக 21 ஆண்டுகளுக்கு முன்னதாக 2002-2004-ல் வாக்காளர் பட்டியல் திருத்தம் நடைபெற்றது.

    Next Story
    ×