என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

S.I.R.-ஐ பயன்படுத்தி பா.ஜ.க.விற்கு பாதகமான வாக்குகளை நீக்க முயற்சி: உதயநிதி
- அனைத்துக்கட்சி கூட்டத்தில் விவாதித்து முதலமைச்சர் உறுதியான முடிவெடுப்பார்.
- அ.தி.மு.க.வில் நடந்து கொண்டிருப்பது உட்கட்சி விவகாரம்.
சென்னை தீவுத்திடல் அருகே மாரத்தான் ஓட்டப்போட்டியை துணை முதலமைச்சர் உதயநிதி கொடியசைத்து தொடங்கி வைத்தார். துணை முதல்வர் தொடங்கி வைத்த மாரத்தான் போட்டியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் என 5,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இதையடுத்து துணை முதலமைச்சர் உதயநிதி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் மூலம் பா.ஜ.க.விற்கு பாதகமான வாக்குகளை நீக்க முயற்சி நடக்கிறது.
* பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மூலமாக என்ன நடத்தப்பட்டது என்பது தெரியும்.
* SIR-ஐ பயன்படுத்தி தமிழ்நாட்டில் எப்படியாவது வெல்ல வேண்டும் என பா.ஜ.க. நினைக்கிறது.
* அனைத்துக்கட்சி கூட்டத்தில் விவாதித்து முதலமைச்சர் உறுதியான முடிவெடுப்பார்.
* சென்னையில் தற்போது சாலைகள் செப்பனிடும் பணி நடந்து வருகிறது.
* அ.தி.மு.க.வில் நடந்து கொண்டிருப்பது உட்கட்சி விவகாரம்.
* அ.தி.மு.க.வின் நிரந்தர பொதுச்செயலாளராக இ.பி.எஸ். இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.






