என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாஜக"

    • அதிமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிட 10 தொகுதிகளை கேட்டுள்ளோம்
    • சீட் தராவிட்டால் 51 தொகுதிகளில் எங்கள் கட்சி சார்பில் வேட்பாளர்களை நிறுத்துவோம்.

    தமிழ்நாட்டில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்து சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்கிறது. இந்த கூட்டணியில் அமமுக, அன்புமணி தலைமையிலான பாமக, தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

    இந்நிலையில், தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிட 10 தொகுதிகளை கேட்டுள்ளோம் என்று இந்தியக் குடியரசுக் கட்சியின் தலைவரும் மத்திய அமைச்சருமான ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பேசிய அவர், "அதிமுக தலைமையிலான கூட்டணியில் எங்களுக்கு சீட் தராவிட்டால் 51 தொகுதிகளில் எங்கள் கட்சி சார்பில் வேட்பாளர்களை நிறுத்துவோம். போட்டியிடாத தொகுதிகளில் NDA கூட்டணிக்கு ஆதரவு அளிப்போம்" என்று கூறினார்.

    • வருகிற மார்ச் 1-ந்தேதி மதுரையில் பிரதமர் பங்கேற்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கு பாரதிய ஜனதா ஏற்பாடு செய்து வருகிறது.
    • தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டமாக நடத்தப்படும் இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்கிறார்கள்.

    சென்னை:

    தமிழகத்தில் ஏப்ரல் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சட்டமன்ற தேர்தல் தொடர்பான அறிவிப்பு இந்த மாத இறுதியிலோ அல்லது அடுத்த மாத தொடக்கத்திலோ வெளியாக உள்ளது.

    தமிழகத்தில் தி.மு.க. தலைமையில் ஒரு அணியும் அ.தி.மு.க. தலைமையில் இன்னொரு அணியும் செயல்பட்டு வரும் நிலையில், தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் தனித்து களமிறங்குகிறார்கள்.

    இதனால் சட்டமன்ற தேர்தலில் 4 முனை போட்டி ஏற்பட்டுள்ளது. தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் தி.மு.க. பம்பரமாக சுழன்று வருகிறது. அதே நேரத்தில் தி.மு.க.வை வீழ்த்தி ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் அ.தி.மு.க.வும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.க., அன்புமணி தலைமையிலான பா.ம.க., டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க., ஜி.கே.வாசனின் த.மா.கா. ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

    மேலும் பல சிறிய கட்சிகளும் இந்த கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றிருந்த தே.மு.தி.க. தற்போது எந்தக் கூட்டணியிலும் இல்லை என்கிற அறிவிப்பை வெளியிட்டு விட்டு யாருடன் கூட்டணி அமைப்பது என்று ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.

    இது தொடர்பாக தி.மு.க. அ.தி.மு.க. ஆகிய 2 கட்சிகளுடன் தே.மு.தி.க. திரைமறைவில் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன.

    இந்த முறை தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்று தே.மு.தி.க. தேர்தலை சந்திக்க தயாராகி விட்டதாகவும் இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முக்கிய திருப்பமாக தே.மு.தி.க.வை தங்களது கூட்டணியில் எப்படியாவது தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியும் தொடர் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.

    இது தொடர்பாக தமிழக பா.ஜனதா தலைவர்கள் மற்றும் தே.மு.தி.க. தலைவர்கள் ஆகியோர் நேரில் சந்தித்து பேச்சு நடத்தி இருப்பதாக புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

    தமிழகத்தில் ஏற்கனவே சுற்றுப்பயணம் செய்துள்ள பிரதமர் மோடி சென்னையை அடுத்த மதுராந்தகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டார்.

    இந்த நிலையில் வருகிற மார்ச் 1-ந்தேதி மதுரையில் பிரதமர் பங்கேற்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கு பாரதிய ஜனதா ஏற்பாடு செய்து வருகிறது.

    தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டமாக நடத்தப்படும் இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்கிறார்கள்.

    இந்த கூட்டத்தில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதாவையும் ஒன்றாக மேடை ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாகவே பா.ஜனதா-தே.மு.தி.க. இடையே பேச்சுவார்த்தைகளும் நடத்தப்பட்டுள்ளன. இந்த பேச்சுவார்த்தையை இன்னும் சில தினங்களில் முடித்து அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணியில் தே.மு.தி.க. இடம் பெறுவதை உறுதி செய்துவிட வேண்டும் என்று மத்திய மந்திரி அமித்ஷா தமிழக பா.ஜ.க. தலைவர்களிடம் அறிவுறுத்தி உள்ளார்.

    கடந்த முறை மதுராந்தகத்தில் நடைபெற்ற பிரதமரின் பொதுக்கூட்டத்திலேயே தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் கூட்டணி தொடர்பான பேச்சு வார்த்தைகள் இறுதி செய்யப்படாததால் பிரேமலதா அந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

    இதுபோன்ற சூழலில் தான் இன்னும் 2 வாரத்தில் மீண்டும் பிரதமர் தமிழகம் வர இருக்கிறார். அதற்குள் தே.மு.தி.க.வுடன் பேச்சுவார்த்தையை உறுதி செய்து தங்களது கூட்டணியில் அந்தக் கட்சி இருப்பதை எப்படியாவது உறுதி செய்து விட வேண்டும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர்களும் தீவிரமான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

    இதுபற்றி பா.ஜனதா நிர்வாகி ஒருவர் கூறும் போது, வருகிற சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் தே.மு.தி.க. ஜனநாயக கூட்டணியிலேயே இடம்பெறும் என்று நம்புவதாகவும், இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் விரைவில் முடிவடையும் என்றும் தெரிவித்துள்ளார்.

    • நயினார் நாகேந்திரனின் பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.
    • நயினாரின் பேச்சு வருத்தமாகத்தான் இருக்கிறது என்று வானதி சீனிவாசனம் தெரிவித்தார்.

    சேலம் மாவட்ட த.வெ.க. நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் சீலநாயக்கன் பட்டி பைபாஸ் சாலையில் உள்ள தாளமுத்து நடராஜன் திடலில் நடைபெற்றது.

    அண்ணா தொடங்கிய கட்சியை மு.க. ஸ்டாலின் வைத்துள்ளார். அதிமுக தொடங்கிய கட்சியை எடப்பாடி பழனிசாமி வைத்துள்ளார் என விஜய் கூறியுள்ளது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனிடம் கேள்வி கேட்கப்பட்டது.

    அதற்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன்,"பாவம், அவர் அனுபவமே இல்லாதவர். முதலில் வீட்டில் இருந்து வெளியே வர வேண்டும். திரிஷாவிடம் இருந்து வெளியே வரணும். வெளியில் வந்தால்தான் எல்லாமே நடத்த முடியும்" என்றார்.

    நயினார் நாகேந்திரனின் இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.

    இத்தனிடையே, இதுகுறித்து பேசிய பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், "நயினாரின் பேச்சு கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கிறது. ரொம்ப பண்பாகப் பேசக் கூடியவர்.. எதற்காக அப்படி பேசினார் எனத் தெரியவில்லை" என்று தெரிவித்தார்.

    இந்நிலையில், இதுகுறித்து பேசிய பாஜக மூத்த தலைவர் தமிழிசை, "நயினார் நாகேந்திரன் பெண்களுக்கு மிகுந்த மரியாதை கொடுப்பவர். அவர் எந்த உள்நோக்கத்திலும் பேசியதாக தெரியவில்லை. அவர் யாரையும் புண்படுத்த வேண்டும் என்றோ உள்நோக்கத்திடனோ பெண்களை இழிவுபடுத்தா வேண்டும் என்ற எண்ணம் உடையவர் அல்ல. . அவரை விமர்சிக்க திமுக, காங்கிரஸ் கட்சி தலைவர்களுக்கு தகுதி இல்லை"

    • நயினார் நாகேந்திரனின் விஜய் குறித்த கருத்துக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது
    • அநாகரிகமாக பேசுவதே ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.கவின் அருவருக்கத்தக்க அரசியல்.

    சேலம் மாவட்ட த.வெ.க. நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் சீலநாயக்கன் பட்டி பைபாஸ் சாலையில் உள்ள தாளமுத்து நடராஜன் திடலில் நடைபெற்றது.

    அண்ணா தொடங்கிய கட்சியை மு.க. ஸ்டாலின் வைத்துள்ளார். அதிமுக தொடங்கிய கட்சியை எடப்பாடி பழனிசாமி வைத்துள்ளார் என விஜய் கூறியுள்ளது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனிடம் கேள்வி கேட்கப்பட்டது.

    அதற்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன்,"பாவம், அவர் அனுபவமே இல்லாதவர். முதலில் வீட்டில் இருந்து வெளியே வர வேண்டும். திரிஷாவிடம் இருந்து வெளியே வரணும். வெளியில் வந்தால்தான் எல்லாமே நடத்த முடியும்" என்றார்.

    நயினார் நாகேந்திரனின் இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.

    இந்நிலையில் நயினார் நாகேந்திரனின் பேச்சை கண்டித்து திமுக எம்.பி. கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில், "ஒரு ஆணை விமர்சிப்பதற்கு கூட, ஒரு பெண்ணை இழிவுபடுத்தி அநாகரிகமாக பேசுவதே ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.கவின் அருவருக்கத்தக்க அரசியல். தமிழ்நாடு பாஜக தலைவரின் கருத்து வன்மையாகக் கண்டிக்கத்தக்கது" என்று தெரிவித்துள்ளார்.

      சேலம் மாவட்ட த.வெ.க. நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் சீலநாயக்கன் பட்டி பைபாஸ் சாலையில் உள்ள தாளமுத்து நடராஜன் திடலில் நடைபெற்றது.

      அண்ணா தொடங்கிய கட்சியை மு.க. ஸ்டாலின் வைத்துள்ளார். அதிமுக தொடங்கிய கட்சியை எடப்பாடி பழனிசாமி வைத்துள்ளார் என விஜய் கூறியுள்ளது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனிடம் கேள்வி கேட்கப்பட்டது.

      அதற்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன்,"பாவம், அவர் அனுபவமே இல்லாதவர். முதலில் வீட்டில் இருந்து வெளியே வர வேண்டும். திரிஷாவிடம் இருந்து வெளியே வரணும். வெளியில் வந்தால்தான் எல்லாமே நடத்த முடியும்" என்றார்.

      நயினார் நாகேந்திரனின் இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.

      இந்நிலையில், இதுகுறித்து பேசிய பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், "நயினாரின் பேச்சு கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கிறது. ரொம்ப பண்பாகப் பேசக் கூடியவர்.. எதற்காக அப்படி பேசினார் எனத் தெரியவில்லை" என்று தெரிவித்தார்.

      • நயினார் நாகேந்திரனின் இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது
      • மாநிலங்களவை எம்.பி. கமல்ஹாசனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

      சேலம் மாவட்ட த.வெ.க. நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் சீலநாயக்கன் பட்டி பைபாஸ் சாலையில் உள்ள தாளமுத்து நடராஜன் திடலில் நடைபெற்றது.

      அண்ணா தொடங்கிய கட்சியை மு.க. ஸ்டாலின் வைத்துள்ளார். அதிமுக தொடங்கிய கட்சியை எடப்பாடி பழனிசாமி வைத்துள்ளார் என விஜய் கூறியுள்ளது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனிடம் கேள்வி கேட்கப்பட்டது.

      அதற்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன்,"பாவம், அவர் அனுபவமே இல்லாதவர். முதலில் வீட்டில் இருந்து வெளியே வர வேண்டும். திரிஷாவிடம் இருந்து வெளியே வரணும். வெளியில் வந்தால்தான் எல்லாமே நடத்த முடியும்" என்றார்.

      நயினார் நாகேந்திரனின் இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.

      இந்நிலையில் இதுகுறித்து மாநிலங்களவை எம்.பி. கமல்ஹாசனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், "அது அவங்க அரசியல்.. என் அரசியல் இல்ல" என்று தெரிவித்தார். 

      • அமித்ஷா வர்ணம் தீட்டிய பகுதியில் பொதுமக்கள் யாரையும் போலீசார் அனுமதிக்கவில்லை.
      • தே.மு.தி.க.வையும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கொண்டு வர முயற்சி நடந்து வருகிறது.

      காரைக்கால்:

      மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று காரைக்கால் வந்தார். காரைக்காலில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். முன்னதாக அவர் கோட்டுச்சேரியில் உள்ள ஒரு வீட்டின் சுவரில் தாமரை சின்னத்துக்கு வர்ணம் தீட்டினார். நல்லாட்சி தொடரட்டும், புதுவை மலரட்டும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களியுங்கள் என அவர் எழுதினார்.

      அமித்ஷா வருகையை முன்னிட்டு காரைக்கால் பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கோட்டுச்சேரி பகுதி போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

      அமித்ஷா வர்ணம் தீட்டிய பகுதியில் பொதுமக்கள் யாரையும் போலீசார் அனுமதிக்கவில்லை.

      இந்த நிலையில் தே.மு.தி.க.வையும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கொண்டு வர முயற்சி நடந்து வருகிறது.

      அதற்கான பேச்சுவார்த்தையில் பா.ஜ.க. முக்கிய பிரமுகர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

      அடுத்த முறை பிரதமர் மோடி தமிழகத்துக்கு வரும் போது அவர் பங்கேற்கும் கூட்டத்தில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதாவையும் மேடை ஏற செய்யும் முயற்சியில் பா.ஜ.க.வினர் ஈடுபட்டு வருகின்றனர்.

      2 நாள் பயணமாக தமிழக மற்றும் புதுவை வந்த மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தேர்தல் வியூகம் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

      • நயினார் நாகேந்திரனின் இந்த கருத்துக்கு தவெக தரப்பில் கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.
      • செய்தியாளர்கள் தவெக நிர்வாகி செங்கோட்டையனிடம் கேள்வி எழுப்பினர்.

      சேலம் மாவட்ட த.வெ.க. நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் சீலநாயக்கன் பட்டி பைபாஸ் சாலையில் உள்ள தாளமுத்து நடராஜன் திடலில் நடைபெற்றது.

      அண்ணா தொடங்கிய கட்சியை மு.க. ஸ்டாலின் வைத்துள்ளார். அதிமுக தொடங்கிய கட்சியை எடப்பாடி பழனிசாமி வைத்துள்ளார் என விஜய் கூறியுள்ளது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனிடம் கேள்வி கேட்கப்பட்டது.

      அதற்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன்,"பாவம், அவர் அனுபவமே இல்லாதவர். முதலில் வீட்டில் இருந்து வெளியே வர வேண்டும். திரிஷாவிடம் இருந்து வெளியே வரணும். வெளியில் வந்தால்தான் எல்லாமே நடத்த முடியும்" என்றார்.

      நயினார் நாகேந்திரனின் இந்த கருத்துக்கு தவெக தரப்பில் கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது. இது குறித்து செய்தியாளர்கள் தவெக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செங்கோட்டையனிடம் கேள்வி எழுப்பினர்.

      இந்த கேள்வியால் கடுப்பான செங்கோட்டையன், "பாஜக ஒரு கட்சியா? நயினார் நாகேந்திரன் எல்லாம் ஒரு ஆளா?" என்று காட்டமாக தெரிவித்தார்.

      • காங்கிரஸ் ஆட்சியின் போது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் அன்றாடம் தாக்குதல் நடத்தினார்கள்.
      • புதுச்சேரி மக்கள் மோடி மீது மிகப்பெரிய நம்பிக்கையை வைத்து இருக்கிறார்கள்.

      தமிழகம் மற்றும் புதுச்சேரியில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரசுடன் இணைந்து தேர்தலை எதிர்கொள்ள பா.ஜ.க. திட்டமிட்டு உள்ளது.

      புதுச்சேரியில் பா.ஜ.க.-என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியை உறுதிபடுத்தும் வகையில் பா.ஜக. தேர்தல் பிரசார பொதுக்கூட்டம், புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இன்று பகல் 12 மணிக்கு நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய மந்திரி அமித்ஷா டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் நேற்று இரவு திருச்சி வந்தார்.

      அவருடன் புதுச்சேரி தேர்தல் பொறுப்பாளரும், மத்திய மந்திரியுமான மன்சுக் மாண்டவியா, மத்திய மந்திரி எல்.முருகன் ஆகியோரும் வந்தனர். திருச்சி வந்த அமித்ஷாவை தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர் அவர்கள் திருச்சி கலெக்டர் அலுவலக சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இரவில் தங்கி ஓய்வெடுத்தனர்.

      இன்று காலை அமித்ஷா நட்சத்திர ஓட்டலில் தமிழக பா.ஜ.க. நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். இதில் மத்திய மந்திரி எல்.முருகன், தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர்கள் அரவிந்த் மேனன், சுதாகர் ரெட்டி உள்ளிட்ட 15 பேர் கலந்து கொண்டனர்.

      இந்த ஆலோசனை கூட்டம் சுமார் 30 நிமிடம் நடந்தது. இதில் தமிழக சட்டமன்றத் தேர்தல் வெற்றி வியூகம், தொகுதி பங்கீடு, தமிழக அரசு மகளிர் உரிமைத் தொகை பெறும் பயனாளிகளுக்கு முன் தேதியிட்டு அவர்களின் வங்கிக் கணக்கில் கோடை சிறப்பு தொகுப்புடன் சேர்த்து ரூ.5,000 வழங்கியதால் ஏற்பட்டுள்ள அரசியல் தாக்கம் ஆகியவை தொடர்பாக அமித்ஷா விரிவாக விவாதித்ததாக கூறப்படுகிறது.

      இதனை எதிர் கொண்டு பெண் வாக்காளர்களை பா.ஜ.க.-அ.தி.மு.க. கூட்டணி பக்கம் திருப்பி தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து நிர்வாகிகளிடம் கருத்துக்களை கேட்டு ஆலோசனை வழங்கினார்.

      பின்னர் மத்திய மந்திரி அமித்ஷா திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் காரைக்கால் வரிச்சிக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் அமைந்துள்ள ஹெலிபேடு மைதானத்துக்கு வந்தார்.

      அங்கு அவரை புதுச்சேரி கவர்னர் கைலாஷ்நாதன், முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், பா.ஜ.க. மாநில தலைவர் வி.பி.ராமலிங்கம், புதுவை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க் கள் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

      பின்னர் அமித்ஷா அங்கிருந்து காரில் பாரதியார் சாலை, திருநள்ளாறு சாலை வழியாக நகராட்சி சந்தை திடலை அடைந்தார். அங்கு நடைபெற்ற பிரமாண்ட தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் அமித்ஷா பேசினார். கூட்டத்தில் மத்திய மந்திரி அமித்ஷா பேசியதாவது:-

      திருநள்ளாறு சனீஸ்வரன், பத்ர காளியம்மனை வணங்கி எனது உரையை தொடங்குகிறேன். உலகின் தொன்மையான மொழியான தமிழில் உரையாற்ற முடியாமல் போனதற்கு வருத்தம் தெரிவிக்கிறேன்.

      நான் இங்கு வந்திருப்பதற்கு 2 நோக்கங்கள் இருக்கின்றன. முதல் நோக்கம் நமது பிரதமர் மோடி தலைமையிலும், புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமி தலைமையிலும் இத்தனை ஆண்டு காலம் என்ன நடந்திருக்கிறது என்பதற்கான பட்டியலை, அறிக்கையை உங்கள் முன் சமர்ப்பிக்க வந்திருக்கிறேன்.

      இந்த இந்தியா கூட்டணி இருக்கிறதே இவர்களுடைய தீய நோக்கம், அந்த திரையை கிழித்து எறிவதற்காகவும் நான் இங்கு வந்திருக்கிறேன்.

      புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு 3 வேலைகளை செய்து இருக்கிறது. ஒன்று ஊழலை ஒரு முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறது. 2-வது விஷயம் முன்பு இங்கு இருந்த காங்கிரஸ் அரசு புதுச்சேரியை டெல்லிக்கு அடிமையாக ஆக்கி வைத்திருந்தது.

      ஆனால் எங்கள் அரசு இங்கு சுயமாக செயல்படும் அரசுக்கு ஆதரவு அளித்து அதை உருவாக்கி இருக்கிறது. 3-வது பணி புதுச்சேரியில் அரசியல் நிலைத்தன்மையை நாங்கள் அமைத்திருக்கிறோம்.

      காங்கிரஸ் ஆட்சியின் போது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் அன்றாடம் தாக்குதல் நடத்தினார்கள்.

      மோடி பிரதமராக ஆன பிறகு 2019-ல் முதல் முறையாக புல்வாமாவில் தாக்குதல் நடந்த பிறகு அவர்களின் வீடு புகுந்து தாக்கினோம். வான் வழியே சென்று தாக்குதல் தொடுத்தோம். முதல் துல்லிய தாக்குதல், பிறகு வான்வழி தாக்குதல், நிறைவாக ஆபரேஷன் சிந்தூரை அரங்கேற்றினோம். அவர்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறோம்.

      பிரதமர் மோடியின் அரசை பார்த்து எந்த ஒரு தீய சக்தியும் கண்ணெடுத்து கூட பார்க்க முடியாது. இந்தியாவுக்கு பிரதமர் மோடி வலிமையை மட்டும் அளிக்கவில்லை. போதுமான பாதுகாப்பையும் அளித்துள்ளார். புதுச்சேரி மக்கள் மோடி மீது மிகப்பெரிய நம்பிக்கையை வைத்து இருக்கிறார்கள்.

      புதுச்சேரியில் நாராயணசாமி ஆட்சியில் ரூ.15 ஆயிரம் கோடிக்கு முறைகேடு நடந்துள்ளது. புதுச்சேரியின் உரிமைகளை ஏலத்தில் விட்டவர் நாராயணசாமி. ரூ.15 ஆயிரம் கோடி என்பது புதுச்சேரியின் 3 ஆண்டு பட்ஜெட். தாழ்த்தப்பட்ட மக்களின் நிலங்களை அபகரித்தவர் நாராயணசாமி. அவரது ஆட்சியின் முறைகேடு குறித்து விசாரணை நடத்தப்படும். நாராயணசாமிக்கு டெல்லி கஜானாவை நிரப்புவதுதான் வேலையாக இருந்தது. காங்கிரசால் புதுச்சேரி பின்னடைவை சந்தித்தது.

      இவ்வாறு அவர் பேசினார்.

      பொதுக்கூட்டம் முடிந்ததும் மத்திய மந்திரி அமித்ஷா, திருநள்ளாறு சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் முக்கிய பிரமுகர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து காரைக்கால் பா.ஜ.க. கிளை கமிட்டி நிர்வாகி ஒருவரது இல்லத்தில் கட்சி கொடி ஏற்றி வைத்தார்.

      அதன்பிறகு அமித்ஷா மாலையில் மீண்டும் திருச்சி புறப்பட்டு செல்கிறார். பின்னர் திருச்சியில் இருந்து தனி விமானம் மூலம் அமித்ஷா டெல்லி புறப்படுகிறார். அமித்ஷா வருகையையொட்டி காரைக்கால், திருச்சியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

      • நயினார் நாகேந்திரனின் கருத்துக்கு தவெக தரப்பில் கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.
      • நயினார் நாகேந்திரனின் பேச்சிற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

      சேலம் மாவட்ட த.வெ.க. நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் சீலநாயக்கன் பட்டி பைபாஸ் சாலையில் உள்ள தாளமுத்து நடராஜன் திடலில் நடைபெற்றது.

      அண்ணா தொடங்கிய கட்சியை மு.க. ஸ்டாலின் வைத்துள்ளார். அதிமுக தொடங்கிய கட்சியை எடப்பாடி பழனிசாமி வைத்துள்ளார் என விஜய் கூறியுள்ளது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனிடம் கேள்வி கேட்கப்பட்டது.

      அதற்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன்,"பாவம், அவர் அனுபவமே இல்லாதவர். முதலில் வீட்டில் இருந்து வெளியே வர வேண்டும். திரிஷாவிடம் இருந்து வெளியே வரணும். வெளியில் வந்தால்தான் எல்லாமே நடத்த முடியும்" என்றார்.

      நயினார் நாகேந்திரனின் கருத்துக்கு தவெக தரப்பில் கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.

      மேலும், நயினார் நாகேந்திரனின் பேச்சிற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

      இந்நிலையில், தவெக தலைவர் விஜய் குறித்த நயினார் நாகேந்திரனின் அநாகரிக விமர்சனத்திற்கு திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

      இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

      இந்தியாவை ஆளும் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர், அரசியல் கருத்துகளைச் சொல்லும்போது, பொதுவெளியில் பயணிக்கும் பெண்ணைப் பற்றி, அவதூறாகப் பேசுவது அழகல்ல.

      பெண்களைக் கண்ணியத்துடன் பேசுவதும், நடத்துவதுமே நாகரீக அரசியல் ஆகும்.

      இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

      • விஜய் கூறியது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனிடம் கேள்வி கேட்கப்பட்டது.
      • திரிஷாவிடம் இருந்து விஜய் வெளியே வரணும்.

      சேலம் மாவட்ட த.வெ.க. நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் சீலநாயக்கன் பட்டி பைபாஸ் சாலையில் உள்ள தாளமுத்து நடராஜன் திடலில் நடைபெற்றது.

      அண்ணா தொடங்கிய கட்சியை மு.க. ஸ்டாலின் வைத்துள்ளார். அதிமுக தொடங்கிய கட்சியை எடப்பாடி பழனிசாமி வைத்துள்ளார் என விஜய் கூறியுள்ளது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனிடம் கேள்வி கேட்கப்பட்டது.

      அதற்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன்,"பாவம், அவர் அனுபவமே இல்லாதவர். முதலில் வீட்டில் இருந்து வெளியே வர வேண்டும். திரிஷாவிடம் இருந்து வெளியே வரணும். வெளியில் வந்தால்தான் எல்லாமே நடத்த முடியும்" என்றார்.

      நயினார் நாகேந்திரனின் இந்த கருத்துக்கு தவெக தரப்பில் கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது. அந்த வகையில், தவெக பரப்புரை செயலாளர் நாஞ்சில் சம்பத் தனது எக்ஸ் தள பக்கத்தில் கண்டன பதிவை வெளியிட்டுள்ளார்.

      அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

      ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவராக இருக்கும் ஒருவர், எத்தகைய அரசியல் கண்ணியத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற அடிப்படை அறிவைக்கூட நயினார் நாகேந்திரன் இழந்துவிட்டார். எங்கள் கிளைச் செயலாளர் கூட இவரை விடக் கண்ணியத்தோடு பேசுவார்.

      அறிவாலயத்தைத் திட்டினால் கமலாலயத்தில் உள்ள ஒருவருக்குக் காய்ச்சல் வருகிறதா? அறிவாலயமும் கமலாலயமும் ஓராலயமாகிவிட்டதா?

      4 கோடி ரூபாய் சிக்கலில் சிக்கித் தவிக்கும் ஒரு நபர், அடுத்தவர்களுக்கு அறிவுரை கூறுவது இந்த ஆண்டின் மிகப்பெரிய நகைச்சுவை. கடந்த தேர்தலில் கட்டைப்பையில் கட்டுக் கட்டாகப் பணம் தூக்கித் திரிந்த நாகம், இன்று ஊருக்கு உபதேசம் செய்வதா?

      முதலில், உங்கள் முதுகில் படிந்துள்ள கறைகளைக் கங்கை நீரால் கழுவுங்கள். எங்கள் தலைவர் மீது விழுகிற அங்கீகார வெளிச்சம் உங்கள் கண்களைக் கூசச் செய்கிறது; உங்கள் அறிவைக் குருடாக்கிவிட்டது.

      பொறாமைத் தீயில் வெந்து கொண்டிருக்கும் நீங்கள், வரம்பு மீறி விமர்சனம் செய்தால், தமிழகப் பெண்கள் திருப்பித் தரப்போகும் பதிலடிகளுக்கு உங்களால் பதில் சொல்ல முடியாது.

      இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

      • அமித்ஷா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு தேர்தல் பிரசாரத்தை தொடங்கி வைத்து பேசுகிறார்.
      • காரைக்கால் பா.ஜ.க கிளை கமிட்டி நிர்வாகி ஒருவர் இல்லத்தில் கட்சி கொடி ஏற்றி வைக்கிறார்.

      மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் மற்றும் காரைக்காலில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க 2 நாள் சுற்றுப்பயணமாக இன்று (வெள்ளிக்கிழமை) திருச்சி வருகிறார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் இன்று இரவு 9 மணிக்கு திருச்சி விமான நிலையம் வருகிறார்.

      பின்னர், அங்கிருந்து சாலை மார்க்கமாக திருச்சி கலெக்டர் அலுவலக சாலையில் உள்ள நட்சத்திர விடுதியில் இரவு தங்கி ஓய்வு எடுக்கிறார். பின்னர் நாளை 14-ந்தேதி (சனிக்கிழமை) காலை 10.30 மணிக்கு நட்சத்திர விடுதியில் இருந்து காரில் புறப்பட்டு திருச்சி விமான நிலையம் சென்று அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் காரைக்கால் வருகிறார்.

      காரைக்கால் வரிச்சிக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் அமைந்துள்ள ஹெலிபேடு மைதானத்தில் காலை 11 மணியளவில் அமித்ஷா வந்து இறங்குகிறார். பின்னர் அங்கிருந்து பாரதியார் சாலை மற்றும் திருநள்ளாறு சாலை வழியாக சென்று, நகராட்சி திடலில் மதியம் 11.30 மணியளவில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு தேர்தல் பிரசாரத்தை தொடங்கி வைத்து பேசுகிறார்.

      பொதுக்கூட்டம் முடிந்ததும் திருநள்ளாறு சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் முக்கிய பிரமுகர்களை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். பின்னர் காரைக்கால் பா.ஜ.க கிளை கமிட்டி நிர்வாகி ஒருவர் இல்லத்தில் கட்சி கொடி ஏற்றி வைக்கிறார்.

      பின்னர் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு மாலை 4 மணிக்கு மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் திருச்சிக்கு புறப்பட்டு செல்கின்றார். அமித் ஷாவின் வருகையையொட்டி சாலை முழுவதும் பா.ஜ.க-வினர் உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.

      மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் சுமார் 12 ஆயிரம் பேர் கூடுவார்கள் என்று கூறப்படுகிறது. பாதுகாப்பு பணியில் 700 போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதற்காக புதுச்சேரியில் இருந்து 350 போலீசார் வர உள்ளனர். மேலும் 7 பட்டாலியன் துணை ராணுவ படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளார்கள்.

      6 இடங்களில் பார்க்கிங் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக மாவட்டம் முழுவதும் டிரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

      முன்னதாக காரைக்கால் வருகை தரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க பா.ஜ.க மாநில தலைவர் வி.பி.ராமலிங்கம் தலைமையில் அக்கட்சியினர் ஏற்பாடு செய்துள்ளனர். செண்டை மேளம், தாரை, தப்பட்டை முழங்க வரவேற்பு அளிக்கப்படுகிறது.

      மேலும், அமித்ஷா பங்கேற்கும் நிகழ்ச்சி இடங்களில் கொடி, தோரணங்கள் வழி நெடுகிலும் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு விழா கோலம்போல காட்சியளிக்கிறது.

      மத்திய அமைச்சர் அமித்ஷா வருகையையொட்டி மாநில பா.ஜ.க தலைவர் வி.பி.ராமலிங்கம், சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் பா.ஜ.க எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் காரைக்காலிலேயே முகாமிட்டு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

      ×