என் மலர்
நீங்கள் தேடியது "உதயநிதி ஸ்டாலின்"
- பஸ் நிலையத்தில் 64 கடைகள் கட்டப்பட்டுள்ளன.
- பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தையும் அவர் திறந்து வைத்தார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பழைய, புதிய பஸ் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதற்கிடையில் வாகன பெருக்கம், நகரின் வளர்ச்சி காரணமாக போக்குவரத்து நெருக்கடி மிகுந்து காணப்படுகிறது.
இதன் காரணமாக பொள்ளாச்சியில் கூடுதலாக பஸ் நிலையம் கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டது. அதன்படி உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பொள்ளாச்சி-கோவை ரோடு சி.டி.சி.மேட்டில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கலைஞர் நூற்றாண்டு பஸ் நிலையம் கட்டுவதற்கு ரூ.9 கோடியே 83 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து பணிகள் வேகமாக நடைபெற்று வந்தது. பஸ் நிலையத்தில் 64 கடைகள் கட்டப்பட்டுள்ளன. பொள்ளாச்சியின் கலாசாரத்தை வெளிப்படுத்தும் வகையில் ஓவியங்களும் வரையப்பட்டுள்ளன.
பணிகள் அனைத்தும் நிறைவு பெற்றதை தொடர்ந்து பொள்ளாச்சி கலைஞர் நூற்றாண்டு பஸ் நிலையம் இன்று திறக்கப்பட்டது.
பொள்ளாச்சியில் நடந்த விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று கலைஞர் நூற்றாண்டு பஸ் நிலையத்தை திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து பஸ் நிலையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகளையும் அவர் பார்வையிட்டார்.
அதனை தொடர்ந்து காந்திசாலை-பல்லடம் ரோட்டை இணைக்கும் புதிய சாலைக்கு பொள்ளாச்சி நா.மகாலிங்கம் பெயரை சூட்டி, பெயர் பலகையையும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.60 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தையும் அவர் திறந்து வைத்தார்.
பொள்ளாச்சி நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருப்பூர் மாவட்டம் உடுமலை செல்கிறார். திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்கிறார். துணை முதலமைச்சர் வருகையை முன்னிட்டு பொள்ளாச்சியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
- தொகுதி பங்கீடு, கூட்டணி அமைத்தல், தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணிகளில் கட்சிகள் வேகம் காட்டி வருகிறது.
- கட்சியின் சார்பில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் துணை முதலமைச்சர் உதயநிதிஸ்டாலின் பங்கேற்றார்.
கோவை:
தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள தி.மு.க., அ.தி.மு.க உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. தற்போது தொகுதி பங்கீடு, கூட்டணி அமைத்தல், தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணிகளில் கட்சிகள் வேகம் காட்டி வருகிறது.
இந்த நிலையில் ஆளும் கட்சியான தி.மு.க புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளை ஒன்றிணைத்து மண்டல அளவில், மாநாடு நடத்தி வருகிறது.
முதல்கட்டமாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 14-ந் தேதி திருவண்ணாமலையில் தி.மு.க. வடக்கு மண்டல இளைஞரணி மாநாடு நடந்தது. இதில் 1.3 லட்சம் இளைஞரணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அடுத்த கட்டமாக இளைஞரணியின் தென் மண்டல மாநாடு விருதுநகரில் ஜனவரி 24-ம் தேதி நடந்தது. இதிலும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான இளைஞரணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
அதன் தொடர்ச்சியாக தி.மு.க. இளைஞரணி மேற்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு மாநாடானது இன்று மாலை 5 மணிக்கு கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள கணியூர் டோல்கேட் பகுதியில் நடக்க உள்ளது.
இந்த மாநாட்டில் தி.மு.க இளைஞரணி செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கிறார்.
இதற்காக அவர் நேற்றிரவு சென்னையில் இருந்து விமானம் மூலமாக கோவைக்கு வந்தார்.
பின்னர் அவர் கார் மூலமாக பொள்ளாச்சிக்கு சென்று நேற்றிரவு அங்கு தங்கி ஓய்வெடுத்தார்.
இன்று காலை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொள்ளாச்சி-கோவை ரோட்டில் சி.டி.சி மேடு பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு புதிய பஸ் நிலையத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து அங்கு நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர் அங்கிருந்து திருப்பூர் மாவட்டம் உடுமலைக்கு சென்றார். அங்கு கட்சியின் சார்பில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளிலும் துணை முதலமைச்சர் உதயநிதிஸ்டாலின் பங்கேற்றார்.
அந்த நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு, மாலை 5 மணிக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோவை கருமத்தம்பட்டி அடுத்த கணியூர் டோல்கேட் பகுதிக்கு வருகிறார்.
அங்கு நடக்கும் தி.மு.க இளைஞரணி மேற்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு மாநாட்டில் பங்கேற்கும் அவர் மாநாட்டிற்கு தலைமை தாங்கி உரையாற்றுகிறார்.
துணை பொதுச்செயலாளர்கள் ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ், அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். மேற்கு மண்டல பொறுப்பாளர் செந்தில் பாலாஜி வரவேற்புரை ஆற்றுகிறார்.
அமைச்சர்கள் முத்துசாமி, சக்கரபாணி, மதிவேந்தன், கயல்விழி செல்வராஜ் மற்றும் மாநில இளைஞர் அணி துணை செயலாளர்கள், மாவட்ட மாநகர செயலாளர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்க உள்ளனர். மாநாட்டின் முடிவில் இளைஞர் அணி துணை செயலாளர் பிரகாஷ் நன்றி கூறுகிறார்.
முன்னதாக மாநாட்டிற்கு வரும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.
கோவையில் நடக்கும் மேற்கு மண்டல தி.மு.க இளைஞரணி நிர்வாகிகள் மாநாட்டில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் நீலகிரி ஆகிய 8 மாவட்டங்கள், 39 தொகுதிகளை சேர்ந்த தி.மு.க இளைஞர் அணி நிர்வாகிகள் என ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்க உள்ளனர்.
மாநாட்டில் மாவட்ட, மாநகர, ஒன்றிய, பேரூர், வட்ட, கிளை, வாக்குச்சாவடி அளவிலான இளைரணி நிர்வாகிகள் அனைவரும் வெண்சீருடை அணிந்து கலந்து கொள்ள உள்ளனர்.
மாநாட்டையொட்டி கணியூர் டோல்கேட் பகுதியில் பிரமாண்டமான மாநாட்டு பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. மாநாட்டிற்கு வருபவர்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு பார்க்கிங் வசதி, கழிவறை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
மாநாட்டில் பங்கேற்கும் நிர்வாகிகளுக்கு மாநாட்டு பந்தலிலேயே உணவு, குடிநீர் வசதியும் செய்து கொடுக்கப்படுகிறது.
மாநாட்டு பந்தலில் பிரமாண்டமான மேடை அமைக்கப்பட்டுள்ளது. நிர்வாகிகள் அமரும் வகையில் இருக்கைகளும் போடப்பட்டுள்ளன. மாநாட்டையொட்டி அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
- சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாநாட்டில் பங்கேற்பார்கள் என கூறப்படுகிறது.
- மாநாட்டுதிடலின் முகப்பு அனைவரையும் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்பட உள்ளது. தேர்தலை சந்திக்க தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட அனைத்துக்கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன.
இந்தநிலையில் தி.மு.க. இளைஞர் அணி மேற்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு மாநாடு கோவை கருமத்தம்பட்டி கணியூர் டோல்கேட் அருகில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது.
மாநாட்டில் தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், துணை முதல்-அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கி உரையாற்றுகிறார். துணை பொதுச்செயலாளர்கள் ஆ.ராசா, அந்தியூர் ப.செல்வராஜ், அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.
மேற்கு மண்டல பொறுப்பாளர் செந்தில்பாலாஜி வரவேற்கிறார். அமைச்சர்கள் முத்துசாமி, சக்கரபாணி, மதிவேந்தன், கயல்விழி செல்வராஜ் மற்றும் மாநில இளைஞர் அணி துணை செயலாளர்கள், மாவட்ட, மாநகர செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். இளைஞர் அணி துணை செயலாளர் பிரகாஷ் நன்றி கூறுகிறார்.
மாநாட்டில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் நீலகிரி மாவட்ட இளைஞர் அணி நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர். மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்டம் , கிளை மற்றும் வாக்குச்சாவடி அளவிலான இளைஞர் அணி நிர்வாகிகள் வெண்சீருடை அணிந்து கலந்து கொள்ள உள்ளனர். சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாநாட்டில் பங்கேற்பார்கள் என கூறப்படுகிறது.
இதையொட்டி கணியூர் டோல்கேட் அருகில் மாநாட்டு பந்தல் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மாநாட்டுதிடலின் முகப்பு அனைவரையும் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. மேலும் மேடை பிரமாண்டமாக அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த பணிகளை மேற்கு மண்டல தி.மு.க. பொறுப்பாளர் செந்தில்பாலாஜிநேரில் பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்கினார். அவரது வழிகாட்டுதலின்பேரில் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தளபதிமுருகேசன் மாநாட்டு பந்தலில் நடைபெறும் பணிகளை உடனிருந்து கவனித்து வருகிறார்.
மேற்கு மண்டல தி.மு.க. இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் 39 சட்டசபை தொகுதிகளில் இருந்து சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்க உள்ளனர். இதற்காக வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது.
மாநாட்டில் பங்கேற்க வருகை தரும் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு மேற்கு மண்டல பொறுப்பாளர் செந்தில்பாலாஜி தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. பங்கேற்க வரும் தொண்டர்களுக்கு மாநாட்டு பந்தலிலேயே உணவு மற்றும் குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.
- இந்த 10 தொகுதிகளும் தற்போது தி.மு.க.வுக்கும் சரி, அ.தி.மு.க.வுக்கும் சரி கவுரவ பிரச்சனையாக பார்க்கப்படுகிறது.
- கோவையில் அடுத்தடுத்து சில மாநாடுகளை நடத்தி தி.மு.க.வை பலப்படுத்த தலைமை திட்டமிட்டுள்ளது.
கோவை:
தமிழக சட்டசபை தேர்தல் தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்பட உள்ளது. தேர்தலை சந்திக்க தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட அனைத்துக்கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன. தற்போது கூட்டணி அமைத்தல், தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரித்தல் ஆகிய பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.
சட்டசபை தேர்தலை பொறுத்தவரை எப்போதுமே கொங்குமண்டல தொகுதிகளின் வெற்றி முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. கடந்த பல தேர்தல்களில் அ.தி.மு.க., கொங்கு மண்டலங்களில் பெற்ற வெற்றியை கொண்டே அடுத்தடுத்து ஆட்சியை பிடித்தது. கடந்த தேர்தலில் மட்டும் இந்த சென்டிமெண்ட் பழிக்காமல் போனது.
தமிழகத்தின் பிற மாவட்டங்களில் தி.மு.க. அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. ஆனால் கொங்கு மண்டல தலைநகராக விளங்கக் கூடிய கோவை மாவட்டத்தில் தி.மு.க.வால் ஒரு தொகுதிகளில் கூட வெற்றி பெற முடியாமல் போனது. இதன்காரணமாக இந்த தேர்தலில் கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் என முனைப்பில் கட்சி மேலிடம் காய்நகர்த்தி வருகிறது.
இந்த 10 தொகுதிகளும் தற்போது தி.மு.க.வுக்கும் சரி, அ.தி.மு.க.வுக்கும் சரி கவுரவ பிரச்சனையாக பார்க்கப்படுகிறது. இதனால் அ.தி.மு.க.வும் தொகுதிகளை பறிகொடுத்து விடக்கூடாது என்பதற்காக பல மாதங்களுக்கு முன்பே களப்பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ஊர், ஊராக நலத்திட்ட உதவிகள் வழங்குதல், தெருமுனை கூட்டங்கள் நடத்துதல் என பிரசாரங்களை தொடங்கி அ.தி.மு.க.வுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்கள்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கொங்குமண்டல தி.மு.க. பொறுப்பாளராக செந்தில்பாலாஜி களமிறங்கி உள்ளார். ஏற்கனவே கோவை மாவட்டத்தை ஒட்டிய பல்லடத்தில் தி.மு.க. மகளிர் அணி மாநாட்டை பிரமாண்ட நடத்தி முடித்துள்ளார்.
அதற்கடுத்து கோவையில் அடுத்தடுத்து சில மாநாடுகளை நடத்தி தி.மு.க.வை பலப்படுத்த தலைமை திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக தி.மு.க. இளைஞர் அணி மேற்கு மண்டல நிர்வாகிகள் மாநாட்டை கோவையில் நடத்த உள்ளது. ஒட்டுமொத்த கொங்கு மண்டல தொகுதிகளின் வெற்றியையும் குறிவைத்து இந்த மாநாடு நடத்தப்பட உள்ளது.
கோவை கருமத்தம்பட்டி கணியூர் டோல்கேட் அருகில் வருகிற 22-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தி.மு.க. இளைஞர் அணி மேற்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு என்ற பெயரில் இந்த மாநாடு நடைபெற உள்ளது. மாநாட்டில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கி உரையாற்றுகிறார்.
இதுகுறித்து தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் தலைமை கழக அனுமதியுடன் தி.மு.க. இளைஞர் அணிக்கு தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து கிளை-வார்டு-பாகங்களில் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் வடக்கு மண்டலத்துக்கு உட்பட்ட 28 மாவட்டங்கள் 91 சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த 1 லட்சத்து 50 ஆயிரம் நிர்வாகிகளை திருவண்ணாமலையிலும், தென் மண்டலத்துக்கு உட்பட்ட 20 கழக மாவட்டங்கள், 58 சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த ஒரு லட்சம் நிர்வாகிகளை விருதுநகரிலும் சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார்.
இதைத்தொடர்ந்து இளைஞர் அணி செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் வருகிற 22-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 3 மணி அளவில் கோவை கருமத்தம்பட்டி கணியூர் டோல்கேட் அருகில் மேற்கு மண்டல தி.மு.க. இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பு நடைபெற உள்ளது.
இதில் மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த கழக மாவட்டத்திற்கு உட்பட்ட மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்டம், கிளை மற்றும் வாக்குச்சாவடி அளவிலான இளைஞர் அணி நிர்வாகிகள் வெண்சீருடை அணிந்து வரலாறு படைத்திட அந்தந்த மாவட்ட கழக செயலாளர்கள், பாராளுமன்ற, சட்டசபை உறுப்பினர்கள் ஒருங்கிணைந்து இளைஞர் அணி நிர்வாகிகளை மேற்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பிற்கு அழைத்து வரும் பொறுப்பினை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
22-ந்தேதி கோவையில் நடைபெற உள்ள மாநாட்டில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் நீலகிரி மாவட்ட இளைஞர் அணி நிர்வாகிகள் பங்கேற்க உள்ளதாக கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
இந்த மாநாட்டை தொடர்ந்து தி.மு.க. மேற்கு மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி மாநாட்டையும் கோவையில் நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அநேகமாக அந்த மாநாடு இந்த மாத இறுதியிலோ அல்லது மார்ச் மாத முதல் வாரத்திலே இருக்கலாம் என கூறப்படுகிறது. வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பார் என தெரிகிறது.
- முதலமைச்சர் ஒரு கோடியே 31 லட்சம் மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறார்.
- லால்குடியின் வளர்ச்சிக்குத் தொடர்ந்து பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்த உறுதுணையாக இருக்கணும்.
திருச்சி மாவட்டம் லால்குடியில் கலைஞர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.31.89 கோடி செலவில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட்டது.
மேலும், அதன் அருகாமையில் ரூ.4.69 கோடி செலவில் புதிய நகராட்சி அலுவலகம் கட்டப்பட்டது. இந்த புதிய பஸ் நிலையம் மற்றும் நகராட்சி கட்டிடத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைத்து பொதுமக்களுக்கு அர்ப்பணித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:-
திருச்சி மாவட்டத்தில், திருச்சி மாநகரத்திற்கு அடுத்தபடியாக வேகமாக வளர்ந்து வரக்கூடிய ஊர் எது என்று கேட்டால், அது நிச்சயமாக இந்த லால்குடிதான். இன்னும் சொல்லப்போனால், தமிழுக்காக கலைஞர் கண்ட கழகத்திற்கு மூன்று அமைச்சர்களைத் தந்த பெருமைக்குரிய ஊர் இந்த லால்குடி.
பேரறிஞர் அண்ணாவுக்கும், கலைஞருக்கும், மிக நெருக்கமாக இருந்த முன்னாள் அமைச்சர் அன்பில் தர்மலிங்கத்தை இந்த நேரத்தில் நன்றியோடு நினைவு கூர்கிறேன்.
அதேபோல், இப்போது இருக்கக்கூடிய நம்முடைய கழகத் தலைவர், முதலமைச்சருக்குப் பக்கபலமாக இருக்கக்கூடிய ஒரு அமைச்சர்தான் நம்முடைய நேரு. அவரும் இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்தான். அன்பிலாருடைய பாரம்பரியத்தைச் சேர்ந்த அமைச்சர், எனக்குப் பக்கபலமாக இருக்கக்கூடிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் சொந்த ஊரும் இந்தத் தொகுதியில்தான் இருக்கிறது.
இன்றைக்கு நகராட்சி நிர்வாகம், பள்ளிக் கல்வித் துறை என இரண்டு முக்கிய துறைகளுக்கான அமைச்சர்களைத் தந்திருப்பதும் இந்த லால்குடி தொகுதிதான்.
தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும், அனைத்து வளர்ச்சித் திட்டங்களையும் நம்முடைய முதலமைச்சர் திராவிட மாடல் அரசின் மூலம் கொடுத்துக் கொண்டிருக்கிறார். விடியல் பயணத் திட்டமாக இருக்கட்டும், பள்ளிக் குழந்தைகளுக்கான முதலமைச்சர் காலை உணவுத் திட்டமாக இருக்கட்டும், புதுமைப் பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம், பத்து லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டம் என பல திட்டங்கள் உள்ளன.
இவை அனைத்திற்கும் மேலாக இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிற திட்டம்தான் 'கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்'. இந்தத் திட்டத்தில் இன்றைக்கு ஒவ்வொரு மாதமும் நம்முடைய முதலமைச்சர் ஒரு கோடியே 31 லட்சம் மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறார்.
இந்தத் திட்டத்தை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்று சிலர் முயற்சி செய்தார்கள். ஆனால் முதலமைச்சர் என்ன சொன்னார்? நான் கொடுக்கிற 1000 ரூபாயை நீங்க நிப்பாட்டப் பார்க்கிறீங்களா, இனிமேல் நான் 5000 கொடுக்கிறேன் என்று சொன்னார்.
அதன்படி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்குச் சேர்த்து 3000 ரூபாயுடன், கோடைக்கால சிறப்புத் தொகையாக 2000 ரூபாய் சேர்த்து மொத்தம் 5000 ரூபாயை இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு கோடியே 31 லட்சம் மகளிருக்கு நம்முடைய முதலமைச்சர் வழங்கியிருக்கிறார்.
அதுமட்டுமில்ல, மீண்டும் நம்முடைய கழக ஆட்சி அமைந்தவுடனே மகளிர் உரிமைத் தொகையை 1000 ரூபாயில் இருந்து உயர்த்தி மாதம் 2000 ரூபாயாகக் கொடுப்போம் என்று வாக்குறுதி அளித்திருக்கிறார். முதலமைச்சர் சொன்னதை செய்வார் என்ற நம்பிக்கை உங்களுக்கு உள்ளது.
தமிழக மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். மகளிர் உரிமைத்தொகை திட்டத்தால் பெண்கள் கூடுதல் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை முடக்க நினைத்தவர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
இந்த லால்குடியின் வளர்ச்சிக்குத் தொடர்ந்து பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்த இந்த அரசுக்கு நீங்க அத்தனை பேரும் உறுதுணையாக இருக்கணும். இந்தப் புதிய பேருந்து நிலையத்தைச் சிறப்பாகப் பயன்படுத்துங்கள், இதைச் சுத்தமாகப் பராமரிக்க நகராட்சிக்கு முழு ஒத்துழைப்பு கொடுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
- இன்றைய நவீன தமிழ்நாட்டை உருவாக்கியவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி.
- ஆட்சிக்கு வந்ததும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்ட முதல் கையெழுத்து மகளிருக்கான அந்த ‘விடியல் பயண திட்டம்’.
பட்டுக்கோட்டை:
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு முன்னாள் முதலமைச்சர்கள் அறிஞர் அண்ணா, கருணாநிதி சிலைகளை திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-
இன்றைக்கு இந்த பட்டுக்கோட்டை நகரத்திலே இந்த அற்புதமான வாய்ப்பு கிடைத்ததற்கு உண்மையிலேயே நான் மிகுந்த பெருமை அடைகின்றேன், மகிழ்ச்சி அடைகின்றேன். கடந்த 10 நாட்களுக்கு முன்பு இதே தஞ்சை செங்கிப்பட்டியிலே முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலையை திறந்து வைக்கின்ற வாய்ப்பையும் பெற்றேன்.
தஞ்சை மாவட்டம் தி.மு.க.வின் கோட்டை என்று சொன்னால் அது மிகையாகாது. இந்த டெல்டா பகுதி கருணாநிதி மனசுக்கும் சரி, அண்ணாவுடைய மனசுக்கும் மிகுந்த நெருக்கமான ஒரு பகுதி. நம்முடைய முதலமைச்சர் 'நானும் ஒரு டெல்டாக்காரன்' தான் என்று அடிக்கடி பெருமையாக சொல்வார். டெல்டா மாவட்டத்தில் கருணாநிதி செல்லாத இடங்களே இல்லை. திராவிட இயக்கத்துடைய போர்ப்படை தளபதியாக இருந்த பட்டுக்கோட்டை அழகிரியை தந்த மண் இந்த பட்டுக்கோட்டை மண். பட்டுக்கோட்டை அழகிரியின் பேச்சுகளையெல்லாம் கேட்டு திராவிட இயக்கத்திற்கு வந்தவர் தான் கருணாநிதி. கருணாநிதிக்கு 'கலைஞர்' என்ற அந்த பட்டப் பெயரை கொடுத்ததே. பட்டுக்கோட்டை அழகிரி தான்.
அண்ணா, கருணாநிதி சிலைகளை தமிழ்நாடு முழுவதும் நாம் திறக்கிறோம் என்றால் அவர்களுடைய கொள்கைகளை, லட்சியங்களை தமிழ்நாடு முழுக்க கொண்டு போய் சேர்க்கிறோம் என்று அர்த்தம்.
இன்றைய நவீன தமிழ்நாட்டை உருவாக்கியவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. அவரது வழியில் நமது முதலமைச்சர் திராவிட மாடல் ஆட்சியை நடத்தி வருகிறார். ஆட்சிக்கு வந்ததும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்ட முதல் கையெழுத்து மகளிருக்கான அந்த 'விடியல் பயண திட்டம்'. இதன் மூலம் தினமும் ஏராளமான மகளிர் பயனடைந்து வருகின்றனர்.
அதுமட்டுமின்றி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம், தமிழ் புதல்வன் திட்டம், புதுமைப்பெண் திட்டம், விலையில்லா மடிக்கணினி திட்டம் என்று பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் முதலமைச்சர்.
தமிழ்நாட்டில் 1.31 கோடி மகளிர் மாதம் தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை பெற்று வருகின்றனர். சட்டமன்ற தேர்தலை காரணம் காட்டி மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை தடுத்து நிறுத்த சதி நடைபெறுவதை உணர்ந்து தான் முதலமைச்சர் முன்பணமாகவே கோடைக்கால சிறப்பு நிதியையும் சேர்த்து ரூ.5,000 ஆயிரம் வழங்கி உள்ளார். பொங்கல் பண்டிகைக்கும் ரூ.3,000 கொடுத்தார்.
மேலும் மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைந்ததும் மகளிர் உரிமைத்தொகையை ரூ.2,000 உயர்த்தி கொடுப்பேன் என வாக்குறுதி அளித்துள்ளார்.
இப்படி தமிழ்நாட்டு மக்களுக்காக திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார் முதலமைச்சர். இதனால் தான் நமது மாநிலம் நம்பர் ஒன் மாநிலமாக உள்ளது. தமிழகத்தின் வளர்ச்சிக்கு மத்திய பா.ஜ.க. அரசு முட்டுக்கட்டை போட நினைக்கிறது. நமக்கான நிதியை தர மறுக்கிறது.
மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்படுகிறது. ஆனால் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இதைப்பற்றி எல்லாம் மத்திய பா.ஜ.க. அரசிடம் கேள்வி கேட்க மறுக்கிறார்.
அவர் மத்திய அரசுக்கு அடிமையாக இருக்கிறார். அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. கூட்டணியை தமிழக மக்கள் நம்ப தயாராக இல்லை.
எனவே 200-க்கும் மேற்பட்ட தொகுதிகள் நமது கூட்டணி வென்று மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைவது உறுதி. அதற்கு கட்சியினர் வீடு வீடாக சென்று நமது ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் எடுத்து கூறி வாக்குகள் சேகரிக்க வேண்டும். அடுத்து வருகிற 50 நாட்கள் நாம் களத்தில் இறங்கி மக்களை சந்தித்து பிரசாரம் செய்ய வேண்டும். அதற்கு நாம் அனைவரும் அண்ணா, கருணாநிதி சிலைகள் முன்பு நின்று இன்று சபதம் ஏற்போம் என்பார்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசு.
- கோடைக்கால சிறப்பு தொகுப்பு ரூ.2000 என மொத்தம் ரூ.5000 இன்று வரவு வைக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இம்மாதம் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணம் ரூ.3000 மற்றும் கோடைக்கால சிறப்பு தொகுப்பு ரூ.2000 என மொத்தம் ரூ.5000 இன்று வரவு வைக்கப்படுவதாக அறிவித்துள்ளார். எதிர்பாராத இந்த அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.
இந்நிலையில், முதலமைச்சரின் இந்த அறிவிப்பிற்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்பு அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு என்றால் மகளிர் நாடு என்பதை மீண்டும் உறுதி செய்திருக்கிறது மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசு!
சட்டமன்றத் தேர்தலைக் காட்டி அடுத்த சில மாதங்களுக்கு 'கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தை' தடுக்கப் பார்த்தவர்கள், வாயடைத்துப் போகும் வகையில், பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3 ஆயிரம், கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ.2 ஆயிரம் என, 1.31 கோடி மகளிரின் வங்கிக்கணக்கில் இன்று காலை ரூ.5 ஆயிரம் வரவு வைக்கப்பட்டிருக்கிறது.
இந்த மகிழ்ச்சியை மேலும் இரட்டிப்பாக்கும் வகையில், திராவிட மாடல் 2.0-இல் மகளிருக்கான உரிமைத்தொகையை 2 ஆயிரமாக உயர்த்தி வழங்குவோம் என்றும் நம் முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
தமிழ்நாட்டு மகளிர் வெல்லும் தமிழ் பெண்கள்-ஆக நடைபோட என்றும் துணை நிற்போம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- திருமண நிகழ்வில் பங்கேற்க ஜெகன் மோகன் ரெட்டி சென்னை வந்திருந்தார்.
- முதல்வர் மு.க. ஸ்டாலின், ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்து பேசினார்.
உறவினரின் மகன் திருமண விழாவில் கலந்துகொள்வதற்காக ஆந்திர பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி கட்சி தலைவருமான ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி சென்னை வந்துள்ளார்.
ஒய்.எஸ். சுனில் ரெட்டியின் (ஒய்.எஸ். ஜெகனின் தந்தைவழி மாமா ஒய்.எஸ். ஜார்ஜ் ரெட்டியின் மகன்) மகன் சாஹிலின் திருமணத்தில் பங்கேற்பதற்காக அவர் சென்னையில் இருக்கிறார். சாஹில் மற்றும் வேதிகாவின் திருமணம் இன்று காலை நடைபெற்றது. இந்த திருமண நிகழ்வில் உறவினர்கள், திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆந்திரா முன்னாள் முதல்வர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்து பேசினார்.
இந்நிலையில், இந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்து பேசினார். இருவரின் சந்திப்பு தொடர்பான புகைப்படங்களை உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
- 2026 தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி பெருவாரியான இடங்களில் வெற்றி பெறும்.
- அ.தி.மு.க. ஆட்சியில் கடன் அதிகமாகி விட்டது என தி.மு.க. கூறுவது அனைத்தும் பொய்.
சேலம் மாவட்டம் ஓமலூரில் மாற்றுக்கட்சியினர் அ.தி.மு.க.வில் இணையும் விழா நடைபெற்றது. அதில் பங்கேற்று பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:
* தி.மு.க.வை பற்றி மக்கள் நன்றாக தெரிந்து கொண்டார்கள். வரும் தேர்தலில் வெற்றி பெற்று அ.தி.மு.க. ஆட்சியை பிடிக்கும்.
* 2026 தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி பெருவாரியான இடங்களில் வெற்றி பெறும்.
* அ.தி.மு.க. ஆட்சியில் கடன் அதிகமாகி விட்டது என தி.மு.க. கூறுவது அனைத்தும் பொய்.
* மக்களின் வரிப்பணத்தில் பலகோடி ரூபாய் விளம்பரம் செய்யப்படுகிறது.
* உதயநிதி முதலமைச்சராக வருவது ஒருபோதும் நடக்காது.
* வரும் சட்டசபை தேர்தல் தான் தி.மு.க.விற்கு இறுதித்தேர்தல், மக்கள் சரியான தண்டனை கொடுப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தேர்தல் வரும்போதெல்லாம் பிரதமர் மோடி தமிழகம் வருவது வழக்கம்.
- சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று மணிப்பூரில் பாஜக ஆட்சி கலைக்கப்பட்டு உள்ளது.
திருச்சி செங்கிப்பட்டியில் நடைபெறும் டெல்டா மண்டல திமுக மகளிரணி மாநாட்டில் துணை முதல்வர் உதயநிதி உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
மாதத்திற்கு ஒரு மாநாடு, சந்திப்பை நடத்திக் கொண்டிருக்கிறது திமுக. இந்தி திணிப்புக்கு எதிராக பெண்களை திரட்டி போராடியவர்கள் இந்த மண்ணை சேர்ந்தவர்கள் தான்.
தேர்தல் வரும்போதெல்லாம் பிரதமர் மோடி தமிழகம் வருவது வழக்கம். சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று மணிப்பூரில் பாஜக ஆட்சி கலைக்கப்பட்டு உள்ளது.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாக நடைபெறும் முதல் 4 இடங்களில் உள்ள மாநிலங்களை ஆள்வது பாஜக தான். பாஜகவின் முரட்டு அடிமையை நம் கண் முன் காட்டுகிறார் எடப்பாடி பழனிசாமி.
இந்தி திணிப்புக்கு எதிராக பெண்களை திரட்டி போராடியவர்கள் இந்த மண்மை சேர்ந்தவர்கள் தான்.
மகளிருக்கான அரசு என்பது தான் திராவிட மாடல் அரசுக்கான அடையாளம்.
திராவிட மாடல் பார்ட்-2க்கு மக்கள் தயாராிவிட்டார்கள். நாம் தான் மீண்டும் வெல்வோம். நாம தான் மீண்டும் ஆட்சிக்கு வருவோம்.
பில்கிஸஅ பானு வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக இருந்தது பாஜக.
இவ்வாறு அவர் கூறினார்.
- தி.மு.க. குடும்ப ஆட்சியில் உழவர்கள், பெண்கள், இளைஞர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எனது பழைய நண்பர்.
சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் மத்திய அமைச்சரும் தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயலுக்கு காலை விருந்தளித்தார்.
அவருடன் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பா.ஜ.க. மூத்த தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* தமிழ்நாட்டில் வரும் தேர்தலில் தி.மு.க. அரசை அகற்றிவிட்டு தேசிய ஜனநாயக கூட்டணி வெல்லும்.
* தி.மு.க. குடும்ப ஆட்சியில் உழவர்கள், பெண்கள், இளைஞர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
* அனைத்து துறைகளிலும் ஊழல் செய்தது மட்டும் தான் தி.மு.க. அரசின் சாதனை.
* உதயநிதி ஸ்டாலினை உடனடியாக துணை முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்.
* உதயநிதி ஸ்டாலின் தேசியத்திற்கு எதிரான கருத்துகளை கூறி வருகிறார்.
* உதயநிதி பேச்சுக்கு நீதிமன்றமே தனது கண்டனத்தை தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
* அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எனது பழைய நண்பர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பாலமேடு ஜல்லிக்கட்டு மரபுபடி 7 மணி முதல் 8 மணிக்குள் தொடங்கப்பட வேண்டும்.
- 9.30 மணி தாண்டியும் வாடிவாசல் திறக்கப்படவில்லை என்பது மக்களுக்கு வேதனையாக இருந்தது.
மதுரை:
மதுரையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
மனிதனின் வாழ்க்கைக்கு உறுதுணையாக இருக்கும் கடவுளுக்கும், இயற்கைக்கும், கால்நடைகளுக்கும் பொங்கல் வைத்து வழிபடுகிறோம். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதை போல எடப்பாடி பழனிசாமி சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று நிச்சயம் கோட்டைக்கு போவார் அப்போது தமிழக மக்களுக்கு நிச்சயமாக வழி பிறக்கும்.
உலகப் பிரசித்தி பெற்ற அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய ஜல்லிக்கட்டு போட்டி மன்னராட்சி முதல் தற்போது மக்களாட்சி வரை மக்கள் ஜல்லிக்கட்டாக நடைபெற்று வருகிறது. ஆனால் தற்போது உதயநிதிக்காக ஜல்லிக்கட்டா? மு.க.ஸ்டாலினுக்காக ஜல்லிக்கட்டா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
பாலமேடு ஜல்லிக்கட்டில் அதிகாலையில் இருந்து மாடுபிடி வீரர்களும், காளைகளும் அனைவரும் பல மணி நேரம் காத்திருந்து தொடங்கப்படவில்லை. பாலமேடு ஜல்லிக்கட்டு மரபுபடி 7 மணி முதல் 8 மணிக்குள் தொடங்கப்பட வேண்டும். ஆனால் 9.30 மணி தாண்டியும் வாடிவாசல் திறக்கப்படவில்லை என்பது மக்களுக்கு வேதனையாக இருந்தது. உதயநிதிக்காக வேடிக்கை ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துகிறார்கள். தி.மு.க. அரசின் அதிகார துஷ்பிரயோகம் எல்லை மீறி சென்று விட்டது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஜனநாயகம் மலர இந்த தைத்திருநாளில் நாம் சூளுரை ஏற்க வேண்டும் என்று கூறினார்.






