என் மலர்
நீங்கள் தேடியது "ஜெகன் மோகன் ரெட்டி"
- ஜெகன் மோகன் ரெட்டியை சந்திக்க தெலுங்கு நடிகர்கள் காத்திருந்தனர்.
- ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சட்டசபையில் சலசலப்பு
ஆந்திர சட்டசபையில் சட்டம் ஒழுங்கு குறித்த விவாதத்தின்போது, தெலுங்கு தேசம் கட்சியின் எம்.எல்.ஏவும் நடிகருமான பாலகிருஷ்ணா, முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை, சட்டப்பேரவையில் வைத்து சைக்கோ என திட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனை கேட்டு ஆத்திரமடைந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் ஆவேசமுற்று வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சட்டசபையில் சலசலப்பு ஏற்பட்டது.
சட்டசபையில் பேசிய பாஜக எம்.எல்.ஏ. காமினேனி ஸ்ரீனிவாஸ், 'முந்தைய ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில், முதல்வராக இருந்த ஜெகன் மோகன் ரெட்டியை சந்திக்க தெலுங்கு நடிகர்கள் காத்திருந்தனர். ஆனால், அவர்களை சந்திக்க ஜெகன் மோகன் நேரமே ஒதுக்கவில்லை. சிரஞ்சீவி குரல் எழுப்பிய பின்னரே, அவர் நேரம் ஒதுக்கினார்" என்று தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட பாலகிருஷ்ணா, "தெலுங்கு நடிகர்கள் ஒரு 'சைக்கோ'வை சந்திக்க சென்றனர்" என்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து பேசிய பாலகிருஷ்ணா, "சிரஞ்சீவி குரல் எழுப்பிய பின் தான், தெலுங்கு நடிகர்களை ஜெகன் மோகன் சந்தித்தாக கூறுவது பொய்" என்று தெரிவித்தார்.
இந்த விவகாரம் குறித்து பேசிய சிரஞ்சீவி, "ஜெகன் மோகன் அழைப்பின் பேரிலேயே அவரது வீட்டுக்குச் சென்றேன். தெலுங்கு திரையுலகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து அவரிடம் விளக்கினேன்" என்று தெரிவித்தார்.
- 30 ஆண்டுகளுக்கு பிறகு புலிவேந்துலாவில் உள்ள ஒண்டிமிட்டா உள்ளாட்சிக்கு தேர்தல் நடைபெற்றுள்ளது.
- ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி வேட்பாளர் 700க்கும் குறைவான வாக்குகளைப் பெற்று டெபாசிட் இழந்தார்.
ஜெகன் ரெட்டியின் சொந்த தொகுதியில் நடைபெற்ற உள்ளாட்சி இடைத்தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி டெபாசிட் இழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஜெகன் ரெட்டியின் சொந்த தொகுதியான புலிவேந்துலாவில் நடைபெற்ற ஒண்டிமிட்டா உள்ளாட்சி இடைத்தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி டெபாசிட் இழந்தது.
தெலுங்கு தேச கட்சியின் வேட்பாளர் மாரெட்டி லதா ரெட்டி 6,735 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி வேட்பாளர் 700க்கும் குறைவான வாக்குகளைப் பெற்று டெபாசிட் இழந்தார்.
கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு பிறகு புலிவேந்துலாவில் உள்ள ஒண்டிமிட்டா உள்ளாட்சிக்கு தேர்தல் நடைபெற்றுள்ளது. இதற்கு முன்பு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி இந்த தொகுதியில் போட்டியின்றி வெற்றி பெற்று வந்துள்ளனர்.
- அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் புஷ்பா 2.
- இப்படத்தில் ரப்பா ரப்பா நறுகுதம் என்ற வசனம் மிகவும் பிரபலமானது.
அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் புஷ்பா 2. இப்படத்தில் ரப்பா ரப்பா நறுகுதம் என்ற வசனம் மிகவும் பிரபலமானது.
இந்த வசனத்தினால் தற்பொழுது ஆந்திரா அரசவையில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவின் முதலமைச்சரின் பொதுக்குழு சந்திப்பில் தொண்டர் ஒருவர் புஷ்பா 2 வசனத்தில் இடம்ப்பெற்ற ரப்பா ரப்பா நறுகுதம் என்ற பெயர் பதாகையை ஏந்தியபடி இருந்தார். இந்த வசனத்திற்கு ஒரு ஒரு தலையாக வெட்டப்படும் என்ற அர்த்தமாகும்.
இந்த பெயர் பலகை ஏதிய தொண்டரை காவல் அதிகாரிகள் கைது செய்தனர். இதற்கு சமீபத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் ரெட்டி பதிலளித்துள்ளார். அதில் அவர் ' புஷ்பா வசனத்தை சொல்ல கூட இந்த நாட்டில் சுதந்திரம் இல்லையா, புஷ்பா வசனம் கூறினால் தப்பு, புஷ்பா போல் செய்கை காட்டினால் தப்பு, இது என்ன நியாயம், எங்கு சுதந்திரம் இருக்கிறது? என கேள்வி எழுப்பினார்.
அதற்கு நாயுடு "அவர்கள் பொதுமக்களின் கவனத்தைத் திசைதிருப்ப முயற்சிக்கிறார்கள்," என்றும்
நாயுடுவின் மகனும் தெலுங்கானா அமைச்சருமான நாரா லோகேஷும் திரு. ரெட்டியை கடுமையாக சாடி, அவரது "மனப்பான்மை ஜனநாயகத்திற்கு மிகவும் ஆபத்தானது" என்றார்.
"நீங்கள் அவர்களை ஆடுகளைப் போல படுகொலை செய்வீர்களா? உங்கள் ரசிகரின் மொழியைப் பாதுகாப்பதன் அர்த்தம் என்ன? உங்கள் அணுகுமுறை ஜனநாயகத்திற்கு மிகவும் ஆபத்தானது," என்று அவர் X இல் பதிவிட்டு, திரு. ரெட்டியைக் குறியிட்டார்.
- 4 பேர் ஒரு வீட்டில் வசிக்க, 700 கோடி ரூபாய் செலவிடப்பட்டது.
- பிரதமருக்கு கூட இவ்வளவு பெரிய வீடு இல்லை
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவரும் ஆந்திராவின் முன்னாள் முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டி, ஆந்திராவின் சதாம் உசேன் என்று அமைச்சர் நாரா லோகேஷ் தெரிவித்துள்ளார்.
ருஷிகொண்டா மலைகளில் உள்ள ஜெகன் மோகனின் ஆடம்பர மாளிகை குறித்து பேசிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகனான நாரா லோகேஷ், "ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தன்னை ஆந்திராவின் 'சதாம் உசேன்' என்றும், 30 ஆண்டுகள் ஆட்சியில் இருப்பேன் என்றும் நினைத்தார்.
என் தாத்தா முதல்வராக இருந்தார், என் அப்பா முதல்வராக இருந்தார், ஆனால் இவ்வளவு பெரிய அறைகளை நான் பார்த்ததில்லை. அவரது சகோதரி மற்றும் தாயார் ஜெகன் மோகன் குடும்பத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். 4 பேர் ஒரு வீட்டில் வசிக்க, 700 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. பிரதமருக்கு கூட இவ்வளவு பெரிய வீடு இல்லை
அரண்மனை போன்ற இந்த வீட்டை என்ன செய்வது என்பது குறித்து தெலுங்கு தேசம் அரசு முடிவு செய்யும்" என்று தெரிவித்தார்.
சதாம் உசேன் ஈராக்கின் அதிபராக இருந்தார், 1979 முதல் 2003 வரை அந்த நாட்டை ஆட்சி செய்தார். அவரது ஆட்சி நிர்வாகம் சர்வாதிகாரமாக பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- ஜெகன் மோகனை தமிழக அமைச்சர் எ.வ.வேலு, மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் ஆகியோர் சந்தித்து பேசினர்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டி உள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 5-ந் தேதி தலைமை செயலகத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில், தொகுதி மறுவரையறை விவகாரத்தில் பல்வேறு மாநில முதல்-மந்திரிகளுக்கும், கட்சி தலைவர்களுக்கும் முறையாக அழைப்பு விடுக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டது.
ஒவ்வொரு மாநிலத்துக்கும் தலா ஒரு அமைச்சர், ஒரு எம்.பி. அடங்கிய குழு சென்று இந்த கருத்தை விளக்க வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது.
அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டபடி அமைக்கப்படவுள்ள கூட்டு நடவடிக்கை குழுவுக்கு பிற மாநில கட்சிகளை நேரில் சென்று அழைக்க அமைச்சர்கள், எம்.பி.க்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
கேரளாவுக்கு அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், ஆந்திராவுக்கு அமைச்சர் எ.வ.வேலு, மேற்கு வங்கத்திற்கு கனிமொழி, ஒடிசா மாநிலத்திற்கு அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் செல்கின்றனர்.
இந்த நிலையில், தொகுதி மறுவரையறை தொடர்பாக ஆந்திர முன்னாள் முதலமைச்சரும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவருமான ஜெகன் மோகனை தமிழக குழு சந்தித்தது.
ஜெகன் மோகனை தமிழக அமைச்சர் எ.வ.வேலு, மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் ஆகியோர் சந்தித்து பேசினர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டி உள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தனர்.
தெலுங்கு தேசம் கட்சியின் மாநில தலைவர் பல்லா சீனிவாசராவுடனும் ஜெகன் மோகனை சந்தித்து பேசிய தி.மு.க. குழு, சென்னையில் வரும் 22-ந்தேதி நடைபெறும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்குமாறு தி.மு.க. குழு அழைப்பு விடுத்துள்ளது.
- ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று தனது 50-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
- இவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவரும் முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டி இன்று தனது 50-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஜெகன் மோகன் ரெட்டிக்கு வாழ்த்து தெரிவித்த ரோஜா
இந்நிலையில், நடிகையும் ஆந்திர மாநிலம், நகரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும் சுற்றுலாத்துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்து வரும் ரோஜா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
- தெலுங்கு தேசம் கட்சி மீண்டும் ஆட்சி அமைத்தவுடன் அரசியல் ரவுடித்தனம் நிச்சயமாக ஒடுக்கப்படும்.
- நான் 1978ம் ஆண்டு முதல் எம்.எல்.ஏ.வாக இருந்து வருகிறேன்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் மங்கள கிரியில் தெலுங்கு தேசம் வக்கீல்கள் பிரிவு சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் அந்த கட்சி தலைவரும், ஆந்திர சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் செயல்களுக்கு வக்கீல்கள் இரையாக வேண்டாம். இந்த அரசின் அட்டூழியங்கள் வட்டியுடன் திருப்பித்தரப்படும். இந்த சர்வாதிகார ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வர வக்கீல்கள் சமூகம் கட்சியுடன் கைகோர்க்க வேண்டும்.
இந்த அரசைப் போன்ற சர்வாதிகார தலைமை ஆங்கிலேயர்களிடம் கூட இல்லை. தெலுங்கு தேசம் கட்சி மீண்டும் ஆட்சி அமைத்தவுடன் அரசியல் ரவுடித்தனம் நிச்சயமாக ஒடுக்கப்படும். இந்த அரசின் பொல்லாத கொள்கைகளுக்கு எதிராக அரசியல் போருடன் சட்டப் போராட்டத்தையும் நடத்த வேண்டிய அவசியத்தை நான் உணர்கிறேன்.
அதிகம் படித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும். கடந்த தேர்தலில் தெலுங்கு தேசம் 47 வக்கீல்களுக்கு சீட் வழங்கியது. நான் 1978ம் ஆண்டு முதல் எம்.எல்.ஏ.வாக இருந்து வருகிறேன்.
ஆனால் மாநிலத்தில் இதுபோன்ற சூழ்நிலையை ஒருபோதும் கண்டதில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
- இரு மாநில மக்களின் நன்மையைக் கருதி முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி மன்னிப்பு கேட்க வேண்டும்.
- ஆந்திர மாநில மக்கள் தலைகுனியும்படி ஆளுங்கட்சி தலைவர்கள் குடிகாரர்கள் போல பேசுகிறார்கள் இதனை நிறுத்த வேண்டும்.
திருப்பதி:
ஆந்திர முன்னாள் முதலமைச்சர் என்.டி.ராமராவ் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட ரஜினி தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு குறித்து புகழ்ந்து பேசினார்.
ரஜினிகாந்தின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திர மாநில விளையாட்டு துறை அமைச்சர் ரோஜா மற்றும் ஆளும் கட்சி அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் விமர்சனம் செய்தனர். அவர்களுக்கு ரஜினி ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் தெலுங்கு தேசம் கட்சியின் நிர்வாகி ராமையா கூறியதாவது:-
பிரபல நடிகர் ரஜினிகாந்த் குறித்து அமைச்சர்கள் மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர்கள் கருத்துக்கள் தெரிவித்து விமர்சனம் செய்கின்றனர். தொடர்ந்து ரஜினியை விமர்சனம் செய்தால் ஆந்திரா, தமிழகம் ஆகிய மாநிலங்களுக்கு இடையே பகை, கருத்து வேறுபாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
இரு மாநில மக்களின் நன்மையைக் கருதி முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி மன்னிப்பு கேட்க வேண்டும்.
ஆந்திர மாநில மக்கள் தலைகுனியும்படி ஆளுங்கட்சி தலைவர்கள் குடிகாரர்கள் போல பேசுகிறார்கள் இதனை நிறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- காங்கிரஸ் உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள், பதவியேற்பு விழாவை புறக்கணிக்கப் போவதாக கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன.
- ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி மே 28ம் தேதி திறந்து வைக்க உள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 19 எதிர்க்கட்சிகள் திறப்பு விழாவை புறக்கணிக்க உள்ளதாக அறிவித்துள்ளன.
பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கக்கூடாது என்றும், ஜனாதிபதி திரவுபதி முர்மு திறந்து வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளன. இந்த விவகாரம் நாடு முழுவதும் விவாதப்பொருளாகி உள்ளது.
இதனால், காங்கிரஸ் உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள், பதவியேற்பு விழாவை புறக்கணிக்கப் போவதாக கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இதேபோல், ஆந்திராவின் ஆளுங்கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியும் திறப்பு விழாவில் பங்கேற்கும் என அக்கட்சியின் தலைவரும் அம்மாநில முதல்வருமான ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி உறுதிப்படுத்தி உள்ளார்.
இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு என்று கூறிய அவர், ஜனநாயகத்தின் உண்மையான உணர்வோடு ஒய்ஆர்சிபி கலந்து கொள்ளும் என்றார்.
மேலும் இதுகுறித்து ஜெகன் மோகன் ரெட்டி தனது டுவிட்டர் பக்கத்தில், பிரமாண்டமான, கம்பீரமான மற்றும் விசாலமான பாராளுமன்ற கட்டிடத்தை நாட்டிற்கு அர்ப்பணித்ததற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த விழாவைப் புறக்கணிக்க முடிவு செய்துள்ள அரசியல் கட்சிகளுக்கும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். அப்போது அவர், இதுபோன்ற ஒரு நல்ல நிகழ்வைப் புறக்கணிப்பது ஜனநாயகத்தின் உண்மையான பற்று அல்ல என்றும் அரசியல் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு அனைவரும் கலந்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.
- சந்திரபாபு நாயுடன் கடந்த மாதம் அமித் ஷாவை சந்தித்து பேசினார்
- இரண்டு நாள் பயணமாக ஜெகன் மோகன் ரெட்டி இன்று டெல்லி செல்கிறார்
ஆந்திர பிரதேச மாநில முதல்வர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி இரண்டு நாள் பயணமாக இன்று டெல்லி செல்கிறார். டெல்லி செல்லும் அவர், பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா ஆகியோரை சந்தித்து பேச வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதோடு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும சந்திக்க இருப்பதாக தெரிகிறது. கடந்த மாதம் சந்திரபாபு நாயுடு அமித் ஷா மற்றும் பா.ஜனதா தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோரை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- தமிழகத்தில் இருந்து அறங்காவலர் உறுப்பினர் பதவிக்கு நியமிக்கப்பட இருப்பது யார்? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
- கருணாகர் ரெட்டி ஏற்கெனவே ராஜசேகரரெட்டி ஆட்சியின் போது திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பதவியை வகித்துள்ளார்.
திருப்பதி:
ஆந்திர முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்ற பிறகு திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பதவி, அவரது சித்தப்பாவான ஒய்.வி.சுப்பா ரெட்டிக்கு வழங்கப்பட்டது.
அவர் தொடர்ந்து 2-வது முறையாக பதவி வகித்து வருகிறார். அவரது பதவிக்காலம் நாளை மறுநாள் நிறைவடைகிறது.
இந்நிலையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் திருப்பதி தொகுதி எம்.எல்.ஏ. கருணாகர் ரெட்டி, புதிய அறங்காவலர் குழு தலைவராக நேற்று அறிவிக்கப்பட்டார்.
கருணாகர் ரெட்டி ஏற்கெனவே ராஜசேகரரெட்டி ஆட்சியின் போது திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பதவியை வகித்துள்ளார்.
மேலும் உள்ளூர்காரர் என்பதால் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பார் என கருதப்படுகிறது. வரும் 16-ந் தேதிக்குள், அறங்காவலர் குழு உறுப்பினர்களை நியமனம் செய்வது குறித்து முதல்வர் ஜெகன் ஆலோசித்து வருகிறார்.
இதில் தமிழகம், கர்நாடகம், டெல்லி, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இருந்தும் உறுப்பினர்கள் அந்தந்த மாநில அரசுகளின் பரிந்துரையின் பேரின் நியமிக்கப்பட உள்ளனர்.
தமிழகத்தில் இருந்து அறங்காவலர் உறுப்பினர் பதவிக்கு நியமிக்கப்பட இருப்பது யார்? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
திருப்பதியில் நேற்று 81,472 பேர் தரிசனம் செய்தனர். 34,820 பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்தினர். ரூ.3.90 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டதால் 18 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
- ஆந்திர அரசு சார்பில் முதல் அமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி பட்டு வஸ்திரங்களை காணிக்கையாக வழங்குகிறார்.
- பிரமோற்சவ விழாக்களின் போது சாமானிய பக்தர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் தரிசன ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த ஆண்டு 2 பிரமோற்சவ விழா நடைபெற உள்ளன.
வருகிற செப்டம்பர் மாதம் 18-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை வருடாந்திர பிரமோற்சவம், அக்டோபர் மாதம் 15-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை நவராத்திரி பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது.
பிரமோற்சவ விழா போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது. இதனை வெளியிட்ட திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் கருணாகர் ரெட்டி கூறியதாவது:-
செப்டம்பர் மாதம் நடைபெறும் பிரமோற்சவத்தின் முதல் நாள் ஏழுமலையானுக்கு ஆந்திர அரசு சார்பில் முதல் அமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி பட்டு வஸ்திரங்களை காணிக்கை வழங்குகிறார்.
வருடாந்திர பிரமோற்சவம் மற்றும் நவராத்திரி பிரம்மோற்சவம் நடைபெறும் நாட்களில் விஐபி தரிசனம் ரத்து செய்யப்படும். சிபாரிசு கடிதங்கள் ஏற்கப்படமாட்டாது.
மேலும் வாகன சேவைகள் மூலம் பக்தர்களுக்கு சிறந்த தரிசனம் வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட உள்ளன. அறைகள் முன்பதிவு அன்னபிரசாதம் லட்டுகள் மற்றும் சாதாரண பக்தர்களுக்கு பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்படும்.
பிரமோற்சவ விழாக்களின் போது சாமானிய பக்தர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் தரிசன ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மாதந்தோறும் பவுர்ணமி நாட்களில் கருட சேவை நடந்து வருகிறது. அதன்படி இன்று நடைபெற இருந்த கருட சேவை விகானச மகாமுனி ஜெயந்தியை ஒட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று 71,132 பேர் சாமி தரிசனம் செய்தனர். 26 963 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.06 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 14 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.






