என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "All Party Meeting"

    • அனைத்து கட்சி கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது.
    • காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட கட்சி களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. இதை யொட்டி பாராளுமன்றம் சுமூகமாக நடைபெற அனைத்து கட்சி கூட்டத் துக்கு அழைப்பு விடுக்கப் பட்டது.

    அதன்படி, அனைத்து கட்சி கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், ஜே.பி.நட்டா, கிரண் ரிஜிஜூ, அர்ஜூன் ராம் மேக்வால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    எதிர்கட்சிகள் தரப்பில் காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட கட்சி களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

    • நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் டிசம்பர் 1-ம் தேதி தொடங்குகிறது.
    • மொத்தம் 19 நாட்கள் நடைபெறும் இந்தத் தொடரில் 15 அமர்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன.

    புதுடெல்லி:

    நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் டிசம்பர் 1-ம் தேதி தொடங்கி 19-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. மொத்தம் 19 நாட்கள் நடைபெறும் இந்தத் தொடரில் 15 அமர்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன.

    கடந்த கூட்டத்தொடரின்போது எஸ்.ஐ.ஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் உள்ளிட்ட விவகாரங்களால், நாடாளுமன்றம் முழுமையாக முடங்கியது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், இந்தக் கூட்டத்தொடரை எவ்வித கூச்சல் குழப்பமும் இன்றி சுமுகமாக நடத்தும் நோக்கில் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி கிரண் ரிஜிஜு வரும் 30ம் தேதி (நாளை) அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

    நாடாளுமன்ற மரபுப்படி நடைபெறும் இக்கூட்டத்தில் நிலுவையில் உள்ள மசோதாக்கள் மற்றும் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து எதிர்க்கட்சிகளுடன் விவாதிக்கப்பட உள்ளது. பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில், எதிர்க்கட்சிகளின் ஆலோசனைகளைக் கேட்டு அதற்கேற்ப நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

    சமீபத்தில் நடந்த பீகார் மாநிலத் தேர்தல் முடிவுகள் எதிர்க்கட்சிகளுக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ள நிலையில், இத்தொடரில் அனல் பறக்கும் விவாதங்கள் நடைபெற வாய்ப்புள்ளது.

    • முதல்வர் தலைமையில்தான் இந்த கூட்டம் நடந்திருக்க வேண்டும்; ஆனால் ஏன் வரவில்லை?
    • அதிமுக ஆட்சியில் விருப்பு, வெறுப்பின்றி பிற கட்சிகளின் கூட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

    பொதுக்கூட்டங்கள், பிரசார கூட்டங்கள் நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வகுப்பது தொடர்பாக தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், ரகுபதி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது.

    கூட்டத்தில் தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், சி.பி.எம்., சி.பி.ஐ., வி.சி.க., தே.மு.தி.க., ம.தி.மு.க., பா.ஜ.க., த.வா.க., ம.நீ.ம., ம.ம.க., ஐ.யூ.எம்.எல்., ஆம் ஆத்மி உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட 20 கட்சிகள் பங்கேற்றன.

    இந்நிலையில், அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்ற அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    முதலமைச்சர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற வேண்டும்.

    ஆனால் முதலமைச்சர், துணை முதலமைச்சர் இருவரும் ஏன் பங்கேற்கவில்லை என்று தெரியவில்லை. எங்களது ஆட்சி காலத்தில் ஆயிரத்துக்கும் மேல் பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்த அனுமதி கொடுத்தோம்.

    விருப்பு, வெறுப்பின்றி பிற கட்சிகளின் கூட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

    ஆனால் இந்த 4 ஆண்டுகளில் நாங்கள் அனுமதி கேட்டால் உடனே கொடுப்பதில்லை. திமுக ஆட்சியில் கூட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த நீதிமன்றத்தைதான் நாட வேண்டியுள்ளது. எனவே காவல்துறை பாகுபாடு இன்றி பாதுகாப்பு வழங்க வலியுறுத்தினோம்.

    கூட்டங்களுக்கான விதி அனைத்துக் கட்சிக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் பேர் வரை கூடினால் வைப்புத்தொகை 3 லட்ச ரூபாய்.
    • அனைவரும் அமைதியாக கலைந்து செல்வதை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.

    கரூரில் கடந்த செப்டம்பர் 27-ந்தேதி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் காயம் அடைந்தனர்.

    இனி இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்க அரசியல் கட்சி பொதுக்கூட்டங்கள் பிரசாரங்களுள், ரோடு ஷோ நிகழ்ச்சிகள் போன்றவை நடத்தும்போது அசம்பாவிதங்கள் நிகழாமல் இருக்க அனைவருக்கும் அனுமதி வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து சமர்ப்பிக்க வேண்டும் என அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    அதன் அடிப்படையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சில நாட்களுக்கு முன்பு வழிகாட்டுதல்களை உருவாக்க ஆலோசனை நடத்தப்பட்டது.

    அதைத் தொடர்ந்து இன்று சென்னை தலைமை செயலகத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் மற்றும் நாடாளுமன்ற, சட்டசபை உறுப்பினர்களை கொண்ட கட்சிகளின் பிரதிநிதிகளுடன் இந்த ஆலோ சனை கூட்டம் நடத்தப்பட் டது. இதில் அரசு சார்பில் மூத்த அமைச்சர்கள் கே.என்.நேரு, ரகுபதி, மா.சுப்பிரமணியன் மற்றும் தலைமை செயலாளர் முருகானந்தம், உள்துறை செயலாளர், டி.ஜி.பி. கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் தி.மு.க. சார்பில் ஆர்.எஸ்.பாரதி, என்.ஆர்.இளங்கோ, அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், இன்பத்துரை எம்.பி. கலந்து கொண்டனர்.

    அதுபோல் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, விடுதலைச் சிறுத்தைகள் எம்.எல்.ஏ. எஸ்.எஸ்.பவானி உள்பட பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்று கருத்துகளை தெரிவித்தனர்.

    பிரசார கூட்டங்களுக்கான விதிகள் அனைத்து கட்சிகளுக்கும் ஒரேமாதிரி இருக்க வேண்டும் என்று பலர் வலியுறுத்தினார்கள்.

    இந்நிலையில் வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்பது தொடர்பாக நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் அரசு தரப்பில் முன்மொழியப்பட்ட பரிந்துரைகள்:

    * அரசியல் கட்சிக் கூட்டங்களுக்கு டெபாசிட் தொகை நிர்ணயிக்க முடிவு

    * 5000 முதல் 10,000 பேர் வரை கலந்து கொள்ளும் கூட்டங்களுக்கு ரூ.1 லட்சம் நிர்ணயம்

    * 50,000 பேருக்கு மேல் கலந்துகொள்ளும் கூட்டங்களுக்கு ரூ.20 லட்சம் டெபாசிட் தொகையாக நிர்ணயிக்க திட்டம்

    * ரோடு ஷோ நடத்தும் அரசியல் கட்சிகளிடமிருந்து வைப்புத்தொகை வசூலிக்க அரசு தரப்பில் பரிந்துரை

    * 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் பேர் வரை கூடினால் வைப்புத்தொகை 3 லட்ச ரூபாய்.

    * 20 ஆயிரம் பேரில் இருந்து 50 ஆயிரம் பேர் வரை கூடினால் ரூ.8 லட்சம் வைப்புத்தொகை

    * 50 ஆயிரத்துக்கு மேல் கூடினால் ரூ.20 லட்சம் மதிப்பு தொகையும் கட்ட பரிந்துரை

    * 5000 முதல் 10 ஆயிரம் பேர் வரை கூடினார் ரூ.1 லட்சம் வைப்புத்தொகை

    * நிகழ்ச்சிக்கு முன்னதாக 2 மணி நேரம் முன்னர் மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும் என பரிந்துரை

    * ரோடு ஷோ பொதுக்கூட்டங்கள் 3 மணி நேரத்திற்கு உள்ளதாக முடிக்க வேண்டும்.

    * அனைவரும் அமைதியாக கலைந்து செல்வதை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.

    * 3 மணி நேரத்திற்கு மேல் கால அவகாசம் தேவைப்பட்டால் காவல்துறை அதிகாரி முடிவெடுப்பார்.

    * குறிப்பிட்டதை விட 50 சதவீதம் மேல் எண்ணிக்கை கூடினால் வைப்புத்தொகை திரும்பத் தர மாட்டாது.

    இதைத் தொடர்ந்து அரசு பல்வேறு நிபந்தனைகளுடன் பிரசார கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து ஐகோர்ட்டில் விரிவான அறிக்கையை தாக்கல் செய்யும்.

    • அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், ரகுபதி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது.
    • ம.நீ.ம., ம.ம.க., ஐ.யூ.எம்.எல்., ஆம் ஆத்மி உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட 20 கட்சிகள் பங்கேற்றுள்ளன.

    கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவத்தையடுத்து, கட்சிகள் மேற்கொள்ளும் கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க சென்னை ஐகோர்ட் அறிவுறுத்தியது.

    இந்நிலையில் பொதுக்கூட்டங்கள், பிரசார கூட்டங்கள் நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வகுப்பது தொடர்பாக தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், ரகுபதி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது.

    கூட்டத்தில் தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், சி.பி.எம்., சி.பி.ஐ., வி.சி.க., தே.மு.தி.க., ம.தி.மு.க., பா.ஜ.க., த.வா.க., ம.நீ.ம., ம.ம.க., ஐ.யூ.எம்.எல்., ஆம் ஆத்மி உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட 20 கட்சிகள் பங்கேற்றுள்ளன.

    • வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை அவசர அவசரமாக செய்யக் கூடாது.
    • தேர்தல் ஆணையத்திடம் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வலியுறுத்தின.

    தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (எஸ்.ஐ.ஆர்.) நாளை (4-ந்தேதி) முதல் தொடங்கும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

    இதையொட்டி ஒவ்வொரு மாவட்ட கலெக்டர்களும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி இருக்கிறார். அதன் அடிப்படையில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெற உள்ளது.

    வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை அவசர அவசரமாக செய்யக் கூடாது. நவம்பர், டிசம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவ மழை பெய்து வரும் காலத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை செய்வது சிரமம். எனவே கால அவகாசம் கொடுத்து செய்ய வேண்டும். இப்போது இதை செய்வது சரியானது அல்ல என்று தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வலியுறுத்தின.

    ஆனாலும் தேர்தல் கமிஷன் இந்த கோரிக்கையை ஏற்றுக் கொள்ளவில்லை. திட்டமிட்டபடி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணிகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

    இதைத் தொடர்ந்து வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கு எதிராக நேற்று அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்டது. அக்கூட்டத்தில் ஜனநாயக, சட்டவிரோாத SIR நடவடிக்கையை தேர்தல் ஆணையம் நிறுத்தி வைக்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இந்நிலையில், தேர்தல் ஆணையத்தின் SIR நடவடிக்கைக்கு தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் திமுக இன்று மனுத் தாக்கல் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    SIR நடவடிக்கைக்கு எதிராக கட்சிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது என நேற்று நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • மக்களை மடைமாற்ற நடத்தப்படும் மற்றுமொரு திசைதிருப்பு நாடகம்.
    • தோல்வி பயத்தில் உள்ள கட்சிகள் மட்டுமே இக்கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளன.

    மக்கள் குறைகளைத் தீர்க்க ஒருபோதும் அனைத்து கட்சி பொதுக்கூட்டத்தைக் கூட்டாத முதல்வர் மு.க.ஸ்டாலின்

    அவர்கள், தற்போது மட்டும் SIR பற்றிய கூட்டத்தை நடத்துவதில் இருந்தே தெரிகிறது இது மக்களை மடைமாற்ற நடத்தப்படும் மற்றுமொரு திசைதிருப்பு நாடகம் என்று!

    ஜனநாயக தேசத்தில் குடிமக்களின் வாக்குரிமையைக் காக்கும் பொருட்டு பல்லாண்டுகாலமாகத் தொடர்ந்து நடைபெறும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை, ஏதோ அந்நியமானது போல, பிரதானமாகக் காட்சிபடுத்தி, மழைவெள்ள பாதிப்பு, ஊழல், விவசாயிகள் படும் அல்லல் ஆகியவற்றை மறைத்து, குளிர்காய முயற்சிப்பது இனியும் செல்லாது.

    திமுகவின் திசைதிருப்பு நாடகத்தை நன்கு அறிந்து, பல கட்சிகள் கூட்டத்தினை புறக்கணித்துள்ள நிலையில், தோல்வி பயத்தில் உள்ள கட்சிகள் மட்டுமே இக்கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளன.

    திமுக அரசின் தொடர் திசைதிருப்பு நாடகத்தையும் வெற்று விளம்பரத்தையும் பார்த்துப் பார்த்து சலித்துப்போன தமிழக மக்கள், இந்த SIR எதிர்ப்பு நாடகத்தையும் புறக்கணிப்பர்!

    ஜனநாயகத்தின் மீது சிறிதும் அக்கறை இருந்தால், முறையாக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்ப்பதைவிடுத்து, எஞ்சியிருக்கும் நாட்களில் தங்களுக்கு வாக்களித்த மக்களின் குறைகளைத் தீருங்கள் முதல்வரே!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெற்றது.
    • தவெக., அன்புமணி தரப்பு பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் கூட்டத்தை புறக்கணித்தன.

    சென்னை தி.நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெற்றது.

    64 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் 21 கட்சிகள் பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. தவெக., அன்புமணி தரப்பு பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் கூட்டத்தை புறக்கணித்தன.

    இந்நிலையில், SIR-க்கு எதிரான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் விஜய் பங்கேற்காதது குறித்து முக்குலத்தோர் புலிப்படைத் தலைவர் கருணாஸ் விமர்சித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் SIR பற்றியும், அதன் விபரீதத்தை பற்றியும் அனைத்துக் கட்சி தலைவர்களும் தங்களது கருத்துகளை எடுத்துரைத்தார்கள்.

    தேர்தல் வரும் நிலையில், தேர்தல் ஆணையம் செய்யக்கூடிய SIR நடவடிக்கை முழுக்க முழுக்க தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் விரோதமானது.

    குறுக்கு வழியில் வாக்குரிமைகளை பரிப்பதன் மூலம் குடியுரிமையற்றவர்களாக சிறுபான்மையினர்களையும் மற்றவர்களையும் உருவாக்கனும் என்பதுதான் அவர்களுடைய தொலைநோக்கு திட்டம்.

    அதற்கு நாம் எந்த விதத்திலம் இடம் கொடுத்துவிடக்கூடாது. சட்டரீதியாக அனைவரும் உச்சநீதிமன்றம் சென்று அவரவர்கள் தனிதனியாக வழக்கு போட வேண்டும்.

    அந்த மாதிரி நேரங்களில் திமுக சார்பிலான வழக்கறிஞர்கள் உதவி செய்வார்கள் என்கிற உத்தரவாதத்தை கொடுத்திருக்கிறார்கள். SIR நடவடிக்கையால் ஏற்படும் விபரீதம் தொடர்பாக மக்களிடம் எடுத்து சொல்ல வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்கள்.

    இதுபோன்ற மக்களின் முக்கியமான பிரச்சனைகள், மாநிலத்தில் மக்களுடைய வாக்குகள் பறிப்போகும் நிலை நம் கண் எதிரே தெரிகிறது.

    இதுபோன்ற கூட்டத்தில் விஜய் கலந்துக்காமல், பிரதிநிதிகளை அனுப்பாமல் இருப்பது அவருக்கு மக்கள் மீது அக்கறை இல்லாததை காட்டுகிறது.

    பாஜக எந்தவிதமான திட்டத்தை கொண்டு வந்தாலும் எடப்பாடி பழனிசாமி ஏற்றுக் கொள்வார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சென்னையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.
    • உச்சநீதிமன்றத்தை நாட இன்றைய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்.

    SIR நடவடிக்கைக்கு எதிராக இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்று தங்கள் உணர்வை பதிவு செய்த 49 கட்சி தலைவர்களுக்கும் நன்றி என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையைப் பறித்து, ஜனநாயகத்தைப் படுகொலை செய்யும் நோக்கோடு அவசரகதியில் மேற்கொள்ளப்படும் #SIR-க்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுப்பது அனைத்துக் கட்சிகளின் கடமை!

    வாக்காளர் பட்டியல் திருத்தத்தைக் குழப்பங்கள் - ஐயங்கள் இல்லாமல் போதிய கால அவகாசத்துடன், 2026 பொதுத் தேர்தலுக்குப் பின்பு நடத்த வேண்டும் என்ற நமது கோரிக்கையை #ECI ஏற்காததால், உச்சநீதிமன்றத்தை நாட இன்றைய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்.

    அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் பங்கேற்றுத் தங்களுடைய உணர்வைப் பதிவு செய்த 49 கட்சிகளின் தலைவர்களுக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இக்கூட்டத்தில் பங்கேற்காதவர்களும் தங்களுடைய கட்சிகளில் SIR குறித்து விவாதித்து, ஜனநாயகத்தைக் காத்திடும் முன்னெடுப்பை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • அனைத்துக் கட்சி கூட்டம் தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
    • கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்று பேசினார்.

    தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (எஸ்.ஐ.ஆர்.) நாளை மறுநாள் (4-ந்தேதி) முதல் தொடங்கும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

    இதையொட்டி ஒவ்வொரு மாவட்ட கலெக்டர்களும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி இருக்கிறார். அதன் அடிப்படையில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெற உள்ளது.

    வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை அவசர அவசரமாக செய்யக் கூடாது. நவம்பர், டிசம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவ மழை பெய்து வரும் காலத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை செய்வது சிரமம். எனவே கால அவகாசம் கொடுத்து செய்ய வேண்டும். இப்போது இதை செய்வது சரியானது அல்ல என்று தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஏற்கனவே அறிவித்திருந்தன.

    ஆனாலும் தேர்தல் கமிஷன் இந்த கோரிக்கையை ஏற்றுக் கொள்ளவில்லை. திட்டமிட்டபடி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணிகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

    இதைத் தொடர்ந்து அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டி ஆலோசிக்கப்படும் என்று தி.மு.க. கூட்டணி கட்சிகள் கூட்டாக அறிவித்து இருந்தது.

    அதன்படி இன்று காலை 10 மணிக்கு சென்னை தியாகராய நகரில் உள்ள அக்கார்டு ஓட்டலில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள 64 கட்சிகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டு இருந்தது.

    அதன்படி இன்று காலை 10 மணிக்கு அனைத்துக் கட்சி கூட்டம் தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத் தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் சண்முகம், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் வீரபாண்டியன், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், தே.மு.தி.க. சார்பில் பார்த்தசாரதி,

    இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தலைவர் காதர்மொய்தீன், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், துணை பொதுச் செயலாளர் சத்ரியன் வேணுகோபால், கொ.ம.தே.க. தலைவர் ஈஸ்வரன், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாகிருல்லா உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

    இந்த கூட்டத்தில் அ.தி.மு.க., பா.ஜ.க, டாக்டர் அன்புமணி (பா.ம.க.), டி.டி.வி.தினகர னின் அ.ம.மு.க. ஆகிய கட்சிகளுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை.

    அழைப்பு அனுப்பப்பட்ட கட்சிகளில் விஜய்யின் த.வெ.க., டாக்டர் ராமதாசின் பா.ம.க. சீமானின் நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட ஒரு சில கட்சிகள் பங்கேற்காமல் புறக்கணித்தன.

    கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்று பேசினார்.

    அதன்பிறகு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை இந்த கால கட்டத்தில் நடத்துவது சரியாக இருக்காது என்றும் இதனை தள்ளி வைக்க வேண்டும் என்றும் கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் வலியுறுத்தினார்கள். ஒவ்வொரு கட்சித் தலைவர்களும் தங்களது நிலைப்பாடுகளை விளக்கி பேசினார்கள்.

    வாக்காளர் பட்டியல் சீரமைக்கப்பட வேண்டும் என்பதை நாங்கள் மறுக்கவில்லை. ஆனால் அதனை அவசர அவசரமாக செய்யக் கூடாது. கால அவகாசம் கொடுத்து செய்ய வேண்டும். நடைமுறை சிக்கல் இல்லாமல் செய்ய வேண்டும்.

    ஏப்ரல் மாதம் தேர்தலை வைத்துக் கொண்டு இப்போதே இதனை செய்யத் தொடங்குவது சரியாக இருக்காது. முறையானது அல்ல. எனவே வாக்காளர் பட்டியல் சிறப்பு சீர்திருத் தத்தை நாங்கள் எதிர்க்கிறோம்.

    எஸ்.ஐ.ஆர். என்ற பெயரில் தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையை பறிக்கும் சதித்திட்டம் இதனுள் இருக்கலாம் என சந்தேகப்படுகிறோம். இதுபோன்ற எந்த சதியையும் தமிழ்நாடு அனுமதிக்காது. எனவே வாக்காளர் பட்டி யல் சிறப்பு தீவிர திருத்தத்தை தள்ளி வைக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

    அதன் அடிப்படையில், ஜனநாயக, சட்டவிரோாத SIR நடவடிக்கையை தேர்தல் ஆணையம் நிறுத்தி வைக்க வேண்டுமென அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெற்றது.
    • தவெக., அன்புமணி தரப்பு பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் கூட்டத்தை புறக்கணித்தன.

    சென்னை தி.நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெற்றது.

    64 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் 21 கட்சிகள் பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

    தவெக., அன்புமணி தரப்பு பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் கூட்டத்தை புறக்கணித்தன.

    இந்நிலையில், அனைத்துக் கட்சி கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எஸ்ஐஆர் நடவடிக்கைகை எதிர்ப்பது ஏன்? என விளக்கம் அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    நேர்மையான தேர்தல் நடத்த உண்மையான வாக்காளர் பட்டியல் அவசியம் என்பதை யாரும் மறுக்கவில்லை. ஆனால் அதற்கு உரிய கால அவகாசத்தை கொடுக்க வேண்டும்.

    அதைவிடுத்து தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு முழுமையான திருத்த பணிகளை செய்ய நினைப்பது உண்மையான வாக்காளர்களை நீக்கும் தந்திரம் மட்டுமே.

    மக்கள் வாக்குரிமையை பறிக்கும் விதமாகவும் அவர்களை அச்சுறுத்தும் விதமாகவும் பீகாரில் வாக்களார் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடைபெற்றது. அது போல தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களிலும் நடைபெற உள்ளது.

    இதற்கு எதிராக தமிழ்நாடு தனது எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டியது முக்கிய தேவையாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சென்னை தி.நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்று வருகிறது.
    • 64 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் 21 கட்சிகள் பங்கேற்கவில்லை.

    வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி தொடர்பாக முதலமைச்சர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது.

    சென்னை தி.நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சிக் கூட்டம் தொடங்கியது.

    64 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் 21 கட்சிகள் பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. தவெக., அன்புமணி தரப்பு பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் கூட்டத்தை புறக்கணித்தன.

    விசிக தலைவர் திருமாவளவன், மக்கள் நீதி மையத் தலைவர் கமலஹாசன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் சண்முகம் உள்ளிட்டோர் வருகை தந்துள்ளனர்.

    ×