என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அனைத்து கட்சி கூட்டம்"

    • நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது.
    • பிப்ரவரி 1-ம் தேதி 2026-27ம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

    புதுடெல்லி:

    நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. இந்தக் கூட்டத் தொடர் ஏப்ரல் மாதம் 2-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

    பிப்ரவரி மாதம் 1-ம் தேதி 2026-27ம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

    இந்நிலையில், நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன், மரபுப்படி நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டம் இன்று நடைபெற உள்ளது.

    நாடாளுமன்ற இணைப்பு கட்டடத்தில் உள்ள முதன்மை குழு அறையில், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது.

    இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் விவாதத்திற்கு வரவிருக்கும் முக்கிய பிரச்சனைகள், சட்ட மசோதாக்கள் குறித்தும், அவையை சுமூகமாக நடத்துவது குறித்தும் விரிவாக ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

    • நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் இந்த மாதம் 28-ம் தேதி தொடங்குகிறது.
    • பிப்ரவரி மாதம் 1-ம் தேதி 2026-27ம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

    புதுடெல்லி:

    நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் இந்த மாதம் 28-ம் தேதி தொடங்குகிறது. இந்தக் கூட்டத் தொடர் ஏப்ரல் மாதம் 2-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

    பிப்ரவரி மாதம் 1-ம் தேதி 2026-27ம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

    இந்நிலையில், நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன், மரபுப்படி நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டம் வரும் 27-ம் தேதி நடைபெற உள்ளது.

    நாடாளுமன்ற இணைப்பு கட்டடத்தில் உள்ள முதன்மை குழு அறையில், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது.

    இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், நாடாளுமன்ற கூட்டத்தொடரில் விவாதத்திற்கு வரவிருக்கும் முக்கிய பிரச்சனைகள், சட்ட மசோதாக்கள் குறித்தும், அவையை சுமூகமாக நடத்துவது குறித்தும், அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு சார்பில் விரிவாக ஆலோசனை நடத்தப்படும் என தெரிவித்தனர்.

    • அனைத்து கட்சி கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது.
    • காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட கட்சி களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. இதை யொட்டி பாராளுமன்றம் சுமூகமாக நடைபெற அனைத்து கட்சி கூட்டத் துக்கு அழைப்பு விடுக்கப் பட்டது.

    அதன்படி, அனைத்து கட்சி கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், ஜே.பி.நட்டா, கிரண் ரிஜிஜூ, அர்ஜூன் ராம் மேக்வால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    எதிர்கட்சிகள் தரப்பில் காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட கட்சி களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெற்றது.
    • தவெக., அன்புமணி தரப்பு பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் கூட்டத்தை புறக்கணித்தன.

    சென்னை தி.நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெற்றது.

    64 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் 21 கட்சிகள் பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

    தவெக., அன்புமணி தரப்பு பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் கூட்டத்தை புறக்கணித்தன.

    இந்நிலையில், அனைத்துக் கட்சி கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எஸ்ஐஆர் நடவடிக்கைகை எதிர்ப்பது ஏன்? என விளக்கம் அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    நேர்மையான தேர்தல் நடத்த உண்மையான வாக்காளர் பட்டியல் அவசியம் என்பதை யாரும் மறுக்கவில்லை. ஆனால் அதற்கு உரிய கால அவகாசத்தை கொடுக்க வேண்டும்.

    அதைவிடுத்து தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு முழுமையான திருத்த பணிகளை செய்ய நினைப்பது உண்மையான வாக்காளர்களை நீக்கும் தந்திரம் மட்டுமே.

    மக்கள் வாக்குரிமையை பறிக்கும் விதமாகவும் அவர்களை அச்சுறுத்தும் விதமாகவும் பீகாரில் வாக்களார் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடைபெற்றது. அது போல தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களிலும் நடைபெற உள்ளது.

    இதற்கு எதிராக தமிழ்நாடு தனது எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டியது முக்கிய தேவையாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சென்னை தி.நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்று வருகிறது.
    • 64 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் 21 கட்சிகள் பங்கேற்கவில்லை.

    வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி தொடர்பாக முதலமைச்சர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது.

    சென்னை தி.நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சிக் கூட்டம் தொடங்கியது.

    64 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் 21 கட்சிகள் பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. தவெக., அன்புமணி தரப்பு பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் கூட்டத்தை புறக்கணித்தன.

    விசிக தலைவர் திருமாவளவன், மக்கள் நீதி மையத் தலைவர் கமலஹாசன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் சண்முகம் உள்ளிட்டோர் வருகை தந்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழகத்தில் அரசியல் கட்சிகளை அழைத்து பேச தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் திட்டமிட்டுள்ளார்.
    • அனைத்து கட்சி கூட்டத்தை வரும் 18-ந் தேதி பிற்பகலில் தலைமைச் செயலகத்தில் நடத்தலாமா? என்ற ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

    சென்னை:

    இந்தியாவில் தேர்தல் செயல்முறைகளை மேலும் வலுப்படுத்துவதற்காக அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் கட்சியின் மூத்த உறுப்பினர்களுடன் அவ்வப்போது கலந்துரையாடலை நடத்த தேர்தல் கமிஷன் திட்டமிட்டு உள்ளது.

    இந்திய தேர்தல் கமிஷன் கடந்த வாரம் நடத்திய கூட்டத்தில், அனைத்து அரசியல் கட்சிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரிகள், மாவட்ட தேர்தல் அதிகாரிகள், வாக்காளர் பதிவு அதிகாரிகள் அவ்வப்போது கலந்துரையாடல் கூட்டங்களை நடத்த வேண்டும் என்றும் அவர்கள் வைக்கும் கோரிக்கைகளை சட்டத்திற்கு உட்பட்டு தீர்த்து வைக்க வேண்டும் என்றும் தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் உத்தரவிட்டார். இதுதொடர்பாக அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல் கமிஷன் கடிதம் எழுதியுள்ளது.

    இதற்கிடையே தமிழகத்தில் அரசியல் கட்சிகளை அழைத்து பேச தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் திட்டமிட்டுள்ளார். தற்போது அங்கீகாரம் பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழர் கட்சி உள்பட 14 தேசிய மற்றும் மாநில கட்சிகளை இந்த கூட்டத்திற்கு அவர் அழைக்கவுள்ளார். இந்த அனைத்து கட்சி கூட்டத்தை வரும் 18-ந் தேதி பிற்பகலில் தலைமைச் செயலகத்தில் நடத்தலாமா? என்ற ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

    இதுபற்றி பேசிய அர்ச்சனா பட்நாயக், 18-ந் தேதியை உத்தேசமாகத்தான் கருதியுள்ளோம் என்றும் அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்படும் தேதி பின்னர் உறுதி செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

    • கூட்டணி கட்சி என்ற ரீதியில் அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ள காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
    • சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் கு.செல்வ பெருந்தகை எம்.எல்.ஏ. கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது.

    சென்னை:

    பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவித்துள்ளது.

    பா.ஜனதா, காங்கிரஸ் உள்பட பல கட்சிகள் இந்த தீர்ப்பை வரவேற்றுள்ளன. ஆனால் தமிழகத்தல் தி.மு.க, விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் எதிர்க்கின்றன.

    சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக ஆலோசிக்க அனைத்து கட்சி கூட்டத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். இந்த கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மறுநாள் (12-ந்தேதி) நடைபெறுகிறது.

    தமிழகத்தில் காங்கிரஸ் தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. எனவே அனைத்து கட்சி கூட்டத்தில் காங்கிரஸ் கலந்து கொள்ளுமா? புறக்கணிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இந்த நிலையில் கூட்டணி கட்சி என்ற ரீதியில் கூட்டத்தில் கலந்து கொள்ள காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

    சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் கு.செல்வ பெருந்தகை எம்.எல்.ஏ. கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது.

    இது தொடர்பாக செல்வ பெருந்தகையிடம் கேட்ட போது, முதல்வர் அழைத்துள்ளார். கலந்து கொள்ளத்தான் வேண்டும். காங்கிரஸ் ஆதரிக்கிறதே என்கிறீர்கள். இதுவும் காங்கிரஸ் கொண்டு வந்ததுதான்.

    கட்சி என்ன நிலைப்பாட்டில் உள்ளதோ அதுவே எங்கள் நிலைப்பாடும். எனவே கூட்டத்தில் காங்கிரஸ் நிலைப்பாட்டை தெரிவிப்போம் என்றார்.

    இதேபோல் அகில இந்திய அளவில் இந்த இட ஒதுக்கீட்டை ஆதரிக்கும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியும் கூட்டத்தில் பங்கேற்கிறது.

    இது தொடர்பாக மாநில செயலாளர் கே.பால கிருஷ்ணனிடம் கேட்ட போது, நாங்கள் கலந்து கொள்கிறோம். கூட்டத்தில் எங்கள் நிலைப்பாட்டை தெளிவுபடுத்துவோம் என்றார்.

    • ஊத்தங்கரையில் அனைத்து கட்சி கூட்டம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
    • 4.38 ஏக்கர் நிலத்தில் உடனடியாக அரசு மருத்துவமனை அமைக்க பரிந்துரை செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்

    ஊத்தங்கரை,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் அனைத்து கட்சி கூட்டம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

    ஸ்ரீ வித்யா மந்திர் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் வே.சந்திரசேகரன் தாங்கினார். அரசுப்பள்ளிகள் வளர்ச்சி அறக்கட்டளை நிர்வாகிகள் லோகநாதன்சேகர், சதீஷ்பாபு, துரைசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் ஊத்தங்கரை தாலுகா அரசு மருத்துவமனையை விரிவாக்கம் செய்ய மத்திய அரசு சார்பில் 21 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

    அந்த மருத்துவமனையை அதற்காக ஸ்ரீ வித்யா மந்திர் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் சந்திரசேகரன் இலவசமாக வழங்கிய மூன்றம்பட்டி ஊராட்சியில் தேசிய நெடுஞ்சாலையின் அருகில் 4.38 ஏக்கர் நிலத்தில் உடனடியாக அரசு மருத்துவமனை அமைக்க பரிந்துரை செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் பேரூராட்சி தலைவர் அமானுல்லா, தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் மூன்றம்பட்டி குமரேசன், எக்கூர் செல்வம்,ரஜினி செல்வம், நகர செயலாளர் பாபு சிவக்குமார், அ.தி.மு.க. நகர செயலாளர் சிக்னல் ஆறுமுகம், அவைத் தலைவர் சுப்பிரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் குபேந்திரன்,

    ஜெயலட்சுமி, எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு அறக்கட்டளை தலைவர் டாக்டர் இளையராஜா, காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் பூபதி, விஜயகுமார், பா.ம.க.சார்பில் வக்கீல் மூர்த்தி, கிருபாகரன், இ.கம்யூனிஸ்ட் கட்சி சேகர், மா.கம்யூனிஸ்ட் கட்சி மகாலிங்கம்,

    பா.ஜ.க.சிவா, சிங்காரவேலன், இந்திய குடியரசு கட்சி மாநில நிர்வாகி கவுன்சிலர் சிவன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி செல்வராஜ், ஜெய்சங்கர், அனைத்து வணிகர் சங்க நிர்வாகி உமாபதி, டாக்டர்கள் கந்தசாமி, நடேசன், வக்கீல்கள் பெருமாள், பாலசந்தர், ஆசிரியர் வீரமணி, ஆடிட்டர் ராஜேந்திரன், பழ.பிரபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மணிப்பூரில் நடைபெறும் வன்முறையை முடிவுக்கு கொண்டு வர அங்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேரில் சென்று ஆய்வு செய்தார்.
    • அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்குமாறு மணிப்பூர் மாநில கட்சிகளுக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அழைப்பு விடுத்துள்ளார்.

    புதுடெல்லி:

    மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி மற்றும் குக்கி இன மக்களிடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது.

    குக்கி இன மக்களுக்கு அளிக்கப்பட்ட சலுகைகள் போல மைத்தேயி இன மக்களையும் பழங்குடி இன பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பது தொடர்பான பிரச்சனையில் ஏற்பட்ட மோதல் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இந்த சம்பவங்களில் இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் கொலை செய்யப்பட்டனர்.

    இதையடுத்து மணிப்பூரில் நடைபெறும் வன்முறையை முடிவுக்கு கொண்டு வர அங்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேரில் சென்று ஆய்வு செய்தார். அதன்பின்பும் அங்கும் வன்முறை ஓயவில்லை.

    இதையடுத்து வருகிற 24-ந் தேதி அங்கு அனைத்து கட்சி கூட்டத்துக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த பேச்சுவார்த்தை மூலம் மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்தவும், பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வரவும் மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.

    எனவே அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்குமாறு மணிப்பூர் மாநில கட்சிகளுக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அழைப்பு விடுத்துள்ளார்.

    • பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பாராளுமன்றம் நாளை கூடுகிறது.
    • மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20 முதல் ஆகஸ்ட் 11 வரை நடைபெறுகிறது.

    புதுடெல்லி:

    பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பாராளுமன்றம் நாளை கூடுகிறது. மழைக்கால கூட்டத்தொடர் 20-ம் தேதி முதல் ஆகஸ்ட் 11-ம் தேதி வரை நடைபெறுகிறது.

    இந்தக் கூட்டத்தொடரில் பல்வேறு பிரச்சினைகளை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. குறிப்பாக மணிப்பூர் கலவரம் விவகாரம் பாராளுமன்றத்தில் புயலை கிளப்பும் என்று கருதப்படுகிறது.

    மேலும் விலைவாசி உயர்வு, விசாரணை அமைப்புகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களையும் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

    இந்நிலையில், தலைநகர் டெல்லியில் அனைத்துக் கட்சி கூட்டம் இன்று மதியம் 3 மணிக்கு தொடங்கியது. பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் தலைமை தாங்கினார். இதில் தி.மு.க. மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு, அ.தி.மு.க. சார்பில் தம்பிதுரை பங்கேற்றுள்ளனர்.

    ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, ஓ.பி.ரவீந்திரநாத் எம்.பி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

    • பாராளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரை முன்னிட்டு செப்டம்பர் 17ம் தேதி அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் சிங் ஜோஷி அழைப்பு விடுத்துள்ளார்.

    பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் வரும் 18ம் தேதி முதல் தொடங்குகிறது. இது 22ம் தேதி வரை என மொத்தம் 5 அமர்வுகள் நடைபெறுகின்றன.

    "சிறப்பு கூட்டத் தொடரில் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் மற்றும் உரையாடல்களை எதிர்பார்க்கிறேன்," என்று மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தனது எக்ஸ் (முன்பு டுவிட்டர்) பதிவில் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தார்.

    இந்நிலையில், பாராளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரை முன்னிட்டு செப்டம்பர் 17ம் தேதி அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் சிங் ஜோஷி அழைப்பு விடுத்துள்ளார்.

    மேலும் அவர், கூட்டத்தில் சிறப்புக் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த எதிர்கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அரசு வலிறுத்தும்.

    கூட்டத்தில், சிறப்பு கூட்டத்திற்கான நோக்கம் குறித்து எதிர்க்கட்சிகளுக்கு, மத்திய அரசு விளக்கம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நாளை மறுநாள் கூடுகிறது.
    • குளிர்கால கூட்டத் தொடரில் 18 மசோதாக்களை நிறைவேற்ற அரசு முடிவு செய்துள்ளது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நாளை மறுநாள் (4-ம் தேதி) கூடுகிறது. இந்த கூட்டத் தொடர் 22-ம் தேதி வரை நடைபெறுகிறது. 19 நாட்களில் 15 அமர்வுகள் நடத்த திட்டமிடப் பட்டுள்ளது.

    குளிர்கால கூட்டத் தொடரில் 18 மசோதாக்களை நிறைவேற்ற அரசு முடிவு செய்துள்ளது. இதில் 7 புதிய மசோதாக்கள், 11 நிலுவை மசோதாக்கள் ஆகும்.

    பாராளுமன்ற கூட்டத் தொடரை சுமூகமாக நடத்த எதிர்க்கட்சிகள் உள்பட அனைத்துக் கட்சிகளுக்கும் மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக விவாதிப்பதற்காக அனைத்துக் கட்சி கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் பங்கேற்க அனைத்துக் கட்சிகளின் பாராளுமன்றக் குழு தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

    இந்நிலையில், பாராளுமன்றத்தின் நூலக கட்டிடத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் இன்று நடந்தது. இக்கூட்டம் பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி தலைமையில் நடந்தது.

    இதில் மத்திய மந்திரிகள் ராஜ்நாத்சிங், அர்ஜுன்ராம், காங்கிரஸ் எம்.பி. ஜெயராம் ரமேஷ் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். அப்போது கூட்டத் தொடரை சுமூகமாக நடத்த ஒத்துழைப்பு அளிக்குமாறு மத்திய அரசு கேட்டுக் கொண்டது.

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் பல்வேறு விவகாரங்கள் பற்றி பேச எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளனர்.

    ×