என் மலர்
நீங்கள் தேடியது "Manipur Violence"
- 30-க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து சாம்பலாகின.
- காங்போக்பி, உக்ருல் மாவட்டங்களில் உள்ள பாதுகாப்பான இடங்களுக்கு தப்பி சென்று கொண்டிருக்கிறார்கள்.
இம்பால்:
மணிப்பூரில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு குகி, மெய்தி ஆகிய இரு சமூகங்கள் இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்தது. இதில் 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இதையடுத்து பா.ஜ.க. அரசு விலகியதால் மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இதற்கிடையே கடந்த 4-ந் தேதி கெம்சந்த் சிங் தலைமையில் புதிய பா.ஜ.க. அரசு பதவியேற்றது.
இதற்கிடையே மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்தது. உக்ருல் மாவட்டம் லிட்டன் சரேய்கோங் கிராமத்திற்குள் புகுந்த ஒரு கும்பல் தங்குல் சமூகத்தை சேர்ந்த நபரை தாக்கியது. மேலும் வீடுகளுக்கு ஒரு கும்பல் தீ வைத்தது. இதில் 30-க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து சாம்பலாகின.
இந்த நிலையில் லிட்டன் சரேய்கோங் கிராமத்தில் இன்று அதிகாலை துப்பாக்கி சூடு நடந்தது. ஒரு கும்பல் பல சுற்றுகளாக துப்பாக்கியால் சுட்டன. இந்த சத்தங்களை கேட்டு அப்பகுதி மக்கள் பீதியடைந்தனர்.
நிலைமையைக் கட்டுப்படுத்த லிட்டன் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர். ஆனாலும் துப்பாக்கிச் சூடு தொடர்ந்து நடந்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் பதற்றம் நீடித்து வருகிறது.
இதற்கிடையே மீண்டும் வன்முறை ஏற்பட்டுள்ளதால் குகி மற்றும் தங்குல் சமூகங்களைச் சேர்ந்த மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி உடமைகளுடன் பாதுகாப்பான இடங்களுக்கு செல்கிறார்கள்.
கடந்த 2 நாட்களாக லிட்டன் சரேய்கோங் மற்றும் அண்டை குகி கிராமங்களை விட்டு காங்போக்பி, உக்ருல் மாவட்டங்களில் உள்ள பாதுகாப்பான இடங்களுக்கு தப்பி சென்று கொண்டிருக்கிறார்கள்.
வன்முறையை தொடர்ந்து உக்ருல் மாவட்டத்தில் இணைய சேவைகளை 5 நாட்களுக்கு நிறுத்தி வைக்க மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது.
- வன்கொடுமையில் ஏற்பட்ட பலத்த காயங்கள் காரணமாகத் தொடர்ந்து உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார்.
- குற்றவாளிகள் இன்னும் சுதந்திரமாகத் திரியும் நிலையில், பாதிக்கப்பட்ட பெண் நீதிக்காகக் காத்திருந்தே உயிர் நீத்துள்ளது மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மணிப்பூர் இனக்கலவரத்தின் போது கடத்தப்பட்டு, கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட குக்கி சமூகத்தைச் சேர்ந்த 18 வயது இளம்பெண், நீண்ட நாள் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
2023-ஆம் ஆண்டு மே 15-ஆம் தேதி, இம்பாலில் உள்ள நியூ செக்கோன் பகுதியில் வைத்து இந்தப் பெண் கடத்தப்பட்டார்.
ஒரு கும்பல் இவரைப் பிடித்துச் சென்று பல இடங்களில் வைத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியது.
படுகாயங்களுடன் இருந்த அவரை ஒரு ஆட்டோ ஓட்டுநர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தார்.
வன்கொடுமையில் ஏற்பட்ட பலத்த காயங்கள் காரணமாகத் தொடர்ந்து உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர், இறுதியில் கடந்த ஜனவரி 10 அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கூட்டுப் பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக 2023 ஜூலை மாதம் FIR பதிவு செய்யப்பட்டு, வழக்கு சிபிஐ (CBI) வசம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், வழக்குத் தொடங்கி இரண்டு ஆண்டுகள் கடந்தும் இதுவரை ஒருவரைக் கூட சிபிஐ கைது செய்யவில்லை.
"அந்தச் சம்பவத்திற்கு முன்பு என் மகள் மிகவும் துடிப்பாக இருப்பாள். ஆனால், அந்தத் தாக்குதலுக்குப் பிறகு அவள் சிரிப்பதையே மறந்துவிட்டாள். யாரிடமும் பேசாமல் ஒரு அறைக்குள்ளேயே முடங்கிவிட்டாள்" என்று அவரது தாய் கண்ணீர் மல்கத் தெரிவித்தார்.
பெண்ணின் மரணத்திற்கு குக்கி சமூக அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. பெண்ணுக்கு நீதி கிடைக்க மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினர்.
குற்றவாளிகள் இன்னும் சுதந்திரமாகத் திரியும் நிலையில், பாதிக்கப்பட்ட பெண் நீதிக்காகக் காத்திருந்தே உயிர் நீத்துள்ளது மணிப்பூர் மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
- மணிப்பூரில் இன வன்முறை மற்றும் அரசியல் நெருக்கடி காரணமாக ஜனாதிபதி ஆட்சி (President's Rule) அமல்படுத்தப்பட்டது.
மணிப்பூரில் இன வன்முறை மற்றும் அரசியல் நெருக்கடி காரணமாக ஜனாதிபதி ஆட்சி (President's Rule) அமல்படுத்தப்பட்டது. ஆரம்பத்தில், மணிப்பூரில் வன்முறை உச்சத்தில் இருந்தபோது ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படவில்லை. ஆனால், 2025 -ம் ஆண்டின் தொடக்கத்தில் மாநிலத்தில் ஏற்பட்ட ஆட்சியமைப்பு முடக்கம் (Constitutional Breakdown) காரணமாக ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்தது.
மணிப்பூரில் கடந்த 2023-ம் ஆண்டு மே மாதத்தில் மைதேயி (Meitei) மற்றும் குக்கி (Kuki) சமூகத்தினருக்கு இடையே இன வன்முறை தொடங்கியது. இது சுமார் 250க்கும் மேற்பட்டோரின் உயிரை பறித்தது. ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்வுக்கு வழிவகுத்தது. 2023-ம் ஆண்டில் வன்முறை உச்சத்தில் இருந்தபோதும், அம்மாநில முதல்வர் ந. பிரேன் சிங் தலைமையிலான அரசு நீடித்தது.

மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங்
அப்போது, மத்திய அரசு, Article 356 (ஜனாதிபதி ஆட்சி) ஐப் பயன்படுத்தாமல், மத்திய படைகள் மற்றும் நிர்வாகத்தின் மூலம் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முயன்றது. இதன் எதிரொலியால், 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், முதல்வர் ந. பிரேன் சிங் தனது பதவியை ராஜினாமா செய்தார். தொடர்ந்து, ஆளும் கட்சிக்குள் ஏற்பட்ட தலைமைத்துவ நெருக்கடி மற்றும் புதிய முதல்வரைத் தேர்வு செய்வதில் ஏற்பட்ட இழுபறி காரணமாக, சட்டமன்றத்தைக் கூட்ட வேண்டிய 6 மாத காலக்கெடு காலாவதியானது.
இதன் விளைவாக, மாநில ஆளுநரின் பரிந்துரையின் பேரில், அரசியலமைப்பின் பிரிவு 356 இன் கீழ், 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி 13 அன்று மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்தது. இது இன வன்முறையின் தொடர்ச்சியாக உருவான அரசியலமைப்பு இயந்திரத்தின் முடக்கம் (Failure of Constitutional Machinery) என்ற அடிப்படையில் நிகழ்ந்தது.
மணிப்பூரைப் பொறுத்தவரை, ஆளும் கட்சி மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே கட்சியாக இருந்ததால், ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவதற்குப் பதிலாக, மத்திய அரசு படைகளை அனுப்பி, மாநில நிர்வாகத்துடன் இணைந்து நிலைமையைச் சமாளிக்க முதலில் முயற்சி செய்தது. சுருக்கமாக, மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி, இன வன்முறையைக் கட்டுப்படுத்துவதற்காக அல்லாமல், முதல்வர் ராஜினாமா செய்தபின் புதிய அரசு அமையாததால் ஏற்பட்ட அரசியலமைப்பு நெருக்கடியை (2025) தீர்க்கும் கடைசி முயற்சியாகவே அமல்படுத்தப்பட்டது.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு
ஜனாதிபதி ஆட்சி என்றால் என்ன? (Article 356)
இந்திய அரசியலமைப்பின் பிரிவு 356 என்பது, ஒரு மாநிலத்தில் அரசியலமைப்பு இயந்திரம் முடங்கிவிட்டது என்று குடியரசுத் தலைவர் கருதினால், அங்கு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த அதிகாரம் அளிக்கிறது.
உயிரிழப்புகளும் சேதங்களும்:
மணிப்பூர் வன்முறை மோதல்கள் 2023 மே 3 அன்று தொடங்கி, 2025 ஆம் ஆண்டிலும் ஆங்காங்கே தொடர்கிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நிலவரப்படி, இந்த இன வன்முறையில் 258 பேர் உயிரிழந்துள்ளனர். (மார்ச் 2025 நிலவரப்படி 260 க்கும் அதிகமான உயிரிழப்புகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.)

கலவரத்தின்போது
- இதில் மைதேயி மற்றும் குக்கி-ஜோ சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் அடங்குவர்.
- 1,100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 30 க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.
- 60,000-க்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்தனர்.
- 4,700 க்கும் மேற்பட்ட வீடுகள் தீயிட்டு எரிக்கப்பட்டன அல்லது சேதப்படுத்தப்பட்டன.
- சுமார் 400 க்கும் மேற்பட்ட தேவாலயங்களும் (Churches), 130 க்கும் மேற்பட்ட கோயில்களும் (Temples) சேதப்படுத்தப்பட்டன.
- காவல் துறையின் ஆயுதக் கிடங்குகளில் இருந்து 5,600 க்கும் மேற்பட்ட ஆயுதங்கள் வன்முறைக் குழுக்களால் கொள்ளையடிக்கப்பட்டன. இதில் 1,800 க்கும் மேற்பட்ட ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.
வன்முறைக்குப் பிறகு இரண்டு சமூகத்தினரும் தாங்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளுக்குத் தனித்தனியே சென்று குடியேறிவிட்டதால், இரு சமூகத்தினருக்கும் இடையே கிட்டத்தட்ட முழுமையான பிரிவு நிலை (Segregation) ஏற்பட்டுள்ளது. பெரிய அளவிலான வன்முறைகள் குறைந்தாலும், 2025 மார்ச் மாதத்திலும் சில இடங்களில் மோதல்கள், துப்பாக்கிச் சூடு மற்றும் கொலைச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
- நீதிபதிகளின் இந்த வருகை பாதிக்கப்பட்ட மக்ககளுக்கான சட்ட மற்றும் மனிதாபிமான உதவியின் தற்போதைய தேவையை வலியுறுத்தும்.
- பயணத்தின்போது நீதிபதிகள் 6 பேரும் வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்கள் தஞ்சமடைந்துள்ள நிவாரண முகாம்களுக்கு செல்வார்கள்.
புதுடெல்லி:
வடகிழக்கு மாநிலமான மணிப்பூர் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக கலவரத்தின் பிடியில் சிக்கியுள்ளது. மெய்தி மற்றும் குகி இன மக்களுக்கு இடையேயான இந்த கலவரத்தில் இதுவரை 250-க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்.
மேலும் வன்முறை காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகள், உடைமைகளை விட்டுவிட்டு பல மாதங்களாக நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இதனிடையே மணிப்பூர் முதல்-மந்திரியாக இருந்து வந்த பைரேன் சிங் கடந்த மாதம் தனது பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து, அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் பி.ஆர்.கவாய் உள்பட சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் 6 பேர் வருகிற 22-ந்தேதி மணிப்பூர் செல்ல இருப்பதாக தேசிய சட்ட சேவைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
மணிப்பூர் ஐகோர்ட்டின் 20-ம் ஆண்டு விழாவையொட்டி சுப்ரீம் கோர்ட் நீதிபதியும், தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் செயல் தலைவருமான பி.ஆர்.கவாய், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சூர்ய காந்த், விக்ரம் நாத், எம்.எம்.சுந்தரேஷ், கே.வி.விஸ்வநாதன் மற்றும் என்.கோடீஸ்வர் சிங் ஆகியோருடன் வருகிற 22-ந்தேதி மணிப்பூருக்கு செல்கிறார். இந்த பயணத்தின்போது நீதிபதிகள் 6 பேரும் வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்கள் தஞ்சமடைந்துள்ள நிவாரண முகாம்களுக்கு செல்வார்கள்.
நீதிபதிகளின் இந்த வருகை பாதிக்கப்பட்ட மக்ககளுக்கான சட்ட மற்றும் மனிதாபிமான உதவியின் தற்போதைய தேவையை வலியுறுத்தும். இந்த பயணத்தின்போது இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு மற்றும் உக்ருல் மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள புதிய சட்ட உதவி மையங்களையும், மாநிலம் முழுவதும் உள்ள சட்ட சேவை முகாம்கள் மற்றும் மருத்துவ முகாம்களையும் நீதிபதி கவாய் தொடங்கி வைப்பார்.
தொடரும் வன்முறைகளுக்கு மத்தியில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு சட்ட உதவி மற்றும் ஆதரவை வழங்குவதில் மணிப்பூர் மாநில சட்ட சேவைகள் ஆணையத்துடன் தேசிய சட்ட சேவைகள் ஆணையம் முக்கிய பங்கு வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- மணிப்பூர் மாநிலத்தில் பலாத்காரம், படுகொலைகள் என அனைத்து கொடுமைகளும் அரங்கேறுகின்றன.
- மணிப்பூர் இந்தியாவின் ஒரு அங்கம் இல்லையா?
மாநிலங்களவையில் எம்.பி. வைகோ பேசியதாவது:
மணிப்பூர் நிலவரம் பற்றி இங்கே ஆழமான விவாதம் நடைபெற்று வருகிறது. மணிப்பூர் மாநிலத்தில் பலாத்காரம், படுகொலைகள் என அனைத்து கொடுமைகளும் அரங்கேறுகின்றன.
எங்களுக்கு உள்ள மில்லியன் டாலர் கேள்வியே பிரதமர் மோடிக்கு மணிப்பூர் செல்வதைத் தவிர வேறு என்ன வேலை இருக்கிறது?
நரேந்திர மோடி Not Prime Minister. அவர் Picnic Minister. ஒவ்வொரு நாடாக செல்கிற நரேந்திர மோடியால் மணிப்பூர் மாநிலத்துக்கு ஏன் செல்ல முடியவில்லை? மணிப்பூர் இந்தியாவின் ஒரு அங்கம் இல்லையா என்று வைகோ பேசினார்.
இதை சபை குறிப்பில் இருந்து நீக்குவேன் என்று மாநிலங்களவை துணைத்தலைவர் கூறினார்.
- பழங்குடியின மாணவர் அமைப்பு சார்பில் ஏழு மாவட்டங்களில் பழங்குடியினர் ஒற்றுமை பேரணி நடத்தப்பட்டது.
- பழங்குடியினருக்கும், பழங்குடியினர் அல்லாதோருக்கும் இடையேயான இந்த மோதலால் பதற்றமான சூழல் நிலவுகிறது.
இம்பால்:
மணிப்பூர் மாநிலத்தில் மெய்டீஸ் என்ற பழங்குடி அல்லாத சமுகத்தினர் தங்களுக்கு பட்டியலின பழங்குடியினர் என்ற அந்தஸ்த்து வழங்க வேண்டும் என்று மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். மெய்டீஸ் சமுகத்திற்கு பட்டியலின பழங்குடியின சமுகம் என்ற அந்தஸ்து வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பழங்குடியின சமுகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மணிப்பூர் அனைத்து பழங்குடியின மாணவர் அமைப்பு சார்பில் அம்மாநிலத்தின் மலைப்பகுதியில் உள்ள 7 மாவட்டங்களில் நேற்று பழங்குடியினர் ஒற்றுமை பேரணி நடத்தப்பட்டது. இந்த பேரணிக்கு எதிராக மாநிலத்தின் சில பகுதிகளில் எதிர்தரப்பும் பேரணி நடத்தியது. அப்போது, இரு தரப்புக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இம்பால், சவுரசந்த்பூர் மற்றும் காங்போக்பி மாவட்டங்களில் கடும் வன்முறை வெடித்தது. வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டன. இந்த வன்முறையில் சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
பழங்குடியினருக்கும், பழங்குடியினர் அல்லாதோருக்கும் இடையேயான இந்த மோதலால் மணிப்பூரில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. வன்முறையை கட்டுப்படுத்த ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது. கலவரத்தை கட்டுப்படுத்த 8 மாவட்டங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கலவரம் மேலும் பரவாமல் தடுக்க ராணுவம் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இன்று வன்முறை நடந்த பகுதிகளில் ராணுவம் மற்றும் அசாம் ரைபிள் படையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர். போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- கலவரம் மேலும் பரவாமல் தடுக்க ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
- வன்முறை தொடர்பான புகைப்படங்களை மேரிகோம் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
இம்பால்:
மணிப்பூரில் மெய்டீஸ் சமுகத்திற்கு பட்டியலின பழங்குடியின சமுகம் என்ற அந்தஸ்து வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பழங்குடியின சமுகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று நடந்த ஒற்றுமை பேரணியின்போது வன்முறை வெடித்தது. பேரணிக்கு எதிராக சில பகுதிகளில் எதிர்தரப்பும் பேரணி நடத்தியபோது, இரு தரப்புக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது.
இம்பால், சவுரசந்த்பூர் மற்றும் காங்போக்பி மாவட்டங்களில் கடும் வன்முறை வெடித்தது. பதற்றம் அதிகரித்ததையடுத்து ராணுவம் வரவழைக்கப்பட்டது. கலவரம் மேலும் பரவாமல் தடுக்க ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கலவரத்தை கட்டுப்படுத்த 8 மாவட்டங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல குத்துச்சண்டை வீராங்கனையும் முன்னாள் எம்.பி.யுமான மேரி கோம், இந்த கலவரம் தொடர்பாக வேதனையுடன் தனது கருத்தை பகிர்ந்துள்ளார். எனது மாநிலம் மணிப்பூர் பற்றி எரிகிறது, பிரதமர் அவர்களே தயவுசெய்து உதவுங்கள் என கேட்டுக்கொண்டுள்ளார். வன்முறை தொடர்பான புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.
- மணிப்பூரில் பழங்குடியின மாணவர் அமைப்பு சார்பில் பழங்குடியினர் ஒற்றுமை பேரணி நடத்தப்பட்டது.
- அப்போது பழங்குடியினருக்கும், பழங்குடியினர் அல்லாதோருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இம்பால்:
மணிப்பூர் மாநிலத்தில் மெய்டீஸ் என்ற பழங்குடி அல்லாத சமுகத்தினர் தங்களுக்கு பட்டியலின பழங்குடியினர் என்ற அந்தஸ்த்து வழங்க வேண்டும் என்று மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். மெய்டீஸ் சமுகத்திற்கு பட்டியலின பழங்குடியின சமுகம் என்ற அந்தஸ்து வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பழங்குடியின சமுகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மணிப்பூர் அனைத்து பழங்குடியின மாணவர் அமைப்பு சார்பில் அம்மாநிலத்தின் மலைப்பகுதியில் உள்ள 7 மாவட்டங்களில் நேற்று பழங்குடியினர் ஒற்றுமை பேரணி நடத்தப்பட்டது. இந்த பேரணிக்கு எதிராக மாநிலத்தின் சில பகுதிகளில் எதிர்தரப்பும் பேரணி நடத்தியது. அப்போது, இரு தரப்புக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இம்பால், சவுரசந்த்பூர் மற்றும் காங்போக்பி மாவட்டங்களில் கடும் வன்முறை வெடித்தது. வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டன. இந்த வன்முறையில் சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
பழங்குடியினருக்கும், பழங்குடியினர் அல்லாதோருக்கும் இடையேயான இந்த மோதலால் மணிப்பூரில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. வன்முறையைக் கட்டுப்படுத்த ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது. கலவரத்தைக் கட்டுப்படுத்த 8 மாவட்டங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கலவரம் மேலும் பரவாமல் தடுக்க ராணுவம் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இன்று வன்முறை நடந்த பகுதிகளில் ராணுவம் மற்றும் அசாம் ரைபிள் படையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர். போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கலவரத்தைக் கட்டுப்படுத்த போராட்டக்காரர்களைக் கண்டதும் சுட மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர் உள்ளிட்டோருக்கு ஆளுநர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
- மணிப்பூரில் வன்முறை பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து சுமார் 13 ஆயிரம் பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
- மலைப்பகுதிகளில் இருப்போர் ராணுவ விமானங்கள் மூலம் மீட்கப்பட்டு பாதுகாப்பு மையங்களுக்கு அழைத்து வரப்படுகிறார்கள்.
இம்பால்:
மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியினர் மற்றும் மைதேயி சமூகத்தினருக்கும் இடையே பயங்கர கலவரம் மூண்டது. மைதேயி சமூகத்தினர் தங்களையும் பழங்குடியின பட்டியலில் சேர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை ஏற்க கூடாது என ஏற்கனவே உள்ள பழங்குடி இன மக்கள் கூறிவந்தனர். இப்பிரச்சினை நீறுபூத்த நெருப்பாக புகைந்து கொண்டிருந்த நிலையில் திடீரென இரு சமூகத்தினருக்கும் இடையே வன்முறை வெடித்தது.
இதில் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டதோடு வீடுகளுக்கும் தீவைக்கப்பட்டது. தகவல் அறிந்து அங்கு ராணுவத்தினர் விரைந்து சென்று நிலைமையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தனர்.
3200 மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் மற்றும் ராணுவத்தின் விமான படையினர் அங்கு முகாமிட்டு அமைதி திரும்ப ஏற்பாடுகள் செய்து வருகிறார்கள். இதற்கிடையே மணிப்பூர் வன்முறையில் பலியானவர்கள் பற்றிய விபரங்கள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
இதில் இம்பாலில் உள்ள அரசு குடியிருப்பில் வசித்து வந்த இந்திய வருவாய்துறை அதிகாரி லெட்மின்தாங் ஹாக்கிப்பின் என்பவர் வன்முறையாளர்களால் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் வெளியாகி உயர் அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதுபற்றி ஐ.ஆர்.எஸ். அதிகாரிகள் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள விபரம் வருமாறு:-
இம்பாலில் உதவி வரித்துறை அதிகாரியாக பணியாற்றி வந்தவர் லெட்மின்தாங் ஹாக்கிப்பின். அங்குள்ள அரசு குடியிருப்பில் வசித்து வந்தார். கலவரத்தின் போது ஒரு கும்பல் அவரது வீட்டுக்குள் புகுந்து அவரை வெளியே இழுத்து வந்துள்ளது.
பின்னர் அவர்கள் அவரை சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அதிகாரி லெட்மின்தாங் ஹாக்கிப்பின் பரிதாபமாக இறந்துள்ளார். இவரது இறப்பை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. குரூரமாக நடந்த இந்த சம்பவத்தின் மூலம் அதிகாரி லெட்மின்தாங் ஹாக்கிப்பின் குடும்பத்தினர் பெரும் துயரத்திற்கு ஆளாகி உள்ளனர். அவர்களுக்கு என்ன ஆறுதல் கூறமுடியும் என தெரியவில்லை.
இந்த சம்பவத்திற்கு எங்கள் அமைப்பு சார்பில் கடும் கண்டனத்தை பதிவு செய்கிறோம்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டு உள்ளனர்.
இதற்கிடையே மணிப்பூர் கலவரத்தில் 54 பேர் வரை கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. வன்முறை கும்பல் தாக்கியதில் அவர்கள் இறந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக மாநில அரசும், போலீசாரும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் இம்பால் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தீவைக்கப்பட்ட கடைகள், வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் பற்றிய கணக்கெடுப்பு பணியும் நடந்து வருகிறது.
இதற்கிடையே மணிப்பூரில் வன்முறை பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து சுமார் 13 ஆயிரம் பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். மலைப்பகுதிகளில் இருப்போர் ராணுவ விமானங்கள் மூலம் மீட்கப்பட்டு பாதுகாப்பு மையங்களுக்கு அழைத்து வரப்படுகிறார்கள். அவர்களுக்கு தேவையான அடிப்படை உதவிகளை மாநில அரசு செய்துள்ளது. தற்போது அங்கு நிலைமை கட்டுக்குள் இருப்பதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.
மணிப்பூரில் தற்போது வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் அங்கு பாதுகாப்பு பணிக்கு சென்ற ராணுவத்தினர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
- பொது மக்கள் காய்கறிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை வாங்க வெளியில் வரத்துவங்கினர்.
- நகரின் முக்கிய பகுதிகளில் ராணுவம், மத்திய காவல் படையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மணிப்பூர் வன்முறையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்து இருக்கிறது. உயிரிழந்த 54 பேரில், 16 பேரின் உடல்கள் சுராசந்த்பூர் மருத்துவமனையின் பிணவறையிலும், 15 பேரின் உடல்கள் இம்பால் கிழக்கு மாவட்டத்தில் உள்ள ஜகவர்லால் நேரு மருத்துவக் கல்லூரி பிணவறையில் வைக்கப்பட்டுள்ளன.
கடந்த சில நாட்களாக பற்றி எரிந்த மணிப்பூர் இன்று இயல்பு நிலைக்கு திரும்பியது. மணிப்பூரின் இம்பால் மற்றும் இதர பகுதிகளில் உள்ள கடைகள், சந்தைகள் திறக்கப்பட்டு, சாலையில் வாகனங்கள் ஓடத்துவங்கியுள்ளன. நகரின் முக்கிய பகுதிகளில் ராணுவம், மத்திய காவல் படையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
பொது மக்கள் இன்று காலை முதலே காய்கறிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை வாங்க வெளியில் வரத்துவங்கினர்.

"கடந்த 12 மணி நேரங்களில் இம்பால் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் கலவரக்காரர்கள் கட்டிடங்களுக்கு வேண்டுமென்றே தீயிட்டு கொளுத்தினர். எனினும், நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு விட்டது," என்று பாதுகாப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.
வன்முறையில் ஏராளமானோர் உயிரிழந்தனர், மேலும் நூற்றுக்கணக்கானோர் காயமுற்றனர் என்று பல்வேறு தகவல்கள் மூலம் செய்திகள் வெளியாகி வந்த நிலையிலும், போலீசார் இவற்றை உறுதிப்படுத்த மறுப்பதாக கூறப்படுகிறது. கலவரத்தில் சிக்கிய பலர் ரிம்ஸ் மற்றும் ஜவகர்லால் நேரு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சுமார் 10 ஆயிரம் ராணுவத்தினர் மணிப்பூர் முழுக்க பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கலவரம் காரணமாக கடந்த புதன்கிழமையில் இருந்து இயல்பு வாழ்க்கை முழுமையாக பாதிக்கப்பட்டது.
+2
- வன்முறையை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கை தொடர்பாக மத்திய அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
- கடந்த இரண்டு தினங்களாக அசம்பாவிதம் ஏதும் நடக்கவில்லை என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
புதுடெல்லி:
மணிப்பூரில் உள்ள மெய்தி சமூகத்தினர் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும்படி வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக மணிப்பூர் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு பெரும் புயலை கிளப்பியிருக்கிறது. மெய்தி சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கக்கூடாது என வலியுறுத்தி கடந்த புதன்கிழமை பழங்குடியின அமைப்புகள் ஒற்றுமை பேரணி நடத்தினர். எதிர்தரப்பினரும் பேரணி நடத்தியதால் இரு தரப்பினரிடையே மோதல் வெடித்தது. பின்னர் அது கலவரமாக மாறியதுடன், மற்ற இடங்களுக்கும் பரவியது. இந்த வன்முறையில் 50க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ராணுவம் வரவழைக்கப்பட்டு, வன்முறை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. எனினும் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.
மெய்தி சமூகத்தினருக்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்குவது தொடர்பாக மணிப்பூர் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஆளும் பாஜக எம்எல்ஏ ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதேபோல் வன்முறை தொடர்பாக விசாரிப்பதற்கு சிறப்பு விசாரணைக்குழு அமைக்கக்கோரி பழங்குடியின அமைப்பு சார்பில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுபோன்று மணிப்பூர் நிலவரம் தொடர்பாக மேலும் சில மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மணிப்பூரில் தற்போதைய நிலவரம் மற்றும் மத்திய அரசு எடுத்த நடவடிக்கை தொடர்பாக மத்திய அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராணுவம், துணை ராணுவ படைகள் அனுப்பி கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டுள்ளது, அமைதி குழு கூட்டம் நடத்தப்பட்டு, நிலைமை உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருகிறது, ஊரடங்கு தளர்த்தப்பட்டு இயல்பு நிலை திரும்பி வருகிறது என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கடந்த இரண்டு தினங்களாக அசம்பாவிதம் ஏதும் நடக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து மணிப்பூர் வன்முறை தொடர்பாக நிலை அறிக்கையை தாக்கல் செய்யும்படி மத்திய மாநில அரசுகளுக்கு, நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், வன்முறையால் பாதிக்கப்பட்ட பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பை அதிகரிக்கவும், தேவையான நிவாரணம் வழங்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டதுடன், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை மே 17ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
- மணிப்பூரில் இதுவரை நடந்த கலவரங்களில் 60 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ. 25 ஆயிரமும் நிவாரணம் வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் பா.ஜ.க. ஆட்சி நடக்கிறது. அங்கு, 53 சதவீத மக்கள் தொகையைக் கொண்டுள்ள மெய்டீஸ் இனத்தவர் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்கவேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு எதிராக பழங்குடி மாணவர்கள் அமைப்பினர் போர்க்கொடி தூக்கி வருகின்றனர்.
கடந்த 3ம் தேதியன்று மணிப்பூர் அனைத்து பழங்குடி மாணவர் அமைப்பின் சார்பில், மலைப்பகுதிகளில் உள்ள 7 மாவட்டங்களில் ஒற்றுமை பேரணி நடத்தினர். அப்போது அவர்களுக்கும், மெய்டீஸ் இனத்தவருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது.
வீடுகள், வாகனங்கள், கடைகள், வழிபாட்டுத் தலங்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. ராணுவமும், துணை ராணுவமும் குவிக்கப்பட்டனர். மொபைல் இணையதள சேவை முடக்கப்பட்டது. மணிப்பூரில் இதுவரை நடந்த கலவரங்களில் 60 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் வன்முறையில் உயிரிழந்த 60 பேரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் அளிக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் பிரேன் சிங் அறிவித்துள்ளார்.
மேலும் வன்முறையில் படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ. 25 ஆயிரமும் நிவாரணம் வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.






