என் மலர்
நீங்கள் தேடியது "கூட்டுப் பாலியல் வன்கொடுமை"
- ஊர்க்காவல் படை ஆட்சேர்ப்பு தேர்வில் கலந்து கொண்ட 26 வயது பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.
- ஆம்புலன்ஸ் ஓட்டுநர் வினய் குமார் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர் அஜித் குமார் ஆகிய இருவரை சிறப்பு விசாரணைக் குழு கைது செய்தது.
பீகார் மாநிலம் புத்தகயா மாவட்டத்தில் ஒரு கொடூரமான சம்பவம் நடந்துள்ளது. ஊர்க்காவல் படை ஆட்சேர்ப்பு தேர்வில் கலந்து கொண்ட 26 வயது பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.
ஜூலை 24 ஆம் தேதி, உடல் தகுதி தேர்வின் போது அந்த இளம் பெண் மயங்கி விழுந்து ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அப்போது, ஊழியர்கள் ஓடும் ஆம்புலன்சில் வைத்து அவரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர்.
பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்படி, உடல் பரிசோதனையின் போது தான் சுயநினைவை இழந்ததாகவும், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது என்ன நடந்தது என்பது ஓரளவு மட்டுமே அறிந்திருந்ததாகவும் அந்தப் பெண் கூறினார்.
ஆம்புலன்சில் இருந்த மூன்று அல்லது நான்கு பேர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர் கூறினார். பின்னர் இது குறித்து காவல்துறை மற்றும் மருத்துவமனை அதிகாரிகளிடம் புகார் அளித்தார்.
பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலம் பெறப்பட்டு, புத்தகயா காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரத்தை விசாரிக்க ஒரு சிறப்பு விசாரணைக் குழுவும், தடயவியல் குழுவும் அமைக்கப்பட்டன.
முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட சில மணி நேரங்களுக்குள், ஆம்புலன்சில் இருந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் வினய் குமார் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர் அஜித் குமார் ஆகிய இருவரை சிறப்பு விசாரணைக் குழு கைது செய்தது. இருவரும் தற்போது போலீஸ் காவலில் உள்ளனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சிறுமியின் தாயான அனாமிகா சம்மதத்துடனும், அவரது முன்னிலையிலும், அந்த நபர்கள் இந்தக் குற்றத்தைச் செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.
- பாஜக மகிளா மோர்ச்சாவின் ஹரித்வார் மாவட்டப் பிரிவின் தலைவராக இருந்தார்.
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ள உள்ளூர் பாஜக பெண் தலைவர் ஒருவர் தனது காதலனும் அவரது உதவியாளரும் தனது 13 வயது மகளை பலமுறை கண்முன்னே கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ய அனுமதித்துள்ளார்.
சிறுமியின் மருத்துவ பரிசோதனையில் அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, பாஜக தலைவர் அனாமிகா சர்மாவும் அவரது காதலன் சுமித் பட்வாலும் ஹரித்வாரில் உள்ள ஹோட்டலில் இருந்து கைது செய்யப்பட்டனர்.
பட்வாலின் கூட்டாளியான சுபம் மீரட்டின் ஷாபூரில் கைது செய்யப்பட்டார்.
ஜூன் 3 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது. சிறுமி தனது தந்தையிடம் தனக்கு நேர்ந்த கொடுமையைப் பற்றிக் கூறியதைத் தொடர்ந்து, அவர் போலீசில் புகார் அளித்தார்.
அனாமிகா முன்பு பாஜக மகிளா மோர்ச்சாவின் ஹரித்வார் மாவட்டப் பிரிவின் தலைவராக இருந்தார். இருப்பினும், இந்த வழக்கில் அவரது பெயர் எழுந்தவுடன், அவர் கட்சியின் முதன்மை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
காவல்துறையினரின் கூற்றுப்படி, இந்த ஆண்டு ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடையில் ஹரித்வார், ஆக்ரா மற்றும் பிருந்தாவனில் சிறுமி பலமுறை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.
சிறுமியின் தயான அனாமிகா சம்மதத்துடனும், அவரது முன்னிலையிலும், அந்த நபர்கள் இந்தக் குற்றத்தைச் செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும், சிறுமியின் தந்தையை யாரிடமாவது இதை வெளிப்படுத்தினால் கொலை செய்துவிடுவதாகவும் அவர்கள் மிரட்டியதாக போலீசார் தெரிவித்தனர்.
அனாமிகா தனது கணவரிடமிருந்து பிரிந்து தனது காதலனுடன் அவரது ஹோட்டலில் வசித்து வந்தார். அதே நேரத்தில் அவரது மகள் தனது தந்தையுடன் வசித்து வந்தார்.
- வயல்வெளிக்கு சிறுமியை கொண்டு சென்று அவர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர்.
- சிறுவன் கூர்நோக்கு இல்லத்திற்கும், மீதமுள்ள 8 பேரையும் நீதிமன்றக் காவலில் சிறைக்கும் அனுப்பப்பட்டுள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் ஜலாவர் நகரில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு, திருமண நிகழ்வுக்குச் சென்ற 11 ஆம் வகுப்பு மாணவி ஒருவரை 9 பேர் அடங்கிய கும்பல் கடத்தியது. அருகிலிருந்த வயல்வெளிக்கு சிறுமியை கொண்டு சென்று அவர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர்.
அடுத்த நாள் பெற்றோருக்கு உண்மை தெரியவந்தது. இருப்பினும் மாணவிக்கு வியாழக்கிழமை தேர்வு நடைபெறவிருந்ததால், தேர்வு நேரத்தில் காவல் நிலையத்தில் புகார் அளித்தால், கல்வி பாதிக்கப்படும் என்று கருதிய மாணவியின் பெற்றோர், அவரை தேர்வெழுத வைத்துள்ளனர்.
தொடர்ந்து வெள்ளிக்கிழமை காவல்நிலையத்தில் மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர். இதனையடுத்து, வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், மாணவியிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் குற்றவாளிகள் அதே ஊரைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்த நிலையில் போலீசார் அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற உத்தரவின் பேரில், குற்றத்தில் ஈடுபட்ட ஒரு சிறுவன் கூர்நோக்கு இல்லத்திற்கும், மீதமுள்ள 8 பேரையும் நீதிமன்றக் காவலில் சிறைக்கும் அனுப்பப்பட்டுள்ளனர்.
- ஆணின் கண்முன்னே அவரது வருங்கால மனைவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.
- அவருக்கு மருத்துவ பரிசோதனை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் காஸ்கஞ்சில் வருங்கால கணவர் கண்முன் இளம்பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த எட்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பெண்ணும் அவருக்கு நிச்சயக்கப்பட்ட ஆணும், கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி பிற்பகல் 2:30 மணியளவில், ஒரு கால்வாயின் அருகே சாலையோரத்தில் அமர்ந்திருந்தபோது இந்த சம்பவம் நடந்தது.
அவர்கள் தனியாக இருப்பதைக் கண்டதும், ஒரு கும்பல் வந்து, அந்த நபரையும் பெண்ணையும் ஒரு தனிமையான இடத்துக்கு பிணை கைதிகளாக பிடித்துச் சென்று ஆணின் கண்முன்னே அவரது வருங்கால மனைவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசார் தெரிவித்தனர். குற்றவாளிகள் அந்த நபரிடமிருந்து பணத்தையும் பறித்துச் சென்றனர்.
பல ஆண்கள் தன்னை ஒரு தனிமைப்படுத்தப்பட்ட இடத்திற்கு அழைத்துச் சென்று ஒவ்வொருவராக வன்கொடுமை செய்ததாக பாதிக்கப்பட்ட பெண் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
அவருக்கு பரிசோதனை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றாவளிகள் 8 பேரையும் அடையாளம் கண்டு தற்போது கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
- தொடர்ந்து மறுநாள் 3 பேர் ஓட்டலுக்கு வந்து அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
- பின்னர் வேறு சிலர் அந்த பெண்ணுக்கு போதைப்பொருள் கலந்த நூடுல்சை கொடுத்துள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலம் வடக்கு வாரணாசியில் உள்ள லால்பூர் பகுதியை சேர்ந்த 19 வயது இளம் பெண் ஒருவர் கடந்த மாதம் 29-ந் தேதி தனது தோழியை பார்க்க செல்வதாக கூறிவிட்டு வெளியே சென்றுள்ளார்.
அதன் பிறகு அவர் வீடு திரும்ப வில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் பல இடங்களில் தேடிப்பார்த்தும் இளம்பெண் கிடைக்கவில்லை. இதுகுறித்து கடந்த 4-ந் தேதி போலீசில் புகார் செய்தனர். இந்நிலையில் அன்றைய தினம் அந்த இளம்பெண் பாண்டேபூர் பகுதியில் போதையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
பின்னர் அவர் வீட்டுக்கு சென்ற நிலையில் தனக்கு நேர்ந்த கொடூரம் குறித்து பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். அவர் சம்பவத்தன்று தனது தோழியை பார்க்க சென்ற போது தமக்கு அறிமுகமான நண்பர் ஒருவரை சந்தித்துள்ளார். அவர் அந்த பெண்ணை மோட்டார்சைக்கிளில் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
பின்னர் அவரை நடேசர் பகுதியில் விட்டு சென்றுள்ளார். அங்கு 5 பேர் கொண்ட கும்பல் அந்த பெண்ணை ஒரு ஓட்டலுக்கு அழைத்து சென்று போதைப்பொருள் கொடுத்து கூட்டுபலாத்காரம் செய்துள்ளனர்.
தொடர்ந்து மறுநாள் 3 பேர் ஓட்டலுக்கு வந்து அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர் வேறு சிலர் அந்த பெண்ணுக்கு போதைப்பொருள் கலந்த நூடுல்சை கொடுத்துள்ளனர். இதில் அவர் மயங்கியதும் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு அப்பகுதியில் உள்ள காட்டில் விட்டு சென்றுள்ளனர்.
மறுநாள் போதை தெளிந்து அந்த பெண் தனது தோழி வீட்டுக்கு சென்றுள்ளார். போதைப்பொருள் தாக்கத்தால் தூங்கிய அவர் மறுநாள் தான் வீட்டுக்கு சென்று, தன்னை 7 நாட்களில் 23 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறி அழுதுள்ளார். இதைக்கேட்டு அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
அவர்கள் இதுகுறித்து போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். கூட்டு பாலியல் வன்கொடுயைில் ஈடுபட்டவர்களில் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சம்பவத்தில் தொடர்புடைய மேலும் சிலர் 18 வயதுக்கும் குறைவானவர்கள் என கூறப்படுகிறது. அவர்களை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
- ரெயிலில் பயணித்துக்கொண்டிருந்த பெண்ணுடன் பேச்சுக்கொடுத்து, வேலை வாங்கித் தருவதாகக் கூறியுள்ளனர்.
- பின்னர் அவருக்கு ரூ.100 கொடுத்து அந்த இடத்தை விட்டு அனுப்பி வைத்துள்ளனர்.
பீகாரில் வேலை வாங்கித் தருவதாக கூறி 18 வயது பெண்ணை 8 பேர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அந்தப் பெண்ணின் வாக்குமூலத்தின்படி, பீகார் மாநிலம் லக்கிசராய் மாவட்டத்தில் கடந்த வியாழக்கிழமை குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் ரெயிலில் பயணித்துக்கொண்டிருந்த பெண்ணுடன் பேச்சுக்கொடுத்து, வேலை வாங்கித் தருவதாகக் கூறி கியூல் ரெயில் நிலையத்தில் இறங்கும்படி வற்புறுத்தினார்.
அதை நம்பி அவர் இறங்கியபோது, குற்றம் சாட்டப்பட்டவர் தனது நண்பர்களை அழைத்துள்ளார். அப்பெண்ணை ஒரு தனிமைப்படுத்தப்பட்ட இடத்திற்கு அழைத்துச் சென்று அவர்கள், கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர் அவருக்கு ரூ.100 கொடுத்து அந்த இடத்தை விட்டு அனுப்பி வைத்துள்ளனர்.
அங்கிருந்து வெளியேறிய அந்த பெண் காவல் நிலையத்திற்குச் சென்று எட்டு பேர் மீது புகார் அளித்தார். அந்தப் பெண்ணை மருத்துவமனையில் சேர்த்த போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் நேற்று குற்றவாளிகளில் ஆறு பேரை போலீசார் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்டவர்களில் இருவர் இன்னும் தலைமறைவாக உள்ளனர். அவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சாமி தரிசனத்திற்குப் பிறகு, அவர்கள் கோயிலிலேயே தங்க முடிவு செய்தனர்.
- அவரை பிடித்து புதர்களுக்குள் இழுத்துச் சென்றனர்.
தெலுங்கானாவில் கோவிலுக்கு சாமி கும்பிட சென்ற பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாகர்னூல் மாவட்டத்தில் உர்கொண்டபேட்டாவில் உள்ள ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமி கோயிலுக்கு சாமி தரிசனம் செய்யச் சென்ற 30 வயது பெண் அடையாளம் தெரியாத நபர்களால் நேற்று நள்ளிரவில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.
நேற்று இரவு அந்தப் பெண் தனது உறவினருடன் கோயிலுக்கு தரிசனம் செய்யச் சென்றார். தரிசனத்திற்குப் பிறகு, அவர்கள் கோயிலிலேயே தங்க முடிவு செய்தனர்.
நள்ளிரவில், அந்தப் பெண் கோயிலுக்கு அருகிலுள்ள புதர்களுக்கு இயற்கை உபாதை கழிக்க சென்றபோது, குற்றம் சாட்டப்பட்டவர்கள் அவரை பிடித்து புதர்களுக்குள் இழுத்துச் சென்றனர். சத்தம் கேட்டு உறவினர் அவளைக் காப்பாற்ற முயன்றபோது, அவர் தாக்கப்பட்டு ஒரு மரத்தில் கட்டப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பின்னர், அந்த நபர்கள் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். சம்பவத்திற்குப் பிறகு, உர்கொண்டா போலீசார் விசாரணையைத் தொடங்கி ஆறு பேரைக் கைது செய்தனர்.
இந்த சம்பவத்தில் எட்டு பேர் ஈடுபட்டதாகவும், இருவர் தலைமறைவாகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
- அவரை நோட்டமிட்டு வந்த 5 பேர் மர்ம நபர்களிடம் அதிகாலை 5 மணியளவில் பெண் தனியாக ஒரு இடத்தில் சிக்கியுள்ளார்.
- பெண்ணை துரத்தி வந்த அந்த ஐவருள் ஒருவன் கபாப் உணவகத்தில் நுழைந்து பெண்ணின் பின்னால் தட்டிவிட்டு உணவு ஆர்டர் செய்துளான்.
பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸ் -இல் நாளை மறுநாள் [ஜூலை 26] முதல் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் தொடங்க உள்ளது. இந்த நிலையில் பாரிஸ் நகரில் 25 வயதான ஆஸ்திரேலியப் பெண் 5 நபர்களால் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வன்கொடுமைக்கு ஆளான அந்த பெண் ஐவரிடம் இருந்து தப்பித்து உணவகம் ஒன்றில் நுழைந்து அங்கிருந்தவர்களிடம் உதவி கேட்கும் அதிர்ச்சி வீடியோவும் வெளியாகியுள்ளது.
காயங்களுடன் தனது உடையை தலைகீழாக அணிந்து அலங்கோலமாக அந்த பெண் உணவகத்தில் நுழைந்து அங்குள்ளவர்களிடம் தன்னை காப்பற்றும்படி மன்றாடுவது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. கடந்த ஜூலை 19 இரவு அந்த ஆஸ்திரேலிய பெண் பாரிஸ் நகரின் பிரபலமான பகுதியான மவுலின் ரோஜ் [Moulin Rouge] பகுதியில் உள்ள பார்கள் மற்றும் கிளப்களில் சுற்றித் திரிந்துள்ளார்.
அவரை நோட்டமிட்டு வந்த 5 பேர் மர்ம நபர்களிடம் அதிகாலை 5 மணியளவில் பெண் தனியாக ஒரு இடத்தில் சிக்கியுள்ளார். அங்கு வைத்து அவர்கள் ஐவரும் பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அவர்களிடமிருந்து தப்பித்து அருகில் ஒருந்த கபாப் உணவகத்தில் தஞ்சமடைந்த அந்த பெண் தனது நிலைமையை அங்கிருந்த ஊழியர்களிடம் எடுத்துக்கூற முயன்றார்.
ஆனால் அப்பெண்ணை துரத்தி வந்த அந்த ஐவருள் ஒருவன் கபாப் உணவகத்தில் நுழைந்து பெண்ணின் பின்னால் தட்டிவிட்டு உணவு ஆர்டர் செய்துளான்.நிலவரத்தை அறிந்து கடை ஊழியர் அவனை நெருங்குவதற்கு முன் அவன் அங்கிருந்து வெளியேறியுள்ளான்.
இதைத்தொடர்ந்து போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டது. மேலும் அந்த பெண் சிகிச்சைக்கான மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். வன்புணர்வால் ஏற்பட்ட அதிர்ச்சியினால் அந்த பெண் இன்னும் குழப்ப நிலையிலேயே இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் அந்த ஐவரும் ஆபிரகிரர்களைப் போல் இருந்ததாக அந்த பெண் தெரிவித்துள்ளார். பாரிஸ் நகரில் ஒலிம்பிக் போட்டிகளுக்காக உலகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கானோர் வரத் தொடங்கியுள்ள நிலையில் இந்த சம்பவம் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.






