என் மலர்

    நீங்கள் தேடியது "ambulance"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தன்னார்வலர்கள் உதவியுடன் ரூ.8 லட்சம் மதிப்பில் ஆம்புலன்ஸ் வாகனம் வாங்கப்பட்டுள்ளது.
    • மருத்துவமனைக்கு பல்லடம்,திருப்பூர்,கோவை பகுதிக்கு செல்வோரிடம் குறைந்த கட்டணம் வசூலிக்கப்படும்.

    பல்லடம்:

    பல்லடம் வட்டாரம் கரடிவாவி ஊராட்சியில் வசிக்கும் பொதுமக்களுக்கு 10 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பல்லடம்,அல்லது சூலூர் பகுதிகளில் இருந்து தான் ஆம்புலன்ஸ் வாகனம் வந்து சேர வேண்டும். இதனால் அவசர மருத்துவ சிகிச்சைக்கு பொது மக்கள் கடும் சிரமப்பட்டு வந்தனர்.

    இதனை போக்கும் வகையில் ஊராட்சி மன்றத் தலைவர் ரஞ்சிதா பகவதி கிருஷ்ணன் ஏற்பாட்டின் பேரில் தன்னார்வலர்கள் உதவியுடன் ரூ.8 லட்சம் மதிப்பிலான ஆம்புலன்ஸ் வாகனம் வாங்கப்பட்டுள்ளது. இது குறித்து கரடிவாவி ஊராட்சி மன்ற தலைவர் ரஞ்சிதா பகவதிகிருஷ்ணன் கூறியதாவது :-

    கரடிவாவி ஊராட்சிபகுதியில் பொது மக்கள் அவசர மருத்துவ சிகிச்சைக்கு செல்வதற்கு பல்லடம்,அல்லது சூலூர் பகுதிகளில் இருந்து தான் ஆம்புலன்ஸ் வாகனம் வந்து சேர வேண்டும்.இதனால் உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு செல்லமுடியாமல் பொது மக்கள் அவதிப்பட்டு வந்தனர்.மக்கள் சிரமத்தை போக்குவதற்காக தன்னார்வலர்கள் உதவியுடன் ரூ.8 லட்சம் மதிப்பில் ஆம்புலன்ஸ் வாகனம் வாங்கப்பட்டுள்ளது.

    ஆம்புலன்ஸ் வாகனத்தின் உதவியுடன் கரடிவாவி மற்றும் அருகே உள்ள ஊராட்சிகளில் வசிக்கும் மக்களுக்கு ஆம்புலன்ஸ் சேவை அளிக்கப்படும். சாலை விபத்தில் காயம் அடைபவர்கள் மற்றும் பிரசவத்திற்கு மருத்துவமனைக்கு செல்வோருக்கு எந்தவிதமான கட்டணமும் வசூலிக்கப்படமாட்டாது. அதே சமயம் கரடிவாவியில் இருந்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைக்கு பல்லடம்,திருப்பூர்,கோவை பகுதிக்கு செல்வோரிடம் தூரத்திற்கு ஏற்ப குறைந்த கட்டணம் வசூலிக்கப்படும்.

    இது லாபம் நோக்கம் இல்லாத முற்றிலும் மக்கள் சேவை பணியாகும். இதனை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். 9171080108 என்ற செல்போன் எண்ணிற்கு 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம். விரைவில் அமரர் ஊர்தி சேவை தொடங்கப்படவுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • விருத்தாசலம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    • அறக்கட்டளை ஒன்றை விருத்தாசலத்தில் நடத்தி வருகிறார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஹவுசிங்போர்டை சேர்ந்தவர் புகழேந்தி. இவர் மணவாளநல்லூரை சேர்ந்த முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ.தியாகராஜன் மகனும், தி.மு.க பிரமுகருமான இளையராஜாவை கடந்த 8-ந்தேதி 6 பேர் கொண்ட கும்பல் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ய முயன்றனர். அவர்களை விருத்தாசலம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

    இந்த கொலை முயற்சி வழக்கில் புகழேந்தியும் உள்ளார். புகழேந்தி இந்த வழக்கில் முக்கிய குற்றவாலியான ஆடலரசு தம்பி ஆவார். இவர் அறக்கட்டளை ஒன்றை விருத்தாசலத்தில் நடத்தி வருகிறார். அந்த அறக்கட்டளைக்கு கடந்த 2 மாதத்திற்கு முன்பு ஆம்புலன்ஸ் ஒன்றை வாங்கி புகழேந்தி வீட்டின் முன்புறம் நிறுத்தியிருந்தார். இந்நிலையில் நேற்று இரவு மர்ம கும்பல் ஒன்று புகழேந்தி வீட்டிற்கு வந்தது. அப்போது அந்த கும்பல் வீட்டின் முன்பு இருந்த ஆம்புலன்சை கல்லால் தாக்கி கண்ணாடியை உடைத்து விட்டு அங்கிருந்து சென்றனர். இன்று காலை வீட்டில் இருந்தவர்கள் வெளியே வந்து பார்த்தபோது ஆம்புலன்ஸ் கண்ணாடி உடைக்கப்பட்டு இருந்தது. இந்த சம்பவம் குறித்து விருத்தாசலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கணபதி முன்னீர்பள்ளத்திற்கு மொபட்டில் சென்றார்.
    • ஆம்புலன்சு மோதியதில் தூக்கி வீசப்பட்ட கணபதிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த தருவை பாலாஜி நகரை சேர்ந்தவர் கணபதி(வயது 75). இவர் நேற்று தருவையை அடுத்த முன்னீர்பள்ளத்திற்கு மொபட்டில் சென்றார். பின்னர் மேலமுன்னீர்பள்ளம் அருகே ஒரு பெட்ரோல் பங்க் அருகே வந்த போது மொபட்டில் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக நெல்லையை நோக்கி வந்த அரசு மகப்பேறு நல ஆம்புலன்சு கணபதி மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கணபதிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    உடனே அவரை நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாலை கணபதி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆம்புலன்சில் நோயாளியை ஏற்றி சென்ற போது முன்னே சென்ற லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டு 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
    • அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    காஞ்சிபுரம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்துள்ள பெரும்புலிபாக்கம் பகுதியில் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது.

    இதில் சென்னையில் இருந்து பெங்களூர் நோக்கி சென்ற தனியார் ஆம்புலன்சில் நோயாளியை ஏற்றி சென்ற போது முன்னே சென்ற லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டு 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதை அடுத்து மற்றொரு ஆம்புலன்ஸ் மூலமாக இவர்கள் பெங்களூர் அனுப்பப்பட்ட நிலையில் விபத்தான ஆம்புலன்சை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்ட போது திடீரென ஆம்புலன்ஸ் முன் பகுதி வெடித்து சிதறி ஆம்புலன்ஸ் முழுவதும் தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதனை அடுத்து காஞ்சிபுரம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு தீயை அனைத்து ஆம்புலன்சை சாலை ஓரம் அப்புறப்படுத்தினர். இதனால் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • காசநோயால் பாதிக்கப்பட்ட 23 வயது வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
    • மரக்கட்டிலில் வாலிபர் உடலை கட்டினர்.

    மும்பை

    மகாராஷ்டிரா மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள குருஷ்னர் கிராமத்தை சேர்ந்த 23 வயது வாலிபர் காசநோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு ஹேமல்காசா பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சமீபத்தில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    நகர்பகுதியில் இருந்து தொலைவில் உள்ள கிராமத்துக்கு வாலிபரின் உடலை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வசதி எதுவும் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. எனவே குடும்பத்தினர் வாலிபரின் உடலை மோட்டார் சைக்கிள் மூலம் கொண்டு செல்ல முடிவு செய்தனர். அவர்கள் மரக்கட்டிலில் வாலிபர் உடலை கட்டினர். பின்னர் அவர்கள் அதை மோட்டார் சைக்கிளின் பின்புறம் வைத்து சொந்த ஊருக்கு எடுத்து சென்றனர்.

    ஆம்புலன்ஸ் கிடைக்காததால் வாலிபரின் உடல் மோட்டார் சைக்கிளில் எடுத்து செல்லப்பட்ட அவல காட்சிகள் சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.

    இந்தநிலையில் உடலை எடுத்து செல்ல வாலிபரின் குடும்பத்தினர் நகராட்சி நிர்வாகம் அல்லது சுகாதாரத்துறையை தொடர்பு கொள்ளவில்லை என கட்சிரோலி மாவட்ட சுகாதார துறை அதிகாரி ஒருவர் விளக்கம் அளித்து உள்ளார்.

    இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:-

    தனியார் ஆஸ்பத்திரியில் இருந்து மோட்டார் சைக்கிளில் உடல் எடுத்து செல்லப்படுவதை ரோந்து பணியில் இருந்த போலீசார் கவனித்து உள்ளனர். போலீசார் இதுதொடர்பாக உடனடியாக தாலுகா சுகாதாரத்துறை அதிகாரிக்கு தகவல் கொடுத்தனர். உடனே ஆம்புலன்ஸ் அங்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆம்புலன்சில் வாலிபரின் உடல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு வழக்கமான நடைமுறைகள் முடிக்கப்பட்டது. அதன்பிறகு உடல் சுமார் 17 கி.மீ. தொலைவில் இருந்த வாலிபரின் சொந்த ஊருக்கு இறுதி சடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினாா்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆம்புலன்ஸ் மீது மந்திரியின் பாதுகாப்பு வாகனம் மோதியது.
    • இந்த விபத்தில் மூன்று பேர் காயமடைந்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவின் கொட்டாரக்கரா தாலுகா மருத்துவமனையில் இருந்து திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரிக்கு நோயாளியுடன் ஆம்புலன்ஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது.

    அப்போது கொட்டாரக்கரை புலமண் சந்திப்பில் சிக்னல் வேலை செய்யாமல் இருந்துள்ளது. இதனால் போலீசார் போக்குவரத்தை சீர்செய்து கொண்டிருந்தனர். சிக்னலில் இருந்த போலீசார் ஆம்புலன்ஸ் வேனைக் கடந்து செல்லுமாறு சைகை செய்தனர்.

    இதனால் ஆம்புலன்ஸ் டிரைவர் சாலையை கடக்க முயற்சித்தார். அப்போது அங்கு வந்த கேரள கல்வி மந்திரி சிவன்குட்டியின் பாதுகாப்பு வாகனம் சாலையை கடந்த ஆம்புலன்ஸ் வேன் மீது வேகமாக மோதியது.

    நோயாளியுடன் சென்ற ஆம்புலன்ஸ் சாலையில் உருண்டதில் ஆம்புலன்சில் இருந்த 3 பேர் படுகாயம் அடைந்தனர். உடனே அப்பகுதியினர் மற்றும் போலீசார் காயமடைந்தோரை மீட்டு கொட்டாரக்கரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

    விபத்து தொடர்பான சிசிடிவி வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தேவிக்கு பனிக்குடம் உடைந்து, குழந்தையின் தலை வெளியே வந்தது.
    • பிரசவம் பார்த்த ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

    கோவை,

    கோவை கணுவாயை சேர்ந்த கண்ணன் மனைவி தேவி (வயது28). நிறைமாத கர்ப்பிணி. இவருக்கு இன்று காலை திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. எனவே உறவினர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி ஆம்புலன்ஸ் ஊழியர்கள் விரைந்து வந்து பரிசோதனை செய்து பார்த்தனர்.

    இதில் தேவிக்கு பனிக்குடம் உடைந்து, குழந்தையின் தலை வெளியே வந்தது.

    இதையடுத்து ஆம்புலன்சு மருத்துவ நிபுணர் தமிழழகன், பைலட் சக்தி குமார் ஆகியோர், உறவினர்களின் உதவியுடன் பிரசவம் பார்த்தனர். இதில் தேவிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அதன்பிறகு தாயும், சேயும் வீரபாண்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

    கோவை மாவட்டம் கணுவாயில் இளம்பெண்ணுக்கு இக்கட்டான நேரத்தில் பிரசவம் பார்த்த ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 108 ஆம்புலன்சு வழங்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • வார்டு கவுன்சிலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    தொண்டி

    தொண்டி முதல் நிலை பேரூராட்சி மன்ற கூட்டம் பேரூராட்சி தலைவர் ஷாஜஹான் பானு ஜவஹர் அலிகான் தலைமையில் நடைபெற்றது. செயல் அலுவலர் மகாலிங்கம் முன்னிலை வகித்தார்.

    இக்கூட்டத்தில் தொண்டி பேரூராட்சிக்குட்பட்ட சின்னத் தொண்டி கிராமத்தில் பேரூராட்சிக்கு பட்டா மாறுதல் செய்யப்பட்ட இடத்தில் நில அளவை செய்து வேலி அமைப்பது கடற்கரை எதிரே நல்ல தண்ணீர் ஊற்று உள்ள முடிச்சலான் தோப்பில் உள்ள கிணற்றில் இருந்து பொதுமக்களுக்கு பாதுகாப்பான முறையில் குடிநீர் விநியோகம் செய்ய அங்கு அமைந்துள்ள 4 கிணற்றைச் சுற்றிலும் கம்பி வேலி சுற்றி இரும்பு கதவு அமைக்க வேண்டும்.

    பேரூராட்சிக்கு சொந்தமான 5 லட்சம் லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அருகே உள்ள பம்ப் ரூமிற்கு மின் இணைப்பு மற்றும் மராமத்து பணி செய்ய வேண்டும்.

    தொண்டியில் இரவு நேரங்களில் கிழக்கு கடற்கரை சாலையில் அதிக அளவு விபத்துக்கள் ஏற்படுவதாலும், கர்ப்பிணி தாய்மார்களுக்கு அவசர கால மேல் சிகிச்சைக்கு அரசு மருத்துவனை கொண்டு செல்வதற்கும், இங்கு முறையான அவசர ஊர்தி இல்லாத காரணத்தால் பொதுமக்கள் நலன் கருதி அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய புதிய அவசர ஊர்தியான 108 வாகனம் அரசு வழங்க சம்பந்தப்பட்ட துறைக்கு பரிந்துரை செய்வது, டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்கும் வகையில் புகை போக்கி எந்திரம் வாங்குதல், உயர் மின் அழுத்தம் காரணமாக பழுதடைந்த மின் விளக்குகளுக்குப் பதிலாக புதிதாக 164 மின் விளக்குகள் பொருத்துவது போன்ற தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.

    வார்டு கவுன்சிலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கடந்த மாதம் 3-ந் தேதி முதல் கலவரம் ஏற்பட்டது. கலவரத்தில் 100-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். 310 பேர் காயம் அடைந்தனர்.
    • மணிப்பூரில் தொடர்ந்து கலவரம் நடப்பதால் மேலும் 1000 வீரர்கள் அங்கு விரைந்துள்ளனர்.

    இம்பால்:

    மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினர் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்க வேண்டும் என்று கோரி வருகிறார்கள்.

    இதற்கு நாகர் மற்றும் குகி சமூகத்தார் அடங்கிய சிறுபான்மை பழங்குடியின சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.

    இது தொடர்பாக மணிப்பூரின் பல்வேறு மாவட்டங்களில் மைத்தேயி மற்றும் பழங்குடிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. கடந்த மாதம் 3-ந் தேதி முதல் கலவரம் ஏற்பட்டது. கலவரத்தில் 100-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். 310 பேர் காயம் அடைந்தனர்.

    அங்கு மீண்டும் இயல்பு நிலை திரும்ப ராணுவம் மற்றும் துணை ராணுவ படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். மணிப்பூரில் அமைதியை ஏற்படுத்தும் வகையில் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா அங்கு சென்றார். ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்தப்படும் என்று அவர் அறிவித்தார்.

    இதற்கிடையே குகி தீவிரவாதிகள் நேற்று அதிகாலை நடத்திய துப்பாக்கி சூட்டில் எல்லை பாதுகாப்பு படை வீரர் ரஞ்சித் யாதவ் கொல்லப்பட்டார். அசாம் ரைபிள்ஸ் துணை ராணுவ படையின் 2 வீரர்கள் காயம் அடைந்தனர்.

    இந்த நிலையில் மணிப்பூரில் தாய், மகன் உள்பட 3 பேர் உயிருடன் எரித்து கொல்லப்பட்டனர்.

    குண்டு காயம் அடைந்த 8 வயது பழங்குடியின சிறுவன், அவரது தாயார் மற்றும் இன்னொரு உறவினர் ஆகிய 3 பேர் ஆம்புலன்சில் சென்று கொண்டு இருந்தனர். போலீஸ் பாதுகாப்புடன் தான் அந்த ஆம்புலன்ஸ் சென்றது. மேற்கு இம்பால் நோக்கி ஆம்புலன்ஸ் சென்றது.

    மிகப்பெரிய கும்பல் ஆம்புலன்சை வழி மறித்து அவர்களை யார் என்று விசாரித்த அந்த கும்பல் ஆம்புலன்சோடு தீ வைத்தது. இதில் 3 பேரும் உடல் கருகி பரிதாபமாக இறந்தனர்.

    மணிப்பூரில் தொடர்ந்து கலவரம் நடப்பதால் மேலும் 1000 வீரர்கள் அங்கு விரைந்துள்ளனர். எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த 1000 வீரர்கள் விமானம் மூலம் அங்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.

    மணிப்பூரில் இதுவரை 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மத்திய ஆயுதம் தாங்கிய போலீசார் மற்றும் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அரை மணி நேரத்திற்கு மேலாகியும் ஆம்புலன்ஸ் வராததால், கமல்நாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழ்ந்தார்.
    • அங்கிருந்த போலீசார் இறந்த உடலை ஆட்டோவில் ஏற்ற மறுப்பு தெரிவித்தனர்.

    காரைக்கால்:

    காரைக்கால் சேத்திலால் நகரைச்சேர்ந்தவர் கமல்நாதன்(வயது20). இவர் காரைக்கால் திருநள்ளாறை அடுத்த செருமாவிளங்கை பகுதியில் இயங்கிவரும் காமராஜர் அரசு பொறியியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    நேற்று, வழக்கம் போல் நண்பர் சுடரொளியுடன்(20) மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார். திருநள்ளாறு சாலை ஓ.ன்.ஜி.சி குடியிருப்பு அருகே சென்றபோது, காரைக்காலிலிருந்து வந்த சரக்கு லாரி, மோட்டார் சைக்கிள் பக்க வாட்டில் மோதியது. இதில், லாரியின் பின் சக்ரத்தில் கமல்நாதன் சரிந்துவிழுந்து, தலை நசுங்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அதே போல், நண்பர் சுடரொளி இடுப்பு, கால்களில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

    இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் 108 ஆம்புலன்ஸ் மற்றும் காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால், அரை மணி நேரத்திற்கு மேலாகியும் ஆம்புலன்ஸ் வராததால், கமல்நாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழ்ந்தார். பின்னர் வந்த ஆம்புலன்சில் உயிருக்கு போராடிய மாணவர் சுlரொளியை ஏற்றி காரைக்கால் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதனால் ஆத்திரம் அடைந்த சக மாணவர்கள், அங்கு வந்த ஆட்டோவில் கமல்நாதன் உடலை ஏற்ற முயற்சித்தபோது, அங்கிருந்த போலீசார் இறந்த உடலை ஆட்டோவில் ஏற்ற மறுப்பு தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் வராததற்கு கண்டனம் தெரிவித்து மாணவர்கள் சாலையில் அமர்ந்து கோஷங்கள் எழுப்பினர். பின்னர், இறந்த மாணவர் உடலை சக மாணவர்கள் தங்கள் தோள்களில் சுமந்தவாறு காரைக்கால் அரசு ஆஸ்பத்திரி நோக்கி நடந்து சென்றனர். சிறிது தூரம் சென்றதும், அங்கு வந்த ஆம்புலன்சில் இறந்த மாணவன் உடலை ஏற்றி காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுசென்றனர்.

    தொடர்ந்து, ஆம்புலன்ஸ் வர கால தாமதமானதை கண்டித்து சக மாணவர்கள், உறவினர்கள், காரைக்கால் மாவட்ட கலெக்டர் அலுவலக வாயிலில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த துணை கலெக்டர் ஜான்சன், ஆம்புலன்ஸ் காலதாமதமாக வந்தது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என கூறியதையடுத்து, மாணவர்கள் கலைந்து சென்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo