என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Edappadi Palaniswami அதிமுக"

    • 2026 தேர்தலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படை மீண்டும் ஆட்சி அமைப்போம்.
    • சர்வாதிகாரி பற்றியெல்லாம் பாடம் எடுக்க பழனிசாமிக்கு அருகதை இருக்கிறதா?

    வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உலக சர்வாதிகாரிகள் அத்தனை பேரின் டி.என்.ஏ-வாக இருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஹிட்லர், முசோலினி, நீரோ போன்றவர்களை எல்லாம் திமுக ஆட்சியின் மீது அடைமொழியாகக் காட்டுவது அரசியல் அவலம். வரலாறு தெரிந்தால் பேசுங்கள் பழனிசாமி அவர்களே! இல்லையென்றால் வழக்கம் போல அடிமைத்தனம் என்ற விசுவாசத்தை மட்டுமே மோடிக்குக் காட்டிக் கொண்டிருங்கள். ஜெர்மனியின் சர்வாதிகாரியான ஹிட்லரை இரண்டாம் உலகப்போரின் இறுதியில் வீழ்த்தியது ஸ்டாலினின் செம்படைதான். இந்தச் சட்டமன்றத் தேர்தலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படை மீண்டும் ஆட்சி அமைத்து, உங்களின் எதிர்கட்சி என்ற அந்தஸ்தையும் வீழ்த்தும். எதிர்க் கட்சித் தலைவர் பதவியையும் பறிகொடுத்துவிட்டு நிற்கப் போகிறீர்கள்!

    தமிழ்நாட்டில் திமுக கூட்டணிதான் வெற்றி பெறும் என்றும் தமிழ்நாட்டில் பெண்களின் பெரும்பான்மையான ஆதரவு திமுகவிற்குத்தான் உள்ளது என்றும் முன்னணி ஊடகங்களில் கருத்துக் கணிப்புகள் வெளியாகி, தமிழ்நாட்டு மக்களின் உணர்வைப் பிரதிபலித்துக் கொண்டிருப்பதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், வெற்றி கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, அவதூறுகளையாவது அள்ளித் தெளிப்போம் என சூனா பானாவாக கிளம்பிவிட்டார் பழனிசாமி!

    மீண்டும் திமுக ஆட்சியைப் பிடிக்கும் என்ற கருத்துக்கணிப்புகளால் விரக்தியில் என்ன செய்வது என்று தெரியாமல் அறிக்கை என்ற பெயரில் கிறுக்கித் தள்ளியிருக்கிறார் பழனிசாமி.

    டெல்லியில் சதித்திட்டம் தீட்டி சர்வாதிகார எண்ணத்தோடு தமிழ்நாட்டின் மீது ஏவப்படும் எந்த ஆதிக்கத்தையும் வெற்றியடைய விடமாட்டோம். எந்தக் கொம்பனாலும், தமிழ்நாட்டைத் தலைதாழ்த்தி விட முடியாது என்பதில் உறுதியாகப் போரடிக் கொண்டிருப்பது திராவிட மாடல் அரசும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரும்தான். ஒன்றிய பாஜக அரசு தமிழ்நாட்டுக்குச் செய்யும் அநீதிகளுக்கும் அவர்களது தமிழ்ப் பகை நடவடிக்கைகளுக்கும் எதிராக 'தமிழ்நாட்டைத் தலைகுனியவிட மாட்டேன்'என்று சொன்னால் பழனிசாமிக்கு ஏன் எரிகிறது?

    டெல்லி ஓனர்களுக்கு அடிமையாக வாழ்வதிலே தனக்கு நிகராக யாரும் வந்துவிடக் கூடாது எனப் போட்டி போட்டுக்கொண்டிருக்கும் வாழ்நாள் அடிமை பழனிசாமி, சரித்திரப் புத்தகங்கள், சர்வாதிகாரிகள் என்றெல்லாம் நகைச்சுவை செய்துகொண்டிருக்கிறார். ஜனநாயகத்தைச் சீரழித்து இந்த நாட்டையே சர்வாதிகார ஆட்சியாக்கிவிடும் நோக்கத்தோடு நாளும் பொழுதும் ஆதிக்கத் திட்டங்களைச் செயல்படுத்துக் கொண்டிருக்கிறது ஒன்றிய பாஜக அரசு. மோடி என்ற சர்வாதிகாரியைப் போற்றிக் கொண்டிருக்கும் பழனிசாமி, சர்வாதிகாரி பற்றியெல்லாம் பாடம் எடுக்க அருகதை இருக்கிறதா?

    ஒன்றிய அரசின் காலில் விழுந்து, கைகோத்து தமிழ்நாட்டிற்குத் துரோகம் செய்கின்ற பழனிசாமிக்கு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரைக் குறைகூற எந்த அருகதையும் இல்லை. பொள்ளாச்சி சம்பவத்தை வேடிக்கை பார்த்துவிட்டு இப்பொழுது பெண்கள் பாதுகாப்பு பற்றிப் பேச தகுதியும் இல்லை. பழனிசாமியின் படுபாதக ஆட்சியில் தமிழ்நாட்டுப் பெண்கள் எப்படிப் பட்ட சூழ்நிலையில் வாழ்ந்தார்கள்? என்பதற்கு பொள்ளாச்சியே உதாரணம். தமிழ்நாட்டு மக்கள் அந்த அவலங்களை மறந்திருப்பார்கள் என்று நினைத்து பொய்களை அள்ளிவிட்டுக் கொண்டிருக்கிறார்.

    தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சியில்தான் போதைப் பொருள்களைத் தடுக்க வரலாற்றில் இல்லாத அளவுக்குக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. போதைப் பொருள் கடத்தல், விற்பனையில் ஈடுபடுபவர்கள் அதிரடியாகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்றனர். கைது செய்யப்பட்டவர்களை விசாரித்தால் பின்னணியில் இயங்கும் போதைப் பொருள் மாஃபியாக்கள் பற்றிய தகவல்கள் கிடைக்கின்றன. இந்த மாஃபியாக்களோடு தொடர்பில் இருப்பவர்களாக அதிமுக நிர்வாகிகள் இருக்கின்றனர். நடிகர்களுக்குப் போதைப் பொருள் விநியோகம் செய்த பிரசாத் என்பவருக்கு அதிமுக ஐடி விங் பொறுப்பு கொடுத்து அழகு பார்த்துவிட்டு, செய்தி வெளியில் தெரிந்ததும் அவசர அவசரமாக அவரைப் பொறுப்பிலிருந்து நீக்கிய உத்தமர்தான் பழனிசாமி.

    ஏய்ப்பவருக்கே காலம் என்று எண்ணிவிடாதே என எம்.ஜி.ஆரின் பாடலை மேற்கோள் காட்டும் பழனிசாமிக்கு, அதே எம்.ஜி.ஆர் பாடிய அடிமையின் உடம்பில் ரத்தம் எதற்கு? தினம் அச்சப்பட்ட கோழைக்கு இல்லம் எதற்கு? என்ற பாடல் ஏன் நினைவுக்கு வரவில்லை. தமிழ்நாட்டில் திராவிட மாடல் 2.0 ஆட்சிதான் மீண்டும் அமையப் போகிறது. தமிழ்நாட்டில் இனி ஒரு நாளும் பாஜகவின் அடிமை ஆட்சி அமையப் போவதில்லை, பழனிசாமியின் அரசியல் அத்தியாயத்திற்கு 2026 தேர்தலோடு முடிவுரை எழுதப்படப் போகிறது என்கிற உண்மைகள் சுடுவதால் விரக்தியில் பழனிசாமி உதிர்த்து வரும் உளரல்கள் உண்மையாகிவிடாது" என்று தெரிவித்தார்.

    • திருச்சி மாவட்டம் துறையூரில் நேற்று எடப்பாடி பழனிச்சாமி பிரசாரம் மேற்கொண்டார்.
    • அதிமுக கூட்டத்தின் வழியாக ஆம்புலன்ஸ் செல்ல முயன்றது.

    2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 'மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்ற தலைப்பில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொண்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    அதன்படி, திருச்சி மாவட்டம் துறையூரில் நேற்று எடப்பாடி பழனிச்சாமி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அக்கூட்டத்தின் வழியாக ஆம்புலன்ஸ் செல்ல முயன்றது. ஆம்புலன்ஸை சுற்றுவளைத்த அதிமுகவினர் அதற்குள் ஏறி சென்று நோயாளி இருக்கிறாரா எனவும் அதிமுகவினர் பரிசோதித்தனர். ஆம்புலன்சில் நோயாளி இல்லை என்பதால் ஆம்புலன்ஸ் ஓட்டுனரை தாக்கியதாக கூறப்படுகிறது.

    அதிமுக தொண்டர்கள் தாக்கியதால் காயமடைந்த ஆம்புலன்ஸ் ஓட்டுனர் துறையூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காயமடைந்த ஓட்டுனரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    • கம்யூனிஸ்ட் கட்சிகளின் கொள்கைகள் காற்றோடு காற்றாக பறந்துவிட்டது.
    • இன்றைக்கு இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சி மக்களுக்காக போராட்டம் நடத்தவில்லை

    எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி 'மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்ற சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.

    தற்போது தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி இன்று ராஜபாளையத்தில் பிரசாரம் மேற்கொண்டார்.

    அப்போது மக்களிடம் உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி, "உங்களுக்கு (திமுக) கூட்டணி வலிமையாக இருக்கலாம், ஆனால் எங்களுக்கு மக்கள் வலிமையாக இருக்கிறார்கள்; ஒவ்வொரு தேர்தலிலும் வெற்றி, தோல்வியை நிர்ணயம் செய்வது மக்கள்தான். அந்த மக்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள்.

    கம்யூனிஸ்ட் கட்சிகளின் கொள்கைகள் காற்றோடு காற்றாக பறந்துவிட்டது. மக்களிடத்தில் நீங்கள் செல்வாக்கை இழந்து விட்டீர்கள். தேர்தல் நேரத்தில் உங்களது கட்சி அடையாளம் தெரியாமல் போய்விடும். இன்றைக்கு இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சி மக்களுக்காக போராட்டம் நடத்தவில்லை

    50 மாதத்தில் ஒரு முறையாவது திமுகவை எதிர்த்து கம்யூனிஸ்டு கட்சிகள் அறிக்கை விட்டிருக்கிறதா? ஆணவக் கொலை பற்றி பேச திமுக கூட்டணி தலைவர்கள் முதல்வரிடம் அனுமதி கேட்கிறார்கள்" என்று தெரிவித்தார்.

    • மக்கள் பிரச்சினைகள் குறித்து கம்யூனிஸ்டு கட்சிகள் ஏன் போராட்டம் நடத்தவில்லை என இபிஎஸ் விமர்சனம்
    • மக்கள் மன்றத்தில் சாம்பியன்கள் என்றென்றும் கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள்தான் என்று சண்முகம் பதில்

    எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி 'மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்ற சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.

    நேற்று தென்காசியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி அங்கிருந்த பொதுமக்களிடம் உரையாற்றினார்.

    பின்னர் அம்பைய தொகுதியில் பிரசாரத்தின் போது பேசிய எடப்பாடி பழனிசாமி, "தமிழகத்தில் கம்யூனிஸ்டு கட்சிகள் தேடிப்பிடிக்கும் நிலையில்தான் உள்ளன. கூட்டணியில் கம்யூனிஸ்டு கட்சிகள் தி.மு.க.வுக்கு அடிமையாக இருப்பதால் ஆட்சிக்கு வக்காலத்து வாங்குகின்றனர்.

    மக்கள் பிரச்சினைகளுக்காக போராடினால் தான் மக்கள் செல்வாக்கு இருக்கும். மக்கள்தான் எஜமானர்கள். மக்கள் பிரச்சினைகள் குறித்து கம்யூனிஸ்டு கட்சிகள் ஏன் போராட்டம் நடத்தவில்லை. ஏனெனில் அடுத்தமுறை சீட் கிடைக்காது. கூட்டணியில் இருந்து கழட்டி விடுவார்கள். அந்த பயத்தில்தான் மவுனம் காக்கிறார்கள். கம்யூனிஸ்டு கட்சிகளை கொஞ்சம் கொஞ்சமாக தி.மு.க. விழுங்கிக்கொண்டு இருக்கிறது" என்று விமர்சித்தார்.

    இந்நிலையில், எடப்பாடி பழனிச்சாமியின் விமர்சனத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் பதிலடி கொடுத்துள்ளார்.

    இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், "ஈடி, ஐடி ரெய்டுக்கு பயந்துபோய் பாஜகவுடன் கூடா நட்பு கொண்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி, கம்யூனிஸ்டுகளைப் பார்த்து சீட்டுக்காக பயந்துபோய் போராடவில்லை என்று கூறும் நீங்கள் மக்களுக்கான பிரச்சினையில் எத்தனைப் போராட்டங்களை நடத்தியுள்ளீர்கள் என்ற பட்டியலை வெளியிடத் தயாரா? நாங்கள் நடத்திய போராட்டங்களின் பட்டியலை வெளியிடத் தயார். மக்கள் மன்றத்தில் சாம்பியன்கள் என்றென்றும் கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள்தான்" என்று தெரிவித்துள்ளார். 

    • வருவாய் மாவட்ட தலைநகரங்களில் உள்ள கலெக்டர் அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
    • பெரம்பலூர், கன்னியாகுமரி, சேலம், தேனி, தஞ்சாவூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தலைமையேற்போர் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    விலைவாசி உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் 20-ந்தேதி காலை 10 மணிக்கு வருவாய் மாவட்ட தலைநகரங்களில் உள்ள கலெக்டர் அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் பெரம்பலூர், கன்னியாகுமரி, சேலம், தேனி, தஞ்சாவூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தலைமையேற்போர் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர்-செம்மலை, கன்னியாகுமரி-தளவாய்சுந்தரம், சேலம்-பா.வளர்மதி, தேனி-கோகுல இந்திரா, தஞ்சாவூர்-மோகன், திருச்சி-கல்யாண சுந்தரம் ஆகியோரை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நியமித்துள்ளார்.

    ×