என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிமுக."

    • கம்யூனிஸ்ட் கட்சிகளின் கொள்கைகள் காற்றோடு காற்றாக பறந்துவிட்டது.
    • இன்றைக்கு இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சி மக்களுக்காக போராட்டம் நடத்தவில்லை

    எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி 'மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்ற சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.

    தற்போது தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி இன்று ராஜபாளையத்தில் பிரசாரம் மேற்கொண்டார்.

    அப்போது மக்களிடம் உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி, "உங்களுக்கு (திமுக) கூட்டணி வலிமையாக இருக்கலாம், ஆனால் எங்களுக்கு மக்கள் வலிமையாக இருக்கிறார்கள்; ஒவ்வொரு தேர்தலிலும் வெற்றி, தோல்வியை நிர்ணயம் செய்வது மக்கள்தான். அந்த மக்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள்.

    கம்யூனிஸ்ட் கட்சிகளின் கொள்கைகள் காற்றோடு காற்றாக பறந்துவிட்டது. மக்களிடத்தில் நீங்கள் செல்வாக்கை இழந்து விட்டீர்கள். தேர்தல் நேரத்தில் உங்களது கட்சி அடையாளம் தெரியாமல் போய்விடும். இன்றைக்கு இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சி மக்களுக்காக போராட்டம் நடத்தவில்லை

    50 மாதத்தில் ஒரு முறையாவது திமுகவை எதிர்த்து கம்யூனிஸ்டு கட்சிகள் அறிக்கை விட்டிருக்கிறதா? ஆணவக் கொலை பற்றி பேச திமுக கூட்டணி தலைவர்கள் முதல்வரிடம் அனுமதி கேட்கிறார்கள்" என்று தெரிவித்தார்.

    • நடிகர்கள் மட்டும் போதை பொருளை பயன்படுத்துவதில்லை.
    • சாமானிய மக்கள் கூட போதைப் பொருட்களை பயன்படுத்தக் கூடிய நிலைக்கு தமிழ்நாடு வந்துள்ளது.

    மதுரையில் அ.தி.மு.க. மாநில மகளிரணி துணைச் செயலாளர் நடிகை காயத்ரி ரகுராம் நிருபர்களிடம் கூறி யதாவது:-

    போதைப்பொருள் இவ்வளவு சுதந்திரமாக கிடைக்க காரணம் தி.மு.க. ஆட்சி தான். தி.மு.க.வி.ல் இருப்பவர்களே போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடுகின்றனர். காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை. போதைப் பொருள் புழக்கத்தால் பாலியல், கொலை உள்ளிட்ட குற்ற சம்பவங்களும் அதிகரித்துள்ளது.

    நடிகர்கள் மட்டும் போதைப் பொருட்களை பயன்படுத்துகிறார்கள் என்று இல்லை. மாணவர்கள் மத்தியிலும் அதிகளவில் புழக்கத்தில் உள்ளது. தி.மு.க.விலிருந்து, அ.தி.மு.க.விற்கு ஆட்களை அனுப்பி கெட்ட பெயர் வாங்க வைக்க வேண்டும் என செயல்படுகிறார்கள்.

    தமிழகத்தில் மக்கள் பிரச்சினைகள் அதிகமாக உள்ள நிலையில் நடிகர்கள் விவகாரத்தை வைத்து திசை திருப்ப முயற்சிக்கிறார்கள். முதலமைச்சர் மட்டும் தான் தன்னை ஒரு மாடல் என சொல்லிக் கொண்டிருக்கிறாரே தவிர அவர் தமிழகத்தை ஒரு மாடல் ஆக்கியதாக தெரியவில்லை.

    அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் கொண்டு வந்த திட்டங்கள் அனைத்தையும் தி.மு.க. நிறுத்தி விட்டது. 2026-ம் ஆண்டில் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் மக்கள் நலத் திட்டங்கள் மீண்டும் செயல்படுத்தப்ப டும். நடிகர்கள் மட்டும் போதை பொருளை பயன்படுத்துவதில்லை, சாமானிய மக்கள் கூட போதைப் பொருட்களை பயன்படுத்தக் கூடிய நிலைக்கு தமிழ்நாடு வந்துள்ளது.

    தமிழ்நாட்டு மக்கள் சந்திக்கக்கூடிய பிரச்சினைகளை மையப்படுத்தி எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்ள உள்ளார். தி.மு.க. மக்கள் பிரச்சினைகளை பேசுவதில்லை, தி.மு.க. மக்களின் பிரச்சினைகளை திசை திருப்பும் வேலைகளில் எல்லாம் ஈடுபட்டு வருகிறது.

    பெண்கள் வன்கொடுமைக்கு உள்ளாவதற்கு மிக முக்கிய காரணமாக டாஸ்மாக் உள்ளது. தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த முடியாது. மதுவிலக்கு அமல்படுத்தினால் கள்ளச்சாராய புழக்கம் அதிகரிக்கும். ஆனால் மது விற்பனையை கட்டுக்குள் கொண்டு வருவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்..

    • ரூ.17 கோடி மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் மகன் ராஜா கைது செய்யப்பட்டார்.
    • ராஜா மீது தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.

    ரூ.17 கோடி மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் மகன் ராஜாவை போலீசார் கைது செய்துள்ளனர். ராஜா மீது தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மோசடி வழக்கு குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் தூத்துக்குடி மாநகராட்சியின் 59-வது வார்டு கவுன்சிலராகவும் எதிர்கட்சி தலைவராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • குன்னூரில் உள்ள நகராட்சிக் கடைகளுக்கு வாடகை உயர்த்தப்படமாட்டாது என்று உறுதியளித்தார்.
    • நகராட்சிக் கடைகளுக்கு பலமடங்கு வாடகைகளை உயர்த்தியது விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசு.

    "குன்னூர் நகராட்சியில் மாநில அரசுக்கு சொந்தமான சுமார் 800 கடைகளை இடிக்கப்போவதாக நகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் வழங்கியுள்ளது. வியாபாரிகளுக்கு வழங்கிய மாற்று இடம் 1 கிலோ மீட்டர் தூரத்தில் மக்கள் நடமாட்டம் குறைவான பகுதியில் அமைந்துள்ளது. எனவே கடைகளை இடிக்கும் முடிவை உடனடியாக கைவிட்டு பழைய இடத்திலேயே வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.

    இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    2021-ல் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் பல மடங்கு வீட்டு வரி, வணிக வளாகங்களுக்கான வரி, மின் கட்டணம், குடிநீர் கட்டணம் ஆகியவற்றை உயர்த்தியதுடன், இனி ஆண்டுதோறும் 6 சதவீத வரி உயர்வை அமல்படுத்தி தமிழக மக்களையும், வியாபாரிகளையும் வஞ்சித்து வரும் விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசு, தமிழகம்

    முழுவதும் உள்ள மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்குச் சொந்தமான கடைகளின் வாடகையை பல மடங்கு உயர்த்தியுள்ளது.

    நீலகிரி மாவட்டம், குன்னூர் நகராட்சி மார்க்கெட் பகுதியில், நகராட்சிக்குச் சொந்தமாக சுமார் 800 கடைகள் உள்ளன. கடந்த 2021-ஆம் ஆண்டு தமிழ் நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலின்போது பரப்புரை செய்ய வந்த அப்போதைய எதிர்க்கட்சித்

    தலைவரும், தற்போதைய முதலமைச்சருமான திரு. ஸ்டாலின், குன்னூரில் உள்ள நகராட்சிக் கடைகளுக்கு வாடகை உயர்த்தப்படமாட்டாது என்று உறுதியளித்தார்.

    ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் எப்படி பொதுமக்களிடம் வாங்கிய புகார் பெட்டியின் சாவியை தொலைத்தாரோ, நான்காண்டுகள் முடிந்த நிலையில் சுமார் 20 சதவீத தேர்தல் வாக்குறுதிகளைக்கூட நிறைவேற்றவில்லையோ, அதுபோல் குன்னூர் வியாபாரிகளுக்கு

    அளித்த வாக்குறுதியையும் நிறைவேற்றாததோடு, 2 ஆண்டுகளுக்கு முன்பே வியாபாரிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி நகராட்சிக் கடைகளுக்கு பலமடங்கு வாடகைகளை உயர்த்தியது விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசு.

    'குதிரை கீழே தள்ளியது மட்டுமில்லாமல் குழியும் பறித்தது' என்று ஒரு பழமொழி உண்டு. அதுபோல் பல மடங்கு வாடகையை உயர்த்தியது மட்டுமல்லாமல், தற்போது குன்னூர் நகராட்சியில் உள்ள சுமார் 800 கடைகளையும் இடிக்கப்போகிறோம், எனவே உடனடியாக கடைகளை காலி செய்ய வேண்டும் என்று விடியா தி.மு.க. அரசு

    வியாபாரிகளுக்கு நோட்டீஸ் அளித்துள்ளது. நோட்டீஸ் வழங்கிய கையோடு நகராட்சி அதிகாரிகள் கடைகளை காலி செய்ய வியாபாரிகளை வற்புறுத்துகின்றனர்.

    குன்னூர் நகராட்சி வழங்கிய மாற்று இடம் ஒரு கிலோ மீட்டர் தொலைவில், மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் நடமாட்டம் இல்லாத இடத்தில். எந்தவொரு அடிப்படை வசதிகளும் செய்து தரப்படாத நிலையில், சிறிய அளவுள்ள கடைகளாக உள்ளன. வியாபாரிகள் தற்போது வணிகம் செய்து வரும் கடைகளை உடனடியாக காலி செய்துவிட்டு அங்கே செல்ல வற்புறுத்தப்பட்டு வருகின்றனர்.

    பொதுவாக நீலகிரி மாவட்டம் முழுவதும், குறிப்பாக குன்னூரில் உள்ள வியாபாரிகள் கோடை சீசன் மாதங்களான ஏப்ரல், மே, ஜூன், ஜூலை மற்றும் ஆப் சீசன் எனப்படும் அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய சீசன் மாதங்களில் மட்டுமே சுற்றுலாப் பயணிகளை நம்பி வியாபாரம் செய்து வருகின்றனர்.

    ஏற்கெனவே அரசு, போக்குவரத்து நெரிசல் அதிகமாகிறது என்று தனியார் போக்குவரத்து வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதித்த நிலையில், இந்த ஆண்டு சுற்றுலாப் பயணிகள் குறைந்த அளவே நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளனர். இதனால், வியாபாரம் பெருமளவு பாதித்த நிலையில், தற்பொழுது வியாபாரம் செய்து வரும் கடைகளும் இடிக்கப்பட உள்ளதாகவும், போதுமான கால அவகாசம் தராமல் உடனடியாக மாற்று இடங்களுக்குச் செல்ல அதிகாரிகள் வலியுறுத்துவதால், வியாபாரிகள் தங்களுடைய வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுவிடும் என்று அஞ்சுகின்றனர்.

    இதனால் 800 வியாபாரிகளின் குடும்பங்களும், அக்கடைகளில் பணிபுரியும் சுமார் 2000-க்கும் மேற்பட்ட பணியாட்களின் குடும்பங்களும் நேரடியாக பாதிக்கப்படுவதுடன், மறைமுகமாக இவர்களை நம்பி வாழ்க்கை நடத்தும் நூற்றுக்கணக்கான

    கூலித் தொழிலாளர்களின் குடும்பங்களும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

    எனவே, வியாபாரிகள் விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசின் இந்நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர். எனவே, குன்னூர் நகராட்சிக் கடைகளை இடிக்கும் முடிவை உடனடியாக கைவிட்டு, தொடர்ந்து வியாபாரிகளை பழைய இடங்களிலேயே வியாபாரம் செய்ய அனுமதிக்குமாறு விடியா தி.மு.க. ஸ்டாலின் மாடல் அரசை வலியுறுத்துகிறேன்.

    இல்லாவிடில் பாதிக்கப்பட்ட குன்னூர் வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்களை ஒன்று திரட்டி, அப்பகுதி மக்களின் ஆதரவுடன் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் முன்னெடுக்கும் என்று தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • யார் அந்த தியாகி என்று கேட்டோம்... தமிழ்நாட்டிற்கே தெரிந்த பதில் என்றாலும் மு.க.ஸ்டாலின் வாய் திறக்கவில்லை.
    • இப்போது கேட்கிறோம்- யார் அந்த தம்பி? எப்படி வந்தது இந்த தம்பிக்கு இவ்வளவு அதிகாரம்?

    அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

    2-வது நாளாக தொடரும் ED ரெய்டுகள்!

    -இன்னும் இந்த ரெய்டுகள் பற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் மவுனமாக இருப்பது ஏன்?

    -தன் குடும்பத்தைச் சார்ந்தவர் வீட்டிலும், தனக்கு நெருக்கமானவர் வீட்டிலும் நடக்கும் இந்த ரெய்டு பற்றி ஏன் பேச மறுக்கிறார்?

    -ரத்தீஷ் எங்கே இருக்கிறார்? துபாய் சென்றுவிட்டதாக வரும் செய்திகள் உண்மையா? அப்படியென்றால், ரெய்டு வருமோ என்ற அச்சத்தில் தலைமறைவானாரா ரத்தீஷ்?

    -முதல்வராலும், அவரது மகனாலும் "தம்பி" என்று அன்போடு அழைக்கப்படும் ரத்தீஷின் "Job Description" என்ன?

    யார் அந்த SIR என்று கேட்டோம்- பதில் வரவில்லை.

    யார் அந்த தியாகி என்று கேட்டோம்... தமிழ்நாட்டிற்கே தெரிந்த பதில் என்றாலும் மு.க.ஸ்டாலின் வாய் திறக்கவில்லை.

    இப்போது கேட்கிறோம்- யார் அந்த தம்பி? எப்படி வந்தது இந்த தம்பிக்கு இவ்வளவு அதிகாரம்?

    இந்த தம்பி கைதாகும் போது, தம்பியின் வசம் உள்ள திமுக-வின் குடுமி சிக்கும்! அப்போது பேசித் தானே ஆக வேண்டும்

    மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின்?

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • 2026 தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயம் ஆட்சி அமைக்கும்.
    • முதலமைச்சர் விமர்சனம் செய்ய வேண்டியது ஆ.ராசாவையும், பொன்முடியையும் தான்.

    தமிழகத்தில் வரும் 2026ம் ஆண்டில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் என்டிஏ கூட்டணியுடன் போட்டியிட உள்ளதாக நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்தார்.

    இந்நிலையில், அதிமுக- பாஜக கூட்டணி குறித்து பாஜக மாநில தலைவர் பதவிக்கு ஒருமனதாக தேர்வு செய்யப்படவுள்ள நயினார் நாகேந்திரனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    அப்போது, நயினார் நாகேந்திரன் கூறியதாவது:-

    அதிமுக- பாஜக கூட்டணி மக்களின் விருப்பம். மக்கள் யாரை ஏற்கிறார்கள் என்பது தேர்தலில் தெரியும், திமுக தோல்வி பயத்தில் இருக்கிறார்கள்.

    திமுக அரசு செய்துள்ள ஊழல்கள் தொடர்பான ஆவணங்கள் பொதுமக்கள் மத்தியில் வெளியிடப்படும். 2026 தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயம் ஆட்சி அமைக்கும்.

    முதலமைச்சர் விமர்சனம் செய்ய வேண்டியது ஆ.ராசாவையும், பொன்முடியையும் தான்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • அ.தி.மு.க.வின் வரலாறு யாரையும் குறை சொல்லக்கூடாது என்பது தான்.
    • 2026- இல் அ.தி.மு.க. ஆட்சி அமைவது உறுதி.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் இன்று பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை ஒட்டி அவரது சிலைக்கு அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்பு குழு இணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    எம்ஜிஆர், ஜெயலலிதா கட்டி காத்த இயக்கம் அ.தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பது பெரும்பாலான தொண்டர்களின் விருப்பமாகும். அ.தி.மு.க.வின் வரலாறு யாரையும் குறை சொல்லக்கூடாது என்பது தான்.

    என்னைவிட அ.தி.மு.க. வரலாறு பற்றி பேச யாருக்கும் தகுதி இல்லை. சிலர் அவர்களின் கருத்துக்களை கூறலாம். அ.தி.மு.க பொதுச்செயலாளரை தொண்டர்கள் தான் தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால் விதியை மாற்றி தேர்ந்தெடுத்துள்ளனர்.

    அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்று நான் பலமுறை வலியுறுத்தி வருகிறேன். அடுத்த ஆண்டு டிசம்பருக்குள் ஒன்று இணையும் என முன்பு கூறியிருந்தேன். ஆனால் வரும் பிப்ரவரி மாதத்திற்குள் கண்டிப்பாக ஒன்றிணையும். 2026- இல் அ.தி.மு.க. ஆட்சி அமைவது உறுதி. நான் கட்சி வேஷ்டி கட்டுகிறேன். தைரியம் இருந்தால் என் மீது வழக்கு போட்டு பார்க்கட்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • குமரி மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக இருந்த முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் கட்சி பொறுப்புகளில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
    • மாவட்ட அளவில் தலைமை தாங்கும் பொறுப்பில் இருந்த முன்னாள் அமைச்சர்கள் யாரையும் அதிடியாக நீக்கியதும் இல்லை.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை மீண்டும் சேர்ப்பதற்கு வாய்ப்பு இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார்.

    அதே நேரத்தில் எதிராளிகளுடன் ரகசிய தொடர்பில் இருப்பவர்களை கட்சியில் இருந்து நீக்கும் நடவடிக்கையிலும் அவர் அதிரடியாக இறங்கியுள்ளார். பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி இல்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ள எடப்பாடி பழனிசாமி, அந்த கட்சியினரோடும் பா.ஜ,க, வுக்கு ஆதரவான அமைப்பினருடனும் தொடர்பில் இருப்பவர்களையும் கண்காணித்து வருகிறார்.

    அந்த வகையில் குமரி மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக இருந்த முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் கட்சி பொறுப்புகளில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். ஆர்.எஸ்.எஸ். பேரணியை தொடங்கி வைத்ததற்காக அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. தொண்டர்களுக்கு எழுதியுள்ள மடலில் அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் திருக்குறளை மேற்கோள் காட்டி அதிரடியான கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

    "வான் போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக கேள்போல் பகைவர் தொடர்பு" என்கிற திருக்குறளை கடிதத்தில் குறிப்பிட்டுள்ள எடப்பாடி பழனிசாமி, வெளிப்படையான பகைவர்க்கு அஞ்ச வேண்டியது இல்லை. ஆனால் நண்பர்கள் போல இருந்து உட்பகை கொண்டவர்களின் தொடர்புக்கு அஞ்ச வேண்டும் என்று எத்தனை ஆழமான அறிவுரையை வள்ளுவ பேராசான் நமக்கு தந்திருக்கிறார். உட்பகை கொண்டவர்கள் இனி நம் இயக்கத்திற்கு வேண்டாம் என்பதில் உறுதியோடு நிற்போம் என விளக்கியுள்ளார்.

    கட்சிக்கு வேண்டாதவர்களிடம் தொடர்பு வைத்துக் கொண்டு கட்சிக்குள்ளேயும் உள்பகை கொண்டு செயல்படுபவர்கள் யாராவது இருந்தாலும் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்பதை தனது கடிதத்தின் மூலமாக எடப்பாடி பழனிசாமி வெளிப்படையாகவே தெரிவித்திருப்பதாக அ.தி.மு.க.வினர் கூறியுள்ளனர்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பின்னர் எடப்பாடி பழனிசாமி இது போன்ற அதிரடியான வார்த்தைகளை குறிப்பிட்டு கட்சியினருக்கு கடிதம் எழுதியது இல்லை.

    அதே நேரத்தில் மாவட்ட அளவில் தலைமை தாங்கும் பொறுப்பில் இருந்த முன்னாள் அமைச்சர்கள் யாரையும் அதிடியாக நீக்கியதும் இல்லை. ஆனால் தற்போது கட்சி நிர்வாகிகளை களையெடுக்கும் விதத்தில் முதல் முறையாக எடப்பாடி பழனிசாமி அதிரடி காட்டியிருப்பது கட்சி நிர்வாகிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • தளவாய் சுந்தரத்திற்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது.
    • நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு தளவாய்சுந்தரம் வருத்தம்.

    தளவாய் சுந்தரத்திற்கு மீண்டும் மாவட்ட செயலாளர் பொறுப்பை வழங்கியது அ.தி.மு.க. தலைமை. கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக தளவாய் சுந்தரத்திற்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

    முன்னதாக ஆர்.எஸ்.எஸ். பேரணியை தொடங்கி வைத்து அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்காக அ.தி.மு.க. கட்சியில் இருந்து தளவாய்சுந்தரம் நீக்கப்பட்டு இருந்தார். மேலும், நிகழ்ச்சியில் கலந்து கொண்டது தொடர்பாக அவர் விளக்கம் அளிக்கவும் அ.தி.மு.க. தலைமை உத்தரவிட்டுருந்தது.

    இந்த நிலையில், நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு தளவாய்சுந்தரம் வருத்தம் தெரிவித்து, அதற்கான விளக்கத்தையும் அளித்துள்ளார் என்று அ.தி.மு.க. தெரிவித்துள்ளது. இதுதவிர இன்று முதல் அவர் அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட கழக செயலாளர் பொறுப்பில் நியமிக்கப்படுவதாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    • அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கண்டன பதாகைகள் ஏந்திய படி முழக்கம்.
    • சபாநாயகரின் இருக்கையை நோக்கி வந்து கோஷம் எழுப்பினார்கள்.

    சென்னை:

    சட்டசபையில் இருந்து கவர்னர் ஆர்.என்.ரவி புறப்பட்டு சென்றதும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கண்டன பதாகைகள் ஏந்திய படி முழக்கமிட்டனர்.

    அரசுக்கு எதிராக அவர்கள் முழக்கமிட்டபடி சபாநாயகரின் இருக்கையை நோக்கி வந்து கோஷம் எழுப்பினார்கள்.

    அதற்கு சபாநாயகர் அனுமதிக்கவில்லை. சபாநாயகர் அப்பாவு, அவர்களை இருக்கையில் அமருமாறு திரும்பத் திரும்ப சொன்னார். ஆனால் அ.தி.மு.க. எம்.எல். ஏ.க்கள் இருக்கையில் அமராமல் தொடர்ந்து கோஷம் எழுப்பினார்கள்.

    அப்போது சபாநாயகர் கூறுகையில், கலவரம் செய்யும் நோக்குடன் நீங்கள் வந்திருக்கிறீர்கள். திட்டம் போட்டு குந்தகம் விளை விக்கும் வகையில் செயல் படுகிறீர்கள். இதை அனுமதிக்க முடியாது. நீங்கள் இருக்கைக்கு சென்று அமராவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    ஆனாலும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இருக்கைக்கு செல்லாமல் தொடர்ந்து கோஷம் எழுப்பினார்கள். இதனால் சபாநாயகர் அப்பாவு, அவர்களை வெளியேற்றுமாறு சபை காவலர்களுக்கு உத்தரவிட்டார்.


    இதைத்தொடர்ந்து சபை காவலர்கள் உள்ளே வந்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை வலுக்கட்டாயமாக தூக்கி வெளியேற்றினார்கள். எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.

    இதனால் சட்டசபையில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் உருவானது. அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வெளியேற்றப்பட்ட பிறகு சபாநாயகர் அப்பாவு கவர்னர் உரையை தமிழில் வாசித்தார்.

    • இ.பி.எஸ். பாராட்டு விழாவை செங்கோட்டையன் புறக்கணித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
    • எனது வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பை நான் கேட்கவில்லை. அவர்களாகவே பந்தோபஸ்து தந்தார்கள்.

    அத்திக்கடவு - அவிநாசி திட்டம் தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு விவசாய சங்கங்கள் சார்ர்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்த விழாவை அதிமுகவின் முன்னாள் அமைச்சரான செங்கோட்டையன் புறக்கணித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், ஈரோடு மாவட்டம் கோபியில் அதிமுக சார்பில் நடைபெறும் எம்ஜிஆர் பிறந்த நாள் விழாவில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்றார்.

    இவ்விழாவில் பேசிய செங்கோட்டையன், "அதிமுக ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன் நான், என்னை சோதிக்காதீர்கள். அதுதான் எனது வேண்டுகோள் நான் செல்கின்ற பாதை எம்.ஜி.ஆர்., அம்மா வகுத்த பாதை. அவர்களின் படங்கள் இல்லாததால்தான் விவசாயிகள் பாராட்டு விழாவில் கலந்துகொள்ளவில்லை.

    எனது வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பை நான் கேட்கவில்லை. அவர்களாகவே பந்தோபஸ்து தந்தார்கள். அம்மா விரலை நீட்டும் போதே, அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை புரிந்து கொண்டு செயல்பட்டவன் நான். அவர் ஏன் என்னை கழட்டி விட்டார்? என்பதை சொல்ல முடியாத நிலை உள்ளது" என்று தெரிவித்தார்.

    எம்ஜிஆர் பிறந்தநாள் பொதுக்கூட்ட உரையில் 250-க்கும் மேற்பட்ட தொண்டர்கள், நிர்வாகிகள் பெயரை சுமார் 10 நிமிடம் படித்த செங்கோட்டையன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பெயரை ஒரு முறை கூட பயன்படுத்தாமல் உரையை நிறைவு செய்தார்.

    இந்த விழா மேடையில் வைக்கப்பட்டிருந்த பேனரில் எடப்பாடி பழனிசாமிக்கு இணையாக செங்கோட்டையன் புகைப்படம் வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை வேண்டும்.
    • எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர் ஒருவர் ஒற்றை தலைமை வேண்டும் என்று கோஷம் எழுப்பினார்.

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் இன்று அ.தி.மு.க. தலைமை கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது.

    அந்த கூட்டத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பேசும்போது, 'அ.தி.மு.க. செயற்குழு, பொதுக்குழுவில் ஒற்றைத்தலைமை பற்றி பேசக்கூடாது' என்று நிர்வாகிகளிடம் பேசி அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தனர்.

    இந்த தகவல் அ.தி.மு.க. தலைமை கழகம் முன்பு நின்று கொண்டிருந்த தொண்டர்களுக்கு உடனடியாக எட்டியது. உடனடியாக தொண்டர்கள் கூட்டத்தில் நின்று கொண்டிருந்த எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர் ஒருவர் ஒற்றை தலைமை வேண்டும் என்று கோஷம் எழுப்பினார்.

    இதையடுத்து அங்கு நின்று கொண்டிருந்த ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களான மகளிர் அணி நிர்வாகிகள், 'அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை வேண்டும். அந்த ஒற்றை தலைமை ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் உருவாக வேண்டும்' என்று கோஷம் எழுப்பினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    கூட்டத்தில் பங்கேற்க வந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் ஓடிவந்து அவர்களை சமாதானப்படுத்தினார்கள். ஆனால் அவர்கள் சமாதானம் அடையாமல் நுழைவு வாயிலில் நின்றபடி ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக கோஷம் எழுப்பிக்கொண்டே இருந்தனர்.

    இதுதொடர்பாக மகளிர் அணி நிர்வாகிகள் கூறியதாவது:-

    ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வை வழி நடத்தக்கூடிய ஒரே தலைவர் ஓ.பன்னீர் செல்வம் தான். எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே கூவாத்தூரில் காலில் விழுந்து முதல்-அமைச்சர் ஆனார். ஆனால் ஓ.பன்னீர் செல்வத்துக்கு தான் ஜெயலலிதா நேரடியாக முதல்-அமைச்சர் பதவியை வழங்கினார். எனவே அ.தி.மு.க.வை வழிநடத்தும் தகுதி வாய்ந்த ஒரே தலைவர் ஓ.பன்னீர்செல்வம் தான்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    அ.தி.மு.க. நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்ற இடத்தில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒற்றை தலைமை வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பியதால் எடப்பாடி பழனிசாமியும், அவரது ஆதரவாளர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    ×