என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vaithilingam"

    • தாய் கழகம் என்று நினைத்து கொண்டு ஒரு தீய கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார் வைத்திலிங்கம்.
    • திமுகவினரின் எண்ணத்திற்கு வலு சேர்த்திடும் வகையில் அதிமுகவினர் செயல்படுவதால் வேதனை அளிக்கிறது.

    ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ.வான முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். சபாநாயகர் அப்பாவுவை நேரில் சந்தித்து தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தை வைத்திலிங்கம் அளித்தார். இந்தநிலையில் அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் வைத்திலிங்கம் இணைந்தார்.

    இதுதொடர்பாக கருத்து தெரிவித்த சசிசலா கூறியதாவது:

    முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் திமுகவில் இணைந்தது துரதிருஷ்டவசமானது. தாய் கழகம் என்று நினைத்து கொண்டு ஒரு தீய கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார் வைத்திலிங்கம்.

    திமுகவினரின் எண்ணத்திற்கு வலு சேர்த்திடும் வகையில் அதிமுகவினர் செயல்படுவதால் வேதனை அளிக்கிறது.

    இந்த நிலைமைகளுக்கெல்லாம் காரணம் ஒன்றே ஒன்றுதான். ஒரு சிலரின் சுயநலத்தால் நடக்கிறது.

    திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப புதிய வியூகங்களை வகுத்துக்கொண்டு இருக்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருக்கு சால்வை அணிவித்து வரவேற்றார்.
    • தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக பாடுபடும் கட்சி தி.மு.க. தான் என்பதால் இணைந்துள்ளேன்.

    ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ.வான முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தனது எம்.எல்.ஏ. பதவியை இன்று ராஜினாமா செய்தார். சபாநாயகர் அப்பாவுவை நேரில் சந்தித்து தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தை வைத்திலிங்கம் கொடுத்தார்.

    எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த பிறகு வைத்திலிங்கம் அண்ணா அறிவாலயத்துக்கு சென்றார். அங்கு அவரை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் பூச்சி முருகன் ஆகியோர் வரவேற்று அறிவாலயத்துக்குள் அழைத்து சென்றனர். அங்கு அவர் தி.மு.க. உறுப்பினர் படிவத்தில் கையெழுத்திட்டார்.

    அதன் பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து அவருக்கு பூச்செண்டு கொடுத்து அவரது தலைமையில் தன்னை தி.மு.க.வில் இணைத்துக் கொண்டார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருக்கு சால்வை அணிவித்து வரவேற்றார்.

    இந்நிலையில் தி.மு.க.வில் தன்னை இணைத்துக்கொண்ட பின்னர் வைத்திலிங்கம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * அண்ணா ஆரம்பித்த தாய் கழகமான தி.மு.க.வில் என்னை இணைத்துக்கொண்டுள்ளேன்.

    * தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக பாடுபடும் கட்சி தி.மு.க. தான் என்பதால் இணைந்துள்ளேன்.

    * அ.தி.மு.க. சுதந்திரமாக செயல்படவில்லை. சர்வாதிகாரமாக செயல்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ.வான முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.
    • சபாநாயகரை நேரில் சந்தித்து தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தை வைத்திலிங்கம் அளித்தார்.

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஒன்றுபட்ட அ.தி.மு.க. என்ற கோஷத்தை முன்வைத்து அரசியல் நடத்தி வருகிறார். அவரது அணியில் இருந்த மனோஜ் பாண்டியன் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து சமீபத்தில் தி.மு.க.வில் சேர்ந்தார். அதேபோல், ஜே.சி.டி. பிரபாகர் த.வெ.க.வில் ஐக்கியமானார்.

    ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ.வான முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். சபாநாயகர் அப்பாவுவை நேரில் சந்தித்து தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தை வைத்திலிங்கம் அளித்தார்.

    இந்தநிலையில் அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் வைத்திலிங்கம் இணைந்தார்.

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளராக இருந்த வைத்திலிங்கம் தி.மு.க.வில் தன்னை இணைத்துக்கொண்டார்.

    • சபாநாயகர் அப்பாவுவை நேரில் சந்தித்து தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தை வைத்திலிங்கம் அளித்தார்.
    • வைத்திலிங்கம் தி.மு.க.வில் இன்று இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஒன்றுபட்ட அ.தி.மு.க. என்ற கோஷத்தை முன்வைத்து அரசியல் நடத்தி வருகிறார். அவரது அணியில் இருந்த மனோஜ் பாண்டியன் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து சமீபத்தில் தி.மு.க.வில் சேர்ந்தார். அதேபோல், ஜே.சி.டி. பிரபாகர் த.வெ.க.வில் ஐக்கியமானார்.

    இந்தநிலையில், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ.வான முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.

    சபாநாயகர் அப்பாவுவை நேரில் சந்தித்து தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தை வைத்திலிங்கம் அளித்தார்.

    இதையடுத்து வைத்திலிங்கம் தி.மு.க.வில் இன்று இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    அண்ணா அறிவாலயத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் அவர்கள் இருவரும் பங்கேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் அதிகாரப்பூர்வமாக இணைகிறார்.

    • மக்களின் ஆதரவையும், நம்பிக்கையையும் அதிமுக இழந்துள்ளது.
    • அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு கழகமாக மாறும்.

    சென்னை வேப்பேரியில் உள்ள தனியார் அரங்கில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

    அப்போது பேசிய அவர்," டிசம்பர் 15ம் தேதி அன்று நாம் எடுக்கின்ற முடிவு அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமையும்.

    தவறான பொதுக்குழு மற்றும் செயற்குழு, தொடர் தோல்வி ஆகியவற்றால் மக்களின் ஆதரவையும், நம்பிக்கையையும் அதிமுக இழந்துள்ளது" என்றார்.

    மேலும், அதிமுக ஒன்றிணையாவிட்டால் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு கழகமாக மாறும் என்று வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.

    • கட்சி சார்பு இல்லாத பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என நினைக்கிறார்கள்.
    • அ.தி.மு.க மீது தமிழ்நாட்டு மக்கள் அவ்வளவு பாசம் வைத்திருக்கிறார்கள்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூரில் இன்று ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர் வைத்திலிங்கம் எம்.எல்.ஏ நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவிடம் நன்மதிப்பைப் பெற்றவர் செங்கோட்டையன். அவர் இன்று அ.தி.மு.க.வில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று தனது எண்ணத்தை தெரிவித்துள்ளார். அனைத்து தொண்டர்களின் எண்ணத்தையே வெளிப்படுத்தி உள்ளார். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் அவர் தனது கருத்தை தெரிவித்துள்ளார். செங்கோட்டையன் கருத்தை நான் முழு மனதுடன் வரவேற்கிறேன்.

    எல்லோரும் ஒன்றிணைந்தால் மட்டுமே எம்ஜிஆர் , ஜெயலலிதா ஆட்சியை கொண்டுவர முடியும்.

    ஒன்றிணைப்பு குழு என்பது குறித்து எனக்கு இன்றைக்கு தான் தெரிய வந்துள்ளது.

    எங்களிடம் செங்கோட்டையன் தொடர்பில் இல்லை. அவர் எடப்பாடி பழனிசாமி அணியில் உள்ளார்.

    அவருக்கு ஆதரவு அதிகமாக இருக்கிறது என்பது தெரிய வருகிறது. அவருடைய எண்ணம் போல் எல்லா தொண்டர்களும் விரும்புகிறார்கள். நிச்சயமாக எல்லோரும் அதை வரவேற்பார்கள்.

    10 நாள் கெடு கொடுத்திருக்கார். இல்லை என்றால் இணைப்பதற்கான முயற்சியை அவர் மேற்கொள்ளவார் என்பது அர்த்தம். 10 நாள் கெடு முடிந்தவுடன் எனது கருத்தை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

    கட்சி சார்பு இல்லாத பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என நினைக்கிறார்கள். அ.தி.மு.க மீது தமிழ்நாட்டு மக்கள் அவ்வளவு பாசம் வைத்திருக்கிறார்கள். அதை இணைப்பதற்கு தடையாக இருப்பவர்கள் மீது கோபமாகவும் இருக்கிறார்கள்.

    சசிகலாவை சந்தித்து செங்கோட்டையன் பேசினாரா என்பது குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும் .

    இவ்வாறு அவர் கூறினார்.

    • எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வை விட்டு தனிக்கட்சி தொடங்கலாம்.
    • ‘மார்க்-3' என்ற மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    தஞ்சாவூர் :

    இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இடம் பெயர்ந்து வாழ்ந்து வருபவர்கள் தங்களது சொந்த மாநில தேர்தல்களில் வாக்களிக்கும் வகையில் 'மார்க்-3' என்ற மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    இந்த எந்திரம் தொடர்பாக அதன் மாதிரியுடன் அனைத்து அரசியல் கட்சிகளுடன் கருத்து கேட்கும் வகையில் ஆலோசனை கூட்டம் ஒன்றை வருகிற 16-ந் தேதி தேர்தல் ஆணையம் நடத்த உள்ளது.

    இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரது பெயரில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கடிதம் அனுப்பி இருந்தார்.

    அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அக்கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டு அனுப்பப்பட்ட கடிதத்தை அ.தி.மு.க. தலைமை ஏற்க மறுத்து திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது.

    இது குறித்து ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் வைத்திலிங்கம் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறுகையில், ''ஆவணங்கள் படி தமிழக தேர்தல் ஆணையம் முன்னாள் முதல்-அமைச்சர்கள் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவருக்கும் கடிதம் அனுப்பி உள்ளது.

    அந்த கடிதத்தை திருப்பி அனுப்புகிறோம் என்று பத்திரிகைகளில் செய்தி வருகிறது. அப்படி திருப்பி அனுப்பினால் அவர்கள்(எடப்பாடி பழனிசாமி) அ.தி.மு.க.வை விட்டு தனிக்கட்சி தொடங்கலாம். அ.தி.மு.க.வில் இருப்பதற்கு அவர்களுக்கு தகுதி இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்து மேல்முறையீட்டு செய்வோம். எங்களுக்கு இது மிகப்பெரிய பாதிப்பு கிடையாது.
    • முழு தீர்ப்பை படித்துப் பார்த்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தெரிவிப்போம்.

    தஞ்சாவூர்:

    கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என என்று சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு கூறியது.

    இது தொடர்பாக இன்று தஞ்சையில் ஓ. பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளரான வைத்திலிங்கம் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் கூறியது போல சுப்ரீம் கோர்ட் கூறி இருக்கிறது. பொதுக்குழு கூட்டியது செல்லும். ஆனால் அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து கோர்ட் எந்த கருத்தும் கூறவில்லை. மேலும் சிவில் கோர்ட்டில் உள்ள வழக்கு எங்களது கருத்துக்கு கட்டுப்படுத்தாது என கூறியிருக்கிறார்கள். இதன் மூலம் இன்று வழங்கப்பட்ட தீர்ப்பு எங்களுக்கு சாதகமானது தான்.

    நாங்கள் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்து மேல்முறையீட்டு செய்வோம். எங்களுக்கு இது மிகப்பெரிய பாதிப்பு கிடையாது. முழு தீர்ப்பை படித்துப் பார்த்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தெரிவிப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தஞ்சாவூரை எடுத்துக் கொண்டால் 75 சதவீதம் கட்சியினர் ஓ.பன்னீர்செல்வம் பக்கம் தான் இருக்கிறார்கள்.
    • மாநாடு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக அமையும் என்பது வருகிற 24-ந்தேதி நிரூபணமாகும்.

    திருச்சி:

    அ.தி.மு.க.வில் எழுந்த ஒற்றை தலைமை விவகாரத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தனிப்பாதையில் பயணித்து வருகிறார். மேலும் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து நீதிமன்றங்களில் வழக்கு தொடுத்து போராடி வருகிறார்.

    இந்த நிலையில் வரவிருக்கின்ற பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தனது பலத்தை காண்பிப்பதற்காக திருச்சியில் மாநிலம் தழுவிய மாநாடு நடத்த திட்டமிட்டார். அதன்படி இந்த மாநாடு வருகிற 24-ந்தேதி திருச்சி பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் நடைபெறுகிறது.

    இந்த மாநாடு தொடர்பாக இன்று (திங்கட்கிழமை) மாலை திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகேயுள்ள பிரீஸ் ஓட்டலில் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்திற்கு அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமை தாங்குகிறார்.

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்குகிறார். மேலும் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், துணை ஒருங்கிணைப்பாளர்கள் கு.ப.கிருஷ்ணன், பிரபாகர், பி.எச்.மனோஜ் பாண்டியன், கொள்கை பரப்புச் செயலாளர்கள் மருது அழகுராஜ், புகழேந்தி மற்றும் 87 மாவட்ட செயலாளர்கள் தலைமை கழக நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.

    இதுதொடர்பாக வைத்திலிங்கம் இன்று கூறியதாவது:-

    திருச்சியில் வருகிற 24-ந்தேதி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா, கட்சி பொன்விழா, மாநாடு ஆகிய முப்பெரும் விழா பிரமாண்டமான முறையில் நடைபெற உள்ளது. அ.தி.மு.க.வின் தலைவரை தொண்டர்கள்தான் தேர்வு செய்ய வேண்டும் என்பது விதி. அதனை யாராலும் மாற்ற முடியாது என்பதை கட்சியின் நிறுவன தலைவர் எம்.ஜி.ஆர். உருவாக்கி தந்திருக்கிறார்.

    அந்த தொண்டர்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள் என்பதை இந்த மாநாடு நிரூபிக்கும். இதில் மாநிலம் தழுவிய அளவில் 3 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

    கட்சி முழுமையாக எடப்பாடி பழனிசாமி பக்கம் சென்றிருப்பதாக சொல்வதை நாங்கள் நம்பவில்லை. தஞ்சாவூரை எடுத்துக் கொண்டால் 75 சதவீதம் கட்சியினர் ஓ.பன்னீர்செல்வம் பக்கம் தான் இருக்கிறார்கள்.

    இந்த மாநாடு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக அமையும் என்பது வருகிற 24-ந்தேதி நிரூபணமாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    திருச்சியில் இன்று நடைபெறும் ஆலோசனை கூட்டத்திற்கான ஏற்பாடுகளை திருச்சி மாவட்ட செயலாளர் வெல்லமண்டி என்.நடராஜன், எம்.ஆர். ராஜ்மோகன், ரத்தினவேல் ஆகியோர் செய்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கட்சி கொடி, கட்சியின் பெயர் எல்லாவற்றையும் பயன்படுத்தி வருகிறோம்.
    • ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இயங்கும் அதிமுகவே ஒரிஜினல் அதிமுக.

    திருச்சி:

    ஓபிஎஸ் அணி நடத்தும் திருச்சி மாநாட்டில் அ.தி.மு.க. கொடி கட்சி பெயரை பயன்படுத்த அக்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து இன்று காவல்துறையினரிடம் மனு அளித்தனர்.

    இது தொடர்பாக ஓ. பன்னீர்செல்வம் அணி இணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் இன்று மாநாட்டு திடலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    புரட்சித் தலைவர் உருவாக்கிய இந்த கொடியை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. எடப்பாடி பழனிசாமிக்கு எதுவும் சொந்தமாகவில்லை.

    சின்னம் நீதிமன்ற தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

    அதிமுக கொடியில் விருப்பப்பட்டவர்கள் இரட்டை இலை சின்னத்தை வைப்பார்கள் அந்த அடிப்படையில் நாங்களும் வைத்திருக்கின்றோம். சட்ட சிக்கலுக்கு பயந்து வைக்கவில்லை. இரட்டை இலை சின்னம் அவர்களுக்கு இன்னமும் நிரந்தரமாக உறுதியாகவில்லை.

    கட்சி கொடி, கட்சியின் பெயர் எல்லாவற்றையும் பயன்படுத்தி வருகிறோம். பயன்படுத்துவோம். வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் இல்லை என்று நீதிமன்றம் கூறவில்லை. இது போன்ற பல மாநாடுகளை தமிழ்நாட்டில் நடத்துவோம்.

    ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இயங்கும் அதிமுகவே ஒரிஜினல் அதிமுக. எடப்பாடி பழனிசாமிக்கு தான் இரண்டாவது இடம்.

    இவ்வாறு ஆவேசமாக அவர் கூறினார்.

    • ஓ.பன்னீர்செல்வத்தின் விருப்பமே பிரிந்து இருக்கும் அனைவரும் ஒன்றிணைந்து ஒன்றுப்பட்ட அ.தி.மு.க.வை உருவாக்க வேண்டும் என்பது தான்.
    • அனைவரும் ஒன்றிணைந்து தேர்தலை சந்தித்தால் தான் 2026-ல் அ.தி.மு.க. ஆட்சி மலரும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் இன்று ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவளரான ஆர்.வைத்திலிங்கம் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-

    கடந்த 3 நாட்களுக்கு முன்பு முன்னாள் முதல்-அமைச்சரும் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம், அ.ம.மு.க. பொது செயலாளர் டி.டி.வி.தினகரனை சந்தித்து பேசி இணைந்து செயல்படுவதாக அறிவித்தார். இந்த சந்திப்பின் போது மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனும் சென்றிருந்தார்.

    ஆனால் நான், பிரபாகரன், மனோஜ்பாண்டியன் ஆகியோர் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு இருவரும் சந்திப்பதால் செல்லவில்லை.

    ஓ.பன்னீர்செல்வத்தின் விருப்பமே பிரிந்து இருக்கும் அனைவரும் ஒன்றிணைந்து ஒன்றுப்பட்ட அ.தி.மு.க.வை உருவாக்க வேண்டும் என்பது தான். இதுதான் உண்மையான தொண்டர்களின் எதிர்பார்ப்பாகும். அதற்காக தான் அவர் பாடுபட்டு வருகிறார். மேலும் டி.டி.வி.தினகரனை சந்தித்து இணைந்து செயல்படுவதாக அறிவித்தார். விரைவில் சசிகலாவையும் சந்திக்க உள்ளார்.

    அனைவரும் ஒன்றிணைந்து தேர்தலை சந்தித்தால் தான் 2026-ல் அ.தி.மு.க. ஆட்சி மலரும். அதற்காக தான் ஓ.பி.எஸ் பாடுபட்டு வருகிறார்.

    திருச்சி மாநாட்டை போல் விரைவில் கொங்கு மண்டலத்தில் பிரமாண்ட மாநாடு நடத்தப்படும். அதில் சசிகலா பங்கேற்க ஓ.பி.எஸ் அழைப்பு விடுப்பார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஓ.பன்னீர்செல்வம் எதிர்பார்த்தது போல் பணத்தை தண்ணீர்போல் செலவு செய்து மாநாட்டையும் சிறப்பாக நடத்தி முடித்தார் வைத்திலிங்கம்.
    • டி.டி.வி.தினகரனுக்கு கட்டுப்பட்டு தான் ஓ.பன்னீர்செல்வம் செயல்படுவார் என்ற எண்ணமும் வைத்திலிங்கத்திடம் ஏற்பட்டுள்ளது.

    சென்னை:

    ஓ.பன்னீர்செல்வம் அணியில் பலம்மிக்க தலைவராக இருப்பவர் வைத்திலிங்கம். தனி அணியாக ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து செயல்பட்டபோது அந்த அணியை அ.தி.மு.க.வுடன் இணைப்பதற்கு பாலமாக இருந்தவர்களில் வைத்திலிங்கமும் ஒருவர்.

    மீண்டும் ஒற்றை தலைமை விவகாரம் விசுவரூபம் எடுத்தபோது ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்து பலர் விலகி எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.வில் இணைந்தபோதும் அந்த அணியை விட்டு வெளியேறாமல் இருப்பவர்களில் வைத்திலிங்கம் முக்கியமானவர்.

    தஞ்சை மண்டலத்தில் செல்வாக்குடன் இருக்கும் வைத்திலிங்கம், எடப்பாடி பழனிசாமியை எதிர்ப்பதில் தீவிரம் காட்டி வருகிறார். எடப்பாடி பழனிசாமி இல்லாத ஒன்றுபட்ட அ.தி.மு.க.வை உருவாக்க வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.

    இந்த நிலையில் வைத்திலிங்கம் அதிருப்தியுடன் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சமீபத்தில் டி.டி.வி. தினகரனை, ஓ.பன்னீர்செல்வம் நேரில் சந்தித்தார். அப்போது அவருடன் பண்ருட்டி ராமச்சந்திரன், ஜே.சி.டி.பிரபாகரன், மனோஜ் பாண்டியன் ஆகியோர் சென்றிருந்தனர்.

    அந்த குழுவில் வைத்திலிங்கம் இடம்பெறவில்லை. அப்போதே ஏதோ கருத்து வேறுபாடு இருக்கிறது என்று அரசல்புரசலாக தகவல்கள் வெளியானது. ஆனால் தனக்கு தெரிந்து தான் ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரனை சந்திக்க சென்றார் எனவும், தான் புறக்கணிக்கப்படவில்லை என்றும் வைத்திலிங்கம் விளக்கம் அளித்தார். ஆனால் உண்மையில் அவர் அதிருப்தியுடன் இருப்பதாகவே அவரது ஆதரவாளர்கள் கூறுகிறார்கள். அதற்கு முக்கியமான சில காரணங்களையும் அவர்கள் தெரிவித்தனர். திருச்சியில் ஓ.பன்னீர்செல்வம் மாநாடு நடத்தியபோது அந்த பொறுப்பை வைத்திலிங்கத்திடம் ஒப்படைத்திருந்தார்.

    தஞ்சை மண்டலத்தில் தனி செல்வாக்குடன் இருப்பதால் அவரால் தான் மாநாட்டை சிறப்பாக நடத்த முடியும் என்பதற்காகத்தான் அந்த பொறுப்பை அவரிடம் வழங்கி இருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். எதிர்பார்த்தது போல் பணத்தை தண்ணீர்போல் செலவு செய்து மாநாட்டையும் சிறப்பாக நடத்தி முடித்தார் வைத்திலிங்கம்.

    பின்னர் மாநாட்டின் செலவுகள் தொடர்பான கணக்கை வைத்திலிங்கம் ஓ.பன்னீர்செல்வத்திடம் ஒப்படைத்திருக்கிறார். அப்போது பணத்தை பார்த்துக்கொள்ளலாம் என்பதோடு சில நிகழ்வுகளையும் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் நினைவுபடுத்தியதாக கூறப்படுகிறது. இது வைத்திலிங்கத்துக்கு பிடிக்காததால் உடனடியாக அங்கிருந்து கிளம்பி இருக்கிறார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கத்தை சமாதானப்படுத்தி இருக்கிறார். ஆனாலும் வைத்திலிங்கம் சமாதானம் அடையவில்லை என்றே கூறப்படுகிறது.

    மேலும் ஓ.பன்னீர்செல்வம் தனியாக சென்று டி.டி.வி.தினகரனுடன் கைகோர்த்து இருப்பதால் இனி ஓ.பன்னீர்செல்வத்தின் கை ஓங்கப்போவதில்லை. டி.டி.வி.தினகரனுக்கு கட்டுப்பட்டு தான் ஓ.பன்னீர்செல்வம் செயல்படுவார் என்ற எண்ணமும் வைத்திலிங்கத்திடம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவரை சமாதானப்படுத்தும் முயற்சிகளும் நடப்பதாக கூறப்படுகிறது.

    ×