என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "OPaneerselvam"

    • புதிய வாக்காளர்களை சேர்ப்பதற்கு தேர்தல் ஆணையம் காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும்.
    • டிடிவி தினகரன், சசிகலாவை தனித்தனியாக சந்தித்து ஆலோசனை மேற்கொண்டேன்.

    SIR பணிகளுக்கு காலக்கெடுவை தேர்தல் ஆணையம் நீடிக்க வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.

    இதுகுறித்து செய்தியாளர்களிடம் மேலும் பேசிய அவர் கூறியதாவது:-

    SIR பணிகளுக்கு தேர்தல் ஆணையம் கால அவகாசம் கொடுக்காதது தவறான நடைமுறை.

    புதிய வாக்காளர்களை சேர்ப்பதற்கு தேர்தல் ஆணையம் காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும்.

    அதிமுக இணைந்தால் தான் வெற்றி பெற முடியும். அதிமுக அணிகள் இணைப்பதற்கான பணிகள் நடந்து கொண்டிருக்கிறது.

    டிடிவி தினகரன், சசிகலாவை தனித்தனியாக சந்தித்து ஆலோசனை மேற்கொண்டேன்.

    அரசியலில் இருந்து தன்னை யாரும் தனிமைப்படுத்த முடியாது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • நீதிமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் நமக்கு வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை நமக்கு இருக்கிறது.
    • கள நிலவரத்தை ஆராய்ந்து அதற்கேற்ப தக்கநேரத்தில் உரிய முடிவு எடுக்கப்படும்.

    அரசியல் கூட்டணி குறித்த கருத்துகளை தவிர்க்குமாறு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    எம்.ஜி.ஆரால் தோற்றுவிக்கப்பட்ட மாபெரும் மக்கள் இயக்கமாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு தொடர் தோல்விகளை சந்தித்து மக்களின் நம்பிக்கையை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறது.

    எம்.ஜி.ஆரால் தோற்றுவிக்கப்பட்டு, ஜெயலலிதாவால் கட்டிக் காக்கப்பட்ட மாபெரும் மக்கள் இயக்கமாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை துரோகக் கூட்டத்திடமிருந்து மீட்டெடுப்பதற்காக அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவை ஏற்படுத்தி நாம் போராடி வருகிறோம். இதில் நீதிமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் நமக்கு வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை நமக்கு இருக்கிறது.

    இந்தச் சூழ்நிலையில், வருகின்ற தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலை நாம் எதிர்கொள்ளும் வகையில், எம்.ஜி.ஆரால் நிகழ்த்தப்பட்ட சாதனைகளையும், ஜெயலலிதாவால் நிகழ்த்தப்பட்ட சாதனைகளையும் பட்டிதொட்டி எங்கும் எடுத்துச் செல்லவும், தி.மு.க. ஆட்சியில் தற்போது மக்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள் மற்றும் தமிழ்நாட்டிற்கு எதிரான மத்திய அரசின் செயல்பாடுகளை மக்களிடம் எடுத்துச் செல்லவும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அறிவுப் பாதையில் அழைத்துச் செல்லப்படுவதை மக்களுக்கு எடுத்துக் காட்டவும் பொதுக் கூட்டங்களை கழக நிர்வாகிகள் ஆங்காங்கே நடத்த வேண்டுமென்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

    மேலும், தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கும் செய்தித் தொடர்பாளர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கூட்டணி குறித்து எந்தக் கருத்தையும் தெரிவிக்க வேண்டாம் என்று அன்புடன் வேண்டுகோள் விடுக்கிறேன். இதனை மீறிச் செயல்படுபவர்கள்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    கூட்டணி குறித்த முடிவு தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் உள்ளிட்டவர்களின் கருத்தினைக் கேட்டு, கள நிலவரத்தை ஆராய்ந்து அதற்கேற்ப தக்கநேரத்தில் உரிய முடிவு எடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • நயினார் நாகேந்திரன் அவர்கள் எனது அழைப்பை எடுக்கவில்லை.
    • பாரதப் பிரதமர் அவர்களை சந்திக்க அனுமதி கேட்டு 24-07-2025 அன்று நான் கடிதம் எழுதினேன்.

    "தன்னிடம் சொல்லி இருந்தால் பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்திருப்பேன் என நயினார் நாகேந்திரன் தெரிவித்ததில் எள்ளளவும் உண்மை இல்லை என்று NDA கூட்டணியில் இருந்து விலகிய ஓ.பன்னீர் செல்வம் பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சித் தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்கள்,"தன்னிடம் சொல்லியிருந்தால் மாண்புமிகு பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்திருப்பேன்"என்று தெரிவித்துள்ளார்.

    இதில் எள்ளளவும் உண்மை இல்லை. எனவே, இது குறித்த உண்மை நிலையை தெரிவிப்பது என் கடமை.

    நயினார் நாகேந்திரன் அவர்களை ஆறு முறை கைபேசியில் தொடர்புகொள்ள நான் முயற்சித்தேன். ஆனால், நயினார் நாகேந்திரன் அவர்கள் எனது அழைப்பை எடுக்கவில்லை.

    எனவே, நயினார் நாகேந்திரன் அவர்களிடம் பேச வெண்டுமென்ற தகவலை குறுஞ்செய்தி மூலம் அவருக்கு அனுப்பியிருந்தேன். இதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. அதற்கும், நயினார் நாகேந்திரன் அவர்கள் எந்தவிதப் பதிலும் அளிக்கவில்லை.

    இதனைத் தொடர்ந்து, கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற உறுப்பினருமான இரா. வைத்திலிங்கம் மற்றும் கழக துணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற உறுப்பினருமான பி.எச். மனோஜ் பாண்டியன் ஆகியோரை கலந்தாலோசித்த பின்னர், பாரதப் பிரதமர் அவர்களை சந்திக்க அனுமதி கேட்டு 24-07-2025 அன்று நான் கடிதம் எழுதினேன்.

    அந்தக் கடிதம் அனைத்து பத்திரிகைகளுக்கும் அனுப்பப்பட்டது.

    உண்மையிலேயே, நயினார் நாகேந்திரன் அவர்களுக்கு பிரதமர் அவர்களை நான் சந்திக்க வேண்டுமென்ற விருப்பம் இருக்குமேயானால், நான் கைபேசியில் அழைத்த அழைப்பை பார்த்தோ அல்லது குறுஞ்செய்தியின் அடிப்படையிலோ என்னிடம் பேசியிருக்கலாம்.

    அல்லது எனது கடிதம் பத்திரிகைகளுக்கு வெளியிடப்பட்டதை அடிப்படையாகக் கொண்டு அதற்கான ஏற்பாட்டினை செய்திருக்கலாம். ஆனால் எதையும் செய்யவில்லை.

    இதிலிருந்து, நான் பிரதமர் அவர்களை சந்திப்பதில் அவருக்கு விருப்பமில்லை என்பது தெளிவாகிறது. எனவே, பிரதமர் அவர்களைச் சந்திப்பது தொடர்பாக நான் நயினார் நாகேந்திரன் அவர்களிடம் சொல்லவில்லை என்பது சரியல்ல, உண்மைக்கு புறம்பானது.

    நயினார் நாகேந்திரன் அவர்கள் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சித் தலைவர் என்ற பொறுப்பில் இருக்கிறார். ஆகவே, இனியாவது அவர் உண்மை பேச வேண்டும் என்பதே எனது விருப்பம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தொலைபேசியில் பேசிய நிலையிலும் வெளியேறும் முடிவை பன்னீர்செல்வம் எடுத்துள்ளார்.
    • முதல்வரை பன்னீர்செல்வம் சந்தித்தது தொகுதி அல்லது சொந்த பிரச்னைக்காக இருக்கலாம்.

    பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.

    இதுதொடர்பாக கேள்வி கேட்ட செய்தியாளர்களுக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    தே.ஜ.கூட்டணியில் இருந்து வெளியேறிய பன்னீர்செல்வத்துடன் தொலைபேசியில் பேசியுள்ளேன். அந்த நிலையிலும் வெளியேறும் முடிவை பன்னீர்செல்வம் எடுத்துள்ளார்.

    பன்னீர் செல்வம் வெளியேறியது சொந்தப் பிரச்னையா அல்லது வேறு காரணமா எனத் தெரியவில்லை. பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டால் வரும் 26ம் தேதி பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்வேன்.

    முதல்வரை பன்னீர்செல்வம் சந்தித்தது தொகுதி அல்லது சொந்த பிரச்னைக்காக இருக்கலாம். இபிஎஸ் அழுத்தத்தால் ஓபிஎஸ் புறக்கணிக்கப்படவில்லை. அது தவறான கருத்து.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கழிவுநீர் கலந்த குடிநீர் குடித்ததால் 30-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி.
    • தி.மு.க. அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை.

    திருச்சி மாவட்டத்தில் கழிவுநீர் கலந்த குடிநீர் குடித்ததால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு திமுக அரசின் அலட்சியப் போக்கே காரணம் என ஓ. பன்னீர்செல்வம் கண்டனத்துடம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பொதுமக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்குவதை உறுதி செய்ய வேண்டிய கடமையும், பொறுப்பும் மாநில அரசுக்கு உள்ளது. இந்த அடிப்படைத் தேவையைக்கூட பூர்த்தி செய்ய இயலாத அரசாக தி.மு.க. அரசு விளங்கிக் கொண்டிருக்கிறது.

    திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட உறையூர் பகுதியில் கழிவுநீர் கலந்த குடிநீரைக் குடித்ததன் காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்து இருப்பதாகவும், 30-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் வந்துள்ள செய்தி பேரதிர்ச்சியை அளிக்கிறது.

    மேற்படி பகுதியில், குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதாக மாநகராட்சி மன்ற உறுப்பினர் முதல் உயர் அதிகாரிகள் வரை அப்பகுதி மக்கள் பலமுறை எடுத்துக் கூறியும், அது குறித்து நடவடிக்கை எடுக்கப்படாததன் காரணமாக மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

    புகாரின் அடிப்படையில் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், மூன்று பேரின் உயிரிழப்பை இந்த அரசு தடுத்து இருக்க முடியும் என்பதோடு, முப்பதுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதும் தவிர்த்திருக்க முடியும். இந்தப் பிரச்சனைக்கு தி.மு.க. அரசின் அலட்சியப் போக்கே காரணம் என்று மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    இது ஒருபுறம் என்றால், மறுபுறம் அதே திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், அந்தநல்லூர் ஒன்றியம், மருதண்டாகுறிச்சி பஞ்சாயத்திற்குட்பட்ட ஏகிரிமங்கலம் கிராமத்தில் வசிக்கும் மக்கள் கடந்த ஒரு வார காலமாக வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு திருச்சி அண்ணல் காந்தி நினைவு அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்கள்.

    இதற்குக் காரணமும் குடிநீரில் கழிவுநீர் கலப்புதான் என்று கூறப்படுகிறது. ஒரு மனிதனுக்கு 10.5 விழுக்காடு வரை கிருமிகளை தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தி இருக்கிறது என்றும், ஆனால் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்ததன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் உடலில் 15 விழுக்காட்டிற்கும் அதிகமாக கிருமிகள் இருக்கின்றன என்று மருத்துவர்கள் தெரிவித்ததாகவும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

    இதன் விளைவாக, அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர். இதுகுறித்து தி.மு.க. அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை.

    பாதுகாக்கப்பட்ட குடிநீரைக்கூட வழங்க இயலாத திறமையற்ற அரசாக தி.மு.க. விளங்கிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் எத்தனை இடங்களில் பாதுகாப்பற்ற குடிநீர் விநியோகிக்கப்படுகிறதோ என்பது கடவுளுக்குத்தான் வெளிச்சம்.

    ஒருபக்கம் சட்டம் ஒழுங்கு சீரழிவால் உயிரிழப்புகள் ஏற்படுகிறது என்றால், மறுபக்கம் கழிவுநீர் கலந்த குடிநீரால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

    தி.மு.க. அரசின் கவனக் குறைவிற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைந்து குணமடைந்து இல்லம் திரும்ப வேண்டும் என்று எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

    தமிழக முதலமைச்சர் அவர்கள் இதில் உடனடியாகத் தலையிட்டு, பாதுகாக்கப்பட்ட குடிநீரை விநியோகிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், தி.மு.க. அரசின் மெத்தனப் போக்கினால் மூன்று பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் தலா பத்து இலட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்க வேண்டுமென்றும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டுமென்றும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • கள்ளச்சாரயத்தை இரும்புக்கரம் கொண்டு ஒழிக்க வேண்டும்.
    • நீட் தேர்வு ரத்து குறித்த தமிழக எம்பிக்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

    தஞ்சையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு அதிமுக ஆட்சியில் நீர்நிலைகள் தூர்வாரப்பட்டது.

    குறுவை சாகுபடி விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கவில்லை. குறுவை விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும்.

    கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 3 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. 40க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கள்ளச்சாரயத்தை இரும்புக்கரம் கொண்டு ஒழிக்க வேண்டும்.

    காவிரி விவகாரத்தில் மத்திய அமைச்சர் நடுநிலையோடு நடந்து கொள்ள வேண்டும். மேகதாதுவில் அணைக்கட்ட வேண்டுமென்ற ஒருவரை மத்திய ஜல்சக்தி இணையமைச்சராக்கி உள்ளனர். 

    நீட் தேர்வு ரத்து குறித்த தமிழக எம்பிக்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும். 40 எம்பிக்களும் சேர்ந்து நாடாளுமன்றத்தில் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

    இதுவரை அதிமுகவை காப்பாற்றியது யார் என்று சசிகலாவிற்கு, ஈபிஎஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

    அதிமுகவில் ஒரு சாதி ஆதிக்கம் செலுத்துவதாக சசிகலா எப்படி சொல்கிறார். அதிமுகவில் எல்லா சாதியினரும், அனைத்து பொறுப்புகளிலும் உள்ளனர். அதிமுகவில் எந்த சரிவும் இல்லை.

    தோல்வியை சந்திக்காத அரசியல் எது ? 3 ஆண்டுகள் விடுமுறையில் சென்றிருந்தார். இப்போது ரீ என்ட்ரி என்கிறார்.

    2021ல் அரசியல் ஓய்வு என கூறிய சசிகலா, இப்போது ஏன் வருகிறார்? இரட்டை இலையை எதிர்த்து போட்டியிட்ட ஓபிஎஸ்யை எப்படி கட்சியில் சேர்க்க முடியும்.

    அதிமுகவிற்கு எப்போதுமே விசுவாசம் இல்லாத நபர் ஓபிஎஸ். மத்திய அமைச்சராகலாம் என்ற சுயநலத்தில் பாஜகவில் இணைந்து போட்டியிட்டவர் ஓபிஎஸ்.

    அதிமுகவிற்கு யார் துரோகம் செய்தாலும் ஓபிஎஸ் நிலைமை தான் ஏற்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அனைத்து குடும்ப அரிசி அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என அறிவிப்பு.
    • வரும் ஜனவரி 9ம் தேதி முதல் டோக்கன் விநியோகம் தொடங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

    2025ம் ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி அனைத்து குடும்ப அரிசி அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

    அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்குவது மூலம் அரசுக்கு ரூ.249.76 கோடி செலவு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பொங்கல் பரிசுத்தொகுப்புடன் இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்படும் என்றும் இலவச வேட்டி சேலைகள் அனைத்தும் தயார் செய்யப்பட்டு அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    மேலும், பொங்கல் பரிசுத்தொகுப்பு பெற்றுக் கொள்ள வரும் ஜனவரி 9ம் தேதி முதல் டோக்கன் விநியோகம் தொடங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

    இந்நிலையில், பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2000 ரொக்கப்பணம் வழங்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    2025ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக்கரும்பு அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருப்பது, தமிழ்நாட்டு மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

    இந்த ஆண்டு தமிழ்நாடு முழுவதும் ஃபெஞ்சல் புயல், அதிகனமழை உள்ளிட்டவற்றால், அனைத்து மக்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுடைய உடமைகள் எல்லாம் கடுமையாகச் சேதமடைந்துள்ளன.

    தமிழ்நாடு அரசு அறிவித்த நிவாரணத் தொகைக்கும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புக்கும் மிகப் பெரிய வித்தியாசம் இருக்கிறது. இதன்மூலம் ஏற்பட்ட இழப்பினைச் சரி செய்வதற்கே அவர்களுக்கு இரண்டு, மூன்று ஆண்டுகள் தேவைப்படும். இதனால் தமிழக மக்கள் பெருத்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்கள்.

    இந்த நிலையில், தி.மு.க. அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு அறிவிப்பின்மூலம், பொங்கல் திருநாளை விமரிசையாகக் கொண்டாட முடியாத நிலை தமிழக மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

    தமிழக மக்கள் 2025 பொங்கல் திருநாளை சிறப்புறக் கொண்டாடும் வகையில், எவ்வித பாகுபாடின்றி, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் குறைந்தபட்சம் 2,000 ரூபாய் ரொக்கம் உள்ளிட்ட பொங்கல் தொகுப்பினை வழங்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    • நடிகர் ரஜினிகாந்த் நல்ல ஆரோக்கியத்துடன் திடகாத்திரமாக இருக்கிறார்.
    • அண்ணா பல்கலைக்கழக விவகாரம் போன்ற சம்பவங்கள் வரும் காலங்களில் நடக்காமல் தடுப்பது அரசின் கடமை.

    சென்னை போயஸ் கார்டனில் உள்ள வீட்டில் நடிகர் ரஜினிகாந்தை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சந்தித்துள்ளார்.

    இவர்களின் திடீர் சந்திப்பு குறித்து பேசிய ஓ.பன்னீர்செல்வம் கூறுகையில், " புத்தாண்டை ஒட்டி ரஜினிகாந்தை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன், அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை.

    நடிகர் ரஜினிகாந்த் நல்ல ஆரோக்கியத்துடன் திடகாத்திரமாக இருக்கிறார்.

    அண்ணா பல்கலைக்கழக விவகாரம் போன்ற சம்பவங்கள் வரும் காலங்களில் நடக்காமல் தடுப்பது அரசின் கடமை" என்றார்.

    • 2026 சட்டமன்ற தேர்தல் மட்டுமின்றி எந்தவொரு தேர்தல் வந்தாலும் நமக்கான வெற்றியை அந்த இயற்கையே உருவாக்கி கொடுக்கும்.
    • வாரிசு அரசியல் வேண்டாம் என்பதற்காகவே நான் எனது மகன்களுக்கு மாவட்ட செயலாளர் பதவி வேண்டாம் என்று கூறினேன்.

    மதுரை விமான நிலையத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    அ.தி.மு.க.வில் எனது விசுவாசத்திற்கு ஜெயலலிதா பலமுறை சான்று அளித்துள்ளார். தற்போதைய சூழ்நிலையில் பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க. சக்திகள் அனைத்தும் ஒன்றாக இணைய வேண்டும்.

    6 மாதம் நான் அமைதியாக இருந்தால் அ.தி.மு.க.வில் என்னை சேர்த்துக் கொள்வதற்காக சிபாரிசு செய்கிறேன் என்று ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. கூறியிருக்கிறார்.

    என்னை அழைத்துச்சென்று அ.தி.மு.க.வில் சேர்த்துவிடுமாறு நாங்கள் யாரையும் கேட்கவில்லை. எனக்காக யாரும் சிபாரிசு செய்ய வேண்டாம்.

    ஒருங்கிணைந்து செயல்பட்டால் தான் வருகிற 2026 சட்டமன்ற தேர்தல் மட்டுமின்றி எந்தவொரு தேர்தல் வந்தாலும் நமக்கான வெற்றியை அந்த இயற்கையே உருவாக்கி கொடுக்கும்.

    இதற்காக எந்தவிதமான சிபாரிசோ, பரிந்துரையோ செய்ய தேவையில்லை. என்னை அ.தி.மு.க.வில் சேர்த்துவிடுமாறு யாரிடமும் சொல்லவும் இல்லை. சொல்லவும் மாட்டோம்.

    ஆர்.பி.உதயகுமார் பற்றி நான் கருத்து சொல்ல தேவையில்லை. அ.தி.மு.க. இளைஞர் பாசறை செயலாளராக வெங்கடேசன் இருந்தபோது என்னுடைய மகன்கள் 2 பேரில் ஒருவரை மாவட்ட செயலாளராக நியமனம் செய்ய இருப்பதாக கூறினார்.

    அப்போது ஆர்.பி.உதயகுமார் எந்த நிலையில் இருந்தார் என்பதை நான் கண்கூடாக பார்த்தேன். அதை சொல்வது அரசியல் நாகரீகமாக இருக்காது. வாரிசு அரசியல் வேண்டாம் என்பதற்காகவே நான் எனது மகன்களுக்கு மாவட்ட செயலாளர் பதவி வேண்டாம் என்று கூறினேன்.

    இதுபற்றி ஜெயலலிதாவும் உங்கள் மகன்களில் ஒருவருக்கு மாவட்ட செயலாளர் பதவி அளிப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை என்று கூறினார்.

    எனவே இனிமேலும் ஆர்.பி.உதயகுமார் என்னைப்பற்றி விமர்சனம் செய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும். தமிழகத்தை பொறுத்தவரை இருமொழிக்கொள்கையை அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் பின்பற்றி வந்தனர். எனவே இருமொழிக்கொள்கையே தமிழர்களின் உயிர் மூச்சாக இருந்து வருகிறது.

    செங்கோட்டையன் தனது மனத்தாங்கலை வெளிப்படுத்தியுள்ளார். விவசாயிகள் சங்கத்தினர் நடத்திய பாராட்டு விழாவில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்கள் இல்லாததால் அவர் மனம் வெதும்பி உள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அதிகரித்து வரும் நிலையில் ஓ.பன்னீர்செல்வம் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
    • சர்வாதிகார போக்கிற்கு எதிராக கேசவன் தீக்குளிக்க முயன்றது வேதனை அளிக்கிறது.

    அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இரு தரப்பிலும் தனித்தனியே ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்மம் மறுபடியும் வெல்லும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

    எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அதிகரித்து வரும் நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    அதிமுகவில் தற்போது சர்வாதிகார, அராஜகப்போக்கு நிலவி வருவதா ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவத்துள்ளார். சர்வாதிகார போக்கிற்கு எதிராக கேசவன் தீக்குளிக்க முயன்றது வேதனை அளிக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    ×