search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "drinkingwater"

    • கரைப்புதூர் ஊராட்சி வ. உ. சி. நகர் பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் குடியிருந்து வருகின்றனர்.
    • பொது குடிநீர் தொட்டியில் இருந்து வீடுகளுக்கு முறைகேடாக குடிநீர் வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சி வ. உ. சி. நகர் பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் குடியிருந்து வருகின்றனர். இந்தநிலையில் முறையாக குடிநீர் வழங்கவில்லை என்றும், பலமுறை இதுகுறித்து புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால், பெண்கள், ஆண்கள் , குழந்தைகள் உள்ளிட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இது குறித்து அவர்கள் கூறுகையில்:- வ .உ .சி. நகர் பகுதிக்கு 20 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் வருகிறது. குடிநீர் தொட்டியில் இருந்து விநியோகம் செய்யப்படும் குடிநீர்முறையாக வழங்கப்படுவதில்லை. இந்த நிலையில், பொது குடிநீர் தொட்டியில் இருந்து வீடுகளுக்கு முறைகேடாக குடிநீர் வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டிய குடிநீர் அளவு குறைந்தும், சில சமயம் குடிநீர் கிடைக்காமலும் போகிறது.

    எனவே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றனர். மறியல் போராட்டம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி கோவிந்தராஜ் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    குடிநீர் முறையாக வழங்கப்படும் என அவர் தெரிவித்ததை அடுத்து மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது.

    • பிரதான குழாயில் கசிவு சரி செய்யும் பணி நடைபெறுகிறது
    • எந்தெந்தெந்த ஏரியா விவரங்கள்

    திருச்சி,

    திருச்சிராப்பள்ளி மாநகராட்சி, ஸ்ரீரங்கம் மேலூர் ஆண்டவர் ஆசிரமம் பகுதியில் பொது தரைமட்ட கிணற்றிலிருந்து 55 நீர்த்தேக்கத் தொட்டி களுக்கு குடிநீர் விநியோ கம் செய்யப்பட்டு வருகி றது. இந்த நீர்தேக்க தொட்டியில் இருந்து குடிநீர் விநியோகத்திற்காக, சர்க்கார் பாளையம் பகுதியில் பதிக்கப்பட்டுள்ள 900 எம்.எம்.விட்டமுள்ள குழாயில், நீர் கசிவு ஏற்பட்டு சாலையில் வீணாக சென்றது. அதனை சரிசெய்யும் பணி இன்று நடைபெற்று வருகிறது.எனவே , மாநகராட்சி மண்டலம் -2க்கு உட்பட்ட விறகுப்பேட்டை புதியது. சங்கிலியாண்டபுரம் புதியது, சங்கிலியாண்டபுரம் பழையது, கல்லுக்குழி புதியது, கல்லுக்குழி பழையது, சுந்தராஜநகர் புதியது, சுந்தராஜபுரம் பழையது, காஜாமலை புதியது, மண்டலம் -3 அரியமங்கலம் கிராமம், அரியமங்கலம் உக்கடை, தெற்குஉக்கடை, ஜெகநாதபுரம் புதியது, ஜெகநாதபுரம் பழையது, மலையப்பநகர் புதியது, மலையப்ப நகர் பழையது, ரயில்நகர் புதியது , ரயில்நகர் பழையது, மகாலெட்சுமி நகர், முன்னாள் இராணுவத்தினர் காலணி புதியது, முன்னாள் இராணுவத்தினர் காலணி பழையது, மேலகல்கண்டார்கோட்டை செக்ஸன் ஆபிஸ், மேலகல்கண்டார்கோட்டை நாகம்மை வீதி, மேலகல்கண்டார்கோட்டை நூலகம், பொன்னேரி புரம்புதியது, பொன்னேரி புரம்பழையது, பொன்ம லைப்பட்டி, ஐஸ்வர்யாநகர், மண்டலம் -4 ஜே.கே. நகர், செம்பட்டு, காமராஜ்நகர், எல்ஐசி புதியது, எல்ஐசி சுப்பிரமணிய நகர், தென்றல்நகர் புதியது, தென்றல்நகர் பழையது, தென்றல்நகர் ஈ.பி. காலனி, வி.என்.நகர் புதியது, வி.என்.நகர் பழையது, சத்தியவாணி முத்து கே.கே நகர், சுப்பிரமணிய நகர் புதியது, சுப்பிரமணிய நகர் பழையது, ஆனந்த நகர், கே.சாத்தனூர், பஞ்சப்பூர், அம்மன் நகர், கவிபாரதிநகர், எடமலைப்பட்டிபுதூர் புதியது, காஜாமலை பழையது, கிராப்பட்டி புதியது, கிராப்பட்டி பழையது, அன்புநகர் பழையது, அன்புநகர் புதியது, ரெங்காநகர்ஆகிய உயர் நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு நாளை(23ந்தேதி) ஒருநாள் குடிநீர் விநியோ கம் நடைபெறாது.நாளை மறுநாள் (24ந்தேதி) அன்று முதல் வழக்கம் போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்று திருச்சி மாநகராட்சி ஆணையர் வைத்திலிங்கம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்து உள்ளார்.

    ×