search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "block"

    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான முகாமை நாளை திங்கட்கிழமை தருமபுரி மாவட்டத்தில் தொடங்கி வைக்க உள்ளார்கள்.
    • சேலம் மாவட்டத்தில் நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:- தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான முகாமை நாளை திங்கட்கிழமை தருமபுரி மாவட்டத்தில் தொடங்கி வைக்க உள்ளார்கள்.

    இதற்காக, நாளை காலை சென்னையில் இருந்து விமா னம் மூலம் சேலம் மாவட்டம், காமலாபுரம் விமான நிலையம் வருகைபுரிந்து, அங்கிருந்து சாலை வழியாக தருமபுரி மாவட்டத்தில் நிகழ்ச்சி நடைபெறும் தொப்பூருக்குச் சென்று, நிகழ்ச்சி முடிந்து மீண்டும் சாலை வழியாக சேலம் மாவட்டம்,காமலாபுரம் விமான நிலையம் வருகைதந்து, விமானம் மூலம் சென்னை செல்ல உள்ளார்கள். இதனையொட்டி, சேலம் மாவட்டத்தில் நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட அவர் தெரிவித்துள்ளார்.

    • கரைப்புதூர் ஊராட்சி வ. உ. சி. நகர் பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் குடியிருந்து வருகின்றனர்.
    • பொது குடிநீர் தொட்டியில் இருந்து வீடுகளுக்கு முறைகேடாக குடிநீர் வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சி வ. உ. சி. நகர் பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் குடியிருந்து வருகின்றனர். இந்தநிலையில் முறையாக குடிநீர் வழங்கவில்லை என்றும், பலமுறை இதுகுறித்து புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால், பெண்கள், ஆண்கள் , குழந்தைகள் உள்ளிட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இது குறித்து அவர்கள் கூறுகையில்:- வ .உ .சி. நகர் பகுதிக்கு 20 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் வருகிறது. குடிநீர் தொட்டியில் இருந்து விநியோகம் செய்யப்படும் குடிநீர்முறையாக வழங்கப்படுவதில்லை. இந்த நிலையில், பொது குடிநீர் தொட்டியில் இருந்து வீடுகளுக்கு முறைகேடாக குடிநீர் வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டிய குடிநீர் அளவு குறைந்தும், சில சமயம் குடிநீர் கிடைக்காமலும் போகிறது.

    எனவே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றனர். மறியல் போராட்டம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி கோவிந்தராஜ் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    குடிநீர் முறையாக வழங்கப்படும் என அவர் தெரிவித்ததை அடுத்து மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது.

    • காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் நடந்தது
    • குடிநீர் வழங்க கோரி நடைபெற்றது

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சி எல்லைக்குட்பட்ட 24 வார்டு பகுதிகளுக்கும், காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் பத்து நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. பின்னர் கடந்த சில வாரங்களாக வாரம் ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.

    இந்நிலையில், துறையூர் நகராட்சி எல்லைக்குட்பட்ட ஒன்பதாவது வார்டு பகுதிகளில் கடந்த 15 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படாததால், அதிருப்தி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் முறையாக குடிநீர் வழங்க கோரி காலி குடங்களுடன் நகராட்சி அலுவலகம் முன்பு சுமார் 50க்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதனை அறிந்த துறையூர் காவல் உதவி ஆய்வாளர் சந்திரகாந்த் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று, சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, நகராட்சி அதிகாரியிடம் குறைகளை தெரிவிக்க பொதுமக்களை நகராட்சி அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர். இதனை அடுத்து நகராட்சி அலுவலகத்திற்கு சென்ற அப்பகுதி பொதுமக்கள், தங்களது பகுதிக்கு முறையாக குடிநீர் வழங்க கோரியும், குடிநீர் வழங்காத அதிகாரிகளை கண்டித்து அங்கிருந்து அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து நகராட்சி அலுவலர்கள் உடனடியாக குடிநீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். துறையூரிலிருந்து பெரம்பலூர் செல்லும் பிரதான சாலையில், குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால், அப்பகுதியில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • ஏழை மக்களை பாதிக்கும் பால் விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு தென்னிந்திய பார்வர்டு பிளாக் வலியுறுத்தல் விடுத்துள்ளனர்.
    • இந்த சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று கோரி தமிழகம் தழுவிய அறப்போராட்டத்தை தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி விரைவில் நடத்தும்.

    அவனியாபுரம்

    தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் நிறுவனத் தலைவர் கே.சி.திருமாறன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசு ஆவின் பால் விலையை உயர்த்தி இருப்பது ஏழை, எளிய மக்களை கடுமையாக பாதிக்கிறது. இதனால் விலைவாசி உயர்வு ஏறும் நிலை ஏற்படுகிறது.

    ஏற்கனவே மின்சார கட்டண உயர்வு கடுமையாக பாதிக்கும் வேளையில் பால் விலை உயர்வும் மக்களை வறுமை சூழ்நிலைக்கு கொண்டு செல்லும். எனவே தமிழக அரசு உடனே போர்க்கால நடவடிக்கையாக பால் விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும்.

    தி.மு.க. அரசின் தேர்தல் அறிக்கையான குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ. ஆயிரம் தருவதாக கூறி இன்று வரை அதை தராமல் குடும்பத் தலைவிகளை ஏமாற்றியதை கண்டித்தும், பெண்களுக்கு கட்டணமில்லா பஸ் என்று கூறி சாதாரண கட்டண பஸ்களின் எண்ணிக்கையை குறைத்ததை கண்டித்தும், எளிய மக்களை பாதிக்கும் வகையில் வீட்டு வரி கட்டணத்தை உயர்த்தியதை கண்டித்தும், பத்திரப்பதிவு துறையில் உள்ள முறைகேடுகளை களையவும், தற்போது நடைமுறையில் உள்ள பத்திரப்பதிவின் கடினமான முறையை மாற்றி ரியல் எஸ்டேட் தொழிலை நம்பி வாழும் 1 கோடி நடுநிலையாளர்களை வாழ்வை பயன்பெறும் வகையில் பத்திரப்பதிவில் உள்ள நடைமுறை சிக்கல்களை எளிமை யாக்க வேண்டும் என்று பத்திரப்பதிவு துறை அமைச்சரை வலியுறுத்துகிறோம்.

    அன்றாடும் சாமானிய மக்களை பாதிக்கும் போக்குவரத்து துறையின் அபராத கட்டண உயர்வால் இந்த சட்டம் அமலுக்கு வந்த நாள் முதல் பல இடங்களில் பொது மக்களுக்கும், போக்கு வரத்து காவல்துறைக்கும் பிரச்சினை ஏற்பட்டு மக்கள் மற்றும் காவல் துறையில் இடையே முரண்பாடு ஏற்படுகிறது.

    இந்த முரண்பாடுகளை களைவதற்கு இந்த சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று கோரி தமிழகம் தழுவிய அறப்போராட்டத்தை தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி விரைவில் நடத்தும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சுதந்திர தினவிழாவை முன்னிட்டு நாடு முழுவதும் ரெயில்களில் புதுடெல்லிக்கு பார்சல் அனுப்ப தடைவிதிக்கப்பட்டுள்ளது.
    • மற்ற ஊர்களுக்கு அனுப்பப்படும் பார்சலும் பலத்த பரிசோதனைக்கு பின்பே ரெயில்களில் ஏற்றப்படுகின்றன.

    சேலம்:

    சுதந்திர தினவிழாவை முன்னிட்டு நாடு முழுவதும் ரெயில்களில் புதுடெல்லிக்கு பார்சல் அனுப்ப தடைவிதிக்கப்பட்டுள்ளது.

    வழக்கமாக சேலம் ரெயில்வே கோட்டத்தில் இருந்து நூல், பனியன், பட்டு வேஷ்டி, சேலை, இருசக்கர வாகனம், கொசுவலை உள்ளிட்டவை புதுடெல்லிக்கு பார்சல் அனுப்பப்படுகின்றன.

    தற்போது இவற்றை அனுப்ப நாளை வரை தடைவிதிக்கப்பட்டுள்ளது. மற்ற ஊர்களுக்கு அனுப்பப்படும் பார்சலும் பலத்த பரிசோதனைக்கு பின்பே ரெயில்களில் ஏற்றப்படுகின்றன.

    3 ஆண்டுகளுக்கு பிறகு மு‌ஷரப் துபாயில் இருந்து மே 1-ந்தேதி பாகிஸ்தான் திரும்புகிறார். #PervezMusharraf

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் மு‌ஷரப் (75). இவர் மீது 2014-ம் ஆண்டு தேசதுரோக வழக்கு பதிவுசெய்யப்பட்டது.

    இந்தநிலையில் 2016-ம் ஆண்டு மருத்துவ சிகிச்சைக்காக துபாய் சென்றார். ஒருவிதமான அபூர்வ நோயினால் பாதிக்கப்பட்டுள்ள அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    எனவே அவர் பாகிஸ்தான் திரும்பாமல் துபாயிலேயே தங்கியுள்ளார். இதற்கிடையே அவர் மீதான தேசதுரோக வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் அவர் சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராகவில்லை.

    கடந்த 1-ந்தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி ஆசிப் சயித் கோசா தலைமையிலான பெஞ்ச் மு‌ஷரப்புக்கு எச்சரிக்கை விடுத்தது.

    அவர் கோர்ட்டில் ஆஜராகாவிட்டால் தனது தரப்பு நியாயத்தை எடுத்துரைக்கும் தகுதியை இழக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்தனர்.

    எனவே அவர் வருகிற மே 1-ந்தேதி பாகிஸ்தான் திரும்புகிறார். 2-ந்தேதி கோர்ட்டில் ஆஜராகி தனது வாக்கு மூலத்தை பதிவு செய்கிறார்.

    இந்த தகவலை மு‌ஷரப்பின் வக்கீல் சல்மான் சப்தார் நிருபர்களிடம் தெரிவித்தார். மு‌ஷரப் தனது டாக்டரின் அறிவுரைப்படி நடந்து கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.  #PervezMusharraf

    ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. #BrexitDeal #TheresaMay
    பிரசல்ஸ்:

    ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையின் காலக்கெடு வருகிற 29-ந் தேதி முடிவடைகிறது. ஆனால் பிரெக்ஸிட்டுக்காக ஐரோப்பிய கூட்டமைப்புடன் இங்கிலாந்து பிரதமர் தெரசா மே ஏற்படுத்திய ஒப்பந்தத்தை 2 முறை அந்நாட்டு நாடாளுமன்றம் பெருவாரியான ஓட்டு வித்தியாசத்தில் நிராகரித்துவிட்டது.

    அத்துடன் ஒப்பந்தம் இல்லா ‘பிரெக்ஸிட்’ தீர்மானமும் 2 முறை நிராகரிக்கப்பட்ட நிலையில், பிரெக் ஸிட்டை தாமதப்படுத்துவதற்கான தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது. இதனால் பிரெக்ஸிட்டின் காலக்கெடுவை நீட்டிக்க வேண்டுமென தெரசா மே ஐரோப்பிய கூட்டமைப்பிடம் கோரிக்கை வைத்தார்.

    இந்த நிலையில் பெல்ஜியம் நாட்டில் நடந்து வரும் ஐரோப்பிய கூட்டமைப்பு தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்றுள்ள தெரசா மே, மாநாட்டுக்கு மத்தியில், ஐரோப்பிய கூட்டமைப்பின் தலைவர் டொனால்டு டஸ்க்கை சந்தித்து பிரெக்ஸிட் விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அப்போது பிரெக்ஸிட்டின் காலக்கெடுவை நீட்டிக்க டொனால்டு டஸ்க் ஒப்புக்கொண்டார். இது குறித்து அவர் கூறுகையில், “பிரெக்ஸிட்’ ஒப்பந்தத்தை இங்கிலாந்து நாடாளுமன்றம் ஆதரித்தால் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேற மே மாதம் 22-ந் தேதி வரை காலக்கெடு வழங்கப்படுகிறது. மாறாக அந்த ஒப்பந்தம் நிராகரிக்கப்பட்டால் அடுத்த மாதம் (ஏப்ரல்) 12-ந் தேதிக்குள் வெளியேறியாக வேண்டும்” என்றார்.

    மேலும் அவர் கூறுகையில், “இங்கிலாந்து இந்த 2 வாய்ப்புகளையும் தவறவிடும் பட்சத்தில் மே மாதம் 23-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை நடைபெறும் ஐரோப்பிய கூட்டமைப்பு நாடாளுமன்ற தேர்தலில் அந்நாடு பங்கேற்க வேண்டிய கட்டாயமான சூழல் உருவாகும்.

    இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நடைபெறும் ஓட்டெடுப்பு வெற்றிகரமாக நடந்து முடியாத பட்சத்தில் பிரெக்ஸிட்டின் காலக்கெடுவை நீட்டிப்பது என்பது தாமாகவே சாத்தியமற்றது ஆகும்.

    ஐரோப்பிய கூட்டமைப்பில் உள்ள மற்ற 27 நாடுகளும் ஒருமனதாக இதற்கு ஒப்புதல் அளிப்பார்கள்” என கூறினார்.

    இதையடுத்து ஐரோப்பிய கூட்டமைப்பு முன்வைத்த 2 வாய்ப்புகளையும் ஏற்றுக்கொள்வதாக தெரசா மே அறிவித்தார். இது குறித்து அவர், “ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேற வேண்டுமென மக்கள் வாக்களித்த 3 ஆண்டுகளுக்கு பிறகு, அவர்களை ஐரோப்பிய கூட்டமைப்பு நாடாளுமன்ற தேர்தலில் ஓட்டுப்போடுங்கள் என கூறுவது தவறானது என உறுதியாக நம்புகிறேன்” என் றார்.

    இதன் மூலம் தெரசா மே, அடுத்த வாரம் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தம் மீது 3-வது முறையாக ஓட்டெடுப்பு நடத்துவார் என தெரிகிறது. ஆனால் ‘பிரெக்ஸிட்’ விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் மீண்டும் ஓட்டெடுப்பு நடத்த அனுமதிக்க முடியாது என சபாநாயகர் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

    இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தம் மீது 3-வது முறையாக ஓட்டெடுப்பு நடத்த அனுமதி கிடையாது என சபாநாயகர் ஜான் பெர்கோவ் அதிரடி உத்தரவு பிறப்பித்தார். #BrexitDeal #TheresaMay #JohnBercow
    லண்டன்:

    ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் நடவடிக்கை ‘பிரெக்ஸிட்’ என அழைக்கப்படுகிறது. இதற்கான காலக்கெடு வருகிற 29-ந் தேதி முடிவடைகிறது.

    ஆனால் திட்டமிட்டபடி ‘பிரெக்ஸிட்’ வெற்றிகரமாக நடப்பது கேள்விக்குறியாகி உள்ளது. பிரெக்ஸிட்டுக்காக, ஐரோப்பிய கூட்டமைப்புடன் இங்கிலாந்து பிரதமர் தெரசா மே ஏற்படுத்திய ஒப்பந்தம்தான் இதற்கு முட்டுக்கட்டையாக உள்ளது.

    கடந்த ஜனவரி மாதம் 15-ந் தேதி இந்த ஒப்பந்தம் நாடாளுமன்றத்தில் ஓட்டெடுப்புக்கு விடப்பட்டபோது பெரும்பான்மையான எம்.பி.க்கள் அதனை நிராகரித்துவிட்டனர்.

    அதேபோல், ஒப்பந்தம் இல்லாமல் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவதற்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் இங்கிலாந்து எம்.பி.க்கள் புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த வலியுறுத்துகிறார்கள்.



    ஆனால் ஐரோப்பிய கூட்டமைப்போ ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையில் புதிய ஒப்பந்தத்துக்கு வாய்ப்பு இல்லை என கைவிரித்துவிட்டது. எனவே எம்.பி.க்களை சமாதானம் செய்யும் வகையில் ஏற்கனவே உள்ள ஒப்பந்தத்தில் சில சட்டப்பூர்வ மாறுதல்களை தெரசா மே கொண்டுவந்தார்.

    அதனை தொடர்ந்து, கடந்த வாரம் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் இந்த திருத்தப்பட்ட ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தம் ஓட்டெடுப்புக்கு விடப்பட்டது. எனினும் அந்த ஒப்பந்தத்தையும் எம்.பி.க்கள் நிராகரித்துவிட்டனர்.

    அதேசமயம், பிரெக்ஸிட் நடவடிக்கையை தாமதப்படுத்தும் தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. எனினும் சிறப்பான ஒரு ஒப்பந்தத்துடன் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் என நம்பிக்கை தெரிவித்துள்ள தெரசா மே, ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தம் மீது மீண்டும் ஓட்டெடுப்பு நடத்த ஆலோசித்து வருவதாக கூறப்பட்டது.

    இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தம் மீது 3-வது முறையாக ஓட்டெடுப்பு நடத்த அனுமதி கிடையாது என சபாநாயகர் ஜான் பெர்கோவ், அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.

    இதுபற்றி அவர் கூறுகையில், “நாடாளுமன்றத்தின் பொன்னான நேரத்தை வீணடிப்பதை தடுக்கவும், ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட முடிவுக்கு உரிய மரியாதை அளிக்கவும் இந்த நடவடிக்கை அத்தியாவசியமாகி உள்ளது” என்றார்.

    மேலும் அவர், “எம்.பி.க்களின் நிலைப்பாட்டில் மாற்றம் வராத நிலையில் ஏற்கனவே 2 முறை பெருவாரியான ஓட்டு வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்ட ஒப்பந்தத்துக்கு ஓட்டுபோடும்படி அவர்களை கேட்க முடியாது” என கூறினார்.

    சபாநாயகரின் இந்த அதிரடி உத்தரவு தெரசா மேவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதை மேலும் சிக்கலாக்கி உள்ளது.

    இதற்கிடையில், சபாநாயகரின் அறிவிப்பை தொடர்ந்து அடுத்தகட்டமாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, மந்திரி சபையை கூட்டி தெரசா மே அவசர ஆலோசனை நடத்தினார். #BrexitDeal #TheresaMay #JohnBercow 
    தேச துரோக வழக்கில் விசாரணைக்கு ஆஜாராகாத பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்பின் பாஸ்போர்ட் மற்றும் அடையாள அட்டை முடக்கம் செய்யப்பட்டது. #PervezMusharraf
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் மு‌ஷரப் (74). இவர் 1999 முதல் 2008-ம் ஆண்டு வரை பதவியில் இருந்தார்.

    இவர் பதவியில் இருந்த போது 2007-ம் ஆண்டு அவரை நிலை பிரகடனம் செய்யப்பட்டது. அப்போது அவர் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பலரை வீட்டு காவலில் வைத்தார். 100-க்கும் மேற்பட்ட நீதிபதிகளை பதவி நீக்கம் செய்தார்.

    தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததாக சிறப்பு கோர்ட்டில் அவர் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கு விசாரணையில் ஆஜராக மு‌ஷரப்புக்கு பல தடவை சம்மன் அனுப்பப்பட்டது. தற்போது துபாயில் தங்கியிருக்கிறார். அதனால் கோர்ட்டில் ஆஜராகவில்லை.

    அதை தொடர்ந்து மு‌ஷரப்பின் பாஸ்போர்ட் மற்றும் அடையாள அட்டையை முடக்கி வைக்க பாகிஸ்தான் உள்துறை அமைச்சகத்துக்கு கோர்ட்டு உத்தரவிட்டது. அதனால் அவர் வெளிநாடு பயணம் மேற்கொள்ள முடியாது. வங்கிகளில் பணப்பரிமாற்றம் செய்ய முடியாது. பாகிஸ்தான் மற்றும் வெளிநாடுகளில் சொத்துக்களை வாங்கவோ, விற்கவோ முடியாது.

    ஏற்கனவே இந்த வழக்கில் மு‌ஷரப்பை கைது செய்ய சர்வதேச போலீஸ் உதவியை நாடும்படி உள்துறை அமைச்சகத்துக்கு சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    வழக்கு விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் மு‌ஷரப்பிற்கு தூக்கு தண்டனை அல்லது ஆயுள் தண்டனை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. #PervezMusharraf
    ×