என் மலர்

    நீங்கள் தேடியது "Parcel"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • விமான நிலையங்களில் சுங்க அதிகாரிகள் கண்காணிப்பை பலப்படுத்தினர்.
    • பொடி வடிவில் 410 கிராம் தங்கம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

    திருவனந்தபுரம்:

    வளைகுடா நாடுகளில் இருந்து கேரளாவுக்கு தங்கம் கடத்தி வரும் சம்பவங்கள் அடிக்கடி நடந்தது. இதையடுத்து விமான நிலையங்களில் சுங்க அதிகாரிகள் கண்காணிப்பை பலப்படுத்தினர்.

    இதையடுத்து கடத்தல் காரர்கள் விமான பார்சல் மூலம் தங்கம் கடத்த தொடங்கினர். அதனையும் சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்து பறிமுதல் செய்து வந்தனர். இந்நிலையில் ஐக்கிய அரபு நாட்டில் இருந்து கேரளாவின் மலப்புரத்தை சேர்ந்தவருக்கு ஒரு பார்சல் வந்தது. அதனை அதிகாரிகள் சோதித்து பார்த்தபோது, அதில் பொடி வடிவில் 410 கிராம் தங்கம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

    அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்ததோடு, அந்த பார்சலை அனுப்பியது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த மாதத்தில் மட்டும் கேரளாவுக்கு விமான பார்சல் மூலம் தங்கம் கடத்தி வர முயன்றது இது 4-வது முறையாகும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சங்க 34-வது கோட்ட அளவிலான கூட்டம் நடைபெற்றது.
    • உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு ஏற்ப ஊழியர்களுக்கு மாதம் ரூ.12 ஆயிரம் வழங்க வேண்டும்.

    திருவாரூர்:

    திருவாரூரில் தபால்துறை யின் அகில இந்திய ஆர்எம்எஸ், எம்எம்எஸ் ஊழியர் சங்க 34-வது கோட்ட அளவிலான கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு கோட்டப்பொறியாளர் வெங்கடசுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாநில முன்னாள் அமைப்பு செயலாளர் தர்மதாஸ் தேசிய கொடியேற்றினார். சம்மேளனக் கொடியை மாநில செயலாளர் ரமேஷ் ஏற்றி வைத்தார். முன்னாள் மாநிலத்தலைவர் கணேசன் கூட்டத்தை தொடங்கி வைத்தார். நாகை மாலி எம்எல்ஏ, மாநில செயலாளர் பரந்தாமன், எழுத்தாளர் சுரேஷ் பிரதீப் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    நிகழ்ச்சியில் திருவாரூர் அஞ்சலகத்தில் ஸ்பீடு போஸ்ட், பார்சல் பிரிவு ஆகியவற்றை ஏற்படுத்த வேண்டும். உச்சநீதி மன்ற தீர்ப்புக்கு ஏற்ப ஊழியர்களுக்கு மாதம் 12 ஆயிரம் வழங்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக கோட்ட துணைத் தலைவர் மனோஜ் குமார் வரவேற்றார்.

    முடிவில் கிளைச்செயலாளர் சத்தியராஜ் நன்றி கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சுதந்திர தினவிழாவை முன்னிட்டு நாடு முழுவதும் ரெயில்களில் புதுடெல்லிக்கு பார்சல் அனுப்ப தடைவிதிக்கப்பட்டுள்ளது.
    • மற்ற ஊர்களுக்கு அனுப்பப்படும் பார்சலும் பலத்த பரிசோதனைக்கு பின்பே ரெயில்களில் ஏற்றப்படுகின்றன.

    சேலம்:

    சுதந்திர தினவிழாவை முன்னிட்டு நாடு முழுவதும் ரெயில்களில் புதுடெல்லிக்கு பார்சல் அனுப்ப தடைவிதிக்கப்பட்டுள்ளது.

    வழக்கமாக சேலம் ரெயில்வே கோட்டத்தில் இருந்து நூல், பனியன், பட்டு வேஷ்டி, சேலை, இருசக்கர வாகனம், கொசுவலை உள்ளிட்டவை புதுடெல்லிக்கு பார்சல் அனுப்பப்படுகின்றன.

    தற்போது இவற்றை அனுப்ப நாளை வரை தடைவிதிக்கப்பட்டுள்ளது. மற்ற ஊர்களுக்கு அனுப்பப்படும் பார்சலும் பலத்த பரிசோதனைக்கு பின்பே ரெயில்களில் ஏற்றப்படுகின்றன.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வருவாயை அதிகரிக்கும் நோக்கில், அரசு விரைவு பஸ்களில் கூரியர், பார்சல் அனுப்பும் திட்டம் துவங்கப்பட உள்ளது.
    • பஸ்சுக்கு மூன்று சரக்கு பெட்டி இணைக்கப்படுகிறது.

    திருப்பூர் :

    வருவாயை அதிகரிக்கும் நோக்கில், அரசு விரைவு பஸ்களில் நாளை 3ம் தேதி முதல் கூரியர், பார்சல் அனுப்பும் திட்டம் துவங்கப்பட உள்ளது. அதற்காக பஸ்சின் பக்க வாட்டில் 2 சரக்கு பெட்டி, பஸ்சுக்கு பின்னால் ஒரு சரக்கு பெட்டி என, பஸ்சுக்கு மூன்று பெட்டி இணைக்கப்படுகிறது. அதன்படி நாள் அல்லது மாத வாடகையில் சரக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

    இதற்கு 250 கிராமுக்கு, 50 ரூபாய் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.திருப்பூர் அரசு போக்குவர–த்து கழக வணிகப்பிரிவு அதிகாரிகள் கூறுகையில், ''எஸ்.இ.டி.சி., டிப்போ கோவையில் தான் உள்ளது. திருப்பூரில் இருந்து சென்னை, திருப்பதிக்கு இரண்டு பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகிறது.நாகர்கோ–வில், மார்த்தாண்டம், திருநெல்வேலி, பெங்களூரு வழித்தடத்தில் இயக்கப்படும் பஸ்கள், அந்தந்த கிளையில் இருந்து இயக்கப்படுகிறது. கிளைகளில் பார்சல், கூரியர் முன்பதிவு செய்வது குறித்து விரிவான அறிவிப்பு பின்னர் வரும்'' என்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அதிகாரிகள் சாலையோர பழக்கடைகள் முதல் டீ கடை, வணிக வளாகங்கள் உள்ளிட்ட கடைகளில் தொடர்ந்து ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • கடைக்கு வரும் உணவு பார்சல் வாங்க வருகை தரும் வாடிக்கையாளர்கள் வீட்டில் இருந்து பாத்திரம் மற்றும் பைகளை கையோடு எடுத்து வருமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

    திருச்சி:

    திருச்சி மாநகராட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் பைகளை ஒழிப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதன் தொடர்ச்சியாக அதிகாரிகள் சாலையோர பழக்கடைகள் முதல் டீ கடை, வணிக வளாகங்கள் உள்ளிட்ட கடைகளில் தொடர்ந்து ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அப்போது அந்த கடைகளில் இருக்கும் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து கடை உரிமையாளர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகின்றது. நேற்று மட்டும் 497 கடைகளில் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டு சுமார் 502 கிேலா பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். மாநகராட்சியில் உள்ள 5 கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் நேற்றையதினம் வரையில் ரூ.1 லட்த்து 42 ஆயிரம் அபராதமாக வசூலாகியுள்ளது.

    இதனால் டீக்கடைகள், ஓட்டல்களின் உரிமையாளர்கள் தொடர்ந்து கலக்கம் அடைந்துள்ளனர். மேலும் திருச்சி மாநகரில் கடைகள் நடத்தி வரும் உரிமையாளர்கள் கடைக்கு வரும் உணவு பார்சல் வாங்க வருகை தரும் வாடிக்கையாளர்கள் வீட்டில் இருந்து பாத்திரம் மற்றும் பைகளை கையோடு எடுத்து வருமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

    மேலும் இதுகுறித்து ஓட்டல் உரிமையாளர்கள் கூறுகையில், டீ கடைகள், மளிகை கடைகள், ஓட்டல்கள் உள்ளிட்ட கடைகளில் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தி தான் பார்சல்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. சாம்பார், சட்னி உள்ளிட்ட குழம்பு வகைகளும் பாலித்தீன் பைகளில் தான் வழங்கபடுகிறது.

    ஆனால் தற்போது திருச்சி மாநகரில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். அதுவும் அனைத்து கடைகள், நிறுவனங்களில் ஆய்வுகள் நடத்தப்பட்டு பிளாஸ்டிக் பயன்பாடு இருந்தால் தொடர்ந்து அபராதம் விதிக்கிறார்கள். அந்த பொருட்களையும் பறிமுதல் செய்கிறார்கள்.இதனால் தொடர்ந்து ஓட்டல்கள், கடைகள் நடத்த முடியாமல் திணறி வருகிறோம். முடிந்த அளவிற்கு வாழை இலையில் தான் பொது மக்களுக்கு பார்சல் வழங்கி வருகிறோம்.

    ஆகவே பொதுமக்களாகிய நீங்கள் ஓட்டல்களுக்கு உணவு பொருட்கள் வாங்க வருகின்ற பொழுது வீட்டிலிருந்தே பைககள் அல்லது பாத்திரங்களை கொண்டு வந்தால் அதில் தங்களுக்கான உணவு பொருட்களை வாங்கி செல்லலாம். எங்களுக்கும் அதிகாரிகள் ஆய்வின் போது எந்தவித பிரச்சினையும் ஏற்படாது.

    பொதுமக்களும் எவ்வித அச்சமுமின்றி வீட்டிற்கு உணவு பொருட்களை எடுத்து செல்லலாம் என்றனர்.

    ×