search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Deputy Commissioner"

    • பார்சலில் கடத்தல் பொருட்கள் இருப்பதால் உங்களுக்கு வாட்ஸ் அப் மூலமாகவே வாரண்டை அனுப்பி கைது செய்ய முடியும் என்று மிரட்டல் விடுக்கிறார்கள்.
    • வெளிநாடுகளில் இருந்து வெளி மாநிலங்களில் இருந்தும் மிகப்பெரிய ‘நெட்வொர்க்’ அமைத்து மோசடியை அரங்கேற்றி வருகிறார்கள்.

    சென்னை:

    செல்போன்கள் மூலமாக இன்று இருந்த இடத்தில் இருந்தே எல்லா வேலைகளையும் செய்துவிட முடிகிறது. அதே நேரத்தில் செல்போன் வழியாக பல்வேறு இழப்புகளையும் சந்திக்க நேரிடுகிறது.

    செல்போனில் தொடர்பு கொண்டு பேசும் நபர்கள் சம்பந்தப்பட்ட நபர்களின் வங்கி கணக்கில் இருந்து விதவிதமான வழிகளில் பணத்தை உருவிக் கொண்டிருக்கிறார்கள்.

    உங்களது ஏ.டி.எம். கார்டு செயல் இழந்துவிட்டது. அதனை சரிசெய்ய வேண்டும் என்று பேசி வங்கி கணக்கு விவரங்களை கேட்டு பணத்தை சுருட்டி வந்த மோசடி பேர்வழிகள் நாளுக்கு நாள் புதுப்புது வழிகளில் பொதுமக்களின் வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை வாரிச் சுருட்டிக் கொண்டே இருக்கிறார்கள். இதுபோன்ற மோசடிக்காரர்கள் வெளிநாடுகளில் இருந்து வெளி மாநிலங்களில் இருந்தும் மிகப்பெரிய 'நெட்வொர்க்' அமைத்து மோசடியை அரங்கேற்றி வருகிறார்கள். இதனால் அவர்களை பிடிப்பது என்பது சவாலாகவே இருந்து வருகிறது.

    இந்நிலையில் இந்த ஆன்லைன் மோசடி கும்பல் பொதுமக்களின் வங்கி கணக்கில் இருந்து தற்போது புதிதாக நூதன முறையில் பலரை ஏமாற்றி பணத்தை அபகரிக்க தொடங்கி உள்ளனர்.

    உங்களது முகவரிக்கு தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் பார்சலில் வந்துள்ளது. நாங்கள் கண்டுபிடித்துவிட்டோம். போதை பொருள் தடுப்பு பிரிவில் இருந்து பேசுகிறோம் என்று மோசடி ஆசாமி ஒருவன் முதலில் போனில் பேசுகிறார். பின்னர் பேசும் நபர் போலீஸ் அதிகாரி என்று கூறுகிறார்.

    இதனால் எதிர்முனையில் பேசிக் கொண்டிருக்கும் அப்பாவி மக்கள் அரண்டு விடுகிறார்கள். இதுபோன்று சென்னையை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் 62 லட்சம் பணத்தை இழந்துள்ளார்.

    தொழில் அதிபரின் செல்போனுக்கு அறிமுகம் இல்லாத புதிய நம்பரில் இருந்து அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர் மும்பை துணை கமிஷனர் பேசுவதாக கூறியுள்ளார். உங்களது பெயரில் மும்பையில் உங்களது பெயரில் மும்பையில் இருந்து தாய்லாந்துக்கு கூரியர் மூலமாக பார்சல் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில் 5 பாஸ்போர்ட்டுகள் 3 கிரெடிட் கார்டுகள் மற்றும் போதை பொருட்கள் உள்ளன என்றும் இதனால் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப் போகிறோம் என்றும் அந்த நபர் எச்சரித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சென்னை தொழில் அதிபர், நான் சென்னையில் இருக்கிறேன். எனது பெயரை யாரோ தவறாக பயன்படுத்தி உள்ளனர். எனக்கும், அந்த பார்சலுக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறியுள்ளார்.

    இருப்பினும் மோசடி ஆசாமி போனில் மிரட்டி, நாங்கள் சொல்லும் வங்கி கணக்குக்கு பணம் அனுப்ப வேண்டும் என்று கூறியுள்ளார். இதனால் பயந்து போன சென்னை தொழில் அதிபர் ரூ.62 லட்சத்து 99 ஆயிரம் பணத்தை அனுப்பி உள்ளார்.

    இதுபற்றி யாரிடமும் கூறக்கூடாது என்று மிரட்டல் விடுத்த மோசடி கும்பல் பின்னர் தொடர்பை துண்டித்துவிட்டது. முன்னதாக தொழில் அதிபர் திரும்ப திரும்ப தொடர்பு கொண்டு பேச முற்பட்டுள்ளார். ஆனால் அதற்கு பயன் கிடைக்கவில்லை.

    இந்த மோசடி தொடர்பாக சென்னை சைபர் கிரைம் போலீஸ் துணை கமிஷனர் கீதாஞ்சலி கூறியதாவது:-

    இதுபோன்ற சைபர் கிரைம் மோசடி பேர்வழிகள் அதிக சம்பளம் வாங்கும் நபர்களை கண்காணித்து அவர்களிடமிருந்து பணத்தை பறிக்கிறார்கள்.

    பார்சலில் கடத்தல் பொருட்கள் இருப்பதால் உங்களுக்கு வாட்ஸ் அப் மூலமாகவே வாரண்டை அனுப்பி கைது செய்ய முடியும் என்று மிரட்டல் விடுக்கிறார்கள். இந்த யோசனைகள் 'ஸ்கைப்' செயலி மூலமாக அரங்கேற்றப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

    இந்த மோசடி பேர்வழிகள் ஆரம்பத்தில் பணத்தை கேட்பது இல்லை. வங்கி கணக்குகள் மற்றும் அதன் உள்ளே நுழையக்கூடிய வழிகளை மிரட்டி கேட்டுப் பெற்று வருகிறார்கள். இதன் பிறகே வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுக்கிறார்கள் அல்லது மிரட்டி பணத்தை பரி மாற்றம் செய்ய சொல்கிறார்கள். தாய்லாந்து மற்றும் ஹாங்காங் பகுதியில் இருந்தே இந்த மோசடிகள் அரங்கேற்றப்பட்டு வருகிறது.

    எனவே இதுபோன்ற நபர்களிடம் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்.

    ஆன்லைன் மூலமாக பணத்தை இழந்துவிட்டால் உடனடியாக சைபர் கிரைம் உதவி எண்ணை 1930-ல் உடனடியாக புகார் செய்தால் அந்த பணம் கிடைப்பதற்கு வாய்ப்பு ஏற்படும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இதுபோன்ற சைபர் கிரைம் மோசடி பேர்வழிகளிடம் ஏமாறும் பொது மக்கள் www.cybercrime gov.in என்ற முகவரியிலும் புகார் செய்யலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • 10 பேர் இணை இயக்குனர்களாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
    • சுல்தானா சென்னை நகராட்சிகளின் நிர்வாக இயக்குனரக இணை இயக்குனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    திருப்பூர்:

    தமிழகத்தில் நகராட்சிகளின் நிர்வாக இயக்குனரகத்தில் 10 பேர் இணை இயக்குனர்களாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி திருப்பூர் மாநகராட்சி துணை ஆணையாளராக இருந்த சுல்தானா சென்னை நகராட்சிகளின் நிர்வாக இயக்குனரக இணை இயக்குனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    • சேலம் மாநகர வடக்கு துணை கமிஷனர் ஆக பணியாற்றி வந்த மாடசாமி இன்று பணி ஓய்வு பெறுகிறார்.
    • கௌதம் கோயல் சேலம் மாநகர வடக்கு துணை கமிஷனராக நியமிக்கப்பட்டார்.

    சேலம்:

    சென்னை தலைமை கூடுதல் செயலாளர் நேற்று ஏ எஸ் பி களுக்கு பதவி உயர்வு மற்றும் துணை கமிஷனர்களை மாறுதல் செய்து உத்தரவிட்டார்.சேலம் மாநகர வடக்கு துணை கமிஷனர் ஆக பணியாற்றி வந்த மாடசாமி இன்று பணி ஓய்வு பெறுகிறார்.அதனைத் தொடர்ந்து மதுரை மாநகர தலைமையிடத்து துணை கமிஷனராக பணியாற்றிய கௌதம் கோயல் சேலம் மாநகர வடக்கு துணை கமிஷனராக நியமிக்கப்பட்டார்.

    இதேபோல் வேலூர் மாவட்ட சைபர் க்ரைம் கூடுதல் துணை சூப்பிரண்டு குணசேகரன் சேலம் மாநகர தலைமையிடத்து துணை கமிஷனராக நியமிக்கப்பட்டார். இவர்கள் இருவரும் விரைவில் பொறுப்பேற்க உள்ளார்கள். சேலம் மாநகர வடக்கு போலீஸ் துணை கமிஷனர் பணியாற்றிய மாடசாமி இன்று பணி ஓய்வு பெறுவதால் இன்று காலை முதல் சேலம் மாநகரத்தில் உள்ள காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    • செல்லத்தம்மன் கோவில் திருவிழா வருகிற 13-ந் தேதி தொடங்குகிறது.
    • மேற்கண்ட தகவலை மீனாட்சி அம்மன் கோவில் துணை ஆணையர் அருணாசலம் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் உப கோவிலாக குறிப்பிடத்தக்கது, வடக்கு வாசல் செல்லத்தம்மன் கோவில். இங்கு கண்ணகி இடது கையில் சிலம்புடனும், வலது கையில் செண்டு ஏந்திய நிலையிலும் எழுந்தருளி உள்ளார்.

    மதுரை வடக்கு வாசல் செல்லத்தம்மனை வழிபடு வோருக்கு பேச்சாற்றல் ஏற்படும். பகைவரால் ஏற்படும் தொல்லைகள் நீங்கி பிரச்சினைகள் அகலும் என்பது ஐதீகம் ஆகும். இத்தகைய சிறப்பு வாய்ந்த வடக்கு வாசல் செல்லத்தம்மன் கோவிலில் வருகிற 12-ந் தேதி இரவு வாஸ்து சாந்தியுடன் திருவிழா தொடங்குகிறது.

    13-ந் தேதி கொடியேற்றத்துடன் உற்சவர் திருவிழா தொடங்கி 22-ந் தேதி வரை நடக்கிறது. இதில் முத்தாய்ப்பாக 20-ந் தேதி செல்லத்தம்மன் பட்டாபிஷேகம் நடக்கிறது. அப்போது செல்லத்தம்மன் மதுரை மீனாட்சி சுந்தரே சுவரர் கோவிலில் எழுந்தருளுகிறார்.

    21-ந் தேதி சட்டத்தேரும், 22-ந் தேதி மலர்ச்சப்பரமும் நடக்கிறது. மேற்கண்ட தகவலை மீனாட்சி அம்மன் கோவில் துணை ஆணையர் அருணாசலம் தெரிவித்துள்ளார்.

    • நெல்லை மாநகர பகுதிகளில் குற்ற சம்பவங்களை தடுக்க 3-வது கண் எனப்படும் சி.சி.டி.வி. காமிராக்கள் பொருத்தப்படுகிறது.
    • இந்த கட்டுப்பாட்டு அறையில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் ஒரு போக்குவரத்து காவலர் பணியில் ஈடுபடுத்தப்படுவார்.

    நெல்லை:

    நெல்லை மாநகர பகுதிகளில் குற்ற சம்பவங்களை தடுக்க 3-வது கண் எனப்படும் சி.சி.டி.வி. காமிராக்கள் பொருத்தப்படுகிறது.

    ஏற்கனவே சந்திப்பு, டவுன் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் குற்ற சம்பவங்கள் தடுக்கப் பட்டும், குற்றவாளிகள் விரைவில் அடையாளம் காணப்பட்டும் வருகிறது.

    இந்நிலையில் கொக்கிரகுளத்தில் இருந்து சமாதானபுரம் வரை மாநகர காவல்துறை சார்பில் 54 காமிராக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    இதற்கான கட்டுப்பாட்டு அலுவலகம் வண்ணார்பேட்டை செல்லப்பாண்டியன் பாலத்தின் கீழ் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த சி.சி.டி.வி. காமிராக்களின் இயக்கத்தை கிழக்கு மண்டல துணை கமிஷனர் சீனிவாசன் இன்று தொடங்கி வைத்தார்.

    அப்போது ஏட்டுகள் அருண் ஷோபா, கண்ணன் ஆகியோரை அழைத்து சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை இயக்கி வைக்குமாறு அறிவுறுத்தினார்.

    பின்னர் அவ்வழியாக ஹெல்மட் அணிந்து சென்ற வாகன ஓட்டிகளுக்கு சிறு பரிசுளும், இனிப்புகளும் வழங்கினார்.

    பின்னர் அவர் நிருபர் களிடம் கூறியதாவது:-

    இந்த கட்டுப்பாட்டு அறையில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் ஒரு போக்குவரத்து காவலர் பணியில் ஈடுபடுத்தப்படுவார்.

    குற்ற சம்பவங்களை தடுக்க சி.சி.டி.வி. காமிராக்கள் அமைப்பது கட்டாயம் ஆகிவிட்டது.

    மாநகர பகுதி முழுவதும் 10 ஆயிரம் சி.சி.டி.வி. காமிராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் தொடங்கப்பட்டு விரைவில் நடைமுறைக்கு வரும். இதன்மூலம் மாநகரில் குற்ற சம்பவங்கள், போக்கு வரத்து விதிமீறல்கள் பெருமளவு குறைக்கப்படும்.

    போதை பொருட்கள் குறித்து பொதுமக்கள் 100 என்ற அவசர எண்ணில் தகவல் தெரிவிக்கலாம்.

    நாளை மாஞ்சோலை தொழிலாளர்கள் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி நெல்லை தாமிரபரணி ஆற்றுப்பகுதியில் மாநகர கமிஷனர் அவினாஷ் குமார் தலைமையில் துணை கமிஷனர் சீனிவாசன், சரவண குமார் மேற்பார்வையில் 6 உதவி கமிஷனர்கள், 24 இன்ஸ்பெக்டர்கள், 40 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    அஞ்சலி செலுத்த வருவோர் அமைதியான முறையில் காலை 9.15 மணி முதல் மாலை 5.15 வரை மரியாதை செலுத்தி செல்லலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பாளை முருகன்குறிச்சி சிக்னல் பகுதியில் போக்குவரத்து போலீசாருக்கு புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது.
    • நெல்லை மாநகர பகுதிகளில் இருசக்கர வாகனத்தில் வரும் நபர்கள் கண்டிப்பாக தலைக்கவசம் அணிய வேண்டும்.

    நெல்லை:

    பாளை முருகன்குறிச்சி சிக்னல் பகுதியில் போக்குவரத்து போலீசாருக்கு புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது.

    இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. அதனை மாநகர கிழக்கு மண்டல துணை கமிஷனர் சீனிவாசன் திறந்து வைத்தார்.

    தொடர்ந்து அந்தப் பகுதியில் ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிள் ஓட்டிவந்த வாகன ஓட்டிகளுக்கு அல்வா வழங்கினார். அதேபோல் ஹெல்மெட் அணியாமல் சென்றவர்களுக்கு திருக்குறள் எழுதுமாறு அறிவுறுத்தினார். முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு அறிவுரை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நெல்லை மாநகர பகுதிகளில் இருசக்கர வாகனத்தில் வரும் நபர்கள் கண்டிப்பாக தலைக்கவசம் அணிய வேண்டும். இதற்காக நெல்லை மாநகர காவல் துறை தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

    நெல்லை மாநகர பகுதியில் இருசக்கர வாகனங்களில் வரும் நபர்கள் தலைகவசம் அணியாமலும், நான்கு சக்கர வாகனங்களில் சீட் பெல்ட் அணியாமல் வருகிறார்கள். இது தொடர்பாக 1,200 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மாநகர பகுதிகளில் அதிவேகமாக மோட்டார் சைக்கிளில் மாணவர்கள் சென்றால் அவருடைய வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். மேலும் காவல் நிலையத்திற்கு அவர்களின் பெற்றோர்களை அழைத்து வரப்பட்டு எச்சரிக்கை செய்யப்படும்.

    அதிக சத்தம் எழுப்பும் ஏர்ஹாரன் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதனை மீறி சிலர் பயன்படுத்தி வருகிறார்கள். அதிக ஒலி எழுப்பும் ஹாரன் பயன்படுத்துவோர் மீது அபராதம் விதிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் போக்குவரத்து துணை கமிஷனர் முத்தரசு, இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

    • நெல்லை மாநகர கிழக்கு மண்டல புதிய போலீஸ் துணை கமிஷனராக சீனிவாசன் பதவியேற்றுக்கொண்டார்.
    • போலீஸ் மற்றும் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

    நெல்லை:

    நெல்லை மாநகர கிழக்கு மண்டல புதிய போலீஸ் துணை கமிஷனராக இன்று சீனிவாசன் பொறுப்பேற்றுக்கொண்டார். இவர் கடந்த 2005-ம் ஆண்டு குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்றார்.

    அதன்பின்னர் தஞ்சாவூர் மாவட்டத்தில் பயிற்சி துணை போலீஸ் சூப்பிரண்டாகவும், வல்லம், கும்பகோணம், தென்காசி, திருச்சி, கோட்டை, பொன்மலை ஆகிய இடங்களில் துணை போலீஸ் சூப்பிரண்டாகவும் பணியாற்றி உள்ளார்.

    கடந்த 2019-ம் ஆண்டு போலீஸ் சூப்பிரண்டாக பதவி உயர்வு பெற்று அரியலூர் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றினார்.

    2021-ம் ஆண்டு நெல்லை மாநகர சட்டம் மற்றும் ஒழுங்கு துணை போலீஸ் கமிஷனராகவும், பின்னர் திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாகவும், அதன் பின்னர் திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாகவும் பணியாற்றினார்.

    இவர் பணி காலத்தில் அண்ணா பதக்கம் மற்றும் அத்திவரதர் பதக்கம் பெற்றுள்ளார். புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட அவருக்கு போலீசார் மற்றும் அதிகாரிகள் வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொண்டனர்.

    ×