search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Motorcycles"

    ெரயில்வே சுரங்கப்பாதை மேல் புறத்தில் வாகனங்கள் செல்லும் வழியில் போக்குவரத்து இடையூறாக இருசக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன‌.

    கடலூர்:

    கடலூர் திருப்பாதிரி ப்புலியூரில் பஸ் நிலையம் உள்ளது. இந்த பஸ் நிலையத்திற்குள் இரு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கரம் வாகனம் செல்வதற்கு அனுமதி கிடையாது என போலீசார் அறிவித்திருந்தனர். இதனை மீறி கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் செல்லக்கூடிய பொது மக்களை கடும் எச்சரிக்கை செய்து அனுப்பி வந்ததோடு , போலீசார் அபராதம் விதித்து வந்தனர்.ெரயில்வே சுரங்கப்பாதை மேல் புறத்தில் வாகனங்கள் செல்லும் வழியில் போக்குவரத்து இடையூறாக இருசக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.இந்த நிலையில் இன்று காலை போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அமர்நாத் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வநாயகம், செந்தில்கு மார், தலைமை காவலர்கள் குமரேசன், வினோபாலன், போலீஸ்காரர் சுபாஷ் ஆகியோர் கடலூர் பஸ் நிலையத்தில் போக்குவர த்துக்கு இடையூறாகவும், போலீசார் எச்சரிக்கை செய்ததை மீறியும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10 மோட்டார் சைக்கிளை போலீசார் வாகனங்களில் ஏற்றி கொண்டு சென்றனர். மேலும் கடலூர் பஸ் நிலையத்திற்குள் இருசக்கர வாகனம் மற்றும் கார் போன்ற வாகனங்கள் வந்தால் கடும் நடவடிக்கை எடுப்பதோடு வாகனங்கள் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கடும் எச்சரிக்கை செய்தனர்.

    இதனை தொடர்ந்து ெரயில்வே சுரங்கப்பாதை மேல் புறத்தில் வாகனங்கள் செல்லும் வழியில் போக்குவரத்து இடையூறாக இருசக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதனை தொடர்ந்து போக்குவரத்து போலீசார் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை தாங்கள் கொண்டு வந்த வாகனத்தில் ஏற்றி சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

    • காவல்துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்ககள் எடுக்கப்பட்டு வருகிறது.
    • ஹெல்மெட் ல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நோட்டிஸ்கள் வழங்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    வாகன விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் ஹெல்மெட் அணிய வலியுறுத்தி நாகப்பட்டினம் மாவட்டம் காவல்துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

    அதன்படி ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் மோட்டார் சைக்கிளில் சென்று பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

    நாகை செம்போடை ஆர்.வி கல்லூரியில் இருந்து மோட்டார் சைக்கிளில் போலீஸ் சூப்பிரண்ட் ஹர்ஷ் சிங் தலைமையில் 150 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் மற்றும் கல்லூரி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் பேரணியில் ஈடுபட்டனர்.

    செம்போடை ஆர் வி இன்ஜினியரிங் கல்லூரியில் இருந்து புறப்பட்ட இந்த பேரணியானது வேதாரண்யம் சென்று முடிக்கப்பட்டு பின்பு பொதுமக்கள் மத்தியில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நோட்டிஸ்கள் வழங்கப்பட்டது.

    • வேகமாக வந்த மோட்டார் சைக்கிளை மறித்து போலீசார் சோதனை நடத்தினர்.
    • மோட்டார் சைக்கிளில் இருந்த மூட்டையில் 250 மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.

    நாகப்பட்டினம்:

    புதுச்சேரி மாநிலத்திலிருந்து நாகை வழியாக தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு சாராயம் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது.

    இதைத் தொடர்ந்து நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் உத்தரவின்பேரில் நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். திட்டச்சேரி பஸ் நிலையம் பகுதியில் திட்டச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அக்பர் அலி மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிளை மறித்து போலீசார் சோதனை நடத்தினர். சோதனையில் மோட்டார் சைக்கிளில் இருந்த மூட்டையில் 250 மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. மோட்டார் சைக்கிளில் வந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் வேளாங்கண்ணி சுனாமி குடியிருப்பு பூக்காரத்தெருவை சேர்ந்த கலை மாதவன் (வயது 36), வேளாங்கண்ணி செட்டித்தெரு ஜெயமாதா இல்லம் பகுதியை சேர்ந்த ஜூடு அருள்பிரகாசம் ( 49) ஆகியோர் என்பதும், அவர்கள் காரைக்கால் பகுதியில் இருந்து சாராயத்தை மோட்டார் சைக்கிளில் வேளாங்கண்ணி பகுதிக்கு கடத்தி சென்றதும் தெரியவந்தது.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த மதுபாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

    • கடந்த 3 ஆண்டுகளில் 2 கோடிக்கும் குறைவான வாகனங்கள் பதிவு செய்யப்பட்டன.
    • இந்தியாவுக்கு அடுத்தப்படியாக இந்தோனேசியா இருசக்கர வாகன பதிவில் 2-வது இடத்தில் உள்ளது.

    மோட்டார் சைக்கிள் பயன்பாட்டில் உலகில் இந்தியா தான் முதல் இடத்தில் உள்ளது. சாலை போக்குவரத்தின் வருடாந்திர புத்தகத்தின் தகவலின்படி இது தெரிய வந்துள்ளது. 2020-ம் ஆண்டு இந்தியாவில் 32.63 கோடி வாகனங்கள் இருந்தன. இவற்றில் கிட்டத்தட்ட 75 சதவீதம் இருச்சக்கர வாகனங்கள் ஆகும்.

    கடந்த 3 ஆண்டுகளில் 2 கோடிக்கும் குறைவான வாகனங்கள் பதிவு செய்யப் பட்டன. ஜூலை மத்தி வரை மொத்த எண்ணிக்கை 34.8 கோடியாக இருக்கிறது. இந்தியாவுக்கு அடுத்தப்படியாக இந்தோனேசியா இருசக்கர வாகன பதிவில் 2-வது இடத்தில் உள்ளது.

    கார்களின் எண்ணிக்கைகளில் இந்தியா 8-வது இடத்தில் உள்ளது. சீனா, அமெரிக்கா, ஜப்பான் முதல் 3 இடங்களில் உள்ளன.

    • அங்கு சந்தேகம் படும்படி நின்ற 2 பேர் போலீசாரை பார்த்தும் தப்பியோடி விட்டனர்.
    • டிரம் செட் வாசிக்க செல்வது போல சென்று கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

    மெலட்டூர்:

    பாபநாசம் அடுத்த இரும்புதலை அருகே மெலட்டூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகம் படும்படி நின்ற 2 பேர் போலீசாரை பார்த்தும் மோட்டார்சைக்கிளை வைத்து விட்டு தப்பியோடி விட்டனர்.

    பின்னர் போலீ சார் மோட்டார் சைக்கிளை கைபற்றி மோட்டார் சைக்கிள் நம்பரை வைத்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் பூண்டி அண்ணாநகர் பகுதியை சேர்ந்த முத்து (வயது 27), அதே ஊரை சேர்ந்த ஏழுமலை ( 20) என தெரியவந்தது.

    இதைத் தொடர்ந்து மெலட்டூர் போலீசார் ஏழுமலை, முத்து இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் ஏழுமலை, முத்து இருவரும் டிரம்செட் வாசிப்பவர்கள் என்பதும், திருவிழா மற்றும் இறப்பு நிகழ்ச்சிகளுக்கு டிரம் செட் வாசிக்க செல்வது போல சென்று கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

    இதைத் தொடர்ந்து போலீசார் 2 பேரையும் கைது செய்து அவர்களிமிருந்து 20 கஞ்ச பொட்டலங்களையும்.

    கஞ்ச விற்க பயன்படுத்திய 2 மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தை அடுத்த தூசூர் நடுவீதி பகுதியைச் சேர்ந்த வர் பெரியசாமி சாலப்பள்ளம் அருகே மோட்டார் சைக்கி ளில் சென்று கொண்டி ருந்தார்.
    • அப்போது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் அவர் மீது பயங்கர மாக மோதியது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தை அடுத்த தூசூர் நடுவீதி பகுதியைச் சேர்ந்த வர் பெரியசாமி (வயது 50). இவர் நேற்று திருச்சி ரோடு, சாலப்பள்ளம் அருகே மோட்டார் சைக்கி ளில் சென்று கொண்டி ருந்தார்.

    அப்போது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் அவர் மீது பயங்கர மாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பெரிய சாமி படுகாயம் அடைந்தார். இதனை பார்த்த அந்த பகுதியினர் அவரை மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியி லேயே அவர் பரிதாபமாக இறந்தார். மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்தவர், லேசான காயங்க ளுடன் தப்பி னார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மோட்டார் சைக்கிளில் அஸ்தம்பட்டி பிச்சார்ட்ஸ் ரோடு ஜங்ஷன் பகுதியில் சாலையை கடக்க முயன்றபோது, அந்த வழியாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள், முருகேசன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.
    • இவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு, சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    சேலம்:

    சேலம் அழகாபுரம்புதூர் ராஜராஜன் நகர் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 63).

    இவர் நேற்று மோட்டார் சைக்கிளில் அஸ்தம்பட்டி பிச்சார்ட்ஸ் ரோடு ஜங்ஷன் பகுதியில் சாலையை கடக்க முயன்றபோது, அந்த வழியாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள், முருகேசன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

    இதில் தூக்கி வீசப்பட்ட முருகேசன், பலத்த காயமடைந்தார். இவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு, சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி முருகேசன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அஸ்தம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • காணாமல் போனது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
    • மோட்டார் சைக்கிள் திருடியவர்களை தேடிவருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை குயவர் பாளையம் சுப்ரமணிய சிவா வீதியை சேர்ந்தவர் நாராயணன் (வயது 47) பக்கத்து தெருவான சுந்தரமேஸ்திரி வீதியில் மோட்டார் சைக்கிள் பழுது பார்க்கும் கடை வைத்துள்ளார்.

    சம்பவத்தன்று வேலை முடித்து 2 மோட்டார் சைக்கிளை கடை வாசலில் நிறுத்தி இரும்பு சங்கிலி இணைத்து பூட்டியுள்ளார், மறுநாள் காலை சென்று பார்த்தபோது 2 மோட்டார் சைக்கிளும் காணாமல் போனது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    இதுகுறித்து அவர் உருளையன்பேட்டை போலீசில் புகார் அளித்தார். உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து மோட்டார் சைக்கிள் திருடியவர்களை தேடிவருகின்றனர்.

    • மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
    • பாலகிருஷ்ணன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலம் அருகே உள்ள சாலபோகம் மெயின் ரோட்டில் வசிப்பவர் பாலகிருஷ்ணன் (வயது47) .

    இவர் தனது மனைவி மேனகாவுடன் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் உறவினர் வீட்டுக்கு செல்வதற்காக கபிஸ்தலம் வழியாக திருவையாறு நோக்கி சென்றார்.

    கருப்பூர் அகிலாண்டேஸ்வரி கோவில் அருகில் எதிரே அவர்கள் சென்ற போது கருப்பூர் குடியானத்தெருவை சேர்ந்த திவாகர்( 25) ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள், பாலகிருஷ்ணன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது.

    இதில் பாாலகிருஷ்ணன், அவரது மனைவி மேனகா ஆகிய இருவரும் பலத்த காயமடைந்து உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    மேலும் திவாகரும் படுகாயமடைந்து கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து கபிஸ்தலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தீயில் எரிந்த மோட்டார் சைக்கிள்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெடித்து சிதறியது.
    • தீ விபத்தில் சுமார் ரூ. 3.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எறிந்து நாசமானது.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள சிவகாமிபுரம் கிராமத்தை சேர்ந்த ராஜன் என்பவர் அப்பகுதியில் நெல்லை- தென்காசி சாலை பகுதியில் பழைய மோட்டார் சைக்கிள் வாங்கி விற்பனை செய்யும் குடோன் நடத்தி வருகிறார்.

    இந்நிலையில் நேற்று மாலையில் ராஜன் குடோனை அடைத்து விட்டு வெளியில் சென்று இருந்த நேரத்தில் திடீரென குடோனில் நின்றிருந்த மோட்டார் சைக்கிள்கள் அனைத்தும் தீப்பிடித்து எரிந்தது.

    தொடர்ந்து குடோனின் உள்பகுதியில் நிறுத்தப்ப ட்டிருந்த 11 மோட்டார் சைக்கிள்கள் தீயில் எரிந்து ஒன்றன்பின் ஒன்றாக வெடித்து சிதறியது.

    இதனை கண்ட அருகில் இருந்த பொதுமக்கள் சுரண்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்து தண்ணீர் ஊற்றி அணைக்க முற்பட்டனர். சம்பவட இடத்திற்கு தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயில் கருகி கிடந்த வாகனங்களை தண்ணீரை பீச்சி அடித்து முற்றிலுமாக அனைத்தனர். தீ விபத்தில் சுமார் ரூ. 3.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எறிந்து நாசமானது தெரியவந்தது. இது குறித்து பாவூர்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நேற்று இரவு மோட்டார் சைக்கிள்களை வீட்டில் நிறுத்திவிட்டு தூங்க சென்றனர்.
    • திருட்டு குறித்து பேட்டை போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை பேட்டை நரிக்குறவர் காலனியை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 22). அதே பகுதியில் வசித்து வருபவர் விக்ரம்(37). இவர்கள் 2 பேரும் தங்களது 3 மோட்டார் சைக்கிள்களையும் வீட்டின் முன்பு நிறுத்துவது வழக்கம்.

    நேற்று இரவும் வழக்கம்போல் மோட்டார் சைக்கிள்களை வீட்டில் நிறுத்திவிட்டு தூங்க சென்றுவிட்டனர். இன்று அதிகாலை எழுந்து பார்த்தபோது அவர்களது 3 மோட்டார் சைக்கிள்களையும் காணவில்லை. மர்ம நபர்கள் திருடிச்சென்றிருப்பதை அறிந்த அவர்கள் பேட்டை போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    • போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க அறிவுத்தல் எடுக்கப்பட்டுள்ளது.
    • சந்தையில் ஏராளமான கடைகள் செயல்பட்டு வருகின்றன.

    குனியமுத்தூர்,

    கோவை சிங்காநல்லூரில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த சந்தையில் ஏராளமான கடைகள் செயல்பட்டு வருகின்றன.காலை 5 மணியில் இருந்து இரவு 10 மணி வரை வியாபாரம் நடைபெறும். சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான வியாபாரிகள் காய்கறிகள் உள்பட பல்வேறு பொருட்களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

    இந்த பொருட்களை வாங்க சிங்காநல்லூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் அதிகளவில் வருவார்கள்.இதனால் எப்போது இந்த சந்தை மற்றும் சந்தை பகுதியில் அதிகளவு கூட்டம் காணப்படும். வாகனங்களும் அதிகளவில் நிற்கும்.

    காலை 8 மணி முதல் 9.30 வரை பள்ளி கல்லூரி செல்லும் வாகனங்கள் அதிகமாக செல்வதை காண முடியும். இந்த சந்தை திருச்சி சாலையில் செயல்படுவதால், அந்த வழியாக எப்போதும் பஸ்கள், லாரிகள் உள்பட அனைத்து வாகனங்களும் சென்று கொண்டிருக்கும்.

    இந்த நிலையில் காய்கறி வாங்க வரும் பொதுமக்கள் தங்களது இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை உழவர் சந்தை முன்பாக நிறுத்தி விட்டு உள்ளே சென்று விடுகின்றனர். இதனால் திருச்சி சாலை முழுவதும் போக்குவரத்து ஸ்தம்பித்து விடுகிறது. ஒரு சில வியாபாரிகளும் சந்தை முன்பாக வெளியே கடை போட்டு வியாபாரம் செய்கின்றனர். இதனால் அங்கு கூட்டம் கூடுவதாலும் போக்குவர த்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைகி ன்றனர்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:- சிங்காநல்லூர் உழவர் சந்தைக்கு 2 வாசல் உள்ளது. திருச்சி சாலை மெயின் ரோட்டில் ஒரு வாசலும், வலது புறம் ஹவுசிங் யூனிட் செல்லும் வழியில் ஒரு வாசல் உள்ளது. ஹவுசிங் யூனிட் செல்லும் பாதை மிகவும் அகலமான பாதையாகும். அந்த விசாலமான பாதை எப்போதுமே சுதந்தரமாக இருக்கும்.

    அந்தப் பாதையில் இரு சக்கர வாகனங்களை நிறுத்தினால் திருச்சி ரோடு போக்குவரத்து நெரிசல் இல்லாமல் காணப்படும். இதனை பொதுமக்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள். அவசரத்தில் வந்து வாகனத்தை நிறுத்தி அவசரமாக காய்கறிகளை வாங்கி செல்வது அவர்களது வழக்கம்.

    தினமும் காலை வேளையில் அந்த பகுதியில் ஒரு போக்குவரத்து போலீசா ரை நிறுத்தி வாகனங்களை ஹவுசிங் யூனிட் செல்லும் சாலையில் நிறுத்தினால் இந்த பகுதி போக்குவரத்து நெரிசல் இல்லாமல் சீராக காட்சியளிக்கும். போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா? காலை சமயங்களில் இந்த திருச்சி ரோட்டில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கண்டி ப்பாக போக்குவ ரத்து போலீசார் முன் வரவேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்.

    ×