என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆறுமுகநேரியில் கஞ்சா விற்ற 3 பேர் கைது- மோட்டார் சைக்கிள், செல்போன்கள் பறிமுதல்
    X

    ஆறுமுகநேரியில் கஞ்சா விற்ற 3 பேர் கைது- மோட்டார் சைக்கிள், செல்போன்கள் பறிமுதல்

    • ஆறுமுகநேரி ரெயில் நிலையம் அருகே நின்ற 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
    • கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 1,10 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி பகுதியில் கஞ்சா விற்பனை மற்றும் போதை பழக்கம் காரணமாக தொடர்ந்து சமூக விரோத செயல்கள் அதிகரித்து வருவதால் இதில் போலீசார் தனிக்கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

    தனிப்படை

    இந்த நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் ஆறுமுகநேரி, காயல்பட்டினம் வட்டாரங்களில் கஞ்சா விற்பனை செய்யும் கும்பல்களை கண்டுபிடித்து கைது செய்ய திருச்செந்தூர் துணை சூப்பிரண்டு ஆவுடை யப்பன் மேற்பார்வையில் தனிப்படை அமைத்து நடவடிக்கை எடுக்க உத்தர விட்டார்.

    அதன்பேரில் இன்ஸ் பெக்டர் செந்தில், சப்-இன்ஸ்பெக்டர் ரவிக் குமார் மற்றும் போலீசாரை கொண்ட தனிப்படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    அப்போது ஆறுமுகநேரி ரெயில் நிலையம் அருகே நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.அவர்கள் ஆறுமுகநேரியை சேர்ந்த ஹரிஷ் கிருஷ்ணன் ( வயது 20), கீழ சண்முகபுரம் பகுதியை சேர்ந்த சஞ்சய் குமார் (19), திருச்செந்தூரை சேர்ந்த முத்துராமன் (21) என்பதும் அவர்கள் அப்பகுதியில் கஞ்சா விற்று கொண்டிருந்ததும் தெரியவந்தது.

    கைது

    உடனடியாக அவர்கள் 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 1,10 கிராம் கஞ்சாவை கைப்பற்றினர். மேலும் கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்தியதாக மோட்டார் சைக்கிளையும் 3 செல்போன்களையும் பறி முதல் செய்தனர்.

    பின்னர் அவர்கள் மூன்று பேரையும் திருச்செந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×