search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Arrest"

    • பாலாஜி தனது நண்பர்களுடன் சேர்ந்து மேலாளார் சாய்பிரசாத்தை கொலை செய்து இருப்பது தெரிய வந்தது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவொற்றியூர்:

    ஆந்திர மாநிலம் குடூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சாய் பிரசாத் (வயது 45) இவர் கடந்த 5 ஆண்டுகளாக மணலி புதுநகர் அடுத்த விச்சூர், வெள்ளி வாயலில் உள்ள கண்டெய்னர் யார்டில் மேலாளராக வேலை பார்த்து வந்தார் சாய்பிரசாத்(வயது45). நேற்று முன்தினம் இரவு அவர் தங்கி இருந்த அறையில் சுத்தியலால் கொடூரமாக அடித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    விசாரணையில் அங்கு வேலை பார்த்து வந்த தண்டையார்பேட்டை பகுதியைச் சேர்ந்த டில்லி பாலாஜி கடந்த 6-ந் தேதி வேலை நேரம் முடிவதற்குள் பாதியிலே சென்று விட்டதாக தெரிகிறது. இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் பாலாஜியை மேலாளர் சாய்பிரசாத் வேலைக்கு வரவேண்டாம் என்று கூறி உள்ளார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த பாலாஜி தனது நண்பர்களுடன்சேர்ந்து மேலாளார் சாய்பிரசாத்தை கொடூரமாக கொலை செய்து இருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து பாலாஜி மற்றும் அவரது நண்பர்களான அங்கு வேலை பார்த்து வந்த முகிலன், பழைய நாபாளையத்தைச் சேர்ந்த பார்த்தசாரதி,ஷாம்,கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த மணிமாறன் ஆகிய 5 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • பல்வேறு போலீஸ் நிலையங்களில் கார்கள் திருடியது தொடர்பாக 30 வழக்குகள் உள்ளது.
    • ஒரு கார், சரக்கு வாகனம், 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    ராயபுரம்:

    பழைய வண்ணாரப்பேட்டை, வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் கடந்த மாதம் 19-ந் தேதி அனுசியா என்பவரது வீட்டில் திருடு போனது. இதேபோல் தண்டையார்பேட்டை கும்மாளம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஹேம குமார் என்பவரது மோட்டார் சைக்கிளையும் மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். இதுகுறித்து வண்ணாரப்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. உதவி கமிஷனர் சதாசிவம் தலைமையில் தனிப்படை போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்துதீவிர விசாரணை நடத்தினர்.

    கார் திருட்டு தொடர்பாக பாண்டிச்சேரியில் பதுங்கி இருந்த சோழவரம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த இன்பராஜ், கூட்டாளிகளான தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த பார்வதி ராஜா என்கிற பாரதி (36) சென்னை சூளைமேடு பெரியார் பாதையை சேர்ந்த ரவி ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    இதில் இன்பராஜ் மீது விருதுநகர், பனங்குடி, சென்னை உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் கார்கள் திருடியது தொடர்பாக 30 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    மேலும் இன்பராஜ் உள்ளிட்ட 3 பேரும் சேர்ந்து தெருவோரங்களில் நிறுத்தப்படும் கார்கள், மோட்டார் சைக்கிள்களை நோட்டமிட்டு திருடி வந்து உள்ளனர். அவர்கள் 50க்கும் மேற்பட்ட கார்களை நோட்டமிட்டு திருடி இருப்பது தெரிந்தது.

    அவர்களிடம் இருந்து ஒரு கார், சரக்கு வாகனம், 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    • பெற்றோர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
    • புகாரின் பேரில் பேராசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து பேராசிரியர் குமாரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    திண்டிவனம்:

    தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு ஆசிரியர்கள், பேராசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த மாணவி ஒருவருக்கு அப்பள்ளி ஆசிரியர்கள் 3 பேர் பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டனர்.

    தற்போது திண்டிவனத்தில் கல்லூரி மாணவிக்கு பேராசிரியர் பாலியல் தொல்லை கொடுத்து கைதான சம்பவம் அரங்கேறி உள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:-

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில் இந்தக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் மாணவிக்கு பொருளாதார பேராசிரியராக குமார் பாடம் எடுத்து வருகிறார்.

    இவர் கடந்த செப்டம்பர் மாதம் முதல் தற்போது வரை தொலைபேசி மூலமாகவும் மற்றும் சமூக வலைதள மூலமாகவும் மாணவிக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 5-ந்தேதி பேராசிரியர் மாணவியின் தொலைபேசிக்கு தொடர்பு கொண்டு தவறான முறையில் பேசி பாண்டிச்சேரிக்கு போகலாம் எனக் கூறி அழைத்ததாகவும் அதற்கு மாணவி மறுத்து விட்டதாகவும் மேலும் அன்று இரவு 9 மணி அளவில் வீடியோ கால் மூலம் மாணவியின் தொலைபேசிக்கு தொடர்பு கொண்டு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.

    இது குறித்து நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் கூறி மாணவி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் பேராசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து பேராசிரியர் குமாரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • கோவை துடியலூர் பகுதியில் டெண்ட் அமைத்து தங்கி திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.
    • போலீசார் கைதான 2 பேரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    கோவை:

    கோவை மரக்கடை சந்திரன் முதல் வீதியை சேர்ந்தவர் ஆய்ஷம்மாள் (வயது75). இவர் மதுக்கரையில் இருந்து பஸ்சில் டவுன்ஹால் வந்தார்.

    டவுன்ஹால் வந்ததும் பஸ்சை விட்டு இறங்கிய அவர் தனது கழுத்தில் இருந்த 5 பவுன் தங்க செயின் காணாமல் போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து ஆய்ஷம்மாள் உக்கடம் போலீசில் புகார் அளித்தார்.

    அதேபோல கோவை ராமநாதபுரத்தை சேர்ந்தவர் வசந்தா(75). இவர் தனது கணவருக்கு உடல் நிலை சரியில்லாததால் சக்தி ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து இருந்தார்.

    சம்பவத்தன்று வசந்தா சரவணம்பட்டி பகுதியில் உள்ள கோவிலுக்கு பஸ்சில் சென்றார். அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி அவரது அருகில் இருந்த பெண்கள் அவர் கழுத்தில் இருந்த 6 பவுன் தங்க நகையை பறித்து சென்றனர். இதுகுறித்து வசந்தா சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்தார்.

    இந்த 2 புகார்களின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் நகை பறிக்கும் கும்பலை பிடிக்க, உதவி கமிஷனர் சரவணக்குமார் உத்தரவின் பேரில், உதவி கமிஷனர் முருகேசன் தலைமையில், உக்கடம் இன்ஸ்பெக்டர் ரவி, சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து, உமா, மஞ்சு மற்றும் போலீசார் கார்த்தி, பூபதி ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

    தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர். மேலும் தனிப்படை போலீசார் கடை வீதி பகுதியில் சாதாரண உடையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக 2 பெண்கள் சுற்றி திரிந்தனர். அவர்களை போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளிக்கவே போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.

    விசாரணையில், அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, மந்தித்தோப்பு பகுதியை சேர்ந்த நந்தினி(28) மற்றும் காளிஸ்வரி(28) ஆகியோர் என்பதும், மூதாட்டிகளிடம் நகை பறித்தவர்கள் என்பதும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.

    கைது செய்யப்பட்ட நந்தினி, காளிஸ்வரி இருவரும் அண்ணன் - தம்பியை திருமணம் செய்து உள்ளனர். இவர்கள் பல வருடங்களாகவே திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

    காளிஸ்வரி தனது 12 வயதிலேயே தனது தாயாருடன் சேர்ந்து திருட தொடங்கி உள்ளார். திருமணம் முடிந்த பின்னர், தனது கணவரின் அண்ணன் மனைவியுடன் சேர்ந்து திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளார்.

    இவர்கள் இந்தியா முழுவதும் 10க்கும் மேற்பட்ட இடங்களில் தங்களது குடும்பத்தினருடன் சேர்ந்து திருட்டில் ஈடுபட்டுள்ளனர்.

    முக்கியமாக இவர்கள் கோவில் திருவிழாக்களை குறி வைத்து, அங்குள்ள கூட்டநெரிசலை பயன்படுத்தி, பெண்களிடம் நகைகளை திருடி வந்துள்ளனர்.

    தாங்கள் திருடிய நகைகளை அந்ததந்த பகுதியிலேயே விற்பனை செய்யும் அவர்கள், அந்த பணத்தை வைத்து பல்வேறு இடங்களுக்கும் இன்ப சுற்றுலா சென்று சொகுசாக வாழ்ந்துள்ளனர். இவர்கள் கோவை துடியலூர் பகுதியில் டெண்ட் அமைத்து தங்கி திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    மேலும் திருடிய பணம் மூலம் தூத்துக்குடியில், பங்களா கட்டி சொகுசு வாழ்க்கையும் வாழ்ந்து வருகிறார்கள்.

    கோவையில் தற்போது பேரூர் கோவில் கும்பாபிஷேகம் மற்றும் கோனியம்மன் கோவில் திருவிழா நடக்க உள்ளதை அறிந்து 2 பேரும் திருடுவதற்காக கோவைக்கு வந்ததும், திருவிழா தொடங்க சில நாட்கள் இருப்பதால் பஸ்களில் பயணித்து மூதாட்டிகளிடம் நகையை பறித்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து போலீசார் கைதான 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • போலீசார் ஊழியர்கள் 6 பேரை பிடித்து விசாரித்தனர்.
    • பல மோசடிகளில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற அடிப்படையில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பெங்களூரு:

    பெங்களூருவில் ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் நிரப்பும் ஊழியர்கள் சிவு, சமீர், மனோகர், கிரிஷ், ஜக்கேஷ், ஜஸ்வந்த் ஆகிய 6 பேர் ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் நிரப்பாமல் சுழற்சி முறையில் ஒவ்வொரு எந்திரத்திலும், பணத்தை மாற்றி, மாற்றி வைத்து ரூ. 43.76 லட்சத்தை மோடி செய்தது தெரியவந்தது.

    இதையடுத்து நிறுவன அதிகாரிகள் அவர்கள் மீது மகாலட்சுமி லேஅவுட் போலீசில் புகார் செய்தனர். போலீசார் ஊழியர்கள் 6 பேரையும் பிடித்து விசாரித்தனர்.

    அப்போது அவர்கள் கடந்த 2023-ம் ஆண்டு வெளியான ஒரு கொள்ளை திரில்லர் படத்தை பின்பற்றி ஏ.டி.எம்.மில் கைவரிசை காட்டியது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ. 52 லட்சம் மதிப்புள்ள ரொக்கம், ரூ. 40 லட்சம் மதிப்புள்ள 3 சொகுசு கார்களை பறிமுதல் செய்தனர்.

    மேலும் இவர்கள் பல மோசடிகளில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற அடிப்படையில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • குட்கா, புகையிலை கடத்தி வந்திருப்பது தெரிந்தது.
    • குட்கா பதுக்கி விற்ற பாஸ்கர் என்பவரை கைது செய்தனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபிகிருஷ்ணன் மற்றும் போலீசார் திருவள்ளூர் - திருத்தணி நெடுஞ்சாலையில் பட்டரைபெரும்புதுார் சுங்கச்சாவடி பகுதியில் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை கடத்தி வந்திருப்பது தெரிந்தது.

    இதையடுத்து லாரியில் இருந்த பெங்களூரை சேர்ந்த அப்ரர் அகம்மது, லாரி டிரைவரான சென்னை கொளத்துார் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். சுமார் ரூ.6 லட்சம் மதிப்புள்ள குட்கா, புகையிலையை லாரியுடன் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் மப்பேடு சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீசார் மப்பேடு பஜார் பகுதியில் குட்கா பதுக்கி விற்ற பாஸ்கர் என்பவரை கைது செய்தனர்.

    • கைதான இருவரும் சீர்காழியை சேர்ந்த சதாம் என்பவரிடம் இருந்த பழைய ரூபாய் நோட்டுகளை வாங்கி வந்ததா தெரிவித்து உள்ளனர்.
    • போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    போரூர்:

    போரூர் அருகே குன்றத்தூர் சாலையில் உள்ள எம்.எஸ்.நகர் பகுதியில் நேற்று இரவு போலீசார் ரோந்து பணியில் ஈடுப்டனர். அப்போது அவ்வழியே மோட்டார் சைக்கிளில் பெரிய பையுடன் வந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர்.

    அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதில் ஏற்கனவே செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் கட்டு கட்டாக இருந்தது. விசாரணையில் அவர்கள் அனகாபுத்தூரை சேர்ந்த ரஞ்சித்குமார்(34) மற்றும் பம்மலை சேர்ந்த அங்குராஜ் (37) என்பது தெரிந்தது. அவர்களிடம் இருந்த மொத்தம் ரூ.28லட்சம் மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    கைதான இருவரும் சீர்காழியை சேர்ந்த சதாம் என்பவரிடம் இருந்த பழைய ரூபாய் நோட்டுகளை வாங்கி வந்ததா தெரிவித்து உள்ளனர். இந்த பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றி கொடுத்தால் ரூ.1 லட்சத்திற்கு ரூ.4 ஆயிரம் வீதம் கமிஷன் தொகை கிடைக்கும் என்பதால் பணத்தை மாற்ற இருவரும் சென்னையில் தங்கி தொடர்ந்து முயற்சி செய்து வந்ததாக தெரிவித்து உள்ளனர்.

    அவர்களுடன் தொடர்பில் உள்ள பழை ரூபாய் நோட்டுகளை மாற்றி கொடுப்பதாக கூறி மோசடியில் ஈடுபடும் நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கைதானவர்களுக்கு கேரளாவில் உதவியவர்களையும் கண்காணித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
    • போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள வடக்கு பரவூரில் சட்டவிரோதமாக வெளிநாட்டைச் சேர்ந்த சிலர் தங்கியிருப்பதாக எர்ணாகுளம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் எர்ணாகுளம் போலீசார் மற்றும் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் இணைந்து அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    'ஆபரேசன் கிளீன்' என்ற பெயரில் போலீஸ் ஐ.ஜி. வைபவ் சக்சேனா தலைமையில் நடைபெற்ற இந்த வேட்டையில் வடக்கு பரவூர் பகுதியில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த 27 பேர் சிக்கினர். அவர்கள், இந்திய-வங்கதேச எல்லையில் உள்ள ஆற்றின் ஆழமற்ற பகுதியை கடந்து இந்தியாவுக்குள் வந்ததும், பல்வேறு பகுதிகளுக்குச் சென்று விட்டு தற்போது கேரளாவில் வந்து தங்கி வேலை பார்த்து வருவதும் விசாரணையில் தெரியவந்தது.

    இவர்கள் வடபரவூர் அருகே மன்னம் பகுதியைச் சேர்ந்த ஹர்ஷத் ஹொசைன் என்பவர் வீட்டில் வாடகைக்கு வசித்து வந்துள்ளனர். அவர்களது ஆவணங்களை போலீசார் ஆய்வு செய்தபோது, இந்தியாவில் சட்ட விரோதமாக வசிப்பதும், தங்களை இந்திய குடிமக்களாக காட்டிக் கொள்வதும் தெரியவந்தது.

    மேலும் அவர்கள் மேற்கு வங்கத்தில் இருந்து புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் என்ற போர்வையில் அவர்கள் பல்வேறு இடங்களில் பணிபுரிந்து வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.

    கைதானவர்கள் போலீசாரிடம் கூறும்போது, வங்கதேசத்தில் உள்ள ஏஜண்டுகள் தங்களின் அனைத்து இந்திய ஆவணங்களையும் ஏற்பாடு செய்ததாக தெரிவித்தனர். இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கைதானவர்களுக்கு கேரளாவில் உதவியவர்களையும் கண்காணித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

    • சீனாவைச் சேர்ந்தவர்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
    • உளவு பார்த்ததாக கூறி 5 சீனர்களை பிலிப்பைன்ஸ் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    மணிலா:

    தென்சீனக்கடல் விவகாரத்தில் பிலிப்பைன்ஸ்-சீனா இடையே சமீப காலமாக பதற்றமான சூழல் நிலவுகிறது. இதற்கிடையே சீனாவைச் சேர்ந்த சிலர் தங்களை தைவான் நாட்டவர்களாக கூறிக்கொண்டு பிலிப்பைன்சுக்கு சுற்றுலா சென்றிருந்தனர். ஆனால் அங்குள்ள ஸ்ப்ட்ராட்லி தீவு அருகே சூரிய சக்தியில் இயங்கும் கேமராக்களை நிறுவி அவர்கள் கண்காணித்தனர்.

    பின்னர் சந்தேகத்தின்பேரில் போலீசார் அவர்களது ஆவணங்களை சோதனை செய்தபோது அவர்கள் அனைவரும் சீனாவைச் சேர்ந்தவர்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதனையடுத்து உளவு பார்த்ததாக கூறி 5 சீனர்களை பிலிப்பைன்ஸ் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • போலீசார் சோதனையில் 2 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிம்லா:

    இமாச்சல பிரதேசம், நூர்பூர் போலீசாருக்கு போதைப்பொருள் கடத்தல் குறித்து ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் இன்று மாத்தோலி பகுதியில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.

    இந்த சோதனையில் 2 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. போதைப்பொருள் கடத்திய சம்பா மாவட்டத்தை சேர்ந்த ஜெகதீஷ் மற்றும் தேகா ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிறுமியை மீட்ட போலீசார் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்க முயன்றனர்.
    • தகவல் அறிந்த சிறுமியின் பெற்றோர் அவரை மீட்டு சிகிச்சைக்காக விசாகப்பட்டினம் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    ஆந்திர மாநிலம், காக்கிநாடா மாவட்டம், அனக்கா பள்ளியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் அதே பகுதியை சேர்ந்த சந்து என்பவரை காதலித்து வந்தார்.

    இவர்களது காதலுக்கு சிறுமியின் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி சந்துவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு இருவரும் பெத்தாபுரத்தில் வீடு வாடகை எடுத்து தங்கி இருந்தனர்.

    மகள் காணாமல் போனது குறித்து அவரது பெற்றோர் அனக்கா பள்ளி போலீசில் புகார் செய்தனர். போலீசார் பெத்தாபுரத்திற்கு சென்று சிறுமியை மீட்டனர். மைனர் பெண்ணை திருமணம் செய்ததற்காக சந்துவை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    சிறுமியை மீட்ட போலீசார் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்க முயன்றனர். அவரது பெற்றோர்கள் மகளை ஏற்க முடியாது என தெரிவித்தனர். இதனால் சிறுமியை சந்துவின் தாயார் நீலிமாவிடம் ஒப்படைத்தனர்.

    இதன்பின், மாமியார் நீலிமாவும் அவரது குடும்பத்தினரும் சேர்ந்து சிறுமியை வலுக்கட்டாயமாக விபசாரத்தில் ஈடுபட வைத்தனர்.

    அடிக்கடி மயக்க மாத்திரைகளை கொடுத்து சிறுமியை விபசாரத்தில் தள்ளினார். இதனால் சிறுமியின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. சிறுமி சுய நினைவை இழந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த சிறுமியின் பெற்றோர் அவரை மீட்டு சிகிச்சைக்காக விசாகப்பட்டினம் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிறிது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. மாமியார் மற்றும் அவரது குடும்பத்தினர் தன்னை கட்டாயப்படுத்தி விபசாரத்தில் ஈடுபடுத்தியதை சிறுமி தெரிவித்தார்.

    இதுகுறித்து போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து மாமியார் நீலிமா மற்றும் அவரது குடும்பத்தினரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • அருண்குமார் சிகிச்சைக்காக ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளார்.
    • தெருவில் யாராவது தகராறு செய்தாலோ, பிரச்சனையில் ஈடுபட்டாலோ தைரியமாக தட்டிக் கேட்பாராம்.

    சென்னை:

    சென்னை திருவல்லிக்கேணி ராஜாஜி நகர், கஜபதி தெருவை சேர்ந்தவர் தனுஷ் (வயது 28). குத்துச்சண்டை வீரரான இவர், ஆண் அழகன் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். சிறிய அளவில் குத்துச்சண்டை போட்டியிலும் பங்கேற்றுள்ளார்.

    இவர் நேற்றுமுன்தினம் நள்ளிரவு, தனது நண்பர் அருண்குமார் என்பவருடன் கிருஷ்ணாம்பேட்டை சுடுகாடு அருகே மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது, ஒரு கும்பல் தனுசை சுற்றி வளைத்தது.

    அவர்களிடம் இருந்து தப்பிக்க அவர் ஓடினார். ஆனால், அந்த கும்பல் தனுசை சுற்றி வளைத்து, அரிவாளால் வெட்டினார்கள். இதில் பலத்த காயம் அடைந்த தனுஷ், ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார். அவருடன் வந்த நண்பர் அருண் குமாருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.

    உயிருக்கு போராடிய தனுஷ், அதே இடத்தில் பரிதாபமாக இறந்து போனார். அரிவாள் வெட்டில் காயம் அடைந்த அவரது நண்பர் அருண்குமார் சிகிச்சைக்காக ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளார்.

    இந்த சம்பவம் தொடர்பாக, ஐஸ்அவுஸ் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். போலீஸ் விசாரணையில், முன்விரோதம் காரணமாக தனுஷ் படுகொலை செய்யப்பட்டது தெரியவந்தது. தனுஷ் அந்த பகுதியில் பந்தாவாக வலம் வருவாராம். தெருவில் யாராவது தகராறு செய்தாலோ, பிரச்சனையில் ஈடுபட்டாலோ தைரியமாக தட்டிக் கேட்பாராம்.

    சமீபத்தில் மரண ஊர்வலத்தில் கானா பாட்டு பாடுவதில் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இனி மேல், தனுசை தீர்த்து கட்டாவிட்டால், உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று கருதிய, மோகன், செந்தில் குமார், விஷால், சுரேஷ் குமார் ஆகியோர் சதி திட்டம் செய்து, தனுசை தீர்த்து கட்டியதாக கூறப்படுகிறது. குற்றவாளிகள் 4 பேரும் சம்பவம் நடந்த சில மணி நேரத்தில், உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர். மேலும், சிலரை தேடி வருவதாக போலீசார் கூறியிருந்தனர்.

    இந்த நிலையில், தனுஷை கொலை செய்த மேலும் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதனால் இந்த கொலை வழக்கில் கைதானவர்களின் எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது. 

    ×