என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மயக்க மாத்திரை கொடுத்து மகளை கள்ளக்காதலனுக்கு விருந்தாக்கிய தாய் அதிரடி கைது
- இதுகுறித்து வடபழனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
- தலைமறைவான தட்சிணாமூர்த்தி மீது கற்பழிப்பு வழக்கு பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர்.
போரூர்:
சென்னை சாலிகிராமம் பகுதியை சேர்ந்த 20 வயது இளம்பெண் கல்லூரியில் படித்து வருகிறார். இவரது தாய்க்கும் தட்சிணாமூர்த்தி என்பவருக்கும் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. இதனால் மாணவி தனது தாயுடன் பேசுவதை தவிர்த்து வந்தார்.
இந்த நிலையில் மகள் என்றும் பாராமல் அவருக்கு தாயே தூக்கமாத்திரை கொடுத்து தனது கள்ளக்காதலன் தட்சிணாமூர்த்திக்கு விருந்தாக்கினார். இதில் கர்ப்பம் அடைந்த மாணவி தாயின் பிடியில் இருந்து தப்பி திருவண்ணாமலையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து கூறினார்.
இதுகுறித்து வடபழனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதில் தனது வாழ்க்கையை சீரழித்த கொடூர தாய் மற்றும் அவரது கள்ளக்காதலன் தட்சிணாமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறிஇருந்தார்.
இதையடுத்து பெற்ற மகளையே தனது கள்ளக்காதலனுக்கு இரையாக்கிய தாயை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவான தட்சிணாமூர்த்தி மீது கற்பழிப்பு வழக்கு பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர்.






