என் மலர்
நீங்கள் தேடியது "Affair"
- கள்ளக்காதலை கைவிடுமாறு மாமியார் சுப்பம்மா, வசுந்தராவை எச்சரித்தார். இருப்பினும் வசுந்தரா கள்ளக்காதலை கைவிட மறுத்துள்ளார்.
- கள்ளக்காதலை கண்டித்தால் உன்னை கொலை செய்து விடுவேன் என மாமியாரை மிரட்டியுள்ளார்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், அனந்தபுரம் மாவட்டம் ராமாபுரத்தை சேர்ந்தவர் ராஜா. இவருக்கும் குண்டு பள்ளியை சேர்ந்த வசுந்தரா (வயது 30). என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தம்பதிக்கு 9 மற்றும் 6 வயதில் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். ராஜா உடல்நிலை சரியில்லாமல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.
வசுந்தரா அங்குள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் வசுந்தராவுக்கு வேறு ஒருவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. குழந்தைகளை கவனிக்காமல் அவருடன் ஊர் சுற்றி வந்துள்ளார்.
கள்ளக்காதலை கைவிடுமாறு அவரது மாமியார் சுப்பம்மா, வசுந்தராவை எச்சரித்தார். இருப்பினும் வசுந்தரா கள்ளக்காதலை கைவிட மறுத்துள்ளார்.
மேலும் கள்ளக்காதலை கண்டித்தால் உன்னை கொலை செய்து விடுவேன் என மாமியாரை மிரட்டியுள்ளார். இந்த நிலையில் நேற்று மதியம் பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்த வசுந்தராவுக்கும் அவரது மாமியாருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.
இதனால் ஆத்திரம் அடைந்த சுப்பம்மா தனது தம்பி சந்திரபாபுடன் சேர்ந்து வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து வசுந்தராவை வெட்டி கொலை செய்தார். ஆத்திரம் தீராத அவர் தலையை தனியாக வெட்டி எடுத்தார்.
இதையடுத்து வசுந்தராவின் துண்டித்த தலையை ஒரு கையிலும் கத்தியை ஒரு கையிலும் பிடித்தபடி ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு நடந்து ஆவேசத்துடன் ராய் சோட்டி போலீஸ் நிலையத்திற்கு சென்றார்.
பெண் ஒருவர் ரத்தம் சொட்ட சொட்ட துண்டித்த தலையை கையில் பிடித்தபடி செல்வதை கண்ட பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர்.
துண்டித்த தலையுடன் போலீஸ் நிலையத்திற்கு வந்ததை கண்ட போலீசார் அதிர்ச்சி அடைந்து சுப்பம்மாவிடம் விசாரணை நடத்தினர்.
எனது மருமகள் கள்ளக்காதலனுடன் சேர்ந்து ஊர் சுற்றி கொண்டு குழந்தைகளை கவனிக்காமல் இருந்தாள். கள்ளக்காதலை கைவிடுமாறு கண்டித்த என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டினார்.
மருமகளை கொலை செய்து விட்டால் குழந்தைகள் அனாதையாகிவிடும் என நினைத்து இவ்வளவு நாள் பொறுமை காத்து வந்தேன்.
இனியும் அவளை உயிருடன் விட்டு வைத்தால் கள்ளக்காதலனுடன் சேர்ந்து என்னை கொலை செய்து விடுவாள். இதனால் அவளை முந்திக்கொண்டு கொலை செய்ததாக போலீசாரிடம் தெரிவித்தார்.
இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதாகர் ரெட்டி வழக்கு பதிவு செய்து சுப்பம்மா, அவரது தம்பி சந்திரபாபு ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- கடந்த ஒரு மாதத்தில் மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் காணாமல் போனவர்கள் குறித்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை பார்த்து அதன்படி விசாரணை நடத்தி வந்தனர்.
- தாழையூத்து போலீஸ் நிலையத்தில் கடந்த மாதம் தொடக்கத்தில் ராஜா என்பவர் காணாமல் போனதாக அவரது மனைவி வினிதா புகார் அளித்திருந்தார்.
நெல்லை:
நெல்லையை அடுத்த மானூர் அருகே தென்கலம் கிராமம் அருகே உள்ள குளத்தின் கரைக்கு அருகே கடந்த மாதம் 20-ந்தேதி சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் எரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தது.
இதுதொடர்பாக மானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சபாபதி வழக்குப்பதிவு செய்து அந்த நபர் யார்? அவரை யார் கொலை செய்தார்கள்? என்பது குறித்து விசாரணை நடத்தி வந்தார்.
கடந்த ஒரு மாதத்தில் மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் காணாமல் போனவர்கள் குறித்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை பார்த்து அதன்படி விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் தாழையூத்து போலீஸ் நிலையத்தில் கடந்த மாதம் தொடக்கத்தில் ராஜா என்பவர் காணாமல் போனதாக அவரது மனைவி வினிதா(வயது 35) புகார் அளித்திருந்தார். இதனால் எரித்துக்கொல்லப்பட்ட நபர் ராஜா தானா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
இதுதொடர்பாக அவரது மனைவி வினிதாவிடம் விசாரித்தபோது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
கேரளா மாநிலம் மூணாறு பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவருக்கு கடந்த 15 வருடங்களுக்கு முன்பு வினிதாவுடன் திருமணமாகி உள்ளது. ராஜா சொந்தமாக லாரி வைத்து ஓட்டி வந்துள்ளார். அங்கு தொழில் சரியாக இல்லாததால் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு ராஜா தனது குடும்பத்துடன் நெல்லையை அடுத்த தாழையூத்துக்கு வந்துவிட்டார்.
அங்கு கயத்தாறு அருகே உள்ள வலசல் பகுதியை சேர்ந்த தர்மராஜா(25) என்பவரின் நட்பு கிடைத்துள்ளது. தொடர்ந்து ராஜாவின் லாரியில் தர்மராஜா கிளீனராக வேலைக்கு சேர்ந்துள்ளார். இதன் காரணமாக தர்மராஜா அடிக்கடி ராஜாவின் வீட்டுக்கு சென்றுவந்துள்ளார்.
அப்போது அவருக்கு ராஜாவின் மனைவி வினிதாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறி உள்ளது. இருவரும் ராஜா இல்லாத நேரத்தில் பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த ராஜா அவர்களை கண்டித்துள்ளார்.
ஆனாலும் 2 பேரும் கள்ளக்காதலை கைவிட மறுத்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று காலை ராஜா வீட்டில் இல்லாததை அறிந்த தர்மராஜா, அவரது வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு வினிதாவுடன் தனிமையில் இருந்துள்ளார். அந்த நேரத்தில் வீட்டுக்கு வந்த ராஜா, அதனைப்பார்த்து ஆத்திரம் அடைந்தார்.
அப்போது ராஜாவுக்கும், தர்மராஜாவுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதில் தர்மராஜா ஆத்திரம் அடைந்து ராஜாவை கொலை செய்தார். பின்னர் வினிதாவின் உதவியுடன் ராஜா உடலை மோட்டார் சைக்கிளில் தூக்கி, மானூர் குளத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு வைத்து ராஜாவின் உடலை பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு எதுவும் தெரியாதது போல வினிதாவும், தர்மராஜாவும் வீட்டுக்கு திரும்பி உள்ளனர். பின்னர் எதுவும் தெரியாததுபோல வினிதா தனது கணவரை காணவில்லை என போலீசில் புகார் கொடுத்தது அம்பலமானது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் சபாபதி இந்த வழக்கில் வினிதா, தர்மராஜா ஆகியோரை கைது செய்தார்.
- கள்ளக்காதல் கசந்ததால் சவுடேஸ்வரி தனது வீட்டிற்கும் செல்ல முடியாமல், வாழ பிடிக்காமல் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.
- இதனால் சவுடேஸ்வரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கோவை:
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள கவுண்டன்பட்டியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (வயது 35). ஜே.சி.பி. டிரைவர்.
இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். அவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்தநிலையில் முத்துப்பாண்டிக்கு அதே பகுதியை சேர்ந்த திருமணமான சவுடேஸ்வரி (வயது 30) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்து வந்தனர்.
இந்த கள்ளக்காதல் விவகாரம் சவுடேஸ்வரியின் வீட்டுக்கு தெரிய வரவே அங்கு தகராறு ஏற்பட்டது. இது குறித்து சவுடேஸ்வரி முத்துப்பாண்டியிடம் தெரிவித்தார். கடந்த 10 மாதங்களுக்கு முன்பு 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி நெகமத்துக்கு வந்தனர்.
பின்னர் 2 பேரும் திருமணம் செய்து கொண்டு கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தனர். முத்துப்பாண்டி காக்கடவில் உள்ள கயிறு மில்லில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இதற்காக 2 பேரும் மில்லில் உள்ள குடியிருப்பில் தங்கி இருந்தனர்.
சம்பவத்தன்று மில் உரிமையாளர் முத்துப்பாண்டிக்கு தொடர்பு கொண்டார். அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனையடுத்து அவர் குடியிருப்புக்கு சென்று பார்த்த போது சவுடேஸ்வரி தூக்கில் பிணமாக தொங்குவது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் இது குறித்து நெகமம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
சவுடேஸ்வரி சந்தோஷமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தனது குழந்தைகள் மற்றும் கணவரை தவிக்க விட்டு ஓடி வந்தார். ஆனால் அவர் எதிர்பார்த்த படி முத்துப்பாண்டி வாழ்க்கையை கொடுக்கவில்லை. இதனால் அவரது கள்ளக்காதல் 10 மாத்தில் கசந்தது. இதன் காரணமாக சவுடேஸ்வரி தனது வீட்டிற்கும் செல்ல முடியாமல், இங்கும் வாழ பிடிக்காமல் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். இதனால் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
இது குறித்து நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கடந்த 10-ந் தேதி ஆப்பிரிக்காவில் இருந்து முரளி விசாகப்பட்டினம் வந்தார்.
- அப்போது அக்கம்பக்கத்தினர் மிருதுளாவின் கள்ளக்காதல் குறித்து முரளியிடம் தெரிவித்தனர்.
திருப்பதி:
ஆந்திரா மாநிலம் ஸ்ரீகாகுளம், பில்லால வலசை பகுதியை சேர்ந்தவர் முரளி (வயது 43). இவர் ஆப்பிரிக்காவில் உள்ள கல்லூரியில் பேராசிரியராக வேலை செய்து வந்தார்.
இவரது மனைவி மிருதுளா (29). தம்பதிக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. திருமணத்திற்கு பிறகு இருவரும் ஆப்பிரிக்காவில் வசித்து வந்தனர். இவர்களுக்கு 7 வயதில் ஆண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் கடந்த ஆண்டு முரளியின் மகனுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து மனைவியையும், மகனையும் அவரது சொந்த ஊரான விசாகப்பட்டினத்திற்கு அனுப்பி வைத்தார். விசாகப்பட்டினம் ரிக்ஷா காலனியில் முரளி சொந்தமாக வீடு கட்டி அங்கு தனது மனைவி மகனை குடிவைத்தார்.
பின்னர் ஆப்பிரிக்கா நாட்டிற்கு வேலைக்கு சென்று விட்டார். இந்த நிலையில் சாய்ராம் நகர் காலனியை சேர்ந்த ஹரிசங்கர் வர்மா என்பவருடன் மிருதுளாவுக்கு பழக்கம் ஏற்பட்டது.
ஹரி ஷங்கர் வர்மா, மிருதுளா இருவரும் கணவன் மனைவி போல் வாழ்ந்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 10-ந் தேதி ஆப்பிரிக்காவில் இருந்து முரளி விசாகப்பட்டினம் வந்தார். அப்போது அக்கம்பக்கத்தினர் மிருதுளாவின் கள்ளக்காதல் குறித்து முரளியிடம் தெரிவித்தனர்.
கள்ளக்காதலை கைவிடுமாறு முரளி தனது மனைவியிடம் வற்புறுத்தி வந்தார். இதனால் ஆத்திரமடைந்த மிருதுளா இதுகுறித்து அவரது கள்ளக்காதலன் ஹரிசங்கர் வர்மாவிடம் தெரிவித்தார். இருவரும் சேர்ந்து முரளியை கொலை செய்ய முடிவு செய்தனர்.
கடந்த 3 நாட்களுக்கு முன்பு இரவு முரளி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் மிருதுளா அவரது கள்ளக்காதலனை வீட்டிற்கு அழைத்தார்.
படுக்கை அறையில் தூங்கிக் கொண்டிருந்த முரளி கையை ஹரிசங்கர் வர்மா பிடித்துக் கொள்ள, மிருதுளா சமையல் செய்யும் குக்கரால் முரளியின் தலையில் சரமாரியாக தாக்கினார்.
இதில் மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் துடித்து துடித்து சம்பவ இடத்திலேயே முரளி பரிதாபமாக இறந்தார். முரளியின் பிணத்தை போர்வையால் சுற்றி மறைத்து வலசை பாலத்தின் கீழ் வீசி விட்டு ஒன்றும் தெரியாதது போல் வீட்டிற்கு வந்து விட்டனர்.
2 நாட்கள் கழித்து சென்று பார்த்தபோது பிணம் அழுகி துர்நாற்றம் வீசியது. இதையடுத்து முரளியின் பிணத்தின் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எரித்தனர்.
இதனைக் கண்ட பொதுமக்கள் சிலர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கணவர் பிணத்தை எரித்துக் கொண்டிருந்த மிருதுளா மற்றும் அவரது கள்ளக்காதலன் ஹரிசங்கர் வர்மா ஆகியோரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
முரளி தங்களது கள்ளக்காதலை கண்டித்ததுடன், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் அவரை கொலை செய்து பெட்ரோல் ஊற்றி எரித்ததாக தெரிவித்தனர்.
போலீசார் வழக்கு பதிவு செய்து மிருதுளா மற்றும் அவரது கள்ளக்காதலனை கைது செய்தனர்.
கள்ளக்காதல் கொலையால் அவர்களது 7 வயது மகன் பெற்றோர் இன்றி தவித்து வருவது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- கூலிப்படையை ஏவி கணவன்-மனைவியை கொலை செய்த இளம்பெண் யார்? என்று போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.
- இளம்பெண் கேரளாவுக்கு தப்பி சென்றிருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் அவரை பிடிக்க தனிப்படை போலீசார் கேரளா விரைந்துள்ளனர்.
ராஜபாளையம்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தெற்கு வைத்தியநாதபுரத்தை சேர்ந்தவர் ராஜகோபால் (வயது 75). இவரது மனைவி குருபாக்கியம்(68). ராஜகோபால் தனியார் நூற்பாலையில் மேலாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
ராஜகோபால் பணம் வட்டிக்கு கொடுத்து வந்தார். இந்த நிலையில் ராஜகோபாலும், அவரது மனைவியும் மர்மமான முறையில் வீட்டில் இறந்து கிடப்பது நேற்று முன்தினம் தெரியவந்தது. அவர்களது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
வீட்டின் படுக்கை அறையில் குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்ததற்கான தடயங்கள் கண்டெடுக்கப்பட்டது. ஆகவே அவர்கள் கொலை செய்யப்பட்டதை போலீசார் உறுதி செய்தனர். இந்த கொலைகள் குறித்து தகவல் கிடைத்ததும் மதுரை சரக டி.ஐ.ஜி. பொன்னி, விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகரன், ராஜபாளையம் (பொறுப்பு) டி.எஸ்.பி. சபரிநாதன் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்த இரட்டை கொலையில் துப்புதுலக்க டி.எஸ்.பி. சபரிநாதன் தலைமையில் பயிற்சி டி.எஸ்.பி.க்கள் சுதீர், வெங்கடேஷ், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ராஜா (ராஜபாளையம் வடக்கு), கவுதம்(சிவகாசி கிழக்கு), நம்பிராஜன் (வெம்பகோட்டை), ராமராஜ் (விருதுநகர் சூலக்கரை) ஆகியோர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரணை நடத்தினர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
கொலை செய்யப்பட்ட ராஜகோபால் ராஜபாளையத்தில் செயல்பட்டு வரும் நூற்பாலைகள், மருத்துவமனைகள், வணிக நிறுவனங்கள், சத்திரப்பட்டி பகுதியில் உள்ள விசைத்தறிக்கூடங்கள், மருத்துவ துணி உற்பத்தி நிறுவனங்கள் ஆகியவற்றிக்கு பல கோடி ரூபாய் வட்டிக்கு கடன் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் ராஜபாளையம் முனியம்மன்கோவில் தெருவில் வசித்து வரும் ஒரு இளம்பெண்ணுடன் ராஜகோபாலுக்கு கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. அந்த பெண் இரவு நேரங்களிலும் ராஜகோபாலின் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார்.
அப்போது ராஜகோபால் வீட்டில் உள்ள ரகசிய அறையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் மற்றும் பணம் வைத்திருப்பதை அந்த இளம்பெண் தெரிந்து கொண்டார். அவர் ராஜகோபால் வைத்திருந்த நகை, பணம் ஆகியவற்றை அபகரிக்க திட்டமிட்டிருக்கிறார்.
அவர் கூலிப்படையை வைத்து ராஜகோபாலையும், அவரது மனைவியையும் கொல்ல திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி சம்பவத்தன்று ராஜகோபால் மற்றும் அவரது மனைவியை கூலிப்படையை ஏவி கொலை செய்துள்ளார்.
பின்னர் ராஜகோபால் வீட்டு ரகசிய அறையை திறந்து அங்கிருந்த சுமார் ரூ.500 கோடி மதிப்புள்ள பணம் மற்றும் நகைகள், கொடுக்கல்-வாங்கல் தொடர்பான ஆவணங்களை திருடி சென்றுள்ளார். மேற்கண்டவை போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கூலிப்படையை ஏவி கணவன்-மனைவியை கொலை செய்த அந்த இளம்பெண் யார்? என்று போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். அவர் கேரளாவுக்கு தப்பி சென்றிருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் அவரை பிடிக்க தனிப்படை போலீசார் கேரளா விரைந்துள்ளனர்.
- திருமணம் செய்து கொள்வதாக ரதீஷ்குமார் அளித்த உறுதிமொழியால் ஷிபா கணவர் மற்றும் குழந்தைகளை பிரிந்து உள்ளார்.
- ஆனால் அவரிடம் உல்லாசம் அனுபவித்த ரதீஷ்குமார் அவரை ஏமாற்றி விட்டு, கடந்த ஆண்டு வேறு பெண்ணை திருமணம் செய்துள்ளார்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பெருமாள்புரத்தில் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது. இங்கு உதவியாளராக பணியாற்றி வந்தவர் ரதீஷ்குமார் (வயது 35).
இவர் நேற்று வழக்கம்போல் ஆஸ்பத்திரிக்கு பணிக்கு வந்தார். இந்த ஆஸ்பத்திரி காலை 7 மணி முதல் 10.30 மணி வரையும் மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரையும் செயல்படும். ஓய்வுநேரத்தில் ரதீஷ்குமார், ஆஸ்பத்திரி பதிவேட்டு அறையிலேயே தங்கி இருப்பார்.
நேற்று மதியம் 3 மணி அளவில் அறையில் தங்கி இருந்த அவர் குத்திக்கொலை செய்யப்பட்டார். அவரை குத்திக் கொன்ற பெண்ணே, இது பற்றி போலீசுக்கு தகவல் கொடுத்து உள்ளார். இந்த சம்பவம் குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுபற்றி போலீசார் நடத்திய விசாரணையில் கள்ளக்காதல் விவாகரத்தில் இந்தப் படுகொலை நடந்திருப்பது தெரிய வந்தது. கொலை செய்யப்பட்ட ரதீஷ்குமார் மணவாளக்குறிச்சியைச் சேர்ந்த திருமணமான ஷிபா என்ற பெண்ணுடன் நட்பாக பழகி உள்ளார். நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறி உள்ளது.
திருமணம் செய்து கொள்வதாக ரதீஷ்குமார் அளித்த உறுதிமொழியால் ஷிபா கணவர் மற்றும் குழந்தைகளை பிரிந்து உள்ளார். ஆனால் அவரிடம் உல்லாசம் அனுபவித்த ரதீஷ்குமார் அவரை ஏமாற்றி விட்டு, கடந்த ஆண்டு வேறு பெண்ணை திருமணம் செய்துள்ளார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் தன் வாழ்க்கையை சீரழித்த ரதீஷ்குமாரை கத்தியால் குத்தி, ஷிபா கொலை செய்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து போலீசார் வழக்குப் பதிவு செய்து ஷிபாவை கைது செய்தனர். அவர் போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலம் வருமாறு:-
நான் எம்.எஸ்.சி., பி.எட்., எம்.பில்., படித்துவிட்டு பேராசிரியையாக வேலை பார்த்து வந்தேன். எனது கணவர் மேக்சன், மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்தார். எங்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
2 பெண் குழந்தைகளை பெற்றவர்களுக்கு அரசு வழங்கும் உதவித்தொகை பெற நான் முயற்சித்தேன். அப்போது தான் ரதீஷ்குமார் எனக்கு அறிமுகமானார். உதவித் தொகை பெற அவர் உதவினார்.
அதனால் நட்பாக பழக ஆரம்பித்த எங்களது பழக்கம் சில நாட்களில் கள்ளக்காதலாக மாறியது. ரதீஷ்குமாருடன் பல இடங்களுக்குச் சென்று உல்லாசமாக இருந்தேன். ரதீஷ்குமாரின் வசீகர பேச்சால் கணவர்-குழந்தைகளை மறந்தேன்.
அப்போது என்னை திருமணம் செய்வதாக உறுதி அளித்த ரதீஷ்குமார், உனது கணவரை விவாகரத்து செய்து விட்டு வா. நாம் திருமணம் செய்து சந்தோஷமாக இருக்கலாம் என்றார்.
கள்ளக்காதல் மோகத்தில் கணவரை நான் விவாகரத்து செய்தேன். அதன்பிறகு தனிமையில் வசித்த நான் கடந்த 13 ஆண்டுகளாக ரதீஷ்குமாருடன் பழக்கத்தில் இருந்தேன். அவர் வேலை பார்க்கும் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் ஓய்வு நேரத்தில் நான் அங்கு செல்வேன். அப்போது அவருக்கு உணவு சமைத்து கொண்டு செல்வேன்.
அங்கு உணவருந்தி விட்டு நாங்கள் கணவன்-மனைவியாக வாழ்ந்தோம். இப்படியே காலம் கடத்தினால் எப்படி? என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள் என ரதீஷ்குமாரிடம் கேட்டபோது அவர் மழுப்பலாக பதில் அளித்தார்.
மேலும் கடந்த சில நாட்களாக அவர் என்னிடம் நெருக்கமாக இல்லாதது போன்று தோன்றியது. இதனால் அவர் மீது எனக்கு சந்தேகம் ஏற்பட்டது.
ரதீஷ்குமார் பற்றி விசாரித்த போது, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தூத்துக்குடியைச் சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து அவருடன் மீனாட்சி புரம் பகுதியில் வசிப்பது தெரியவந்தது. இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
இது குறித்து அவரிடம் கேட்டபோது, விரைவில் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு உன்னை திருமணம் செய்கிறேன் எனக் கூறினார். ஆனால் அவரது பதில் எனக்கு பிடிக்கவில்லை. மேலும் அவரால் நான் வேலையை இழந்ததும் எனக்கு கோபத்தை ஏற்படுத்தியது.
என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஆசைவார்த்தை கூறி உல்லாசமாக இருந்து விட்டு தற்போது வேறு பெண்ணை திருமணம் செய்து ஏமாற்றிய ரதீஷ்குமார் மீது ஆத்திரம் ஏற்பட்டது.
என் வாழ்க்கையை நாசமாக்கியதோடு மற்றொரு பெண்ணின் வாழ்க்கையையும் சீரழித்த ரதீஷ்குமாரை தீர்த்துக் கட்டுவது என முடிவு செய்தேன். இதற்கான நேரத்திற்கு காத்திருந்த போது, ரதீஷ்குமார் என்னை தொலைபேசியில் அழைத்தார்.
நம் விவகாரம் குறித்து பேசி முடிவு எடுக்கலாம், நீ இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கு வா என்றார். இது தான் சரியான நேரம் என நினைத்த நான், தூக்கமாத்திரை கலந்து சாப்பாடு தயாரித்து கொண்டு சென்றேன். வீட்டில் இருந்து செல்லும் போதே கொலை திட்டத்தை செயல்படுத்துவதற்காக கத்தி மற்றும் குத்தூசியை எடுத்துச் சென்றேன்.
இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி பதிவேட்டு அறையில் ஓய்வு நேரத்தில் ரதீஷ்குமார் மட்டுமே இருந்தார். அவருக்கு உணவு பரிமாறினேன். அதனை சாப்பிட்ட அவர், சிறிது நேரத்தில் மயக்க நிலைக்குச் சென்றார்.
இதற்காக காத்திருந்த நான், தயாராக வைத்திருந்த கத்தி மற்றும் குத்தூசியால் ரதீஷ்குமார் உடலில் ஆத்திரம் தீர குத்தினேன். சுமார் 30 முறை சரமாரியாக குத்தியதில் அவர் ரத்த வெள்ளத்தில் இறந்தார்.
ரதீஷ்குமாரை கொலை செய்து விட்டு, அறையை விட்டு வெளியே வந்த நான், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து, இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் அடி-தடி பிரச்சினை உடனே வாருங்கள் என கூறினேன். போலீசார் வந்ததும் ரதீஷ்குமாரை கொலை செய்தது பற்றி தெரிவித்தேன்.
இவ்வாறு அவர் போலீசில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நாகர்கோவில் போலீஸ் துணை சூப்பிரண்டு (பொறுப்பு) கிருஷ்ணமூர்த்தி, ஆரல்வாய்மொழி போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனா, சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜான் கென்னடி, பிரான்சிஸ் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை ஷிபாவிடம் இருந்து போலீசார் கைப்பற்றினர். அவர் வைத்திருந்த பையில் பல்வேறு மாத்திரைகள் இருந்தன.
எனவே கொலை செயலை முடித்துவிட்டு அவர் தற்கொலை செய்ய முடிவெடுத்திருக்கலாம். பின்னர் முடிவை மாற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில் கொலை செய்யப்பட்ட ரதீஷ்குமாரின் மனைவி கணவர் உடலை பார்த்து கதறி அழுதார். அவர் தற்போது 2 மாத கர்ப்பிணியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- கடந்த சில தினங்களாக கள்ளக்காதல் ஜோடிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்கள் வாக்குவாதத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
- இந்த நிலையில் இன்று காலை வினோத்குமார் புவனேஸ்வரியை சந்திப்பதற்காக வழக்கம்போல் அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.
திருச்சி:
திருச்சியை அடுத்த திருவெறும்பூர் அருகே உள்ள மேலகல்கண்டார்கோட்டை நாகம்மை வீதி விஸ்தரிப்பு பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 33). கூலி வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி புவனேஸ்வரி (31).
இதற்கிடையே புவனேஸ்வரிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த வினோத்குமார் (30) என்ற வாலிபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறி உள்ளது.
இதனால் கணவர் வேலைக்கு சென்றிருக்கும் நேரங்களில் புவனேஸ்வரி தனது கள்ளக்காதலன் வினோத்குமாரை தனது வீட்டிற்கு வரவழைத்து இருவரும் அடிக்கடி உல்லாசம் அனுபவித்து வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த சில தினங்களாக கள்ளக்காதல் ஜோடிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்கள் வாக்குவாதத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் இன்று காலை வினோத்குமார் புவனேஸ்வரியை சந்திப்பதற்காக வழக்கம்போல் அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.
பின்னர் வினோத் குமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் புவனேஸ்வரியின் கழுத்தில் திடீரென்று சரமாரியாக குத்தினார். இதனை சற்றும் எதிர்பாராத புவனேஸ்வரி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
எப்படியாவது போலீசார் தன்னை கைது செய்து விடுவார்கள் என்று பயந்த வினோத்குமார், தானும் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தார். இதற்காக அவர் பொன்மலை ரெயில் நிலையம் அருகே வந்தார். பின்னர் தண்டவாளத்தில் தலையை வைத்து படுத்துக்கொண்டார்.
அந்த சமயம் அந்த வழியாக வந்த ரெயில் அவர் மீது ஏறி இறங்கியது. இதில் அவர் தலை துண்டாகி பலியானார். இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் பொன்மலை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் அடிப்படையில் பொன்மலை இன்ஸ்பெக்டர் தனசேகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர்.
மேலும் இந்த கொலை மற்றும் தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்காதலியை குத்திக்கொலை செய்துவிட்டு வாலிபர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் குழந்தையை 108 ஆம்புலன்சில் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி குழந்தை பரிதாபமாக உயரிழந்தது.
- இதுகுறித்த தகவலின்பேரில் விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
விராலிமலை:
ஈரோட்டை சேர்ந்தவர்கள் சீனிவாசன்-திவ்யா தம்பதி. இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகனும், 3 வயதில் ஒரு மகளும் இருந்தனர். சீனிவாசன் கூலி வேலைக்கும், திவ்யா அங்குள்ள ஒரு செங்கற்சூளைக்கும் வேலைக்கு சென்று வந்தனர்.
அதே சூளையில் வேலைபார்த்த ஒரு காலை இழந்த மாற்றுத்திறனாளியான ஜெகன் என்பவருடன் திவ்யாவுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. வயது குறைந்தவர், மாற்றுத்திறனாளி என்பதையெல்லாம் மறந்து அவருடன் ஒன்றாக வாழ முடிவு திவ்யா முடிவு செய்தார்.
இதையடுத்து 3 வயது மகளை மட்டும் தன்னுடன் அழைத்துக்கொண்டு கள்ளக்காதலன் ஜெகனுடன் ஈரோட்டை விட்டு வெளியேறி கள்ளக்குறிச்சியில் குடியேறினர். அங்கும் செங்கற்சூளை வேலைக்கு சென்ற இந்த ஜோடி ஊர் பிடிக்காததால் அங்கிருந்து கடந்த மாதம் 29-ந்தேதி மதுரை மாவட்டம் அய்யூர் பகுதியில் குடியேறினர்.
அப்போது ஜெகனின் நண்பரான பழனியப்பன், இவர்களுடன் ஒரே வீட்டில் தங்கினார். இதில் கள்ளக்காதல் ஜோடி உல்லாசம் அனுபவிப்பதை நேரில் பார்த்த பழனியப்பன் தனது காம இச்சைக்கு ஒன்றுமறியாத 3 வயது குழந்தையை பயன்படுத்த தொடங்கினார்.
இதைப்பார்த்த தாய் திவ்யா கண்டித்தார். ஆனால் ஜெகன் கண்டுகொள்ளாததோடு, பழனியப்பனை கண்டிக்க கூட இல்லை. இதில் பாதிக்கப்பட்ட குழந்தையின் உடல் நாளுக்கு நாள் மிகவும் சோர்வடைய தொடங்கியது.
கடந்த 1-ந்தேதி குழந்தையின் தந்தையிடமே மகளை ஒப்படைத்து விடலாம் என்று முடிவு செய்த திவ்யா, கள்ளக்காதலன் ஜெகன் மற்றும் பழனியப்பன் ஆகிய 3 பேரும் ஒரே மோட்டார்சைக்கிளில் மதுரையில் இருந்து ஈரோடு நோக்கி புறப்பட்டனர். வழியில் குழந்தையின் உடல்நிலை மிகவும் மோசம் அடைந்ததால் விராலிமலை அருகே கொடும்பாளூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் குழந்தையை 108 ஆம்புலன்சில் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி குழந்தை பரிதாபமாக உயரிழந்தது. இதுகுறித்த தகவலின்பேரில் விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் நடந்த பிரேத பரிசோதனையில் 3 வயது குழந்தை பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டு இறந்தது உறுதி செய்யப்பட்டது.
இதற்கிடையே குழந்தை இறந்த தகவல் கிடைத்ததும் தாய் திவ்யா, கள்ளக்காதலன் ஜெகன், பழனியப்பன் ஆகிய 3 பேரும் தலைமறைவாகிவிட்டனர். இறந்த குழந்தையின் உடலை வாங்க கூட வரவில்லை.
இந்த நிலையில் திவ்யாவின் சகோதரர் ஆறுமுகம் என்பவர் மூலம் திருச்சியில் தங்கியிருந்த திவ்யாவை பிடித்த போலீசார், மற்ற இருவரையும் அதிரடியாக கைது செய்தனர். இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தீவிர விசாரணை நடத்தினார்.
விராலிமலை போலீஸ் நிலையத்தில் தீவிர விசாரணை நடத்தப்பட்ட பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் இன்று காலை திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். கொஞ்சமும் இரக்கமின்றி தனது காம இச்சையால் 3 வயது குழந்தையின் உயிரை பறித்த குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை கொடுக்க வேண்டும் என்று அப்பகுதியினர் தெரிவித்தனர்.
- திருமணமான பெண்ணின் வீட்டுக்கு, அவரது கணவர் இல்லாத நேரத்தில் வாலிபர் ஒருவர் சென்று வந்ததை கிராம மக்கள் பார்த்தனர். அவர்கள் இருவரையும் கண்டித்தனர்.
- அதன்பின்பும் அவர்கள் சந்திப்பதை நிறுத்தி கொள்ளவில்லை. இதையடுத்து அவர்களை கையும்,களவுமாக பிடிக்க கிராமத்தினர் திட்டமிட்டனர்.
தேவாஸ்:
மத்திய பிரதேச மாநிலம் தேவாஸ் மாவட்டத்தில் போர்பதேவ் கிராமத்தில் திருமணமான இளம்பெண், கணவர் மற்றும் குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.
இவர்களின் வீட்டுக்கு அருகே வாலிபர் ஒருவர் குடியிருந்தார். பக்கத்து வீடு என்பதால், அந்த வாலிபருடன் பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இருவருக்கும் இடையே நெருக்கம் அதிகரித்தது.
இதனால் அந்த பெண்ணின் கணவர், வேலைக்கு சென்ற பின்னர், வாலிபரை வீட்டுக்கு அழைத்து அந்த பெண் உல்லாசமாக இருந்தார்.
திருமணமான பெண்ணின் வீட்டுக்கு, அவரது கணவர் இல்லாத நேரத்தில் வாலிபர் ஒருவர் சென்று வந்ததை கிராம மக்கள் பார்த்தனர். அவர்கள் இருவரையும் கண்டித்தனர்.
அதன்பின்பும் அவர்கள் சந்திப்பதை நிறுத்தி கொள்ளவில்லை. இதையடுத்து அவர்களை கையும்,களவுமாக பிடிக்க கிராமத்தினர் திட்டமிட்டனர்.
அதன்படி, அந்த பெண்ணின் வீட்டை கண்காணித்து வந்த கிராமத்தினர். சம்பவத்தன்று அந்த பெண்ணை கையும், களவுமாக பிடித்தனர்.
பின்னர் அவரை வீட்டில் இருந்து வெளியே அழைத்து வந்தனர். அங்கு கிராம மக்கள் முன்னிலையில் அந்த பெண்ணுக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டது. மேலும் அந்த பெண்ணின் கணவரை வரவழைத்து அவரை பெண்ணின் தோளில் ஏற்றி கிராமத்தை சுற்றிவரும்படி கூறினர்.
இந்த சம்பவத்தை அந்த பகுதியை சேர்ந்த வாலிபர்கள் சிலர் செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். அது வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இது பற்றி அறிந்த தேவாஸ் மாவட்ட போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். பின்னர் சம்பவம் நடந்த பகுதியை கண்டறிந்த போலீசார், போர்பதேவ் கிராமத்தை சேர்ந்த 11 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்கள்.
- முத்துராமலிங்கம் நடத்திய ஒர்க்ஷாப்பில் மலையரசன் என்பவர் வேலை பார்த்து வந்தார்.
- அப்போது சுனிதாவுக்கும், மலையரசனுக்கும் இடையே ஏற்பட்ட நட்பு கள்ளக்காதலாக மாறியுள்ளது.
காரியாபட்டி:
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே எம்.புளியங்குளத்தைச் சேர்ந்தவர் முத்து ராமலிங்கம் (வயது 45). இவர் ஒர்க்ஷாப் நடத்தி வந்தார். அதன் பின்னர் அவருக்கு மின்வாரியத்தில் வேலை கிடைத்தது. இதைத்தொடர்ந்து அவர் மதுரை அரசரடியில் பயிற்சி பெற்று வந்தார்.
இந்த நிலையில் கடந்த 2-ந்தேதி முத்து ராமலிங்கம் நரிக்குடி-திருச்சுழி சாலையில் காரேந்தல் பஸ் நிறுத்தம் அருகே உள்ள நாடாகுளம் கண்மாய் பகுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது தலையில் காயம் இருந்தது. அருகில் அவர் கொண்டு சென்ற பேக் மற்றும் அவர் ஓட்டிச்சென்ற இருசக்கர வாகனம் கிடந்தது. அவர் விபத்தில் இறந்தது போல் கிடந்தார்.
இது தொடர்பாக முத்துராமலிங்கத்தின் சித்தப்பா மகன் முருகன் என்பவர் திருச்சுழி போலீசில் புகார் செய்தார். அதில் முத்துராமலிங்கம் சாவில் மர்மம் இருப்பதாக தெரிவித்திருந்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
போலீசார் சந்தேகத்தின் பேரில் முத்துராமலிங்கத்தின் மனைவி சுனிதா (43) என்பவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது.
முத்துராமலிங்கம் நடத்திய ஒர்க்ஷாப்பில் மலையரசன் (25) என்பவர் வேலை பார்த்து வந்தார். அப்போது சுனிதாவுக்கும், மலையரசனுக்கும் இடையே ஏற்பட்ட நட்பு கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதுபற்றி அறிந்த முத்துராமலிங்கம் மனைவியை கண்டித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து சுனிதா, கணவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அதற்கு மலையரசனின் உதவியை நாடியுள்ளார். இருவரும் சேர்ந்து திட்டமிட்டபடி முத்துராமலிங்கத்தை சம்பவத்தன்று அடித்துக்கொலை செய்து அவர் விபத்தில் இறந்தது போல் காட்டுவதற்காக சாலையோரம் உடலை வீசிச் சென்றுள்ளனர்.
இந்த கொலைக்கு மலையரசின் நண்பர் சிவா (23) என்பவரும் உடந்தையாக செயல்பட்டு வந்தார். முத்துராமலிங்கம் கொலை செய்யப்பட்டது உறுதியானதை தொடர்ந்து அவரது மனைவி சுனிதா மற்றும் கள்ளக்காதலன் மலையரசன், அவருக்கு உடந்தையாக செயல்பட்ட சிவா ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
மலையரசன் போலீசில் அளித்த வாக்குமூலத்தில், சம்பவத்தன்று இரவு முத்துராமலிங்கம் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது நானும், புளியங்குளத்தைச் சேர்ந்த சிவாவும் கட்டையால் அவரை அடித்துக்கொலை செய்தோம். பின்னர் அவரது உடலை மோட்டார் சைக்கிளில் வைத்து 3 கிலோமீட்டர் தூரம் எடுத்துச்சென்று நரிக்குடி-திருச்சுழி சாலையில் காரனேந்தல் பஸ் நிறுத்தம் அருகில் சாலையோரம் போட்டுவிட்டு சென்று விட்டோம். அவர் வாகன விபத்தில் இறந்தது போல் காட்டுவதற்காக இவ்வாறு செய்தோம் என்று தெரிவித்துள்ளார்.
சுனிதா கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பாதிரியாரின் மனைவி ஆவார். அவர் 20 ஆண்டுகளுக்கு முன்பு தனது மகள் அன்னபூரணியுடன் வந்து முத்துராமலிங்கத்தை திருமணம் செய்துள்ளார். பின்னர் புளியங்குளம் அருகே உள்ள அணிக்கலக்கியேந்தல் கிராமத்தில் வசித்துள்ளார் என்பதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. சுனிதா தன்னை விட 20 வயது குறைந்த வாலிபருடன் கள்ளத்தொடர்பு வைத்து கணவரை கொலை செய்த சம்பவம் காரியாபட்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பழனியம்மாளுக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலையில் பழனியம்மாள் பரிதாபமாக இறந்தார்.
- இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் தீவட்டிப்பட்டி போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காடையாம்பட்டி:
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே தும்பிப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சேர்வராயன். இவரது மகன் மாது (வயது 37). கூலி தொழிலாளி.
மாதுவுக்கும், அதே ஊரை சேர்ந்த பழனியம்மாள் (வயது 52) என்ற பெண்ணுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இதனால் இருவரும் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு மாது குடிபோதையில் பழனியம்மாளை தகாத வார்த்தைகளால் திட்டினார். இதனால் பதிலுக்கு பழனியம்மாள் அவரை சத்தம் போட்டார். இதையடுத்து இருவருக்கும் இடையே சண்டை உருவானது.
தொடர்ந்து இருவரும் ஆபாசமான வார்த்தைகளை பேசி சண்டை போட்டனர். இதை கண்டு அக்கம், பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு திரண்டு மாதுவிடம் சண்டை போடாமல் இருக்கும்படி கூறி விலக்கி விட்டனர். ஆனால் மாது அங்கிருந்து செல்லாமல் கோபத்தில் கல்லை எடுத்து பழனியம்மாளின் தலையில் தாக்கினார்.
இதனால் அவரது தலையில் இருந்து ரத்தம் குபு, குபுவென பீறிட்டு வெளியேறியது. சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்தார். பலத்த காயம் ஏற்பட்ட பழனியம்மாளை மீட்டு அக்கம், பக்கத்தினர் சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு தீவிர சிகிச்சைப்பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டார். பழனியம்மாளுக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலையில் பழனியம்மாள் பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் தீவட்டிப்பட்டி போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலையாளி மாது வீட்டில் இல்லை. போலீசார் கைது செய்து விடுவார்கள் என கருதி அவர் தலைமறைவாகி விட்டார்.
மாது குறித்து அக்கம், பக்கத்தில் வசிப்பவர்களிடம் போலீசார் விசாரித்தபோது பரபரப்பு தகவல் கிடைத்தது.
மாதுவுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. ஏற்கனவே திருமணம் ஆனவர். குடும்ப செலவுக்கு பணம் கொடுக்காமல், வேலைக்கும் செல்லாமல் நண்பர்களுடன் மது குடித்து வந்தார். இதனால் அவரது மனைவி கடந்த சில வருடங்களுக்கு முன்பு மாதுவிடம் இருந்து விவாகரத்து பெற்று சென்று விட்டார். தற்போது அந்த பெண் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டு கணவருடன்