என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Kancheepuram court"
- நிலம் விற்பனை செய்வதில் காலதாமதம் ஏற்பட்டதை தொடர்ந்து செல்வத்திற்கும், ராஜ்குமாருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
- மனைவி கண்முன்பே கணவரை கொன்ற 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து காஞ்சிபுரம் விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
காஞ்சிபுரம்:
சென்னை நந்தம்பாக்கத்தை சேர்ந்தவர் செல்வம். இவர் தனது பெயரில் உள்ள நிலத்தை விற்பனை செய்வதாக கூறி அதே பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரிடம் முன் தொகை பெற்றுள்ளார்.
மேலும் நிலம் விற்பனை செய்வதில் காலதாமதம் ஏற்பட்டதை தொடர்ந்து செல்வத்திற்கும், ராஜ்குமாருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு செல்வம் தனது மனைவியுடன் நந்தம்பாக்கம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது வழிமறித்து ராஜ்குமார் மற்றும் அவரது நண்பர்கள் கோதண்டன், சந்திரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து செல்வத்தை அவரது மனைவியின் கண்முன்னே கத்தியால் குத்தி கொலை செய்தனர்.
இது குறித்து குன்றத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகள் 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், காஞ்சிபுரம் கூடுதல் அமர்வு நீதிமன்றமான விரைவு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. அரசு தரப்பு வழக்கறிஞர் சத்தியமூர்த்தி வாதாடினார். வழக்கை விசாரித்த நீதிபதி எம்.இளங்கோவன் செல்வத்தை கொலை செய்த ராஜ்குமார் கோதண்டன், சந்திரன் ஆகிய 3 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
மத்திய அரசின் இ-கோர்ட் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள அனைத்து கோர்ட்டுகளையும் ஒருங்கிணைத்து கம்ப்யூட்டர் மயமாக்கும் திட்டம் தமிழகத்தில் படிப்படியாக அமல்படுத்தப்பட்டு வருகின்றது.
இதன் மூலம் வழக்கு சம்பந்தப்பட்ட அனைத்து விபரங்களும் உடனுக்குடன் அனைத்து வழக்கறிஞர்களுக்கும் குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படும். இதற்கான குறுந்தகவல் சேவை மையங்கள் அந்தந்த மாவட்ட நீதிமன்றகளில் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
இதன் மூலம் வக்கீல்களுக்கு புதிதாக தாக்கல் செய்யப்படும் வழக்குகள், நிலுவையில் உள்ள வழக்குகளின் விபரங்கள், வாய்தா தேதி முதலானவை குறுந்தகவல் மூலம் அனுப்பப்படும்.
இதனால் வழக்கறிஞர்கள் கோர்ட்டுக்கு நேரில் வந்து வழக்கு குறித்து அறிய வேண்டியதில்லை. இதனால் கால விரயம் தவிர்க்கப்படுகின்றது. மேலும் முக்கியமான வழக்குகளின் தன்மை குறித்த விபரங்களை உலகத்தின் எந்த மூலையிலும் உள்ளவர்கள் அறிந்து கொள்ளலாம்.
இந்த திட்டத்திற்கான புதிய சேவை மையத்தினை காஞ்சீபுரம் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட நீதிபதி கருணாநிதி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் நீதிபதிகள் ஜெயவேலு, பாக்கியஜோதி, மீனாட்சி, திருமால், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி, வழக்கறிஞர்கள் சம்பத், கார்த்திகேயன், ரவிச்சந்திரன், சத்தியமூர்த்தி, துரைமுருகன், தாங்கி பழனி, ஆர்.வி.உதயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்