என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சென்னை நந்தம்பாக்கத்தில் மனைவி கண்முன்பே கணவரை கொன்ற 3 பேருக்கு ஆயுள் தண்டனை
    X

    சென்னை நந்தம்பாக்கத்தில் மனைவி கண்முன்பே கணவரை கொன்ற 3 பேருக்கு ஆயுள் தண்டனை

    • நிலம் விற்பனை செய்வதில் காலதாமதம் ஏற்பட்டதை தொடர்ந்து செல்வத்திற்கும், ராஜ்குமாருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
    • மனைவி கண்முன்பே கணவரை கொன்ற 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து காஞ்சிபுரம் விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

    காஞ்சிபுரம்:

    சென்னை நந்தம்பாக்கத்தை சேர்ந்தவர் செல்வம். இவர் தனது பெயரில் உள்ள நிலத்தை விற்பனை செய்வதாக கூறி அதே பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரிடம் முன் தொகை பெற்றுள்ளார்.

    மேலும் நிலம் விற்பனை செய்வதில் காலதாமதம் ஏற்பட்டதை தொடர்ந்து செல்வத்திற்கும், ராஜ்குமாருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்த நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு செல்வம் தனது மனைவியுடன் நந்தம்பாக்கம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது வழிமறித்து ராஜ்குமார் மற்றும் அவரது நண்பர்கள் கோதண்டன், சந்திரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து செல்வத்தை அவரது மனைவியின் கண்முன்னே கத்தியால் குத்தி கொலை செய்தனர்.

    இது குறித்து குன்றத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகள் 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், காஞ்சிபுரம் கூடுதல் அமர்வு நீதிமன்றமான விரைவு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. அரசு தரப்பு வழக்கறிஞர் சத்தியமூர்த்தி வாதாடினார். வழக்கை விசாரித்த நீதிபதி எம்.இளங்கோவன் செல்வத்தை கொலை செய்த ராஜ்குமார் கோதண்டன், சந்திரன் ஆகிய 3 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

    Next Story
    ×