என் மலர்

    நீங்கள் தேடியது "lover"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டைவிட்டு வெளியேறினார்.
    • 2 பேரும் மேஜர் என்பதால் சேர்ந்து வாழ எவ்வித இடையூறும் செய்யக்கூடாது என இரு வீட்டாரிடமும் எழுதி வாங்கிக்கொண்டனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா வடமதுரை அருகே உள்ள தென்னம்பட்டியை சேர்ந்தவர் பிரியா (வயது 23). கணிதவியல் பட்டதாரி. இவரை கடந்த 16ஆம் தேதி முதல் காணவில்லை என்று அவரது தந்தை வடமதுரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதனை தொடர்ந்து பிரியா எங்கு சென்றார் என்பது குறித்து வடமதுரை போலீசார் விசாரணை செய்து வந்தனர்.

    இந்நிலையில் பிரியா வேடசந்தூர் ஆத்துமேட்டில் பூக்கடை வைத்திருக்கும் பி.ஏ. தமிழ் பட்டதாரியான மனோபாலாஜி (வயது 23) என்பவரை கடந்த 4 வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இந்த காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டைவிட்டு வெளியேறினார். பின்னர் தனது காதலனை மணப்பாறை அருகில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டார்.

    பின்னர் தங்கள் வீட்டிற்கு சென்றால் எப்படியும் பிரச்சினை செய்து பிரித்து விடுவார்கள் என நினைத்து மணக்கோலத்தில் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். வடமதுரை போலீசார் இருதரப்பு பெற்றோரையும் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது 2 பேரும் மேஜர் என்பதால் அவர்கள் சேர்ந்து வாழ எவ்வித இடையூறும் செய்யக்கூடாது என இரு வீட்டாரிடமும் எழுதி வாங்கிக்கொண்டனர்.

    பிரியாவின் குடும்பத்தினர் தங்களுடன் வருமாறு அழைத்தபோதும் தான் கணவருடன் தான் செல்வேன் என அவர் உறுதியாக கூறினார். இதனையடுத்து காதல் ஜோடிகளை போலீசார் வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சில மாதங்களுக்கு முன்பு வாலிபர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
    • ஆத்திரம் அடைந்த இளம்பெண் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வாலிபரை கழுத்தில் குத்தினார்.

    கோவை:

    கோவை அன்னூர் அருகே உள்ள ஒற்றர்பாளையத்தை சேர்ந்தவர் 25 வயது தொழிலாளி.

    இவரும் அதே பகுதியை சேர்ந்த 24 வயது இளம்பெண்ணும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தனர்.

    இந்நிலையில் வாலிபர் தனது காதலியை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். இதுகுறித்து வாலிபர் தனது காதலியிடமும் தெரிவித்தார். அவரும் அதற்கு சம்மதித்தார்.

    மேலும் தனது பெற்றோரிடம் வந்து பெண் கேட்குமாறு, வாலிபரிடம் இளம்பெண் தெரிவித்தார்.

    இதையடுத்து வாலிபர், பெண்ணின் வீட்டிற்கு சென்று, நானும், உங்களது மகளும் விரும்புகிறோம். திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறோம். எங்களுக்கு திருமணம் செய்து வையுங்கள் என கேட்டுள்ளார்.

    ஆனால் இளம்பெண்ணின் வீட்டார் இதற்கு மறுப்பு தெரிவித்து விட்டனர். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு வாலிபர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

    இருப்பினும் தனது முன்னாள் காதலியுடன் தொடர்பில் இருந்து வந்தார். மேலும் வாலிபர், இளம்பெண்ணை அடிக்கடி சந்தித்து, அவரிடம் பணமும் வாங்கி வந்தார்.

    நேற்றிரவு வாலிபரும், இளம்பெண்ணும் அன்னூர் பகுதியில் சந்தித்து பேசி கொண்டிருந்தனர்.

    அப்போது வாலிபர் ரூ.5 ஆயிரம் கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. தகராறு வாக்குவாதமாக மாறி ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர்.

    ஆத்திரம் அடைந்த இளம்பெண் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வாலிபரை கழுத்தில் குத்தினார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் அலறி சத்தம் போட்டார். மேலும் வாலிபர், இளம்பெண்ணையும் தாக்கினார்.

    இவர்களது சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு அருகே உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அபிஜீத் வெளியிட்ட வீடியோவில், அந்த பெண்ணை நான்தான் கொலை செய்தேன் என்று ஒப்புக்கொள்கிறார்.
    • அபிஜீத் வெளியிட்ட 3-வது வீடியோவில், ‘செல்லம்... நாம சொர்க்கத்தில் சந்திப்போம்’ என்றும் கூறியிருக்கிறார்.

    போபால் :

    குஜராத்தை பூர்வீகமாக கொண்ட அபிஜீத் படிதார் என்ற வாலிபர், மத்தியபிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்தில் உள்ள பட்டான் நகரில் வசித்து வந்தார்.

    எண்ணெய் மற்றும் சர்க்கரை தொழிலில் ஈடுபட்டு வந்த இவர், கடந்த வெள்ளிக்கிழமை சமூக வலைதளத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டார்.

    அதில், 'துரோகம் செய்யக்கூடாது' என்று அபிஜீத் கூறுகிறார். பின்னர், படுக்கையில் கிடக்கும் ஒரு உருவத்தின் மீது மூடப்பட்ட போர்வையை விலக்கிக்காண்பிக்கிறார். அதில், கழுத்து அறுபட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் ஒரு இளம்பெண் இறந்து கிடக்கிறார்.

    அபிஜீத் வெளியிட்ட மற்றொரு வீடியோவில், அந்த பெண்ணை நான்தான் கொலை செய்தேன் என்று ஒப்புக்கொள்கிறார். மேலும் தனது காதலியான அப்பெண், தன்னுடைய தொழில் பங்குதாரரான ஜிதேந்திரகுமார் என்பவருடனும் உறவு வைத்திருந்திருக்கிறார். அவரிடம் ரூ.12 லட்சம் வாங்கிக்கொண்டு தலைமறைவாகிவிட்டார். ஜிதேந்திரகுமார் சொன்னதன் பேரில்தான் நான் அவளை கொன்றேன் என்று கூறியிருக்கிறார்.

    அபிஜீத் வெளியிட்ட 3-வது வீடியோவில், 'செல்லம்... நாம சொர்க்கத்தில் சந்திப்போம்' என்றும் கூறியிருக்கிறார்.

    கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெயர் ஷில்பா ஜாரியா (வயது 22). அவரும் ஜபல்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்தான். அந்த பெண், ஜபல்பூரில் உள்ள ஒரு ரிசார்ட் அறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தது கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது. அவரை கொலை செய்ததாக கருதப்படும் அபிஜீத் தலைமறைவாகிவிட்டார். அவர் தான் கொலை செய்த காதலியின் இன்ஸ்டாகிராம் அக்கவுண்டில்தான் முதலாவது வீடியோவை வெளியிட்டுள்ளார்.

    இந்நிலையில் அபிஜீத்தின் தொழில் பங்குதாரராக கருதப்படும் ஜிதேந்திரகுமாரையும், அவரது உதவியாளரான சுமித் படேல் என்பவரையும் பீகாரில் போலீசார் கைது செய்திருக்கின்றனர். மேலும், கொலையாளி அபிஜீத் பதுங்கியுள்ள இடத்தையும் கண்டுபிடித்துவிட்டதாகவும், அவரை மடக்கிப்பிடிக்க தனிப்படையினர் விரைந்துள்ளதாகவும் மத்தியபிரதேச போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    திருச்சி பெண்கள் சிறை வார்டர் தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக அவரது காதலன் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருச்சி:

    கடலூர் மாவட்டம் தவளக் குப்பம் அருகே பெரியகாட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த செல்லப்பன் மகள் செந்தமிழ்செல்வி (வயது 23). இவர் திருச்சி பெண்கள் சிறையில் வார்டராக பணியாற்றி வந்தார். திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறைக்காவலர் குடியிருப்பில் ஒரு வீட்டில் தனியாக தங்கி பணிக்கு சென்று வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு செந்தமிழ்செல்வி பணிக்கு வரவில்லை. சக வார்டர்கள் அவரது செல்போனை தொடர்பு கொண்டபோது ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டிருந்தது.

    இதனால் செந்தமிழ்செல்வியின் வீட்டிற்கு வார்டர்கள் சிலர் இரவு 8 மணி அளவில் சென்றனர். அங்கு அவரது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் கே.கே.நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்றபோது, செந்தமிழ்செல்வி வீட்டின் படுக்கை அறையில் மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்குப்போட்டபடி பிணமாக தொங்கிக்கொண்டு இருந்தார். போலீசார் நடத்திய விசாரணையில் அவர் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

    செந்தமிழ்செல்வியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கடலூர் மாவட்டத்தில் உள்ள அவரது பெற்றோருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் செல்லப்பன் மற்றும் குடும்பத்தினர் நேற்று முன்தினம் இரவே திருச்சிக்கு புறப்பட்டு வந்தனர்.

    மேலும் நேற்று காலை அவரது உறவினர்களும், திருச்சி மாவட்டத்தை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் சிலரும் திருச்சி அரசு மருத்துவமனையில் குவிந்தனர். செந்தமிழ்செல்வி தற்கொலை சம்பவம் குறித்து கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் காதல் தோல்வியின் காரணமாக அவர் தற்கொலை செய்தது தெரியவந்தது.

    இதற்கிடையில் தற்கொலை செய்த செந்தமிழ்செல்வியின் தந்தை செல்லப்பன் நிருபர்களிடம் கூறுகையில், “திருச்சி மத்திய சிறை வார்டர் வெற்றிவேல் என்பவர் எனது மகளை காதலித்து விட்டு ஏமாற்றிவிட்டார். வெற்றிவேலின் அண்ணன் கைலாசம், அவரது மனைவியும் எனது மகளிடம் சாதிபெயரை சொல்லி கடுமையாக திட்டியுள்ளனர். இதனால் மனவேதனை தாங்காமல் அவர் தற்கொலை செய்துள்ளார். சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும். இல்லையென்றால் உடலை வாங்க மாட்டோம்” என்றார்.

    மேலும் கே.கே.நகர் போலீஸ் நிலையத்திலும் இது தொடர்பாக வெற்றிவேல், அவரது அண்ணன், அண்ணி மீது செல்லப்பன் புகார் கொடுத்தார். அதன்பேரில் வெற்றிவேல் உள்பட 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதைத்தொடர்ந்து பிரேத பரிசோதனை முடிந்ததும் அவரது உடலை உறவினர்கள் மாலையில் பெற்று சென்றனர். செந்தமிழ்செல்வி தற்கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் கூறியதாவது:-

    செந்தமிழ்செல்வியும், வெற்றிவேலும் கடந்த ஒரு வருடமாக காதலித்துள்ளனர். இதற்கிடையில் வெற்றிவேலுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்ய ஏற்பாடு நடந்துள்ளது. வெற்றிவேலின் அண்ணன் கைலாசமும் திருச்சி மத்திய சிறையில் வார்டராக பணியாற்றி வருகிறார். அவர் மனைவியுடன் வசித்து வருகிறார். வெற்றிவேலும், செந்தமிழ்செல்வியும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள்.

    செந்தமிழ்செல்வியை வெற்றிவேலுக்கு திருமணம் செய்து வைக்க கைலாசம் ஒப்புக்கொள்ளவில்லை. மேலும் வெற்றிவேலும் செந்தமிழ்செல்வியை காதலித்து ஏமாற்றியதாக தெரிகிறது. இதனால் தான் வேறு ஒரு பெண்ணுடன் அவருக்கு திருமணம் நிச்சயமாகி உள்ளது. 6-ந் தேதி (அதாவது நாளை) திருமணம் நடைபெற இருந்ததாக கூறுகின்றனர். இதனால்தான் காதல் தோல்வியால் வேதனையடைந்த செந்தமிழ்செல்வி தற்கொலை செய்துள்ளார். இதுதொடர்பாக அவரது காதலன் உள்பட 3 பேர் மீதும் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

    இதற்கிடையே வெற்றிவேல், அவரது அண்ணன், அண்ணி 3 பேரும் தலைமறைவாக உள்ளனர். அவர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    மதுரை அருகே என்ஜினீயரிங் மாணவியை கடத்தியதாக காதலன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.
    மதுரை:

    மதுரை அருகே உள்ள பரவை பகுதியை சேர்ந்தவர் செந்தமிழ்செல்வன். இவரது மகள் கிருத்திகா (30). என்ஜினீயரிங் மாணவியான கிருத்திகா. கடந்த 7-ந் தேதி வீட்டை விட்டு சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இந்த நிலையில் கிருத்திகாவை அவரது காதலன் நவீன்குமார் கடத்தி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சமயநல்லூர் போலீசில் செந்தமிழ்செல்வன் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் தர்மர் வழக்குப்பதிவு செய்து கடத்தப்பட்ட மாணவி கிருத்திகா மற்றும் நவீன்குமாரை தேடி வருகிறார். #tamilnews
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    உங்கள் காதலர் நல்லவரா? கெட்டவரா? என்று தெரிந்துகொள்ள முடியாத குழப்பம் உங்களுக்கு இருக்கத்தான் செய்யும். அந்த குழப்பத்தை, நிஜத்தை கண்டறியும் இ்ந்த பரிசோதனை தீர்த்துவைக்கும்.
    நீங்கள் காதல்வசப்பட்டிருக்கிறீர்கள் என்றால், உங்கள் காதலர் நல்லவரா? கெட்டவரா? என்று தெரிந்துகொள்ள முடியாத குழப்பம் உங்களுக்கு இருக்கத்தான் செய்யும். அந்த குழப்பத்தை, நிஜத்தை கண்டறியும் இ்ந்த பரிசோதனை தீர்த்துவைக்கும். சரி.. பரிசோதனை தேர்வுக்குள் நுழையலாமா?

    1. காதலர் உங்களை வேண்டுமென்றே காயப்படுத்துகிறாரா?


    அ. எப்போதாவது காயப்படுத்துவார்.
    ஆ. கடுமையாகப் பேசுவார், ஆனால் காரணம் இருக்கும்.
    இ. அவ்வப்போது காயப்படுத்துவார்.
    ஈ. அடிக்கடி கடுமையாக நடந்துகொள்கிறார்.

    2. வாழ்க்கை முழுவதும் சேர்ந்து வாழ ஆசைப்படுவதாக பேசியிருக்கிறாரா?

    அ. எப்போதும் காதலுடன் பேசுவார்.
    ஆ. அவ்வப்போது சேர்ந்து வாழ்வது பற்றி பேசுவார்.
    இ. பழகுகிறோம், ஆனால் சேருவது பற்றி பேசியதில்லை.
    ஈ. பழக ஆரம்பித்தபோது மட்டும் பேசினார்.

    3. காதலருக்கு எவ்வளவு கோபம் வரும்?


    அ. செல்லக் கோபம் கொள்வார்.
    ஆ. எப்போதாவது கோபம் வரும்.
    இ. அடிக்கடி கோபப்படுவார்.
    ஈ. கோபம்தான் அவரது அடையாளமே.

    4. காதலருக்கு கோபம் வந்தால் என்ன செய்வார்?

    அ. கடுமையாகப் பேசுவார், பின்னர் இறங்கி வருவார்.
    ஆ. பொருட்களை உடைப்பார், வண்டியை வேகமாக ஓட்டுவார்.
    இ. பேசாமல் இருப்பார்.
    ஈ. பல நாட்கள் தொடர்பு கொள்ளமாட்டார்.

    5. பிரச்சினையின் போது முதலில் இறங்கி வருவது யார்?

    அ. அவர்தான் இறங்கி வருவார்.
    ஆ. நான்தான் பணிந்துசெல்ல வேண்டும்.
    இ. எப்போதாவது பணிந்துபோவார்.
    ஈ. விட்டுக் கொடுக்க மாட்டோம். தவறு யாருடையதோ அவர்தான் இறங்கி வர வேண்டும் என நினைப்போம்.

    6. அவர் உங்களைச் சுற்றி வருவதை பற்றி..?

    அ. அது ஒரு சுகமான அனுபவம். அவர் எனக்கு வேண்டும்.
    ஆ. அவர் என்னை சுற்றி வருவது எனக்குப் பிடித்திருக்கிறது.
    இ. காரணத்துடன்தான் சுற்றுகிறார் என தோன்றுகிறது.
    ஈ. சுற்றி வருகிறார், எனக்குப் பிடிக்கவில்லை.

    7. உங்கள் இருவரில் அதிகமாக எரிந்து விழுவது யார்?


    அ. இருவரும் கோபத்தில் அப்படி நடந்து கொள்வோம்.
    ஆ. நான்தான், அவர் கோபப்படமாட்டார்.
    இ. அவர்தான் என்னைவிட கோபக்காரர்.
    ஈ. கோபம் வந்தால் கண்மூடித்தனமாக எரிச்சலைக் கொட்டுவார்.

    8. உங்களை ஈர்ப்பதற்காக, இயல்புக்கு மாறாக நடந்துகொள்கிறாரா?

    அ. இல்லை. எப்போதும்போலவே செயல்படுகிறார்.
    ஆ. எப்போதாவது அப்படி நடந்துகொள்கிறார்.
    இ. ஈர்ப்பதற்காக நடிக்கிறார்.
    ஈ. நம்பிக்கை தரும் விதத்தில் அவரது நடத்தைகள் இல்லை.



    9. உங்கள் ஆசைகளுக்கும், லட்சியங்களுக்கும் கைகொடுப்பாரா?


    அ. ஆம்.. அப்படித்தான் நடந்துகொள்கிறார்.
    ஆ. ஆசைகளை நிறைவேற்றுகிறார்.
    இ. வாக்குறுதி தருவார், பின்னர் கண்டு கொள்வதில்லை.
    ஈ. ஆசைகளை கைவிடச் சொல்வார்.

    10. அவரது விருப்பத்தைத் தாண்டி நீங்கள் செயல்படும்போது என்ன செய்வார்?

    அ. என் ஆசையை நிறைவேற்றுவார்.
    ஆ. உன் விருப்பம் என்று விட்டுவிடுவார்.
    இ. எதிர்ப்புத் தெரிவிப்பார்.
    ஈ. என் விருப்பங்களுக்கு தடைவிதிப்பார்.

    11. பொது இடங்களில் உங்களை தாக்கிப் பேசுவதும், திட்டுவதும் உண்டா?

    அ. இல்லை. கோபத்தை அடக்கிக் கொள்வார்.
    ஆ. அடக்கத்துடன் கோபத்தை காட்டுவார்.
    இ. அடக்கமின்றி பேசுவார். அடிப்பதும் உண்டு.
    ஈ. ஆபாசமாக பேசிவிட்டு, என்னை தனியாக விட்டுவிட்டு போய்விடுவார்.

    12. உங்கள் தேவை நிறைவேறாதபோது..?

    அ. சமாதானம் செய்வார். தேவையை நிறைவேற்ற வாக்குறுதியளிப்பார்.
    ஆ. சமாளித்து நழுவிவிடுவார்.
    இ. இருப்பதை ஏற்றுக்கொள்ள கட்டாயப்படுத்துவார்.
    ஈ. கண்டுகொள்ளமாட்டார்.

    13. அவருடன் பழகுவது பற்றி உங்கள் தோழிகளும், உறவினர்களும் என்ன சொல்கிறார்கள்?

    அ. நல்ல மனிதர், ஜோடி சேர வாழ்த்துவதாக கூறுவார்கள்.
    ஆ. எதற்கும் எச்சரிக்கையாக பழகு என்பார்கள்.
    இ. வேறுமாதிரி கேள்விப்பட்டதாக கூறுவார்கள்.
    ஈ. தவறானவர், காதலை கைவிடவலியுறுத்துகிறார்கள்.

    14. உங்கள் பழக்கம் வீட்டிற்குத் தெரியுமா?

    அ. பெற்றோருக்குத் தெரியும்.
    ஆ. சகோதரன் அல்லது சகோதரிக்கு மட்டும் தெரியும்.
    இ. சொல்ல பயமாக இருக்கிறது.
    ஈ. யாருக்கும் தெரியாது.

    15. பழைய விஷயங்களை, தவறுகளை சொல்லிக்காட்டி பேசுகிறாரா?

    அ. அப்படி பேசமாட்டார்.
    ஆ. சில வேளைகளில் அப்படிச் சொல்லிக்காட்டுவார்.
    இ. குத்திக் காட்டிப் பேசுவதாகத் தோன்றும்.
    ஈ. குறைசொல்லிப் பேசுவார்.

    16. மற்றவர்களுடன் ஒப்பீடு செய்து பேசுவாரா?

    அ. இல்லை.
    ஆ. சில நேரங்களில் ஒப்பீடுசெய்வார்.
    இ. நடை, உடை, பாவனைகளில் சிலரைக் காட்டி ஒப்புமை செய்வதுண்டு.
    ஈ. மாறச் சொல்லி கட்டாயப்படுத்துவார்.

    17. அவரது நடத்தையைப் பற்றி மற்றவர்கள் குறைகூறி இருக்கிறார்களா?

    அ. யாரும் குறைகூறியதில்லை.
    ஆ. சில பழக்கவழக்கங்களை குறைசொல்வார்கள்.
    இ. வேறு பெண்களுடனும் பழகுவதாக சொல்கிறார்கள்.
    ஈ. வேண்டாத நடத்தை கொண்டவர் என்று எச்சரிக்கிறார்கள்.

    18. உங்கள் வாழ்க்கையைப் பற்றி பேசியது உண்டா?

    அ. நிறைய பேசுவோம். நிறைய திட்டமிட்டிருக்கிறோம்.
    ஆ. அவ்வப்போது பேசுவோம்.
    இ. மற்றவர்களுடன் ஒப்பீடு செய்து பேசுவோம்.
    ஈ. அவ்வளவு பேசியதில்லை.



    19. உங்கள் செயல்பாடுகளில் அவர் சந்தேகப்படுகிறாரா?

    அ. இல்லை, என் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்.
    ஆ. சந்தேகப்படமாட்டார்.
    இ. சில நேரங்களில் சந்தேகமடைகிறார்.
    ஈ. அடிக்கடி சந்தேக கேள்விகளை எழுப்புகிறார்.

    20. அவரது அன்பு முறிந்துவிடும் என நினைக்கிறீர்களா?

    அ. ரொம்ப அன்பாக இருக்கிறார், அப்படித் தெரியவில்லை.
    ஆ. கைவிடமாட்டார்.
    இ. பாசமாக பழகுகிறார், நம்ப தயக்கமாக உள்ளது.
    ஈ. கழற்றிவிட்டுவிடுவாரோ என்ற அச்சம் உண்டு.

    இப்போது உங்கள் காதலை எடைபோடலாம். அ. பதில்களுக்கு 10 மதிப்பெண். ஆ. பதில்களுக்கு 5 மதிப்பெண். இ. பதில்களுக்கு 3 மதிப்பெண். ஈ. பதில்களுக்கு 1 மதிப்பெண் வழங்குங்கள். உங்கள் மொத்த மதிப்பெண்களை கூட்டிக் கொள்ளுங்கள்.

    மதிப்பெண் 30 -க்குள் இருந்தால்..

    உங்களுக்குள் காதல் இல்லை. அவர் ஏதேதோ ஆசைகளுடன் உங்களைச் சுற்றி வரலாம். நல்ல பண்புகள் அவரிடம் குறைவாகவே இருக்கிறது. அவருடைய காதலை ஏற்கத் தேவையில்லை. தேவையின்றி நட்பை வளர்க்காமல் நைசாக அவரை கழற்றி விட்டுவிடுங்கள். பெற்றோர் மற்றும் நண்பர்களின் உதவியுடன் அவரிடம் இருந்து பாதுகாப்பான தூரத்திற்கு விலகுங்கள்.

    மதிப்பெண் 30-க்கு மேல் 90-க்குள் இருந்தால்...

    நீங்கள் காதல்வசப்படவில்லை. உங்களை ஈர்ப்பதற்காக சுற்றிவரும் அவரது செய்கைகளை ரசிக்கிறீர்கள். ஆனால் அவரை ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு அவர் உங்கள் நன்மதிப்பை பெறவில்லை. அவர் உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. பண்புநலன்களிலும் சராசரியானவராக காணப்படுகிறார். பருவ மயக்கத்தில் சுற்றும் அவரை உதாசீனப்படுத்தாமல் ஒதுங்கிச் செல்ல வையுங்கள். அவரிடம் இடைவெளியை உருவாக்காவிட்டால், அதுவே பின்னாளில் பிரச்சினையாகலாம். எனவே காதல் இல்லை என்பதை தெளிவுபடுத்துவதுடன் ஒதுங்கிச் செல்லுங்கள். அவர், உங்கள் வாழ்க்கையில் தலையிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

    மதிப்பெண் 90-க்கு மேல் 150-க்குள் இருந்தால்...

    நீங்கள் இருவரும் நல்ல நட்புறவுடன் இருக்கிறீர்கள். பண்புகள், குணநலன்கள் இருவருக்கும் ஒத்துப்போகிறது. அவர் உங்களிடம் காதலை வெளிப்படுத்தினால், சேர்ந்து வாழலாம் என்று கூறினால் பரி சீலிக்கலாம். உங்கள் வாழ்க்கையைப் பற்றி இன்னும் தெளிவாகப் பேசி முடிவு செய்யுங்கள். இறுதி முடிவுக்கு முன்பு பெற்றோரிடம் கலந்து பேசுங்கள். எதிர்ப்புகள் இருக்குமென்றால் ஏற்ற இறக்கங்களை சமாளித்து எப்படி வாழ்வது என்பதையும் பேசி முடிவு செய்துகொள்ளுங்கள். வெறும் ஆசை மட்டும் வாழ்க்கையில்லை என்பதை புரிந்து கொண்டால் நீங்கள் அடுத்தகட்டத்திற்குச் செல்லலாம்.

    மதிப்பெண் 150-க்கு மேல் 200-க்குள் இருந்தால்...

    உங்கள் காதலர் இனிமையானவர். நீங்களும் அவரை விரும்புகிறீர்கள். பண்பு நலன்களில் சிறந்து விளங்கும் அவரது காதலை ஏற்றுக் கொள்ளலாம். அடுத்தகட்ட வாழ்க்கை பற்றி நீங்கள் ஆலோசிக்கலாம். பெற்றோரின் சம்மதம், பொருளாதார நலன், சமூக உறவு, எதிர்கால வாழ்க்கை பற்றிய தெளிவான கண்ணோட்டத்தை வளர்த்துக் கொண்டு, இல்லற வாழ்வில் அடியெடுத்து வைக்கலாம். வாழ்த்துக்கள்.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    திருமங்கலம் அருகே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட காதலிக்கு கொலை மிரட்டல் விடுத்த காதலன் அவரது பெற்றோர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
    பேரையூர்:

    திருமங்கலம் அருகே உள்ள கூடக்கோவில், கல்லணை கிராமத்தைச் சேர்ந்தவர் பரமன். இவரது மகள் செல்வி (வயது 22) பி.இ. பட்டதாரி.

    இவருக்கும், பக்கத்து ஊரான கல்லணைபுதூர் கிராமத்தைச் சேர்ந்த மலையாளி மகன் மாரிச்செல்வம் (25) என்ற பட்டதாரி வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டது. 4 வருடங்களாக இருவரும் காதலித்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று காலை மாரிச்செல்வத்தின் வீட்டு முன்பு அமர்ந்து செல்வி திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    காதலன் மாரிச்செல்வம் திருமணத்திற்கு மறுத்ததால் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதாக செல்வி தெரிவித்தார்.

    இதுகுறித்து திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் செல்வி புகார் கொடுத்துள்ளார்.

    அதில், பாலியல் ரீதியாக தன்னை துன்புறுத்தியதோடு, தான் அதற்கு உடன்படாததால் திருமணம் செய்ய மாரிச்செல்வம் மறுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

    மேலும் காதலன் வீட்டு முன்பு தர்ணா நடத்தியபோது மாரிச்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர் தன்னை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

    இதுகுறித்து திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி மாரிச்செல்வம், அவரது தந்தை மலையாளி, தாயார் கருப்பசாமி, சகோதரர்கள் பகவதி, கார்த்திக் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    இதில் மாரிச்செல்வம் கைது செய்யப்பட்டார். அவரது சகோதரர் பகவதி 4-வது பட்டாலியனில் போலீஸ்காரராகவும், கார்த்திக் ஜம்மு காஷ்மீரில் ராணுவத்திலும் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. #tamilnews
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    வேட்டவலம் அருகே திருமணம் செய்ய காதலன் மறுத்ததால் காதலி பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். இந்த சம்பவம் தொடர்பாக காதலனை போலீசார் தேடி வருகின்றனர்.
    வேட்டவலம்:

    வேட்டவலத்தை அடுத்த அணுக்குமலை கிராமத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் வீராசாமி (வயது 32), திருவண்ணாமலையில் உள்ள தனியார் மோட்டார் சைக்கிள் ஷோரூமில் மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார். கோணலூர் கிராமத்தை சேர்ந்த பாண்டியன் மகள் வாசுகி (27), திருவண்ணாமலையில் உள்ள தனியார் கார்மெண்ட்சில் வேலை செய்து வருகிறார்.

    இவர்கள் இருவரும் தினமும் ஒரே பஸ்சில் வேலைக்கு சென்று வந்தனர். அப்போது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, காதலித்து வந்துள்ளனர். வாசுகி, வீராசாமிக்கு தீபாவளி பண்டிகைக்காக புத்தாடை வாங்கிக்கொண்டு வேட்டவலம் வந்துள்ளார். பின்னர் அங்கிருந்து இருவரும் மோட்டார் சைக்கிளில் அணுக்குமலைக்கு சென்றனர். அணுக்குமலை செல்லும் வழியில் ஒரு இடத்தில் மோட்டார்சைக்கிளை நிறுத்திவிட்டு இருவரும் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது வாசுகி கொடுத்த புத்தாடையை வீராசாமி வேண்டாம் என்று கூறியதாக தெரிகிறது.

    மேலும் அவர் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கூறியுள்ளார். அதற்கு வீராசாமி என் அண்ணனின் திருமணம் நடந்த பிறகுதான் நான் உன்னை திருமணம் செய்து கொள்வேன் என கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த வாசுகி மோட்டார் சைக்கிளில் இருந்த பெட்ரோலை பிடித்து தன் மீது ஊற்றி தீவைத்து கொண்டதாக கூறப்படுகிறது. இதில் தீக்காயம் அடைந்த அவரை, வீராசாமி மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு மாற்றப்பட்டார்.

    இதுகுறித்து வாசுகி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வேட்டவலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோன்மணி வழக்குப்பதிவு செய்து, வீராசாமியை வலைவீசி தேடி வருகிறார். #tamilnews
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கர்நாடக மாநிலம் கொப்பல் அருகே முதலிரவின் போது மாயமான புதுப்பெண் நேற்று போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் காதலனுடன் தஞ்சம் அடைந்தார். #WomanMissing
    பெங்களூரு:

    கொப்பல் மாவட்டம் குடூரு கிராமத்தை சேர்ந்தவர் காயத்ரி. இவருக்கும் மல்லனகவுடா என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களின் திருமணம் பெரியோர்கள் முன்னிலையில் கடந்த மாதம் (செப்டம்பர்) 24-ந் தேதி குஷ்டகி தாலுகா புரா கிராமத்தில் உள்ள சோம்நாத் கோவிலில் வைத்து நடந்தது.

    இந்த திருமணத்தை தொடர்ந்து காயத்ரி-மல்லனகவுடாவின் முதலிரவுக்கு முகூர்த்தம் குறிக்கப்பட்டது. அதன்படி கடந்த 7-ந் தேதி அவர்களின் முதலிரவு குடூரு கிராமத்தில் உள்ள காயத்ரியின் வீட்டில் வைத்து நடைபெறுவதாக இருந்தது.

    இதற்கான வேலைகளை அவர்களின் குடும்பத்தினர் மேற்கொண்டு இருந்தனர். மல்லனகவுடாவும், காயத்ரியும் முதலிரவுக்கு தயாராகினர். இந்த வேளையில், மல்லனகவுடா கழிவறைக்கு சென்றார். அப்போது, திடீரென்று வீட்டுக்குள் நுழைந்த 7 பேர் கும்பல் காயத்ரியை வீடு புகுந்து கடத்தி காரில் அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மல்லனகவுடா மற்றும் அவருடைய குடும்பத்தினர் காயத்ரியை தேடிப்பார்த்தனர். ஆனால், எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதனால் புதுப்பெண் காயத்ரியை, சோமனாலா கிராமத்தை சேர்ந்த அஞ்சுகுமார் ரெட்டி உள்பட 7 பேர் சேர்ந்து கடத்தி சென்றுள்ளதாக காரடகி போலீசில் புகார் செய்யப்பட்டது. இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காயத்ரியையும், அவரை கடத்திய மர்மநபர்களையும் தேடிவந்தார்கள்.

    இந்த நிலையில், வழக்கு விசாரணையில் போலீசார் அலட்சியம் காட்டுவதாக கணவர் மல்லனகவுடா மற்றும் காயத்ரியின் குடும்பத்தினர் குற்றம்சாட்டினர். இந்த குற்றச்சாட்டை கொப்பல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரேணுகா சுகுமார் மறுத்தார்.

    இதுபற்றி அவர் கூறுகையில், ‘கடத்தப்பட்டதாக கூறப்படும் பெண் வழக்கில் முக்கிய தகவல் கிடைத்துள்ளது. இந்த வழக்கில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளன. காதல் விவகாரம் அல்லது திருமணம் பிடிக்காததால் மாயமாகி இருக்கலாம். இந்த வழக்கில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.’ என்றார்.

    இந்த நிலையில், கடத்தப்பட்டதாக கூறப்படும் காயத்ரி, அஞ்சுகுமாருடன் நேற்று மாலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தார். பின்னர், அவர் சம்பவம் தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு ரேணுகா சுகுமாரிடம் கூறினார். அப்போது அவர் கூறியதாவது:-

    என்னை யாரும் கடத்தவில்லை. எனது விருப்பத்தின் படியே அஞ்சுகுமாருடன் சென்றேன். நானும், அஞ்சுகுமாரும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். இதுபற்றி அறிந்த எனது குடும்பத்தினர் தாலியை கழற்றி எறிந்துவிட்டு உறவினர் மல்லனகவுடாவுடன் கட்டாய திருமணம் செய்து வைத்தனர். இந்த திருமணத்தில் எனக்கு உடன்பாடு இல்லை.

    எனது பிடிவாதத்தால் முதலிரவை குடும்பத்தினர் தள்ளிவைத்தனர். இருப்பினும், கடந்த 7-ந் தேதி அவர்கள் முதலிரவுக்கு முகூர்த்தம் குறித்தனர். இதனால் அஞ்சுகுமாரை போன் செய்து வரவழைத்து அவருடன் சென்றேன். என்னை எனது முதல் கணவர் அஞ்சுகுமாருடன் சேர்த்து வைக்க வேண்டும். எங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். மல்லனகவுடாவுடன் நான் செல்லமாட்டேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    காயத்ரியின் கோரிக்கையை கேட்ட போலீஸ் சூப்பிரண்டு தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த விவகாரம் கொப்பலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  #WomanMissing

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    விழுப்புரம் அருகே பிறந்த நாளில் காதலியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு காவலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #ChennaiCop #LoverShotDead
    விழுப்புரம்:

    சென்னையில் காவலராக பணிபுரிந்து வந்தவர் கார்த்திக்வேல். இவருக்கு பேஸ்புக் மூலம் சரஸ்வதி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு, பின்னர் இருவரும் காதலிக்க தொடங்கி உள்ளனர்.  சரஸ்வதியின் சொந்த ஊர் விழுப்புரம் அருகே உள்ள அன்னியூர்.

    இந்நிலையில், இன்று காலை அன்னியூர் சென்ற கார்த்திக்வேல் சரஸ்வதியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு தானும்  தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவத்தால் விழுப்புரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    கார்த்திக்வேலால் சுட்டுக்கொல்லப்பட்ட சரஸ்வதி, எம்.பி.பி.எஸ். 3 ஆம் ஆண்டு படித்து வந்தார். மருத்துவ மாணவியான சரஸ்வதிக்கு இன்று பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவிக்கச்சென்றபோது, ஏற்பட்ட வாக்குவாதத்தில், காவலர் அவரை சுட்டுக்கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.



    சத்திய மங்கலத்தைச் சேர்ந்த கார்த்திக்வேல் பேஸ்புக் மூலம் சரஸ்வதியை காதலித்ததாகவும், மருத்துவ படிப்புக்கு பிறகு சரஸ்வதியிடம் மாற்றம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரம் இரண்டு உயிர்களை காவு வாங்கியிருக்கலாம். #ChennaiCop #LoverShotDead
    • Whatsapp
    • Telegram