என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Panchayat"

    • பெண்ணின் முடிவைக் கேட்டு, அவரது கணவர், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் கிராமப் பெரியவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
    • இளம்பெண் தான் எடுத்த முடிவை மாற்றவே முடியாது என உறுதியாக கூறிவிட்டார்.

    உத்தரபிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண் அதே பகுதியை சேர்ந்த வாலிபரை 1½ வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.

    திருமணத்திற்குப் பிறகு, அவருக்கு வேறொரு வாலிபருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. அடிக்கடி அவருடன் செல்போனில் பேசினார்.

    கள்ளக்காதலனை வீட்டுக்கு வரவழைத்து தனிமையில் இருந்தார். அவருடைய கணவர் கண்டித்தும் கேட்கவில்லை, அவ்வப்போது கணவனை விட்டுவிட்டு கள்ளக்காதலுடன் ஓட்டம் பிடித்தார். ஒரு வருடத்திற்குள், அவர் 10 முறை கள்ளக்காதலுடன் தலைமறைவானார். ஒவ்வொரு முறையும், அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் அவளை வீட்டிற்கு அழைத்து வந்தனர். ஆனாலும் திரும்ப, திரும்ப கள்ளக்காதலனை சந்தித்தார். இதனால் கணவன், மனைவிக்குள் தகராறு ஏற்பட்டது.

    இந்த பிரச்சனையை தீர்க்க குடும்ப உறுப்பினர்கள் கிராம பஞ்சாயத்தை கூட்டினர். அங்கு, அந்த இளம்பெண் துணிச்சலுடன் தனது அதிர்ச்சியூட்டும் முடிவை வெளிப்படுத்தினார். தனது காதலனுடன் ஒரு மாதத்தில் 15 நாட்கள் தங்க அனுமதித்தால் மட்டுமே மீதமுள்ள 15 நாட்களுக்கு தனது கணவருடன் வாழ்வேன் என்று தெரிவித்தார்.

    அந்தப் பெண்ணின் முடிவைக் கேட்டு, அவரது கணவர், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் கிராமப் பெரியவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கிராமப் பெரியவர்கள் இளம்பெண்ணின் குடும்பத்தினர் கள்ளக்காதலை கைவிடுமாறு அறிவுரை வழங்கினர். ஆனால் மாதத்தில் 15 நாட்கள் கள்ளக்காதலனுடன் இருக்க அனுமதித்தால் மட்டுமே கணவருடன் வாழ்க்கை நடத்துவேன் என இளம்பெண் தொடர்ந்து அடம்பிடித்தார்.

    மணிக்கணக்கில் அவருக்கு அறிவுரை வழங்கியும் தன் காதலனை முற்றிலுமாக விட்டுவிட மறுத்துவிட்டாள். இதனை கேட்டதும் அவருடைய கணவர் கதறி அழுதார். மனைவியிடம் கெஞ்சி பார்த்தார்.

    ஆனால் இளம்பெண் தான் எடுத்த முடிவை மாற்றவே முடியாது என உறுதியாக கூறிவிட்டார். இதனால் மனமடைந்து போன கணவர் இளம்பெண்ணை அவருடைய கள்ளக்காதலனுக்கு தாரை வார்த்து விட்டு சோகத்துடன் திரும்பி சென்றார்.

    உத்தரபிரதேசத்தில் நடந்த இந்த வினோத சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • LED திரைகள் மூலம் ஒளிபரப்பச் செய்து மக்களை ஏமாற்றிவிடலாம் என்று ஸ்டாலின் மனப்பால் குடிக்கிறார்.
    • நிர்வாகத் திறனற்ற விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசு வெற்று விளம்பரங்கள் செய்து வருகிறது.

    திமுக அரசு ஊராட்சி நிதியில் வெற்று விளம்பரம் மேற்கொள்ள முனைப்பு காட்டுவதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சாடியுள்ளார்.

    மேலும், அரசு விளம்பரங்களை தமிழகம் முழுவதும் உள்ள ஊராட்சிகளில் வெளியிட வேண்டும் என்ற அரசு அறிவிப்பை சுட்டிக்காட்டி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    ஊராட்சி ஒன்றிய நிதி மற்றும் ஊராட்சி நிதியில் வெற்று விளம்பரம் மேற்கொள்ள அரசு பணத்தை செலவிட முனைப்பு காட்டும் விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசுக்கு கண்டனம்!

    ஆட்சியில் அமர்வது மக்களுக்கு நன்மை செய்வதற்கு என்ற நிலை மாறி, லஞ்ச லாவண்யத்தில் திளைத்து, தங்களை வளப்படுத்துவதற்காகவே என்ற நோக்கோடு விடியா தி.மு.க. ஸ்டாலின் மாடல் அரசு கடந்த 4 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.

    தங்களது 4 ஆண்டு கால அலங்கோல ஆட்சியினை மூடி மறைக்க, தங்களது ஒவ்வொரு செய்கையையும் நிர்வாகத்

    திறனற்ற விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசு வெற்று விளம்பரங்கள் செய்து வருகிறது.

    அதன்படி, லேட்டஸ்டாக விடியா திமுக அரசு, தனது வெற்று விளம்பரங்களை தமிழகம் முழுவதும் உள்ள 385

    ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் 12,620 ஊராட்சிகளிலும் வெளியிட வேண்டும் என்று, ஊரக வளர்ச்சித்துறை

    அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி மூன்று நிறுவனங்களின் பெயரைக் குறிப்பிட்டு ஒப்பந்தப்புள்ளி கோர வேண்டும் என்றும், அதில் மதுரையைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திற்கு LED திரைகளைப் பொருத்தும் பணியை வழங்க வேண்டும் என்றும், அதற்காக 385 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் ஒவ்வொன்றும், சந்தை விலையை விட அதிகமாக, அதாவது அந்நிறுவனத்திற்கு ஒரு LEDதிரைக்கு சுமார் ரூ. 7.50 லட்சம் என்றும், அதேபோல் தமிழகத்திலுள்ள 12,620 ஊராட்சிகள் ஒவ்வொன்றும் சிறிய வகையிலான LED திரையை வாங்க சுமார் ரூ.10,000/- வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மேலும், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்களும், பஞ்சாயத்து கிளர்க்குகளும் அந்நிறுவனத்திற்கு உடனடியாக கொள்முதல் ஆணையுடன் LED திரைக்கான தொகையையும்

    வழங்க வேண்டும் என்றும் வற்புறுத்தப்படுகின்றனர்.

    தமிழகத்திலுள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் கிராம ஊராட்சிகளில் சாலை வசதி, குடிநீர்

    வசதி, தெருவிளக்கு, கழிவு நீர் வடிகால் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் மக்கள் அவதியுற்று வருகிறார்கள்.

    ஏற்கெனவே, 2006-2011 ஆட்சி காலத்தில் தமிழக மக்களுக்கு இலவச தொலைக்காட்சி வழங்கி தங்களது குடும்பத்

    தொலைகாட்சி நிறுவனங்களின் நிதிநிலையை வளர்த்துக்கொண்டது.

    ஏற்கெனவே 4 ஆண்டுகளாக வெற்று விளம்பரங்களுக்காக கோடிக்கணக்கில் விளம்பரம் கொடுத்தது போக, ஏழை, எளிய மக்களின் அடிப்படைத் தேவைகளை செய்து தராமல், அந்நிதியை மடை மாற்றும் விடியா திமுக ஸ்டாலினின் (ஏமாற்று) மாடல் அரசின் கடந்த நான்காண்டு கால நடவடிக்கைகள் வேதனையைத்தான் தந்துள்ளது என்று தமிழக மக்கள் கொதித்துப் போயுள்ளனர்.

    இந்நிலையில் 4 ஆண்டு சாதனை என்று பொய்யான செய்திகளை வீடியோக்களாகத் தயாரித்து அதை கிராமங்கள்தோறும் LED திரைகள் மூலம்

    ஒளிபரப்பச் செய்து மக்களை ஏமாற்றிவிடலாம் என்று ஸ்டாலின் மனப்பால் குடிக்கிறார்.

    'கமிஷன், கலக்ஷன், கரப்ஷன்' என்பதையே கொள்கையாகக் கொண்டு செயல்படும் ஊழல் மாடல் தி.மு.க. அரசு,

    டு.நு.னு. திரை அமைக்கும் திட்டத்தில் பல கோடி கொள்ளை அடிக்க முயல்வது கண்டனத்திற்குரியதாகும். மக்களின்

    வரிப்பணத்தை வீண் விரயம் செய்யும் திட்டத்தை உடனடியாக இந்த அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். நாங்கள் எதுவும் செய்வோம், யாரும் எங்களைக் கேட்க முடியாது என்ற எண்ணத்தில் மக்களின் வரிப் பணத்தை தங்களுடைய சுயநலத்திற்காக செலவிடுவது கண்டிக்கத்தக்கது.

    அதற்கான விலையை விரைவில் ஏற்படவுள்ள ஆட்சி சதற்றத்திற்குப் பின் தர நேரிடும் என்று எச்சரிக்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • வாரந்தோறும் பல திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் ஓடிடி தளங்களில் வெளியாகி வருகின்றன.
    • நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் மிகவும் அதிகம் பார்க்கப்பட்ட தொடராக ஸ்குவிட் கேம் உருவானது

    வாரந்தோறும் பல திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் ஓடிடி தளங்களில் வெளியாகி வருகின்றன. மொழி வேறுபாடின்றி ஓடிடியின் மூலம் பல தரப்பு மக்கள் படத்தை அவர்களின் சௌக்ரியத்தோடு பார்த்து வருகின்றனர். அந்த வகையில் இந்த வாரம் ஓடிடியில் என்னென்ன திரைப்படங்கள் வெளியாக இருக்கிறது என பார்க்கலாம்.

    ஸ்குவிட் கேம்

    நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் மிகவும் பிரபலம் மற்றும் அதிகம் பார்க்கப்பட்ட தொடராக ஸ்குவிட் கேம் உருவாகியது. இத்தொடரின் கடைசி சீசன் நாளை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. மொத்த 6 எபிசோடுகள் இத்தொடரில் இடம் பெற்றுள்ளன.

    ? Azadi - ஆசாதி

    ஆசாதி திரைப்படத்தை ஜோ ஜார்ஜ் இயக்கியுள்ளார். படத்தில் ஸ்ரீநாத் பாஸி, வாணி விஷ்வநாத், ரவீனா ரவி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். குற்றமே செய்யாமல் ஜெயிலில் இருக்கும் தன் மனைவியை காப்பாற்ற போராடும் கணவனின் கதையாக அமைந்துள்ளது. திரைப்படம் நாளை சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

    ? Raid 2

    ரெய்ட் 2 படத்தை ராஜ் குமார் குப்தா இயக்கினார். படத்தில் அஜய் தேவ்கன், ரித்தீஷ் மற்றும் வாணி கபூர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். திரைப்படத்தில் ஒரு மிடுக்கான காவல் அதிகாரியாக நடித்துள்ளார். திரைப்படம் இன்று நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

    ? The Verdict

    வரலட்சுமி சரத்குமார் மற்றும் ஸ்ருதி ஹரிஹரன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியான திரைப்படம் தி வெர்டிக்ட். இப்படத்தை கிருஷ்ண ஷங்கர் இயக்கினார். திரைப்படம் இன்று சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியானது.

    ? The Brutalist 

    சிறந்த ஒளிப்பதிவிற்கான ஆஸ்கர் விருதை பெற்றது தி ப்ரூடலிஸ்ட் திரைப்படம். இப்படத்தை ப்ரேடி கார்பெட் இயக்கினார். திரைப்படம் வரும் ஜூன் 28 ஆம் தேதி டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.

    ? Panchayat Season 4 

    பிரபலமான இந்தி வெப் தொடரில் பஞ்சாயத் தொடர் மிகவும் பிரபலமானது. இதில் ஜிதேண்ட்ர குமார், நீனா குப்தா, ரகுபிர் யாதவ, ஃபைசல் மாலிக் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். தொடரின் சீசன் 4 கடந்த ஜூன் 24 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது.

    • 2024க்குள் நாட்டில் உள்ள அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும், குடிநீர் குழாய் இணைப்பு வழங்க, மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
    • மாநில அரசுகளுடன் இணைந்து இந்த இயக்கம் செயல்படுத்தப்படுகிறது.

     உடுமலை :

    கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் வரும், 2024க்குள் நாட்டில் உள்ள அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும், குடிநீர் குழாய் இணைப்பு வழங்க, மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.மாநில அரசுகளுடன் இணைந்து இந்த இயக்கம் செயல்படுத்தப்படுகிறது.

    கிராமப்புற வீடுகளில் முழுமையாக செயல்படும் குடிநீர் குழாய் இணைப்பை 62 சதவீத வீடுகள் பெற்றுள்ளன என மத்திய நீர்வளத்துறை சார்பில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பு கூறுகிறது.அவ்வகையில், திருப்பூர் மாவட்டத்தில் 13 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 265 கிராம ஊராட்சிகளில் 4 லட்சத்து 56 ஆயிரத்து 799 வீடுகள் உள்ளன.கடந்த ஆண்டு ஜல் ஜீவன் திட்டத்தில் 8 ஊராட்சி ஒன்றியங்களில் 77 கிராம ஊராட்சிகளில் 25 ஆயிரம் இணைப்புகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பூர்த்தி செய்யப்பட்டது.நடப்பாண்டு ஜல் ஜீவன் திட்டம் மட்டுமின்றி 14 மற்றும் 15வது நிதிக்குழு மானிய நிதி திட்டம், குடிநீர் வடிகால் வாரிய திட்டம் மற்றும் மாநில அரசின் பிற திட்டங்கள் என அனைத்து திட்டங்களையும் ஒருங்கிணைத்து கிராம ஊராட்சிகளில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் பணி ஊக்குவிக்கப்படுகிறது.

    இது குறித்து ஊரக வளர்ச்சி முகமை அதிகாரிகள் கூறியதாவது:-

    ஜல் ஜீவன் திட்டம் மற்றும் பிற ஒருங்கிணைந்த மத்திய, மாநில அரசு திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் 3 லட்சத்து 79 ஆயிரத்து 729 வீடுகளுக்கு குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் சில புதிய திட்டங்கள் முடியும் தருவாயில் உள்ளது.மீதமுள்ள 77 ஆயிரத்து 70 வீடுகளுக்கு வரும் ஆண்டுகளில் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு விடும்.திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை 2024ல் முடிக்கப்பட வேண்டிய இலக்கு 2023ல் முடிக்கப்பட்டு விடும் வகையில் செயலாற்றி வருகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் 429 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் 1-ந் தேதி நடக்கிறது.
    • பொதுமக்கள் தாமாகவே முன்வந்து கொரோனா தடுப்பு வழிமுறைகளை கடைபிடித்து இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளை பதிவு செய்யலாம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது:-

    ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 429ஊராட்சிகளிலும் உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு வருகிற 1-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு அரசு விதித்துள்ள கொரோனா முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு வழிமுறைகளுடன் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை ஆணையரால் தெரிவிக்கப்பட்டுள்ள வழிமுறைகளையும் கடைபிடித்து கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும்.

    இந்த கூட்டத்தில், முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்தல், கிராம ஊராட்சியில் சிறப்பாக பணி புரிந்த ஊழியர்களை சிறப்பித்தல், கிராம ஊராட்சியில் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் மகளிர் சுய உதவிக் குழுக்களை கவுரவித்தல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், கலைஞர் வீடு வழங்கும் திட்ட கணக்கெடுப்பு, ஜல் ஜீவன் இயக்கம், மக்கள் திட்டமிடல் இயக்கம், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், இணையவழி வீட்டுவரி வரி செலுத்துதல், மகளிர் சுய உதவிக் குழு உருவாக்குதல், பண்ணை மற்றும் பண்ணை சாரா திட்ட இனங்கள், மக்கள் நிலை ஆய்வு, சுகாதாரம், மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டம், கலைஞர் வீட்டு வசதித் திட்ட பயனாளிகள் தேர்வு செய்தல் மற்றும் இதர பொருட்கள் குறித்து விவாதிக்க அரசு தெரிவித்துள்ளது.

    பொதுமக்கள் தாமாகவே முன்வந்து கொரோனா தடுப்பு வழிமுறைகளை கடைபிடித்து இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளை பதிவு செய்யலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மருத்துவ விடுப்பு ,ஈட்டிய விடுப்பு, சிறப்பு நிலை, தேர்வு நிலை மற்றும் வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
    • அனைத்து பணியிடங்களையும் உடனே நிரப்ப வேண்டும்.

    அவினாசி : 

    ஊராட்சி செயலாளர்கள் அனைவருக்கும் கருவூலம் மூலம் ஊதியம் வழங்குதல், விடுபட்ட உரிமையான மருத்துவ விடுப்பு ,ஈட்டிய விடுப்பு, சிறப்பு நிலை, தேர்வு நிலை மற்றும் வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

    ஊரக வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள ஊராட்சி ஒன்றிய பணியிடங்களில் உள்ளிட்ட அனைத்து பணியிடங்களையும் உடனே நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவினாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் 31 ஊராட்சிகளில் பணியாற்றும்செயலாளர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    • விருதுநகர் மாவட்ட பஞ்சாயத்து நிலைக்குழு தலைவர்கள்-உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
    • பஞ்சாயத்து கூட்டம் தலைவர் வசந்தி தலைமையில் நடைபெற்றது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட பஞ்சாயத்து கூட்டம் தலைவர் வசந்தி தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட பஞ்சாயத்துக்கான 5 நிலைக்குழு ஏற்படுத்தப்பட்டு இதற்கான தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.

    அதன் விவரம் வரு மாறு:-

    * உணவு மற்றும் மேலாண்மைக்குழு தலைவர்-மச்சராஜா, உறுப்பினர்கள்- நர்மதா, நாகராஜன், வேல்ராணி (எ) உமா லட்சுமி.

    * தொழில் மற்றும் தொழிலாளர் குழு தலைவர்-பாரதிதாசன், உறுப்பினர்கள்-சிவக்குமார், தமிழ்வாணன், மகாலட்சுமி.

    * பொதுப்பணிக்குழு தலைவர்-வேல்முருகன், உறுப்பி னர்கள்-மகா லட்சுமி, கண்ணன், புவனா.

    * கல்விக்குழு தலைவர்-சுபாசினி, உறுப்பினர்கள்-பாலச்சந்தர், பகவதி, மாலதி

    இந்த 4 குழுக்களுக்கும் பதவி வழி உறுப்பினராக மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வசந்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    * மதுவிலக்கு உள்ளடங்கல் மற்றும் மக்கள் நல்வாழ்வு நிலைக்குழு தலைவர்- வசந்தி (மாவட்ட பஞ்சாயத்து தலைவர்), உறுப்பினர்கள்-இந்திரா, முத்துச்செல்வி, போஸ், பாரதிதாசன்.

    • குடியரசு தினத்தை முன்னிட்டு அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது.
    • கூட்டத்தில் பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    குடியரசு தினத்தை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வருகிற 26-ந் தேதி காலை 11 மணிக்கு கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது.

    இதில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பணிகள், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) , பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் (ஊரகம்), அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு, ஜல்ஜீவன் இயக்கம், பிரதம மந்திரி கிராம சாலை திட்டம், மக்கள் திட்டமிடல் இயக்கம், மூவலூர் ராமா மிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதி திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மக்கள் நிலை ஆய்வு, வறுமை குறைப்பு திட்டம் மற்றும் இதர பொருள்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

    இந்த கிராம சபை கூட்டங்களில் கிராம ஊராட்சிகளில் உள்ள அனைத்து பொதுமக்களும் கலந்துகொண்டு பயன்பெற வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பாலமேடு அருகே ஊராட்சி நடுநிலைப்பள்ளிக்கு ரூ.31 லட்சம் மதிப்பில் புதிய கட்டிட பூமிபூஜை நடந்தது.
    • அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம் சார்பில் வலையபட்டி பள்ளிக்கு ஸ்மார்ட் டி.வி. வழங்கி தொடங்கி வைக்கப்பட்டது.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் பாலமேடு அருகே வலையபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.30.82 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்ட பூமி பூஜை நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய சேர்மன் பஞ்சு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வள்ளி, பாண்டியன், ஊராட்சி மன்ற தலைவர் காயத்ரி இதயச்சந்திரன், வாட்டார கல்வி அலுவலர்கள் ஆஷா, ஜெஷிந்தா, தலைமை ஆசிரியர் ஞானசேகரன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் ரமேஷ்ராஜா, இல்லம் தேவி கல்வி ஒன்றிய பொறுப்பாளர் சுதாகர், ஒப்பந்ததாரர் கண்ணன் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து தமிழக அரசின் சார்பில் நடைபெற்ற கலை திருவிழாவில் மாநில, மாவட்ட மற்றும் வட்டார அளவில் வலையபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி மாணவர்கள் பல்வேறு பரிசுகளை பெற்றனர். அவர்களுக்கு பாராட்டு தெரிவித்து மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

    முன்னதாக நமக்கு நாமே திட்டத்தின் மூலம் அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம் சார்பில் வலைய பட்டி பள்ளிக்கு ஸ்மார்ட் டி.வி. வழங்கி தொடங்கி வைக்கப்பட்டது.

    • சாயர்புரம் அருகே காசநோய் பரிசோதனை முகாம் நட்டாத்தி பஞ்சாயத்து சேவை மையத்தில் நடந்தது.
    • சளி மற்றும் எக்ஸ்ரே பரிசோதனை, நீரழிவு நோய் சோதனை ஆகிய பரிசோதனைகள் நடைபெற்றது.

    சாயர்புரம்:

    சாயர்புரம் அருகே காசநோய் பரிசோதனை முகாம் நட்டாத்தி பஞ்சாயத்து சேவை மையத்தில் நடந்தது. துணை தலைவர் எஸ்.வி.பி.எஸ். பண்டாரம் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் சின்ன நட்டாத்தி ஆகிய ஊர்களில் நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே ஆம்புலன்ஸ் அனுப்பி பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் சளி மற்றும் எக்ஸ்ரே பரிசோதனை, நீரழிவு நோய் சோதனை ஆகிய பரிசோதனைகள் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு கொம்புகாரன் பொட்டல் வார்டு உறுப்பினர் பண்டாரம், நட்டாத்தி ஊராட்சி செயலர் முத்துராஜ், திட்ட ஒருங்கிணைப்பாளர் வெள்ளைச்சாமி, முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர்கள் மலைவிக்னேஷ், கண்ணன்,ஏரல் ஆய்வக மேற்பார்வையாளர்சுரேஷ், சுகாதார பார்வையாளர் சுதா மணிமேகலை, நட்டாத்தி இடைநிலை சுகாதார செவிலியர் பூர்ணா கலையரசி, நுண் கதிர் வீச்சாளர்கள் சுரேஷ்,மாலதி, நுண்கதிர் உதவியாளர் எட்டையா, சுகாதார தன்னார்வலர்கள், மஸ்தூர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ஏற்பாடுகளை நட்டாத்தி இடைநிலை சுகாதார செவிலியர் பூர்ணா கலையரசி செய்து இருந்தார்.

    • கும்பகோணம் மேற்கு ஒன்றிய செயலாளர் பம்பப்படையூர் முத்துசெல்வம் அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார்.
    • கும்பகோணம் அரசு பள்ளியில் புதிய கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

    சுவாமிமலை:

    கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதல்-அமைச்சர் சிறப்பு நிதியிலிருந்து புதிய பள்ளி கட்டிடம் கட்ட தஞ்சாவூர் மாவட்ட ஊராட்சிக்குழு துணை தலைவரும், கும்பகோணம் மேற்கு ஒன்றிய செயலாளருமான பம்பப்படையூர் முத்துசெல்வம் அடிக்கல் நாட்டினார்.

    விழாவில் கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய தலைவர் காயத்ரி அசோக்குமார், மாநில பொதுக்குழு உறுப்பினரும், கும்பகோணம் மாநகராட்சி மண்டலக்குழு தலைவருமான அசோக்குமார், சுவாமிமலை பேரூராட்சி தலைவர் வைஜெயந்தி சிவக்குமார், சுவாமிமலை பேரூர் கழக செயலாளர் எஸ்.எம்.எஸ்.பாலசுப்ரமணியம், பேரூராட்சி செயல் அலுவலர் உஷா, சுவாமிமலை அரசினர் மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மாணிக்கம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கோபால், பள்ளி மேலாண்மை குழு உள்ளாட்சி பிரதிநிதி லட்சுமி பிரியா, மாவட்ட பிரதிநிதி குணாளன், பேரூராட்சி உறுப்பினர்கள் குணசேகர், இளவரசி ராமலிங்கம், ராதிகா ஜெய்சங்கர், கலா ராமமூர்த்தி மற்றும் செழியன், ஆறு.மதியழகன், யூசுப், கோபால் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஊராட்சி தொடக்கப்பள்ளியை மீண்டும் செயல்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • 30-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கோட்டைபட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளி 5 ஆசிரியர்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட மாணவர்களுடன் 30 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வந்தது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தொடக்க பள்ளி பல்வேறு காரணங்களால் மூடப்பட்டது. இதனால் தொடக்க கல்வி பயில்வதற்காக 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் செல்ல வேண்டிய இருப்பதால் பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள் சிரமப்பட்டு வந்தனர். இதனால் ஊராட்சி சார்பில் கடந்த ஆண்டு ரூ.3 லட்சம் செலவில் தொடக்கப்பள்ளி கட்டிடம் புனரமைக்கப்பட்டு, அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டது.

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கடந்த வாரம் நடந்த ஊராட்சி தலைவர்கள் கூட்டத்தில் கோட்டைபட்டி ஊராட்சி தலைவர் சதீஷ்குமார் பள்ளியை மீண்டும் திறக்க அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. அதில் கோட்டைபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி 2023-24 கல்வியாண்டில் மீண்டும் தொடங்கப்பட்டால் அனைத்து குழந்தைகளையும் பள்ளியில் சேர்ப்பதாக மக்கள் உறுதி அளித்தனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் ஊராட்சி தலைவர் சதீஷ்குமார் மற்றும் கோட்டைபட்டியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ×