search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெண்ணந்தூர் ஒன்றியத்தில் 24 ஊராட்சிகளில் பிளாஸ்டிக் ஒழிப்பு பேரணி
    X

    பழந்தின்னிபட்டி ஊராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு தடை விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வீடு வீடாகச் சென்று வழங்கிய போது எடுத்த படம். அருகில் வெண்ணந்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன் மற்றும் அதிகாரிகள் உள்ளனர்.

    வெண்ணந்தூர் ஒன்றியத்தில் 24 ஊராட்சிகளில் பிளாஸ்டிக் ஒழிப்பு பேரணி

    • வெண்ணந்தூர் ஒன்றியத்தில் 24 ஊராட்சிகளில் பிளாஸ்டிக் ஒழிப்பு பேரணி நடைபெற்றது.
    • வீடு, வீடாக சென்று சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் ஒரு முறை மட்டும் பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    ராசிபுரம்:

    ராசிபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வெண்ணந்தூர் வட்டாரம் பழந்தின்னிப்பட்டி ஊராட்சியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் ஒரு முறை மட்டும் பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் ஒழிப்பு தடை தொடர்பான விழிப்புணர்வு பேரணி நடந்தது.

    இந்தப் பேரணியில் வெண்ணந்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) பிரபாகரன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாரதி, பழந்தின்னிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி வெங்கடேஸ்வரன், துணைத்தலைவர் நல்லதம்பி, மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், பள்ளி குழந்தைகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    வீடு வீடாகச் சென்று சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் ஒரு முறை மட்டும் பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கினர். இதேபோல் வெண்ணந்தூர் ஒன்றியத்தைச் சேர்ந்த 24 ஊராட்சிகளிலும் பிளாஸ்டிக் ஒழிப்பு தடை தொடர்பான விழிப்புணர்வு பேரணி துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    Next Story
    ×