என் மலர்
நீங்கள் தேடியது "கணவர் கொலை"
- தன் கணவரை யாரோ கொலை செய்து விட்டதாக போலீசில் புகார் செய்தார்.
- போலீசார் முதலில் கொள்ளை முயற்சியில் கொலை நடந்து இருக்கலாம் என கருதினர்
உத்தரபிரதேச மாநிலம் மீரட் மாவட்டம் அக்வான்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ராகுல், இவரது மனைவி அஞ்சலி. இந்த தம்பதிகளுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் அஞ்சலிக்கு அதே கிராமத்தை சேர்ந்த அஜய் என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இது கள்ளக்காதலாக மாறியது. இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தனர். இதை அறிந்த ராகுல் மனைவியை கண்டித்தார். ஆனால் அவர் கேட்கவில்லை. தொடர்ந்து அஜய்யுடன் நெருக்கம் காட்டி வந்தார்.
கள்ளக்காதலுக்கு கணவர் தடையாக இருக்கிறார் என அஞ்சலி அஜய்யிடம் கூறினார். இதையடுத்து இருவரும் சேர்ந்து ராகுலை தீர்த்துக்கட்ட முடிவு செய்தனர்.
சம்பவத்தன்று அஜய், ராகுலை ஊருக்கு வெளியில் இருக்கும் வயல்வெளி பகுதிக்கு வாருங்கள் உங்களிடம் பேச வேண்டி இருக்கிறது என்று அழைத்தார்.
நடக்கப் போகிற விபரீதம் தெரியாமல் ராகுல் அவர் சொன்ன வயல் வெளிபகுதிக்கு சென்றார். அப்போது அஜய் திடீரென தான் மறைத்து வைத்து இருந்த துப்பாக்கியை எடுத்து ராகுலை 3 முறை சுட்டார். இதில் உடலில் குண்டு பாய்ந்த ராகுல் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.
உடனே அஜய் அவரது உடலை வயல் வெளியில் வீசி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். அஞ்சலியும் எதுவும் தெரியாதது போல இருந்தார். தன் கணவரை யாரோ கொலை செய்து விட்டதாக அவர் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் முதலில் கொள்ளை முயற்சியில் இந்த கொலை நடந்து இருக்கலாம் என கருதினர். மேலும் இது தொடர்பாக அஞ்சலியிடம் விசாரணை நடத்துவதற்காக அவரது வீட்டுக்கு சென்றனர். ஆனால் வீட்டில் அவர் இல்லை. கிராமத்தினரிடம் விசாரித்த போது அஜய்யுடன் அவர் மாயமானது தெரியவந்தது.
இதனால் இருவர் மீதும் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அஜய்யை தேடி கண்டு பிடித்து கைது செய்தனர். போலீசாரிடம் அவர் அஞ்சலியுடனான கள்ளக்காதலால் ராகுலை சுட்டுக்கொன்றதை ஒப்புக்கொண்டார். போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
உத்தரபிரதேச மாநிலத்தில் சமீபகாலமாக கள்ளக்காதல் விவகாரத்தால் தொடர்ச்சியாக பெண்கள் கணவரை கொலை செய்வது அதிகரித்து வருகிறது.
தற்போது கொலை சம்பவம் அரங்கேறி உள்ள மீரட் மாவட்டத்தில் கடந்த மாதம் காஜல் என்ற பெண் கள்ளக்காதலனுடன் சேர்ந்து தனது கணவரை கொன்றார். கணவருக்கு மயக்க மருந்து கொடுத்த அவர் கள்ளக்காதலனுடன் ஒரு மோட்டார் சைக்கிளில் 3 பேரும் நீண்ட தூரம் சென்றனர்.
பின்னர் ஒரு கால்வாய் அருகே கணவரை காஜல் தனது சேலையால் கழுத்தை நெரித்து கொலை செய்தார். இதையடுத்து கணவர் உடலை கால்வாயில் வீசி விட்டு தப்பினார்.
கடந்த மார்ச் மாதம் உத்தரபிரதேசத்தில் முஸ்கான் என்ற பெண் சாஹித் என்ற கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவர் சவுரப்பை கொன்றார். அதன்பிறகு கணவர் உடலை துண்டு துண்டாக வெட்டி ஒரு பெரிய டிரம்மில் அடைத்து சிமெண்டால் மறைத்தனர்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
- கடந்த 2 நாட்களுக்கு முன்பு உணவில் விஷம் வைத்து வெங்கடசாமியை கொலை செய்தார்.
- கணவரின் பிணத்தை எடுத்துச் சென்று வனப்பகுதியில் வீசிவிட்டு ஒன்றும் தெரியாதது போல் வீட்டிற்கு வந்தார்.
கர்நாடகா மாநிலம் மைசூர் அடுத்த சிக்க ஹெஜ்ஜுவை சேர்ந்தவர் வெங்கடசாமி (வயது 54). விவசாயி. இவரது மனைவி சல்லாபுரி (48).
இவர்களின் கிராமத்தை சேர்ந்த சிலர் வனவிலங்குகள் தாக்கி இறந்தால் அரசிடமிருந்து அதிக அளவில் இழப்பீடு தொகை கிடைக்கும் என பேசிக்கொண்டு இருந்தனர்.
இதனைக்கேட்ட சல்லாபுரி தனது கணவரை கொலை செய்து காட்டில் வீசி விட்டால் பணம் கிடைக்கும் என ஆசைப்பட்டார்.
அதன்படி கடந்த 2 நாட்களுக்கு முன்பு உணவில் விஷம் வைத்து வெங்கடசாமியை கொலை செய்தார். கணவரின் பிணத்தை எடுத்துச் சென்று வனப்பகுதியில் வீசிவிட்டு ஒன்றும் தெரியாதது போல் வீட்டிற்கு வந்தார்.
பின்னர் ஹினாசுரு போலீஸ் நிலையம் மற்றும் வனத்துறை அதிகாரிகளிடம் தனது கணவரை காணவில்லை எனவும், வயலில் வேலை செய்து கொண்டு இருந்தபோது புலி அவரை கடித்துக்கொன்று வனப்பகுதியில் இழுத்துச் சென்று இருக்கலாம் என தெரிவித்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து வெங்கடசாமியை தேடி வந்தனர். வயல்வெளியில் புலி வந்து சென்றதற்கான எந்த அடையாளமும் இல்லை.
கிராம மக்களுடன் சேர்ந்து போலீசார் வனப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். நேற்று காலை வனப்பகுதியில் அழுகிய நிலையில் வெங்கடசாமியின் உடல் கிடந்தது.
மேலும் அவரது உடலின் தோலின் நிறம் மாறி இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் சல்லாபுரியை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் காட்டு விலங்கு தாக்கி இறந்தால் அதிக அளவு அரசிடம் இருந்து இழப்பீட்டுத் தொகை கிடைக்கும் என நம்பி கணவருக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்து, உடலை வனப்பகுதியில் வீசியதாக தெரிவித்தார்.
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் சல்லாபுரியை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
- கணவரை கொலை செய்ய வேண்டும் என்பதில் சோனம் உறுதியாக இருந்துள்ளார்.
- கணவர் ராஜாரகுவன்ஷியை சி.சி.டி.வி. கேமரா இல்லாத மலை உச்சிக்கு சோனம் அழைத்து சென்றுள்ளார்.
மத்தியபிரதேசம் மாநிலம் இந்தூரை சேர்ந்த சோனம் (வயது25) என்ற புதுப்பெண் தனது கணவர் ராஜாரகுவன்ஷியை (28) மேகாலயாவுக்கு தேனிலவுக்கு அழைத்து சென்று கூலிப்படை ஏவி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தொழில் அதிபரின் மகளான சோனத்துக்கு கடந்த மே 11-ந்தேதி ராஜாரகுவன்ஷியுடன் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு முன்பு அவருக்கு தனது தந்தையின் நிறுவனத்தில் வேலை பார்த்த தந்தையுடன் 3 வயது குறைவான ராஜ்குஷ்வாகாவுடன் காதல் மலர்ந்துள்ளது. ஆனால் குடும்பத்தினர் கட்டாயப்படுத்தியதால் மனம் இன்றி ராஜாரகுவன்ஷியை திருமணம் செய்த சோனத்துக்கு அவருடன் வாழப்பிடிக்கவில்லை.
இதனால் காதலன் ராஜ்குஷ்வாகாவுடன் சேர்ந்து தனது கணவரை கொல்ல சதித்திட்டம் தீட்டி உள்ளார். அதன்படி கணவர் ராஜாரகுவன்ஷியை மேகாலயாவுக்கு தேனிலவுக்கு அழைத்து சென்ற சோனம் அங்கு காதலனால் ஏற்பாடு செய்யப்பட்ட கூலிப்படையினரான ஆகாஷ் (19), விஷால் (22), ஆனந்த் (23) ஆகியோர் மூலம் ராஜாரகுவன்ஷியை கொலை செய்துள்ளார்.
இதற்காக ராஜாரகுவன்ஷியும், சோனமும் தேனிலவுக்கு புறப்பட்ட போதே ஆகாஷ், விஷால், ஆனந்த் ஆகியோர் திருமண தம்பதியை பின் தொடர்ந்துள்ளனர். ஆனால் ராஜ்குஷ்வாகாவால் அங்கு செல்ல முடியவில்லை. எனவே கொலை திட்டத்தை ரத்து செய்துவிடலாம் என அவர் கூறி உள்ளார்.
ஆனால் கணவரை கொலை செய்ய வேண்டும் என்பதில் சோனம் உறுதியாக இருந்துள்ளார். அவர் கூலிப்படைக்கு ரூ.20 லட்சம் தருவதாக வாக்குறுதி கொடுத்துள்ளார். தொடர்ந்து முன்பணமாக ரூ.4 லட்சத்தையும் வழங்கி உள்ளார்.
பின்னர் சோனம் வகுத்து கொடுத்த திட்டப்படி மேகாலயா சென்ற கூலிப்படையினரான ஆகாஷ், விஷால், ஆனந்த் ஆகியோர் அங்கு ராஜா ரகுவன்ஷியிடம் தங்களை மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்று அறிமுகமாகி உள்ளனர்.
அவர்களுடன் சுற்றுலா வழிகாட்டி ஒருவரும் உடன் சென்றுள்ளார். ஆனால் அவரை சோனம் நாங்கள் தனிமையில் இருக்க விரும்புகிறோம் என கூறி திருப்பி அனுப்பி உள்ளார்.
பின்னர் கணவர் ராஜாரகுவன்ஷியை சி.சி.டி.வி. கேமரா இல்லாத மலை உச்சிக்கு சோனம் அழைத்து சென்றுள்ளார். அங்கு அவர்களை பின் தொடர்ந்து சென்ற கூலிப்படையினர் ராஜாரகுவன்ஷியை கோடாரியால் தாக்கி கொலை செய்துள்ளனர். தனது கணவர் கண்முன்னே கொலை செய்யப்படுவதை சோனம் வேடிக்கை பார்த்துள்ளார். பின்னர் ராஜாரகுவன்ஷி உடலை 200 அடி ஆழமான பள்ளத்தில் தூக்கி வீசி உள்ளனர். பின்னர் 4 பேரும் 2 மோட்டார் சைக்கிள்களில் சுமார் 25 கிலோ மீட்டர் பயணம் செய்துள்ளார். பிறகு ரெயில், பஸ்கள் மூலம் அவரவர் ஊர்களுக்கு திரும்பி உள்ளனர்.
சோனம் இந்தூர் சென்று காதலன் ராஜ்குஷ்வாகாவை சந்தித்துள்ளார். பின்னர் 3 நாட்கள் ஒரு வீட்டில் வாடகைக்கு தங்கி இருந்தார். தொடர்ந்து அங்கேயே இருந்தால் போலீசில் சிக்கி கொள்வோம் என சோனம் கருதி உள்ளார்.
சோனத்தின் காதலன் ராஜ்குஷ்வாகா உத்தரபிரதேசத்தை பூர்வீகமாக கொண்டவர். அவர் சோனத்தை உத்தரபிரதேசம் செல்ல ஏற்பாடு செய்து அங்குள்ள தனது நண்பர்கள் வீடுகளில் பாதுகாப்பாக தங்க வைத்துள்ளார். இதற்கிடையே ராஜாரகுவன்ஷி பற்றி கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் சுற்றுலா வழிகாட்டி கொடுத்த தகவல் மூலம் மத்தியபிரதேசத்தை சேர்ந்த ஆகாஷ், விஷால், ஆனந்த் ஆகியோர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்.
இதை அறிந்த சோனம் வேறு வழியின்றி தானாக முன்வந்து போலீசில் சரண் அடைந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
ராஜாரகுவன்ஷியை கொலை செய்தபோது அவரிடம் ரூ.15 ஆயிரம் இருந்துள்ளது. அதையும் சோனம் கூலிப்படையினரிடம் எடுத்து கொடுத்ததும் தெரியவந்தது. கைதான சோனம் உள்ளிட்ட 4 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
- கடந்த மாதம் 24-ந் தேதி முதல் அவர்களைப் பற்றிய எந்தத் தகவலும் இல்லை.
- கையில் குத்தப்பட்டுள்ள டாட்டூ உதவியால் இறந்தவர் ராஜா ரகுவன்ஷி என உறவினர்கள் உறுதி செய்தனர்.
இந்தூர்:
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த தொழில் அதிபர் ராஜா ரகுவன்ஷி(வயது 30). இவருக்கும் சோனம் ரகுவன்ஷி(27) என்பவருக்கும் கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது, கடந்த மாதம் 23-ந் தேதி மேகாலயாவின் கிழக்கு காசி மலை மாவட்டத்தில் உள்ள சோஹ்ரா பகுதியில் தேனிலவு கொண்டாட பயணம் மேற்கொண்டனர். முதலில் ஷில்லாங் சென்ற அவர்கள், அங்கிருந்து இரு சக்கர வாகனம் வாடகைக்கு எடுத்துக் கொண்டு சோஹ்ராவிற்கு சென்றனர். கிழக்கு காசி மலை மாவட்டத்தில், தொடர்மழை பெய்யும் சிரபுஞ்சிக்கு சென்றனர். அங்குள்ள நான்கிரியாட் கிராமத்தில் விடுதியில் தங்கி தேனிலவை கொண்டாடினர்.
இந்த நிலையில் கடந்த மாதம் 24-ந் தேதி முதல் அவர்களைப் பற்றிய எந்தத் தகவலும் இல்லை, அவர்களின் செல்போன்கள் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. அவர்கள் வாடகைக்கு எடுத்த இரு சக்கர வாகனம், ஓஸ்ரா மலைப் பகுதியில் உள்ள சோஹ்ரா ரிம் என்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்டது.
அதனால் அவர்கள் ட்ரெக்கிங் சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தை ஏற்பட்டது. தகவலறிந்த மேகாலயா போலீசாரும் உள்ளூர் மக்களும் இணைந்து தீவிர தேடுதல் பணியைத் தொடங்கினர். இந்தூர் காவல் ஆணையர் சந்தோஷ் சிங், குற்றப்பிரிவு துணை ஆணையர் ராஜேஷ் குமார் மேகாலயா விரைந்து விசாரணையை துரிதப்படுத்தினர்.
மத்தியப் பிரதேச முதல்-மந்திரி மோகன் யாதவ், மேகாலயா முதல்-மந்திரிகான்ராட் சங்மாவுடன் பேசி, புதுமணத் தம்பதியை கண்டுபிடிக்க உதவி கோரினார். ராஜாவின் சகோதரர் விபின் மற்றும் சோனமின் சகோதரர் கோவிந்த் ஆகியோர் இந்தூரிலிருந்து ஷில்லாங் சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டனர். ஓஸ்ரா மலைப் பகுதி குற்றச் செயல்களுக்கு பெயர் பெற்றது. புதுமணத் தம்பதிகளை தேடும் பணி முடுக்கி விடப்பட்டது.
இந்த நிலையில் அவர்கள் தங்கியிருந்த இடத்தில் இருந்து, 20 கி.மீ., தொலைவில் சோஹ்ரா பகுதி அருவிக்கரையில், ராஜா ரகுவன்ஷி இறந்த நிலையில் உடல் பாதி சிதைந்த நிலையில் மீட்கப்பட்டது. அவரது கையில் குத்தப்பட்டுள்ள டாட்டூ உதவியால் இறந்தவர் ராஜா ரகுவன்ஷி என உறவினர்கள் உறுதி செய்தனர்.
ராஜாவின் உடலில் இருந்து இரண்டு மோதிரங்கள், ஒரு தங்கச் சங்கிலி, வளையல், பர்ஸ், மொபைல் ஆகியவற்றை காணவில்லை.
பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னரே ராஜா ரகுவன்ஷி இறந்த நேரம் மற்றும் பிற தகவல்கள் தெரியவரும். போலீசார் அரிவாள் போன்ற ஆயுதத்தையும் கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம் ராஜா ரகுவன்ஷி மர்ம நபர்களால் கடத்தி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
தொடர்ந்து அவரது மனைவி சோனத்தை போலீசார் தேடி வருகின்றனர். சம்பவ இடத்தில் இருந்து பெண்ணின் வெள்ளை சட்டை, உடைந்த அலைபேசி மீட்கப்பட்டுள்ளதால், ராஜாவை கொன்ற கும்பல் சோனத்தை கடத்திச் சென்றார்களா என போலீசார் விசாரிக்கின்றனர். முன்னதாக தேனிலவின் போது, சோனம் தனது மாமியாருடன் தொலைபேசியில் பேசியது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
- மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
- கொலை தொடர்பாக அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்தரபிரதேச மாநிலம் பாலியா மாவட்டத்தில் உள்ள பகதூர்பூரை சேர்ந்தவர் தேவேந்திரகுமார். முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி மாயா தேவி.
சம்பவத்தன்று தேவேந்திர குமார் திடீரென மாயமானார். போலீசார் அவரை தேடி வந்தனர். இந்நிலையில் கடந்த 10-ந்தேதி ஹரித் கிராமத்தில் ஒரு பிளாஸ்டிக் பையில் மனித கைகளும், கால்களும் கிடந்தன. தொடர்ந்து 2 நாட்களுக்கு பிறகு அருகில் உள்ள கிணற்றில் மனித உடல் கண்டு எடுக்கப்பட்டது.
ஆனால் கொலை செய்யப்பட்டவரின் தலை கிடைக்கவில்லை. இதற்கிடையே கைப்பற்றப்பட்ட உடல் பாகங்களை வைத்து போலீசார் நடத்திய விசாரணையில், கொலை செய்யப்பட்டது தேவேந்திர குமார் என்பது தெரிய வந்தது.
இதுதொடர்பாக அவரது மனைவி மாயாதேவியை போலீசார் விசாரித்தபோது, அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார். தொடர்ந்து நடந்த விசாரணையில் மாயாதேவிக்கு அதே பகுதியை சேர்ந்த அனில்யாதவ் என்பவருடன் அவருக்கு கள்ளத்தொடர்பு இருந்தது தெரியவந்தது.
இவர்களது கள்ளக்காதலை அறிந்த தேவேந்திர குமார் மனைவியை கண்டித்ததால் ஆத்திரமடைந்த அவர் தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொல்ல செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக கை, கால், தலை என உடல் பாகங்களை 6 துண்டுகளாக வெட்டி நள்ளிரவில் எடுத்து சென்று வெவ்வேறு பகுதிகளில் வீசி எறிந்ததும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து மாயாதேவி மற்றும் அவரது கள்ளக்காதலன் அனில் யாதவ், அவரது கூட்டாளிகள் 2 பேர் என மொத்தம் 4 பேரை போலீசார் கைது செய்தனர். கொலை தொடர்பாக அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்ணின் குடும்பத்தினர் அவரை ராகுலுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.
- திருமணத்திற்கு பிறகும் ராகுலின் மனைவி அவரது காதலனுடன் பேசி, பழகி வந்துள்ளார்.
போபால்:
மத்திய பிரதேச மாநிலம் புர்ஹான்பூர் பகுதியை சேர்ந்தவர் கோல்டன் பாண்டே என்ற ராகுல் (வயது25). இவருக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த 17 வயதான மைனர் பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது.
ஆனால் அந்த பெண் யுவராஜ் என்ற வாலிபரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்ணின் குடும்பத்தினர் அவரை ராகுலுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.
திருமணத்திற்கு பிறகும் ராகுலின் மனைவி அவரது காதலனுடன் பேசி, பழகி வந்துள்ளார். அப்போது ராகுலை கொலை செய்ய இருவரும் திட்டம் தீட்டி உள்ளனர்.
இந்நிலையில் கடந்த 13-ந்தேதி ராகுல் தனது மனைவியுடன் ஷாப்பிங் சென்றுள்ளார். இருவரும் ஓட்டலில் சாப்பிட்டு விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினர். இந்தூர்-இச்சாப்பூர் நெடுஞ்சாலையில் உள்ள கல்லூரி அருகே சென்ற போது ராகுலின் மனைவி தனது செருப்பு கழன்று கீழே விழுந்து விட்டது. எனவே மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு கூறியுள்ளார்.
உடனே ராகுல் மோட்டார் சைக்கிளை நிறுத்திய போது அங்கு மறைந்திருந்த யுவராஜின் நண்பர்கள் 2 பேர் பீர்பாட்டிலால் ராகுலை சரமாரியாக தாக்கினர். மேலும் உடைந்த பாட்டிலால் ராகுலின் உடலில் சுமார் 36 முறை குத்திக்கொலை செய்தனர்.
பின்னர் ராகுலின் மனைவி தனது கள்ளக்காதலன் யுவராஜ்க்கு வீடியோ கால் மூலம் பேசியுள்ளார். அப்போது கொலை செய்யப்பட்ட ராகுலின் உடலை காட்டியுள்ளார். பின்னர் ராகுலின் உடலை காட்டுப்பகுதியில் வீசி விட்டு 3 பேரும் தலைமறைவாகி உள்ளனர்.
இந்நிலையில் வெளியே சென்ற ராகுல் மற்றும் அவரது மனைவியையும் காணவில்லை என அவர்களது உறவினர்கள் போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்திய போது ராகுல் உடல் காட்டுப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது.
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் ராகுலை அவரது மனைவி தனது கள்ளக்காதலனின் நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்யதது தெரியவந்தது.
இதையடுத்து தலைமறைவாக இருந்த ராகுலின் மனைவி, அவரது கள்ளக்காதலன் யுவராஜின் நண்பர்களான லலித் பாட்டீல் மற்றும் ஒரு சிறுவன் என மொத்தம் 4 பேரை கைது செய்தனர்.
- திருமணத்துக்கு பிறகு வினோதினி கணவர் கதிரவனுடன் சென்னையில் குடியேறிய பிறகும் அந்தோனி ஜெகனின் காதலை தொடர்ந்துள்ளார்.
- கணவரை கொலை செய்துவிட்டு காதலனுடன் சேர்ந்துவிடலாம் என வினோதினி திட்டம் போட்டார். இதற்காகவே திருவான்மியூர் கடற்கரைக்கு அழைத்து சென்று கொலை செய்துள்ளனர்.
சென்னை:
சென்னை திருவான்மியூர் கடற்கரையில் கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் மனைவி வினோதினியுடன் கடற்கரைக்கு சென்றிருந்த என்ஜினீயர் கதிரவன் கொலை செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக திருவான்மியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது நானும், கணவர் கதிரவனும் கண்ணை கட்டிக் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடினோம்.
கணவரின் கண்ணை கட்டி விளையாடியபோது வழிப்பறி கொள்ளையர்கள் அவரை தாக்கியதுடன் எனது தாலி செயினையும் பறித்துச்சென்றுவிட்டனர் என்று தெரிவித்தார்.
வினோதினியின் செயல்பாடுகள் போலீசுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து கடற்கரை பகுதியில் கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது கதிரவனை, வினோதினிக்கு தெரிந்த நபரே வந்து அரிவாளால் வெட்டி கொலை செய்தது தெரியவந்தது.
அந்த நபர் வினோதினியின் காதலனான அந்தோனி ஜெகன் என்பதை போலீசார் கண்டு பிடித்தனர். காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்றுவிட்டு வினோதினி வழிப்பறி நாடகம் ஆடியது அம்பலமானது.
இதுதொடர்பாக போலீசார் மேலும் நடத்திய விசாரணையில் வினோதினியின் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரம் என்பது தெரியவந்தது. வினோதினியும், அந்தோனி ஜெகனும் காதலித்து வந்த நிலையில் கதிரவன், வினோதினியை திருமணம் செய்துள்ளார். இவரது ஊர் தூத்துக்குடி ஆகும். காதலன் அந்தோனி ஜெகன் விளாத்திகுளம் அருகே உள்ள குருவார்பட்டியை சேர்ந்தவர்.
திருமணத்துக்கு பிறகு வினோதினி கணவர் கதிரவனுடன் சென்னையில் குடியேறிய பிறகும் அந்தோனி ஜெகனின் காதலை தொடர்ந்துள்ளார். அப்போதுதான் கணவரை கொலை செய்துவிட்டு காதலனுடன் சேர்ந்துவிடலாம் என வினோதினி திட்டம் போட்டார். இதற்காகவே திருவான்மியூர் கடற்கரைக்கு அழைத்து சென்று கொலை செய்துள்ளனர்.
இந்த வழக்கு விசாரணை சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் வினோதினி, அந்தோனி ஜெகன் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கொலை வழக்கில் திருவான்மியூர் போலீசார் கேமரா காட்சி ஆவணங்களை முறையாக தாக்கல் செய்தனர். இதன் அடிப்படையிலேயே இருவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பும் ரங்கன் தினசரி மது குடித்து விட்டு வந்தார்.
- கணவர் மீது ஆத்திரத்தில் இருந்த கோகுல ஈஸ்வரி அவரை கொலை செய்ய முடிவு செய்தார்.
குனியமுத்தூர்:
கோவை சுந்தராபுரம் அருகே உள்ள பிள்ளையார் புரத்தை சேர்ந்தவர் ரங்கன் (வயது 34). எலக்ட்ரீசியன்.
இவரது மனைவி கோகுல ஈஸ்வரி (31). இவர்களுக்கு 7 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. கோகுல ஈஸ்வரி அந்த பகுதியில் உள்ள மரக்கடையில் வேலை செய்து வருகிறார்.
ரங்கனுக்கு குடிப்பழக்கம் இருந்தது. வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பும் ரங்கன் தினசரி மது குடித்து விட்டு வந்தார். இதனை அவரது மனைவி கண்டித்தார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
நேற்று விடுமுறை நாள் என்பதால் வெளியே சென்ற ரங்கன் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்தார். பின்னர் அவர் போதையில் மனைவியிடம் தகராறு செய்தார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதனால் கணவர் மீது கோகுல ஈஸ்வரிக்கு ஆத்திரம் ஏற்பட்டது.
பின்னர் ரங்கன் குடிபோதையில் வீட்டில் படுத்து தூங்கினார். கணவர் மீது ஆத்திரத்தில் இருந்த கோகுல ஈஸ்வரி அவரை கொலை செய்ய முடிவு செய்தார். நள்ளிரவு 11.30 மணிக்கு வீட்டுக்கு வெளியே கிடந்த பெரிய கல்லை எடுத்து வந்து அயர்ந்து தூங்கிக் கொண்டு இருந்த ரங்கனின் தலையில் போட்டார்.
இதனால் ரங்கன் சத்தம் போட்டு அலறினார். அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்து பார்த்தனர். உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த ரங்கனை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே ரங்கன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த தகவல் கிடைத்ததும் போத்தனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் குடிபோதையில் தகராறு செய்த கணவரின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த கோகுல ஈஸ்வரியை கைது செய்தனர்.
தினமும் குடித்து விட்டு வந்து என்னிடம் தகராறு செய்தார். இதனால் ஆத்திரத்தில் ரங்கனை கொலை செய்ததாக கோகுலஈஸ்வரி தெரிவித்தார். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விசாரணைக்கு பின் கோகுலஈஸ்வரியை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைக்க உள்ளனர்.
- பலத்த காயம் அடைந்து இருந்த வேல்முருகன் நேற்று மாலை பரிதாபமாக உயிரிழந்தார்.
- கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போரூர்:
சென்னை சாலிகிராமம், மதியழகன் நகர் கே.கே சாலையை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது40) கட்டிட கூலி தொழிலாளி. இவரது மனைவி வினோதினி, வீட்டு வேலை பார்த்து வருகிறார்.
வேல்முருகன் தினசரி பணி முடிந்து இரவு மது குடித்துவிட்டு வந்து வினோதினியிடம் ரகளையில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் கடந்த 9-ந்தேதி மதுபோதையில் வீடு திரும்பிய வேல்முருகனை வினோதினி கண்டித்தார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த வினோதினி அருகில் கிடந்த காய்கறி வெட்டும் கத்தியால் வேல்முருகனை சரமாரியாக குத்தினார்.
இதில் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த வேல்முருகனை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லாமல் வீட்டிலேயே யாருக்கும் தெரியாமல் வைத்து வினோதினி சிகிச்சை அளித்து வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் பலத்த காயம் அடைந்து இருந்த வேல்முருகன் நேற்று மாலை பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரை வினோதினி ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு எடுத்து சென்றார். மேலும் அங்கிருந்த டாக்டர்களிடம் வேல்முருகன் மதுபோதையில் தானாகவே கத்தியால் குத்தி கொண்டார் என்றும் வினோதினி கூறினார். ஆனால் அவரது நடவடிக்கையில் சந்தேகமடைந்த டாக்டர்கள் உடனடியாக இதுபற்றி விருகம்பாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
இன்ஸ்பெக்டர் தாம்சன் சேவியர் ஜார்ஜ் மற்றும் போலீசார் வினோதினியை பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினார். அப்போது வேல்முருகனை கத்தியால் குத்தி கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார்.
இது குறித்து வினோதினி போலீசாரிடம் கூறியதாவது:- கணவர் வேல்முருகன் தினசரி மது குடித்துவிட்டு வீட்டை அசுத்தம் செய்து தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டு வந்தார்.
இதனால் விரக்தி அடைந்த நான் கணவரை கத்தியால் குத்தினேன். அப்போது அவர் அளவுக்கு அதிகமான மது போதையில் இருந்ததால் அவரது அலறல் சத்தம் வெளியே கேட்கவில்லை.
மேலும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கணவரை சிகிச்சைக்கு அழைத்து சென்றால் விஷயம் வெளியே தெரிந்து சிக்கிவிடுவோம் என்பதால் வீட்டிலேயே வைத்து நானே சிகிச்சை அளித்தேன். ஆனால் அதிக ரத்தம் வெளியேறி வந்ததால் கணவர் வேல்முருகன் உயிரிழந்து விட்டார்.
இவ்வாறு அவர் கூறினார்.
கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 2 நாட்களாக வீட்டிலேயே வைத்து கணவருக்கு வினோதினி சிகிச்சை அளித்துள்ளார்.
- ரத்தம் வெளியேறி உயிருக்கு ஆபத்தான நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கணவரை அழைத்து சென்றார்.
சென்னை:
சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்தர் வேல்முருகன். கட்டிட தொழிலாளியான இவர் மதுப்பழக்கத்தக்கு அடிமையானார். இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு குடித்து விட்டு வந்து மனைவி வினோதினியிடம் தகராறில் ஈடுபட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர், வேல்முருகனை சரமாரியாக கத்தியால் குத்தினார்.
வயிற்றில் இடது புறத்தில் கத்திக்குத்து விழுந்தது. இதில் பலத்த காயம் அடைந்த வேல்முருகனின் வயிற்றில் இருந்து ரத்தம் வெளியேறியது.
ஆத்திரத்தில் கணவரை கத்தியால் குத்திய நிலையில் அதன் பின்னர் போலீசுக்கு பயந்து சிகிச்சைக்காக வெளியில் எங்கும் அழைத்துச் செல்லவில்லை.
இதனால் 2 நாட்களாக வீட்டிலேயே வைத்து கணவருக்கு வினோதினி சிகிச்சை அளித்துள்ளார். இதில் ரத்தம் வெளியேறி உயிருக்கு ஆபத்தான நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கணவரை அழைத்து சென்றார். அங்கு அவரது உடலை பரிசோதித்த டாக்டர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுபற்றி ஆஸ்பத்திரியில் இருந்து விருகம்பாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து வினோதினியிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கணவர் குடித்து விட்டு வந்து தனக்கு தானே கத்தியால் குத்திக் கொண்டதாக தெரிவித்தார். ஆனால் போலீசார் நடத்திய விசாரணைக்கு பிறகு கணவரை கத்தியால் குத்தி கொலை செய்ததை வினோதினி ஒப்புக்கொண்டார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பரபரப்பான வாக்குமூலம் வருமாறு:-
கணவர் வேல்முருகன், குடித்து விட்டு வந்து அடிக்கடி வீட்டில் தகராறு செய்வார். தற்போதும் அது போன்று குடித்து விட்டு வந்தவர் என்னைப் பற்றி தவறாக பேசி அடித்து உதைத்தார். அப்போது அவர் எனது நடத்தையில் சந்தேகப்பட்டு கடுமையான வார்த்தைகளால் திட்டி தாக்கினார். ஏன் இப்படி குடித்து விட்டு வந்து பேசுகிறீர்கள் என்று நான் கண்டித்தும் அவர் கேட்கவில்லை. என்னை தாக்குவதையும் நிறுத்தவில்லை.
இதனால் ஆத்திரத்தில் கத்தியால் குத்தினேன். இதில் அவரது உடலில் இருந்து ரத்தம் அதிக அளவில் வெளியேறியது.
இதனால் கணவர் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லுமாறு என்னிடம் கூறினார். ஆனால் நான் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லாமல் மருந்து கடையில் மருந்து வாங்கி வந்து சிகிச்சை அளித்தேன். ஆனால் கணவரின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. அவர் மயக்க நிலைக்கு சென்றார். இதனால் பயந்து போய் அவரே கத்தியால் குத்திக்கொண்டதாக நாடகம் ஆடினேன்.
கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்ற போது போலீசில் சிக்கி கொண் டேன். ஆஸ்பத்திரியில் எனது கணவரை காப்பாற்றுங்கள் என்று கதறி அழுதேன். இருப்பினும் போலீசார் விசாரணை நடத்தி என்னை கைது செய்து விட்டனர்.
இவ்வாறு வினோதினி வாக்குமூலம் அளித்திருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- குடித்துவிட்டு தகராறு செய்த ஆட்டோ டிரைவரை கொதிக்கும் நீரை ஊற்றி கொலை செய்த சம்பவம் திருவெறும்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- தகவல் அறிந்த திருவெறும்பூர் போலீசார் செல்வராஜின் மனைவி, மாமியார் ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
திருச்சி:
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பாரதிபுரத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 27). இவரது மனைவி டயானா மேரி (வயது 22). இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை.
ஆட்டோ டிரைவரான செல்வராஜ் அடிக்கடி குடித்து விட்டு வீட்டிற்கு வந்து மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவரது மனைவி பலமுறை கண்டித்தும் திருந்தவில்லை.
இதற்கிடையே கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கணவரிடம், கோபித்துக் கொண்டு அதே பகுதியில் வசித்து வரும் தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். அதன் பின்னர் அவர் கணவர் வீட்டுக்கு திரும்ப செல்லவில்லை. உறவினர்கள் சமரசம் செய்து வைத்தும் அதனை டயானா மேரி ஏற்கவில்லை.
இந்தநிலையில் சம்பவத்தன்று செல்வராஜ் மனைவியைத் தேடி மாமியார் வீட்டுக்குச் சென்றார். அப்போது டயானா மேரியிடம் தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். அதற்கு அவர் ஒப்புக்கொள்ள மறுப்பு தெரிவித்தார். இதனால் மீண்டும் அவர்களுக்கு இடையே தகராறு மூண்டது.
இதில் ஆத்திரம் அடைந்த செல்வராஜ், மனைவி டயானா மேரியை சரமாரியாக அடித்ததாக தெரிகிறது. இதனால் கோபத்தின் உச்சிக்குச் சென்ற அவர் வீட்டில் இருந்த அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த தண்ணீரை எடுத்து வந்து சற்றும் யோசிக்காமல் கணவர் மீது ஊற்றிவிட்டார்.
இதில் உடல் வெந்து செல்வராஜ் வலியால் அலறி துடித்தார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு துவாக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.
இந்த நிலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் செல்வராஜ் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். மனைவி ஊற்றிய சுடுநீர் அவரது அடிவயிற்றில் பட்டு ஆழமான காயம் ஏற்பட்டதால் கிட்னி பாதித்து இறந்து விட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இது பற்றி தகவல் அறிந்த திருவெறும்பூர் போலீசார் செல்வராஜின் மனைவி டயானா மேரி, மாமியார் இன்னாசியம்மாள் (43) ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
குடித்துவிட்டு தகராறு செய்த ஆட்டோ டிரைவரை கொதிக்கும் நீரை ஊற்றி கொலை செய்த சம்பவம் திருவெறும்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கணவர் ஜூடான் மகாதோவை அவரது மனைவி உத்தராவே கொலை செய்திருப்பது தெரியவந்தது.
- கொலையை மறைக்க உத்தராவே உப்பை தூவி தடயங்களை அழித்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
கொல்கத்தா:
மேற்கு வங்க மாநிலம் புருலியாவை சேர்ந்தவர் ஜூடான் மகாதோ. இவரது மனைவி உத்தரா. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.
ஜூடான் மகாதோ கடந்த சில வாரங்களாக வீட்டிற்கு வரவில்லை. இதனை அறிந்த குடும்பத்தினர் அவரை பல இடங்களிலும் தேடினர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. அவரது மகனும் தந்தையை பல இடங்களில் தேடினார்.
அப்போது வீட்டுக்கு வெளியே தந்தையின் உடல் அழுகிய நிலையில் கிடப்பதை கண்டார். அதிர்ச்சி அடைந்த அவர் இதுபற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் ஜூடான் மகாதோ உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.
இதில் ஜூடான் மகாதோவின் மனைவி உத்தரா மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரது நடவடிக்கைகளை போலீசார் கண்காணித்த போது அவர் அதே பகுதியை சேர்ந்த சேத்திரபால் என்பவருடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. எனவே போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர்.
இதில் கணவர் ஜூடான் மகாதோவை அவரது மனைவி உத்தராவே கொலை செய்திருப்பது தெரியவந்தது. மேலும் கொலையை மறைக்க அவர் உப்பை தூவி தடயங்களை அழித்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்த போது, உத்தராவுக்கும் சேத்திரபாலுக்கும் இடையே கள்ளக்காதல் இருந்தது. இதனை அறிந்த ஜூடான் மகாதோ மனைவியை கண்டித்துள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த உத்தரா, கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருக்க இடைஞ்சலாக இருந்த கணவரை கொல்ல முடிவு செய்துள்ளார்.
இதையடுத்து கள்ளக்காதலன் துணையுடன் கணவர் ஜூடான் மகாதோவை கொலை செய்து பிணத்தை வெளியே வீசியுள்ளார். அதன்பின்பு ஜார்கண்ட் மாநிலம் சென்று அங்கு கள்ளக்காதலனுடன் வாழ்க்கை தொடர முடிவு செய்துள்ளார். ஆனால் போலீசாரின் விசாரணையில் அவர் சிக்கி கொண்டார்.
இதையடுத்து போலீசார் உத்தராவை கைது செய்தனர். மேலும் ஜார்கண்டில் பதுங்கி இருந்த அவரது கள்ளக்காதலன் சேத்திரபாலுவும் கைது செய்யப்பட்டார். மேற்கு வங்காளத்தில் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






