என் மலர்
நீங்கள் தேடியது "கூலிப்படை"
- மோட்டார் சைக்கிளில் சென்ற அரிகிருஷ்ணனை கூலிப்படை கும்பல் கார் ஏற்றி கொல்ல முயன்றனர்.
- கள்ளகாதலுக்கு இடையூறாக இருந்த கணவனை மனைவியே கூலிப்படை ஏவி கொலை செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஸ்ரீபெரும்புதூர்:
ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மேவலூர் குப்பத்தை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன். அதே பகுதியில் பிரியாணி கடை வைத்து உள்ளார். இவரது மனைவி பவானி (39). இவரும் பிரியாணி கடையில் கணவனுக்கு உதவியாக இருந்து வந்தார்.
அரிகிருஷ்ணன் பிரியாணி கடைக்கு இறைச்சி மற்றும் பொருட்கள் வாங்க அடிக்கடி மனைவி பவானியை கடையில் விட்டு சென்றார். அப்போது கடையில் வேலை பார்த்த மதன் குமார் (29) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இது கள்ளக்காதலாக மாறியது.
இதனை அறிந்த அரி கிருஷ்ணன் கடையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணித்தார். இதில் மனைவி பவானி, கள்ளக்காதலன் மதன் குமாருடன் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் பதிவானது. இதையடுத்து அரிகிருஷ்ணன் தனது மனைவி பவானியை கண்டித்து கடையில் வேலைபார்த்த மதன் குமாரை இனிமேல் கடைக்கு வரவேண்டாம் என்று நிறுத்தி விட்டார்.
இதனால் கள்ளகாதலர்கள் ஒன்றாக சந்திக்க வாய்ப்பு இல்லாமல் போனது. இதையடுத்து தவிப்புக்குள்ளான பவானி கள்ளகாதலன் மதன்குமாருடன் சேர்ந்து இடையூறாக இருக்கும் கணவன் அரிகிருஷ்ணனை கொலை செய்ய முடிவு செய்தார்.
இதற்காக கள்ளகாதலர்கள் இருவரும் சேர்ந்து திருவாரூர் பகுதியை சேர்ந்த கூலி படையினரைஅணுகி ரூ.15லட்சம் பேரம் பேசி ரூ.2லட்சம் முன்பணம் கொடுத்தனர். இதனை அறியாத அரிகிருஷ்ணன் வழக்கம்போல் மனைவியுடன் பேசியபடி பிரியாணி கடைக்கு சென்று வந்தார்.
இந்தநிலையில் மேவலூர் குப்பம் அருகே சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்ற அரிகிருஷ்ணனை கூலிப்படை கும்பல் கார் ஏற்றி கொல்ல முயன்றனர். இதில் அரிகிருஷ்ணன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
அப்போது கூலி படையினர் அரிகிருஷ்ணனை தொடர்பு கொண்டு பேசிய போது, "உன் மனைவி கள்ளகாதலனுடன் சேர்ந்து உன்னை கொலை செய்ய ரூ.15லட்சம் பேரம் பேசி ரூ.2லட்சம் கொடுத்து உள்ளார். நீ எங்களுக்கு ரூ.5லட்சம் கொடுத்தால் உன்னை உயிரோடு விட்டு விடுகிறோம்" என்று மிரட்டி உள்ளனர்.
இதனால் அதிர்ந்து போன அரிகிருஷ்ணன் இது பற்றி ஸ்ரீபெரும்புதூர் போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் வழக்கு பதிவு செய்து அரிகிருஷ்ணனின் மனைவி பவானி, அவரது கள்ளக்காதலன் மதன்குமார் ஆகியோரை பிடித்து அதிரடி விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் கூலிப் படையை ஏவி அரிகிருஷ்ணனை கொலை செய்ய முயன்றதை ஒப்புக் கொண்டனர்.
இதையடுத்து பவானி, கள்ளக்காதலன் மதன்குமார் மற்றும் அவர்கள் கொடுத்த தகவலின் படி கூலிப் படையை சேர்ந்த திருவாரூர் மாவட்டதை சேர்ந்த விக்னேஷ், விஜய், மணிகண்டன் ஆகிய 5 பேரையும் கைது செய்தனர். அவர்களி டம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
அரிகிருஷ்ணனை கூலிப்படையினர் காரை ஏற்றி தீர்த்து கட்ட முயன்ற முதல் முயற்சி பலிக்காததால் அவர்கள் தங்களது திட்டத்தை மாற்றி உள்ளனர். கொலை செய்து விட்டு கைதாகி சிறைக்கு செல்லாமல் அரிகிருஷ்ணனையே மிரட்டி பணம் பறிக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.
அப்படி மிரட்டியபோது தான் மனைவியே கூலிப்படையை ஏவி கொலை செய்ய முயன்றது அரிகிருஷ்ணனுக்கு தெரிந்தது. இதைத் தொடர்ந்து அவர் போலீசில் புகார் செய்ததால் மனைவி, கள்ளக்காதலன் மற்றும் கூலிப்படையினர் கூண்டோடு சிக்கிக் கொண்டனர்.
கள்ளகாதலுக்கு இடையூறாக இருந்த கணவனை மனைவியே கூலிப்படை ஏவி கொலை செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கணவரை கொலை செய்ய வேண்டும் என்பதில் சோனம் உறுதியாக இருந்துள்ளார்.
- கணவர் ராஜாரகுவன்ஷியை சி.சி.டி.வி. கேமரா இல்லாத மலை உச்சிக்கு சோனம் அழைத்து சென்றுள்ளார்.
மத்தியபிரதேசம் மாநிலம் இந்தூரை சேர்ந்த சோனம் (வயது25) என்ற புதுப்பெண் தனது கணவர் ராஜாரகுவன்ஷியை (28) மேகாலயாவுக்கு தேனிலவுக்கு அழைத்து சென்று கூலிப்படை ஏவி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தொழில் அதிபரின் மகளான சோனத்துக்கு கடந்த மே 11-ந்தேதி ராஜாரகுவன்ஷியுடன் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு முன்பு அவருக்கு தனது தந்தையின் நிறுவனத்தில் வேலை பார்த்த தந்தையுடன் 3 வயது குறைவான ராஜ்குஷ்வாகாவுடன் காதல் மலர்ந்துள்ளது. ஆனால் குடும்பத்தினர் கட்டாயப்படுத்தியதால் மனம் இன்றி ராஜாரகுவன்ஷியை திருமணம் செய்த சோனத்துக்கு அவருடன் வாழப்பிடிக்கவில்லை.
இதனால் காதலன் ராஜ்குஷ்வாகாவுடன் சேர்ந்து தனது கணவரை கொல்ல சதித்திட்டம் தீட்டி உள்ளார். அதன்படி கணவர் ராஜாரகுவன்ஷியை மேகாலயாவுக்கு தேனிலவுக்கு அழைத்து சென்ற சோனம் அங்கு காதலனால் ஏற்பாடு செய்யப்பட்ட கூலிப்படையினரான ஆகாஷ் (19), விஷால் (22), ஆனந்த் (23) ஆகியோர் மூலம் ராஜாரகுவன்ஷியை கொலை செய்துள்ளார்.
இதற்காக ராஜாரகுவன்ஷியும், சோனமும் தேனிலவுக்கு புறப்பட்ட போதே ஆகாஷ், விஷால், ஆனந்த் ஆகியோர் திருமண தம்பதியை பின் தொடர்ந்துள்ளனர். ஆனால் ராஜ்குஷ்வாகாவால் அங்கு செல்ல முடியவில்லை. எனவே கொலை திட்டத்தை ரத்து செய்துவிடலாம் என அவர் கூறி உள்ளார்.
ஆனால் கணவரை கொலை செய்ய வேண்டும் என்பதில் சோனம் உறுதியாக இருந்துள்ளார். அவர் கூலிப்படைக்கு ரூ.20 லட்சம் தருவதாக வாக்குறுதி கொடுத்துள்ளார். தொடர்ந்து முன்பணமாக ரூ.4 லட்சத்தையும் வழங்கி உள்ளார்.
பின்னர் சோனம் வகுத்து கொடுத்த திட்டப்படி மேகாலயா சென்ற கூலிப்படையினரான ஆகாஷ், விஷால், ஆனந்த் ஆகியோர் அங்கு ராஜா ரகுவன்ஷியிடம் தங்களை மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்று அறிமுகமாகி உள்ளனர்.
அவர்களுடன் சுற்றுலா வழிகாட்டி ஒருவரும் உடன் சென்றுள்ளார். ஆனால் அவரை சோனம் நாங்கள் தனிமையில் இருக்க விரும்புகிறோம் என கூறி திருப்பி அனுப்பி உள்ளார்.
பின்னர் கணவர் ராஜாரகுவன்ஷியை சி.சி.டி.வி. கேமரா இல்லாத மலை உச்சிக்கு சோனம் அழைத்து சென்றுள்ளார். அங்கு அவர்களை பின் தொடர்ந்து சென்ற கூலிப்படையினர் ராஜாரகுவன்ஷியை கோடாரியால் தாக்கி கொலை செய்துள்ளனர். தனது கணவர் கண்முன்னே கொலை செய்யப்படுவதை சோனம் வேடிக்கை பார்த்துள்ளார். பின்னர் ராஜாரகுவன்ஷி உடலை 200 அடி ஆழமான பள்ளத்தில் தூக்கி வீசி உள்ளனர். பின்னர் 4 பேரும் 2 மோட்டார் சைக்கிள்களில் சுமார் 25 கிலோ மீட்டர் பயணம் செய்துள்ளார். பிறகு ரெயில், பஸ்கள் மூலம் அவரவர் ஊர்களுக்கு திரும்பி உள்ளனர்.
சோனம் இந்தூர் சென்று காதலன் ராஜ்குஷ்வாகாவை சந்தித்துள்ளார். பின்னர் 3 நாட்கள் ஒரு வீட்டில் வாடகைக்கு தங்கி இருந்தார். தொடர்ந்து அங்கேயே இருந்தால் போலீசில் சிக்கி கொள்வோம் என சோனம் கருதி உள்ளார்.
சோனத்தின் காதலன் ராஜ்குஷ்வாகா உத்தரபிரதேசத்தை பூர்வீகமாக கொண்டவர். அவர் சோனத்தை உத்தரபிரதேசம் செல்ல ஏற்பாடு செய்து அங்குள்ள தனது நண்பர்கள் வீடுகளில் பாதுகாப்பாக தங்க வைத்துள்ளார். இதற்கிடையே ராஜாரகுவன்ஷி பற்றி கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் சுற்றுலா வழிகாட்டி கொடுத்த தகவல் மூலம் மத்தியபிரதேசத்தை சேர்ந்த ஆகாஷ், விஷால், ஆனந்த் ஆகியோர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்.
இதை அறிந்த சோனம் வேறு வழியின்றி தானாக முன்வந்து போலீசில் சரண் அடைந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
ராஜாரகுவன்ஷியை கொலை செய்தபோது அவரிடம் ரூ.15 ஆயிரம் இருந்துள்ளது. அதையும் சோனம் கூலிப்படையினரிடம் எடுத்து கொடுத்ததும் தெரியவந்தது. கைதான சோனம் உள்ளிட்ட 4 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
- சுந்தரமூர்த்தி (வயது 38). இவருக்கு திருமணமாகி மனைவியும், 10 வயது மகனும் உள்ளனர்
- கடையை முடிவிட்டு வீடு திரும்பிய இவரை கடந்த 27-ந்தேதி இரவு மர்மக்கும்பல் வழிமறித்து கத்தியால் சராமாரியாக வெட்டினார்கள்.
கடலூர்:
குறிஞ்சிப்பாடி சுப்புராய நகரை சேர்ந்த முருகன் மகன் சுந்தரமூர்த்தி (வயது 38). இவருக்கு திருமணமாகி மனைவியும், 10 வயது மகனும் உள்ளனர். இவர் குறிஞ்சிப்பாடியில் உள்ள தனியார் பள்ளி அருகே ஸ்டூடியோ நடத்தி வருகிறார். கடையை முடிவிட்டு வீடு திரும்பிய இவரை கடந்த 27-ந்தேதி இரவு மர்மக்கும்பல் வழிமறித்து கத்தியால் சராமாரியாக வெட்டினார்கள். இதில் சம்பவ இடத்திலேயே சுந்தரமூர்த்தி உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். சம்பவ இடத்தில் இருந்த சி.சி.டி.வி. கேமிராவை போலீசார் ஆய்வு செய்தனர்.
மேலும், அப்பகுதியில் பயன்படுத்தப்பட்ட செல்போன் எண்களை வைத்தும் போலீசார் விசாரித்தனர். கொலை செய்துவிட்டு தப்பியோடிய மர்மகும்பலை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது. இந்நிலையில் அதே பகுதியில் வசித்து வரும் மளிகை கடைக்காரருக்கும் சுந்தரமூர்த்திக்கும் முன் விரோதம் இருந்தது. மளிகை கடைக் காரரின் மனைவிக்கு சுந்தரமூர்த்தி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனை வெளியில் கூற முடியாமல் தற்கொலை செய்து கொண்டு மளிகை கடைக்காரரின் மனைவி கடந்த ஆண்டு இறந்து போனார். இதனால் ஆத்திரமடைந்த மளிகை கடைக்காரர் கூலிப் படையை வைத்து ஸ்டூடியோ உரிமையாளர் சுந்தரமூர்த்தியை கொலை செய்தது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து மளிகை கடைக்காரரை பிடித்து, அவரை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அவர் கொடுத்த தகவலின்படி கூலிப்படையை சேர்ந்த மர்மக்கும்பலை கைது செய்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவர்கள் அனைவரும் இன்று மாலை அல்லது நாளை காலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் எனத் தெரிகிறது.
- தலைமறைவானவர்களை பிடிக்க போலீசார் தீவிரம்
- 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு அதிரடி விசாரணை மேற்கொள்ளப்பட்டது
கன்னியாகுமரி :
கன்னி யாகுமரி மாவ ட்டம் மேக்காமண்டபம் பிலாங்காலை பகுதியை சேர்ந்தவர் பிரியா. இவரது 2½ வயது மகன் ஆத்வீக், கடமலக்குன்று பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிரி.கேஜி. படித்து வருகிறான். இவன் நேற்று பள்ளி வாகனத்தில் சென்ற போது, காரில் வந்த கும்பல் வழிமறித்து கடத்திச் சென்றது.
குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு அதிரடி விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில் சிறுவனை அவனது தந்தை விபின் பிரியன் தான் கூலிப்படை மூலம் கடத்தியது தெரியவந்தது. தொடர்ந்து போலீசாரின் விசாரணையில் ஈத்தா மொழி பகுதியில் ஒரு வீட்டில் சிறுவன் ஆத்வீக் மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது. அங்கு விரைந்து சென்ற போலீசார், அந்த வீட்டின் குளியலறையில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த ஆத்வீக்கை மீட்டனர்.
இது தொடர்பாக அவனது தாயார் பிரியா அளித்த புகாரின் பேரில், பிபின் பிரியன், அவரது தாயார் பூமதி, சகோதரி கமலா பிரித்தி, நண்பர் அஜித், சரண்,முகேஷ் உள்பட 17 பேர் மீது போலீசார் இந்திய தண்டனை சட்டம் 147,148, 294(பி),341,366 மற்றும் 506 (2) ஆகிய 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். வழக்குப்பதிவு செய்யப்பட்டவர்கள் தலைமறைவாகி விட்டதால் அவர்களை பிடிக்க தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தக்கலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆஷா ஜெபகர் தலைமையில் 3-தனிப்படையினர் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
கடலூர்:
பண்ருட்டி அடுத்த கண்டரக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் சரவணன்,ராதா. இவர்கள் இருவரும் அண்ணன் தம்பிகள். ராதா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதால் அவரது மனைவி சுமதிதனது மகனுடன் அதே பகுதியில் வசித்துவந்தார்.சரவணனுக்கும் சுமதிக்குமிடையே வீட்டு மனை பிரச்சனை சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் சரவணன் கடந்த 27-ந் தேதி நள்ளிரவில் தனது அடியாட்கள் 10-க்கும் மேற்பட்டோரை அனுப்பி தடி, கத்தி, கடப்பாறை, சுத்தி ஆகிய ஆயுதங்களை கொண்டு சுமதியின் வீட்டு சுவரை இடித்து சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சுமதி இது குறித்து பண்ருட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்- இன்ஸ்பெக்டர் பிரசன்னா மற்றும்போலீசார் சுமதி வீட்டில் பதிவாகி இருந்த சி.சி.டி.வி.காட்சிகளை வைத்துவீட்டினை இடித்து சேதப்படுத்திய மர்ம நபர்கள் 10-க்கும் மேற்பட்டோரை தேடி வந்தனர்.
இதற்கிடையில்கூலிப் படையாக செயல்பட்ட பண்ருட்டி போலீஸ் லைன் 3- வது தெரு ரவி மகன் கோகுல் (வயது 19) ,தேவராஜ் மகன்பாலாஜி என்ற அருண்பாலாஜி (வயது 26),ராதாகிருஷ்ணன்மகன் பாலாஜி (வயது 27),பாலமுருகன் மகன்மணிகண்டன் (வயது 20) ஆகி ய 4பேரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
- தாதா மற்றும் ரவுடிகளுடனான தொடர்பும் அடுத்த கட்டத்திற்கு அவனை அழைத்துச் சென்று விடுகிறது.
- 4 வகையாக ரவுடிகளை போலீசார் பிரித்து கண்காணித்து வருகிறார்கள்.
எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே.... அது நல்லவனாவதும் தீயவனாவதும் அன்னை வளர்ப்பதிலே.... என்கிற எம்.ஜி.ஆரின் பாடல் வரிகள் இன்றைய காலகட்டத்தில் நூற்றுக்கு நூறு சதவீதம் மிகவும் பொருத்தமாகவே உள்ளது என்று கூறலாம்.
தமிழகத்தில் கூலிப்படையினர் ரவுடிகளின் கொட்டத்தை அடக்குவதற்கு போலீசார் துப்பாக்கியை தூக்கி இருக்கிறார்கள். ஒரே வாரத்தில் இரண்டு ரவுடிகள் என்கவுண்டரில் தீர்த்து கட்டப்பட்டதையடுத்து சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களிலுமே ரவுடிகள் மரண பீதியில் தவித்து வருகிறார்கள்.
ரவுடிகள் மற்றும் தாதாக்கள் எப்படி உருவாகிறார்கள். ? அதற்கான முழுமையான காரணங்கள் என்ன? என்பது பற்றி காவல்துறை வட்டாரத்தில் விசாரித்த போது அவர்கள் தெரிவித்த தகவல்கள் சினிமாவை மிஞ்சும் வகையில் திடுக்கிட வைப்பதாகவே அமைந்துள்ளன.
அந்த அளவுக்கு ரவுடிகளின் வரலாற்றுப் பின்னணியும் அவர்கள் உருவாகும் விதமும் கிரைம் திரில்லர் கதையை மிஞ்சும் வகையிலேயே உள்ளது. சிறுவயதில் பெற்றோர்களால் புறம் தள்ளப்படும் சிறுவர்கள்... சரியான கவனிப்பு இன்றி வளர்க்கப்படும் சிறுவர்கள்....... தங்களது பகுதியில் வசித்து வரும் தவறான நபர்களோடு ஏற்படும் கூடா நட்பு போன்றவையே ரவுடிகள் உருவாவதற்கு முக்கிய காரணமாக அமைந்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இது போன்ற சிறுவர்களின் ஏழ்மை நிலையை தங்களுக்கு சாதகமாக்கும் தாதாக்கள் அவர்களுக்கு பணம் மற்றும் பொருட்கள் மீது ஆசை காட்டிதங்களது இன்னொரு உலகிற்கு அவர்களை அழைத்துச் சென்று விடுகிறார்கள். இது போன்ற தாதாக்களின் திரைமறைவு உலகத்துக்கு சென்ற பிறகு முதல் குற்ற செயலில் ஈடுபடும் சிறுவர்களும் பணம் மற்றும் பொருட்களுக்கு ஆசைப்பட்டு அடுத்தடுத்து குற்ற செயல்களில் ஈடுபட தொடங்கி விடுகிறார்கள். இதுவே ரவுடிகள் உருவாவதற்கு முக்கிய மூல காரணமாக அமைந்திருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறும்போது, "கொலை உள்ளிட்ட குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களில் சிறுவர்களும் இருப்பார்கள். ஒரு முறை இப்படித்தான் கொலை சம்பவம் ஒன்றில் 17 வயதே ஆன பாலிடெக்னிக் மாணவன் ஒருவன் பிடிபட்டான்.
அவனிடம் நீ எப்படிடா இந்த ரவுடி கும்பலோடு சேர்ந்தாய்? என்று விசாரித்த போது அவன் கூறிய தகவல் எங்களையே கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள் வாங்கி தருவதாக கூறி என்னை அழைத்து வந்தார்கள். நானும் அவர்களோடு சேர்ந்து கத்தியை தூக்கி விட்டேன் என்று தெரிவித்தான்.
இதுபோன்று சிறுவர்களின் குடும்ப சூழல் அவர்களது பணம் மற்றும் பொருள் தேவைகள் ஆகியவற்றையே ரவுடிகளும் தாதாக்களும் பயன்படுத்தி கொள்கிறார்கள் என்பது மிகவும் வேதனை அளிக்கும் விஷயமாகவே மாறி வருகிறது.
இது போன்ற சிறுவர்களை நல்வழிப்படுத்துவதற்காகவே பாய்ஸ் கிளப் என்கிற காவலர் சிறுவர் மன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. இருப்பினும் சிறுவர்கள் ரவுடிகளாக தாதாக்களாக கூலிப்படை கொலையாளிகளாக மாறுவதை முழுமையாக தடுத்து நிறுத்த முடியவில்லை என்பதே நிதர்சனமான உண்மையாகும்.
முதல் முறையாக கொலை போன்ற குற்றச் செயலில் ஈடுபடும் சிறுவன் முதலில் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு சென்று விட்டு 18 வயதை தாண்டிய பிறகு சிறையில் அடைக்கப்படுகிறான். அங்கு அவனுக்கு ஏற்படும் தாதா மற்றும் ரவுடிகளுடனான தொடர்பும் அடுத்த கட்டத்திற்கு அவனை அழைத்துச் சென்று விடுகிறது. தமிழகம் முழுவதும் 20,000-க்கும் மேற்பட்ட ரவுடிகள் கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில் சென்னையில் 6000-க்கும் மேற்பட்ட ரவுடிகளை போலீசார் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். ரவுடிகள் பட்டியலில் இடம் பெற்றுள்ள ரவுடிகள் எங்கு இருக்கிறார்கள்? அவர்கள் என்ன செய்கிறார்கள்? என்பது பற்றிய முழு தகவல்களையும் அனைத்து காவல் ஆய்வாளர்களும் தங்களது விரல் நுனியில் வைத்திருக்க வேண்டும் என்கிற கட்டளையை உயர் போலீஸ் அதிகாரிகள் பிறப்பித்து உள்ளனர்.
இதன்படி பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்துக்கு பிறகு ரவுடிகள் வேட்டையை போலீசார் தீவிரப்படுத்தி இருக்கிறார்கள். இந்த வேகத்தை தொடர்ச்சியாக மேற்கொள்ளவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர்.
அதே நேரத்தில் ரவுடிகளை முளையிலேயே கிள்ளி எறிவதற்கான நடவடிக்கைகளும் தீவிர படுத்தப்பட்டு உள்ளன. ரவுடிகள் மற்றும் தாதாக்கள் சிறுவர்களை குற்ற செயல்களில் ஈடுபடுத்தி பின்னர் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதை கண்காணிக்க வேண்டும் என்றும் போலீசாருக்கு அதிரடி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் இளம் குற்றவாளிகள் உருவாவதும் புதிய ரவுடிகள் முளைப்பதும் தடுக்கப்படும் என்றும் உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஏ பிளஸ், ஏ, பி, சி என 4 வகையாக ரவுடிகளை போலீசார் பிரித்து கண்காணித்து வருகிறார்கள். சிறிய அடிதடி வழக்குகள் போன்றவற்றில் தொடர்புடைய ரவுடிகள் சி பிரிவு பட்டியலிலும் அதற்கும் மேலான குற்றச் சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் பி வகை ரவுடிகள் பட்டியலிலும் ஏ வகை பட்டியலில் கொலை உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபடும் ரவுடிகளும். உத்தரவு போடும் இடத்தில் இருந்து தாதாக்கள் போல செயல்படுபவர்கள் ஏ பிளஸ் வகையிலும் இடம் பெற்று இருக்கிறார்கள்.
இதற்கிடையே கூலிப்படையினர் ஒரு கொலை சம்பவத்தை அரங்கேற்ற ரூ. 5 லட்சத்துக்கும் குறையாமல் பணம் வாங்குவதாகவும் திடுக்கிட வைக்கும் தகவலையும் தெரிவித்துள்ளனர். கூலிப்படையினர் கொலையை செய்து விட்டு தப்பி விடுவதும்... நாங்கள்தான் கொன்றோம் என்று வேறு கொலையாளிகள் சரண் அடைந்து விடுவதும் தொடர்கதையாக இருந்து வருவதாகவும் பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகம் முழுவதும் ரவுடிகள் வேட்டை தீவிர படுத்தப்பட்டு வரும் நிலையில் புதிது புதிதாக உருவாகும் ரவுடிகளைகளை எடுக்கவும் காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுஉள்ளது.
தமிழக போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால், கூடுதல் டி.ஜி.பி. டேவிட்சன் தேவா சீர்வாதம் ஆகியோரது உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டு உள்ளது. இளம் வயதிலேயே குற்ற செயல்களில் ஈடுபட்டு பின்னர் ரவுடிகளாக தாதாக்களாக சிறுவர்கள் மாறுவதை தடுக்கவே முடியாதா? என்று உயர் போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது.... அவர் அளித்த பதில், "குற்ற செயல்களை கட்டுப்படுத்த தான் முடியும் முற்றிலுமாக இன்றைய காலத்தில் ஒழித்துக் கட்ட முடியாது என்பதே நிதர்சனமான உண்மையாகும்" என்றார்.
திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது இதுதானோ?
- மாரீஸ்வரன் என்பவருக்கும் சுசீலாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.
- கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் உத்தரவு பிறப்பித்தார் .
திருப்பூர் :
திருப்பூர் அடுத்த அருள்புரம் பகுதியைச் சேர்ந்தவர் கோபால் ,பனியன் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி சுசீலா. இவரும் அதே பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் சுசிலா வேலை பார்த்த நிறுவனத்தின் மேலாளராக இருந்த மாரீஸ்வரன் என்பவருக்கும் சுசீலாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இவர்களது கள்ளக்காதல் விவகாரம் கணவன் கோபாலுக்கு தெரிந்ததால் அவரை கொலை செய்ய மனைவி சுசீலாவும் கள்ளக்காதலன் மாரீஸ்வரனும் முடிவு செய்தனர்.
அதன்படி இருவரும் சேர்ந்து கூலிப்படையை ஏவி கோபாலை கொலை செய்தனர். இந்த கொலை தொடர்பாக கோபாலின் மனைவி சுசீலா ,கள்ளக்காதலன் மாரீஸ்வரன் மற்றும் கூலிப்படையை சேர்ந்த மதன் குமார், மணிகண்டன், வினோத், லோகேஸ்வரன், விஜய் ஆகியோரை கைது செய்தனர்.
இந்த நிலையில் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் உத்தரவு பிறப்பித்தார் .அந்த உத்தரவையடுத்து கோவை சிறையில் உள்ள 7 பேருக்கும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ததற்கான ஆணையை வழங்கினர்.






