என் மலர்

    நீங்கள் தேடியது "husband"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது.
    • ஜெயவர்ஷினி அனைத்து இடங்களையும் தேடி பார்த்தார்.

    கள்ளக்குறிச்சி:

    சின்னசேலம் அருகே உள்ள தென் சிறுவள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் (வயது 50) கூலி வேலை செய்து வருகிறார்.இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். அதில் மூத்த மகன் ராஜேஷ் (22) பி.ஏ. பட்டதாரியான இவருக்கு திருக்கோவிலூரை சேர்ந்த ஜெய வர்ஷினி (20) என்ற பெண்ணுடன் திருமணமாகி 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இவர்கள் சின்னசேலம் அருகே உள்ள மூங்கில் பாடி கிராமத்தில் தனியாக வசித்து வருகின்றனர். பின்னர் கணவன் ராஜேஷ் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. இதனை கண்டித்த மனைவி ஜெயவர்ஷினி வேலைக்கு செல்லுமாறு கூறியுள்ளார்.

    இதனால் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி அன்று வீட்டை விட்டு வெளியே சென்ற ராஜேஷ் வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த மனைவி ஜெயவர்ஷினி அனைத்து இடங்களையும் தேடி பார்த்தார். எங்கேயும் கிடைக்காததால் சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குபதிவு செய்து சின்னசேலம் போலீசார் காணாமல் போன ராஜேஷை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கணவனை அரிவாளால் வெட்டிய மனைவியை போலீசார் தேடி வருகின்றனர்.
    • ராமர் தன்னை தாக்கியதாக ராஜலட்சுமி போலீசில் புகார் செய்துள்ளார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மீனாட்சிபுரம் குறிஞ்சிபட்டியை சேர்ந்தவர் ராமர்(வயது43). இவரது மனைவி ராஜலட்சுமி. கடந்த சில மாதங்களாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

    சம்பவத்தன்று வீட்டை சுத்தமாக பராமரிக்கவில்லை என மனைவியை, ராமர் கண்டித்துள்ளார். இதில் 2 பேருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த ராஜலட்சுமி அரிவாளால் ராமரை வெட்டினார்.

    காயமடைந்த அவர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் கிருஷ்ணன் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜலட்சுமியை தேடி வருகின்றனர்.

    இதேபோல் ராமர் தன்னை தாக்கியதாக ராஜலட்சுமி போலீசில் புகார் செய்துள்ளார். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • போலீசுக்கு தெரியாமல் மனைவி உடலை எரித்த கணவர்-உறவினர்கள் மீது வழக்கு பதியப்பட்டது.
    • சக்தீஸ்வரி மன விரக்தியில் இருந்துள்ளார்.

    விருதுநகர்

    சிவகாசி அருகே உள்ள புதுக்கோட்டையை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி சக்தீஸ்வரி (வயது 55). இவர்களின் எதிர்ப்பை மீறி மகன் காதல் திருமணம் செய்து கொண்டு தனியே வசிப்பதாக கூறப்படுகிறது. இதனால் சக்தீஸ்வரி மன விரக்தியில் இருந்துள்ளார்.

    இந்த நிலையில் தங்களுக்கு சொந்தமான வயல்காட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசுக்கு தெரிவிக்காமல் கணவரும், உறவினர்களும் சேர்ந்து அந்தப் பெண்ணின் பிணத்தை எரித்துள்ளனர். ஆனால் மனைவி மாயமாகி விட்டதாக முருகன் கூறி வந்துள்ளார்.

    இதுகுறித்து புதுக்கோட்டை கிராம நிர்வாக அலுவலர் மாரீஸ்வரனுக்கு தெரியவந்தது. இதைத் தொடர்ந்து எம்.புதுப்பட்டி போலீஸ் நிலையத்தில் அவர் புகார் கொடுத்தார். போலீசார் முருகன் மற்றும் உறவினர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சென்னை அழைத்து சென்று தர்காவில் பைத்தியம் பிடித்துவிட்டது என்று கோடங்கி பூஜை செய்தார்.
    • உமா மகேஸ்வரியை கடத்திய கணவன் மற்றும் அவரது கூட்டாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

    புதுக்கோட்டை மாவட்டம் சந்தைப்பேட்டையை சேர்ந்த உமாமகேஸ்வரி என்பவர் மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவரை புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவர் காதலித்து கடந்த 2022 டிசம்பர் 4-ஆம் தேதி திருமணம் செய்தார்.

    திருமணம் முடிந்த பின்னர் மனைவின் நடத்தையில் சந்தேகம் கொண்டு தினமும் அவரை அடித்து துன்புறுத்தியதால், திருமணமான 4 மாதத்தில் உமா மகேஸ்வரி கணவரை பிரிந்து தாயார் தனலெட்சுமியுடன் வசித்து வந்தார்.

    இந்நிலையில் கடந்த மாதம் 20-ஆம் தேதி தாயாருடன் சாலையில் நடந்து சென்ற உமாமகேஸ்வரியை மாரிமுத்து தனது நண்பர்களுடன் வந்து காரில் கடத்திச் சென்றார். இதுகுறித்து, தனலெட்சுமி மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் கடத்தல் வழக்குப்பதிவு செய்து தேடிவந்தனர். உமாமகேஸ்வரி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என அவரது தாய் அளித்த புகாரால் பரபரப்பு ஏற்பட்டிருந்தது.

    இந்நிலையில் மகேஸ்வரி தான் சென்னையில் உள்ளதாக தாயாருக்கு தகவல் அளித்ததன் பேரில் மயிலாடுதுறை போலீசார் உமாமகேஸ்வரியை மீட்டு மயிலாடுதுறை காவல்நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.

    இந்நிலையில், போலீசாரிடம் உமாமகேஸ்வரி அளித்துள்ள வாக்குமூலத்தில், தன்னை காரில் கடத்திய கணவன் மாரிமுத்து, மயக்க மருந்து கொடுத்து மயக்கமடைய செய்தார். தொடர்ந்து ராமநாதபுரம் அழைத்து சென்று தனக்கு செய்வினை வைத்துவிட்டதாக அங்கு தர்கா ஒன்றில் மாந்திரீகம் செய்தார். பின்னர் சென்னை அழைத்து சென்று தர்காவில் பைத்தியம் பிடித்துவிட்டது என்று கோடங்கி பூஜை செய்தார். அவருடன் வாழ மறுத்ததால் சென்னையில் நடுரோட்டில் விட்டு விட்டு சென்றுவிட்டார் தெரிவித்துள்ளார்.

    கணவன் தன்னை வலுக்கட்டாயமாக கடத்தி சென்றதாக உமாமகேஸ்வரி கூறியதால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தாயாருடன் அனுப்பி வைக்கப்படுவார் என்று போலீசார் தெரிவித்தனர். இன்று மயிலாடுதுறை நீதிமன்றத்தில் அவர் ஆஜர் படுத்தப்படுகிறார். உமா மகேஸ்வரியை கடத்திய கணவன் மற்றும் அவரது கூட்டாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ரமேசின் மகன்களான கவுதம், ஹரிஸ் இருவரும் தவித்து வந்த நிலையில் தலைமறைவான ரமேஷை போலீசார் தேடி வந்தனர்.
    • காவி உடை அணிந்து சாமியாராக மாறியது ஓட்டேரி போலீசுக்கு தற்போது தெரியவந்தது.

    சென்னை:

    சென்னை ஓட்டேரி ஏகாங்கிபுரத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவர் தனது மனைவி வாணியை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்தார். இது தொடர்பாக ஓட்டேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    காதல் திருமணம் செய்து கொண்டு 16 ஆண்டுகளாக குடும்பம் நடத்தி வந்த ரமேஷ் மனைவியுடன் ஏற்பட்ட மோதலால் தலையில் கல்லை தூக்கி போட்டு அவரை கொலை செய்து விட்டு தப்பிச் சென்றார். இதனால் ரமேசின் மகன்களான கவுதம், ஹரிஸ் இருவரும் தவித்து வந்த நிலையில் தலைமறைவான ரமேஷை போலீசார் தேடி வந்தனர்.

    போலீசார் தீவிரமாக தேடியும் ரமேஷ் சிக்காமல் ஊர் ஊராக சென்று பதுங்கினார். இதன் பின்னர் செல்போன் பயன்படுத்துவதை தவிர்த்துவிட்டு தாடி வளர்க்க தொடங்கினார். பின்னர் காவி உடை அணிந்து சாமியாராக மாறியது ஓட்டேரி போலீசுக்கு தற்போது தெரியவந்தது.

    இதையடுத்து கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் ரமேஷை பிடிக்க அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இணை கமிஷனர் ரம்யா பாரதி, துணை கமிஷனர் ஈஸ்வரன், உதவி கமிஷனர் அழகேசன் ஆகியோரது மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ஜானி செல்லப்பா தலைமையிலான போலீசார் சாமியாராக மாறிய ரமேஷை பிடிக்க களத்தில் இறங்கினர்.

    திருவண்ணாமலை, வடலூர், சதுரகிரி உள்பட சாமியார்கள் அதிகமாக தங்கி இருக்கும் இடங்களுக்கு சென்று ரமேஷ் காவி உடையில் அடையாளம் மாறிப்போய் யாசகம் கேட்டு அந்த பணத்தை வைத்து சாப்பிட்டு வந்தது தெரிய வந்தது.

    இந்நிலையில் ரமேஷ், தனது நண்பரான இன்னொரு சாமியாரின் செல்போன் எண்ணில் இருந்து நண்பரின் செல்போனுக்கு 'கூகுள் பே' மூலமாக பணம் அனுப்பியது தெரிய வந்தது. இந்த பணத்தை தனது மகன்களிடம் கொடுத்து விடுமாறு நண்பரிடம் போன் செய்து ரமேஷ் கூறியதும் கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து சாமியாரின் செல்போன் எண்ணை போலீசார் கண்காணித்தனர்.

    இந்நிலையில் ரமேஷ் சாமியார் வேடத்தில் சென்னைக்கு வந்திருப்பதும், சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து டெல்லியில் உள்ள ஆசிரமத்துக்கு செல்ல இருப்பதும் தெரிய வந்தது. இதை தொடர்ந்து சென்ட்ரல் ரெயில் நிலையம் அருகே போலீசார் கண்காணித்தனர். அப்போது இன்று அதி காலையில் சென்ட்ரல் ரெயில் நிலைய பகுதிக்கு வந்த ரமேஷை இன்ஸ்பெக் டர் ஜானி செல்லப்பா தலைமையிலான போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். இதையடுத்து தனிப்படை போலீசாரை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அன்பாக கவனித்து வந்த மனைவி இறந்ததால் அவரது பிரிவை சுப்பிரமணியனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
    • நாள் முழுவதும் தன் வாழ்வில் என்னென்ன நடந்தது என்பதை கல்லறை முன்பு கூறுவார்.

    கோவை:

    கணவன்-மனைவி அன்பு என்பது ஆத்மார்த்தமானது. அன்பான மனைவிக்கு கணவனிடம் உள்ள அன்பு போற்றத்தக்கது. ஏதோ ஒரு காரணத்தால் தங்கள் துணை இறந்த பிறகு அவர்களை மறக்க முடியாமல் தவிக்கும் கணவன், மனைவியை இன்றும் பார்க்கிறோம்.

    அதேபோல் இறந்த தன் மனைவியை மறக்க முடியாமல் அவரது கல்லறைக்கு தினமும் சென்று வழிபட்டு வருகிறார் கோவையைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி. கோவை ரத்தினபுரியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 55). இவரது மனைவி சரோஜினி. இவர் கணவர் சுப்பிரமணியன் மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்தார். இதனால் இவர்களது இல்லற வாழ்வு மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்தது.

    இந்நிலையில் சரோஜினி உடல் நலக்குறைவால் திடீரென மரணம் அடைந்தார். தினமும் அன்பாக கவனித்து வந்த மனைவி இறந்ததால் அவரது பிரிவை சுப்பிரமணியனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மனைவியின் உடல் அடக்கம் செய்யப்பட்ட மறுநாள் முதல் அவரது கல்லறைக்கு சுப்பிரமணியன் செல்லத் தொடங்கினார். தினமும் வேலைக்கு செல்வதற்கு முன்பாக காலையில் சரோஜினியின் கல்லறைக்கு செல்வதை வழக்கமாக கொண்டார். அங்கு கல்லறை முன்பு விளக்கேற்றி வழிபட்டு விட்டு வேலைக்கு செல்வார்.

    பின்னர் மாலையிலும் கல்லறைக்கு சென்று வணங்குவார். அப்போது அன்று நாள் முழுவதும் தன் வாழ்வில் என்னென்ன நடந்தது என்பதை கல்லறை முன்பு கூறுவார். சரோஜினி இறந்தாலும் தன்னுடனேயே வாழ்வதாக எண்ணி இவ்வாறு அவர் பேசி வருகிறார்.

    தனது மனைவி மீது சுப்பிரமணியன் கொண்டுள்ள அன்பை அந்த பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி வருகிறார்கள். இதுபற்றி சுப்பிரமணியன் கூறுகையில் என் மனைவி சரோஜினி, அதிக பாசத்துடன் என்னை கவனித்து வருகிறார். அவரது இழப்பை என்னால் தாங்க முடியவில்லை. ஷாஜகான் தனது மனைவிக்காக தாஜ்மகால் கட்டியது போல் எனது மனைவிக்காக நானும் எதாவது ஒன்று செய்ய வேண்டும் என்பது லட்சியமாக உள்ளது. விரைவில் அதனை செய்து முடிப்பேன் என்றார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கணவர் மூர்த்தியின் பிணம் வனப்பகுதியில் உடம்பில் குண்டு காயங்களுடன் கிடப்பதாக தகவல் கிடைத்தது.
    • எனது கணவரை சுட்டு கொன்ற கும்பலை சேர்ந்தவர் அடிக்கடி தடை செய்யப்பட்ட வனவிலங்குகளை, குறிப்பாக காட்டுப்பன்றிகளை வேட்டை ஆடுவார்.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காடு அருகே காக்கம் பாடி மலை கிரா மத்தை சேர்ந்த மெய்யன் மகன் மூர்த்தி (வயது 38). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இவர் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்தார்.

    இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம், மூர்த்தி ஆடு களுக்கு இலை வெட்டுவதற்காக வனப்பகுதிக்கு சென்றார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. மேலும் மூர்த்திக்கு அடிக்கடி வலிப்பு வருவது வழக்கம். இதனால் அவர் எங்கு சென்றார்? என்ன ஆனார்? என்று அவரது வீட்டினர் தேடி வந்தனர்.

    இதனிடையே அவரது கிராமத்திற்கு அருகில் உள்ள சமுத்திரகாடு என்னும் வனப்பகுதியில் மூர்த்தி இறந்து கிடந்தார். இதுகுறித்த தகவலின் பேரில் அங்கு சென்ற ஏற்காடு போலீசார் மூர்த்தி உடலை கைப்பற்றி, சேலம் அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

    இதனிடையே சம்பவம் நடந்து 2 மாதங்களுக்கு பின்னர் மூர்த்தி கொலை செய்யப்பட்டதாகவும், அவரை 8 பேர் கொண்ட கும்பல் சுட்டு கொன்றுவிட்டதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதனால் ஏற்காடு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்நிலையில் மூர்த்தியின் மனைவி மணிமேகலை சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமாரிடம் ஒரு மனு கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    எங்கள் வீட்டில் 10 ஆடுகள் வளர்த்து வருகிறோம். என் கணவர் தினமும் காட்டிற்கு சென்று ஆடுகளுக்கு இலை தழைகளை வெட்டி எடுத்து வருவார். கடந்த 18-4-2023 அன்று வழக்கம் போல என்னுடைய கணவர் மற்றும் வேலு என்பவர் மேய்ச்சலுக்கு சென்றனர். ஆனால் அதன் பின்னர் என் கணவர் மூர்த்தி வீடு திரும்பவில்லை.

    இதை அடுத்து 19-4-2023 அன்று காலை முதல், என்னுடைய உறவினர்களுடன் சேர்ந்த என் கணவரை தேடினேன். அப்போது, கணவர் மூர்த்தியின் பிணம் வனப்பகுதியில் உடம்பில் குண்டு காயங்களுடன் கிடப்பதாக தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு சென்று, தலையிலும் விலாவிலும் குண்டு அடிபட்ட என் கணவரின் உடலை பார்த்தோம்.

    பின்னர் இதுபற்றி ஏற்காடு போலீஸ் நிலையத்தில் கூறினேன். அங்கு இருந்த போலீஸ் அதிகாரி உண்மைக்கு புறம்பான எதை எதையோ எழுதிக் கொண்டு என்னிடமும், வேலு மற்றும் வேறு சில சாட்சியிடமும் கையொப்பம் வாங்கிக் கொண்டனர்.

    இது மட்டுமன்றி வேறு சில வெற்று காகிதங்களில் என்னுடைய கையெழுத்தை வாங்கிக்கொண்டு பின்னர் தேவைப்படும் என்று சொன்னார். அந்த நேரத்தில், என் கணவரை சுட்டு கொன்ற கள்ளத் துப்பாக்கி வைத்திருக்கும் கும்பல் தங்கள் ஆதரவாளர்களுடன் வந்தனர்.

    உடனே என்னை போலீஸ் அதிகாரி சரிமா நீ வீட்டுக்கு போ, நான் பார்த்துக் கொள்கிறேன், உன் கணவர் மூர்த்தியின் கொலைக்கு காரணமானவர்களுக்கு நான் உரிய தண்டனை வாங்கி தருகிறேன் என்று கூறி எங்களை போலீஸ் நிலையத்திலிருந்து விரைவாக அனுப்பிவிட்டார்.

    தற்போது என் கணவர் மரத்தில் ஏறி இலைகளை பறித்தபோது வலிப்பு வந்ததால், தவறி கீழே விழுந்து இறந்துவிட்டதாக பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டது தெரிய வந்தது. மேலும் எனது கணவரை சுட்டு கொன்ற கும்பலை சேர்ந்தவர் அடிக்கடி தடை செய்யப்பட்ட வனவிலங்குகளை, குறிப்பாக காட்டுப்பன்றிகளை வேட்டை ஆடுவார்.

    அவர் உள்பட 8 பேரும் வனப்பகுதியில் வேட்டையாடும் போது, அதன் அருகில் புறம்போக்கு நிலத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த எனது கணவர், இதனை வன அதிகாரிகள், போலீசாரிடம் சொல்லி விடுவார் என்பதால் அவரை தடை செய்யப்பட்ட நாட்டு துப்பாக்கியால் சுட்டுக்கொன்று விட்டனர்.

    பின்னர் அதிகாரிகளின் துணையோடு, எங்கள் பழங்குடியினர் வழக்கத்திற்கு மாறாக குண்டு அடிபட்ட அவர் சடலத்தை எரித்து தடயங்களை அழித்துவிட்டனர். மேலும் போலீசார் உள்ளிட்ட அதி காரிகள் ரூ. 8 லட்சம் லஞசம் வாங்கி கொண்டு சாட்சிகளை மறைத்துவிட்டனர்.

    எனவே உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து சி.பி.சி.ஐடி போலீஸ் மூலமாக மறு விசாரணை செய்து 8 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்து மேல் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    மேலும் எனக்கும் எனது குடும்ப உறுப்பினர்களுக்கும் உயிர் ஆபத்து இருப்பதால், எங்களுக்கு பாதுகாப்பு அளிக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மோகனுக்கு ஜாமீன் கிடைத்தது. அவர் செங்கல்பட்டு சிறையில் இருந்து வெளியே வந்தார்.
    • போலீசார் ஜெயில் வாசல் முன்பே வேறொரு திருட்டு வழக்கில் மோகனை கைது செய்ய முயன்றனர்.

    செங்கல்பட்டு:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சங்கராபுரத்தை சேர்ந்தவர் மோகன் (32). வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி ஆவார். இவருக்கு மனைவியும், ஒரு மகனும் உள்ளனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்போரூர் அடுத்த ஏகாட்டூர் பகுதியில் உள்ள தனியார் பெண்கள் மற்றும் ஆண்கள் தங்கும் விடுதிகளில் லேப்-டாப் மற்றும் செல்போன்கள் திருடு போனது.

    இந்த வழக்கு தொடர்பாக கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏகாட்டூர் பகுதியில் இரவு நேரத்தில் சுற்றி திரிந்த மோகனை கைது செய்து செங்கல்பட்டு கிளை சிறையில் அடைத்தனர்.

    இதற்கிடையே மோகனுக்கு ஜாமீன் கிடைத்தது. அவர் செங்கல்பட்டு சிறையில் இருந்து வெளியே வந்தார். அவரை சொந்த ஊருக்கு அழைத்து செல்வதற்காக அவரது மனைவி, மகனுடன் வந்து இருந்தார். அவர்களுடன் வக்கீலும் இருந்தார்.

    ஜெயிலில் இருந்து மோகன் வெளிய வந்ததும் அவரை பாசத்துடன் மனைவி கட்டி அணைத்து வரவேற்றார். ஆனால் இந்த மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை.

    அப்போது அங்கு சாதாரண உடையில் இருந்த கேளம்பாக்கம் போலீசார் ஜெயில் வாசல் முன்பே வேறொரு திருட்டு வழக்கில் மோகனை கைது செய்ய முயன்றனர். அவர்கள் மோகனை வலுக்கட்டாயமாக அவர்களது வாகனத்தில் ஏற்ற இழுத்து சென்றனர். இதனை கண்ட மோகனின் மனைவி அதிர்ச்சி அடைந்தார். அவர் கணவரை கைது செய்ய எதிர்ப்பு தெரிவித்து போலீசாரிடம் கடும் வாக்குவாதம் செய்தார். மேலும் அவரது வக்கீலும் பிடிவாரண்டு இல்லாமல் எப்படி கைது செய்யமுடியும்? பிடிவாரண்டை காட்டிவிட்டு மோகனை அழைத்து செல்லுங்கள் என்றார்.

    எனினும் இதனை போலீசார் கண்டு கொள்ளாமல் மோகனை தங்களது வாகனத்தில் ஏற்றி செல்வதில் மும்முரமாக இருந்தனர். ஒரு கட்டத்திற்கு மேல் கணவரை காப்பாற்ற என்ன செய்வது என்று தெரியாமல் மோகனின் மனைவி தவித்தார்.

    திடீரென அவர் தனது கணவர் மோகனை கட்டி அணைத்தபடி கதறி அழுதார். மேலும் தனது மகனையும் ஒரு கையில் வைத்தபடி போலீசாரிடம் கெஞ்சினார். இதனால் ஜெயில் வாசல் முன்பு பரபரப்பு ஏற்பட்டது. கணவரை காப்பாற்ற வேண்டும் என்ற மனைவியின் பாசப்போட்டம் அங்கிருந்தவர்களின் மனதை கனக்க செய்தது.

    இந்நிலையில் என்ன செய்வது என்று தெரியாமல் போலீசார் தவித்து நேரத்தில் கணவர் மோகனை அழைத்துக்கொண்டு அவரது மனைவி மகனுடன் வேறொரு காரில் அங்கிருந்து சென்றுவிட்டார். இதனால் மோகனை கைது செய்ய வந்த போலீசார் ஏமாற்றம் அடைந்தனர்.

    இதுகுறித்து போலீசார் கூறும்போது, ஏகாட்டூர் பகுதியில் உள்ள விடுதிகளில் 100-க்கும் மேற்பட்ட லேப்டாப் மற்றும் செல்போன்கள் திருடு போனதாக புகார்கள் வந்து உள்ளன. இதுபற்றி மோகனிடம் விசாரிக்க முடிவு செய்து வந்தோம் என்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கணவர் உள்பட 3 பேர் மீது வழக்கு பதியப்பட்டது.
    • வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் அருகே ஓ.கோவில்பட்டியை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி சாமுண் டீஸ்வரி. இவர்கள் 5 வருடங்களாக காதலித்து வந்தனர்.

    திருமண ஆசை காட்டி பலமுறை சாமுண் டீஸ்வரியை, நாகராஜ் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதன் பின்னர் நாகராஜூக்கு ராணுவத்தில் வேலை கிடைத்தது. அப்போது சாமுண்டீஸ்வரி திருமணம் செய்து கொள்ளுமாறு நாக ராஜிடம் கேட்டார். ஆனால் நாகராஜ் அதற்கு மறுத்துவிட்டார்.

    இதைத்தொடர்ந்து கடந்த 2022-ம் ஆண்டு விருதுநகர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சாமுண்டீஸ் வரி புகார் செய்தார். போலீசாரின் அறிவுறுத் தலை தொடர்ந்து சாமுண்டீஸ்வரியை நாகராஜ் திருமணம் செய்து கொண்டார். 25 நாட்கள் குடித்தனம் நடத்தி வந்த நிலையில் பெற்றோர் வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டு நாகராஜ் வேலைக்கு சென்றார்.

    பின்னர் திரும்பி வந்தபோது, நாகராஜ் வீட்டாருக்கும், சாமுண் டீஸ்வரிக்கும் பிரச்சினை ஏற்பட்டது. அப்போது ரூ. 2 லட்சம் ரொக்கம் மற்றும் 50 பவுன் நகைகள் கொண்டு வந்தால் மட்டுமே நாகராஜூ டன் சேர்ந்து வாழ அனுமதிப்பதாக நாகராஜின் தாய் வரதம்மாள், உறவினர் வீரம்மாள் ஆகியோர் கூறியுள்ளனர்.

    மேலும் நாகராஜூம், தாயுடன் சேர்ந்து கொண்டு வரதட்சணை கொண்டு வருமாறு வற்புறுத்தி யுள்ளார். இதையடுத்து மீண்டும் விருதுநகர் அனைத்து மகளிர் போலீஸ் நிலை யத்தில் சாமுண்டீஸ்வரி புகார் செய்தார். போலீசார் நாகராஜ், அவரது தாய் வரதம்மாள், வீரம்மாள் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பணகுடி அருகே கணவரால் தீ வைக்கப்பட்ட இளம்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
    பணகுடி:

     நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள நெருஞ்சி காலனியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி பவளஜோதி (வயது 30). கணவன்-மனைவிக்கிடையே குடும்பத்தகராறு காரணமாக அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது.

    கடந்த 4-ந்தேதி அவர்க–ளுக்கிடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றவே ஆத்திரமடைந்த சுரேஷ் மண்எண்ணையை எடுத்து பவளஜோதி மீது ஊற்றி தீ வைத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதில் உடல் முழுவதும் தீப்பிடித்து அலறித்துடித்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இதைத்தொடர்ந்து பணகுடி போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து சுரேசை கைது செய்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பவளஜோதி பரிதாபமாக உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து இந்த வழக்கை  கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • Whatsapp