search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மனைவி"

    • பல்சர், கே.டி.எம். வகை பைக்குகளை திருடி விற்று வந்துள்ளார்.
    • அசோக் கூறிய தகவல்கள் போலிசாரை ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியது.

    பெங்களூரில் பழ வியாபாரம் செய்து வந்தவர் அசோக். நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் அவர் பல்சர், கே.டி.எம். வகை பைக்குகளை திருடி விற்று வந்துள்ளார்.

    இதனால் அடிக்கடி கைதாகி சிறைக்கு செல்வதை அசோக் வழக்கமாக வைத்திருந்தார். இதனால் அசோக்கின் மனைவி அவரை விட்டு புரிந்துள்ளார்.

    சமீபத்தில் பெங்களூரு கிரி நகரில் ஒரு ஐடி ஊழியரின் பைக் ஒன்றை அசோக்கும் அவரது கூட்டாளி சதீசும் சேர்ந்து திருடியுள்ளனர்.

    இந்த வழக்கின் அசோக் மற்றும் சதீஷை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அந்த வழக்கின் விசாரணையில் அசோக் கூறிய தகவல்கள் போலிசாரை ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியது.

    "என் நண்பரின் மனைவி மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். பைக்கை திருடி விற்ற பணத்தை முழுவதும் அவரின் சிகிச்சைக்காக கொடுத்துவிட்டேன். என் மனைவி என்னை விட்டு பிரிந்து சென்ற போது அந்த நண்பர் தான் எனக்கு ஆதரவு கொடுத்தார். அதற்கு நன்றிக்கடன் செலுத்தும் விதமாக இந்த உதவியை செய்ததாக" அசோக் தெரிவித்துள்ளார்.

    • அடிக்கடி தனது நண்பர்களை வீட்டுக்கு அழைத்து கணவர் பார்ட்டி கொடுப்பார்
    • 5 வருட திருமண வாழ்க்கையில் பலமுறை இதுபோன்று நடந்துவந்துள்ளது.

    மும்பையில் வசிக்கும் 35 வயது திருமணமான பெண் ஒருவர் தனது கணவர் அவரது நண்பர்களின் முன் தன்னை  ஆடைகளை அவிழ்க்க கட்டயப்படுத்தியதாக புகார் அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் திரைப்பட VFX கலைஞராக பணியாற்றுவரும் அந்த பெண்  சர்வதேச ஏர்லைன் பைலட்டாக பணியாற்றிவரும் தனது கணவருடன் தனியாக வசித்து வருகிறார்.

    அடிக்கடி தனது  நண்பர்களை வீட்டுக்கு அழைத்து பார்ட்டி கொடுக்கும் கணவர் TRUTH OR DARE விளையாடி, தனது மனைவியை அவர்களின் முன் ஆடைகளை அவிழ்க்கும்படி நிர்பந்தம் செய்து வந்துள்ளார். அதற்கு மனைவி மறுத்ததால் அவரை பல்வேறு சமயங்களில் அடித்து துன்புறுத்தியுள்ளார்.

    இதனால் இருவருக்கும் இடையில் சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு வந்துள்ளன. தங்களின் 5 வருடதிருமண வாழ்க்கையில் பலமுறை கணவர் இடகுபோன்று தன்னை  நண்பர்கள்  முன்னிலையிலும் தனியாக இருக்கும்போதும் அடித்து துன்புறுத்தினார் என்று அப்பெண் போலீசில் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக  எப்ஐஆர் பதிந்து போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

    • தனது பாஸ்போர்ட்டில் உள்ள 12 பக்கங்களைக் கிழித்து மோசடியில் ஈடுபட்டனர்.
    • தாய்லாந்துக்கு பயணம் மேற்கொள்ள இருந்த துஷார் பவார் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்

    ஜூலை 11 அன்று மும்பை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தாய்லாந்துக்கு பயணம் மேற்கொள்ள இருந்த துஷார் பவார் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

    33 வயதான துஷார் பவார், தனது பாஸ்போர்ட்டில் உள்ள 12 பக்கங்களைக் கிழித்து மோசடியில் ஈடுபட்டதாகவும், அதில் அவர் தாய்லாந்து, பேங்காங் உள்ளிட்ட நாடுகளுக்கும் பயணம் செய்த விவரங்கள் உள்ளது என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    2023 - 2024 ஆம் ஆண்டுகளில் 3 முறை தாய்லாந்து சென்றதாகவும் அந்த விஷயம் தனது மனைவிக்கு தெரிந்தால் பிரச்சனையாகும் என்று பாஸ்போர்ட்டின் சில பக்கங்களை கிழித்ததாக அவர் ஒப்பு கொண்டுள்ளார்.

    பாஸ்போர்ட்டில் மோசடி செய்ததாக கைது செய்யப்பட்ட துஷார் தற்போது நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.

    • கணவர் கருப்பாக இருப்பதால் மனைவி அடிக்கடி அவருடன் சண்டையிட்டுள்ளார்.
    • நிறத்தைக் காரணம் காட்டி கணவனை மனைவி பிரிந்து சென்றார்.

    போபால்:

    மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் நகரை சேர்ந்தவர் விஷால். இவருக்கு கடந்த வருடம் திருமணம் நடந்தது. விஷால் சுற்றே கருப்பாக இருப்பதால் திருமணமானது முதல் மனைவி அவரை கிண்டல் செய்து வந்ததுடன், நிறத்தைக் காரணம் காட்டி கணவருடன் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார்.

    இதற்கிடையே, விஷால் மனைவிக்கு கடந்த சில வாரங்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்தது. குழந்தையை கணவன் வீட்டில் வைத்துவிட்டு அந்தப் பெண் தாய்வீட்டிற்குச் சென்றுவிட்டார்.

    மனைவியை அழைத்துவர அவரது வீட்டிற்கு விஷால் சென்றபோது, கருப்பு நிறத்தை காரணம் காட்டி கணவருடன் திரும்ப மறுத்தார்.

    இதனால் விஷால், தனது தாயுடன் சென்று மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதில், தான் கருப்பு நிறமாக இருப்பதால் மனைவி தன்னை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக வரும் சனிக்கிழமை இருவரையும் அழைத்து போலீசார் கவுன்சிலிங் கொடுக்க திட்டமிட்டுள்ளனர்.

    திருமணமாகி ஒரு குழந்தை உள்ள நிலையில், கருப்பு நிறத்தைக் காரணம் காட்டி கணவனை மனைவி பிரிந்துசென்றது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    • சட்டப்பிரிவு 125 இன் கீழ் விவாகரத்து செய்யப்பட்ட மனைவிக்கு கணவன் ஜீவனாம்சம் வழங்கியாக வேண்டும்.
    • தச்சார்பற்ற சட்டத்தை, முஸ்லீம் பெண்கள்(விவாகரத்து மீதான உரிமைகள் பாதுகாப்பு) சட்டம் [1986] விஞ்ச முடியாது.

    விவாகரத்தான இஸ்லாமிய பெண்களும் கணவனிடம் ஜீவனாம்சம் பெறுவதற்கு முழு உரிமை உள்ளது என்று உச்சநீதிமன்றம்  தீர்ப்பு வழங்கியுள்ளது. சமீபத்தில் தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் ஒன்றில், விவாகரத்து செய்யப்பட்ட மனைவிக்கு கணவன் ஜீவனாம்சம்வழங்க உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கணவர் மனுத்தாக்கல் செய்தார்.

    அந்த மனுவை தற்போது தள்ளுபடி செய்துள்ள உச்சநீதிமன்றம், சட்டப்பிரிவு 125 இன் கீழ் விவாகரத்து செய்யப்பட்ட மனைவிக்கு கணவன் ஜீவனாம்சம் வழங்கியாக வேண்டும். எந்த மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் திருமணமான அனைத்து பெண்களுக்கும் அது பொருந்தும். மதச்சார்பற்ற சட்டத்தை, முஸ்லீம் பெண்கள்(விவாகரத்து மீதான உரிமைகள் பாதுகாப்பு) சட்டம் 1986 விஞ்ச முடியாது.

    ஜீவநாமசம் என்பது பெண்களின் உரிமை. மனைவி உணர்வு ரீதியாகவும் பிற வகையிலும் தங்களை சார்ந்து இருதப்பதை சில கணவர்கள் புரிந்துகொள்வதில்லை. இந்திய குடும்பங்களில் இல்லத்தரசிகளின் பங்கையும், தியாகத்தையும் அங்கீகரிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    • மொத்த மருத்துவமனையிலும் ஒரே ஒரு மருத்துவரே உள்ளார் என்று அங்குள்ளவர்கள் குற்றமசாட்டுகின்றனர்.
    • கூட்டநெரிசலில் திடீரென ஒருவர் பின் ஒருவராக மயங்கிவிழுந்தனர்.

    உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் போலே பாபா என்ற சாமியார் நடத்திய இந்து மத ஆன்மிக சொற்பொழிவு நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 122 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் ஆவர். இந்த விபத்து நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரின் அலறல் அந்த பகுதியையே ஆட்கொண்டுள்ளது.

    விபத்தில் சிக்கிய தனி நபர்களின் கதைகள் மனதை ரணமாக்குவதாக உள்ளன. டிரக்கில் கிடத்தப்பட்ட 6 சடலங்களுக்கு மத்தியில் அமர்ந்து அழுதுகொண்டிருக்கும் பெண் ஒருவர் அங்கு உள்ள தனது குழந்தையின் உடலை வெளியே எடுக்க உதவி கேட்டு அழுகிறார். படுகாயமடைந்த பலர் மருத்துவமனை நுழைவிடத்தில் கிடத்தப்பட்டு சிகிச்சைக்காக காத்திருக்கின்றனர். மொத்த மருத்துவமனையிலும் ஒரே ஒரு மருத்துவரே உள்ளார் என்று அங்குள்ளவர்கள் குற்றமசாட்டுகின்றனர்.

    அவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஆக்சிஜன் சிலிண்டர் உள்ளிட்ட போதுமான வசதிகள் அங்கு இல்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. படுகாயமடைந்தவர்கள்  ஓருவர் மீது ஒருவர் உயிரிழந்த உடல்களைப் போல் கிடக்கும் காட்சிகள் காண்போரை கலங்கடிக்கிறது. உயிரிழந்தவர்களுக்கு  மத்திய மாநில அரசுகள் உடனடியாக நிவாரணம் அறிவித்திருக்கும் நிலையில் முதலில், படுகாயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக உள்ளது.

    கூட்ட நெரிசலில் உயிர்பிழைத்தவர்கள் சொல்லும் விவரங்கள் மேலும் அதிர்ச்சியூட்டுகின்றன. நிகழ்ச்சி முடிந்ததும் போலே பாபா அமர்ந்திருந்த இடத்தின் காலடி மண்ணை எடுக்க பலர் காத்திருந்தனர். நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தபோதே திடீரென ஒருவர் பின் ஒருவராக மயங்கிவிழுந்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் தனது தாய், மனைவி, 16 வயது மகள் ஆகிய மூவரையும் இழந்த வினோத் என்பவர் கூறுகையில், 'நான் அனைத்தையும் இழந்து நிற்கிறேன். அவர்கள் வெளியே ஒன்றாக வெளியே சென்றனர் என்பது மட்டுமே எனக்கு தெரியும், ஆனால் இங்கே வந்தது தெரியாது. இந்த விபத்தை கேள்விப்பட்டு அவர்கள் இங்கே வந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் வந்து தேடியபோது எனது மனைவி மகள் உடல்களை கண்டெடுத்தேன். எனது தாயின் உடல் கிடைக்கவே இல்லை' என்று தெரிவித்துள்ளார்.

    மகளைத் தொலைத்த தாய் ஒருவர் கூறுகையில், எனது மகளால் பேச முடியாது அழ மட்டுமே முடியும் அவளை எங்கு தேடியும் இந்த இடத்தில்  கண்டுபிடிக்கமுடியவில்லை என்று தேடியபடி செய்தியாளர்களிடம் தெரிவிக்கிறார்.

    குழந்தைகளை இழந்த தாய்மார்கள், தாய்மார்களை இழந்த குழந்தைகள் என பலர் இந்த சம்பவத்தில் பெரிய இழப்புகளை சந்தித்துள்ளனர். பல வருடங்களாக போலே பாபாவின் சத்சங்கத்தை கேட்க வந்துகொண்டிருந்தவர்களே இந்த கூட்டத்தில் அதிகம். இதற்கிடையில் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து போலே பாபா தலைமறைவாகியுள்ளார் என்று போலீசார் தெரிவிக்கின்றனர். 

    • கணவர்களை வீட்டில் உங்கள் கண்முன்னே மது அருந்த சொல்லுங்கள்.
    • என்னுடைய இந்த யோசனை நடைமுறை சாத்தியமானது

    மத்தியபிரதேச சமூகநீதி அமைச்சர் நாராயண் சிங் குஷ்வா போபாலில் நடந்த போதை ஒழிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

    அப்போது பேசிய அவர், உங்கள் கணவர்களும் மகன்களும் மது குடிப்பதை நிறுத்த வேண்டும் என்று நீங்கள் ஆசைப்பட்டால், அவர்களை வெளியே மது அருந்தவிடாமல் வீட்டில் உங்கள் கண்முன்னே மது அருந்த சொல்லுங்கள். அம்மா, மனைவி, பிள்ளைகள் முன்பு அவர்கள் மது அருந்தினால் அவர்களாகவே வெட்கப்பட்டு மது குடிப்பதை படிப்படியாக குறைத்து விடுவார்கள்.

    மேலும், உங்களை பார்த்து நமது பிள்ளைகளும் எதிர்காலத்தில் மது அருந்த ஆரம்பிப்பார்கள் என்று உங்கள் கணவர்களிடம் சொல்லுங்கள். பின்னர் அவர்கள் தானாகவே மது அருந்துவதை நிறுத்தி விடுவார்கள். என்னுடைய இந்த யோசனை நடைமுறை சாத்தியமானது" என்று அவர் தெரிவித்தார்.

    • ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்து அதிக லாபம் சமாதிக்கலாம் என்று ஆசை வார்த்தை காட்டி பலரை ஏமாற்றி பணம் பறித்து கடைசியில் தப்பிச் சென்றுள்ளனர்.
    • இந்த மோசடிவேலையில் தந்தையும் உடந்தை என்று தெரியவந்துள்ளது.

    உத்தரப் பிரதேசத்தில் கணவனும் மனைவியும் கூட்டாக சேர்ந்து மாணவர்கள், வியாபாரிகள், வக்கீல்கள், இல்லத்தரசிகள் என வகைதொகை இல்லாமல் பலரை ஏமாற்றி ரூ.400 கோடி வரை திருடியுள்ளது அம்பலமாகியுள்ளது.

    நிகாரிகா வென்டியூர்ஸ் என்ற போலி நிறுவனத்தை நடத்தி வந்த அபிஷேக் திவேதி அவரது மனைவி நிஹாரிகா ஆகியோர் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்து அதிக லாபம் சமாதிக்கலாம் என்று ஆசை வார்த்தை காட்டி பலரை ஏமாற்றி பணம் பறித்து கடைசியில் தப்பிச் சென்றுள்ளனர். பாதிக்கட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

     

    இந்த மோசடி வேலையில் அபிஷேக்கின் தந்தை ஓம் பிரகாஷும் உடந்தை என்று தெரியவந்துள்ளது. இவர்கள் மூவர் மீதும் போலீசார் FIR பதிந்துள்ளனர். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் தொடங்கப்பட்ட நிகாரிகா நிறுவனம் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டலாம் என்று நண்பர்கள் உறவினர்கள் என சுமார் 200 பேர் வரை ஏமாற்றியுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர். 

    • தடுக்க வந்த பெண்ணின் சகோதரரையும் கணவர் வீட்டார் தாக்கியுள்ளனர்.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து பெண்ணை அவரது தாயின் வீட்டாரிடம் ஒப்படைத்தனர்.

    உத்தரப் பிதேச மாநிலம் எட்டா மாவட்டத்தில் உள்ள ஜெய்த்ரா என்கிற பகுதியில் தாயும், உடன் பிறந்த சகோதரியும் மனைவியை தரையில் தள்ளி அடித்து உதைத்து கொடுமைப்படுத்துவதை தடுக்காமல் செல்போனில் வீடியோ எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    அந்த வீடியோ காட்சியில், பெண்ணை தரையில் தள்ளிய கணவரின் சகோதரி அவரின் வயிற்றில் உதைக்கிறார். இதனால் அந்த பெண் வலியில் துடித்து கத்த ஆரம்பிக்கிறார். மருமகளை அடிக்கும் மகளை மாமனார் பலமுறை தடுக்க முயற்சிக்கிறார்.

    அப்போது கட்டிலில் அமர்ந்திருந்த மாமியார் எழுந்து வந்து மருமகளின் கன்னத்தில் அறைகிறார். பிறகு, நாத்தனார் மீண்டும் பெண்ணை தாக்கி அவளது இரண்டு கால்களையும் பிடித்துக் கொண்டு, அறையில் இருந்து வெளியே இழுத்து வந்தார்.

    பின்னர், பெண்ணை வெளியே தள்ளி மாமியார் மற்றும் நாத்தனார் அறையை பூட்டியுள்ளனர். அப்போது தரையில் கிடந்த பெண் தனது மாமனாரிடம் தன்னைக் காப்பாற்றும்படி கெஞ்சுகிறார்.

    அவளைக் கொல்லுங்கள், முழு பலத்துடன் கொல்லுங்கள் என்று அவரது கணவர் தொடர்ந்து வீடியோ எடுத்து வந்துள்ளார். இந்த வீடியோ காட்சி இணையதளத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    தடுக்க வந்த பெண்ணின் சகோதரரையும் கணவர் வீட்டார் தாக்கியுள்ளனர்.

    இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து பெண்ணின் சகோதரர் ஜெய்த்ரா காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதில், சகோதரியை அவரது கணவர் கேசவ் குப்தா அவரது மாமியார், மாமனார் மற்றும் நாத்தனாருடன் சேர்ந்து 5 லட்சம் ரூபாய் கேட்டு துன்புறுத்துவதாக குறிப்பிட்டார்.

    அதை தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து பெண்ணை அவரது தாயின் வீட்டாரிடம் ஒப்படைத்தனர்.

    மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அலிகஞ்ச் காவல் நிலைய பொறுப்பாளர் அமித் குமார் தெரிவித்தார்.

    • மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மனைவி தற்போது நலமாக இருக்கிறார்.
    • இந்த சம்பவம் மே 11 அன்று நடந்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மனைவியின் மீது சந்தேகப்பட்டு அவரது பிறப்புறுப்பில் துளையிட்டு பூட்டு போட்டு கொடுமைப்படுத்திய கணவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

    மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மனைவி தற்போது நலமாக இருக்கிறார். அவர் போலீசாரிடம் அளித்த புகாரின் பேரில் மே 16 ஆம் தேதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மே 11 அன்று நடந்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நேபாளம் நாட்டை சேர்ந்த இந்த தம்பதி வேலை தேடி புனே நகரத்திற்கு குடிபெயர்ந்து வந்துள்ளனர் என்றும் வந்த இடத்தில் மனைவியின் நடத்தையின் மீது சந்தேகப்பட்ட கணவன் அவளது பிறப்புறுப்பை ப்ளேடு வைத்து காயப்படுத்தி, ஆணியால் துளையிட்டு பூட்டு போட்டுள்ளான் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பாதிக்கப்பட்ட மனைவியின் வாக்குமூலத்தை காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட கணவனிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அரிசி, சோளம் ஆகியவற்றுடன் செயற்கை சுவையூட்டிகள் மற்றும் நிறமிகளைக் கலந்து மொறுமொறுப்பான நொறுக்குதீனியாக குர்குரே தயாராகிறது
    • தினமும் மனைவிக்காக குர்குரே வாங்கி வந்துகொண்டிருந்த கணவன் , ஒரு நாள் மனைவியுடன் நடந்த வாக்குவாதத்தில் குர்குரே வாங்கி வர மறந்துள்ளார்.

    இந்தியாவில் சிறுவர்கள் அதிகம் விரும்பி உண்ணும் ஜங்க் நொறுக்குதீனியாக குர்குரே உள்ளது. அரிசி, சோளம் ஆகியவற்றுடன் செயற்கை சுவையூட்டிகள் மற்றும் நிறமிகளைக் கலந்து மொறுமொறுப்பான நொறுக்குதீனியாக குர்குரே தயாராகிறதுகிறது. இதை அளவுக்கு அதிகமாக உட்கொள்வது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பலர் கூறிவந்தாலும் இன்றளவும் குர்குரே அதிகம் விரும்பி உண்ணப்படும் பண்டமாக இருந்து வருகிறது. இந்நிலையில் கணவன் குர்குரே வாங்கித் தராததால் மனைவி அவரைப் பிரிந்து சென்ற அதிர்ச்சி சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

    உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு குர்குரே சாப்பிடுவதில் அதீத நாட்டம் இருந்துள்ளது. கிட்டத்தட்ட குர்குரேவுக்கு அடிமையான அப் பெண் தனக்கு தினமும் ஒரு பாக்கெட் குர்குரே வாங்கித்தர வேண்டும் என்று தனது கணவரிடம் வலியுறுத்தியுள்ளார். அதன்படி தினமும் மனைவிக்காக குர்குரே வாங்கி வந்துகொண்டிருந்த கணவன் , ஒரு நாள் மனைவியுடன் நடந்த வாக்குவாதத்தில் குர்குரே வாங்கி வர மறந்துள்ளார். இதனால் கணவரைப் பிரிய முடிவெடுத்து வீட்டை விட்டு அப்பெண் வெளியேறியுள்ளார்.

    பின்னர் காவல் நிலையத்துக்கு சென்ற அப்பெண் , தனது கணவர் தன்னை அடித்து துன்புறுத்துவதாக முறையிட்டுள்ளார். ஆனால் கணவர் அதை மறுத்துள்ளார். குடும்பநல ஆலோசனை மையத்துக்கு இருவரும் பின்னர் அனுப்பிவைக்கப்பட்டனர். அவர்களிடம் பல அமர்வுகளில் தொடர்ந்து பேசிய ஆலோசகர் தெரிவிக்கையில், அப்பெண்ணுக்கு குர்குரே மீது இருந்த அதீத நாட்டமே அவர் கணவரைப் பிரிய காரணம் என்று தெரிவித்துள்ளார். 

    • தனது கணவரை பொறுப்புடன் பார்த்துக் கொண்டு வந்துள்ளார்.
    • இரண்டு குழந்தைகளும் உதவி வந்துள்ளனர்.

    சீனாவின் அன்ஹூய் மாகாணத்தை சேர்ந்தவர் சன் ஹாங்சியா. இவரது கணவர் கடந்த 2014 ஆம் ஆண்டு மாரடைப்பு ஏற்பட்டு கோமா நிலைக்கு சென்றார். கோமாவில் இருந்த கணவர் நிச்சயம் குணமடைவார் என்ற நம்பிக்கையில் ஹாங்சியா தனது கணவரை பொறுப்புடன் பார்த்துக் கொண்டு வந்துள்ளார்.

    பத்து ஆண்டுகளாக கோமாவில் இருந்த போதிலும், மனைவி ஹாங்சியா தனது கணவரை அன்புடன் பாசமாக கவனித்து வந்துள்ளார். கணவரை பராமரித்துக் கொள்வதில் ஹாங்சியாவின் இரண்டு குழந்தைகளும் உதவி வந்துள்ளனர்.

     


    கோமாவில் இருந்து மீண்ட கணவர் மருத்துவமனையில் இருக்கும் நிலையில், அவருக்கு கடந்த காலங்களில் என்னவெல்லாம் நடந்தது என்பதை ஹாங்சியா இன்ப அதிர்ச்சியில் தெரிவித்து வருகிறார்.

    இது தொடர்பாக தனியார் செய்தி நிறுவனத்திடம் பேசிய ஹாங்சியா, "தற்போது நான் சோர்வாக இருக்கும் போதிலும், குடும்பம் ஒன்றிணைந்ததும் எல்லாமே சரியாகிவிடும். கணவருக்கு இப்படியொரு நிலை ஏற்பட்டது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனினும், கணவரை தொடர்ந்து பார்த்துக் கொள்ள என் குழந்தைகள் ஆதரவாக இருந்தனர்," என்று தெரிவித்தார்.

    ×