search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TR Baalu"

    • பொருளாளர் பதவியில் இருந்த எஸ்.எஸ்.பழனி மாணிக்கத்துக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை.
    • கூட்டத்தில் பேசும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் எப்படி செயல்பட வேண்டும் என்பது பற்றி விரிவாக விளக்கி பேசுகிறார்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி 39 தொகுதிகளையும் கைப்பற்றியுள்ள நிலையில், 21 இடங்களில் தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. இந்த எம்.பி.க்களில் 10 பேர் புதுமுகங்கள் ஆவர்.

    பாராளுமன்றத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பது பற்றி ஆலோசிப்பதற்கு, பாராளுமன்ற குழுவில் இடம் பெறுபவர்களை தேர்வு செய்வதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறுகிறது. பொதுச்செயலாளர் துரைமுருகன், முதன்மை செயலாளர் கே.என்.நேரு, அமைப்பு செயலாளர் ஆர். எஸ்.பாரதி உள்ளிட்டோரும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள்.

    இந்த கூட்டத்தில் தி.மு.க. பாராளுமன்ற குழு தலைவராக கனிமொழி தேர்வு செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. மேலும் டி.ஆர்.பாலுவின் பெயரும் இடம்பெறுகிறது.

    பொருளாளர் பதவியில் இருந்த எஸ்.எஸ்.பழனி மாணிக்கத்துக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை.

    ஆனால் அவர் வகித்த பொருளாளர் பதவிக்கு ஜெகத்ரட்சகன், தயாநிதி மாறன் ஆகிய இருவரில் ஒருவர் நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இந்த கூட்டத்தில் பேசும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் எப்படி செயல்பட வேண்டும் என்பது பற்றி விரிவாக விளக்கி பேசுகிறார்.

    • டி.கே.எஸ்.இளங்கோவன், தலைமை நிலைய அலுவலக செயலாளர் பூச்சி முருகன் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.
    • தி.மு.க. முகவர்களின் செயல்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று காலையில் அண்ணா அறிவாலயம் சென்று கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    கட்சியின் பொருளாளர் டி.ஆர்.பாலு முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, துணைப் பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி, செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், தலைமை நிலைய அலுவலக செயலாளர் பூச்சி முருகன் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழா குறித்தும், டெல்லியில் 1-ந்தேதி நடைபெற உள்ள இந்தியா கூட்டணி கூட்டத்தில் பேச வேண்டிய விஷயங்கள் குறித்தும் வாக்கு எண்ணிக்கையின் போது தி.மு.க. முகவர்களின் செயல்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

    • தி.மு.க. உள்கட்சி விவகாரம் குறித்தும் விவாதித்ததாக தெரிகிறது.
    • அண்ணா அறிவாலயத்தின் தரைதளத்தில் அறைகள் இடிக்கப்பட்டு தற்போது புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் அதுபற்றியும் கேட்டறிந்தார்.

    சென்னை:

    தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலையில் அண்ணா அறிவாலயம் வந்தார். அவரை பொருளாளர் டி.ஆர்.பாலு, தலைமை நிலைய செயலாளர் பூச்சி முருகன் வரவேற்றனர்.

    அறிவாலயத்தில் சுமார் 1மணி நேரம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருந்தார். கழக பொதுச்செயலாளர் துரை முருகன், பொருளாளர் டி.ஆர்.பாலுவுடன் வடமாநில தேர்தல் நிலவரம் குறித்து விவாதித்தார்.

    இந்தியா கூட்டணிக்கு எந்தெந்த மாநிலங்களில் எவ்வளவு 'சீட்' கிடைக்கும். வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது பற்றியும் ஆலோசித்தார். சுமார் 1 மணி நேரம் அரசியல் நிலவரம் பற்றி பேசிக்கொண்டிருந்தனர்.

    தி.மு.க. உள்கட்சி விவகாரம் குறித்தும் விவாதித்ததாக தெரிகிறது. அண்ணா அறிவாலயத்தின் தரைதளத்தில் அறைகள் இடிக்கப்பட்டு தற்போது புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் அதுபற்றியும் கேட்டறிந்தார்.

    அறிவாலயத்தில் உள்ள அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதியின் அறை, முரசொலி மாறன் வளாகம் உள்ளிட்ட பல அறைகள் இடிக்கப்பட்டு புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால் அந்த பணிகள் எந்த நிலையில் உள்ளது என்பது பற்றியும் கேட்டறிந்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • யாரும் தி.மு.க.வுடன் பேச வேண்டாம். அவர்களாக வரட்டும். தொகுதி எண்ணிக்கையை சொல்லட்டும்.
    • இறுக்கமான சூழ்நிலையை புரிந்து கொண்ட தி.மு.க. தலைமை கனிமொழி எம்.பி. மூலம் பேச்சுவார்த்தையை தொடர்ந்துள்ளது.

    சென்னை:

    நீண்ட இழுபறிக்கு பிறகு தி.மு.க.-காங்கிரஸ் இடையே சுமூகமான உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

    இதற்கு திரைமறைவில் நடந்த கசப்பு மற்றும் இனிப்பான சம்பவங்கள் பற்றி டெல்லி வட்டாரங்கள் கூறியதாவது:-

    டெல்லி காங்கிரஸ் தலைவர்களுடன் தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு தான் ஆரம்பத்தில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது முதலில் 5 பிளஸ் 1 என்பதில் இருந்து ஏலம் தொடங்கியது. 6 பிளஸ் 1 என்று உறுதிப்படுத்தியதும் காங்கிரஸ் தலைவர்கள் ஏற்பதற்கில்லை என்று கூறியிருக்கிறார்கள்.

    அதை கேட்டதும் இதற்கு மேல் ஒதுக்க முடியாது. நீங்கள் இழுத்தடித்தால் உங்களுக்குதான் சிக்கல். நீங்கள் பார்ப்பது கலைஞர் அல்ல. தளபதி. நீங்கள் உடன்படாவிட்டால் தளபதி உறுதிப்படுத்தி விட்டு அவர் வழியில் போய்க்கொண்டே இருப்பார் என்று கூறியிருக்கிறார்.


    டி.ஆர்.பாலுவின் இந்த கறார் பேச்சு டெல்லி தலைவர்களை ஆத்திரமூட்டி இருக்கிறது. அதன் புறகு தான் யாரும் தி.மு.க.வுடன் பேச வேண்டாம். அவர்களாக வரட்டும். தொகுதி எண்ணிக்கையை சொல்லட்டும். அதன் பிறகு பார்த்து கொள்ளலாம் என்று முடிவு செய்து இருக்கிறார்கள்.

    மேலிடத்தின் இந்த கசப்பான அனுபவத்தை தான் எங்களுக்குள் எந்த கசப்பும் இல்லை. இனிப்பாகவே இருக்கிறோம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை சூசகமாக அடிக்கடி குறிப்பிட்டதாக கூறப்படுகிறது.

    இறுக்கமான சூழ்நிலையை புரிந்து கொண்ட தி.மு.க. தலைமை கனிமொழி எம்.பி. மூலம் பேச்சுவார்த்தையை தொடர்ந்துள்ளது.

    டெல்லியில் நல்ல நட்புடன் இருக்கும் கனிமொழிதான் தனது பேச்சு சாதுர்யத்தால் கசப்பை மறந்து இனிமையான சூழ்நிலையை ஏற்படுத்தி இருக்கிறார்.

    அவருடன் நடந்த பேச்சில்தான் கூட்டணி இனிப்பாக முடிந்து இருக்கிறது என்றனர்.

    • தி.மு.க. அரசு ஒத்துழைப்பு கொடுப்பதில்லை.
    • அந்த வரிசையில் பிரதமரும் விரைவில் இணைந்து விட போகிறார்.

    இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்த பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அந்த வகையில், நெல்லையில் நடைபெற்ற பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி ஆளும் தி.மு.க. கட்சி மீது பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார்.

    அந்த வகையில், தமிழ்நாட்டில் தி.மு.க. விரைவில் காணாமல் போகும் என்றும் அக்கட்சியின் வேஷம் விரைவில் கலையும் என்று பேசினார். தொடர்ந்து பேசிய அவர், மத்திய அரசு திட்டங்களுக்கு மாநிலத்தில் உள்ள தி.மு.க. அரசு ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என்றும் குற்றம்சாட்டியிருந்தார்.

    பிரதமர் மோடியின் குற்றச்சாட்டுக்கு தி.மு.க. சார்பில் எம்.பி. கனிமொழி பதிலடி கொடுத்தார். இது குறித்து பேசிய அவர், தி.மு.க. காணாமல் போகும் என்று கூறிய பலர் காணாமல் போயுள்ளனர் என்று தெரிவித்தார். இவரை தொடர்ந்து மோடியின் குற்றச்சாட்டுக்கு தி.மு.க. பாராளுமன்ற குழு தலைவர் டி.ஆர். பாலு பதிலடி கொடுத்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஜெயலிலதாவை வைத்து தமிழ்நாட்டில் ஓட்டு வாங்க பிரதமர் மோடி நினைக்கிறார். தி.மு.க.-வை இல்லாமல் ஆக்கிடுவோம் என்று கூறியவர்கள் எல்லாம் வரலாற்றில் காணாமல் போய்விட்டார்கள். அந்த வரிசையில் பிரதமரும் விரைவில் இணைந்து விட போகிறார்."

    "தி.மு.க. உருவான 1949-ம் ஆண்டில் இருந்து 74 ஆண்டு காலமாக பலர் இவ்வாறு பேசிக் கடந்து சென்று கொண்டுதான் இருக்கிறார்கள். தி.மு.க. என்ற இமயமலை இன்றும் வரலாற்றில் நிமிர்ந்து நின்று கொண்டுதான் இருக்கிறது," என்று தெரிவித்துள்ளார்.

    • 83 வயதாகும் டி.ஆர்.பாலு எம்.பி. இப்போதும் சுறுசுறுப்புடன் கட்சி பணியாற்றி வருகிறார்.
    • ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் டி.ஆர்.பாலு எம்.பி. மீண்டும் போட்டியிட்டால் அவருக்காக கடுமையாக உழைக்கக்கூடியவர்

    சென்னை:

    தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற தொகுதி எம்.பி.யாக இருந்து வருகிறார். இவர் 1996-ம் ஆண்டில் இருந்து தொடர்ச்சியாக 5 முறை எம்.பி.யாக உள்ளார்.

    மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியை அண்ணன் என்று உரிமையோடு அழைப்பார்.

    தி.மு.க.வின் முக்கிய தலைவர்களில் ஒருவராக செயல்படும் டி.ஆர்.பாலு எம்.பி.க்கு டெல்லி அரசியல் அத்துபடி என்று சொன்னால் அது மிகையாகாது. அந்த அளவுக்கு அகில இந்திய தலைவர்கள்-மத்திய மந்திரிகளுக்கு பரிச்சயம் ஆனவர்.

    83 வயதாகும் டி.ஆர்.பாலு எம்.பி. இப்போதும் சுறுசுறுப்புடன் கட்சி பணியாற்றி வருகிறார். டெல்லி அரசியல் நகர்வு முழுவதையும் அவரே பார்த்துக் கொள்கிறார்.

    இந்த நிலையில் வருகிற பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட அவர் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளார்.

    ஸ்ரீபெரும்புதூர் தொகுதி நிகழ்ச்சிகளிலும் அடிக்கடி கலந்து கொண்டு தொகுதியை தக்க வைத்து வருகிறார்.

    இந்த நிலையில் தி.மு.க. இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இளைஞர்களுக்கு இந்த தேர்தலில் அதிக வாய்ப்பு வழங்க வேண்டும் என்று அடிக்கடி வலியுறுத்தி வருகிறார்.

    அந்த வகையில் வருகிற பாராளுமன்ற தேர்தலில் ஏராளமான புதுமுகங்கள் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கட்சியில் 75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வேறு பதவிகள் வழங்கிவிட்டு அந்த இடங்களில் புதுமுகங்களை நிறுத்தலாமா? என்று ஆலோசனை நடந்து வருவதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.

    இந்த வகையில் 83 வயதாகும் டி.ஆர்.பாலு எம்.பி. ராஜ்யசபா எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்படலாம் என்றும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

    அவ்வாறு ஒரு சூழல் அமைந்தால் ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கு மாற்று ஏற்பாடாக காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் படப்பை மனோகரன் முன் நிறுத்தப்படுவார் என்றும் அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

    கட்சியில் ஒன்றிய செயலாளராக பணியாற்றி வரும் படப்பை மனோகரன் தி.மு.க.வில் ஆரம்ப காலம் முதல் கடுமையாக உழைப்பவர் என்று பெயர் எடுத்தவர். அனைவரிடமும் அன்பாக பழகக்கூடியவர்.

    கட்சி நடத்தும் அனைத்து பொதுக்கூட்டங்களையும் நிகழ்ச்சிகளையும் இரவு-பகல் பாராமல் முன்னின்று நடத்துபவர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மாவட்ட அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோரின் அன்பை பெற்றவர்.

    பொதுமக்கள் மத்தியிலும் நன்மதிப்பும், செல்வாக்கும் பெற்றவர். ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் டி.ஆர்.பாலு எம்.பி. மீண்டும் போட்டியிட்டால் அவருக்காக கடுமையாக உழைக்கக்கூடியவர். படப்பை மனோகரனை முன் நிறுத்த வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.

    • தமிழ்நாட்டுக்கு வெள்ளநிவாரணம் வழங்குவதில் மத்திய அரசு ஓரவஞ்சனை செய்கிறது.
    • பட்டியிலன அமைச்சரை அவமதித்து விட்டதாக பாரதிய ஜனதாவினர் சித்தரித்து கேள்வி எழுப்புகிறார்கள்.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தில் இன்று வெள்ளநிவாரணம் தொடர்பாக தி.மு.க கேள்வி எழுப்பிய போது தி.மு.கவுக்கும், பாரதிய ஜனதா எம்.பிக்களுக்கும் இடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது. டி.ஆர்.பாலு மத்திய மந்திரி எல்.முருகனை அவமதித்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக டி.ஆர். பாலு கூறியதாவது:-


    தமிழ்நாட்டுக்கு வெள்ளநிவாரணம் வழங்குவதில் மத்திய அரசு ஓரவஞ்சனை செய்கிறது. புறக்கணிக்கிறது. நான் பேசிக்கொண்டு இருக்கும் போது மத்திய மந்திரி எல். முருகன் குறிக்கிட்டு பேசினார். இதனால் வெள்ள நிவாரணம் குறித்து தொடர்பு இல்லாத அமைச்சர் குறுக்கிட வேண்டாம் என்று தான் குறிப்பிட்டேன். ஆனால் பட்டியிலன அமைச்சரை அவமதித்து விட்டதாக பாரதிய ஜனதாவினர் சித்தரித்து கேள்வி எழுப்புகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வரும் 8-ந்தேதி பாராளுமன்றத்தில் காந்தி சிலை முன்பு தி.மு.க. எம்.பி.க்கள் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்துவர்.
    • பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்தில் தோழமைக் கட்சி எம்.பி.க்களும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளோம்.

    சென்னை:

    தி.மு.க. பாராளுமன்ற குழுத்தலைவர் டி.ஆர்.பாலு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

    * வரும் 8-ந்தேதி பாராளுமன்றத்தில் காந்தி சிலை முன்பு தி.மு.க. எம்.பி.க்கள் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்துவர்.

    * தமிழகத்தின் மீதான பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையை கண்டித்தும், இடைக்கால பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்யாத மத்திய அரசை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

    * பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்தில் தோழமைக் கட்சி எம்.பி.க்களும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளோம் என்று தெரிவித்தார்.

    • நீட் விலக்கு விவகாரம், வெள்ள நிவாரண நிதி, மதுரை எய்ம்ஸ், சென்னை 2-ம் கட்ட மெட்ரோ பணிகள், சேது சமுத்திர திட்டம் உள்ளிட்டவற்றை சுட்டிக்காட்டி பேசினார்.
    • சென்னை 2-ம் கட்ட மெட்ரோ திட்டத்துக்கு மத்திய அரசு உதவவில்லை என குறை கூறினார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற மக்களவையில் நேற்று நடைபெற்ற ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பாராளுமன்ற தி.மு.க. குழு தலைவர் டி.ஆர்.பாலுவும் பங்கேற்று பேசினார். அப்போது தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு பாராமுகம் காட்டுவதாக பல விஷயங்களை குறிப்பிட்டார். குறிப்பாக நீட் விலக்கு விவகாரம், வெள்ள நிவாரண நிதி, மதுரை எய்ம்ஸ், சென்னை 2-ம் கட்ட மெட்ரோ பணிகள், சேது சமுத்திர திட்டம் உள்ளிட்டவற்றை சுட்டிக்காட்டி பேசினார்.

    தமிழகத்தில் புயல் மற்றும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய மந்திரிகள், அதிகாரிகள் குழு பார்வையிட்டதையும், ஏற்பட்ட சேதங்களுக்கு ரூ.37 ஆயிரம் கோடி கேட்டு முதலமைச்சர், பிரதமர் மோடியை சந்தித்து வலியுறுத்தியதையும், அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் உள்துறை மந்திரியிடம் நேரில் வற்புறுத்தியதையும் குறிப்பிட்ட டி.ஆர்.பாலு, இதுவரை ஒரு பைசா கூட வரவில்லை எனக்கூறி ஆதங்கப்பட்டார்.

    மேலும் குடியுரிமை திருத்த சட்டத்தில் முஸ்லிம்கள், இலங்கை தமிழர்கள் சேர்க்கப்படாததை சுட்டிக்காட்டிய அவர், மேற்கு வங்காளம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் அவற்றை ஏற்கவில்லை என்பதையும் தெளிவுபடுத்தினார். 2014-ம் ஆண்டு ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்படும் என பிரதமர் மோடி தெரிவித்ததாக கூறி குறிப்பிட்ட அவர், அப்படியெனில் இதுவரை 20 கோடி வேலைவாய்ப்புகள் கொடுக்கப்பட்டு இருக்கிறதா? என கேள்வி எழுப்பினார்.

    இதுபோல ஜி.எஸ்.டி. திட்டத்தின் குறைகளை எடுத்துரைத்தார். சென்னை 2-ம் கட்ட மெட்ரோ திட்டத்துக்கு மத்திய அரசு உதவவில்லை என குறை கூறினார். தொழிலாளர் வருங்கால வைப்புநிதி ஓய்வூதியத்தை குறைந்தபட்சம் ரூ.3 ஆயிரமாக உயர்த்த கோரிக்கை விடுத்தார். இறுதியாக மாநில அரசுகளில் கவர்னர்களின் தலையீடு விவகாரத்தையும் குறிப்பிட்டார்.

    • பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக, காங்கிரஸ் இடையே நடைபெற்ற முதற்கட்ட பேச்சு வார்த்தை நிறைவடைந்தது.
    • விருப்ப பட்டியல் எதையும் காங்கிரஸ் கட்சி வழங்கவில்லை.

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக, காங்கிரஸ் இடையேயான முதற்கட்ட பேச்சுவார்த்தை நிறைவடைந்தது.

    முதற்கட்ட பேச்சுவார்த்தை நிறைவடைந்ததை தொடர்ந்து, திமுக பொருளாளரும், தொகுதிப் பங்கீட்டு குழு தலைவருமான டி.ஆர்.பாலு செய்தியாளர்களிடம் கூறியதாவது " மக்களவை தொகுதி பங்கீடு குறித்து காங்கிரஸ் உடன் முதல் கட்ட பேச்சுவார்த்தை நிறைவடைந்தது. நிதிஷ் குமார் சென்றதால் இந்தியா கூட்டணியில் எந்த தாக்கமும் ஏற்படாது. 20 -க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக நிற்க வேண்டும் என நான் விரும்புகிறேன். விருப்ப பட்டியல் எதையும் காங்கிரஸ் கட்சி வழங்கவில்லை. பாராளுமன்ற தேர்தலில் இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என உதயநிதி கேட்டுக்கொண்டார். அதனை ஏற்று இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிப்பது பற்றி முதல்வரிடம் தெரிவிப்பேன்" எனக் கூறினார்.

    அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ் அழகிரி, "தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக உடன் காங்கிரஸ் மேலிட குழு பேச்சுவார்த்தை நடத்தியது. பேச்சுவார்த்தை திருப்தியாக இருந்தது. 40 தொகுதிகளிலும் எவ்வாறு வெற்றி பெறுவது. வேட்பாளர்களை எவ்வாறு தேர்வு செய்வது என்பது குறித்து பேசினோம். திமுக-விடம் நாங்கள் தொகுதி பட்டியல் எதுவும் வழங்கவில்லை எனத் தெரிவித்தார்.

    • தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு எழுதிய நூல்கள் வெளியீட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டார்.
    • வரும் பாராளுமன்ற தேர்தல் யார் ஆட்சியில் அமரக்கூடாது என்பதற்காக நடைபெறவுள்ள தேர்தல் என்றார்.

    சென்னை:

    தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு எழுதிய நூல்கள் வெளியீட்டு விழா சென்னை தேனாம்பேட்டையில் இன்று நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

    தற்போது தி.மு.க. பொருளாளராக உள்ள டி.ஆர்.பாலு, ஒரே கொடி, ஒரே கட்சி என்ற கொள்கையை கடைப்பிடித்து வருபவர்.

    கருணாநிதியின் பேச்சைக் கேட்டு அரசியலுக்கு வந்தவர். இது பாலுவின் வரலாற்றுப் புத்தகம் மட்டுமல்ல, மற்றவர்களுக்கு வழிகாட்டும் புத்தகம்.

    பா.ஜ.க.வை வீழ்த்தக் கூடிய இந்தியா கூட்டணியின் உருவாக்கத்தில் டி.ஆர்.பாலுவுக்கு முக்கிய பங்கு உள்ளது.

    வரும் பாராளுமன்ற தேர்தல் யார் ஆட்சியில் அமரக்கூடாது என்பதற்காக நடைபெறவுள்ள தேர்தல்.

    கடந்த 10 ஆண்டு காலமாக மக்களுக்கு கொடுத்த எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றாமல், பேரிடர் நிவாரண நிதி ஒதுக்காமல் இறுதிக்காலத்தில் ஒரு கோவிலை கட்டி பா.ஜ.க. தலைமை மக்களை திசைதிருப்ப பார்க்கிறது.

    தேர்தலைச் சந்திக்கும் பா.ஜ.க.வுக்கு தங்கள் சாதனைகளை மக்களிடம் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. அதனால் முழுவதுமாக கட்டி முடிக்காத கோவிலை அவசரமாக திறந்து சாதித்துவிட்டதாக காட்டுகின்றனர்.

    இதுபோன்ற திசைதிருப்பும் தந்திரங்களுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள். இது உறுதி என தெரிவித்தார்.

    • தி.மு.க. பாராளுமன்ற குழுத்தலைவர் டி.ஆர்.பாலு, மாநிலங்களவை குழுத் தலைவர் திருச்சி சிவா, கலாநிதி வீராசாமி எம்.பி. உள்ளிட்டோர் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
    • பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் தி.மு.க. எம்.பி. கனிமொழி சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் சந்திப்பு நடைபெறுகிறது குறிப்பிடத்தக்கது.

    சென்னை :

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உடன் தி.மு.க. பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்தனர்.

    தி.மு.க. பாராளுமன்ற குழுத்தலைவர் டி.ஆர்.பாலு, மாநிலங்களவை குழுத் தலைவர் திருச்சி சிவா, கலாநிதி வீராசாமி எம்.பி. உள்ளிட்டோர் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் தி.மு.க. எம்.பி. கனிமொழி சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் இச்சந்திப்பு நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.

    ×