என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

காங்கிரஸ் மீது ED சோதனைகளை ஏவிவிடுவது வெட்கித் தலைகுனிய வேண்டிய பழிவாங்கும் செயல் - டி.ஆர்.பாலு
- அமலாக்கத்துறை உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகளை காங்கிரஸ் கட்சி மீது பா.ஜ.க. ஏவிவிடுவது அருவருக்கத்தக்க செயல்.
- பா.ஜ.க. அரசு இனிமேலாவது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை அரசியல் ரீதியாக சந்திக்கும் துணிச்சலை பெற வேண்டும்.
நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதற்கு தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில்,
* காங்கிரஸ் கட்சி மீது அமலாக்கத்துறை சோதனையை ஏவிவிடுவது வெட்கித் தலைகுனிய வேண்டிய அரசியல் பழிவாங்கும் செயல்.
* அமலாக்கத்துறை உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகளை காங்கிரஸ் கட்சி மீது பா.ஜ.க. ஏவிவிடுவது அருவருக்கத்தக்க செயல்.
* குஜராத்தில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் மக்கள் விரோத பா.ஜ.க. அரசு பற்றிய கருத்துருவாக்கம் பா.ஜ.க.வை மிரள வைத்திருக்கிறது.
* ராய்ப்பூர் காங்கிரஸ் மாநாட்டின்போது சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் தலைவர்கள் மீது அமலாக்கத்துறை சோதனை நடத்தி உள்ளது பா.ஜ.க.
* ஆட்சிக்கு வந்ததிலிருந்து ED-யை தனது கூட்டணி கட்சியாக சேர்த்துக்கொண்டு பழிவாங்கல் நடவடிக்கையில் ஈடுபடுகிறது பா.ஜ.க. அரசு.
* பா.ஜ.க. அரசு இனிமேலாவது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை அரசியல் ரீதியாக சந்திக்கும் துணிச்சலை பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.






