search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "President Droupadi Murmu"

    • எல்.கே.அத்வானிக்கு இன்று அவரது இல்லத்திற்கே ஜனாதிபதி திரவுபதி முர்மு நேரில் சென்று பாரத ரத்னா விருதை வழங்கினார்
    • பிரதமர் மோடி மற்றும் பாஜகவின் மனநிலை பெண்களுக்கு எதிரானது மற்றும் தலித் மக்களுக்கு விரோதமானது

    முன்னாள் பிரதமர்களான பி.வி.நரசிம்மராவ், சவுத்ரி சரண்சிங், முன்னாள் துணை பிரதமர் எல்.கே.அத்வானி, தமிழகத்தை சேர்ந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், பீகார் முன்னாள் முதல்-மந்திரி கர்ப்பூரி தாக்கூர் ஆகிய 5 பேருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.

    அதன்படி எல்.கே.அத்வானியை தவிர மற்ற 4 பேருக்கு நேற்று ஜனாதிபதி மாளிகையில் நடந்த விழாவில் அவர்களது குடும்பத்தினரிடம் ஜனாதிபதி திரவுபதி முர்மு பாரத ரத்னா விருது வழங்கினார். வயது முப்பு காரணமாக எல்.கே.அத்வானிக்கு இன்று அவரது இல்லத்திற்கே ஜனாதிபதி திரவுபதி முர்மு நேரில் சென்று பாரத ரத்னா விருதை வழங்கினார்.

    இந்நிலையில், பழங்குடியின பெண் குடியரசுத் தலைவரை மீண்டும் பிரதமர் மோடி வேண்டுமென்றே அவமதித்துள்ளார் என்று காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

    அந்த பதிவில், "குடியரசுத் தலைவர் நிற்கிறார், பிரதமர் மோடி அமர்ந்திருக்கிறார். பழங்குடியின பெண் குடியரசுத் தலைவரை மீண்டும் பிரதமர் மோடி வேண்டுமென்றே அவமதித்துள்ளார்.

    இது முதல் முறையல்ல - புதிய நாடாளுமன்றம் தொடங்கப்பட்டபோது, குடியரசு தலைவரை அழைக்கவில்லை, ராமர் கோயில் திறப்பு விழா நிகழ்ச்சியில் கூட அவரை அழைக்கவில்லை.

    பிரதமர் மோடி மற்றும் பாஜகவின் மனநிலை பெண்களுக்கு எதிரானது மற்றும் தலித் மக்களுக்கு விரோதமானது என்பதை இந்த சம்பவங்கள் காட்டுகின்றன" என்று காங்கிரஸ் பதிவிட்டுள்ளது.

    • 5 பேருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.
    • எல்.கே.அத்வானியை தவிர மற்ற 4 பேருக்கு நேற்று ஜனாதிபதி மாளிகையில் நடந்த விழாவில் அவர்களது குடும்பத்தினரிடம் ஜனாதிபதி திரவுபதி முர்மு பாரத ரத்னா விருது வழங்கினார்.

    புதுடெல்லி:

    முன்னாள் பிரதமர்களான பி.வி.நரசிம்மராவ், சவுத்ரி சரண்சிங், முன்னாள் துணை பிரதமர் எல்.கே.அத்வானி, தமிழகத்தை சேர்ந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், பீகார் முன்னாள் முதல்-மந்திரி கர்ப்பூரி தாக்கூர் ஆகிய 5 பேருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.

    அதன்படி எல்.கே.அத்வானியை தவிர மற்ற 4 பேருக்கு நேற்று ஜனாதிபதி மாளிகையில் நடந்த விழாவில் அவர்களது குடும்பத்தினரிடம் ஜனாதிபதி திரவுபதி முர்மு பாரத ரத்னா விருது வழங்கினார். வயது முப்பு காரணமாக எல்.கே.அத்வானிக்கு இன்று அவரது இல்லத்திற்கே ஜனாதிபதி திரவுபதி முர்மு நேரில் சென்று பாரத ரத்னா விருதை வழங்கினார்.

    இதில் பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், வெங்கையா நாயுடு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
    • முன்னாள் பிரதமர்களான நரசிம்ம ராவ், சவுத்ரி சரண் சிங் ஆகியோருக்கும் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

    புதுடெல்லி:

    முன்னாள் பிரதமர்கள் சரண்சிங், நரசிம்மராவ் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோருக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருதை அறிவித்தது.

    ஏற்கனவே, பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே.அத்வானி மற்றும் பீகார் முன்னாள் முதல் மந்திரி கர்பூர் தாகூருக்கு பாரத ரத்னா விருது

    அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், முன்னாள் பிரதமர்களான சவுத்ரி சரண் சிங், நரசிம்மராவ், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், பீகாரின் கர்பூரி தாகூர் உள்ளிட்டோர் குடும்பத்தினருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பாரத ரத்னா விருது வழங்கி கவுரவித்தார். இதில் பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.

    ஒரே ஆண்டில் 5 பேருக்கு பாரத ரத்னா விருது அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மொரீஷியஸ் நாட்டில் தேசிய தினவிழா இன்று கொண்டாடப்படுகிறது.
    • தேசிய தினத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் 6-வது இந்திய ஜனாதிபதி என்ற பெருமை பெற்றார்.

    போர்ட் லூயிஸ்:

    ஜனாதிபதி திரவுபதி முர்மு 3 நாள் அரசுமுறைப் பயணமாக நேற்று மொரீஷியஸ் சென்றடைந்தார்.

    இந்நிலையில், மொரீஷியஸ் நாட்டின் தேசிய தின விழா இன்று கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக திரவுபதி முர்மு பங்கேற்றார்.

    மொரீஷியஸ் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்ற விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு மதிப்புமிகு டாக்டர் பட்டம் அளிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து, மொரீஷியஸ் இளைஞர்கள், புலம்பெயர்ந்த இந்தியர்கள் மற்றும் இந்திய சமூகத்தினர் பங்கேற்கும் கூட்டத்திலும் திரவுபதி முர்மு உரையாற்றுகிறார்.


    2000-ம் ஆண்டு முதல் மொரீஷியஸ் நாட்டின் தேசிய தினத்தில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளும் 6-வது இந்திய ஜனாதிபதி என்ற பெருமையை ஜனாதிபதி முர்மு பெற்றார்.

    ஜனாதிபதியின் இந்த அரசுமுறை பயணம் இந்தியாவிற்கும் மொரீஷியசுக்கும் இடையிலான நீண்டகால நட்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    • ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கடிதம் எழுதியுள்ளார்.
    • அதில், அக்னிபாத் திட்டத்தின் மூலம் இளைஞர்களுக்கு மத்திய அரசு அநீதி இழைத்துவிட்டது என்றார்.

    புதுடெல்லி:

    ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் கூறியுள்ளதாவது:

    இளைஞர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை முன்னிலைப்படுத்துவதே எனது முக்கிய நோக்கம். பெரும்பான்மையான அக்னி வீரர்கள் 4 ஆண்டு சேவைக்குப் பிறகு வேலையில்லாமல் தவிக்கும் சூழல் ஏற்படும். இது அவர்களின் பொருளாதார நிலையை கடுமையாக பாதிக்கும்.

    அக்னிபாத் திட்டத்தால் இளைஞர்களுக்கு மத்திய அரசு அநீதி இழைத்துவிட்டது. கிட்டத்தட்ட 2 லட்சம் இளைஞர்களின் எதிர்காலம் நிச்சயமற்றதாகிவிட்டது. தற்கொலை செய்து இளைஞர்கள் உயிரிழக்கும் சம்பவம் நிகழ்ந்து வருகிறது.

    தேசபக்தி மற்றும் வீரம் நிறைந்த ஆயுதப்படை வீர்களின் நீதிக்கான போராட்டத்திற்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்கும். எங்கள் இளைஞர்கள் இவ்வாறு பாதிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது. நியாயம் மற்றும் நீதியை உறுதிப்படுத்துமாறு உங்களிடம் வேண்டுகோள் விடுக்கிறேன் எனதெரிவித்துள்ளார்.

    • நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்கள் வறுமையின் பிடியில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.
    • பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தில் நாடு முழுவதும் 84 லட்சம் பேர் இணைந்துள்ளனர்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதையொட்டி பாராளுமன்ற கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று உரை நிகழ்த்தினார்.

    பாராளுமன்ற புதிய கட்டிடம் திறக்கப்பட்ட பிறகு அதில் ஜனாதிபதி திரவுபதி முர்மு முதல் முறையாக உரையாற்றுகிறார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் சாதனைகளை பட்டியலிட்டு அவர் உரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் கூறியதாவது:-

    புதிய பாராளுமன்றத்தில் இன்றைய உரை எனது முதல் உரையாகும். புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் உரையாற்றுவது மகிழ்ச்சி அளிக்கிறது.

    ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற இலக்குடன் பயணித்து வருகிறோம். பிர்சா முண்டாவின் பிறந்தநாள் பழங்குடியினரின் கவுரவ தினமாக கொண்டாடப்படுகிறது.

    சந்திரயான்-3 திட்டத்தின் வெற்றியால் நிலவின் தென் துருவத்தில் பாரதத்தின் மூவர்ண கொடி பட்டொளி வீசி பறக்கிறது. சுதந்திர அமிர்த பெருவிழாவின் பெருமையை வளர்ச்சியடைந்த பாரதம் உறுதி செய்யும், கொண்டாடும். உலக அரங்கில் இந்தியா கம்பீரமான வளர்ச்சியை பெற்று வருகிறது. கடந்த 6 மாதங்களாக பொருளாதார வளர்ச்சி 7.5 சதவீதத்தை தாண்டியுள்ளது.

    அயோத்தியில் அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீராமர் கோவில் நமது பாரதத்தின் பெருமைமிக்க அடையாளம் ஆகும். சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யாமிஷன் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

    விரைவில் நாடு முழுவதும் 5ஜி தொழில்நுட்பம் அமல்படுத்தப்படும். சென்ற ஆண்டு லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. 30 ஆண்டுகளுக்கு பிறகு மகளிருக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா நிறைவேற்றப்பட்டு உள்ளது.

    அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்ற மக்களின் கனவு நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தியா தற்போது வளர்ந்து வரும் பொருளாதார நாடாக மாறியுள்ளது. வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை 3 கோடியில் இருந்து 8 கோடியாக அதிகரித்துள்ளது.

    ஸ்டார்ட் அப் இந்தியா உள்ளிட்டவை மூலம் 1 லட்சத்துக்கும் அதிகமான தொழில்முனைவோரை மத்திய அரசு உருவாக்கி உள்ளது.

    நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்கள் வறுமையின் பிடியில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். நாட்டின் மாதாந்திர ஜி.எஸ்.டி. வருவாய் சராசரியாக ரூ.1.40 லட்சம் கோடிக்கும் அதிகமாகவே உள்ளது. நாட்டில் ஜி.எஸ்.டி. வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் வங்கிகளில் வாராக்கடன் 4 சதவீதம் ஆக குறைந்துள்ளது.

    நாட்டின் ஆயுத தளவாட உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் தமிழ்நாட்டில் பாதுகாப்பு வழித்தடம் அமைக்கப்படுகிறது.

    இந்தியாவில் டிஜிட்டல் புரட்சியால் மக்களின் வாழ்க்கை எளிதாகியுள்ளது. செல்போன் மூலம் பரிவர்த்தனைகள் ரூ.1200 கோடி அளவுக்கு நடைபெறுகிறது. ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு தினசரி டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை நடைபெறுகிறது. இந்தியாவின் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் குறித்து உலகம் முழுவதும் பெருமையாக பேசப்படுகிறது.

    இந்தியாவில் 20 நகரங்களில் மெட்ரோ ரெயில் சேவை தரப்படுகிறது. உலக அளவில் டிஜிட்டல் பரிவர்த்தனையில் இந்தியாவின் பங்கு 46 சதவீதம் ஆக உயர்ந்துள்ளது. வளர்ச்சியடைந்த நாடுகளில் கூட நவீன டிஜிட்டல் பரிவர்த்தனைகள் இல்லை. 4 சக்திகளை கொண்டு இந்தியா இயங்கி வருகிறது. பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள், ஏழைகள் ஆகிய 4 பிரிவினர் இந்தியாவின் தூண்களாக உள்ளனர். பழைய குற்றவியல் சட்டங்கள் நீக்கப்பட்டு புதிய குற்றவியல் சட்டங்கள் இயக்கப்பட்டு அமல்படுத்தப்படுகிறது.

    இந்தியாவின் 20 நகரங்களில் மெட்ரோ ரெயில் சேவை தரப்படுகிறது. உலகின் 2-வது மிகப்பெரிய செல்போன் உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா வளர்ந்துள்ளது. 11 கோடி வீடுகளுக்கு குழாய் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தின் கீழ் 80 கோடி குடும்பங்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. உஜ்வாலா திட்டத்தின் கீழ் எண்ணற்ற குடும்பங்களுக்கு சமையல் கியாஸ் சிலிண்டர் வழங்கப்படுகிறது.

    கொரோனா பேரிடர் பாதிப்பில் இருந்து இந்தியா வெற்றிகரமாக மீண்டுள்ளது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் ஏழை மக்களின் பணம் சேமிக்கப்படுகிறது. இதன் மூலம் 3 கோடி ஏழை மக்கள் பயன் பெற்றுள்ளனர்.

    ஆண்டு வருவாய் ரூ.7 லட்சம் வரை உள்ளவர்களுக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. ரெயில்வே துறையை முழுக்க முழுக்க மின் மயமாக்கும் பணி விரைவில் நிறைவு பெற உள்ளது.

    உதான் திட்டத்தின் கீழ் ஏழை, எளியோர் உள்பட அனைத்து தரப்பினருக்கும் விமான சேவை உறுதி செய்யப்பட்டுள்ளது. தடையற்ற இணைய வசதிக்காக 2 லட்சம் கிராமங்களில் ஆப்டிக் பைபர் கேபிள்கள் மூலம் இணைக்கப்பட்டு உள்ளன. ஏழை பெண்களுக்கு ரூ. 7 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

    கிராமங்களில் கிட்டத்தட்ட 4 லட்சம் கி.மீ. தூரத்துக்கு புதிய சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை 2.5 மடங்கு அதிகரித்துள்ளது. எம்.எஸ்.பி. உள்பட 18 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு விவசாயிகளுக்கு நிதிப்பலன் உறுதி செய்யப்பட்டுள்ளது.

    நலமான பாரதம், வளமான பாரதம் என்ற நோக்குடன் அமலான ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 3 கோடி பேர் பலன் பெற்றுள்ளனர். 11 கோடி வீடுகளுக்கு குழாய் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

    உலகளாவிய நெருக்கடிகள் இருந்த போதும் பண வீக்கத்தை அரசு கட்டுக்குள் வைத்திருந்தது. தேசிய நெடுஞ்சாலையின் நீளம் 90 ஆயிரம் கிலோ மீட்டரில் இருந்து 1.46 லட்சம் கிலோ மீட்டர் ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

    விவசாயிகளுக்கு வங்கிகள் மூலம் வழங்கப்படும் எளிதான கடன் 3 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு உழைக்கிறது. உழவர் அட்டை போன்று நல உதவிகள் நிதி பயன்கள் பெற வழங்கப்பட்ட பிரத்யேக அட்டை மூலம் மீனவர்களும் நேரடியாக பயன் பெறுகின்றனர்.

    பழங்குடியினர் கிராமங்களுக்கும் 4ஜி தொலைத்தொடர்பு சேவை வழங்கப்படுகிறது. 11 கோடி வீடுகளுக்கு குழாய் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது.

    விவசாயிகளுக்கு வங்கிகள் மூலம் வழங்கப்படும் எளிதான கடன் 3 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. மீனவர்களுக்கு ஊக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மீன் உற்பத்தியும் இரட்டிப்பாகி உள்ளது. கைவினை கலைஞர்களுக்கு ஊக்கம் அளிக்க தனித்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

    முப்படைகளில் மகளிர் நிரந்தரமாக பணிபுரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. திருநங்கைகளுக்கு சமூகத்தில் கவுரவமான இடத்தை வழங்கவும், அவர்களின் உரிமைகளை பாதுகாக்கவும் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

    எல்லையோர கிராமங்களுக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. லட்சத்தீவுக்கு கடல் வழியே ஆப்டிக் பைபர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் நக்சல் வன்முறை குறைந்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் பயங்கரவாதம் குறைந்து உள்ளது. பயங்கரவாதம் போன்ற செயல்களுக்கு நமது படைகள் பதில் அளிக்கின்றன.

    கைவினை கலைஞர்கள் பயனடையும் வகையிலும் அத்தொழில்களில் புதியவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் பிரதமரின் விஸ்வகர்ம திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

    மேக் இன் இந்தியா என்ற சொல்லாடல் உலகளவில் இந்தியாவை உயர்த்திப் பிடிக்கும் உலக பிராண்டாக மாறியுள்ளது. செமி கண்டக்டர் துறையில் அன்னிய முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் வேலைவாய்ப்புகள் பெருகும்.

    ஜம்மு காஷ்மீரில் இன்று பாதுகாப்பான சூழல் நிலவுகிறது. உற்பத்தி துறையில் இந்தியா முக்கிய இடம் வகிக்கும் என உலக நாடுகள் நம்புகின்றன. சூரிய ஒளி, காற்றாலை மின்சார உற்பத்தி வேகமாக அதிகரித்து வருகிறது. விண்வெளி திட்டங்களிலும் உலக அளவில் சக்தி வாய்ந்த நாடாக இந்தியா மாறி வருகிறது.

    சூரிய ஆற்றல் மூலம் நடைபெறும் மின் உற்பத்தியில் உலகளவில் 5-வது இடத்தில் இந்தியா உள்ளது. விரைவில் முதலிடம் பிடிக்கும். பிரதம மந்திரியின் சூர்யோதயம் என்ற திட்டத்தின் கீழ் 1 கோடி வீடுகளில் சோலார் மேற்கூரைகள் அமைக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

    ஆயிரக்கணக்கான பழங்குடியின கிராமங்களில் மின்சாரம் மற்றும் சாலை இணைப்பு செய்யப்பட்டு உள்ளது. பழங்குடியின குடும்பங்கள் குழாய்கள் மூலம் சுத்தமான தண்ணீரை பெற தொடங்கியுள்ளன. பழங்குடியினர் வசிக்கும் கிராமங்களுக்கு 4ஜி இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. தாய்மொழியில் மருத்துவம் மற்றும் பொறியியல் ஆகிய படிப்புகள் கற்றுத் தரப்படுகின்றன. புதிய கல்விக்கொள்கை மூலம் மாணவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிட்டியுள்ளன. குழந்தைகளிடம் தாய்மொழி வழிக்கற்றலை புதிய தேசிய கல்விக் கொள்கை ஊக்குவிக்கிறது. அயோத்தியில் பால ராமர் பிரதிஷ்டை செய்யப்பட்ட பிறகு 5 நாளில் 13 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர். இந்தியாவிற்கு என பிரத்யேகமாக விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையம் அமைக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.

    பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தில் நாடு முழுவதும் 84 லட்சம் பேர் இணைந்துள்ளனர். மேக் இன் இந்தியாவை நோக்கி உலகமே ஈர்க்கப்படுகிறது. ஒரு நாடு வளர்ச்சியடைந்த நாடாக இருக்க பொருளாதார வளர்ச்சியை விட சமுதாய வளர்ச்சியே முக்கியம்.

    விளையாட்டு வீரர்களுக்கு முன் எப்போதும் இல்லாத ஆதரவை அரசு வழங்கி வருகிறது. விளையாட்டு துறைக்கு ஊக்கம் அளிக்க பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு உள்ளது.

    ஜி-20 மாநாட்டை இந்தியா நடத்திய விதம் உலகின் பாராட்டை பெற்றது.

    பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்துபவர்களின் சதவீதம் அரசின் நடவடிக்கையால் குறைந்துள்ளது. விண்வெளி திட்டங்களிலும் இந்தியா உலக அரங்கில் சக்தி வாய்ந்த நாடாக மாறியுள்ளது.

    இந்திய பெருங்கடல் உள்பட ஆழ்கடல் கனிமவள அகழ்வு ஆராய்ச்சிக்கான திட்டங்களை இந்தியா முன்னெடுத்துள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு செயற்கை நுண்ணறிவு துறையில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.

    ஏழை நாடுகளின் குரலாக இந்தியா ஒலித்து வருகிறது. இந்திய இளைஞர்களின் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டிற்காக அரசு நடவடிக்கைகளை எடுக்கிறது. உலகின் பல்வேறு நாடுகளின் நண்பனாக இந்தியா முக்கிய பங்கு வகிக்கின்றது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பாராளுமன்றத்தில் ஜனாதிபதி 1 மணி 15 நிமிடங்கள் பேசினார்.

    • முதன்முறையாக போர் விமானிகளாக பெண்கள் உள்ளனர்.
    • சூரிய மின்சக்தி உற்பத்தியில் உலக அளவில் 5வது இடத்தில் உள்ளோம்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. ஜனாதிபதி திரவுபதி முர்மு உரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறியதாவது:

    * 2 கோடிக்கும் அதிகமான பெண்களை லட்சாதிபதிகளாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

    * முதன்முறையாக போர் விமானிகளாக பெண்கள் உள்ளனர்.

    * பிரதமரின் கிசான் சம்மான் திட்டத்தின்கீழ் ரூ.2.80 லட்சம் கோடி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    * நெல், கோதுமையின் குறைந்தபட்ச ஆதார விலை 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட இரண்டரை மடங்கு அதிகரித்துள்ளது.

    * வேளாண் ஏற்றுமதி நான்கு லட்சம் கோடியை கடந்துள்ளது.

    * மீனவர்களுக்கும் கிசான் கடன் அட்டைக்கான பயன்கள் கிடைத்துள்ளது.

    * சுத்தமான குடிநீர் மூலம் பல்லாயிரக்கணக்கான குழந்தைகளின் ஆரோக்கியம் பாதுகாக்கப்பட்டுள்ளது.

    * மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் திட்டங்களை நிறைவேற்று வருகிறோம்.

    * மலைவாழ் கிராமங்களுக்கும், முதல்முறையாக மின்சாரம் இன்டர்நெட் வசதி கிடைத்துள்ளது.

    * 200க்கும் அதிகமாக பழங்குடியின கிராமங்களில் முதல்முறையாக குடிநீர், மின்சாரம் கிடைத்துள்ளது.

    * விஸ்வகர்மா திட்டம் மூலம் எளிதாக கடனுதவி வழங்கப்படுகிறது.

    * விஸ்வகர்மா சமுதாயத்தினருக்கு பயனளிக்கும் வகையில் பி.எம். விஸ்வகர்மா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    * சாலையோர சிறு வியாபாரிகள் பிரதமர் ஸ்வநிதி திட்டம் மூலம் பயனடைந்து வருகின்றனர்.

    * இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 28 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

    * நாட்டில் உள்ள கிராமங்களை மேம்படுத்த துடிப்பான கிராமங்கள் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    * அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகளால் ஜம்மு காஷ்மீரில் அமைதி நிலவுகிறது.

    * அடுத்த 25 ஆண்டு வளர்ச்சிக்கான பாதையை அரசு வகுத்துள்ளது.

    * இன்று இந்தியா மீதான உலக நாடுகளின் நம்பிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    * சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் துறைக்கு ஊக்கமளிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.

    * மருத்துவம், எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட துறைகள் ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளன.

    * இன்று மேக் இன் இந்தியா பொருட்கள் உலக அளவிலான பிராண்டாக மாறி உள்ளது.

    * சூரிய மின்சக்தி உற்பத்தியில் உலக அளவில் 5வது இடத்தில் உள்ளோம்.

    * வரும் நாட்களில் மேலும் 9 சோலார் பூங்காக்கள் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

    * ஒரு கோடி வீடுகளில் சூரிய மின்சக்தி தகடுகள் பதிக்கும் சூர்யோதய் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த உள்ளது.

    * பெட்ரோலில் எத்தனால் கலக்கும் திட்டம் மூலம் விவசாயிகளின் வருமானம் பன்மடங்கு அதிகரிக்கும்.

    * இந்தியாவிற்கென சொந்த விண்வெளி மையம் அமையும் நாள் வெகு தொலைவில் இல்லை.

    * புதிய தேசியக் கல்விக்கொள்கை வேகமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

    * பொறியியல், மருத்துவ படிப்புகளை தேசிய கல்விக்கொள்கையின் கீழ் தாய் மொழியில் வழங்க அறிவுறுத்தல்.

    * அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகள் மூலம் மாணவர்களின் இடைநிற்றல் கணிசமாக குறைந்துள்ளது.

    * 16 எய்ம்ஸ் மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன.

    * மருத்துவ படிப்புகளின் எண்ணிக்கை 3 மடங்கு அதிகரித்துள்ளது.

    * இந்தியாவிற்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று கூறினார்.

    • உலகிலேயே செல்போன் தயாரிப்பில் முன்னணி நாடாக இந்தியா திகழ்கிறது.
    • 10 ஆண்டுகளுக்கு முன்பு இரட்டை இலக்கத்தில் இருந்த விலைவாசி உயர்வு, தற்போது ஒற்றை இலக்கத்தில் உள்ளது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. ஜனாதிபதி திரவுபதி முர்மு உரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறியதாவது:

    * நாட்டின் மாதாந்திர சராசரி ஜி.எஸ்.டி. வரி வருவாய் ரூ.1.40 லட்சம் கோடியை கடந்துள்ளது.

    * ஜி.எஸ்.டி. வரி மூலம் ஒரே நாடு, ஒரே வரி சட்டம் கிடைத்தது.

    * இன்று நமது அந்நிய செலவாணி கையிருப்பு 600 கோடி டாலராக அதிகரித்துள்ளது.

    * உலகிலேயே செல்போன் தயாரிப்பில் முன்னணி நாடாக இந்தியா திகழ்கிறது.

    * இந்தியாவின் பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி ஒரு லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

    * உத்தரபிரதேசம் மற்றும் தமிழ்நாட்டில் பாதுகாப்பு காரிடார் பணிகள் நடைபெற்று வருகிறது.

    * விண்வெளி துறையில் புதிய நிறுவனங்கள் கால் பதிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    * நல்ல நிர்வாகத்தை வழங்குவதே முன்னுரிமையாக உள்ளது.

    * அந்நிய நேரடி முதலீடு மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.

    * நல்ல நிர்வாகத்தை வழங்குவதே முன்னுரிமையாக உள்ளது.

    * பல்வேறு சீர்திருத்தங்கள் மூலம், சிறுகுறு, நடுத்தர தொழில் துறையில் மிகப்பெரும் பலன்கள் கிடைத்துள்ளது.

    * டிஜிட்டல் மேலாண்மை துறையில் மத்திய அரசு மிகப்பெரிய சீர்திருத்தத்தை மேற்கொண்டது.

    * காலனி ஆதிக்க குற்ற நடைமுறை சட்டங்கள் ஒழிக்கப்பட்டுள்ளது.

    * இன்று பிற நாடுகளிலும் இந்திய அரசு யுபிஐ பண பரிவர்த்தனை வசதியை வழங்கிக் கொண்டிருக்கிறது.

    * கடந்த சில ஆண்டுகளில் நாடு, மிகச்சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி உள்ளது.

    * 4 லட்சம் கி.மீ.க்கும் அதிகமாக புதிய சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    * நாடு முழுவதும் அதிவேகமாக செல்லக்கூடிய வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

    * தேசிய நெடுஞ்சாலைகளின் தூரம் இரண்டரை மடங்கு அதிகரித்துள்ளது.

    * நாட்டில் உள்ள விமான நிலையங்களின் எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது.

    * 4 லட்சத்திற்கும் அதிகமான குடும்பங்களுக்கு கான்கிரீட் வீடுகள் வழங்கப்பட்டுள்ளது.

    * வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் ஜல்ஜீவன் திட்டத்திற்கு 4 லட்சம் கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது.

    * உஜ்வாலா திட்டத்தின் மூலம் எண்ணற்ற குடும்பங்களுக்கு இலவச எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்பட்டு வருகிறது.

    * எந்த ஒரு பயனாளியும் விடுபடாமல் அரசின் பயன்கள் சென்றடைய வேண்டும் என்பதே அரசின் இலக்கு.

    * 10 ஆண்டுகளுக்கு முன்பு இரட்டை இலக்கத்தில் இருந்த விலைவாசி உயர்வு, தற்போது ஒற்றை இலக்கத்தில் உள்ளது.

    * ரூ.2.5 லட்சத்தில் இருந்த தனிநபர் வருமான வரி விலக்கு, தற்போது ரூ.7 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

    * பிரதமர் மக்கள் மருந்தகத்தின் மூலம், கேன்சர் உள்ளிட்ட நோய்களுக்கும் குறைந்த விலையில் மருந்து விற்பனை செய்யப்படுகிறது.

    * ஏழைகளுக்கு இலவச உணவு தானியங்கள் வழங்கப்பட்டுள்ளது.

    * உதான் திட்டத்தின் மூலம் ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு குறைந்த விலையில் விமான டிக்கெட்.

    * 10 கோடிக்கும் அதிகமான பெண்கள் சுயமாக தொழில் செய்து வருகின்றனர் என்று கூறினார்.

    • கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்குப்பிறகு மகளிர் இட ஒதுக்கீடு மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
    • கடந்த ஆண்டு முழுவதுமே ஏராளமான வரலாற்று சிறப்புமிக்க சாதனைகளால் நிறைந்திருந்தது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. ஜனாதிபதி திரவுபதி முர்மு உரை நிகழ்த்தினார். புதிய பாராளுமன்றத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பேசியதாவது:

    * இந்த அவையில் எனது முதல் உரை இதுவாகும்.

    * சுதந்திரத்தின் அமிர்த பெருவிழாவை வளர்ச்சியடைந்த பாரதம் நிர்ணயம் செய்யும்.

    * எது தேசம் எனது மண் யாத்திரை மூலம் பல்வேறு கிராமங்களில் மண் எடுக்கப்பட்டு அமிர்த பெருவிழா கொண்டாடப்பட்டது.

    * பிர்சா முண்டாவின் பிறந்த தினம் பழங்குடியினர் கவுரவ தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    * கடந்த ஆண்டும் நாட்டின் வரலாற்றின் வரலாற்ற சிறப்புமிக்க வருடம்.

    * நிலவின் தென் துருவத்தில் பாரதத்தின் மூவர்ணக்கொடி பட்டொளி வீசியது.

    * சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா மிஷன் தொடங்கப்பட்டது.

    * ஜி20 நாடுகளின் உச்சி மாநாட்டிற்கு இந்தியா தலைமை ஏற்று நடத்தியது.

    * பாரா ஒலிம்பிக் போட்டியில் நூற்றுக்கும் அதிகமான பதக்கங்களை இந்தியா குவித்தது.

    * கடந்தாண்டு லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    * கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்குப்பிறகு மகளிர் இட ஒதுக்கீடு மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    * மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மூலம் மக்களவை, மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கும்.

    * சீர்திருத்தம், செயல்பாடு போன்றவற்றில் மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது.

    * கடந்த ஆண்டு முழுவதுமே ஏராளமான வரலாற்று சிறப்புமிக்க சாதனைகளால் நிறைந்திருந்தது.

    * அயோத்தியில் ராமர் கோவில் நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது.

    * ஜம்மு காஷ்மீரில் 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டது உச்சநீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டது.

    * ஒன் ரேங்க், ஒன் பென்ஷன் திட்டத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்தியது.

    * டிஜிட்டல் துறையில் இந்தியா அளப்பரிய சாதனைகளை படைத்து வருகிறது.

    * கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 25 கோடி பேர் வறுமையில் இருந்து விடுபட்டுள்ளனர்.

    * ஐந்தாவது மிகப்பெரிய பொருளாதார நாடு என்ற நிலையை எட்டி உள்ளோம்.

    * கதர் மற்றும் கிராமப்பொருட்களின் விற்பனை நான்கு மடங்கு அதிகரித்துள்ளது.

    * வருமான வரி தாக்கல் செய்வோர் எண்ணிக்கை 3 கோடியிலிருந்து 8 கோடியாக அதிகரித்துள்ளது என்று கூறினார்.

    • நாளை மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
    • புதிய பாராளுமன்றத்தில் நடைபெறும் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் இதுவாகும்.

    புதுடெல்லி:

    ஒவ்வொரு ஆண்டும் பாராளுமன்றத்தின் முதல் கூட்டம் ஜனாதிபதி உரையுடன் தொடங்குவது வழக்கம்.

    இந்நிலையில், இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடரான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது.

    ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் முதல் நாளில் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரை நிகழ்த்தி வருகிறார்.

    முன்னதாக, பாரம்பரிய முறைப்படி சாரட் வண்டியில் வந்த ஜனாதிபதி திரவுபதி முர்முவை பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோர் வரவேற்றனர்.

    • பாராளுமன்றத்தின் முதல் கூட்டத் தொடரான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது.
    • நாளை மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

    புதுடெல்லி:

    ஒவ்வொரு ஆண்டும் பாராளுமன்றத்தின் முதல் கூட்டம் ஜனாதிபதி உரையுடன் தொடங்குவது வழக்கம்.

    இந்நிலையில், இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடரான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் முதல் நாளில் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரை நிகழ்த்த உள்ளார்.

    இந்நிலையில், பாரம்பரிய முறைப்படி சாரட் வண்டியில் வந்த ஜனாதிபதி திரவுபதி முர்முவை பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோர் வரவேற்றனர். அவர்கள் ஜனாதிபதியை பாராளுமன்றத்தினுள் அழைத்துச் சென்றனர்.

    • இந்தியாவின் ஜி20 தலைமைக்கு 'வசுதைவ குடும்பகம்' என்பது மையக்கரு
    • பல்வேறு முக்கிய பிரச்சனைகள் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும்

    உலக பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சவால்களை எதிர்கொள்ளும் விதமாக உலகின் வல்லரசு நாடுகளான அமெரிக்கா, சீனா மற்றும் ரஷியா ஆகிய நாடுகளுடன் இந்தியா உட்பட 19 உலக நாடுகளும், ஐரோப்பிய ஒன்றியமும் இணைந்து உருவாக்கிய ஒரு பன்னாட்டு நாடுகளின் கூட்டமைப்பு ஜி20.

    வருடாவருடம் மாறிவரும் இக்கூட்டமைப்பின் தலைமை இம்முறை இந்தியாவிற்கு வழங்கப்பட்டுள்ளதால், இதன் 18-வது உச்சி மாநாடு இந்திய தலைநகர் புதுடெல்லியில் இன்றும் நாளையும் பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டப மையத்தில் நடைபெறவுள்ளது.

    இதில் பங்கேற்க இக்கூட்டமைப்பின் பெரும்பாலான தலைவர்கள் புதுடெல்லிக்கு வருகை தந்துள்ளனர். அவர்களுக்கு சிறப்பான உபசரிப்பும், தீவிர பாதுகாப்பும் புதுடெல்லியில் வழங்கப்பட்டுள்ளது. வருகை தந்திருக்கும் தலைவர்கள் அனைவரும் நட்சத்திர ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இக்கூட்டமைப்பில் பல நாடுகளின் தலைவர்களுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறார்.

    இந்தியா, இந்த மாநாட்டிற்கான கருப்பொருளாக "ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்" எனும் பொருள்பட வசுதைவ குடும்பகம் எனும் கருத்தை மையப்படுத்தியுள்ளது.

    இதை முன்னிலைப்படுத்தி இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு தனது அதிகாரபூர்வ எக்ஸ் வலைதளத்தில் தெரிவித்திருப்பதாவது:-

    இந்தியாவிற்கு வருகை தந்திருக்கும் உலக தலைவர்களையும் பிரதிநிதிகளையும் மனமார வரவேற்கிறேன். இந்தியாவின் "வசுதைவ குடும்பகம்" எனப்படும் இம்மாநாட்டிற்கான மையக்கருத்து, உலகளாவிய வளர்ச்சிக்கான நிலையான, மனித முன்னேற்றத்தை உள்ளடக்கியதாகும். இதனை அடைவதற்கான உங்களின் முயற்சிகள் வெற்றி பெற நான் வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு இந்திய ஜனாதிபதி கூறியுள்ளார்.

    தற்போதைய ஜி20 தலைமையில் இந்தியா அனைவருக்குமான ஒரு உள்ளடக்கிய வளர்ச்சி, டிஜிட்டல் கண்டுபிடிப்புகள், பருவகாலநிலை மாற்றங்களின் தாக்கங்கள் மற்றும் சமமான உலகளாவிய சுகாதாரம் ஆகிய பல்வேறு பிரச்சனைகளில் கவனம் செலுத்தி வருகிறது.

    ஜி20 உறுப்பு நாடுகள் உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 85 சதவீதத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    ×