என் மலர்
நீங்கள் தேடியது "அம்பாலா"
- ரபேல் போர் விமானங்கள் செப்டம்பர் 2020-ல் அம்பாலாவில் உள்ள விமானப்படை நிலையத்தில் இந்திய விமானப்படையில் முறையாக சேர்க்கப்பட்டன.
- அசாமின் தேஜ்பூர் விமானப் படைத்தளத்தில் இருந்து சுகோய் 30 ரக போர் விமானத்தில் திரவுபதி முர்மு பயணம் செய்துள்ளார்.
பிரெஞ்சு விண்வெளி நிறுவனமான டசால்ட் ஏவியேஷன் தயாரித்த ரபேல் போர் விமானங்கள், செப்டம்பர் 2020-ல் அம்பாலாவில் உள்ள விமானப்படை நிலையத்தில் இந்திய விமானப்படையில் முறையாக சேர்க்கப்பட்டன.
ஏப்ரல் 22-ந்தேதி நடந்த கொடூரமான பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியாவால் தொடங்கப்பட்ட ஆபரேஷன் சிந்தூரின்போது ரபேல் ஜெட் விமானங்கள் பயன்படுத்தப்பட்டன.
இந்நிலையில் அரியானா மாநிலத்தின் அம்பாலா விமானப்படை தளத்திலிருந்து ரபேல் போர் விமானத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பயணம் செய்தார்.
இதன் மூலம் ரஃபேல் போர் விமானத்தில் பறக்கும் முதல் இந்திய ஜனாதிபதியாகவும், இந்திய விமானப்படை வரலாற்றில் சிறப்பு சாதனை படைக்கும் பெண்மணியாகவும் திரவுபதி முர்மு பதிவாகி உள்ளார்.
கடந்த 2023-ம் ஆண்டு அசாமின் தேஜ்பூர் விமானப் படைத்தளத்தில் இருந்து சுகோய் 30 ரக போர் விமானத்தில் திரவுபதி முர்மு பயணம் செய்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிகள் ஏபிஜே அப்துல் கலாம் மற்றும் பிரதிபா பாட்டீல் ஆகியோர் சுகோய்-30 எம்கேஐ போர் விமானங்களில் பயணம் செய்து இருக்கின்றனர். இதனால், சுகோய்-30 எம்கேஐ போர் விமானத்தில் பறந்த மூன்றாவது ஜனாதிபதி மற்றும் இரண்டாவது பெண் ஜனாதிபதி திரவுபதி முர்மு ஆவார்.
- ஜனாதிபதி திரவுபதி முர்மு நாளை அரியானா மாநிலம் செல்கிறார்.
- அங்கு அம்பாலா விமானப் படைத்தளத்தில் ரபேல் போர் விமானத்தில் பயணிக்கிறார்.
புதுடெல்லி:
ஜனாதிபதி திரவுபதி முர்மு நாளை அரியானா மாநிலத்தின் அம்பாலாவுக்கு செல்கிறார்.
அங்குள்ள விமானப் படைத்தளத்தில் ரபேல் போர் விமானத்தில் பயணம் செய்ய உள்ளார்.
ஏற்கனவே, 2023ம் ஆண்டு அசாமின் தேஜ்பூர் விமானப் படைத்தளத்தில் இருந்து சுகோய் 30 ரக போர் விமானத்தில் பயணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- அம்பாலாவிலிருந்து வந்த இந்த இரண்டு ரயில்களும் மதோபூர் நரகில் ஸ்ரீஹிந் பகுதியில் மோதிக்கொண்டதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது
- இந்த விபத்தில் ரயிலின் லோக்கோ பைலட்கள் இருவர் பலத்த காயமடைந்தனர்.
பஞ்சாப் மாநிலம் பதேர்கர் சாகிப் மாவட்டத்தில் இன்று 9ஜூன் 20 அதிகாலை இரண்டு சரக்கு ரயில்கள் மோதிக்கொண்டதில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ரயிலின் லோக்கோ பைலட்கள் இருவர் பலத்த காயமடைந்தனர்.

அம்பாலாவிலிருந்து வந்த இந்த இரண்டு ரயில்களும் மதோபூர் நரகில் ஸ்ரீஹிந் பகுதியில் மோதிக்கொண்டதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து தங்களுக்கு அதிகாலை 4 மணிக்கு தகவல் கிடைத்ததாக போலீசார் தெரிவித்தனர். அதிகாலை சுமார் 3.45 மணிக்கு இந்த விபத்து நடந்தது என்று கூறப்படுகிறது.
விபத்தில் படுகாயமடைந்த இரேன்ப்து லோக்கோ பைலைட்களுக்கும் பதேர்கர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர்களை மேல் சிகிச்சைக்காக பாட்டியாலாவில் ரஜீந்திரா மருத்துவமனைக்கு கொண்டு செல்ல மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
அம்பலா- ஸ்ரீஹிந் ரயில்வே தடத்தில் அதிக அளவிலான ரயில்கள் இயக்கப்படுவதால் மிதமிஞ்சிய போக்குவரத்து நிறைந்த வழித்தடமாக உள்ளது. இந்த விபத்தில் ரயில் பெட்டிகள் தடம் புரண்டு கிடம்பத்தால் மற்ற ரயில்கள் செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பயணிகள் ரயில்கள் செல்ல முடியாததால் மக்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இதற்கிடையில் இந்த விபத்து குறித்து ரயில்வே நிர்வாகம் விசாரித்து வருகிறது.






