search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "freight train"

    • டிரைவர் இல்லாமல் சரக்கு ரெயில் ஓடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
    • என்ஜின் டிரைவர் சந்தீப்குமாரை பணிநீக்கம் செய்து வடக்கு ரெயில்வே உத்தரவிட்டுள்ளது.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் கதுவா ஸ்டேஷனில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சரக்கு ரெயில் ஒன்று நிறுத்தப்பட்டு இருந்தது. ஹேண்ட் பிரேக் போடாமல் டிரைவர் என்ஜினில் இருந்து கீழே இறங்கினார். தண்டவாள பாதை சாய்வாக இருந்ததால் திடீரென அந்த சரக்கு ரெயில் பதான்கோட் நோக்கி ஓடத் தொடங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் மற்றும் ஊழியர்கள் ரெயிலை நிறுத்த முடியாமல் தவித்தனர்.

    சுமார் 80 கி.மீ. தூரம் வரை ஓடிய அந்த சரக்கு ரெயில் பஞ்சாப் முகேரியன் ஹோஷியார்பூரில் அந்த சரக்கு ரெயில் நிறுத்தப்பட்டது.

    இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதால், இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

    இந்நிலையில், டிரைவர் இல்லாமல் சரக்கு ரெயில் ஓடிய சம்பவம் தொடர்பாக என்ஜின் டிரைவர் உள்பட 6 பேரை வடக்கு ரெயில்வே நிர்வாகம் சஸ்பெண்ட் செய்தது.

    இதுகுறித்த நடத்தப்பட்ட விசாரணையில், சம்பந்தப்பட்ட என்ஜின் டிரைவர் அலட்சியமாக செயல்பட்டதே இச்சம்பவத்திற்கு காரணம் என உறுதி செய்யப்பட்டது. இதனால் என்ஜின் டிரைவர் சந்தீப்குமாரை சஸ்பெண்ட் செய்து வடக்கு ரெயில்வே நிர்வாகம் உத்தரவிட்டது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜம்மு காஷ்மீரின் கதுவா ஸ்டேஷனில் சரக்கு ரெயில் ஒன்று நிறுத்தப்பட்டு இருந்தது.
    • தண்டவாள பாதை சாய்வாக இருந்ததால் திடீரென அந்த சரக்கு ரெயில் பதான்கோட் நோக்கி ஓடியது

    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் கதுவா ஸ்டேஷனில் சரக்கு ரெயில் ஒன்று நிறுத்தப்பட்டு இருந்தது. ஹேண்ட் பிரேக் போடாமல் டிரைவர் என்ஜினில் இருந்து கீழே இறங்கியுள்ளார்.

    அப்போது ரெயில் தண்டவாள பாதை சாய்வாக இருந்ததால் திடீரென அந்த சரக்கு ரெயில் பதான்கோட் நோக்கி ஓடத் தொடங்கியது. இதனால் ரெயில் டிரைவர் மற்றும் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ரெயிலை நிறுத்த முடியாமல் தவித்தனர்.

    78 கி.மீ. தூரம் வரை அந்த சரக்கு ரெயில் டிரைவர் இல்லாமல் ஓடிய நிலையில், பஞ்சாப் முகேரியன் ஹோஷியார்பூரில் அந்த சரக்கு ரெயில் நிறுத்தப்பட்டது.

    டிரைவர் இல்லாமல் சரக்கு ரெயில் ஓடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என ஜம்மு கோட்ட ரெயில்வே மேலாளர் தெரிவித்துள்ளார்.

    • தகவலறிந்த ரெயில்வே துறை அதிகாரிகள் மற்றொரு என்ஜினை கொண்டு வந்து பழுதடைந்த என்ஜின் மற்றும் சரக்கு ரெயில் பெட்டிகளை இழுத்து சென்றது.
    • அடிப்படை வசதி இல்லாத அந்த ரெயில் நிலையத்தில் பசிக்கு கூட சாப்பிட ஏதும் கிடைக்காமல் குழந்தைகளுடன் பயணிகள் தவித்தனர்.

    தருமபுரி:

    சேலத்தில் இருந்து பெங்களூரு நோக்கி புறப்பட்ட ஒரு சரக்கு ரெயில் கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே உள்ள ராயக்கோட்டையில் நேற்று நள்ளிரவு வந்தடைந்தது. அந்த ரெயிலில் திடீரென்று என்ஜீனில் ஏற்பட்டது. உடனே ரெயில் என்ஜீன் டிரைவர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். தகவறிந்த ரெயில்வே துறை அதிகாரிகள் மற்றொரு என்ஜினை கொண்டு வந்து பழுதடைந்த என்ஜின் மற்றும் சரக்கு ரெயில் பெட்டிகளை இழுத்து சென்றது. இதன்காரணமாக பெங்களூருவில் இருந்து தருமபுரி வழியாக செல்லக்கூடிய பெங்களூரு-தருமபுரி பாசஞ்சர் ரெயில், பெங்களூரு-மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ், குர்லா எக்ஸ்பிரஸ், கண்ணனூர் எக்ஸ்பிரஸ், தூத்துக்குடி எக்ஸ்பிரஸ், நாகர்கோவில்-பெங்களூரு எக்ஸ்பிரஸ் உள்பட 6 ரெயில்களும் 3மணி நேரம் தாமதம் ஆனது.

    பெங்களூரு-சேலம் ரெயில்கள் தாமதம் ஆனது. இதனால் கெலமங்கலம் ரெயில் நிலையத்தில் வெளியூருக்கு செல்வதற்காக காத்திருந்த பயணிகள் அங்கு 3 மணிநேரம் ரெயில்கள் ஏதும் வராமல் அடுத்தடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் காத்து இருந்தனர். அப்போது அடிப்படை வசதி இல்லாத அந்த ரெயில் நிலையத்தில் பசிக்கு கூட சாப்பிட ஏதும் கிடைக்காமல் குழந்தைகளுடன் பயணிகள் தவித்தனர்.

    • பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் அட்டைதாரர்களுக்கு விநியோகிக்கப்படும் .
    • சரக்கு ரயிலின் 42 வேகன்களில் ஏற்றப்பட்டு கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் முப்போகம் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு விளைவிக்கப்படும் நெல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு அரவை க்காக அனுப்பப்படும்.

    இது தவிர வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்து அனுப்பி வைக்கப்படும் அரிசி பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் அட்டைதாரர்களுக்கு விநியோகிக்கப்படும் .

    இந்த நிலையில் இன்று தஞ்சையில் இருந்து 2500 டன் புழுங்கல் அரிசி லாரிகளில் ஏற்றப்பட்டு ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன.

    பின்னர் சரக்கு ரயிலின் 42 வேகன்களில் ஏற்றப்பட்டு கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    • கோதுமை, பருப்பு உள்ளிட்ட தானியங்கள் சரக்கு ரெயில்கள் மூலம் கொண்டு வரப்படுகின்றன.
    • 3,300 டன் பருப்பு, கோதுமை ஆகியவை சரக்கு ரெயில் மூலம் சேலம் செவ்வாய் பேட்டை மார்க்கெட் ரெயில் நிலையத்துக்கு வந்தது.

    சேலம்:

    சேலம் செவ்வாய்பேட்டை மார்க்கெட் ரெயில் நிலையத்துக்கு வட மாநிலங்களில் இருந்து கோதுமை, பருப்பு உள்ளிட்ட தானியங்கள் சரக்கு ரெயில்கள் மூலம் கொண்டு வரப்படுகின்றன. இந்த நிலையில் நேற்று மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து 3,300 டன் பருப்பு, கோதுமை ஆகியவை சரக்கு ரெயில் மூலம் சேலம் செவ்வாய் பேட்டை மார்க்கெட் ரெயில் நிலையத்துக்கு வந்தது. பின்னர் தொழிலாளர்கள் சரக்கு ரெயிலில் இருந்து பருப்பு, கோதுமை மூட்டைகளை இறக்கி லாரிகளில் ஏற்றி பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைத்தனர்.

    • சரக்கு ரெயில் தீப்பொறியுடன் புகை மூட்டமாக வந்தது.
    • ஸ்டேசன் மாஸ்டருக்கு தகவல் கொடுத்ததால் தான் உடனே சிக்னல் ஆப் செய்யப்பட்டது.

    ராயக்கோட்டை அருகே சரக்கு ரெயில் தீப்பொறியுடன் புகை மூட்டமாக வந்தது. இதனால் பதறிப்போன ரெயில்வே கேட் கீப்பர் உடனே ஸ்டேசன் மாஸ்டருக்கு தகவல் கொடுத்ததால் தான் உடனே சிக்னல் ஆப் செய்யப்பட்டது.

    என்ஜின் டிரைவர் ரெயிலை நிறுத்தினார். இல்லையென்றால் ரெயில் தொடர்ந்து சென்றால் மேலும் ரெயில் பெட்டிகள் தடம் புரண்டு பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும். ஊழியர்களின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    • தஞ்சை மாவட்டத்தில்குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
    • நெல் மூட்டைகள் சரக்கு ரெயிலில் 42 வேகன்களில் ஏற்றப்பட்டு அரவைக்காக ஓசூருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்கி வருகின்றன. இங்கு குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

    மேலும் கோடைகால சாகுபடியும் நடைபெறும்.

    பின்னர் அறுவடை செய்யப்பட்ட நெல் கொள்முதல் செய்யப்பட்டு லாரிகள் மூலம் ஏற்றப்பட்டு சேமிப்பு கிடங்குகளுக்கு கொண்டு வரப்பட்டு அடுக்கி வைக்கப்படும்.

    இந்த நெல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரவைக்காக அனுப்பப்பட்டு அதில் இருந்து கிடைக்கும் அரிசி பொதுவினி யோகத்திட்டத்தில் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இது தவிர தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரவை ஆலைகளுக்கும் அனுப்பப்படும்.

    இந்தநிலையில் இன்று பல்வேறு சேமிப்பு கிடங்குகளில் இருந்து 2000 டன் நெல் மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு தஞ்சை ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன.

    அந்த நெல் மூட்டைகள் சரக்கு ரெயிலில் 42 வேகன்களில் ஏற்றப்பட்டு அரவைக்காக ஓசூருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    • சேமிப்பு கிடங்குகளில் இருந்து 2000 டன் நெல் மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு தஞ்சை ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன
    • நெல் மூட்டைகள் சரக்குரெயிலில் 42 வேகன்களில் ஏற்றப்பட்டு அரவைக்காக தர்மபுரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தின் நெற்களஞ்சியமாக காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்கள் விளங்கி வருகின்றன. இங்கு குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. அறுவடை செய்யப்பட்ட நெல் கொள்முதல் செய்யப்படும். பின்னர் அங்கிருந்து லாரிகள் மூலம் ஏற்றப்பட்டு சேமிப்பு கிடங்குகளுக்கு கொண்டு வரப்பட்டு அடுக்கி வைக்கப்படும்.

    இந்த நெல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரவைக்காக அனுப்பப்பட்டு அதில் இருந்து கிடைக்கும் அரிசி பொதுவினி யோகத்திட்டத்தில் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இது தவிர தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரவை ஆலைகளுக்கும் அனுப்பப்படும்.

    இந்தநிலையில் இன்று பல்வேறு சேமிப்பு கிடங்குகளில் இருந்து 2000 டன் நெல் மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு தஞ்சை ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன.அந்த நெல் மூட்டைகள் சரக்குரெயிலில் 42 வேகன்களில் ஏற்றப்பட்டு அரவைக்காக தர்மபுரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    • ரெயில் பெட்டிகள் தடம்புரண்டது குறித்து உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
    • முதலில் சரக்கு ரெயிலின் தடம்புரண்ட பெட்டிகள் தவிர மற்ற பெட்டிகள் தனியாக இழுத்து செல்லப்பட்டன.

    மதுரை:

    மதுரை மாவட்டத்தில் தினமும் அதிக ரெயில்கள் கடந்து செல்லும் நிலையமாக திகழ்வது வாடிப்பட்டி ரெயில் நிலையம். தென் மாவட்டங்களில் இருந்து மதுரை வழியாக வெளி மாநிலங்கள், வெளி ஊர்களுக்கு செல்லக்கூடிய அனைத்து ரெயில்களும் இந்த வழியாக தான் சென்று வருகின்றன.

    மேலும் இந்த ரெயில் நிலையத்தில் இருந்து கர்நாடகா, அஸ்ஸாம், மேற்குவங்காளம் உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு சரக்கு ரெயில் மூலம் டிராக்டர்கள் கொண்டு செல்லப்படுகின்றன. அதே போன்று வடமாநிலத்திற்கு டிராக்டர்கள் ஏற்றி செல்வதற்காக சரக்கு ரெயில் ஒன்று 24 பெட்டிகளுடன் வாடிப்பட்டி ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

    பராமரிப்பு பணி மேற்கொள்வதற்காக அந்த ரெயில் மதுரை ரெயில் நிலையத்திற்கு நேற்று இரவு கொண்டு வரப்பட்டது. நள்ளிரவு 1.20 மணியளவில் மதுரை ரெயில் நிலைய 3-வது நடைமேடையில் வந்து கொண்டிருந்த அந்த ரெயிலின் நடுப்பகுதியில் இருந்த 2 பெட்டிகள் திடீரென தடம்புரண்டன.

    மேலும் தடம்புரண்ட பெட்டிகள் நடைமேடையில் மோதியது. இதையடுத்து என்ஜின் டிரைவர் ரெயிலை நிறுத்தினார். நடைமேடையில் ரெயில் பெட்டிகள் மோதியதால் பயங்கர சத்தம் எழுந்தது. இதனால் ரெயில்வே ஊழியர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்தனர்.

    ரெயில் பெட்டிகள் தடம்புரண்டது குறித்து உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ரெயில்வே கோட்ட மேலாளர் பத்மநாபன் அனந்த் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியை துரிதப்படுத்தினர்.

    முதலில் சரக்கு ரெயிலின் தடம்புரண்ட பெட்டிகள் தவிர மற்ற பெட்டிகள் தனியாக இழுத்து செல்லப்பட்டன. பின்பு மீட்பு பணிக்கு பயன்படுத்தப்படும் இழுவை என்ஜின் வரவழைக்கப்பட்டு தடம்புரண்ட பெட்டிகள் தண்டவாளத்தில் தூக்கி வைக்கப்பட்டன.

    மீட்பு பணிகள் 2 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. சென்னை மற்றும் வெளியூர்களிலிருந்து நெல்லை, நாகர்கோவில், தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய ஏராளமான ரெயில்கள் வழக்கமாக அதிகாலை 2 மணிக்கு பிறகே மதுரையை கடந்து செல்லும்.

    மதுரை ரெயில் நிலையத்தில் சரக்கு ரெயில் பெட்டிகள் தடம்புரண்டதால் அந்த ரெயில்கள் அனைத்தும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. சென்னையிலிருந்து மதுரைக்கு வந்த பாண்டியன் எக்ஸ்பிரஸ் திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.

    3-வது நடைமேடையை தவிர மீதமுள்ள நடைமேடைகள் வழியாக ஒவ்வொரு ரெயிலாக இயக்கப்பட்டன. இதனால் அனைத்து ரெயில்களும் காலதாமதமாக மதுரையை கடந்து சென்றன.

    சென்னை-கொல்லம், பெங்களூரு-நாகர்கோவில், கோவை-நாகர்கோவில், சென்னை-கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், சென்னை-திருவனந்தபுரம் அனந்தபுரி எக்ஸ்பிரஸ், சென்னை-தூத்துக்குடி முத்துநகர் எக்ஸ்பிரஸ், சென்னை-செங்கோட்டை பொதிகை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரெயில்கள் சுமார் 1 மணி நேரம் முதல் 2 மணி நேரம் வரை தாமதமாக சென்றன.

    தடம்புரண்ட ரெயில்பெட்டிகள் பிளாட்பாரத்தில் மோதியதால் அவை சேதமடைந்தன. அதே போல் பெட்டிகள் மோதியதில் பிளாட்பாரமும் சற்று சேதமடைந்தது. நள்ளிரவு 2 மணிக்கு மேல் தொடங்கி மீட்பு பணி இன்று காலை 5.50 மணிக்கு முழுமையாக நிறைவடைந்தது.

    மதுரை ரெயில் நிலையம் வழியாக தினமும் 100-க்கும் மேற்பட்ட ரெயில்கள் சென்று வருகின்றன. இதனால் மதுரை ரெயில் நிலையத்தில் 24 மணி நேரமும் ஊழியர்கள் கண்காணிப்பு மற்றும் பராமரிப்பு ஈடுபடுவது வழக்கம்.

    இந்த நிலையில் சரக்கு ரெயில் பெட்டிகள் தடம்புரண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.சரக்கு ரெயிலின் என்ஜின் டிரைவர் மற்றும் ரெயில் நிலைய ஊழியர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஏப்ரல் மாதம் கூடல்நகர் பகுதியில் இதே போன்று சரக்கு ரெயில் பெட்டிகள் தடம்புரண்டது குறிப்பிடத்தக்கது. * * * தடம்புரண்ட சரக்கு ரெயில் பிளாட்பாரத்தில் நிறுத்திவைக்கப்பட்டது. * * * சேதமடைந்த ரெயில் பெட்டிகள். * * * தடம்புரண்ட ரெயில் பெட்டி நடைமேடையில் மோதி நிற்கும் காட்சி.

    இணையதளத்தில் விபரங்களை அறியலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    கோவையில் இருந்து புதுடில்லி செல்லும் சரக்கு ரெயிலில் தங்களது பொருட்களை அனுப்ப விரும்புவோர், முன்பதிவு செய்யலாம் என திருப்பூர் ரெயில்வே வணிகப்பிரிவு அழைப்பு விடுத்துள்ளது.

    கோவை வடக்கு ரெயில் நிலையத்தில் இருந்து புதுடெல்லி படேல் நகருக்கு ஒப்பந்த அடிப்படையில், தனியார் நிறுவனம் மூலமாக சரக்கு ெரயில் இயங்கி வருகிறது. துணி, மருந்து, காய்கறி, பழம் கொண்டு செல்லப்பட்டு வருகிறது.

    கொரோனாவால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த இந்த ரெயில் இயக்கம், மே இரண்டாவது வாரம் முதல் மீண்டும் துவங்கப்பட்டுள்ளது. மாதம் இருமுறை பயணிக்கிறது. சனிக்கிழமை இரவு 10 மணிக்கு கோவை வடக்கு ரெயில் நிலையத்தில் இருந்து ெரயில் புறப்படும்.

    திருப்பூர், ஈரோடு, சேலம், ரேணிகுண்டா, நாகபுரி வழியாக புதுடில்லி சென்று சேரும்.அங்கிருந்து புதன்கிழமை காலை 6 மணிக்கு புறப்படும் ரெயில் வெள்ளி இரவு, 8:30க்கு கோவை வந்தடையும். இந்த ரெயிலில் தங்களது பொருட்கள், சரக்குகளை அனுப்ப விரும்புவோர் 70109 97007 என்ற எண்ணில் அழைக்கலாம். மேலும் விபரங்களுக்கு, parcel.indianrail.gov.in என்ற இணையதளத்தில் விபரங்களை அறியலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    “கூடுதலாக 15 நிமிடம் வேலை பார்த்து விட்டேன்” எனக்கூறி சரக்கு ரெயிலை பாதியில் நிறுத்திய என்ஜின் டிரைவரால் சீர்காழி அருகே 2 மணி நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. #VaitheeswaranKoilRailwayStation
    சீர்காழி:

    நாகை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் ரெயில் நிலையம் அமைந்துள்ளது. நவக்கிரகங்களில் செவ்வாய் பரிகார தலமாக வைத்தீஸ்வரன் கோவில் உள்ளது. இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் ரெயில்களில் வந்து செல்வர். பயணிகள் ரெயில் மட்டும் வைத்தீஸ்வரன்கோவில் ரெயில் நிலையத்தில் தினமும் 2 நிமிடம் நின்று பயணிகளை ஏற்றி, இறக்கி செல்வது வழக்கம். எக்ஸ்பிரஸ் ரெயில்களில் 2 மட்டும் தினமும் 2 தடவை நின்று செல்லும்.

    இதேபோல் நெய்வேலியில் இருந்து காரைக்கால் துறைமுகத்துக்கு தினமும் சரக்கு ரெயில்கள் நிலக்கரி ஏற்றி இவ்வழியே அதிகளவில் செல்லும். ஆனால் இந்த ரெயில்கள் எந்த ரெயில் நிலையத்திலும் நின்று செல்லாது.

    இந்நிலையில் நேற்று இரவு 7.30 மணியளவில் நிலக்கரி ஏற்றிக் கொண்டு ஒரு சரக்கு ரெயில் வந்து கொண்டிருந்தது. இதனால் வைத்தீஸ்வரன் கோவில் ரெயில் நிலைய மாஸ்டர் அந்த ரெயில் தடையின்றி செல்ல சிக்னலை மாற்றி விட்டு ரெயில் நிலையத்தை கடந்து செல்ல காத்திருந்தார்.

    ஆனால் அந்த ரெயில் எந்த முன்னறிவிப்புமின்றி வைத்தீஸ்வரன் கோவில் ரெயில் நிலையத்தில் திடீரென நிறுத்தப்பட்டது. இதனால் ஸ்டேசன் மாஸ்டர் உடனடியாக சரக்கு ரெயிலை இயக்கி வந்த என்ஜின் டிரைவர் முத்துராஜாவிடம் சென்று ‘எதனால் ரெயிலை நிறுத்தினீர்கள்’ என்று கேட்டார்.

    அப்போது அவர் “எனக்கு 12 மணிநேரம் மட்டுமே பணி. ஆனால் கூடுதலாக 15 நிமிடம் ரெயிலை இயக்கி வந்துள்ளேன். இதனால் மேற்கொண்டு என்னால் ரெயிலை இயக்க முடியாது” என்று கூறியதால் ஸ்டேசன் மாஸ்டர் அதிர்ச்சியடைந்தார்.

    இந்த சரக்கு ரெயில் திடீரென நிறுத்தப்பட்டதால் அங்கு புறப்பட தயாராக இருந்த திருப்பதி-காரைக்கால் ரெயிலும் இயக்க தாமதமானது. மேலும் அதிக பெட்டிகள் கொண்ட சரக்கு ரெயில் சுமார் 100 மீட்டர் வரை பெட்டிகளுடன் நின்றதால் வைத்தீஸ்வரன்கோவில்-புங்கனூர் ரெயில்வே கேட்டை கடந்தும் பெட்டிகள் நின்றிருந்தது. இதனால் அந்த வழியே கடந்து செல்ல முடியாமல் மினிபஸ்கள், ஆட்டோக்கள், மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்கள் பெரும் அவதிக்கு ஆளாகினர்.

    இதனால் ஸ்டடேசன் மாஸ்டர் மற்றும் திருப்பதி எக்ஸ்பிரஸ் ரெயில் பயணிகள் சென்று என்ஜின் டிரைவர் முத்துராஜாவிடம் ரெயிலை இயக்கி செல்லுமாறு கேட்டனர். ஆனால் அவர் மறுத்து விட்டார்.

    இதையடுத்து சுமார் 2 மணிநேரம் வரை ரெயில் வைத்தீஸ்வரன் கோவிலில் நிறுத்தப்பட்டது. பின்னர் ‘அருகிலுள்ள மாயவரம் ரெயில் நிலையத்திலாவது தற்சமயம் சரக்கு ரெயிலை கொண்டு சென்று நிறுத்துங்கள்’ என்று ஸ்டேசன் மாஸ்டர் கேட்டுக் கொண்டார்.

    இதையடுத்து சற்று இறங்கி வந்த டிரைவர் 2 மணி நேர தாமதத்துக்குப்பிறகு சரக்கு ரெயிலை அங்கிருந்து இயக்கி சென்றார். இதன் காரணமாக இவ்வழியே செல்ல வேண்டிய மற்ற ரெயில்கள் அருகில் உள்ள மற்ற ரெயில் நிலையங்களில் 2 மணி நேரம் நிறுத்தப்பட்டது. இதனால் ரெயில் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகினர்.

    அப்போது ரெயில் பயணிகள் ஆவேசத்துடன், ‘இதுபோன்ற ரெயில்வே ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சமூக அக்கறை கூட இல்லாத இவரை போன்ற சிலரால் பல்வேறு பொதுப்பணிகள் பாதிக்கப்படுகிறது’ என்று குற்றம் சாட்டி சென்றனர்.

    இந்த சம்பவத்தால் வைத்தீஸ்வரன் கோவில் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. #VaitheeswaranKoilRailwayStation

    ×