என் மலர்
நீங்கள் தேடியது "Railways"
- ரெயில் திட்டங்களுக்கு தேவையானவற்றில் 24% நிலத்தையே தமிழ்நாடு அரசு கையகப்படுத்தியுள்ளது.
- நிலம் கையகப்படுத்தியதற்கு ரூ.1,465 கோடி தமிழ்நாடு அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் ரெயில்வே திட்டங்களுக்கான நிதியை விரைந்து வழங்கிடவும், முக்கியமான திட்டங்களை மீண்டும் தொடங்கிடவும், தமிழ்நாட்டிற்குக் கூடுதலாக புதிய ரெயில்வே திட்டங்களை அனுமதித்திடவும் ரெயில்வே அமைச்சகத்திற்கு உரிய அறிவுரைகளை வழங்கிடுமாறு கோரி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருந்தார்.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதில் அளித்துள்ளார்.
அதில், "தமிழ்நாட்டில் ரெயில் திட்டங்களுக்கு தேவையானவற்றில் 24% நிலத்தையே மாநில அரசு கையகப்படுத்தியுள்ளது. நிலம் கையகப்படுத்தியதற்கு ரூ.1,465 கோடி தமிழ்நாடு அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்த நிதி ஒதுக்கவில்லை என முதலமைச்சர் கூறியுள்ளது அடிப்படை ஆதாரமற்றது.
மதுரை - தூத்துக்குடி ரெயில்வே திட்டத்திற்கு 91% நிலம் கையகப்படுத்தும் பணி முடியவில்லை. திண்டிவனம் - செஞ்சி திருவண்ணாமலை ரெயில் திட்டத்திற்கு 86% நிலம் கையகப்படுத்தப்படவில்லை. ராமேஸ்வரம் - தனுஷ்கோடி திட்டத்திற்கு மாநில அரசு ஒத்துழைக்கவில்லை" என்று தெரிவித்துள்ளார்.
- தூங்கும் வசதி இல்லாமல் அமர்ந்து கொண்டே பயணிக்கும் பயணிகளுக்கு இது பெரும் அநீதி.
- ஒரு முழு பெர்த்தை இரண்டு பயணிகளுக்கு விற்பனை செய்வதன் மூலம் ரயில்வே கூடுதல் வருமானம் ஈட்டுகிறது
ரெயில்களில் RAC முறையில் பயணிக்கும் பயணிகளிடம் முழு பயணக் கட்டணத்தையும் வசூலிக்கும் இந்திய ரெயில்வேயின் நடைமுறைக்கு பாராளுமன்ற நிலைக்குழு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
முழு கட்டணத்தைச் செலுத்தியும், தூங்கும் வசதி இல்லாமல் அமர்ந்து கொண்டே பயணிக்கும் பயணிகளுக்கு இது பெரும் அநீதி என்று குழு சுட்டிக்காட்டியுள்ளது.
ஒரு முழு பெர்த்தை இரண்டு பயணிகளுக்கு விற்பனை செய்வதன் மூலம் ரயில்வே கூடுதல் வருமானம் ஈட்டுகிறது, ஆனால் பயணிகளுக்கு உரிய வசதிகள் வழங்கப்படுவதில்லை. எனவே RAC பயணிகளிடம், முழு கட்டணத்தில் பாதியை திரும்ப வழங்க (Refund) வேண்டும் என்று குழு பரிந்துரைத்துள்ளது.
மேலும் RAC பயணிகளுக்கு வழங்கப்படும் உணவுக் கட்டணத்திலும் சலுகை வழங்கப்பட வேண்டும் அல்லது அவர்களுக்குக் கட்டண ரீதியாக ஏதேனும் ஒரு பலன் கிடைக்க வேண்டும் என்று குழு வலியுறுத்தியுள்ளது.
RAC நடைமுறையை உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ரயில்வே அமைச்சகத்திற்கு நிலைக்குழு அறிவுறுத்தியுள்ளது.
ரெயில்வே அமைச்சகம் இது குறித்து இறுதி முடிவு எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாராளுமன்ற நிலைக்குழு என்பது ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்களை சிலரை உள்ளடக்கிய குழுவாகும். இது அரசின் கொள்கைகளை ஆராய்ந்து, தொடர்ந்து கண்காணிக்கும் பணியை செய்கிறது.
- மத்திய அரசின் ரெயில்வே திட்டங்களுக்கு தமிழக அரசு ஒத்தழைப்பு தரவில்லை.
- ரெயில்வே திட்டங்களை செயல்படுத்த மாநில அரசின் ஒத்துழைப்பு தேவை.
------------------
ரெயில்வே பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு ரூ.7,611 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,"தமிழகத்திற்கு 2 புல்லட் ரெயில்கள் இயக்கப்படும்.
சென்னை-பெங்களூரு, சென்னை- ஐதராபாத் வழித்தடத்தில் மணிக்கு 350 கி.மீ., வேகத்தில் புல்லட் ரெயில் இயக்கம்.
சென்னை-ஐதராபாத் இடையே 2.55 மணி நேரம், சென்னை- பெங்களூரு இடையே 1.13 மணி நேரத்திலும் புல்லட் ரெயில் இயக்கம்.
தமிழகத்தில் 77 ரெயில் நிலையங்கள் புனரமைப்பட்டுள்ளது. மேலும், 95 சதவீதம் ரெயில் தடங்கள் மின் மயமாக்கப்பட்டுள்ளது.
ரூ.35,700 கோடி மதிப்பிலான ரெயில்வே திட்டம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மத்திய அரசின் ரெயில்வே திட்டங்களுக்கு தமிழக அரசு ஒத்தழைப்பு தரவில்லை.
ரெயில்வே திட்டங்களை செயல்படுத்த மாநில அரசின் ஒத்துழைப்பு தேவை.
பெரும்பாலான ரெயில் திட்டங்களுக்கான மேம்பாட்டு பணிக்கு நிலம் கையகப்படுத்துவதில் ஒத்துழைப்பு இல்லை.
மன்னார்குடி- பட்டுக்கோட்டை, தஞ்சை-மன்னார்குடி ரெயில் திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசு நிலம் கையகப்படுத்தி தரவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- கடந்த 2018ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்த பெண் ரூ.20 லட்சம் இழப்பீடு கோரினார்.
- இரயில்வே நிர்வாகம் தாமதத்தை ஒப்புக்கொண்டது, ஆனால் அதற்கான சரியான காரணத்தை நிரூபிக்கத் தவறிவிட்டது
உத்தரப் பிரதேசத்தில் 2 மணி நேரம் தாமதமாக வந்த ரயிலால் கல்லூரி சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வை தவறவிட்ட பெண்ணுக்கு, ரூ.9.10 லட்சம் இழப்பீடு வழங்க மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தொகையை ரயில்வேத்துறை 45 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் அல்லது கூடுதலாக 12% வட்டியை எதிர்கொள்ள நேரிடும் என்றும் தெரிவித்துள்ளது.
உத்தரபிரதேசத்தின் பஸ்தி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சம்ரிதி. இவர் கடந்த 2018ஆம் ஆண்டு மே.7ஆம் தேதியன்று லக்னோவில் நடந்த தனது கல்லூரி சேர்க்கைக்கான பிஎஸ்சி பயோடெக்னாலஜி நுழைவுத் தேர்வைத் தவறவிட்டார். சம்ரிதிக்கு லக்னோவில் உள்ள ஜெய் நாராயண் பி.ஜி கல்லூரியில் தேர்வு நடைபெற்றுள்ளது. இதற்காக பஸ்தி ரயில் நிலையம் வந்த சம்ரிதி, 11 மணிக்கு லக்னோ சென்றுவிடலாம் என நினைத்துள்ளார். தேர்வு 12.30 மணிக்கு. இந்நிலையில் இன்டர்சிட்டி சூப்பர்ஃபாஸ்ட் ரயில் இரண்டு மணிநேரத்திற்கும் மேலாக தாமதமாக வந்துள்ளது.
இதனால் சரியான நேரத்திற்கு தேர்வு மையத்திற்கு செல்லமுடியவில்லை. தேர்வு எழுத முடியாமல் போனதால் அந்த வருடம் சம்திரியால் கல்லூரியில் சேரமுடியாமல் போயுள்ளது. இதனையடுத்து செப்டம்பர் 11, 2018 அன்று மாவட்ட நுகர்வோர் ஆணையத்தில் வழக்குத் தொடர்ந்த சம்ரிதி ரூ.20 லட்சம் இழப்பீடு கோரியுள்ளார்.
தொடர்ந்து ஏழு ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது நுகர்வோர் நீதிமன்றம். ரயில்வே சேவையில் குறைபாடு இருந்ததையும், தாமதத்திற்கான முறையான காரணத்தை ரயில்வே விளக்கத் தவறியதையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
இதுதொடர்பாக பேசிய சம்ரிதியின் வழக்கறிஞர் பிரபாகர் மிஸ்ரா,
இரயில் தாமதம் காரணமாக அவரால் சரியான நேரத்திற்குத் தேர்வு மையத்தை அடைய முடியவில்லை, இதனால் அவரது முழு கல்வி ஆண்டும் வீணானது. இந்த நீண்ட சட்டப் போராட்டம் மிகவும் சோர்வளிப்பதாக இருந்தாலும் அவசியமான ஒன்றாக இருந்தது என்றார்.
மேலும் "இரயில்வே நிர்வாகம் தாமதத்தை ஒப்புக்கொண்டது, ஆனால் அதற்கான சரியான காரணத்தை நிரூபிக்கத் தவறிவிட்டது. எனவே, நீதிமன்றம் ஒரு கணிசமான அபராதத்தை விதித்துள்ளது," என்று அவர் கூறினார்.
- 2024-ல் 494 குழந்தைகளையும், 2025-ல் 1,032 குழந்தைகளையும் இவரது குழுவினர் மீட்டுள்ளனர்.
- இதற்காகத் தகவல் தருபவர்களின் பெரிய Informers நெட்வொர்க்கையும் இவர் உருவாக்கி வைத்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் ரெயில்வே பாதுகாப்புப் படை (RPF) ஆய்வாளர் சந்தனா சின்ஹாவுக்கு இந்திய ரெயில்வேயின் உயரிய சேவை விருதான 'அதி விசிஷ்ட் ரயில் சேவா புரஸ்கார்' வழங்கி கௌரவிக்கப்பட்டது
லக்னோவின் சார்பாக் ரெயில் நிலையத்தை மையமாகக் கொண்டு செயல்படும் ஆய்வாளர் சந்தனா சின்ஹா, கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 1,500-க்கும் மேற்பட்ட குழந்தைகளை மீட்டுள்ளார்.
2024-ல் 494 குழந்தைகளையும், 2025-ல் 1,032 குழந்தைகளையும் இவரது குழுவினர் மீட்டுள்ளனர்.
நடைமேடைகளில் தனியாக இருக்கும் குழந்தைகள், கடத்தல்காரர்களுடன் இருப்பவர்களைக் கண்டறியும் விசேஷப் பயிற்சியை தனது குழுவினருக்கு இவர் வழங்கியுள்ளார்.
இதற்காகத் தகவல் தருபவர்களின் பெரிய Informers நெட்வொர்க்கையும் இவர் உருவாக்கி வைத்துள்ளார்.
பீகார் முதல் பஞ்சாப் மற்றும் அரியானா வரையிலான கடத்தல் பாதைகளைக் கண்காணித்து, குழந்தைத் தொழிலாளர்களாக கொண்டு செல்லப்பட்ட பல குழந்தைகளை இவர் மீட்டுள்ளார்.
- இந்தச் சலுகை 2026 ஜனவரி 14 முதல் 2026 ஜூலை 14 வரை ஆறு மாதங்களுக்கு அமலில் இருக்கும்.
- 'R-Wallet' மூலம் டிக்கெட் எடுப்பவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 3 சதவீத கேஷ்பேக் சலுகையும் தொடரும்.
இந்திய ரெயில்வேயின் 'RailOne' செயலி மூலம் முன்பதிவுவில்லாத டிக்கெட்டுகளை வாங்குபவர்களுக்கு 3 சதவீத தள்ளுபடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
ரெயில்வே வெளியிட்ட அறிவிப்பின்படி, ரயில்ஒன் செயலி மூலம் யுபிஐ, டெபிட் கார்டு உள்ளிட்டவற்றின் மூலம் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தி டிக்கெட் வாங்குபவர்களுக்கு டிக்கெட் கட்டணத்தில் 3 சதவீதம் தள்ளுபடி நேரடியாக வழங்கப்படும்.
இந்தச் சலுகை 2026 ஜனவரி 14 முதல் 2026 ஜூலை 14 வரை ஆறு மாதங்களுக்கு அமலில் இருக்கும்.
பயணிகள் டிஜிட்டல் முறையில் டிக்கெட் எடுப்பதை ஊக்குவிப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தத் சலுகை RailOne செயலியில் மட்டுமே கிடைக்கும். மற்ற ஆன்லைன் தளங்களுக்கு இது பொருந்தாது.
ஏற்கனவே 'R-Wallet' மூலம் டிக்கெட் எடுப்பவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 3 சதவீத கேஷ்பேக் சலுகையும் இதனுடன் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- டிசம்பர் 26-ந் தேதி முதல் ரெயில் கட்டணம் உயர்த்தப்படுவதாக ரெயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.
- கடந்த ஜூலை மாதம் 1 ஆம் தேதி தேதி ரெயில் கட்டணங்கள் உயர்த்தப்பட்ட நிலையில் ஒரே ஆண்டில் 2வது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் டிசம்பர் 26-ந் தேதி முதல் ரெயில் கட்டணம் உயர்த்தப்படுவதாக ரெயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.
அதன்படி, 215 கி.மீ.க்கு மேல் பயணிக்கும் தூரத்திற்கு 1 கிலோ மீட்டருக்கு 1 பைசா வீதம் கட்டணம் உயர்த்தப்படுகிறது.
215 கி.மீ.க்கு மேல் முன்பதிவில்லாத பெட்டிகளில் பயணிக்க 1 கிலோ மீட்டருக்கு 1 பைசா கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்.
மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏசி அல்லாத பெட்டிகளில் பயணிக்க 1 கி.மீ.க்கு 2 பைசா உயர்த்தப்படும்.
500 கி.மீ தூரம் ஏசி அல்லாத பெட்டியில் பயணிக்கும் பயணிகள் கூடுதலாக 10 ரூபாய் செலுத்த வேண்டும்.
உதாரணமாக சென்னையில் இருந்து மதுரை மற்றும் கோவைக்கு செல்லும் ரெயில்களில் ரூ10 கட்டணம் கூடுதலாக செலுத்த வேண்டும்.
இதுதவிர்த்து அனைத்து ஏசி வகுப்புகளுக்கும் 1 கிலோமீட்டருக்கு 2 பைசா கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
அதேநேரம், 215 கி.மீ வரை பயணிக்க கட்டண உயர்வு இல்லை. மேலும் புறநகர் ரெயில்கள் மற்றும் மாதாந்திர சீசன் டிக்கெட் கட்டணங்களில் எந்த மாற்றமும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டண உயர்வு மூலம் ரெயில்வே ரூ.600 கோடி கூடுதல் வருவாயை ஈட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ரெயில்வே ஊழியர் ஊதியச் செலவு ரூ. 1,15,000 கோடியாகவும், ஓய்வூதியச் செலவு ரூ. 60,000 கோடியாகவும் அதிகரித்துள்ளதால் 2024-25 நிதியாண்டில் மொத்த ரெயில்வே துறையின் செலவு ரூ. 2,63,000 கோடியாக உயர்ந்துள்ளது.
எனவே இந்த செலவுகளை சமாளிக்க பயணிகளுக்கான கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளதாக ரெயில்வே தெரிவித்துள்ளது.
முன்னதாக கடந்த ஜூலை மாதம் 1 ஆம் தேதி தேதி ரெயில் கட்டணங்கள் உயர்த்தப்பட்ட நிலையில் ஒரே ஆண்டில் 2வது முறையாக ரெயில்வே கட்டணங்களை உயர்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
- மொத்தம் 269 வழக்குகளில் இந்தத் தொகை இன்னும் நிலுவையில் உள்ளது
- போதிய கண்காணிப்பு இல்லாதது மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுப்பதில் ஏற்பட்டுள்ள தாமதமே இந்த வருவாய் இழப்புக்கு மிக முக்கியக் காரணம்.
தனியார் நிறுவனங்களிடமிருந்து இந்திய ரயில்வேக்கு வரவேண்டிய சுமார் 4,087 கோடி ரூபாய் நிலுவைத் தொகை வசூலக்கப்படவில்லை என்று மத்திய கணக்குத் தணிக்கையாளர் (CAG) அறிக்கை குற்றம் சாட்டியுள்ளது.
மொத்தம் 269 வழக்குகளில் இந்தத் தொகை இன்னும் நிலுவையில் உள்ளது.
மேலும், இந்திய ரயில்வேயிடம் தற்போது 4.88 லட்சம் ஹெக்டேர் நிலம் உள்ளது. இதில் 62,740 ஹெக்டேர் நிலம் காலியாகவே கிடக்கிறது.
இந்த நிலங்களை வணிக ரீதியாகப் பயன்படுத்தி வருமானம் ஈட்டுவதற்காக உருவாக்கப்பட்ட 'ரயில்வே நில மேம்பாட்டு ஆணையத்திடம்' (RLDA) வெறும் 1.6% நிலம் மட்டுமே ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேம்பாட்டுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்களிலும் கூட, நில உரிமை தொடர்பான சிக்கல்கள், ஆக்கிரமிப்புகள் மற்றும் சட்டப் போராட்டங்கள் காரணமாகப் போதிய வருமானம் ஈட்ட முடியவில்லை.
போதிய கண்காணிப்பு இல்லாதது மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுப்பதில் ஏற்பட்டுள்ள தாமதமே இந்த வருவாய் இழப்புக்கு மிக முக்கியக் காரணம் என்று சி.ஏ.ஜி சுட்டிக்காட்டியுள்ளது.
இதனால் ரயில் டிக்கெட் கட்டணங்கள் தவிர்த்து, நிலங்களை மேம்படுத்துவதன் மூலம் ஈட்ட வேண்டிய டிக்கெட் சாரா வருவாயில் இந்திய ரயில்வே மிகவும் பின்தங்கியிருப்பதாக அறிக்கை தெரிவிக்கிறது.
- ரெயில் பயணிகள் தங்களுக்கான டிக்கெட்டுகளை 2 மாதத்துக்கு முன் முன்பதிவு செய்கின்றனர்.
- முன்பதிவு செய்த டிக்கெட்டுகள் நிலை ரெயில் புறப்படும் 8 மணி நேரத்துக்கு முன் வெளியிடப்படுகிறது.
புதுடெல்லி:
ரெயில் பயணிகள் தங்கள் டிக்கெட்டுகளை 2 மாதத்துக்கு முன்னரே முன்பதிவு செய்யும் வசதி தற்போது நடைமுறையில் உள்ளது. அப்படி முன்பதிவு செய்த டிக்கெட்டுகளின் நிலை ரெயில் புறப்படுவதற்கு 4 மணி நேரத்துக்கு முன் வெளியிடப்பட்டு வருகிறது.
கடைசி நேரத்தில் காத்திருப்பு பட்டியலில் உள்ள டிக்கெட்டுகள் ரத்தாவதால் பயணத்தை மாற்றி அமைக்க பயணிகள் சிரமப்பட்டனர்.
இதனால், முன்பதிவு அட்டவணையை 8 மணி நேரத்துக்கு முன் வெளியிட வேண்டும் என பயணிகள் சங்கங்கள் கோரிக்கை விடுத்து வந்தன. அந்தக் கோரிக்கையை ஏற்று அனைத்து மண்டல ரெயில்வேயும் கடந்த ஜூலையில் இருந்து 8 மணி நேரத்துக்கு முன் அட்டவணையை வெளியிட்டு வருகின்றன.
இந்நிலையில், முன்பதிவு அட்டவணை வெளியிடும் நேரத்தை 10 மணி நேரமாக நீட்டித்துள்ளனர்.
அதன்படி இனி காலை 5:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை புறப்படும் ரெயில்களுக்கு முந்தைய நாள் இரவு 8:00 மணிக்கு அட்டவணை தயாரிக்கப்பட்டு பயணிகளுக்கு அறிவிப்பு செல்லும்.
இதர ரெயில்களுக்கு, அவை புறப்படும் நேரத்துக்கு 10 மணி நேரம் முன் முன்பதிவு அட்டவணை தயாரிக்கப்படும். இதை உடனே அமல்படுத்த ரெயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.
- முன்பதிவில் ஏற்படும் முறைகேடுகளைத் தடுக்க ரயில்வே இந்த விதியை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.
- அனைத்து ரெயில் நிலையங்களிலும் உள்ள முன்பதிவு கவுன்டர்களுக்கு விரிவுபடுத்தப்படும்.
முன்பதிவு கவுன்டர்களில் வாங்கப்படும் தட்கல் டிக்கெட்டுகளுக்கு ஒரு முறை மட்டும் பயன்படுத்தக்கூடிய OTP கடவுச்சொல்லை ரெயில்வே கட்டாயமாக்கவுள்ளது.
முன்பதிவில் ஏற்படும் முறைகேடுகளைத் தடுக்க ரயில்வே இந்த விதியை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.
OTP அடிப்படையிலான தட்கல் டிக்கெட் முன்பதிவு முறை நவம்பர் 17 முதல் ஒரு சில ரெயில் நிலையங்களின் முன்பதிவு கவுன்டர்களில் சோதனை அடிப்படையில் தொடங்கப்பட்டது.
இந்நிலையில் இந்த முறையை அனைத்து ரெயில் நிலையங்களிலும் உள்ள முன்பதிவு கவுன்டர்களுக்கு விரிவுபடுத்தத் தயாராகி வருவதாக ரெயில்வே அறிக்கையில் தெரிவித்துள்ளது.
எனவே இனிமேல், கவுன்டர்களில் முன்பதிவு படிவத்தை நிரப்பிய பிறகு, முன்பதிவு செய்யும் போது மொபைல் எண்ணில் பெறப்பட்ட OTP ஐ உள்ளிடுவதன் மூலம் மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்யப்படும்.
- பாஜக ஆளும் மாநிலங்களுக்கு பல்லாயிரம் கோடி.
- ரயில்வே துறையில் தமிழ்நாடும், கேரளாவும் தொடர்ந்து புறக்கணிப்படுகிறது.
மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தலைமையில், நாடாளுமன்ற இணைப்பு கட்டிடத்தில், இன்று (நவ.25) ரயில்வேதுறை ஆலோசனைக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் எம்பி சு. வெங்கடேசன் கலந்துகொண்டநிலையில், தமிழ்நாடு ரயில்வே வளர்ச்சி, பொதுமக்கள் வசதி, பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளை வலியுறுத்தி பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்ததாக தெரிவித்துள்ளார். மேலும் ரயில்வே துறையில் தமிழ்நாடும், கேரளாவும் தொடர்ந்து புறக்கணிப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகம் என தலைப்பிட்டு, "2024-25 ஆம் ஆண்டில் புதிய வழித்தடத்திற்கு ரூ. 31,458 கோடி ஒதுக்கப்பட்டது. அதில் தெற்கு இரயில்வேக்கு ஒதுக்கப்பட்டதோ வெறும் ரூ. 301 கோடி. அதவாது ஒரு சதவிகிதம் மட்டுமே. பாஜக ஆளும் மாநிலங்களுக்கு பல்லாயிரம் கோடி. தமிழ்நாடு, கேரளாவுக்கு பட்டை நாமம்." எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் தான் முன்வைத்த கோரிக்கைகளையும் அறிக்கை வடிவில் பதிவிட்டுள்ளார்.
- ஏக்நாத் ஷிண்டேவை துரோகி என குறிப்பிட்டு பாடிய பாடல் மூலம் குறிவைக்கப்பட்டார்.
- ரெயில்வே வெளியிட்டுள்ள அதிகாரப் பூர்வமாக உண்மை சரிபார்ப்பு அறிக்கை பலரை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.
பிரபல 'ஸ்டாண்டு அப்' காமெடியன் குணால் கம்ரா மும்பையில் கடந்த மார்ச் மாதம் நடந்த நிகழ்ச்சியில் பாஜக கூட்டணி சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டேவை துரோகி என குறிப்பிட்டு பாடிய பாடல் மூலம் குறிவைக்கப்பட்டார்.
இந்த சர்ச்சை தற்போது ஓய்ந்துள்ள நிலையில் அண்மையில் தனது யூடியூப் சேனலில் ரெயில்வே துறை குறித்து பேசிய குணால் கம்ரா, 2023 ஆம் ஆண்டில் சுமார் 25,000 ரெயில் விபத்துகளில் சுமார் 22,000 பேர் இறந்ததாக தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) புள்ளிவிவரங்கள் கூறுவதாக தெரிவித்தார்.
அவரின் கூற்று குறித்து ரெயில்வே வெளியிட்டுள்ள அதிகாரப் பூர்வமாக உண்மை சரிபார்ப்பு அறிக்கை பலரை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.
ரெயில்வே வெளியிட்ட உண்மைச் சரிபார்ப்பில், 2023 ஆம் ஆண்டில் சுமார் 25,000 விபத்துகள் நடந்ததாக கூறப்படுவது தவறானது, அந்த ஆண்டில் நடந்த உண்மையான விபத்துகளின் உண்மையான எண்ணிக்கை 24,678 ஆகும். அதேபோல், 22,000 இறப்புகள் என்ற கூற்றுக்கு மாறாக, 21,803 இறப்புகள் மட்டுமே பதிவாகி உள்ளது என தெளிவுபடுத்தியது.
இந்த தெளிவுபடுத்தல் இணையத்தில் கடும் விமர்சனங்களை குவித்து வருகிறது. ரெயில்வேயின் அறிக்கைக்கு உடனடியாக பதிலளித்த காம்ரா, தான் கூறியதில் என்ன தவறு என கேள்வி எழுப்பி உள்ளார்.
இந்த தெளிவுபடுத்தல் இணையத்தில் கடும் விமர்சனங்களை குவித்து வருகிறது. ரெயில்வேயின் அறிக்கைக்கு உடனடியாக பதிலளித்த காம்ரா, தான் கூறியதில் என்ன தவறு என கேள்வி எழுப்பி உள்ளார்.
2023 இல் நடந்து மிக மோசமான ரெயில் விபத்து ஒடிசாவில் நிகழ்ந்தது. ஜூன் 2 அன்று பாலசோர் மாவட்டத்தில் பஹானாகா பஜார் ரெயில் நிலையம் அருகே மூன்று ரெயில்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் 296 பேர் உயிரிழந்தனர் மற்றும் 1200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சிக்னல் பிழை காரணமாக இந்த விபத்து நடந்ததாக தெரிவிக்கப்பட்டது.






