search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "railways"

    • ரயில்வேயில் 3 லட்சத்துக்கும் அதிகமான காலிப் பணியிடங்களை பாஜக அரசு ஏன் நிரப்பவில்லை?
    • இந்திய ரெயில்வேவை தனியார்மயமாக்கும் பெரும் திட்டத்தை மோடி அரசு ஏற்கனவே தொடங்கிவிட்டது

    மோடியின் ஆட்சியில் ரயில்வேதுறை சுய விளம்பரத்திற்காகவே பயன்படுத்தப்படுகிறது. மோடியின் 3டி செல்ஃபி பாயின்ட்கள் மற்றும் வந்தே பாரத் நிகழ்வின் பச்சைக் கொடிகளை காட்டி வேண்டுமென்றே ரெயில்வே துறையை சீரழித்துள்ளது பாஜக என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.

    மல்லிகார்ஜூன கார்கே தனது எக்ஸ் பக்கத்தில் ரயில்வே துறை பற்றிய 7 கேள்விகளை எழுப்பியுள்ளார்.

    1. ரயில்வேயில் 3 லட்சத்துக்கும் அதிகமான காலிப் பணியிடங்களை பாஜக அரசு ஏன் நிரப்பவில்லை? இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனத்தில் இடஒதுக்கீடு பெறக்கூடிய SC, ST, OBC, EWS மக்களுக்கு பாஜக எதிரானதா?

    2. 2013-14 காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் ரயில் பயணத்தில் ஒரு கிலோமீட்டருக்கு ஒரு பயணியின் சராசரி விலை 0.32 பைசாவில் இருந்து 2023ல் 0.66 பைசாவாக இருமடங்காக உயர்ந்தது ஏன் ?

    3. 2017 மற்றும் 2021 க்கு இடையில் 1,00,000 க்கும் மேற்பட்ட ரயில் தொடர்பான இறப்புகள் பதிவாகியுள்ளன. கிட்டத்தட்ட 300 பேரின் விலைமதிப்பற்ற உயிரைப் பறித்த கொடிய ஒடிசா ரெயில் விபத்து (2023) இந்த பட்டியலில் இல்லை. ரெயில்கள் ஒன்றுக்கொன்று மோதிக்கொள்ளாமல் தடுக்கக்கூடிய எதிர்ப்பு தொழில்நுட்பம் ரெயில்வே நெட்வொர்க்கில் 2.13% மட்டுமே உள்ளது என்பது உண்மையல்லவா?

    4. கொரோனா பொது முடக்கத்தான் போது , மூத்த குடிமக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சலுகைகளை மோடி அரசு ஏன் திரும்பப் பெற்றது? இதன் மூலம் ஒரே ஆண்டில் ₹2242 கோடியை மோடி அரசு கொள்ளையடித்தது.

    5. CAG அறிக்கையின் படி, ₹58,459 கோடியில் 0.7% நிதி மட்டுமே ரெயில்வே பாதை புதுப்பித்தலுக்கு செலவிடப்பட்டது ஏன்? இதுவே, மோடி அரசாங்கத்தால் கூறப்படும் 180 கிமீ வேகத்திற்குப் பதிலாக, வந்தே பாரத் அதிவேக ரெயில்களின் சராசரி வேகம் மணிக்கு 83 கி.மீ. தான்.

    6. ரெயில்வே பட்ஜெட்டை பொது பட்ஜெட் உடன் இணைக்கும் நடவடிக்கை என்பது பின் வாசல் வழியாக அதன் நிதியை குறைப்பதற்கான ஒரு வழியாகும் என்பது உண்மையல்லவா ?

    7. இந்திய ரெயில்வேவை தனியார்மயமாக்கும் பெரும் திட்டத்தை மோடி அரசு ஏற்கனவே தொடங்கிவிட்டது என்பது உண்மையல்லவா ? மோடி அரசின் தேசிய ரெயில்வே திட்டத்தின் (2021) படி, அனைத்து சரக்கு ரெயில்களும் 2031க்குள் தனியார்மயமாக்கப்படும் என்றும் 750 ரெயில் நிலையங்களில் 30 சதவீதம் தனியார்மயப்படுத்தப்படும் என்று பாஜக அரசு அறிவித்துள்ளது.

    லாபம் ஈட்டும் அனைத்து ஏசி பெட்டிகளும் தனியார் மயமாக்கப்படும். நஷ்டத்தில் இயங்கும் இரண்டாம் வகுப்பு பயணிகள் ரெயில்கள் மட்டுமே ரயில்வேயிடம் விடப்படும். இன்னும் கோடிக்கணக்கான இந்தியர்களின் உயிர்நாடியாக ரயில்வே உள்ளது.

    ஆனால் மோடி அரசு ரெயில்வே துறையின் நிதி, பாதுகாப்பு, செயல்திறன் மற்றும் மலிவு விலையில் மக்கள் பயன்படுத்தும் வசதியை அழித்துவிட்டது.

    2012-13ல் 79% ஆக இருந்த மெயில் ரயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களின் எண்ணிக்கை 2018-19ல் 69.23% ஆக குறைந்ததில் ஆச்சரியமில்லை.

    காங்கிரஸ் கட்சி ரயில்வே துறைக்கு மீண்டும் புத்துயிர் அளிக்கும்" என்று பதிவிட்டுள்ளார். 

    • கொரோனா பொது முடக்கத்தின்போது மூத்த குடிமக்களுக்கு ரயில் கட்டணங்களில் வழங்கப்பட்ட சலுகைகளை ரயில்வே அமைச்சகம் நீக்கியது
    • 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் திருநங்கைகளும், 58 வயதுக்கு மேற்பட்ட பெண்களும் மூத்த குடிமக்களாக கருதப்படுவார்கள்

    மூத்த குடிமக்களுக்கான டிக்கெட் கட்டண சலுகையை நீக்கியதன் மூலம் இந்தியன் ரெயில்வே ₹5,800 கோடி கூடுதல் வருவாய் ஈட்டியுள்ளதாக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சந்திர சேகர் கவுர் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு இந்தியன் ரெயில்வே பதில் அளித்துள்ளது.

    அதில், மூத்த குடிமக்களுக்கான டிக்கெட் கட்டண சலுகையை நீக்கியதன் மூலம் மார்ச் 20, 2020 முதல் ஜனவரி 31, 2024 வரை ரெயில்வே துறைக்கு 5,875 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    2020ம் ஆண்டு மார்ச் மாதத்தில் கொரோனா பொது முடக்கத்தின்போது மூத்த குடிமக்களுக்கு ரயில் கட்டணங்களில் வழங்கப்பட்ட சலுகைகளை ரயில்வே அமைச்சகம் நீக்கியது.

    இந்த சலுகை திரும்பப் பெறப்பட்டதிலிருந்து, மூத்த குடிமக்கள் ரயில் பயணங்களுக்கு மற்ற பயணிகளுக்கு இணையாக முழு கட்டணத்தையும் செலுத்தி டிக்கெட் வாங்கி வருகின்றனர்.

    ரயில்வே விதிமுறைகளின்படி, 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் திருநங்கைகளும், 58 வயதுக்கு மேற்பட்ட பெண்களும் மூத்த குடிமக்களாக கருதப்படுவார்கள்.

    அதன்படி, கொரோனா பொது முடக்கத்திற்கு முன்பு, ரெயில் கட்டணத்தில் பெண்களுக்கு 50 சதவீத சலுகையும், ஆண் மற்றும் திருநங்கைகளுக்கு 40 சதவீத சலுகையும் ரெயில்வே வழங்கியது.

    கடந்த நான்கு ஆண்டுகளில் மூத்த குடிமக்கள் பிரிவில் சுமார் 13 கோடி ஆண்களும், ஒன்பது கோடி பெண்களும் மற்றும் 33,700 திருநங்கைகள் மொத்தமாக 13,287 கோடி பணம் செலுத்தி ரெயில் டிக்கெட் பெற்றுள்ளனர்.

    • மதுரை ரெயில்வே நில பாதுகாப்பு சங்கம் சார்பில் கையெழுத்து இயக்கம் நடந்தது.
    • எம்.பி., எம்.எல்.ஏ. பங்கேற்றனர்.

    மதுரை

    மதுரை ரெயில்வே நில பாதுகாப்பு இயக்கம் சார் பில் அரசடி ரெயில்வே மைதானம் முன்பு, மக்கள் நிலத்தை பாதுகாப்போம் என்ற நோக்கத்தில் பல்லாயி ரக்கணக்கான மக்கள் மற்றும் விளையாட்டு வீரர் கள் பயன்படுத்திவரும் பொது சொத்தான மதுரை ரெயில்வே நிர்வாகத்துக்கு சொந்தமான அரசரடி விளையாட்டு மைதானம் மற்றும் ரெயில்வே காலனி பகுதியை தனியாருக்கு தாரை வார்க்க நினைக்கும் மத்திய அரசின் செயலை கைவிடக்கோரி மாபெரும் கையெழுத்து இயக்கம் நடை பெற்றது.

    நிகழ்ச்சியில் மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பி னர் கோ.தளபதி, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆகியோர் கலந்துகொண்டு கையெ ழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தனர். இதில் மாநக ராட்சி துணை மேயர் நாகரா ஜன், மண்டலத் தலைவர் பாண்டிச் செல்வி, மாமன்ற உறுப்பினர் எம்.ஜெயராம் உள்பட பலர் கலந்து கொண்டு நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் மற் றும் பொதுமக்களிடம் கையெழுத்துக்களை பெற்ற னர்.

    தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் பேசுகையில், ரெயில்வே மைதானத்தை மத்திய அரசு தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. மதுரையின் நுரையீரலாக பெரும் மாசுவை தடுத்து நிறுத்தும் ஒரு இடமாக ரெயில்வே மைதானம் உள்ளது. இதை தனியார் கார்ப்பரேட் முத லாளிகளிடம் வழங்கி விட் டால் இப்பகுதியில் சுகாதா ரம் என்பதை பாதுகாக்க முடியாது.

    ஏற்கனவே காற்று மாசு பெருவாரியாக ஏற்பட்டு வரும் நிலையில் காற்றில் மாசினை குறைப்பதற்கு ரெயில்வே காலனி பெரும் பங்கு வகிக்கின்றது. மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள மரங்களை விட இங்கு 50 சதவீதத்திற்கு மேல் மரங்கள் உள்ளது. எனவே மதுரையில் நுரையீ ரலாக இருக்கக்கூடிய ரெயில்வே மைதானத்தை தனி யார் பெரும் முதலாளிக ளுக்கு மத்திய அரசு தாரை வார்க்கும் முயற்சியினை கைவிட வேண்டும் என்று ரெயில்வே மைதானம் பாது காப்பு கையெழுத்து இயக் கத்தை துவக்கி வைக்கிறோம் என்றார்.

    • ரெயில்கள் நின்று செல்ல வலியுறுத்தி மானாமதுரையில் 23-ந்தேதி கடையடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.
    • இதேபோல் மாவட்ட தலைநகர் சிவகங்கையிலும் கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஜங்ஷன் ரெயில் நிலையமாகும். இந்தியாவின் முக்கிய புண் ணிய ஸ்தலமான ராமேசுவ ரத்துக்கு இங்கு இருந்துதான் செல்ல முடியும். மேலும் பெருந்தலைவர் காமராஜர் முதல்வராக இருந்தபோது பெரும் முயற்சி செய்து விருதுநகர்-மானாமதுரை இடையே ரெயில் பாதை அமைக்க நடவடிக்கை எடுத் ததால் இப்போது மதுரை, திண்டுக்கல் சுற்றிசெல்லா மல் குறைந்த பயண தூரத் தில் தென்மாவட்டங்களுக்கு ரெயில் வசதிகள் கிடைத்துள்ளது.

    ஆனால் தற்போது ரெயில்வே நிர்வாகம் தென் மாவட்டங்களில் இருந்து மானாமதுரை ஜங்ஷன் மற்றும் சிவகங்கை ரெயில் நிலை யங்களில் ரெயில்கள் நிற்காமல் செல்ல நடவ டிக்கை எடுத்துள்ளது. பத்து ஆண்டுகளாக மானாமதுரை யில் இருந்து மன்னார்குடி சென்ற ரெயில் தற்போது காரைக்குடியில் இருந்து செல்கிறது.

    காரைக்குடியில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பி ரஸ் ரெயிலை மானாமதுரை யில் இருந்து இயக்ககோரியும், பைபாஸ் ரோட்டில் உள்ள ரெயில்வே கேட்டை அகற் றக்கூடாது என்பது உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 23-ந் தேதி (சனிக்கிழமை) கடைய டைப்பு போராட்டம் நடத்து வது என தி.மு.க. கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்ட கூட்டத்தில் முடிவு செய்து உள்ளனர். இதுதொடர்பாக தீர்மான மும் நிறைவேற்றப் பட்டு உள்ளது.

    மானாமதுரை புறவழிச் சாலையில் ஆனந்தபுரம் பகு தியில் உள்ள ரெயில்வே சுரங்கப் பாதையை ஏராள மான வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், இந்த பாதையை மூடவும், கிடப்பில் போடப்பட்டிருந்த திட்டத்தை மீண்டும் செயல்ப டுத்தப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

    இதில் மாற்றுப்பாதை அமைக்கும் வரை புறவழிச்சாலையில் ரெயில்வே கட வுப்பாதையை மூடக்கூடாது. இதை மீறி மூடினால் கட வுப்பாதை முன் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும். சமீபத்தில் நிறுத்தப்பட்ட திருச்சி-மானாமதுரை ரெயிலை மீண்டும் இயக்க வேண்டும்.

    வருகிற 23-ந்தேதி வர்த் தக சங்க ஒத்துழைப்புடன் மானாமதுரையில் கடையடைப்பு போராட்டம் நடத்து வது எனவும் தீர்மானிக்கப் பட்டது. இதேபோல் மாவட்ட தலைநகர் சிவகங்கையிலும் கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.

    • விஷ்ணு நாகர்கோவில் ரெயில்வே போலீசார் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து உள்ளார்.
    • மதுபோதையில் யாரேனும் அங்கு நுழைந்தார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    களக்காடு:

    நெல்லை-நாகர்கோவில் ரெயில்வே வழித்தடத்தில் நாங்குநேரி அருகே நெடுங்குளத்தில் ரெயில்வே கேட் உள்ளது.

    நெடுங்குளம், தாழை குளம், உண்ணங்குளம், அம்பலம், மூலைக்கரைப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் பொதுமக்கள் இந்த ரெயில்வே கேட் வழியாக சென்று வருகின்றனர்.

    இந்த ரெயில்வே கேட்டில் கேரளாவை சேர்ந்த விஷ்ணு என்பவர் கீப்பராக பணியாற்றி வருகிறார். நெல்லை-நாகர்கோவில் வழித்தடத்தில் செல்லும் அனைத்து ரெயில்களும் இந்த வழியாக செல்வதால் இந்த கேட் அடிக்கடி மூடப்படுவதும், ரெயில்கள் சென்ற பிறகு திறக்கப்படுவதும் வழக்கம்.

    இந்நிலையில் இன்று அதிகாலை விஷ்ணு பணியில் இருந்தபோது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் அரிவாள் போன்ற ஆயுதங்களுடன் அத்துமீறி கேட் கீப்பர் இருந்த அறைக்குள் புகுந்துள்ளனர். அப்போது விஷ்ணுவை அவதூறாக பேசி தாக்க முயன்றதால் அதிர்ச்சி அடைந்த அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    இதனையடுத்து மர்ம நபர்கள் அந்த அறையில் இருந்த 2 தொலைபேசிகளை அடித்து நொறுக்கி ரகளையில் ஈடுபட்டனர். மேலும் தங்கள் கையில் கொண்டு வந்த பெட்ரோல் பாட்டிலை அந்த அறையில் ஊற்றி தீ வைக்க முயற்சி செய்தனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக தீ பற்றாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அதன்பின் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர்.

    இது குறித்து விஷ்ணு நாகர்கோவில் ரெயில்வே போலீசார் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து உள்ளார். உடனே அங்கு விரைந்த ரெயில்வே போலீசார் தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ரெயில்களை கவிழ்ப்பதற்காக இந்த செயலில் மர்ம நபர்கள் ஈடுபட்டார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    அதே நேரத்தில் சாத்தான்குளத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் மதுபோதையில் மூன்றடைப்பு போலீஸ் நிலையத்திற்கு போன் செய்து ரெயில்வே கேட் கீப்பர் அறைக்குள் தெரியாமல் நுழைந்து விட்டேன். என் மீது வழக்கு போட்டு விடாதீர்கள் என்று தெரிவித்துள்ளார்.

    இதனால் மதுபோதையில் யாரேனும் அங்கு நுழைந்தார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    மேலும் போலீஸ் நிலையத்திற்கு போன் செய்த வாலிபரை பிடிப்பதற்காக போலீசார் சாத்தான்குளம் விரைந்து உள்ளனர்.

    • ரெயிலில் பயணியின் உடைமை திருட்டு போனால் ரெயில்வே பொறுப்பு ஆகாது.
    • அது ரெயில்வேயின் சேவை குறைபாடும் இல்லை என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

    புதுடெல்லி:

    உத்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர் சுரேந்தர் போலா என்ற தொழில் அதிபர். இவர் காசிவிஸ்வநாத் ரெயிலில் 2005-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27-ம் தேதியன்று டெல்லிக்கு பயணம் செய்தார்.

    ரெயில் பயணத்தின்போது அவரது இடுப்பு பெல்ட்டின் பையில் வைத்திருந்த ரூ.1 லட்சம் பணம் திருட்டு போனது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், மறுநாள் ரெயில்வே போலீசில் புகார் செய்தார். மேலும் தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்திலும் ஒரு வழக்கு தொடுத்தார்.

    அந்த வழக்கில் அவர், தனது ரெயில் பயணத்தின்போது இடுப்பு பெல்ட் ரூ.1 லட்சம் பணத்துடன் திருட்டு போய்விட்டதால் அந்த இழப்பை ரெயில்வே ஈடுசெய்ய வேண்டும் என கோரியிருந்தார்.

    வழக்கை விசாரித்த தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் அவருக்கு ரெயில்வே ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.

    இந்தத் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ரெயில்வே மேல்முறையீடு செய்தது. இந்த மேல் முறையீட்டு வழக்கை நீதிபதிகள் விக்ரம்நாத், அசனுதீன் அமானுல்லா ஆகியோர் விசாரித்தனர்.

    விசாரணை முடிவில், சுரேந்தர் போலாவுக்கு ரெயில்வே ரூ.1 லட்சம் இழப்பீடு தர வேண்டும் என தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் அளித்த தீர்ப்பை ரத்து செய்து தீர்ப்பளித்தனர்.

    அந்தத் தீர்ப்பில், ரெயில் பயணத்தின்போது, தனது உடைமையை பயணி பாதுகாத்துக் கொள்ள முடியாமல் திருட்டு போனால், அதற்கு ரெயில்வே பொறுப்பு ஆகாது. பயணியர் தங்கள் உடைமைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளவில்லை எனில், அதற்கு ரெயில்வே நிர்வாகம் எப்படி பொறுப்பாகும்? ரெயில் பயணத்தில் திருட்டு போனால் அது ரெயில்வேயின் சேவை குறைபாடும் இல்லை என தெரிவித்துள்ளது.

    • கம்யூனிஸ்டு (எம்.எல்) வலியுறுத்தல்
    • உயரிய பாதுகாப்பு சாதனங்களை நிறுவி, காலியாக உள்ள லட்சக்கணக்கான பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

    புதுச்சேரி:

    இந்திய கம்யூனிஸ்ட்டு (எம்.எல்) மாநில செயலாளர் புருஷோத்தமன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஒடிசா கோர ரெயில் விபத்து பாதுகாப்பு சாதனங்கள் இல்லாததாலும் ஊழியர் பற்றாக்குறையாலும் ஏற்பட்டது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    இதற்கு மோடி அரசாங்கத்தின் ரெயில்வே அமைச்சகம் முழு பொறுப்பேற்க வேண்டும். பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்திட, ரெயில்வேயை தனியார் மயமாக்கும் திட்டத்தைக் கைவிட்டு, உயரிய பாதுகாப்பு சாதனங்களை நிறுவி, காலியாக உள்ள லட்சக்கணக்கான பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • திருப்புவனம் அருகே பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கும் ெரயில்வே சுரங்கபாதை நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • மழைநீர் தேங்குவதற்கு மட்டுமே ெரயில்வே சுரங்க பாதை வசதியாக உள்ளது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே நெல்முடிக்கரை பகுதிக்கு செல்ல மதுரை-ராமேசுவ ரம் நான்கு வழிசாலையில் ராமேசுவரம் செல்லும் தண்டவாளத்தை கடக்க ஆளில்லா லெவல் கிராசிங்கை அகற்றி விட்டு 2 ஆண்டுகள் முன்பு சுரங்க பாதை அமைக்கப்பட்டது.

    இது அமைக்கப்பட்டதில் இருந்து தற்போது வரை சுரங்க பாதையில் மழைநீர் குளம் போல் தேங்கி இருப்பதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் யாரும் அதை பயன்படுத்த முடியவில்லை.

    மேய்ச்சல் நிலங்களுக்கு கால்நடைகளையும் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சுரங்க பாதை அமைக்கும் போதே மழைநீர் வராத அளவிற்கு வடிகால் வசதி செய்யவில்லை. மழைநீர் தேங்காமல் இருக்க சுரங்க பாதை மீது மேற்கூரை ஏதும் அமைக்காததால் இன்று வரை கட்டி முடிக்கப் பட்டு மழைநீர் தேங்குவதற்கு மட்டுமே ெரயில்வே சுரங்க பாதை வசதியாக உள்ளது.

    எனவே உடனடியாக ெரயில்வே நிர்வாகம் சுரங்க பாதையில் தேங்கிய மழை நீரை வெளியேற்றி வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டண சலுகையும் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
    • இனி மாற்றுத்திறனாளிகளின் ரெயில் பயணம் சுகமாகும், எளிதாகும்.

    புதுடெல்லி :

    எல்லோரும் தொலைதூர பயணத்துக்கு ரெயில்களைத்தான் விரும்புகின்றனர். மாற்றுத்திறனாளிகளும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆனால் மாற்றுத்திறனாளிகளுக்கு நடு படுக்கை (மிடில் பெர்த்) அல்லது மேல் படுக்கை (அப்பர் பெர்த்) ஒதுக்கப்படுகிறபோது அவர்கள் அவற்றைப் பயன்படுத்த சிரமப்படுகின்றனர்.

    இனி அந்த பிரச்சினை இல்லை. இனி மாற்றுத்திறனாளிகளின் ரெயில் பயணம் சுகமாகும், எளிதாகும்.

    மெயில் மற்றும் விரைவு ரெயில்களில் மாற்றத்திறனாளிகளுக்கு கீழ்படுக்கைகளை (லோயர் பெர்த்) ஒதுக்க முன்னுரிமை வழங்க ரெயில்வே நடவடிக்கை எடுத்துள்ளது. அவர்களுடன் செல்கிற உதவியாளர்களுக்கு நடு படுக்கைகள் (மிடில் பெர்த்) ஒதுக்கப்படும்.

    இதுதொடர்பாக ரெயில்வே மண்டல அலுவலகங்களுக்கு ரெயில்வே வாரியம் உத்தரவு ஒன்றை அனுப்பி உள்ளது.

    அந்த உத்தரவில், "மாற்றுத்திறனாளிகளுக்கும், அவர்களது உதவியாளர்களுக்கும் சிலிப்பர் கிளாஸ்சில் (எஸ்-பெட்டி) 2 கீழ் படுக்கை மற்றும் 2 நடு படுக்கை ஒதுக்கப்பட வேண்டும். மூன்றடுக்கு ஏ.சி. பெட்டிகளில் ஒரு கீழ் படுக்கை, ஒரு நடுபடுக்கையும், மூன்றடுக்கு எகனாமி ஏ.சி. பெட்டிகளில் ஒரு கீழ் படுக்கையும், ஒரு நடு படுக்கையும் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்" என கூறப்பட்டுள்ளது.

    மாற்றுத்திறனாளிகளுக்கு ரெயில் பயணங்களில் கட்டண சலுகையும் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

    • சுரங்கப்பாதை அமைப்பது தொடர்பாக சுமார் ரூ. 3.72 கோடி நிதி ஒதுக்கீடு செய்து நேற்று முன்தினம் மல்லூர் பேரூராட்சிக்கு தென்னக ெரயில்வே கடிதம் அனுப்பி உள்ளது.
    • அதில், 2 மாதங்களில் சுரங்கப்பாதைக்கான பணி தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் மல்லூர் ,வீரபாண்டி மெயின் ரோடு வேங்காம்பட்டி அருகே உள்ள ெரயில்வே கேட் பல்வேறு கிராமங்களையும் நகரங்களையும் இணைக்கக்கூடிய முக்கிய சாலையாக உள்ளது.

    இதன் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான பஸ்கள், மோட்டார் சைக்கிள்கள், சரக்கு வாகனங்கள் வந்து

    செல்கின்றன. அதன் வழியாக ெரயில்வே மேம்பாலம் அமைக்கக்கோரி மல்லூர் பேரூராட்சியில் கடந்த 2011 -ம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சம்பந்தப்பட்ட அதிகாரி களுக்கு அனுப்பப்பட்டது .

    மேலும் கடந்த 2021 -ம்

    ஆண்டு மல்லூர் பேரூ ராட்சி பொதுமக்கள் தபால் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    ஆர்ப்பாட்டம் நடத்தியும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் பொதுமக்கள் மற்றும் மகளிர் சுய உதவி குழுவினர் வேங்காம்பட்டி ெரயில்வே கேட் முன்பு

    ெரயில் மறியல், ஆர்ப்பாட்டம் நடத்த இருந்தனர்.

    இதற்கிடையே பேரூராட்சி அலுவலகத்தில் அவசர கூட்டம் நடத்தி தீர்மானம் நிறை வேற்றப்பட்டு உதவி கோட்ட பொறியாளர் ஆத்தூர் துணைக்கோட்ட அலு வலகத்திற்கு தீர்மான நகல் அனுப்பி வைக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து சுரங்கப்பாதை அமைப்பது தொடர்பாக சுமார் ரூ. 3.72 கோடி நிதி ஒதுக்கீடு செய்து நேற்று முன்தினம் மல்லூர் பேரூராட்சிக்கு தென்னக ெரயில்வே கடிதம் அனுப்பி உள்ளது. அதில், 2 மாதங்களில் சுரங்கப்பாதைக்கான பணி தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனால் இன்று நடைபெறவிருந்த ெரயில் மறியல் போராட்டம் தற்கா

    லிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மல்லூர் பேரூராட்சி துணைத் தலைவர் வேங்கை

    அய்யனார் தெரி வித்துள்ளார். பாலம் அமைப்பதால் அந்த வழியாக போக்குவரத்து நெரிசல் குறையும் என்பதால் அந்த பகுதி மக்கள் மல்லூர் பேரூராட்சி துணைத் தலைவர் வேங்கை அய்யனாருக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.

    • பயணிகள் சேவைக்காக ரெயில்வே ரூ.59 ஆயிரம் கோடி மானியம் அளித்துள்ளது.
    • புதிய வசதிகள் அமல்படுத்தப்படுகின்றன.

    புதுடெல்லி

    ரெயில்களில் மூத்த குடிமக்களுக்கு பயண கட்டணத்தில் 50 சதவீதம்வரை சலுகை அளிக்கப்பட்டு வந்தது. கொரோனா பரவலைத் தொடர்ந்து இந்த சலுகை நிறுத்தப்பட்டது.

    சுமார் 3 ஆண்டுகளாக சலுகை இல்லாத நிலையில், மீண்டும் எப்போது கட்டண சலுகை அளிக்கப்படும் என்று பாராளுமன்ற மக்களவையில் சுயேச்சை உறுப்பினர் நவ்நீத் ராணா கேள்வி எழுப்பினார்.

    அதற்கு பதில் அளித்த ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், கட்டண சலுகை இப்போதைக்கு கிடையாது என்று சூசகமாக தெரிவித்தார்.

    அவர் கூறியதாவது:-

    பயணிகள் சேவைக்காக ரெயில்வே ரூ.59 ஆயிரம் கோடி மானியம் அளித்துள்ளது. இது பெரிய தொகை. சில மாநிலங்களின் வருடாந்திர பட்ஜெட் தொகையை விட பெரியது.

    ரெயில்வேயில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் அளிக்க ஆண்டுக்கு ரூ.60 ஆயிரம் கோடி ஆகிறது. சம்பளத்துக்கு ரூ.97 ஆயிரம் கோடியும், எரிபொருளுக்கு ரூ.40 ஆயிரம் கோடியும் செலவிடப்படுகிறது.

    புதிய வசதிகள் அமல்படுத்தப்படுகின்றன. புதிய முடிவுகள் எடுக்கப்பட வேண்டி இருந்தால், அதை எடுப்போம். ஆனால், இப்போதைக்கு ரெயில்வேயின் நிலைமையை ஒவ்வொருவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காலி பணியிடங்களை உடனே நிரப்ப கோரியும் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய திட்டத்தை அமல்படுத்த கோரியும் ரெயில்வே ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
    • 25 -க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

    சேலம்:

    ரெயில்வே துறையை தனியார் மயமாக்குதலை கண்டித்தும், காலி பணியிடங்களை உடனே நிரப்ப கோரியும் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய திட்டத்தை அமல்படுத்த கோரியும், ெரயில் நிலையங்களையும், விரைவு ரெயில்களையும் தனியார் மயக்குவதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று காலை எஸ்.ஆர்.எம்.யூ சார்பில் சேலம் ெரயில்வே கோட்ட அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் நடந்தது.

    இந்த போராட்டத்திற்கு சேலம் கோட்ட செயலாளர் கோவிந்தன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட தலைவர் பாஸ்கர் உள்பட 25 -க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

    ×