search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "revenue"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தாசில்தார் அலுவலகங்கள் முன்பு தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • ராம நிர்வாக அலுவலர் பதவி உயர்வு 20 சதவீதம் என்பதை 30 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும். ஓட்டுனர் உரிமம் வைத்திருக்கும் கிராம ஊழியர்களுக்கு ஊர்தி ஓட்டுனர் பதவி உயர்வு வழங்க வேண்டும்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தாசில்தார் அலுவலகங்கள் முன்பு தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    நாமக்கல் தாசில்தார் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு வட்ட தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் விஜயகுமார், துணை தலைவர் அய்யாவு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட தலைவர் பரமசிவம் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார்.

    இந்த ஆர்ப்பாட்டத்தின் போது கிராம நிர்வாக அலுவலர் பதவி உயர்வு 20 சதவீதம் என்பதை 30 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும். ஓட்டுனர் உரிமம் வைத்திருக்கும் கிராம ஊழியர்களுக்கு ஊர்தி ஓட்டுனர் பதவி உயர்வு வழங்க வேண்டும்.

    காலியாக உள்ள கிராம ஊழியர்கள் பணியிடத்தை தேர்வாணையம் மூலம் நிரப்பிட வேண்டும். கருணை அடிப்படையில் வாரிசு வேலை வழங்க வேண்டும். குறைந்தபட்ச கல்வி தகுதி 10-ம் வகுப்பு என நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அரசியல் தலையீடுகள் இல்லாமல், சரியான பயனாளிகளுக்கு திட்டம் சென்றடைய வேண்டும்
    • மருத்துவமனைக்கு வரும் பொது மக்களுக்கு சுகாதார வளாகம், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளை முறையாக செயல்படுத்த அறிவுறுத்தினார்

    பல்லடம்:

    பல்லடம் தாலுகா அலுவலகத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்ட பதிவு குறித்து சப் கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பல்லடம் நகராட்சி ஆணையாளர், சாமளாபுரம் பேரூராட்சி செயல் அலுவலர், மற்றும் வருவாய் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அரசியல் தலையீடுகள் இல்லாமல், சரியான பயனாளிகளுக்கு திட்டம் சென்றடைய வேண்டும் என அறிவுறுத்தினார். இதைத்தொடர்ந்து பல்லடம் வட்டார பகுதியில் அதிக விபத்துக்கள் நேரும் இடங்களை பார்வையிட்ட அவர் இதுகுறித்து போக்குவரத்து போலீசார் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    பல்லடம் அரசு மருத்துவமனை, சார் பதிவாளர் அலுவலகம் ஆகிய இடங்களை பார்வையிட்ட அவர் மருத்துவமனைக்கு வரும் பொது மக்களுக்கு சுகாதார வளாகம், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளை முறையாக செயல்படுத்த அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது பல்லடம் தாசில்தார் ஜெய்சிங் சிவக்குமார் தலைமையிடத்து துணை தாசில்தார் சுப்பிரமணியம், மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர். ஆய்வுப் பணிக்கு வந்த சப்- கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணனிடம் சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு சார்பில் செட்டிபாளையம் ரோட்டில் உள்ள அரசு மதுபான கடையை இடமாற்றம் செய்ய வேண்டும் என கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

    இதற்கிடையே தாலுகா அலுவலகத்தில் இருந்த பழைய குப்பைகளை தீ வைத்து எரித்தனர். அதில் பொது மக்களின் மனுக்களும் இருந்ததாக சிலர் கூறியதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதே போல மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் மகளிர் உரிமைத்தொகை திட்ட பதிவுகள் குறித்து பல்லடம் தாலுகா அலுவலகம் மற்றும் அரசு பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அரசு கேபிள் டி.வி.யில் தற்போது 15.5 லட்சம் வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
    • கட்டண அடிப்படையில் விளம்பரங்கள் ஒளிபரப்ப திட்டமிடப்பட்டுள்ளது

    திருப்பூர்,ஜூலை.7-

    அரசு கேபிள் டி.வி.யின் செட்டாப் பாக்ஸ் இயக்கம் துவங்கும் போதெல்லாம் திரையில் வரும் தகவல் சேனலில் தனியார் நிறுவனங்களின் விளம்பரங்களை ஒளிபரப்பி அதன் வாயிலாக வருவாய் ஈட்ட கேபிள், டி.வி., நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

    இது குறித்து திருப்பூர் அரசு கேபிள் டி.வி., அதிகாரிகள் கூறியதாவது:-

    அரசு கேபிள் டி.வி.யில் தற்போது 15.5 லட்சம் வாடிக்கையாளர்கள் உள்ளனர். எங்கள் கேபிளை வைத்திருக்கும் வாடிக்கையாளர்களின் தொலைக்காட்சி, ஆன் செய்யப்படும் போதெல்லாம், லேண்டிங் சேனல் எனும் அரசு கேபிள் தகவல் சேனல் ஒளிபரப்பாகும்.

    அதில் தமிழக அரசின் பல்வேறு நலத்திட்டங்கள், முதல்வரின் சட்டசபை நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பு, கேபிள் டி.வி., தொடர்பான தகவல், பொது மக்கள் நலன் சார்ந்த அறிவிப்புகள் ஆகியவை ஒளிபரப்பாகும்.

    இந்தநிலையில் இந்த தகவல் சேனலில் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி அதில் கட்டண அடிப்படையில் விளம்பரங்கள் ஒளிபரப்ப திட்டமிடப்பட்டுள்ளது. மொத்த செட்டாப் பாக்ஸ்களின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டு அதற்கேற்ப விளம்பரம் ஒளிபரப்பு கட்டணம் வசூலிக்கப்படும்.

    இதன் வாயிலாக அரசு கேபிள் டி.வி., நிறுவனத்திற்கு கூடுதல் வருவாய் கிடைக்கும். முதலில் ஓராண்டிற்கு ஒப்பந்த அடிப்படையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வாழப்பாடியில், பல்வேறு கோரிக்கைகளை நிறை வேற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • 2022 ஆகஸ்ட்டில் நடை பெற்ற பேச்சுவார்த்தையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து கோஷமிட்டனர்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடியில், பல்வேறு கோரிக்கைகளை நிறை வேற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். வாழப்பாடி வட்டாட்சியர் அலுவலகம் முன் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட துணைத் தலைவர் வாழப்பாடி வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். வாழப்பாடி வட்டத் தலை வர் வருவாய் ஆய்வாளர் கார்த்திக் வரவேற்றார்.

    இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, வட்டாட்சியர்களுக்கு துணை ஆட்சியர் பதவி உயர்வு வழங்க வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி துணை வட்டாட்சியர் பதவியிறக்கத்தை ரத்து செய்து பதவி உயர்வை வழங்க ஆணை வெளியிட வேண்டும். அலுவலக உதவியாளர் காலி பணியி டங்களை நிரப்ப வேண்டும். இளநிலை, முதுநிலை வருவாய் ஆய்வாளர்களின் பதவி பெயர் மாற்ற அர சாணை வழங்க வேண்டும். 2022 ஆகஸ்ட்டில் நடை பெற்ற பேச்சுவார்த்தையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து கோஷமிட்டனர். துணை வட்டாட்சியர்கள், வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் பணியாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 150 சிறப்பு பஸ் இயக்கப்பட்டது.
    • 3 நாட்களில் 3.50 லட்சம் பேர் பயணித்ததாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருப்பூர் :

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, வெளிமாவட்டத்தினர் சொந்த ஊர் செல்ல ஏதுவாக திருப்பூரில் இருந்து 150 சிறப்பு பஸ் இயக்கப்பட்டது. பயணிகள் வசதிக்காக பண்டிகைக்கு 3நாட்கள் முன்பே பஸ் இயக்கம் துவங்கியது. ஆனால் தீபாவளிக்கு முதல் நாள் தான் பஸ்களில் கூட்டம் அலைமோதியது.

    3 நாட்களில் 3.50 லட்சம் பேர் பயணித்ததாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர். சொந்தஊர் சென்றவர் திருப்பூர் திரும்ப ஏதுவாக 25 முதல், 27-ந் தேதி வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    சிறப்பு பஸ் இயக்கம் மூலம் திருப்பூர் மண்டலம் 7 நாட்களில் ரூ. 64.50 லட்சம் வருவாய் ஈட்டியுள்ளதாக கோவை கோட்ட போக்குவரத்து துறை வணிக பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மதுரை ரெயில்வே கோட்டத்தில் சரக்கு போக்குவரத்து வருமானம் ரூ.170 கோடியாக உயர்ந்துள்ளது.
    • ெரயில்வே வாரியம் நிர்ணயித்த இலக்கை விட 38 சதவீதம் அதிகம் ஆகும் என்று மதுரை ெரயில்வே கோட்ட அதிகாரி தெரிவித்தார்.

    மதுரை

    மதுரை ரெயில்வே கோட்டத்தில் தூத்துக்குடியில் இருந்து உரம், நிலக்கரி, சுண்ணாம்புக்கல், வாடிப்பட்டியில் இருந்து டிராக்டர் ஆகியவை சரக்கு ெரயில் மூலம் வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இதன்மூலம் கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரை ரூ.170 கோடி வருமானம் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு சரக்கு போக்குவரத்து வருமானம் ரூ.128.44 கோடியாக இருந்தது. மதுரை கோட்டத்தில் கடந்த 6 மாத சரக்கு போக்குவரத்து வருமானம் 32.38 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு 413 சரக்கு ெரயில்களில் ஏற்றுமதி நடந்தது. தற்போது 614 ஆக உயர்ந்துள்ளது. தென்னக ெரயில்வே நடப்பு அரையாண்டு காலத்தில் ஒட்டுமொத்தமாக சரக்கு போக்குவரத்து மூலம் ரூ.1766 கோடி வருமானம் ஈட்டியுள்ளது. இது கடந்த அரையாண்டு காலத்தை விட 17.42 சதவீதம் அதிகம் ஆகும். ெரயில்வே வாரியம் நிர்ணயித்த இலக்கை விட 38 சதவீதம் அதிகம் ஆகும் என்று மதுரை ெரயில்வே கோட்ட அதிகாரி தெரிவித்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பயணிகள் போக்குவரத்து, கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளது.
    • பார்சல் சேவை மூலம் ரூ.2 ஆயிரத்து 437 கோடி கிடைத்துள்ளது.

    புதுடெல்லி

    நடப்பு ஆண்டில் ஆகஸ்டு மாதம் வரையிலான 8 மாதங்களில் இந்திய ரெயில்வேயின் ஒட்டுமொத்த வருவாய் ரூ.95 ஆயிரத்து 486 கோடியே 58 லட்சம் ஆகும். இது, கடந்த ஆண்டில் ஆகஸ்டு வரையிலான காலகட்டத்தின் வருவாயை விட ரூ.26 ஆயிரத்து 271 கோடி (38 சதவீதம்) அதிகம்.

    பயணிகள் போக்குவரத்து மூலம் மட்டும் ரூ.25 ஆயிரத்து 276 கோடியே 54 லட்சம் கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.13 ஆயிரத்து 574 கோடி (116 சதவீதம்) அதிகம்.

    பயணிகள் போக்குவரத்து, கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளது. பயணிகள் மற்றும் புறநகர் ரெயில்களை விட நீண்ட தூர எக்ஸ்பிரஸ் ரெயில்களில் அதிக வருவாய் கிடைத்துள்ளது.

    சரக்கு போக்குவரத்து மூலம் ரூ.65 ஆயிரத்து 505 கோடியும், இதர வருவாய் ரூ.2 ஆயிரத்து 267 கோடியும், பார்சல் சேவை மூலம் ரூ.2 ஆயிரத்து 437 கோடியும் கிடைத்துள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 3 நாள் தொடர் விடுமுறை மதுரை ரெயில்வேக்கு கூடுதல் வருமானம் கிடைத்துள்ளது.
    • ரூ.15லட்சத்து18,946 என்ற அளவில் வருமானம், முன்பதிவில்லாத பயணச்சீட்டு விற்பனை மூலம் கிடைத்து உள்ளது.

    மதுரை

    சுதந்திர தினத்தை முன்னிட்டு 3 நாள் விடுமுறை என்பதால் ரெயிலில் பெரும்பாலானோர் பயணம் செய்தனர். அதிலும் குறிப்பாக மதுரை ரெயில் நிலையத்தில் முன்பதிவு இல்லாத பயண சீட்டு அதிகம் விற்பனையாகி உள்ளன. பொதுவாக மதுரை ரெயில் நிலையத்தில் நாள் ஒன்றுக்கு ரூ.8.5 லட்சம் என்ற அளவுக்கு முன்பதிவில்லாத பயணச் சீட்டுகள் விற்பனை ஆகும்.

    ஆனால் சுதந்திர தின விடுமுறை காரணமாக சனி, ஞாயிறு, திங்கட்கிழமைகளில் முறையே ரூ. 16 லட்சத்து 50,144, ரூ.15லட்சத்து01 734, ரூ.15லட்சத்து18,946 என்ற அளவில் வருமானம், முன்பதிவில்லாத பயணச்சீட்டு விற்பனை மூலம் கிடைத்து உள்ளது.

    மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ரெயில்வே செய்தி தொடர்பு அலுவலகம் தெரிவித்து உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தியாகதுருகம் அருகே சாலையோர ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.
    • சாலையின் இருபுறமும் நிலம் உள்ள 2 விவசாயிகள் பாலம் அமைத்தால் எங்களுக்கு இடையூறாக இருக்கும் என கூறி எதிர்ப்பு தெரிவித்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே திம்மலை கிராமத்தில் இருந்து அலங்கிரி கிராமத்திற்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் குறுக்கே சிறு பாலம் அமைக்கும் பணி கடந்த சில மாதங்களுக்கு தொடங்கப்பட்டது.

    அப்போது சாலையின் இருபுறமும் நிலம் உள்ள 2 விவசாயிகள் பாலம் அமைத்தால் எங்களுக்கு இடையூறாக இருக்கும் என கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். இதையொட்டி நில அளவையர்கள் நடராஜன், சக்திவேல் ஆகியோர் தலைமையில் வருவாய்த்துறையினர் நிலங்களை அளவீடு செய்யும் பணி கடந்த சில நாட்களுக்கு முன்பு நிறைவடைந்தது.

    அதன்படி நேற்று வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இந்திராணி, பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது. இதில் இரண்டு பொக்லைன் எந்திரங்கள் மூலம் சாலையோர ஆக்கிரமிப்பு–கள் அகற்றப்பட்டன.அப்போது உதவி திட்ட அலுவலர் சீனிவாசன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கொளஞ்சி வேல், ஒன்றிய பொறியாளர் கோபி, வருவாய் ஆய்வாளர் சுகன்யா, ஊராட்சி மன்ற தலைவர் தேவி ராஜேந்திரன், ஊராட்சி செயலாளர் செல்வராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

    அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாத வகையில் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையில் 20 -க்கும் மேற்பட்ட போலீ சார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். முன்னெ–ச்சரிக்கை நடவடிக்கை யாக ஆம்புலன்ஸ் ஒன்று சம்பவ இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது அப்பகுதியில் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மதுரை கோட்டம் சார்பில் 67-வது ெரயில்வே வாரவிழா நடந்தது.
    • மதுரை கோட்டத்தின் ஒட்டு மொத்த வருமானம் ரூ.700.10 கோடி ஆகும்

    மதுரை

    மதுரை கோட்டம் சார்பில் 67-வது ெரயில்வே வாரவிழா நடந்தது. இதில் கடந்த ஆண்டு சிறப்பாக பணியாற்றிய 165 ஊழியர்களுக்கும், அலுவலர்களுக்கும் சான்றிதழும், 21 குழு விருதுகளும் வழங்கப்பட்டன.

    இதனைத் தொடர்ந்து மதுரை கோட்ட ெரயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த் கூறியதாவது:-

    மதுரை கோட்ட ெரயில்களில் கடந்த ஆண்டு 14.02 மில்லியன் பேர் பயணித்தனர்‌. இதன் மூலம் ரூ.403.37 கோடி வருவாய் கிடைத்து உள்ளது. இது முந்தைய ஆண்டை காட்டிலும் ரூ.265.19 கோடி அதிகம்.அடுத்தபடியாக 2.18 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டதன் மூலம் போக்குவரத்து வருவாயாக ரூ.237.28 கோடி ஈட்டப்பட்டு உள்ளது. கடந்த நிதியாண்டில் மதுரை கோட்டத்தின் ஒட்டு மொத்த வருமானம் ரூ.700.10 கோடி ஆகும். இது முந்தைய ஆண்டை காட்டிலும் 62 சதவீதம் அதிகம்.

    மதுரை கோட்டத்தில் 98 சதவீத பயணிகள் ெரயில்கள் காலம் தவறாமல் இயக்கப்பட்டது. சரக்கு ெரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டு தற்போது மணிக்கு 49 கி.மீ. வேகத்தில் இயக்கப்படுகிறது. மதுரை கோட்டத்தில் 247 கி.மீ. ெரயில் பாதை மின்மயம் ஆக்கப்பட்டு உள்ளது.

    கடந்த ஆண்டு 922 ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு உள்ளன. 94 ஓய்வூதியர்களின் குறைகள் களையப்பட்டு, ரூ.7.08 லட்சம் பணப்பயன்கள் வழங்கப்பட்டு உள்ளன. ஊழியர்களின் குறைகளை அலைபேசி வாட்ஸ்அப், டெலிகிராம் செயலிகள் மூலம் உடனடியாக தீர்க்க தொலைபேசி உதவி எண்கள் பயன்பாட்டில் உள்ளது என்றார்.

    விழாவில் கூடுதல் கோட்ட மேலாளர் தண்ணீரு ரமேஷ்பாபு, முதுநிலை கோட்ட ஊழியர் நல அதிகாரி சுதாகரன் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo