search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "RailwayStation"

    • காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நாடு முழுவதும் அனைவரும் தூய்மைப்பணியில் ஈடுபட வேண்டும்
    • ெரயில் நிலையத்தை தங்களது வீட்டை எப்படி சுத்தமாக வைத்துக் கொள்வோமோ அது போல் வைத்துக்கொள்ள வேண்டும்

    திருப்பூர்:

    காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நாடு முழுவதும் அனைவரும் தூய்மைப்பணியில் ஈடுபட வேண்டும் என்பதற்காக ஒரு நாள் ஒரு மணி நேரம் தூய்மைக்காக நம்மை ஈடுப்படுத்திக்கொள்வோம் என்ற திட்டத்தை மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சகத்தின் கீழ் திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் அலகு-2 மற்றும் தென்னக ெரயில்வே, திருப்பூர் ரெயில் நிலையம் சார்பில் திருப்பூர் ெரயில் நிலையத்தில் தூய்மைக்கான விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகளும், தூய்மை பணியும் நடைபெற்றது.

    நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக ெரயில்வே உதவி வணிக மேலாளர் ஷியாமல் குமார் கோஷ், சேலம் கோட்ட பயணிகளின் ஆலோசகர் குழு உறுப்பினர் சுரேஷ் குமார், துணை மேலாளர் சங்கர் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தனர்.

    உதவி வணிக மேலாளர் பேசுகையில், ெரயில் நிலையத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.பயணிகள் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது, ெரயில் நிலையத்தை தங்களது வீட்டை எப்படி சுத்தமாக வைத்துக் கொள்வோமோ அது போல் வைத்துக்கொள்ள வேண்டும் என்று பேசினார். நிகழ்ச்சியில் துணை மேயர் பாலசுப்பிரமணியம் கலந்து கொண்டார். மாணவ செயலர்கள் சுந்தரம், ராஜபிரபு, விஜய், காமராஜ், செர்லின், தினேஷ்கண்ணன் ஆகியோர் தலைமையில் 60 க்கும் மேற்பட்ட நாட்டு நலப்பணித்திட்டம் அலகு-2 மாணவ மாணவிகள் தூய்மை பணியில் ஈடுபட்டும், விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும், கலை நிகழ்ச்சிகள் நடத்தியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.

    • பிளாட்பாரத்தில் மேற்கூரை இல்லாததால் பயணிகள் மழையில் நனைந்தும் வெயிலில் நின்றும் அவதிப்பட்டு வருகின்றனர்.
    • 4 நிமிடம் ெரயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    உடுமலை:

    பொள்ளாச்சி தொகுதி திமுக எம்பி., சண்முகசுந்தரம் டெல்லி ரயில்வே வாரிய தலைவர் ஒய்.கே. யாதவ்க்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:- பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் உள்ள உடுமலை ெரயில் நிலையத்தை தினமும் ஏராளமான பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் அங்கு வசதிகள் குறைவாக உள்ளன. முதலாவது பிளாட்பாரத்தின் கிழக்குப் பகுதியில் மேற்கூரை இல்லாததால் பயணிகள் மழையில் நனைந்தும் வெயிலில் நின்றும் அவதிப்பட்டு வருகின்றனர்.

    எனவே முழுவதுமாக மேற்கூரை அமைக்க வேண்டும். பயணிகள் ஓய்வு எடுக்க காத்திருக்கும் அறை கட்ட வேண்டும். சரக்கு போக்குவரத்தை கையாளும் வசதி ஏற்படுத்த வேண்டும். இருசக்கர வாகன நிறுத்தம் அமைக்க வேண்டும். பாலக்காடு -திருச்செந்தூர் ெரயில் உடுமலையில் இரண்டு நிமிடம் மட்டுமே நின்று செல்கிறது. பயணிகள் கூட்டம் காரணமாக ஏற சிரமப்படுகின்றனர். எனவே 4 நிமிடம் ெரயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் ஏற்கனவே வலியுறுத்திய கோவை- மதுரை ெரயில் நிரந்தரம் செய்தல், கோவையில் இருந்து மதுரைக்கு காலை 6 மணிக்கு புறப்படும் வகையில் ெரயில் இயக்குதல், கோவை -கொல்லம் ,கோவை- ராமேஸ்வரம் ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும். பொள்ளாச்சியில் இருந்து உடுமலை ,பழனி ,திண்டுக்கல், திருச்சி வழியாக தாம்பரத்திற்கு இரவு நேரம் ெரயில் இயக்க வேண்டும். உடுமலையில் ெரயில் நிலையத்தை மேம்படுத்த வேண்டும் என கூறியுள்ளார். 

    • கடந்த 2010-ம் ஆண்டுக்கு முன்பு மீட்டர் கேஜ் ஆக இருந்த போது தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு ரயில் நிறுத்தம் இருந்த நிலையில் அகல ரயில் பாதையாக மாற்றிய பின் அந்த ரயில் நிறுத்தம் நீக்கப்பட்டுள்ளது.
    • தேனி மாவட்ட மக்கள் மதுரைக்கு செல்லவும், மீண்டும் மதுரையில் இருந்து தேனிக்கு வருவதற்கு ஏதுவாக ரயில் புதிதாக இயக்கப்பட்டால் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என கோரிக்கை.

    தேனி:

    தமிழ்நாடு தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு செயலாளர் ராஜன் மத்திய ரயில்வே துறைக்கும், சென்னையில் உள்ள ரயில்வே டிவிஷனல் மேலாளருக்கும் கோரிக்கை மனு அனுப்பி உள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது, மதுரை-போடி ரயில் பாதையில் கடந்த 2010-ம் ஆண்டுக்கு முன்பு மீட்டர் கேஜ் ஆக இருந்த போது தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு ரயில் நிறுத்தம் இருந்தது. தற்போது அகல ரயில் பாதையாக மாற்றிய பின் அந்த ரயில் நிறுத்தம் நீக்கப்பட்டுள்ளது.

    இதனால் கலெக்டர் அலுவலகம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், ஐ.டி.ஐ மற்றும் சுற்றியுள்ள கிராம பகுதி மக்கள் தேனி புதிய பஸ் நிலையத்திற்கு சென்று, அங்கிருந்து வெளியூர் செல்ல வேண்டி இருப்பதால் பலர் பாதிப்பு அடைகிறார்கள். மேலும் தற்போது உள்ள ரயில் நிலையத்திலிருந்து புதிய பஸ் நிலையம் வரவும், கலெக்டர் அலுவலகம் மற்றும் மற்ற அலுவலகங்களுக்கு வரவும் கூடுதல் நேரமாகிறது. அதுபோல ஆட்டோ கட்டணமும் கூடுதலாக செலவாகிறது.

    எனவே மீண்டும் தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு ரயில் நிறுத்தம் கொண்டு வர வேண்டும். அங்கு ரயில் டிக்கெட் புக்கிங் அலுவலகமும் திறக்க வேண்டும். மேலும் தற்போது மதுரை-போடி இடையேயான முன்பதிவு இல்லாத பேசஞ்சர் ரயில் மதுரையில் இருந்து வரும் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது.

    ஆனால் தேனி மாவட்ட மக்கள் பல்வேறு வேலைகளுக்காக மதுரைக்கு செல்லவும், மீண்டும் மதுரையில் இருந்து தேனிக்கு வருவதற்கு ஏதுவாக காலையில் போடியில் இருந்து 7.30 மணிக்கும், மாலையில் மதுரையில் இருந்து போடிக்கு வருவதற்கு 6 மணிக்கும் பேசஞ்சர் ரயில் புதிதாக இயக்கப்பட்டால் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    • தென்காசி வழியாக 10 தினசரி ரெயில்களும், ஒரு வாரம் மும்முறை ரெயிலும், 4 வாராந்திர ரெயில்களும் இயங்கி வருகின்றன.
    • தென்காசி ரெயில் நிலையத்தை மேம்படுத்தினால் வாராந்திர ரெயில்களை நிரந்தர தினசரி ரெயில்களாக இயக்க முடியும்.

    தென்காசி:

    மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள மிக முக்கியமான சந்திப்பு ரெயில் நிலையம் தென்காசி ஆகும். தற்போது தென்காசி வழியாக 10 தினசரி ரெயில்களும், ஒரு வாரம் மும்முறை ரெயிலும், 4 வாராந்திர ரெயில்களும் இயங்கி வருகின்றன.

    டெர்மினல் ரெயில் நிலையங்களாக உள்ள செங்கோட்டை ரெயில் நிலையத்தில் 4 நடை மேடைகளும், நெல்லை ரெயில் நிலையத்தில் 5 நடை மேடைகளும் உள்ள நிலையில் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை, பெங்களூர், கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு கூடுதல் ரெயில்கள் இயக்குவதற்கு போதுமானதாக இல்லை.

    எனவே 4 நடைமேடைகள் கொண்ட தென்காசி ரெயில் நிலையத்தில் நீரேற்றும் வசதி ஏற்படுத்தினால் கூடுதல் ரெயில்கள் இயக்குவதற்கு வாய்ப்புகள் கிடைக்கும்.

    இதுகுறித்து தென்மாவட்ட பயணிகள் கூறியதாவது:- செங்கோட்டை, நெல்லை ரெயில் நிலையங்களை போல தென்காசி ரெயில் நிலையத்தை டெர்மினல் நிலையமாக மாற்ற வேண்டும். இதற்கு தென்காசி ரெயில் நிலையத்தில் பைப் லைன் மற்றும் நீரேற்றும் தொட்டி வசதிகள் ஏற்படுத்தினால் தென்காசியில் இருந்து சென்னை, பெங்களூர், கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு கூடுதல் ரெயில்கள் இயக்குவதற்கு வாய்ப்பாக அமையும்.

    தற்போது செங்கோட்டை ரெயில் நிலையத்திலிருந்து கூடுதல் ரெயில்கள் இயக்க முடியாது என்று தெற்கு ரெயில்வே கைவிரித்துள்ள நிலையில் தென்காசி ரெயில் நிலையத்தை மேம்படுத்தினால் வாராந்திர ரெயில்களை நிரந்தர தினசரி ரெயில்களாக இயக்க முடியும். இதற்காக தென்காசி எம்.பி. மேம்பாட்டு நிதி மற்றும் அம்ரித் பாரத் திட்டத்திற்காக செலவிடப்படும் நிதியிலிருந்தும் நீரேற்றும் வசதியை ஏற்படுத்தி டெர்மினல் ஆக மாற்ற வேண்டும். தென்காசியில் டெர்மினல் செயல்படத் தொடங்கினால் மதுரையோடு நிற்கும் சில ரெயில்களை தென்காசி வரைக்கும் நீட்டிக்க முடியும். அதைப்போல சிலம்பு எக்ஸ்பிரஸையும் ,தாம்பரம் - செங்கோட்டை வாரம் மும்முறை இயங்கும் ரெயிலையும் தினசரியாக இயக்கவும் வாய்ப்புகள் அமையும். எனவே தென்காசி தொகுதி எம்.பி. உடனடியாக தென்காசியை டெர்மினல் நிலையமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×