என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரெயில்வே"

    • முன்பதிவில் ஏற்படும் முறைகேடுகளைத் தடுக்க ரயில்வே இந்த விதியை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.
    • அனைத்து ரெயில் நிலையங்களிலும் உள்ள முன்பதிவு கவுன்டர்களுக்கு விரிவுபடுத்தப்படும்.

    முன்பதிவு கவுன்டர்களில் வாங்கப்படும் தட்கல் டிக்கெட்டுகளுக்கு ஒரு முறை மட்டும் பயன்படுத்தக்கூடிய OTP கடவுச்சொல்லை ரெயில்வே கட்டாயமாக்கவுள்ளது.

    முன்பதிவில் ஏற்படும் முறைகேடுகளைத் தடுக்க ரயில்வே இந்த விதியை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.

    OTP அடிப்படையிலான தட்கல் டிக்கெட் முன்பதிவு முறை நவம்பர் 17 முதல் ஒரு சில ரெயில் நிலையங்களின் முன்பதிவு கவுன்டர்களில் சோதனை அடிப்படையில் தொடங்கப்பட்டது.

    இந்நிலையில் இந்த முறையை அனைத்து ரெயில் நிலையங்களிலும் உள்ள முன்பதிவு கவுன்டர்களுக்கு விரிவுபடுத்தத் தயாராகி வருவதாக ரெயில்வே அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    எனவே இனிமேல், கவுன்டர்களில் முன்பதிவு படிவத்தை நிரப்பிய பிறகு, முன்பதிவு செய்யும் போது மொபைல் எண்ணில் பெறப்பட்ட OTP ஐ உள்ளிடுவதன் மூலம் மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்யப்படும். 

    • ஏக்நாத் ஷிண்டேவை துரோகி என குறிப்பிட்டு பாடிய பாடல் மூலம் குறிவைக்கப்பட்டார்.
    • ரெயில்வே வெளியிட்டுள்ள அதிகாரப் பூர்வமாக உண்மை சரிபார்ப்பு அறிக்கை பலரை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.

    பிரபல 'ஸ்டாண்டு அப்' காமெடியன் குணால் கம்ரா மும்பையில் கடந்த மார்ச் மாதம் நடந்த நிகழ்ச்சியில் பாஜக கூட்டணி சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டேவை துரோகி என குறிப்பிட்டு பாடிய பாடல் மூலம் குறிவைக்கப்பட்டார்.

    இந்த சர்ச்சை தற்போது ஓய்ந்துள்ள நிலையில் அண்மையில் தனது யூடியூப் சேனலில் ரெயில்வே துறை குறித்து பேசிய குணால் கம்ரா, 2023 ஆம் ஆண்டில் சுமார் 25,000 ரெயில் விபத்துகளில் சுமார் 22,000 பேர் இறந்ததாக தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) புள்ளிவிவரங்கள் கூறுவதாக தெரிவித்தார். 

    அவரின் கூற்று குறித்து ரெயில்வே வெளியிட்டுள்ள அதிகாரப் பூர்வமாக உண்மை சரிபார்ப்பு அறிக்கை பலரை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.

    ரெயில்வே வெளியிட்ட உண்மைச் சரிபார்ப்பில், 2023 ஆம் ஆண்டில் சுமார் 25,000 விபத்துகள் நடந்ததாக கூறப்படுவது தவறானது, அந்த ஆண்டில் நடந்த உண்மையான விபத்துகளின் உண்மையான எண்ணிக்கை 24,678 ஆகும். அதேபோல், 22,000 இறப்புகள் என்ற கூற்றுக்கு மாறாக, 21,803 இறப்புகள் மட்டுமே பதிவாகி உள்ளது என தெளிவுபடுத்தியது.

    இந்த தெளிவுபடுத்தல் இணையத்தில் கடும் விமர்சனங்களை குவித்து வருகிறது. ரெயில்வேயின் அறிக்கைக்கு உடனடியாக பதிலளித்த காம்ரா, தான் கூறியதில் என்ன தவறு என கேள்வி எழுப்பி உள்ளார்.

    இந்த தெளிவுபடுத்தல் இணையத்தில் கடும் விமர்சனங்களை குவித்து வருகிறது. ரெயில்வேயின் அறிக்கைக்கு உடனடியாக பதிலளித்த காம்ரா, தான் கூறியதில் என்ன தவறு என கேள்வி எழுப்பி உள்ளார்.

    2023 இல் நடந்து மிக மோசமான ரெயில் விபத்து ஒடிசாவில் நிகழ்ந்தது. ஜூன் 2 அன்று பாலசோர் மாவட்டத்தில் பஹானாகா பஜார் ரெயில் நிலையம் அருகே மூன்று ரெயில்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் 296 பேர் உயிரிழந்தனர் மற்றும் 1200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சிக்னல் பிழை காரணமாக இந்த விபத்து நடந்ததாக தெரிவிக்கப்பட்டது. 

    • அவர் கோச் உதவியாளர் சுபைர் என்பவரிடம் ஒரு போர்வை மற்றும் படுக்கை விரிப்பைக் கேட்டார்.
    • இரத்தப்போக்கு காரணமாக ஜிகர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    ரெயில் ஏசி கோச்சில் போர்வை கேட்டதற்கு ராணுவ வீரரை கோச் உதவியாளர் கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் அரங்கேறி உள்ளது.

    ராணுவ வீரர் ஜிகர் சவுத்ரி விடுப்பில் வீடு செல்வதற்காக இந்த மாதம் 2 ஆம் தேதி, ஜம்மு தாவி-சபர்மதி எக்ஸ்பிரஸின் 2nd ஏசி கோச்சில் சொந்தமாநிலமான குஜராத்துக்கு பயணம் செய்து கொண்டிருந்தார்.

    பயணத்தின் நடுவில், அவர் கோச் உதவியாளர் சுபைர் என்பவரிடம் ஒரு போர்வை மற்றும் படுக்கை விரிப்பைக் கேட்டார். படுக்கை விரிப்பு கொடுத்த சுபைர், போர்வை கொடுக்க மறுத்துவிட்டார்.

    இந்த விஷயத்தில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த சுபைர், தன்னிடம் இருந்த கத்தியால் ஜிகர் சவுத்ரியைத் சரமாரியாக குத்தினார். கடுமையான இரத்தப்போக்கு காரணமாக ஜிகர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    டிக்கெட் பரிசோதகரின் புகாரின் அடிப்படையில், ரெயில்வே போலீசார் எப்ஐஆர் பதிவு செய்து பிகானர் ரெயில் நிலையத்தில் வைத்து கோச் உதவியாளர் சுபைரை கைது செய்தனர். சுபைர் ஒப்பந்தத்தின் அடிப்படையில் பணியமர்த்தப்பட்டவர் என்றும் அவரை பணிநீக்கம் செய்துள்ளதாகவும் ரெயில்வே விளக்கம் அளித்துள்ளது. 

    இதுபற்றிய பற்றிய புகாரைப் பெற்ற தேசிய மனித உரிமைகள் ஆணையம், ரெயில்வே வாரியத் தலைவர் மற்றும் ரெயில்வே பாதுகாப்புப் படையின் இயக்குநர் ஜெனரல் ஆகியோருக்கு தற்போது நோட்டீஸ் அனுப்பியதன் மூலம் இந்த சம்பவம் கவனம் பெற்றுள்ளது. 

    • ஏன் அதிக விலை வசூலிக்கப்படுகிறது என்று ஊழியர்களிடம் கேட்டார்.
    • பயணிகள் தங்கள் தொலைபேசிகளில் தாக்குதலை படம் பிடித்தனர்.

    மத்திய பிரதேசத்தை சேர்ந்த நிஹால் (25) என்ற இளைஞர் கடந்த ஆகஸ்ட் மாதம் தனது குடும்பத்தினருடன் உத்தரப் பிரதேசத்தின் கத்ராவில் இருந்து மத்திய பிரதேசத்தின் பினா நோக்கி அந்தமான் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்றுகொண்டிருந்தார்.

    பயணத்தின் ஒரு பகுதியாக, அவர் ரெயிலில் சைவ உணவுகளை ஆர்டர் செய்தார். அதன் விலை ரூ.110 ஆக இருந்த நிலையில், கேட்டரிங் ஊழியர்கள் அவரிடம் ரூ.130 வசூலித்தனர். இதற்கு நிஹால் எதிர்ப்பு தெரிவித்து, ஏன் அதிக விலை வசூலிக்கப்படுகிறது? என்று ஊழியர்களிடம் கேட்டார்.

    இதனால் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ஆத்திரமடைந்த கேட்டரிங் ஊழியர்கள் நிஹாலை தடிகளாலும், பெல்ட்களாலும் கண்மூடித்தனமாக அடித்தனர்.

    சக பயணிகள் அவர்களைத் தடுக்க முயன்றாலும், அவர்கள் அதைப் பொருட்படுத்தாமல் தாக்குதலைத் தொடர்ந்தனர். சில பயணிகள் தங்கள் தொலைபேசிகளில் தாக்குதலை படம் பிடித்தனர்.

    ரெயில் ஜான்சி ரெயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்தபோது இந்த சம்பவம் அரங்கேறியது. இதன் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

    ரெயில் பினா நிலையத்தை அடைந்தவுடன் நிஹால் ரெயில்வே காவலரளிடம் புகார் அளிக்க முயன்றார். ஆனால் அவர்கள் இந்த விவகாரம் தங்கள் எல்லைக்குள் நடக்கவில்லை என கூறி புகாரை ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே இது பழைய வீடியோ என்றும் இதுபோன்ற எந்த சம்பவமும் பதிவாகவில்லை எனவும் வடக்கு ரெயில்வே மறுப்பு தெரிவித்துள்ளது. 

    • கூட்ட நெரிசலில் சிக்கி 5 பெண்கள் உட்பட 8 பயணிகள் காயமடைந்தனர்.
    • இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    மேற்கு வங்கத்தில் உள்ள பர்தமான் ரயில் நிலையத்தில் நேற்று மாலை 4 மற்றும் 5வது நடைமேடைகளில் ஒரே நேரத்தில் ரெயில்கள் வந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

    ரெயில்களில் ஏறவும் இறங்கவும் பயணிகள் முண்டியடித்து முயன்றதால் பலர் கீழே விழுந்து மிதிபட்டு காயமடைந்தனர். கூட்ட நெரிசலில் சிக்கி 5 பெண்கள் உட்பட 8 பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு ரெயில்வே மருத்துவர்கள் முதலுதவி அளித்த பின்னர் சிகிச்சைக்காக பர்தாமன் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்

    இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    பண்டிகை கால கூட்டம் காரணமாக ரெயில் நிலையில் நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர். எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துகளைத் தடுப்பதற்கும் நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

    • ஏசி டெக்னீசியன் நடுவழியில் அதை பழுது பார்க்க வந்துள்ளார்.
    • ஏசி டக்ட்-ஐ திறந்து பார்த்த போது அதில் மதுபாட்டிகள் பேப்பரில் சுற்றப்பட்டு மறைந்து வைக்கப்பட்டிருந்தன.

    உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து பீகாரின் பெகுசாராய் பகுதிக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் ஒன்று இயங்கி வருகிறது.

    கடந்த செவாய்க்கிழமை இந்த ரெயிலின் ஏசி பெட்டியில் பயணித்த பயணிகள் ஏசி குறைந்த கூலிங்கில் இயங்குவதாக புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து ஏசி டெக்னீசியன் நடுவழியில் அதை பழுது பார்க்க வந்துள்ளார்.

    அப்போது ஏசி டக்ட்-ஐ (குழாயை) திறந்து பார்த்த போது அதில் மதுபாட்டிகள் பேப்பரில் சுற்றப்பட்டு மறைந்து வைக்கப்பட்டிருந்தன. மொத்த பெட்டியையும் இவ்வாறு சோதனை செய்ததில் 150க்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

    பீகாரில் பூரண மதுவிலக்கு அமலில் உள்ள நிலையில் இவ்வாறு சட்டவிரோத மதுபான கடத்தல் நடந்து வந்துள்ளது.

    முன்னதாக கடந்த மே மாதம் ரெயிலில் இதுபோல மறைத்து வைக்கப்பட்ட 700 பாக்கெட் சாராயம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த குற்றச்சாட்டில் ரெயில் பவர் கார் ஊழியர் ஒருவரும் பிடிபட்டார். 

    • அஸ்வினி வைஷ்ணவ் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார்.
    • 10,000-க்கும் அதிகமான வாகனங்கள் கடக்கும் ரெயில்வே கேட்டுகளில் தானியங்கி இன்டர்லாக் அமைப்புகள் நிறுவப்படும்.

    கடலூர் அருகே பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தைத் தொடர்ந்து, ரயில்வே பாதுகாப்பு குறித்த மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று (ஜூலை 10) ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார்.

    இந்தக் கூட்டத்தில் ரயில்வே லெவல் கிராசிங்குகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காகப் பல புதிய நடைமுறைகளை அறிமுகப்படுத்த முடிவெடுக்கப்பட்டது.

    இதுதொடர்பாக ரெயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    ரெயில்வே கேட் கீப்பர்கள் மற்றும் ஸ்டேஷன் மாஸ்டர்களின் குரல் பதிவுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும். அனைத்து ரெயில்வே கேட்டுகளிலும், கேட் கீப்பர் அறைகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும்.

    ஒரு நாளைக்கு 10,000-க்கும் அதிகமான வாகனங்கள் கடக்கும் ரெயில்வே கேட்டுகளில் தானியங்கி இன்டர்லாக் அமைப்புகள் நிறுவப்படும். அடுத்த 15 நாட்களுக்குள் அனைத்து ரெயில் கேட்டுகளையும் ஆய்வு செய்ய ஒரு புதிய பாதுகாப்பு அமைப்பு உருவாக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. 

    • மக்கள் அழுத்தத்தால் தான் கேட்டை கேட் கீப்பர் திறந்தார் என்று ரயில்வே சொல்வது அலட்சியத்தின் உச்சம்.
    • பாஜக அரசு வந்த பிறகு, ரயில்வே பட்ஜெட்டும், ரயில்வே தொடர்பான விவாதமும் ஒழிக்கப்பட்டுவிட்டது.

    கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே கேட்டை கடக்க முயன்ற தனியார் பள்ளி வேன் மீது ரெயில் மோதியதில் 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்த விபத்து தொடர்பாக விசிக எம்.எல்.ஏ. ஆளூர் ஷாநவாஸ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில், "நாடு முழுவதும் ரயில் விபத்துகள் பெரும்பாலும் ரயில்வே துறையின் அலட்சியத்தாலேயே நிகழ்கின்றன. கடலூர் விபத்தும் அப்படியே நடந்துள்ளது. ரயில் வருவதற்கு முன்பே கேட் மூடப்பட வேண்டும் என்னும் போது, ரயில் வரும்போது கேட் எப்படி திறந்திருந்தது?

    Inter Locking System இல்லாத கேட்களில், ஒரு ஸ்டேசனை ரயில் கடந்தவுடன் அடுத்த ஸ்டேசனுக்கு அந்த ஸ்டேசன் மாஸ்டர் தகவல் கொடுக்க வேண்டும் என்னும் போது இந்த விபத்து எப்படி நடந்தது?

    மக்கள் அழுத்தத்தால் தான் கேட்டை கேட் கீப்பர் திறந்தார் என்று ரயில்வே நிர்வாகம் சொல்வது அலட்சியத்தின் உச்சம். கேட் மூடப்படவே இல்லை என்று வேன் ஓட்டுநரும், மாணவரும், மக்களும் சொல்வதை விசாரிக்காமலேயே ரயில்வே நிர்வாகம் ஒரு சார்பு தகவலை சொல்வது அபத்தம்.

    பாஜக அரசு வந்த பிறகு, ரயில்வே பட்ஜெட்டும், ரயில்வே தொடர்பான விவாதமும் ஒழிக்கப்பட்டுவிட்டது. போதிய பணியாளர்கள் நியமனங்கள் இன்றி ரயில்வே துறை தள்ளாடுகிறது. பணி இடங்களில் மொழி தெரியாதவர்களை நியமிப்பதன் மூலம் சிக்கல் அதிகரிக்கிறது. விபத்துகளை தவிர்க்கும் தொழில்நுட்பங்கள் வந்தபிறகும் அவை பயன்படுத்தப்படாத நிலை உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

    • கோவை, கேரளா பகுதிகளுக்கு திருப்பூர் ரெயில் நிலையம் முக்கியமான இடமாக விளங்கி வருகிறது.
    • தொழில் நகரங்களை நோக்கி இவர்கள் வேலைவாய்ப்பை தேடி செல்கின்றனர்.

    நல்லூர்:

    திருப்பூர் ரெயில் நிலையத்திற்கு தினமும் எக்ஸ்பிரஸ், அதிவேகம், டபுள்டெக்கர், வந்தேபாரத், மெமு என சுமார் 84 ரெயில்கள் வந்து செல்கின்றன. ஒரு சில ரெயில்கள் திருப்பூர் ரெயில் நிலையத்தில் 'ஸ்டாப்பிங்' இல்லாததால் நிறுத்தப்படுவதில்லை. கோவை, கேரளா பகுதிகளுக்கு திருப்பூர் ரெயில் நிலையம் முக்கியமான இடமாக விளங்கி வருகிறது.

    காலை வேளையில் திருப்பூருக்கு வேலைக்கு வரும் தினசரி பயணிகள் 'சீசன் டிக்கெட்' மூலம் பயணம் செய்கின்றனர். மாதாந்திர தொகை செலுத்தி இந்த 'சீசன் டிக்கெட்' பெறுகின்றனர். ரெயிலில் பயணம் செய்யும்போது டிக்கெட் பரிசோதகர்கள் வந்தால் இந்த சீசன் டிக்கெட்டை காட்டி விடுகின்றனர். அதேபோல் சாதாரண பயண டிக்கெட்டையும் மற்ற பயணிகள் காட்டி பயணம் மேற்கொள்கின்றனர். பெரும்பாலும் இந்த பணிகளில் டிக்கெட் பரிசோதகர்களுக்கு பிரச்சினைகள் அதிகம் எழுவதில்லை. டிக்கெட் இல்லாத பயணிகளிடம் 'அபராதம்' வாங்கி ரசீது கொடுத்து விடுகின்றனர்.

    ஆனால், திருப்பூர் ரெயில் நிலையத்தின் நுழைவுவாயிலில் உள்ள முதல் பிளாட்பாரத்தில் வடமாநிலத்தில் இருந்து வரும் ரெயில் பயணிகளால்தான் டிக்கெட் பரிசோதகர்களுக்கு பெரும் 'தலைவலி' ஏற்படுகிறது.

    பெரும்பாலும் காலையில் திருப்பூருக்கு வரும் 'தன்பாத்' எக்ஸ்பிரஸ் ரெயில் பயணிகளில் பெரும்பாலானோர் டிக்கெட் எடுக்காமல் திருப்பூர் வந்து சேர்கின்றனர். இவர்கள் கணவன், மனைவி, குழந்தைகள், அக்கா, தங்கை, அண்ணன், மச்சான், மாமன் என கூட்டு குடும்பமாக வீட்டு சாமான்களை மூட்டை கட்டி கும்பல் கும்பலாக வருவதாலும், இவர்களிடம் சரிவர பேச முடியாத அளவுக்கு மொழிப்பிரச்சினை இருப்பதாலும் திருப்பூர் ரெயில் நிலைய அதிகாரிகள் தடுமாறுகின்றனர்.

    இவர்களிடம் 'பயணச்சீட்டு எங்கே?' என்று கேட்டால், 'கியா சாப்.... மாலும் நஹி' என்று பான்பராக் காவிப்பற்கள் தெரிய சிரித்து மண்டையை சொறிந்து நெளிகின்றனர். குழந்தை, குட்டி என பெரும்பட்டாளத்துடன் வரும் இவர்கள் மீது 'அபராதம்' விதித்தால் பணம் இல்லையென்று 'கை'விரித்து பிளாட்பாரத்திலேயே உட்கார்ந்து விடுகின்றனர்.

    ரெயில்வே போலீசாரும் இவர்களை சமாளிக்க முடியாமல் திண்டாடுகின்றனர். டிக்கெட் இல்லாத பயணம் என வழக்கு பதிவு செய்து ஸ்டேஷனில் உட்கார வைத்தால் அந்த 'பெரும்' கும்பலுக்கு டீ, காபி, டிபன் வாங்கிக்கொடுத்து கட்டுபடியாவதில்லை என்று 'பெருமூச்சு' விடுகின்றனர்.

    தினமும் காலையில் நூற்றுக்கணக்கான பயணிகளை ஒரே நேரத்தில் சமாளிக்க முடியாத நிலையில், மேலும் கூடுதல் டிக்கெட் பரிசோதகர்களை களத்தில் இறக்கி 'ஒரு கை' பார்த்துவிடலாம் என 'ரவுண்டு' கட்டி பயண டிக்கெட்டுகளை ஆய்வு செய்தாலும் 'நஹி பையா' என்று பான்பராக் வாசத்துடன் பல்லைக்காட்டும் வடமாநிலத்தவர்களால் 'தெறித்து' ஓடுகின்றனர் திருப்பூர் டிக்கெட் பரிசோதகர்கள்.

    இது குறித்து ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    தினமும் காலையில் 'தன்பாத்' ரெயில் மூலம் எங்களுக்கு 'தலைவலி' ஆரம்பம் ஆகிவிடுகிறது. பகலில் வடமாநிலத்தில் இருந்து வரும் ரெயில்களிலும் கூட்டம் கூட்டமாக பயணிகள் வருகின்றனர். எல்லா பயணிகளையும் குற்றம் சொல்ல முடியாது. நிறைய பேர் முறையான டிக்கெட் எடுத்து வருகின்றனர். ஆனால் வடமாநிலத்தில் உள்ள சாதாரண கிராமத்தில் இருந்து வரும் கல்வியறிவு இல்லாத பலர் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்து திருப்பூர் வருகின்றனர்.

    இந்த பிரச்சினை சென்னை, ஈரோடு, கோவை போன்ற ஊர்களிலும் உள்ளது. தொழில் நகரங்களை நோக்கி இவர்கள் வேலைவாய்ப்பை தேடி செல்கின்றனர். ஆனால் முறையான டிக்கெட் வாங்கி பயணம் செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வு இல்லை. இதிலும் ஒரு சிலர், ஏசி., பெட்டிகளிலும் ஏறி அமர்ந்து கொண்டு அங்குள்ள முறையாக 'ரிசர்வ்' செய்த பயணிகளை 'இம்சை' படுத்தி அவர்கள் சீட்டை ஆக்கிரமிக்கும் அவலமும் நடக்கிறது. அதுபோன்ற சமயங்களில் 'ஆர்.பி.எப்.,' ரெயில்வே பாதுகாப்பு படை வீரர்களை வைத்து அவர்களை அகற்ற வேண்டியுள்ளது. திருப்பூரில் கும்பல் கும்பலாக வரும் வடமாநில பயணிகளிடம் டிக்கெட் எடுத்து பயணிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விரைவு ரெயில்களில் கி.மீ.-க்கு 1 பைசா விலை உயர்த்தப்பட்டுள்ளது.
    • அனைத்து ஏ.சி. வகுப்புகளுக்கும் கிலோ மீட்டருக்கு 2 பைசா உயர்த்தப்பட்டுள்ளது.

    ரெயில் கட்டணம் உயர்வு இன்று (ஜூலை 1) முதல் அமலுக்கு வந்துள்ளது. அதே சமயம் புறநகர் ரெயில் மற்றும் சீசன் டிக்கெட் கட்டணம் தற்போது உயர்த்தப்படவில்லை.

    மெயில் மற்றும் விரைவு ரெயில்களில் 2ஆம் வகுப்பு, முதல் வகுப்பு மற்றும் ஸ்லீப்பர் வகுப்புக்கு கி.மீ.-க்கு 1 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் ரெயில்களின் அனைத்து ஏ.சி. வகுப்புகளுக்கும் கிலோ மீட்டருக்கு 2 பைசா விலை உயர்த்தப்பட்டுள்ளது.

    சாதாரண ரெயில்களின் இரண்டாம் வகுப்பு கட்டணம் 500 கி.மீ. வரை உயர்த்தப்படவில்லை. அதே சமயம் 500 கிலோ மீட்டருக்கு மேல் பயணிப்பவர்களுக்கு ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் அரை பைசா கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு 1500 கிமீ தூரம் பயணம் செய்பவருக்கு டிக்கெட் கட்டணம் ரூ.5 அதிகரிக்கும்.

    ரெயில் கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதே சமயம் ரெயில் கட்டணம் சிறிதளவு மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது என்பதால் பயணிகளை பெரிய அளவில் பாதிக்காது என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • ஏசி ஸ்லீப்பர் பெட்டிகளின் திறன் 190% அதிகரித்துள்ளது. ஆனால், இரண்டாம் வகுப்பு பயணிகளை ஏற்றிச் செல்லும் திறன் வெறும் 15% மட்டுமே அதிகரித்துள்ளது.
    • ஒரு வந்தே பாரத் ரெயிலின் செலவு சுமார் ரூ.120 கோடி, இது வழக்கமான ரெயிலை விட இரு மடங்கு அதிகம்.

    இன்று (ஜூலை 1) முதல் ரெயில் கட்டணங்கள் உயர்வு அமலாகி உள்ளது. இதற்கு பரவலான எதிர்ப்பு இருந்தபோதிலும் எந்த சமரசமுமின்றி கட்டண உயர்வை அரசு அமல்படுத்தி உள்ளது. ஆனால் மக்களுக்கான ரெயில் சேவைகளில் சமீப காலங்களாக அதிக சரமரசங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதில் ஒன்று வந்தே பாரத் ரெயில்களுக்கு வழங்கப்படும் சிறப்பு கவனம் ஆகும்.

    இந்திய ரயில்வே கடந்த ஆறு ஆண்டுகளில் அறிமுகப்படுத்திய வந்தே பாரத் ரெயில்கள் மணிக்கு 160 கி.மீ. வரை செல்லும் திறன் கொண்டவை. சிறந்த உள் வசதிகளுடன் இவை பயணிகளுக்கு ஒரு தனித்துவமான அனுபவத்தைத் தருகின்றன. ஆனால் இது அனைவரும் எட்டும் சேவையாக இல்லை என்பதே நிதர்சனமான உண்மை.

    இந்திய ரெயில்வேயில் பயணிக்கும் மொத்தப் பயணிகளில் சுமார் 90% பேர் இரண்டாம் வகுப்பு அல்லது குளிர்சாதன வசதியற்ற ஸ்லீப்பர் வகுப்பில் பயணிக்கின்றனர். அதாவது 146 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட இந்தியாவில், வந்தே பாரத் சேவைகள் 90% இந்தியர்களுக்கு எட்டாத தொலைவில் உள்ளன.

    வந்தே பாரத் ரெயில்கள் அனைத்தும் குளிர்சாதன வசதி கொண்டவையாகவும், கட்டணம் அதிகமாகவும் உள்ளன. எனவே இது பெரும்பான்மையான இந்தியர்களுக்கு வந்தே பாரத் பயணத்தை எட்டாததாக ஆக்குகிறது.

    கடந்த 10 ஆண்டுகளில், ஏசி ஸ்லீப்பர் பெட்டிகளின் திறன் 190% அதிகரித்துள்ளது. ஆனால், இரண்டாம் வகுப்பு பயணிகளை ஏற்றிச் செல்லும் திறன் வெறும் 15% மட்டுமே அதிகரித்துள்ளது. இது, ரெயில்வேயின் கவனம் வசதி படைத்த ஏசி பயணிகள் மீது மட்டுமே உள்ளதைக் காட்டுகிறது.

    2013-14 ஆம் ஆண்டைக் காட்டிலும் 2023-24 ஆம் ஆண்டில் ஏசி அல்லாத பயணிகள் பிரிவில் பயணம் செய்தவர்களின் எண்ணிக்கை ஒரு பில்லியனுக்கும் மேல் குறைந்துள்ளது. வந்தே பாரத் போன்ற முழுவதும் ஏசி ரயில்களின் பெருக்கம், இந்த ஏழை, நடுத்தர பயணிகள் எண்ணிக்கைக் குறைவுக்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம். 

    பெரும்பாலான வந்தே பாரத் ரெயில்கள் 16 பெட்டிகளுடன் 1128 இருக்கைகளுடன் இயங்குகின்றன. ஆனால், பல சமயங்களில் இந்த ரெயில்களில் இருக்கைகள் முழுமையாக நிரம்புவதில்லை. அதே நேரத்தில், வழக்கமான ரயில்களில், குறிப்பாக இரண்டாம் வகுப்பு மற்றும் ஸ்லீப்பர் பெட்டிகளில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது.

    ஒரு வந்தே பாரத் ரெயிலின் செலவு சுமார் ரூ.120 கோடி, இது வழக்கமான ரெயிலை விட இரு மடங்கு அதிகம். இவ்வளவு அதிக செலவில் உருவாக்கப்பட்ட ரெயில்கள் வாரத்தில் ஆறு நாட்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன.  

    அதிக செலவில் உருவாக்கப்பட்ட இந்த ரெயில்கள் முழுமையாகப் பயன்படுத்தப்படாமல் இருப்பது வளங்களை வீணடிப்பதாகக் கருதப்படுகிறது. இதனோடு தற்போதைய ரெயில் கட்டண உயர்வை பொருத்திப்பார்க்க வேண்டி உள்ளது.

    ஏற்கனவே நெரிசல் மிகுந்த வழித்தடங்களில் புதிய வந்தே பாரத் ரெயில்கள் அறிமுகப்படுத்தப்படுவது, சரக்கு போக்குவரத்து மற்றும் ஒட்டுமொத்த ரெயில்வே அமைப்புக்கு கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.

    உயர்வருவாய் கொண்ட பயணிகளுக்கு விமானப் பயணங்கள் ஒரு மாற்றாக இருக்கும் நிலையில், குறைந்த வருவாய் பிரிவினருக்கு நீண்ட தூரப் பயணங்களுக்கு ரெயில்வேயைத் தவிர வேறு வழியில்லை.

    ரெயில்வே தனது சேவையின் தரத்தை மேம்படுத்த வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அது பரந்த மக்கள் தொகையின் தேவைகளை புறக்கணித்து, ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டுமே சேவை செய்வதாக இருக்கக் கூடாது.

    புதிய ரெயில் சேவைகளை அறிமுகப்படுத்துவதற்குப் பதிலாக, ஏற்கனவே உள்ள ரெயில்களின் கொள்ளளவை அதிகரிப்பதும், குறிப்பாக ஏசி அல்லாத பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்துவதும் மிக அவசியம் என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.   

    • ரெயில் தும்மலச்செருவை அடைந்தவுடன், ஒரு கும்பல் ரெயிலுக்குள் நுழைந்து கொள்ளையடிக்கத் தயாரானது.
    • பீகார் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு இடையே இயங்கும் கும்பல்கள் சில காலமாக ரெயில்களில் கொள்ளையடித்து வருகிறது.

    ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டத்தில் பயணிகளை ஏற்றிச் சென்ற விசாகா எக்ஸ்பிரஸ் ரெயிலில் இன்று அதிகாலை 3.30 மணியளவில்  சில மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயன்றனர்.

    ரெயில் தும்மலச்செருவை அடைந்தவுடன், ஒரு கும்பல் ரெயிலுக்குள் நுழைந்து கொள்ளையடிக்கத் தயாரானது. அதைக் கவனித்த ரயில்வே பாதுகாப்புப் படையினர் உடனடியாக உஷார்படுத்தப்பட்டனர்.

    மர்ம நபர்களை கலைக்க அவர்கள் வானத்தில் மூன்று சுற்றுகள் சுட்டனர். துப்பாக்கி சத்தம் கேட்டு பயந்துபோன திருடர்கள், கொள்ளையடிக்க கொண்டு வந்த பொருட்களை அங்கேயே விட்டுவிட்டு இருளில் தப்பி ஓடிவிட்டனர்.

    பீகார் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு இடையே இயங்கும் கும்பல்கள் சில காலமாக ரெயில்களில் கொள்ளையடித்து வருவதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    இந்த கும்பல்கள் ஒரு வார காலத்தில் இரண்டு கொள்ளைச் சம்பவங்களைச் செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    தலைமறைவான மர்ம நபர்களைத் தேடும் பணிகளை ரெயில்வே போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

    ×