search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "CAG"

    ரபேல் ஒப்பந்தத்தை தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி ஏற்றுக்கொண்டது நகைச்சுவை என முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். #Rafale #CAG #Joke #Chidambaram
    புதுடெல்லி:

    ரபேல் விமான ஒப்பந்தம் குறித்து தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி அறிக்கையில் கூறியிருப்பது பற்றி முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கூறியதாவது:-

    தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி அதனை ஏற்றுக்கொண்டது ஒரு நகைச்சுவையாக ஆகிவிட்டது. வருங்காலத்தில் அமையும் அரசு அந்த அமைப்பின் பெருமையையும், ஸ்திரத்தன்மையையும் மீட்கும். ஒப்பந்தத்தில் மறைக்கப்பட்டுள்ள எண்ணிக்கை தொடர்பான பிரச்சினைகள், விலை நிர்ணயம், ஒப்படைத்தல் போன்ற பல பிரச்சினைகள் குறித்து அந்த 33 பக்க அறிக்கை விளக்கும் என்றும், அதில் சரியானது, ஏற்றுக்கொள்ளக்கூடிய வெளிப்படைத்தன்மை ஆகியவை பற்றி கருத்து வெளியிடும் என்றும் நீங்கள் எதிர்பார்த்தீர்களா? அப்படி என்றால் நீங்கள் ஏமாந்துபோவீர்கள்.

    இதுவே இறுதியானது என்று சொல்வதற்கு தலைமை கணக்கு தணிக்கையர் ஒன்றும் கடவுள் அல்ல.

    இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார். #Rafale #CAG #Joke #Chidambaram

    ரபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளதாகவும், இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் கணக்காய்வு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சிஏஜியை சந்தித்து காங்கிரஸ் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். #RafaleDeal #CAG #Congress
    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த போது இந்திய விமான படைக்கு ரபேல் ஜெட் போர் விமானங்கள் வாங்குவதற்காக அரசு விதிகளை பின்பற்றி உலக அளவில் டெண்டர் கோரப்பட்டு ஒரு விமானம் ரூ.526 கோடிக்கு வாங்குவது என முடிவு செய்யப்பட்டது. 

    இந்த நிலையில் 2014-ல் பா.ஜ.க.வின் மோடி அரசு பொறுப்பேற்றதும் சில விதிகளை மீறி பிரான்ஸ் அரசுடன் ஒரு விமானத்தின் விலையை ரூ.1,670 கோடி என நிர்ணயித்து ஒப்பந்தம் போட்டதில் ஊழல் நடந்துள்ளது என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வருகிறது. ஆனால், பா.ஜ.க அதனை மறுத்து வருகிறது.

    ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் ரூ.30 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக ஊழல் நடந்திருப்பதாக காங்கிரஸ் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. இவ்விவகாரம் தொடர்பாக இருகட்சிகள் இடையே வாக்குவாதம் நீடித்து வருகிறது. 

    இந்நிலையில், மத்திய கணக்கு தணிக்கை தலைவரை இன்று சந்தித்த காங்கிரஸ் மூத்த தலைவர்கள்  ஆனந்த் சர்மா, ரன்தீப் சுர்ஜேவாலா, கமல்நாத், கபில் சிபல் உள்ளிட்டோர் இவ்விவகாரம் தொடர்பாக கோரிக்கை மனு அளித்தனர். 

    விமான கொள்முதல் விவகாரத்தில் நேரிட்டுள்ள முறைகேடுகள் மற்றும் ஆவணங்களை தாக்கல் செய்துள்ள அவர்கள், இதுதொடர்பாக முழு விசாரணையை நடத்தி நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய கேட்டுக்கொண்டனர்.

    “ஒப்பந்தத்தில் நடந்துள்ள முறைகேடுகள் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சிஏஜியிடம் தாக்கல் செய்துவிட்டோம். ரபேல் போர் விமான கொள்முதல் விவகாரத்தில் இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனம் எவ்வாறு நீக்கப்பட்டு, தனியார் நிறுவனம் எவ்வாறு சேர்க்கப்பட்டது குறித்து விளக்கியுள்ளோம். விரைவில் சிஏஜி அறிக்கை அளிப்பார்கள் என நம்புகிறோம்” என ரன்தீப் சுர்ஜிவாலா கூறியுள்ளார். 
    ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பதாக கூறி வரும் காங்கிரஸ், இது தொடர்பாக விசாரணை நடத்தும்படி சிஏஜியிடம் இன்று முறையிட உள்ளது. #RafaleDeal #CAG
    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது, இந்திய விமான படைக்கு ரபேல் ஜெட் போர் விமானங்கள் வாங்குவதற்காக அரசு விதிகளை பின்பற்றி உலக அளவில் டெண்டர் கோரப்பட்டு ஒரு விமானம் ரூ.526 கோடிக்கு வாங்குவது என முடிவு செய்யப்பட்டது.



    இந்த நிலையில் 2014-ல் பா.ஜ.க.வின் மோடி அரசு பொறுப்பேற்றதும் பிரான்ஸ் அரசுடன் ஒரு விமானத்தின் விலையை ரூ.1,670 கோடி என நிர்ணயித்து ஒப்பந்தம் போட்டதில் ஊழல் நடந்துள்ளது என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வருகிறது. ஆனால், பா.ஜனதா அதனை மறுத்துள்ளது.

    ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக காங்கிரஸ்- பாரதிய ஜனதா இடையே வார்த்தைப்போர் முற்றியுள்ளது. இந்த நிலையில், ரபேல் விவகாரத்தில் நடைபெற்ற முறைகேடு குறித்து விசாரிக்க வலியுறுத்தி மத்திய கணக்கு தணிக்கை அமைப்பிடம் (சிஏஜி) இன்று மனு அளிக்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.

    அகமது பட்டேல், குலாம் நபி ஆசாத், ஏ.கே.அந்தோணி, ரன்தீப் சுர்ஜிவாலா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் சிஏஜியிடம் இன்று மனு அளிப்பார்கள் என தகவல் வெளியாகி உள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் அவர்களுடன் செல்லலாம் என தெரிகிறது. #RafaleDeal #CAG

    ×