search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "railway police"

    • அனைத்து ரெயில் பெட்டிகளிலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
    • மோதலில் ஈடுபட்ட 10 மாணவர்களை ரெயில்வே போலீசார் அடையாளம் கண்டு உள்ளனர்.

    அம்பத்தூர்:

    சென்னையில் பச்சையப்பன் கல்லூரி, மாநிலக் கல்லூரி மாணவர்களிடையே தொடர்ந்து தகராறு ஏற்பட்டு வருகிறது.

    அவர்கள் பஸ், ரெயில் நிலையங்களில் கோஷ்டிகளாக மோதிக்கொள்ளும் சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகின்றன. ரூட்டு தல பிரச்சினையே இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

    மோதலில் ஈடுபடும் மாணவர்களை போலீசார் கைது செய்தும், எச்சரித்தும் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். எனினும் மாணவர்களிடையேயான மோதல் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இன்று காலையும் மின்சார ரெயிலில் மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருத்தணியில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி இன்று காலை மின்சார ரெயில் வந்து கொண்டு இருந்தது. காலை நேரம் என்பதால் அனைத்து ரெயில் பெட்டிகளிலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    இதில் சென்னை பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநிலக்கல்லூரியில் படிக்கும் திருத்தணி, திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற பகுதியை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் பயணம் செய்தனர்.

    பட்டரைவாக்கம் ரெயில் நிலையம் அருகே மின்சார ரெயில் வந்து கொண்டு இருந்தபோது ஒரு பெட்டியில் இருந்த பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநிலக்கல்லூரி மாணவர்கள் இடையே திடீரெ மோதல் ஏற்பட்டது. அவர்கள் ஒருவரை ஒருவர் பயங்கரமாக தாக்கிக்கொண்டனர். இதனை கண்டு ரெயில் பெட்டியில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதற்குள் பட்டரைவாக்கம் ரெயில் நிலையத்தை அடைந்ததும் மின்சார ரெயில் நின்றது. உடனே ரெயிலில் இருந்து இறங்கிய பச்சயைப்பன் கல்லூரி மற்றும் மாநிலக்கல்லூரி மாணவர்கள் ஏராளமானோர் கோஷ்டிகளாக மோதிக்கொண்டனர்.

    மேலும் கல், சோடா பாட்டில், பீர் பாட்டில்களை ஒருவர் மீது ஒருவர் வீசி தாக்கினர். உருட்டுகட்டையாலும் தாக்கிக்கொண்டனர். இதில் சில மாணவர்களுக்கு ரத்த காயம் ஏற்பட்டது. மாணவர்களின் மோதலை கண்டு அதிர்ச்சி அடைந்த பயணிகள் அலறியடித்து வேறு ரெயில் பெட்டியில் ஏறினர். இதனால் அப்பகுதியில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.

    இதற்கிடையே மாணவர்கள் மோதல் பற்றி அறிந்ததும் பெரம்பூர் ரெயில்வே போலீசார் விரைந்து வந்தனர். உடனே மோதலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்தனர். அவர்களில் 3 மாணவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலும் மோதலில் ஈடுபட்ட 10 மாணவர்களை ரெயில்வே போலீசார் அடையாளம் கண்டு உள்ளனர். அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளனர்.

    இந்தநிலையில் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வரும் மாணவர்களை நிரந்தரமாக நீக்க வேண்டும் என்று பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநில கல்லூரிக்கு ரெயில்வே போலீசார் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து ரெயில்வே டி.எஸ்.பி. ரமேஷ் கூறும் போது, பச்சையப்பன் கல்லூரி, மாநிலக்கல்லூரி மாணவர்களிடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வருகிறது. இன்று காலையும் பட்டரைவாக்கத்தில் மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    பயணிகளுக்கு தொடர்ந்து பாதிப்பு ஏற்படும் வகையில் மாணவர்கள் மோதலில் ஈடுபட்டு வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட மாணவர்களை நிரந்தரமாக கல்லூரியில் இருந்து நீக்க வேண்டும் என்று பச்சையப்பன் கல்லூரி, மாநிலக் கல்லூரிக்கு கடிதம் வழங்கி உள்ளோம். மேலும் பஸ், ரெயிலில் பயணம் செய்யும் மாணவர்களின் விபரத்தையும் கேட்டு உள்ளோம் என்றார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரி பஸ் நிறுத்தத்தில் இதேபோல் கல்லூரி மாணவர்கள் கல், பாட்டில்களை வீசி மோதலில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

    • கர்த்தனாதபுரம் ெரயில் பாதையில் வாலிபர் ஒருவர் இறந்து கிடந்துள்ளார்.
    • மன்னை எக்ஸ்பிரஸ் ெரயிலில் அடிபட்டு உயிரிழந்ததும் தெரியவந்தது.

    திருவாரூர்:

    மன்னார்குடி அருகே உள்ள கர்த்தனாதபுரம் ெரயில் பாதையில் வாலிபர் ஒருவர் இறந்து கிடந்துள்ளார். இதனை பார்த்த அப்பகுதியினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் தஞ்சை ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வாலிபரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே சோழங்கநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்த் என்பதும், அவர் கடந்த இரண்டு நாட்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளதும், நேற்று முன்தினம் இரவு மன்னார்குடியில் இருந்து சென்னை சென்ற மன்னை எக்ஸ்பிரஸ் ெரயிலில் அடிபட்டு உயிரிழந்ததும் ெதரியவந்தது. இதையடுத்து தஞ்சை ெரயில்வே போலீசார், ஆனந்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடியில் உள்ள அரசு தலைமை ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

    இதுகுறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரெயிலின் மீது கற்கள் எரிதல் மற்றும் ரெயில் பாதையில் கல் வைக்கக் கூடாது.
    • கால்நடைகள் விபத்தில் சிக்கினால் அதன் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படும்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ரெயிலின் மீது கற்கள் எரிதல் மற்றும் ரெயில் பாதையில் கல் வைக்கக் கூடாது. இந்த செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும். ரெயில் பாதை அருகில் கால்நடைகளை மேய்க்ககூடாது.

    அவ்வாறு மேய்க்கும் போது கால்நடைகள் விபத்தில் சிக்கினால் அதன் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படும். நின்று கொண்டிருக்கும் ரெயில் மற்றும் சென்று கொண்டிருக்கும் ரெயில்கள் முன்பு செல்பி எடுக்க கூடாது.

    ரெயில் பாதைக்கு அருகில் குப்பைகளை கொட்டுவது மற்றும் தீயிட்டு கொளு த்துபவர்களை கண்ட றிந்து அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • போலீஸ்காரர் சேத்தன்சிங்சவுத்ரி பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார்.
    • உத்தரவை மும்பை சென்ட்ரல் ஆர்.பி.எப். மூத்த பிரிவு பாதுகாப்பு ஆணையர் பிறப்பித்துள்ளார்.

    மும்பை:

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து மும்பை சென்ற சென்ட்ரல் அதிவிரைவு ரெயிலில் கடந்த 31-ந்தேதியன்று ரெயில்வே பாதுகாப்பு படையை சேர்ந்த போலீஸ்காரர் சேத்தன்சிங் சவுத்ரி என்பவர் தன்னுடன் பயணம் செய்த போலீஸ் அதிகாரி திகாரம் மீனா மற்றும் 3 பயணிகள் என 4 பேரை சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி னர். அவருக்கு மனநல மருத்துவ பரிசோதனையும் செய்யப்பட்டது. இந்நிலையில் போலீஸ்காரர் சேத்தன்சிங்சவுத்ரி பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார்.

    இதற்கான உத்தரவை மும்பை சென்ட்ரல் ஆர்.பி.எப். மூத்த பிரிவு பாதுகாப்பு ஆணையர் பிறப்பித்துள்ளார். 

    • தடையை மீறி சுற்றுலா பயணிகள் நீர் வீழ்ச்சியை காண சென்று கொண்டிருக்கிறார்கள்.
    • தடையை மீறிய சுற்றுலா பயணிகளிடம் கையை முன்பக்கம் நீட்டி கொண்டு உட்கார்ந்து எழும்பும் தண்டனை கொடுத்துள்ளனர்.

    கோவா- கர்நாடகா எல்லையில் உள்ள துத்சாகர் பகுதியில் மழைக்காலங்களில் தற்காலிக நீர்வீழ்ச்சிகள் உருவாவது வழக்கம். இதை காண சுற்றுலா பயணிகள் அதிகளவு வருவதோடு மலை ஏற்றத்திலும் ஈடுபடுவார்கள். இது சில நேரங்களில் ஆபத்தாக முடியும் என்பதால் கோவா அரசு மலை ஏற்றத்திற்கு தடை விதித்துள்ளது. ஆனாலும் தடையை மீறி சுற்றுலா பயணிகள் நீர் வீழ்ச்சியை காண சென்று கொண்டிருக்கிறார்கள். துத்சாகர் ரெயில் நிலையத்தில் அதிக ரெயில்கள் நிற்காது என்பதால் சுற்றுலா பயணிகள் தெற்கு கோவாவில் உள்ள காலேல் ரெயில் நிலையத்தில் இறங்கி தண்டவாளம் வழியாக நடந்தே துத்சாகருக்கு செல்வது வழக்கம். தற்போது தடை விதிக்கப்பட்ட நிலையில் சுற்றுலா பயணிகள் சிலர் அதனை மீறி தண்டவாளம் வழியாக நடந்து சென்றுள்ளனர்.

    இதை பார்த்த ரெயில்வே போலீசாரும், வனத்துறையினரும், தடையை மீறிய சுற்றுலா பயணிகளுக்கு நூதன தண்டனை கொடுத்த காட்சிகள் இனையத்தில் வைரலாகி வருகிறது. அதில் தடையை மீறிய சுற்றுலா பயணிகளிடம் கையை முன்பக்கம் நீட்டி கொண்டு உட்கார்ந்து எழும்பும் தண்டனை கொடுத்துள்ளனர். இதனை ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட அது வைரலாகி வருகிறது.

    • ெரயில் தண்டவாளத்தில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் அடிபட்டு இறந்துகிடந்தார்.
    • வாலிபர் நீல கலர் ஜீன்ஸ் பேண்ட், ரோஸ் கலர் முழுக்கை சட்டை அணிந்து இருந்தார்

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் தாலுகா அமையாகரம் அருகே உள்ள ெரயில் தண்டவாளத்தில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் அடிபட்டு இறந்துகிடந்தார்.இது குறித்து தகவல் அறிந்த சேலம் ெரயில்வே போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் ஜெயபால், தலைமை காவலர்கள் பால கிருஷ்ணன், விக்னேஷ், மூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரெயில் மோதி இறந்த வாலிபர் உடலை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    அந்த வாலிபர் சேலத்திலிருந்து விருத்தாசலம் செல்லும் ெரயிலில் அடிபட்டு இருக்கலாம் எனரெயில்வே போலீசார் தெரிவித்தனர். ரெயில் மோதி இறந்த வாலிபர் நீல கலர் ஜீன்ஸ் பேண்ட், ரோஸ் கலர் முழுக்கை சட்டை அணிந்து இருந்தார் எனவும், இடது மற்றும் வலது மார்பு அடியில் இரு பக்கமும் மச்சம் உள்ளதாகவும் தெரிவித்தனர். இது குறித்து சேலம் ெரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சம்பவ இடத்திற்கு விரைந்த நெல்லிக்குப்பம் போலீசார் இறந்து கிடந்தவர் குறித்து விசாரித்தனர்.
    • இறந்தவரின் உடல் ரெயில்வே பாதையில் இருந்து 3 மீட்டருக்கு அப்பால் கிடந்தது.

    கடலூர்:

    நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கம் பி.என். பாளையம் பகுதியில் ரெயில்வே பாதை உள்ளது. இதன் அருகே சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் காயங்களுடன் இறந்து கிடந்தார். இதனைக் கண்ட அவ்வழியே சென்றவர்கள் இது குறித்து நெல்லிக்குப்பம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். நெல்லிக்குப்பம் போலீசார் கடலூர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த நெல்லிக்குப்பம் போலீசார் இறந்து கிடந்தவர் குறித்து விசாரித்தனர். இதில் அவர் அதே ஊரைச் சேர்ந்த வடிவேல் (வயது 42). கூலித் தொழிலாளி என்பது தெரிவந்தது.

    தொடர்ந்து அங்கு வந்த ரெயில்வே போலீசார், சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். இறந்தவரின் உடல் ரெயில்வே பாதையில் இருந்து 3 மீட்டருக்கு அப்பால் கிடந்தது. எனவே, இது குறித்து வழக்கு பதிவு செய்து எங்களால் விசாரிக்க முடியாது. நெல்லிக்குப்பம் போலீசார்தான் விசாரிக்க வேண்டுமென கூறினர். அதன்படி, இறந்து கிடந்த வடிவேலுவின் உடலை கைப்பற்றிய நெல்லிக்குப்பம் போலீசார் பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இறந்து போன வடிவேலு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது இவரை யாரேனும் கொலை செய்து ரெயில்வே பாதை அருகில் வீசி சென்றனரா? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • திருப்பூர் வரும் ரயில்களில் போதை பொருள்கள் கடத்தி வருவதாக ரயில்வே போலீசருக்கு தகவல் கிடைத்தது.
    • தன்பாத்திலிருந்து கேரளா மாநில செல்லும் விரைவு ரெயிலில் பொது பெட்டியில் போலீசார் சோதனை செய்தனர்.

    திருப்பூர் :

    மாநிலங்களிலிருந்து திருப்பூர் வரும் ரயில்களில் போதை பொருள்கள் கடத்தி வருவதாக திருப்பூர் ரயில்வே போலீசருக்கு தகவல் கிடைத்தது.

    அந்த தகவல்களின் அடிப்படையில் திருப்பூர் ரயில்வே சாப்- இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை, போலீஸ்கா ரர்கள் ராஜலிங்கம், சையது முகமது, கோபால் ஆகியோர் தன்பாத்திலிருந்து கேரளா மாநில செல்லும் விரைவு ரெயிலில் பொது பெட்டியில் போலீசார் சோதனை செய்தனர்.

    அப்போது பாத்ரூம் அருகில் ஒரு மூட்டை ஒன்று கிடந்தது அதனை சோதனை செய்து பார்த்தபோது அதில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் 12 கிலோ இருப்பது தெரிய வந்தது. போலீசார் அதனை பறிமுதல் செய்தனர். மேலும் அதை யார் கடத்தி வந்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரெயில் பயணிகளின் பாதுகாப்புக்காக இங்கு போலீசாரும் பணியில் உள்ளனர். இவர்கள் ரெயில் நிலையத்தில் தினமும் ரோந்து மேற்கொண்டு வருகின்றனர்.
    • ரெயிலுக்கு இடையே சிக்கிய நபரை போலீசார் லாவகமாக மீட்டு வெளியில் கொண்டு வந்தனர்.

    கோவை,

    கோவை மாநகரில் ரெயில் நிலையம் செயல்பட்டு வருகிறது.

    இந்த ரெயில் நிலையத்திற்கு சென்னை, நெல்லை, நாகர்கோவில் உள்ளிட்ட தமிழக பகுதிகள் மட்டுமின்றி கேரளா, பெங்களூர், மும்பை உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தினசரி ரெயில்கள் வந்து செல்கின்றன.ரெயில் பயணிகளின் பாதுகாப்புக்காக இங்கு போலீசாரும் பணியில் உள்ளனர். இவர்கள் ரெயில் நிலையத்தில் தினமும் ரோந்து மேற்கொண்டு வருகின்றனர்.

    நேற்று வழக்கம்போல ரெயில்வே நிலைய குற்றப்பிரிவு ஏட்டு ரமேஷ், மாரிமுத்து, சப்-இன்ஸ்பெக்டர் அருண்ஜித், பெண் தலைமை காவலர் மினி ஆகியோர் கோவை ரெயில் நிலையத்தில் உள்ள 3-ம் எண் நடை மேடையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது கேரள மாநிலம் கண்ணூரில் இருந்து யஸ்வந்த்பூருக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் கோவை ரெயில் நிலையத்திற்கு வந்தது. ரெயில் நிலையத்திற்கு வந்ததும் ரெயில் மெதுவாக வந்து கொண்டிருந்தது.

    அப்போது அந்த ரெயிலில் வந்த 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், ரெயில் மெதுவாக செல்வதை பார்த்ததும், ரெயில் மெதுவாக தானே செல்கிறது. இறங்கி விடுவோம் என நினைத்து இறங்குவதற்கு முற்பட்டார்.

    அப்போது எதிர்பாராத விதமாக கீழே இறங்கும் போது அந்த நபர் கால்தடுமாறி, நடைமேடைக்கும், ரெயிலுக்கும் இடையே தவறி விழுந்து விட்டார்.இதை அங்கு பணியில் இருந்த போலீஸ்காரர்களான ரமேஷ், மாரித்து, அருண்ஜித், மினி ஆகியோர் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

    உடனடியாக அவர்கள் விரைந்து சென்று சக பயணிகள் உதவியோடு ரெயிலுக்கு இடையே சிக்கிய நபரை லாவகமாக மீட்டு வெளியில் கொண்டு வந்தனர். பின்னர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் அவர் யார்? என போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த சிவகுமார் என்பதும் , இவர் வேலை விஷயமாக கேரளாவுக்கு சென்று விட்டு, கோவைக்கு ரெயிலில் வந்ததும் தெரியவந்தது.ஓடும் ரெயிலில் இருந்து இறங்க முயன்றபோது, தண்டவாளத்துக்கும், ரெயிலுக்கும் இடையில் சிக்கிய நபரை தங்களது உயிரையும் துச்சமென மதித்து மீட்ட மீட்டு ரெயில்வே போலீசாரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

    • மருத்துவரின் அலட்சியப்போக்கால் கைதியை கோர்ட்டில் ஆஜர்படுத்த முடியாமல் காவலர்கள் தவித்து வருகின்றனர்.
    • விரைவாக மருத்துவ சான்று வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசார் வலியுறுத்தி உள்ளனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் ரெயில்வே போலீஸ் நிலையத்தில் கஞ்சா வழக்கில் பதிவு செய்யப்பட்ட குற்றவாளியை நீதிமன்றத்தில் ஒப்படைப்பதற்காக திருப்பூர் அரசு மருத்துவமனையில் மருத்துவச் சான்று வாங்க போலீசார் சென்றனர்.

    ஆனால் இதுவரை மருத்துவ சான்று வழங்கப்படவில்லை. மருத்துவரின் அலட்சியப்போக்கால் கைதியை கோர்ட்டில் ஆஜர்படுத்த முடியாமல் காவலர்கள் தவித்து வருகின்றனர். ஒரு கைதியை நீதிமன்றத்தில் 24 மணி நேரத்திற்குள் ஆஜர்படுத்த வேண்டும்.ஆனால் மருத்துவமனையில் மருத்துவ சான்று வழங்குவதில் காலதாமதம் ஆவதால் ஆஜர்படுத்த முடியாமல் தவித்து வருவதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

    எனவே விரைவாக மருத்துவ சான்று வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசார் வலியுறுத்தி உள்ளனர். 

    ஓடும் ரெயிலில் பயணிகளிடம் திருடிய மர்ம நபர் குறித்து போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஈரோடு:

    ஈரோடு ரெயில் நிலையத்தில் தொடர்ந்து பயணிகளிடம் திருட்டு சம்பவங்கள் நடந்து வருகிறது.

    ரெயில் நிலைய பிளாட் பாரத்தில் படுத்திருக்கும் பயணிகளிடம் சக பயணிகள் போல் படுத்து அவர்களின் பை மற்றும் செல்போன் போன்றவற்றை திருடிக் கொண்டு சென்று விடுகின்றனர். இதேபோல் ஓடும் ரெயிலிலும் இரவில் அயர்ந்து தூங்கும் பயணிகளிடம் கொள்ளையர்கள் கைவரிசை காட்டி வருகிறார்கள்.

    கோவை வரதராஜபுரம் இந்திரா கார்டன் விவேகானந்தா நகரைச் சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 63). இவர் மனைவி, மகனுடன் தஞ்சை சென்று இருந்தார்.

    பின்னர் நேற்று இரவு தஞ்சாவூரிலிருந்து கோவை எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன் பதிவு பெட்டியில் பயணம் செய்தனர். ஈரோடு அருகே நள்ளிரவில் ரெயில் வரும் போது அயர்ந்து தூங்கினார்கள்.

    அப்போது சீனிவாசனின் பையை ஒரு மர்ம நபர் நைசாக திருடி சென்று விட்டார். அதில் ரூ 7 ஆயிரம் மதிப்புள்ள செல்போன், ரூ 28 ஆயிரம் மதிப்புள்ள ஐ பேடு, ரூ 8 ஆயிரம் மதிப்புள்ள கேமராவும் இருந்தது. இவை அனைத்தும் திருடு போய் விட்டன.

    இந்த ரெயிலின் அடுத்த பெட்டியில் கோவை காந்திபுரம் 100 அடி ரோடு ராஜா நாயுடு பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் மகள் அம்சப் ரியா (வயது 24) பயணம் செய்தார்.

    இவரும் தூங்கி சமயத்தில் அவரிடம் இருந்த ரூ 17 ஆயிரம் மதிப்புள்ள விலை உயர்ந்த ஒரு செல்போன் மற்றும் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள மற்றொரு செல்போனையும் மர்ம நபர் திருடி சென்று விட்டார்.

    இந்த இரண்டு சம்பவத்திலும் ஒரே நபர்தான் கைவரிசை காட்டி இருக்கக்கூடும் எனத் தெரியவருகிறது. ரெயில் ஈரோடு வந்ததும் இருவரும் ஈரோடு ரெயில் நிலைய போலீசில் 2 பேரும் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×