search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Differently abled person"

    • மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு 50 மீட்டர் ஓட்டப்பந்தயம், பலூன் ஊதுதல், தண்ணீர் நிரப்புதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது.
    • மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, இணைவோம்- மகிழ்வோம் என்ற தலைப்பில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.

    பல்லடம் :

    பல்லடத்தில், பள்ளிக்கல்வித்துறை சார்பில் டிசம்பர் 3ந்தேதி மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, இணைவோம்- மகிழ்வோம் என்ற தலைப்பில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் பல்லடம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் திட்ட ஒருங்கிணைப்பாளர் பாலசுந்தரி தலைமை வகித்து விளையாட்டுப் போட்டிகளை துவக்கி வைத்தார்.

    மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு 50 மீட்டர் ஓட்டப்பந்தயம், பலூன் ஊதுதல், தண்ணீர் நிரப்புதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது. இதில், தி.மு.க. நகரச் செயலாளர் ராஜேந்திரகுமார், அறம் அறக்கட்டளை தலைவர் செந்தில்குமார், பள்ளிக்கல்வி குழு நிர்வாகி மார்க்கெட் தங்கவேல், மற்றும் ஜெகதீஷ்,குட்டி பழனிசாமி, நடராஜன்,துணை தலைமை ஆசிரியர் சசிகலா, மாற்றுத்திறனாளி மாணவர்கள், மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • முகாம்கள் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடக்கிறது.
    • மாற்றுத்திறனாளிகள் பல்வேறு திட்டங்களில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள், நலத்திட்ட உதவிகள் மற்றும் உதவி உபகரணங்கள் பெறுவதற்காக ஒருங்கிணைந்த மருத்துவ முகாம் வருகிற 26-ந் தேதி முதல் தொடங்குகிறது. அன்று வெள்ளகோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், 27-ந் தேதி தாராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் நடக்கிறது. அடுத்த மாதம் 2-ந் தேதி குண்டடம் அரசு உயர்நிலைப்பள்ளியிலும், 3-ந் தேதி குடிமங்கலத்தில் உள்ள பெதப்பம்பட்டி என்.வி. பாலிடெக்னிக் கல்லூரியிலும், 9-ந் தேதி மடத்துக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், 17-ந் தேதி அவினாசி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், 24-ந் தேதி காங்கயம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும் முகாம்கள் நடைபெற உள்ளது.

    இந்த முகாம்கள் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடக்கிறது. முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெறாதவர்களுக்கு அட்டை வழங்குதல், மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தில் பதிவு செய்தல், தனித்துவம் வாய்ந்த ஸ்மார்ட் கார்டு அடையாள அட்டை பதிவு செய்தல், பராமரிப்பு உதவித்தொகை, வங்கிக்கடன் மானியம், இலவச வீட்டுமனைப்பட்டா, வேலைவாய்ப்பு பதிவு, புதுப்பித்தல், வேலைவாய்ப்பற்றோர் நிதி உதவித்தொகை, மாவட்ட தொழில் மையம் மூலம் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், வீடு கட்டுவதற்கு கடனுதவி, முதல்-அமைச்சரின் காப்பீட்டு திட்டத்தின் மூலம் மருத்துவ காப்பீட்டுக்கான உறுப்பினர் சேர்க்கை போன்ற திட்டங்களில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்.

    மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, தனித்துவம் வாய்ந்த ஸ்மார்ட் கார்டு, ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களின் அசல் மற்றும் நகலுடன் 5 புகைப்படங்களை முகாமில் கொடுக்க வேண்டும். இதை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

    • 3 சக்கர சைக்கிளுக்காக 5 வருடமாக மாற்றுத்திறனாளி தவித்து வருகிறார்.
    • ஏழ்மை நிலையை கருத்தில் கொண்டு உடனடியாக 3 சக்கர மோட்டார் சைக்கிள் வழங்க மனு அளித்துள்ளார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகே உள்ள தாடிக்கொம்பு டி.பள்ளப்பட்டியைச் சேர்ந்தவர் கருப்பன் (வயது 35). 2 கால்களும் முற்றிலும் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளியான இவர் இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தார்.

    அவர் தெரிவிக்கையில், எனது தந்தை மாரியப்பன் இறந்து விட்டார். 3 சகோதரர்களும் திருமணம் ஆகி தனியாக சென்று விட்டனர். நான் எனது வயிற்று பிழைப்புக்காக சைக்கிள் கடையில் பஞ்சர் ஒட்டி வருகிறேன்.

    என்னால் தாடிக்கொம்புவில் இருந்து பள்ளப்பட்டிக்கு 3 கி.மீ தூரம் வருவது கடினமாக உள்ளது. எனவே மோட்டார் பொருத்திய 3 சக்கர வாகனம் வழங்க கேட்டு கடந்த 5 வருடமாக மனு அளித்துள்ளேன். ஆனால் இது வரை வழங்கப்படவில்லை.

    எனவே எனது ஏழ்மை நிலையை கருத்தில் கொண்டு உடனடியாக 3 சக்கர மோட்டார் சைக்கிள் வழங்க மனு அளிக்க வந்துள்ளேன் என்றார்.

    ×