search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sports competition"

    • இறுதிப்போட்டிக்கு சென்னை மற்றும் தூத்துக்குடி அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
    • பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் குழு பாராட்டி சான்றிதழ் மற்றும் பரிசு கோப்பையை வழங்கியது.

    தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை சார்பில், மாவட்டந்தோறும் குடியரசு தினத்தையொட்டி 14 வயதுக்குட்பட்டோருக்கான குழு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    இந்த ஆண்டு குடியரசு தினத்தையொட்டி, கடந்த மாதம் குழு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.

    இதில் மண்டல மற்றும் மாவட்ட அளவில் வெற்றிபெற்ற மாணவர்கள் புதுக்கோட்டையில் நடந்த மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டனர். இதில் பேட்மிண்டன், டென்னிஸ், கோகோ, கபடி, எறிபந்து, கூடைப்பந்து உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.

    3 நாட்கள் நடைபெற்ற இந்த விளையாட்டு போட்டிகளில் 38 மாவட்ட அணிகள் பங்கேற்று அசத்தின. இறுதிப்போட்டிக்கு சென்னை மற்றும் தூத்துக்குடி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் தூத்துக்குடி முதலிடத்தை பிடித்தது. சென்னை 2-ம் இடம் பிடித்தது.

    சென்னை அணியில் இடம்பிடித்த புழுதிவாக்கத்தை சேர்ந்த வியாசா வித்யாலயா மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஆ.ஜோன்ஸ்ராஜ் எறிபந்து (த்ரோபால்) விளையாட்டில் அசத்தினார். இதுதவிர அந்த பள்ளி மாணவர்கள் 12 பேர் சென்னை அணியில் இடம்பிடித்தனர்.

    மாணவர் ஜோன்ஸ் ராஜ், கராத்தே மற்றும் ஜூடோ போன்ற வீர கலைகளில் பயிற்சி பெற்று சர்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று பதக்கங்கள் குவித்தவர் ஆவார். வெற்றிபெற்ற தூத்துக்குடி மற்றும் சென்னை அணிகளில் இடம்பெற்ற மாணவ-மாணவிகளுக்கு, பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் குழு பாராட்டி சான்றிதழ் மற்றும் பரிசு கோப்பையை வழங்கியது.

    • உடற்பயிற்சியும் தனது உடல் ஆரோக்கியத்தின் ரகசியம் என நாராயணமூர்த்தி தெரிவித்தார்.
    • தடகள போட்டி எங்கு நடந்தாலும் அதில் கலந்து கொண்டு தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், திருப்பதி அடுத்த எஸ்.வி தாரகராம மைதானத்தில் மாநில அளவிலான 42-வது தடகள சாம்பியன்ஷிப் போட்டி நேற்று நடந்தது.

    குண்டூர் மாவட்டம், தெனாலியை சேர்ந்த நாராயணமூர்த்தி (வயது 95). இவர் உடற்கல்வி ஆசிரியராக வேலை செய்து ஓய்வு பெற்றவர்.

    கடந்த 30 ஆண்டுகளாக மாநிலத்தில் நடைபெறும் பொதுநிலை தடகள போட்டி எங்கு நடந்தாலும் அதில் கலந்து கொண்டு தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

    நேற்று நடந்த தடகள போட்டியில் நாராயணமூர்த்தி கலந்து கொண்டு வட்டு எறிதல் ஈட்டி எறிதல் குண்டு எறிதல் உள்ளிட்டவைகளில் கலந்துகொண்டு அசத்தி காட்டினார்.

    வருகின்ற 2024-ம் ஆண்டு புனேவில் நடைபெற உள்ள தேசிய மாஸ்டர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க உள்ளதாக தெரிவித்தார். சைவ உணவும், உடற்பயிற்சியும் தனது உடல் ஆரோக்கியத்தின் ரகசியம் என நாராயணமூர்த்தி தெரிவித்தார்.

    இவருக்கு 60 வயதிற்கு மேற்பட்ட 3 மகன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் நாட்டிலுள்ள இளைஞர்களிடையே விளையாட்டு மற்றும் உடற்தகுதியை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு மத்திய அரசின் சார்பில் நடத்தப்ப டுகின்ற ஒருங்கிணைந்த விளையாட்டு நிகழ்வாகும்.
    • இந்த விளையாட்டு போட்டிகள் 17, 18, 21 வயதுக்குட்பட்ட பிரிவுகள் ஆகும்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் நாட்டிலுள்ள இளைஞர்களிடையே விளையாட்டு மற்றும் உடற்தகுதியை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு மத்திய அரசின் சார்பில் நடத்தப்ப டுகின்ற ஒருங்கிணைந்த விளையாட்டு நிகழ்வாகும். இந்த விளையாட்டு போட்டிகள் 17, 18, 21 வயதுக்குட்பட்ட பிரிவுகள் ஆகும்.

    தமிழ்நாடு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்த நடவடிக்கையின் அடிப்படையில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் -2023 தமிழ்நாட்டில் நடத்துவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

    இதனைத்தொடர்ந்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளை தமிழ்நாட்டில் சிறப்பாக நடத்திட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார்.

    கபடி

    இப்போட்டிகள் தமிழ்நாட்டில் உள்ள சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சி ஆகிய நான்கு நகரங்களில் 19.01.2024 முதல் 31.01.2024 வரை நடைபெற உள்ளது. இந்த போட்டிகளில் சுமார் 5,000 விளையாட்டு வீரர்-வீராங்கனைகள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் நடத்தப்பட உள்ள விளையாட்டுகள் தடகளம், கால்பந்து, குத்துச்சண்டை, வாள்வீச்சு, வாலிபால் , பளுதூக்குதல், ஸ்குவாஷ், வில்வித்தை, சைக்கிள் ஓட்டுதல், நீச்சல், மல்லக்கம்பு, டேபிள் டென்னிஸ், பேட்மிண்டன், மல்யுத்தம், துப்பாக்கிசுடுதல், ஹாக்கி, களரிபயட்டு, கபடி, ஜூடோ, கோ-கோ, ஜிம்னாஸ்டிக்ஸ், கூடைப்பந்து, கட்கா, யோகாசனம், டென்னிஸ், தாங்தா, சிலம்பம் உள்ளிட்டவைகள் ஆகும்.

    தேர்ந்தெடுக்கப்படும் விளையாட்டு வீரர்- வீராங்கனைகளுக்கு திறமை மற்றும் திறன்களை மேம்படுத்த தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் அந்தந்த விளையாட்டுப் பிரிவுகளில் தகுந்த பயிற்சி அளிக்கப்படும்.

    பங்கேற்பதற்கு தகுதி பெற விளையாட்டு வீரர்கள் வயது சரிபார்ப்பு (01.01.2005 அன்று அல்லது அதற்குப் பிறகு பிறந்தவர்) செயல்முறைக்கு பின்வரும் ஆவணங்களில் ஏதேனும் இரண்டினைச் சமர்ப்பிக்கவேண்டும்.

    கல்விச்சான்றிதழ்

    ஆதார் அட்டை அல்லது பாஸ்போர்ட், பள்ளிக் கல்விச் சான்றிதழ் ( 12-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு, பிறப்புச் சான்றிதழ் (குறைந்தது 5 ஆண்டுகளுக்கு முன்பு மாநகராட்சி அல்லது கிராம பஞ்சாயத்து மூலம் ஜனவரி 1, 2013 அன்று அல்லது அதற்கு முன் வழங்கப் பட்டது) ஆகியவை ஆகும்.

    தமிழ்நாடு அணிகளில் இடப்பெறுவதற்கான தேர்வு குறித்து நாமக்கல் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தை நேரில் அணுகவும். பயணப்படி மற்றும் தினப்படி வழங்கப்பட மாட்டாது. எனவே இதில் நாமக்கல் மாவட்டத்திலுள்ள விளையாட்டு வீரர்கள் -வீராங்கனைகள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    • பரிசுகள், பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது
    • ஏராளமான வீரர்கள் பங்கேற்றனர்

    ஆலங்காயம்:

    வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு பகுதியில் திருப்பத்தூர் மாவட்ட டெனிகாய்ட், ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன் மற்றும் தமிழ்நாடு டெனிகாய்ட் சங்கம் இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான டெனிகாய்ட் விளையாட்டு போட்டி நடந்தது.

    இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான வீரர்கள் பங்கேற்றனர். வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

    • போட்டிகளில் 45-க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
    • குண்டு எறிதல் போட்டியில் மாணவி மிஜூ கிரேனா முதலிடத்தை பிடித்தார்.

    திசையன்விளை:

    தோவாளை எல்.எச்.எல். சி.பி.எஸ்.இ. பள்ளியில் தக்ஷன் சகோதயா குழுவினரால் நெல்லை, தூத்துக்குடி, குமரி ஆகிய 3 மாவட்டங்களுக்கு இடையே விளை யாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.

    இப்போட்டிகளில் 45-க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். 19, 17 வயது பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது.

    இதில் நெல்லை மாவட்டம் திசையன்விளை வி.எஸ்.ஆர். இண்டர் நேஷனல் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். அவர்களில் வட்டு எறிதல் போட்டியில் 12-ம் வகுப்பு மாணவி சொர்ணா, 11-ம் வகுப்பு மாணவி தியானா ஆகியோர் முதலிடத்தையும், 12-ம் வகுப்பு மாணவி ஷேரன், 9-ம் வகுப்பு மாணவர் ஜாய்வின் ஆகியோர் 2-ம் இடத்தையும் வென்றனர்.

    உயரம் தாண்டுதல் போட்டியில் 11-ம் வகுப்பு மாணவர் பிரவின், 8-ம் வகுப்பு மாணவர் பிரிஜித் ஆகியோர் முதலிடத்தையும், 12-ம் வகுப்பு மாணவர் அந்தோணி ஆகாஷ் 2-ம் இடத்தையும் வென்றனர்.

    குண்டு எறிதல் போட்டியில் 8-ம் வகுப்பு மாணவி மிஜூ கிரேனா முதலிடத்தையும், 11-ம் வகுப்பு மாணவி தியானா, 8-ம் வகுப்பு மாணவி ஆஷிகா பாரிஸ் ஆகியோர் 2-ம் இடத்தையும் வென்றனர்.

    நீளம் தாண்டுதல் போட்டியில் 12-ம் வகுப்பு மாணவி அக்ஷயா, 12-ம் வகுப்பு மாணவர் மைக்கேல் கிராஷிங்டன் ஆகியோர் 2-ம் இடத்தையும், 11-ம் வகுப்பு மாணவர் ஹரிபிரசாத் 3-ம் இடத்தையும் வென்றனர்.

    200 மீட்டர் மற்றும் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 11-ம் வகுப்பு மாணவர் ஜெஸ்வின் 2-ம் இடத்தையும், 3000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 11-ம் வகுப்பு மாணவர் பிரவின் 3-ம் இடத்தையும் பெற்றனர்.

    வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் மற்றும் முதல்வர், ஆசிரியர்கள் பாராட்டினர்.

    • அறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில் தூத்துக்குடியில் நேற்று முன்தினம் விளையாட்டு போட்டி நடந்தது.
    • சைக்கிள் போட்டியில் 17 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் சில்லாங்குளம் முத்துக்கருப்பன் மேல்நிலை பள்ளி பிளஸ்-2 மாணவர் சஞ்சய்காந்த் முதலிடம் பிடித்தார்.

    ஓட்டப்பிடாரம்:

    அறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில் தூத்துக்குடியில் நேற்று முன்தினம் விளையாட்டு போட்டி நடந்தது. இதில், நடந்த சைக்கிள் போட்டியில் 17 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள சில்லாங்குளம் முத்துக்கருப்பன் மேல்நிலை பள்ளி பிளஸ்-2 மாணவர் சஞ்சய்காந்த் முதலிடமும், 9-ம் வகுப்பு மாணவர் சந்தோஷ் 3-ம் இடமும் பிடித்தனர். 13 வயதிற்கு உட்பட்டோர் பெண்கள் பிரிவில் 8-ம் வகுப்பு மாணவி ரித்திஷா3-ம் இடமும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தார்.

    மாவட்ட அளவிலான குடியரசு தின விழா தடகள போட்டியில் 19 வயதுக்குட்பட்ட பிரிவில் பிளஸ்-2 மாணவர் அபிஷேக் வர்மா 110 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் முதலிடமும், 200 மீட்டர் ஓட்டத்தில் இரண்டாம் இடம் பிடித்து மாநில அளவில் நடைபெறும் தடகள போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இந்தியா பள்ளிகள் விளையாட்டு குமுமம் சார்பில் காரைக்குடியில் நடைபெற்ற சாலை சைக்கிள் போட்டியில் 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் மாணவர் அருள் 2-ம் இடமும், 17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் மாணவர் சஞ்சயத்காந்த் முதலிடமும் பிடித்து தேசிய அளவில் நடைபெறும் சைக்கிள் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

    போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சில்லாங்குளம் முத்துகருப்பன் மேல்நிலைப்பள்ளியில் நடந்த பாராட்டு விழாவில் முத்துக்கருப்பன் கல்வி அறக்கட்டளை நிர்வாக இயக்குனரும், பள்ளி தலைமை ஆசிரியருமான பாலமுருகன் கருப்பசாமி பாராட்டு சான்றிதழ்களையும், பரிசுகளையும் வழங்கினார். விழாவில் நிர்வாக கண்காணிப்பாளரும் சில்லாங்குளம் பஞ்சாயத்து தலைவருமான சரோஜாகருப்பசாமி, பள்ளி உதவி தலைமை ஆசிரியர் நிர்மலா பாலமுருகன் மற்றும் ஆசிரியர்கள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • குறுவட்ட அளவிளான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
    • புனித வளனார் பெண்கள் பள்ளி மாணவிகள் குழு விளையாட்டுகளில் 69 புள்ளிகள் பெற்றனர்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் பானாதுறை மைதானத்தில் பள்ளி கல்வி துறை சார்பில் குறுவட்ட அளவிளான விளையாட்டு போட்டிகளை நடத்தியது.

    இதில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 450-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    இதில் புனித வளனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் குழு விளையாட்டுகளில் 69 புள்ளிகள் பெற்று ஒட்டு மொத்த சாம்பியன் பட்டமும், தடகள விளையாட்டுகளில் அனைத்து மாணவிகள் பிரிவில் 58 புள்ளிகள் பெற்று 2-ம் இடமும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.

    12 குழு விளையாட்டு களில் 7 குழு விளையாட்டு களில் பங்கு பெற்று, 12 பிரிவுகளில் முதல் இடமும், 3 பிரிவுகளிலும்2-ம் இட மும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

    போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகள், உட ற்கல்வி இயக்குநர் ஜான்சி, உடற்கல்வி ஆசிரியைகள் ஜாஸ்மின் டயானா, ஜோஸ்பின் ரோசி, மோகன ப்பிரியா ஆகியோருக்கு தலைமையாசிரியை அருட். சகோதரி. வில்லியம் பிரௌன் பாராட்டினர்.

    • மொத்தம் 16 பள்ளிகளை சேர்ந்த 1680 மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.
    • வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பரிசு வழங்கினார்.

    உடுமலை:

    உடுமலை ,மடத்துக்குளம், குடிமங்கலம் ,ஒன்றியத்தில் உள்ள அரசு உயர்நிலை ,மேல்நிலைப்பள்ளி மெட்ரிக் பள்ளிகளுக்கு இடையேயான மாவட்ட அளவிலான குறுமைய விளையாட்டுப்போட்டிகள் உடுமலை அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் துவங்கியது.

    போட்டிகளை ஆதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் துவக்கி வைத்தார். மொத்தம் 16 பள்ளிகளை சேர்ந்த 1680 மாணவ மாணவிகள் பங்கேற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பரிசு வழங்கினார்.

    விழாவில் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன், நகர திமுக .,செயலாளர் வேலுச்சாமி, பொருளாளர் முபாரக் அலி, நகராட்சி துணை தலைவர் கலைராஜன் .ஒன்றிய திமுக .,செயலாளர் செழியன் ,செந்தில்குமார், மெஞ்ஞானமூர்த்தி, உடுமலை ஊராட்சி ஒன்றிய தலைவர் மகாலட்சுமி முருகன், ஊராட்சி தலைவர்கள் போடி பட்டி சௌந்தர்ராஜ், கணக்கம்பாளையம் காமாட்சி அய்யாவு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நரிக்குடி அருகே வட்டார விளையாட்டு போட்டிகள் நடந்தது.
    • போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பதக்கமும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா நரிக்குடி அருகேயுள்ள இலுப்பையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 2023-24-ம் கல்வியாண்டிற்கான 14 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கான வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடந்தது.

    இந்த போட்டிகளில் நரிக்குடி ஓடம் கஸ்தூரி பா காந்தி பாலிகா வித்யாலயா உண்டு உறைவிடப்பள்ளி மாணவிகள் இறகு பந்து, எறிபந்து, கோகோ, நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், தட்டு எறிதல், 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டிகள் உள்பட பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டனர்.

    பள்ளியின் 8-ம் வகுப்பு மாணவிகளான ரோகிணி குண்டு எறிதல், தட்டு எறிதல் போட்டிகளில் முதலிடமும், லாவண்யா நீளம் தாண்டுதல் போட்டியில் முதலிடமும், இலக்கியா தட்டு எறிதல் போட்டியில் 2-ம் இடமும் பெற்றனர். 200 மீட்டர் ஓட்டப்போட்டியில் ஜனனி 2-ம் இடமும், 80 மீட்டர் தொலைவிலான தடை ஓட்டப்போட்டியில் அருணா 3-ம் இடமும், காவியா ஸ்ரீ, ஜனனி, பிரமிளா மற்றும் அருணா ஆகியோர் 100 மீட்டர் தொலைவிலான ஓட்டப்பந்தய போட்டிகளில் கலந்துகொண்டு 3-ம் இடமும் பெற்றனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பதக்கமும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

    • கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தி.மு.க. இளைஞரணி சார்பில் விளையாட்டு போட்டி நடந்தது.
    • ராஜகண்ணப்பன் கலந்து கொண்டு தலைமை தாங்கி விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்தார்.

    பனைக்குளம்

    ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சீதக்காதி விளையாட்டு மைதானத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தடகளப்போட்டியை அமைச்சர் ராஜகண்ணப்பன் கலந்து கொண்டு தலைமை தாங்கி விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்தார்.

    இந்த விளையாட்டு போட்டிக்கு பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன், மாநில இளைஞரணி துணை செயலாளர் இன்பா ரகு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த விளையாட்டு போட்டியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு வெற்றி பெற்ற னர்.

    இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மண்டபம் சம்பத் ராஜா தலைமையில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் கோபிநாத், ரமேஷ் கண்ணா, சம்பத் குமார், தௌபீக் அலி, மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் சுரேஷ், மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் உதயசூரியா மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா உப்பளம்பெத்தி செமினார் தொடக்கப் பள்ளி வளாகத்தில் நடந்தது.
    • பள்ளி துணை முதல் வர் ஜான்பால் நன்றி கூறினார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி பெத்தி செமினார் மேல்நிலைப் பள்ளி யில் 2023-24 கல்வி ஆண் டிற்கான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட் டன. இதில் மாணவர்கள் ஆர்வமாக பங்கேற்றனர்.

    போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா உப்பளம்பெத்தி செமினார் தொடக்கப் பள்ளி வளாகத்தில் நடந்தது.

    பள்ளி முதல்வர் தேவ தாஸ்தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டு வம்சீதரா ரெட்டி, விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினார். மேலும் விழாவில், ஆசிரியர்க ளுக்கு பல்வேறு போட்டி கள் நடத்தி பரிசு வழங்கப் பட்டது.

    பள்ளி துணை முதல் வர் ஜான்பால் நன்றி கூறினார்.

    • ஒ.ஜோதி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    செய்யாறு

    திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு ஒன்றியம் விண்ணமங்கலம் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் செய்யாறு மற்றும் அனக்காவூர் பள்ளிகளுக்கு இடையேயான குறுவட்ட அளவிலான தடகள விளையாட்டுப் போட்டிகள் நடந்தது.

    ஒ.ஜோதி எம்.எல்.ஏ. ஒலிம்பிக் சுடரை ஏற்றி விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் மோகன்ராஜ், திமுக பிரமுகர்கள் ராஜ்குமார், தமிழ்ச்செல்வன், பார்த்திபன், ஆறுமுகம், கதிரவன், ரூபி வெங்கடேசன், உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×