என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாற்றுத்திறனாளி"

    • தென்காசி பேருந்து விபத்தில் புளியங்குடியைச் சேர்ந்த மல்லிகா உயிரிழந்தார்.
    • உயிரிழந்த மல்லிகா பார்வையற்ற தனது மகள் கீர்த்திகாவை பி.எட் வரை படிக்க வைத்துள்ளார்.

    தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் 2 தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

    காயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு அருகே உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இதனிடையே, இந்த பேருந்து விபத்தில் தாயை பறிகொடுத்த பார்வை மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு அரசு வேலை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தார்.

    இதனையடுத்து பார்வை மாற்றுத்திறனாளி பட்டதாரிக்கு அரசு வேலைக்கான ஆணையை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

    உயிரிழந்தவர்களில் ஒருவரான புளியங்குடியைச் சேர்ந்த மல்லிகா, கணவரை இழந்த நிலையிலும் பீடி சுற்றி, பார்வையற்ற தனது மகள் கீர்த்திகாவை பி.எட் வரை படிக்க வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு வரும் 10ம் தேதி முதல் தொடங்கப்படுகிறது.
    • சென்னை ஆட்சியர் தரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.

    டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம், குரூப் 1, குரூப் 2, குரூப் 2ஏ, குரூப் 4 என பல்வேறு நிலைகளில் உள்ள பணியிடங்களை நிரப்புகிறது.

    இதற்காக ஆண்டுதோறும் பல்வேறு நிலை தேர்வுகளும் நடைபெற்று வருகிறது.

    தமிழக அரசு துறைகளில் காலியாக இருக்கும் பணிகளில் அமர லட்சக்கணக்கான தேர்வர்கள் விண்ணப்பித்து தேர்வு எழுதி வருகின்றனர.

    இந்நிலையில், சென்னை மாவட்ட மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி, டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு வரும் 10ம் தேதி முதல் தொடங்கப்படுவதாக சென்னை ஆட்சியர் தரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.

    டிஎன்பிஎஸ்சி குரூப் 1, 2, 2ஏ, 4 தேர்வு இலவச பயிற்சி வகுப்பு 10ம் தேதி முதல் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 8 குழந்தைகள் உள்பட 39 பேர் உயிரிழந்தனர்
    • இச்சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள், நடிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    கரூரில் வேலுசாமிபுரம் பகுதியில் தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 8 குழந்தைகள் உள்பட 39 பேர் உயிரிழந்தனர்.

    தமிழ்நாட்டையே உலுக்கி உள்ள இச்சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள், நடிகர்கள் என பலரும் இரங்கலும் தங்களது கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.

    கரூர் கூட்ட நெரிசலில் தனது 1½ வயது மகனைப் பறிகொடுத்த காது கேளாத, வாய் பேச முடியாத தாயார் இடிந்துபோய் நிற்கும் காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    கரூர் வேலுச்சாமிபுரம் வடிவேல் தெரு பகுதியில் விமல் மற்றும் மாதேஸ்வரி தம்பதியின் 1½ வயது குழந்தை துருவ் விஷ்ணு கூட்ட நெரிசலில் மிதிப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தது. இந்த குழந்தையை அவரது அத்தை விஜய் பிரசாத்திற்கு அழைத்து சென்றார். அடுத்த மாதம் பிறந்தநாள் கொண்டாட இருந்த நிலையில், குழந்தை உயிரிழந்தது.

    சிறுவனின் அத்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    • ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
    • 16,73,333 குடும்ப அட்டைகளுக்கு நேரடியாக பொருட்களை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அடைதாரர்களின் வீடுகளுக்கே நேரில் ரேசன் பொருட்களை தரும் 'முதலமைச்சரின் தாயுமானவர்' திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 12ம் தேதி சென்னையில் தொடங்கி வைக்கிறார்.

    இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், "மக்கள் நலன்சார்ந்த இத்திட்டம் சிறப்புக் கவனம் தேவைப்படும் பிரிவினரின் வாழ்வை மேம்படுத்துவதுடன் உணவுப் பாதுகாப்பையும் உறுதி செய்யும். இத்திட்டத்தின் வாயிலாக 34,809 நியாயவிலைக் கடைகளைச் சேர்ந்த 70 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களைக் கொண்ட 15,81,364 குடும்ப அட்டைகளில் உள்ள 20,42,657 பயனாளர்களும், 91,969 குடும்ப அட்டைகளில் உள்ள 1,27.797 மாற்றுத்தினாளிகளும், ஆக மொத்தம் 16,73,333 குடும்ப அட்டைகளில் உள்ள 21,70,454 பயனாளர்களுக்கு அவர்தம் இல்லங்களிலேயே குடிமைப் பொருட்களை விநியோகம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது

    ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற தகுதியுள்ள குடும்ப அட்டைகள் மற்றும் பயனாளர்களின் விவரம் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையிடமிருந்து பெறப்பட்டு. கள அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    மின்னணு எடைத்தராசு, e-PoS இயந்திரம் உள்ளிட்ட உபகரணங்களுடன் மூடிய வாகனங்களில் குடிமைப் பொருட்களைப் பாதுகாப்பாகத் தகுதியுள்ள பயனாளர்களின் இல்லத்திற்கே சென்று நியாயவிலைக் கடை விற்பனையாளர்கள் விநியோகிப்பர்.

    70 வயதுக்கு மேல் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீட்டிற்கே சென்று குடிமைப் பொருட்கள் வழங்குவதால் அரசுக்கு ரூ.30.16 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ள மக்கள் நலன் சார்ந்த இத்திட்டம். நலிவுற்ற பிரிவினரின் வாழ்வாதாரத்தை சிறப்புறச் செய்வதுடன் அவர்தம் உணவுப் பாதுகாப்பையும் உறுதிசெய்யும்.

    மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 12.8.2025 அன்று இத்திட்டத்தை சென்னையில் தொடங்கிவைக்கும் வேளையில், மாவட்டங்களில் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள். உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் கலந்துகொள்வார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அவர்களுக்கு நெமலின் மயோபதி என்ற ஒரு குறைபாடு உள்ளது.
    • இது எலும்பு தசைகளைப் பாதிக்கும் மிகவும் அரிதான மரபணு கோளாறு.

    உச்சநீதிமன்றத்தின் தலைமைநீதிபதியாக இருந்த டி.ஒய். சந்திரசூட் தனது அதிகாரபூர்வ இல்லத்தை காலி செய்யாதது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் இதுகுறித்து அவர் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.

    அதாவது, "நாங்கள் எங்கள் சாமான்களை பேக் செய்துவிட்டோம். அதில் சில ஏற்கனவே புதிய வீட்டிற்கு மாற்றப்பட்டுள்ளன. சில இங்கே ஸ்டோர் ரூமில் வைக்கப்பட்டுள்ளன" என்று சந்திரசூட் கூறினார்.

    குடியிருப்பில் நீண்ட காலம் தங்கியதற்கான காரணங்களையும் அவர் விளக்கினார். சக்கர நாற்காலிக்கு ஏற்ற வீடு தேவைப்படும் தனது மகள்களின் உடல்நிலையையும் அவர் குறிப்பிட்டார்.

    அதாவது, "நான் குறிப்பிட விரும்பும் ஒரு விஷயம் என்னவென்றால், நாங்கள் இரண்டு குழந்தைகளின் பெற்றோர். பிரியங்கா மற்றும் மஹி. அவர்கள் மாற்றுத்திறனாளி குழந்தைகள். அவர்களுக்கு சிறப்புத் தேவைகள் உள்ளன. அவர்களுக்கு நெமலின் மயோபதி என்ற ஒரு குறைபாடு உள்ளது. இது எலும்பு தசைகளைப் பாதிக்கும் மிகவும் அரிதான மரபணு கோளாறு.

    எனவே வீட்டில் கூட, நாங்கள் அதிக சுகாதாரத்தைப் பராமரிக்கிறோம். அவர்களைக் கவனித்துக் கொள்ள எங்களிடம் மிகவும் திறமையான செவிலியர் உள்ளனர். வீட்டு வேலைகளைத் தொடரத் தயாராக இருப்பதாக அவர்கள் என்னிடம் சொன்னவுடன், நாங்கள் இடம் பெயர்வோம். இந்தக் காரணங்களுக்காக, இன்னும் இரண்டு நாட்கள் ஆகும். அதிகபட்சம் இரண்டு வாரங்கள் இருக்கலாம்" என்று தெரிவித்தார்.

    ஜனவரி 2021 மற்றும் 2022 இல், தனது மூத்த மகள் பிரியங்கா சண்டிகரில் உள்ள பிஜிஐ மருத்துவமனையில் 44 நாட்கள் ஐசியுவில் சிகிச்சை பெற்றதையும்  சந்திரசூட் நினைவு கூர்ந்தார். பிரியங்கா மற்றும் மஹி சந்திரசூட் உடைய வளர்ப்பு மகள்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • மாற்றுத்திறனாளி போல ரெயிலில் இருந்து கீழே இறங்கி வரும் நபர் பின்பு சாதாரணமாக நடந்து செல்கிறார்.
    • இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது

    இலவச ரெயில் பயணத்துக்காக, மாற்றுத்திறனாளி போல நடித்த ஒரு நபரின் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

    இணையத்தில் வைரலாக பரவி வரும் அந்த வீடியோவில், ரெயில் நிலையத்தில் மாற்றுத்திறனாளி போல ரெயிலில் இருந்து கீழே இறங்கி வரும் நபர் ஒருவர் பின்பு சாதாரணமாக நடந்து செல்கிறார்.

    ரெயில்வே ஊழியர்களை முட்டாளாகிய இந்த நபருக்கு ஆஸ்கர் விருதே தரலாம் என்று நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர். 

    • மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற சிறப்பு முகாம் வருகிற 1,2 ஆகிய தேதிகளில் நடக்கிறது.
    • இந்த தகவலை மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மாற்றுத்திறனா ளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெறுவதில் உள்ள சிரமங்களை மாற்றுத்திற னாளிகள் தவிர்க்கும் வகையில் கூடுதலாக வட்டார அளவில் அரசு மருத்துவ மனைகளில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறுகிறது.

    ஒவ்வொரு மாதமும் வரும் முதல் செவ்வாய்க்கிழமைகளில் காலை 10 மணி முதல் அரசு மருத்துவமனை திருமங்க லத்திலும், ஒவ்வொரு மாதமும் வரும் முதல் புதன்கிழமைகளில் காலை 10 மணி முதல் அரசு மருத்துவமனை மேலூரிலும் இணை இயக்குநர், நலப் பணிகள் இணை இயக்குநர் அலுவலகம், மதுரை (இ) உசிலம்பட்டி கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவக் குழு மூலம் நடைபெற்று வருகிறது.

    நவம்பர் மாதத்தில் 1-ந் தேதி (செவ்வாய்) அன்று அரசு மருத்துவமனை திருமங்கலத்திலும், 2-ந் தேதி (புதன்) அன்று அரசு மருத்துவமனை மேலூரிலும் நடைபெறவுள்ள சிறப்பு முகாம்களில் இதுவரை மாற்றுத்திறனாளி களுக்கான தேசிய அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகள், மாற்றுத்திறனாளி களுக்கான தேசிய அடையாள அட்டையை புதுப்பிக்க வேண்டிய மாற்றுத்திறனாளிகள், மாவட்ட மாறுதலில் மதுரை மாவட்டத்திற்கு குடிபெயர்ந்து வரும் மாற்றுத்திறனாளிகள், மாற்றுத்திறனாளி களுக்கான தனித்துவ அட்டை பெறாத மாற்றுத்தி றனாளிகள், தங்களது குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-5 ஆகிய வற்றுடன் மேற்குறிப்பிட்ட தினங்களில் திருமங்கலம் மற்றும் மேலூர் அரசு மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று மாற்றுத்தி றனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்று பயனடையலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழக சட்டப்பே ரவையில் கோயில்களில் நடைபெறும் மாற்றுத்தி றனாளிகள் திருமணத்திற்கு கட்டணம் இல்லாமல் திருமணம் செய்து வைக்கப்படும்.
    • அரசு அறிவிப்பின்படி எவ்வித திருமண மண்டப கட்டணம் இன்றி திருமணம் நடைபெற்றது.

    சுவாமிமலை:

    சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பின்படி திருக்கோ யிலுக்கு செலுத்தவேண்டிய எவ்விதக் கட்டணமும் இல்லாமல் மாற்றுத்தி றனாளி திருமணம் நேற்று நடைபெற்றது.

    தமிழக சட்டப்பே ரவையில் கோயில்களில் நடைபெறும் மாற்றுத்திறனாளிகள் திருமணத்திற்கு கட்டணம் இல்லாமல் திருமணம் செய்து வைக்கப்படும் என்று இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்தார்.

    அதன்படி நேற்று கும்பகோணம் தாலுக்கா, அண்ணலக்கிரஹாரம் பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மணப்பெண் தேவி என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்த பிரபு என்பவருக்கும் சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயில் வளாகத்தில் திருமணம் நடைபெற்றது.

    அரசு அறிவிப்பின்படி எவ்வித திருமண மண்டப கட்டணம் இன்றி திருமணம் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து கோயில் துணை ஆணையர் உமாதேவி மணமக்களுக்கு பட்டுப் புத்தாடைகள், கோயில் பிரசாதங்கள் வழங்கினார்.

    நிகழ்வில் கோயில் கண்காணிப்பாளர்கள் மற்றும் கோயில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • ஒவ்வொரு மாதமும் கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள் என அனைத்து அரசு துறைகளுக்கும் உத்தரவு பிறப்பித்தார்.
    • வீல் சேர்வாட்டர் பெட், 2 ஊன்றுகோல், மாற்று திறனாளி உதவிதொகைமற்றும் மருத்துவ உபகரணங்களை வழங்கினார்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதார ண்யம் அடுத்த புஷ்பவனம் கிராமத்தில் வசித்து வருபவர் மூதாட்டி நாகவள்ளி (வயது 68).

    இவரது கணவர் 8 வருடங்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்து விட்டார்.

    இந்த சூழலில் உடல் முழுவதும் ஊனமுற்ற மூளை வளர்ச்சி இல்லாத மாற்று திறனாளி மகன் 30 வயது நிரம்பிய பாலசுப்பி ரமணியனுடன் தனியாக ஒரு குடிசை வீட்டில் வருமானம் இன்றி தவித்து வருகிறார்.

    இவர்கள் படும் கஷ்டம் குறித்த வீடியோ நாகை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ்க்கு கிடைத்தது .

    உடனடியாக தனது செல்போனில் வேதாரண்யம் வட்டார வளர்ச்சிஅலுவலர் தொடர்பு கொண்டு கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் இலவச வீடு கட்டி கொடுக்க வேண்டிய ஆவணங்களை சரிபார்த்து உடன் வீடு கிடைக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

    மேலும் துணை இயக்கு னர் சுகாதார பணிகள் தொடர்பு கொண்டு அந்த குடும்பத்திற்கு வேண்டிய அனைத்து மருத்துவ உதவிகளையும் மருத்துவமனைக்கு அரசு செலவில் அழைத்து சென்று மருத்துவ உதவியும்மாற்று திறனாளிகள் நல அலுவலரிடமும் வேண்டிய பொருட்களை உடன் வழங்கவும் 5 மாதமாக நின்று போனமாத உதவித்தொகை வீட்டிற்கே ஒவ்வொரு மாதமும் கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள் என அனைத்து அரசு துறைகளுக்கும் உத்தரவு பிறப்பித்தார்.

    உடனடியாக அனைத்து அரசு அதிகாரிகளும் நேரில் சென்று அனைத்து உதவிகளுக்கான பணிகளை யும் முழுவீச்சில் செய்து வருகின்றனர்.

    திடீரென்று மாவட்ட கலெக்டர்வீட்டிற்கு நேரில் வந்து வீல் சேர்வாட்டர் பெட், 2 ஊன்றுகோல், மாற்று திறனாளி உதவிதொகைமற்றும் மருத்துவ உபகரணங்களை வழங்கினார்.

    மாற்றுத்திறனாளி 30 ஆண்டுகளாக கஷ்டப்பட்டு வந்த நிலையில் தகவல் கிடைத்தவுடன் 30 நிமிடத்தில் அனைத்து உதவிகளையும் செய்த கலெக்டர் அருண்தம்பராஜ் நேரில் சென்று அனைத்து உதவிகளையும் செய்தது ஆறுதல் கூறியது அந்த குடும்பத்தினரை மகிழ்ச்சி அடைய செய்தது. அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரை பாராட்டி வருகின்ரனர்.

    நிகழ்ச்சியில் வேதாரண்யம் கோட்டாட்சியர்ஜெயராஜ பெளலின், மாவட்ட மாற்றுதி றனாளி மாவட்டஅலுவலர் சீனிவாசன், செய்தி மக்கள் தொடர்புஅலுவலர் செய்வகுமார், வருவாய் ஆய்வாளர் மாதவன், கிராம நிர்வாக அலுவல ர்கனகசுந்தரம், சமூக ஆர்வலர் சிவகுமார் மற்றும் சுகதார துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

    • மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் இன்று பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடைபெற்றது.
    • போட்டிகளில் மாற்றுத்திறனாளி மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் உற்சாகமாக பங்கேற்றனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அரண்மனைபுதூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் இன்று பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடைபெற்றது. மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு 50 மீட்டர் ஓட்டப்பந்தயம், பொட்டேட்டோ கேதரிங், கலெக்டிங் தி பால்ஸ், பலூன் ஊதுதல், தண்ணீர் நிரப்புதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டிகளில் மாற்றுத்திறனாளி மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் உற்சாகமாக பங்கேற்றனர். இந்த விளையாட்டுப் போட்டிகளை திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவளர்ச்செல்வி துவக்கி வைத்தார்.


    • மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு 50 மீட்டர் ஓட்டப்பந்தயம், பலூன் ஊதுதல், தண்ணீர் நிரப்புதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது.
    • மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, இணைவோம்- மகிழ்வோம் என்ற தலைப்பில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.

    பல்லடம் :

    பல்லடத்தில், பள்ளிக்கல்வித்துறை சார்பில் டிசம்பர் 3ந்தேதி மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, இணைவோம்- மகிழ்வோம் என்ற தலைப்பில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் பல்லடம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் திட்ட ஒருங்கிணைப்பாளர் பாலசுந்தரி தலைமை வகித்து விளையாட்டுப் போட்டிகளை துவக்கி வைத்தார்.

    மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு 50 மீட்டர் ஓட்டப்பந்தயம், பலூன் ஊதுதல், தண்ணீர் நிரப்புதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது. இதில், தி.மு.க. நகரச் செயலாளர் ராஜேந்திரகுமார், அறம் அறக்கட்டளை தலைவர் செந்தில்குமார், பள்ளிக்கல்வி குழு நிர்வாகி மார்க்கெட் தங்கவேல், மற்றும் ஜெகதீஷ்,குட்டி பழனிசாமி, நடராஜன்,துணை தலைமை ஆசிரியர் சசிகலா, மாற்றுத்திறனாளி மாணவர்கள், மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கீழ்வேளூர் வட்டார வள மையம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.
    • ஓட்டப்பந்தயம், உயரம் தாண்டுதல், பலூன் உடைத்தல், பாட்டிலில் நீர் நிரப்புதல், ரொட்டி கடித்தல், இசை நாற்காலி உள்ளிட்ட போட்டிகள் நடந்தது.

    நாகப்பட்டினம்:

    உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி கீழ்வேளூர் வட்டார வள மையம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப்போட்டிகள் நடைபெற்றது.

    போட்டியை முதன்மை கல்வி அலுவலர் சுகாசினி தொடங்கி வைத்தார்.

    இதில் ஓட்டப்பந்தயம், உயரம் தாண்டுதல், பலூன் உடைத்தல், பாட்டிலில் நீர் நிரப்புதல், ரொட்டி கடித்தல், இசை நாற்காலி உள்ளிட்ட போட்டிகள் மாற்றுத்திறனாளிகளுக்கு நடத்தப்பட்டது.

    இதில் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

    போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் பதக்கங்கள் வழங்கப்பட்டது.

    இதில் மாவட்ட கல்வி அலுவலர் செல்வராஜ் வட்டார கல்வி அலுவலர் மணிகண்டன் மற்றும் மேற்பார்வையாளர் (பொறுப்பு) அமுதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    ×