search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TNPSC Exam"

    • ஒருங்கிணைந்த குரூப் 2 பணியிடங்களுக்கான முதல்கட்ட நேர்முகத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதற்கான முடிவை டி.என்.பிஎஸ்.சி வலைதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
    • நேர்காணல் கொண்ட 161 பதவிகளுக்கு மட்டும் 1:3 என்ற அளவில், 483 தேர்வர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, பிப்ரவரி 12 முதல் நேர்காணல் நடத்தப்பட்டது.

    ஒருங்கிணைந்த குரூப் 2 பணியிடங்களுக்கான முதல்கட்ட நேர்முகத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதற்கான முடிவை டி.என்.பிஎஸ்.சி வலைதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். நேர்முகத்தேர்வு இல்லாத பணியிடங்களுக்கான முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை

    அரசுத் துறைகளில் குரூப் 2 மற்றும் 2ஏ பணி நிலையில் காலியாக உள்ள 6,151 பணியிடங்களை நிரப்புவதற்காக குரூப் 2 மற்றும் 2ஏ முதல்நிலைத் தேர்வு கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வுக்கு 11 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்த நிலையில், சுமார் 9 லட்சம் பேர் தேர்வை எழுதினர். இவர்களுக்கான முதல்நிலைத் தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு, அக்டோபர் மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டது. தொடர்ந்து கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தேர்வு முடிவுகள் வெளியாகின. குரூப் 2, 2 ஏ முதன்மைத் தேர்வு முடிவுகள் கடந்த மாதம் 11-ம் தேதி வெளியாகியது.

    நேர்காணல் கொண்ட 161 பதவிகளுக்கு மட்டும் 1:3 என்ற அளவில், 483 தேர்வர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, பிப்ரவரி 12 முதல் நேர்காணல் நடத்தப்பட்டது.

    நேர்காணல் அல்லாத பதவிகளுக்கான கணினி வழி சான்றிதழ் சரிபார்ப்புக்கான முடிவுகள் தேர்வாணைய வலைதளத்தில் இருவழித் தொடர்பு முறையில் (Interactive Mode) வெளியிடப்பட்டுள்ளது.

    இந்நிலையில், நேர்காணல் பதவிகளுக்கு மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பட்டியலை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. நேர்காணல் அல்லாத பணிகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பட்டியல் வெளியாகவில்லை, இன்னும் சில தினங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • ஹால்டிக்கெட், அடையாள அட்டை கொண்டு வந்தவர்கள் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.
    • சென்னையில் அமைக்கப்பட்ட 18 மையங்களில் 4608 பேர் தேர்வு எழுதினார்கள்.

    சென்னை:

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் (டி.என்.பி.எஸ்.சி.) ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் குரூப்-3 ஏ பதவிக்கான எழுத்து தேர்வு தமிழகத்தில் நேற்று நடந்தது.

    தொடர்ந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழ்நாடு ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலை பணிகளில் புள்ளியியல் உதவி ஆய்வாளர் பதவியில் 211 பேர், கணக்காளர்- 5, புள்ளியியல் தொகுப்பாளர் ஒருவர் என மொத்தம் 217 காலி பணியிடங்களுக்கான தேர்வு தமிழகம் முழுவதும் 15 மாவட்டங்களில் நடைபெற்றது.

    இதற்கான தேர்வு மையங்கள் கல்லூரிகள், பள்ளிகளில் அமைக்கப்பட்டிருந்தன. தேர்வு எழுதுவதற்காக தேர்வர்கள் காலை 8 மணி முதலே தேர்வு மையங்களுக்கு வர தொடங்கினர்.

    பின்னர் அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு எழுதும் அறைக்கு சென்றனர். முன்னதாக அவர்களது நுழைவு சீட்டை அதிகாரிகள் சரி பார்த்தனர். இதில் ஹால்டிக்கெட், அடையாள அட்டை கொண்டு வந்தவர்கள் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். மேலும் குறிப்பிட்ட நேரத்திற்குள் தேர்வு மையங்களுக்கு வராதவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை.

    தேர்வு மையத்தில் அதிகாரிகள் கொண்ட குழுவினர் கண்காணிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். மேலும் தேர்வு மையங்களில் வீடியோ மூலமும் தேர்வு கண்காணிக்கப்பட்டது. இந்த தேர்வுக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து 35 ஆயிரத்து 286 பேர் விண்ணப்பித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    இந்த தேர்வு காலை, பிற்பகல் என 2 கட்டமாக நடைபெற்றது. காலை 9.30 மணி முதல் பகல் 12.30 மணி வரை தேர்வு நடந்தது. பிற்பகலில் 2.30 மணி முதல் 5.30 மணி வரை தேர்வு நடைபெறுகிறது.

    தமிழகம் முழுவதும் 126 மையங்களில், 35 ஆயிரத்து 286 பேர் தேர்வு எழுதினார்கள். சென்னையில் மட்டும் 18 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இங்கு 4608 பேர் தேர்வு எழுதினார்கள்.

    • தமிழகத்தில் குரூப் 4 போட்டித் தேர்வு வரும் 24-ம்தேதி நடைபெற உள்ளது.
    • ஹால்டிக்கெட்டை இணையதளங்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    சென்னை :

    தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவையான ஊழியர்களை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் அரசு தேர்வு செய்து வருகிறது. திறமையான ஊழியர்களை கண்டறிய பல்வேறு போட்டித்தேர்வுகள் மற்றும் நேர்காணல் ஆகியவற்றை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகின்றனர்.

    அரசு பணிகளின் அடிப்படையில் இந்த தேர்வுகள் குரூப் 1, குரூப் 2, குரூப் 3 மற்றும் குரூப் 4 மற்றும் குரூப் 5,6,7,8 ஆகிய தேர்வுகள் நடத்தப்படுகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர்(வி.ஏ.ஓ.), தட்டச்சர், இளநிலை உதவியாளர், நில அளவையாளர் உள்ளிட்ட 7 ஆயிரத்து 382 அரசு பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு ஜூலை 24 ஆம் தேதி நடைபெறுகிறது.

    இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை இன்று டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டு உள்ளது.

    விண்ணப்பதாரர்களின் ஹால்டிக்கெட் www.tnpsc.gov.in , www.tnpscexams.in என்ற தேர்வாணையத்தின் இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. விண்ணப்பதார்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் மூலம் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய முடியும் என தேர்வாணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பாராளுமன்ற தேர்தல் எதிரொலியாக டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள் அடுத்த மாதம் 5 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நடக்கிறது. #TNPSC #LokSabhaElection
    சென்னை:

    முதுநிலை தொழில்நுட்ப உதவியாளர், இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் காலி பணி இடங்களை நிரப்புவதற்கு வருகிற 20-ந்தேதியும், வேதியியலர், இளநிலை வேதியியலர் பணி, உதவி புவியியலர், புவி வேதியியலர், அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளின் துணை கண்காணிப்பாளர் பணி இடங்களுக்கு 21-ந்தேதியும் தேர்வு நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவித்திருந்தது.

    இந்தநிலையில் இந்த தேர்வுகள் திடீரென்று தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் க.நந்தகுமார் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்திய தேர்தல் ஆணையம் தமிழகத்தில் வருகிற 18-ந்தேதி பாராளுமன்ற தேர்தலை நடத்துவதாக அறிவித்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு நிர்வாக காரணங்களுக்காக வருகிற 20 மற்றும் 21-ந்தேதிகளில் நடைபெற இருந்த எழுத்து தேர்வுகளை பின் வரும் தேதிகளில் நடத்துவதற்கு தேர்வாணையம் முடிவு செய்துள்ளது.

    அதன் விவரம் வருமாறு:-

    * முதுநிலை தொழில்நுட்ப உதவியாளர்/இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் எழுத்து தேர்வு- மே.11-ந்தேதி (காலை மற்றும் மதியம்)

    * வேதியியலர்/ இளநிலை வேதியியலர் எழுத்து தேர்வு - மே.5-ந்தேதி(காலை மற்றும் மதியம்)

    * உதவி புவியியலர்/ புவி வேதியியலர் எழுத்து தேர்வு - மே.5-ந்தேதி(காலை மற்றும் மதியம்)

    * அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளின் துணை கண்காணிப்பாளர் எழுத்து தேர்வு- மே.5-ந்தேதி (காலை மற்றும் மதியம்)

    இந்த தேர்வுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த சென்னை, மதுரை, கோவை ஆகிய 3 மாவட்டங்களில் நடைபெறும்.

    ஏற்கனவே அறிவித்தப்படியே, கணக்கு அலுவலர்கள் (பிரிவு-3) பணி இடங்களுக்கு எழுத்து தேர்வு மே.5-ந்தேதியும், அரசு குற்றவியல் உதவி வக்கீல்கள் (நிலை-2) முதன்மை எழுத்து தேர்வு மே.11 மற்றும் 12-ந்தேதியும் நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    தமிழகம் முழுவதும் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வை 6 லட்சம் பேர் எழுதினார்கள். ஒரு பதவிக்கு 500 பேர் போட்டியிடுகின்றனர்.
    சென்னை:

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டி.என்.பி.எஸ்.சி.) 1,199 ஒருங்கிணைந்த குடிமை பணிகளுக்கான குரூப்-2 தேர்வு(நேர்முகத்தேர்வு உள்ளடக்கிய) குறித்த அறிவிப்பை கடந்த ஆகஸ்டு மாதம் 10-ந்தேதி வெளியிட்டது.

    இந்த தேர்வுக்கு தமிழகம் முழுவதும் 6 லட்சத்து 35 ஆயிரத்து 212 விண்ணப்பங்கள் பெறப்பட்டு இருந்தன. இதில் 8 ஆயிரத்து 242 விண்ணப்பங்கள் முறையாக பூர்த்தி செய்யவில்லை என்ற அடிப்படையில் நிராகரிக்கப்பட்டு, மீதம் உள்ள 6 லட்சத்து 26 ஆயிரத்து 970 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் தெரிவித்து இருந்தது.

    இதில் 3 லட்சத்து 54 ஆயிரத்து 391 ஆண் விண்ணப்பதாரர்களும், 2 லட்சத்து 72 ஆயிரத்து 569 பெண் விண்ணப்பதாரர்களும், 10 மூன்றாம் பாலினத்தவர்களும் அடங்குவர். தேர்வு எழுத தகுதிபெற்ற 6 லட்சத்து 26 ஆயிரத்து 970 பேரில், 4 லட்சத்து 81 ஆயிரத்து 80 பேர் தமிழ் வழியிலும், 1 லட்சத்து 45 ஆயிரத்து 890 பேர் ஆங்கில வழியிலும் தேர்வு எழுத விருப்பம் தெரிவித்து இருந்தனர்.



    இவர்களுக்கான எழுத்து தேர்வு தமிழகம் முழுவதும் 116 மையங்கள் மூலம் 2 ஆயிரத்து 268 இடங்களில் நேற்று நடந்தது. தமிழகம் முழுவதும் இந்த தேர்வுகளை கண்காணிக்க 2 ஆயிரத்து 94 தலைமை கண்காணிப்பாளர்களும், அவர்களுக்கு கீழ் 31 ஆயிரத்து 349 கண்காணிப்பாளர்களும் நியமிக்கப்பட்டு இருந்தனர். தேர்வு நடந்த 2 ஆயிரத்து 268 இடங்களிலும் வீடியோ பதிவும் செய்யப்பட்டது. தேர்வில் முறைகேடுகளை தடுக்க 254 பறக்கும் படையினரும், 413 நடமாடும் குழுக்களும் நியமித்து இருந்தனர்.

    தேர்வுக்கு தலைமை ஒருங்கிணைப்பாளர்களாக கலெக்டர்களும், ஒருங்கிணைப்பாளராக மாவட்ட வருவாய் அதிகாரிகளும் நியமிக்கப்பட்டு இருந்தனர். சென்னையில் மட்டும் 247 இடங்களில் குரூப்-2 தேர்வு நடைபெற்றது. மொத்தம் 64 ஆயிரத்து 309 பேர் சென்னையில் இந்த தேர்வை எழுதினர்.

    காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த தேர்வு பிற்பகல் 1 மணி வரை என 3 மணி நேரம் நடைபெற்றது. சென்னை மாவட்ட கலெக்டர் அ.சண்முகசுந்தரம் ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள ராணி மெய்யம்மை மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த தேர்வை பார்வையிட்டார். தேர்வு தொடங்குவதற்கு முன்னதாக தேர்வுக்கு வந்த தேர்வர்கள் கையில் செல்போன், கால்குலேட்டர் ஆகிய மின்சாதன பொருட்கள் எடுத்து செல்கின்றனரா? என்பதெல்லாம் தேர்வு நடந்த இடங்களில் கண்காணிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டனர்.

    தேர்வு முடிந்து வெளியே வந்த தேர்வர்களிடம் கேட்டபோது, ‘பொது தமிழ் மற்றும் ஆங்கிலம் பகுதியில் கேட்கப்பட்ட வினாக்கள் அனைத்தும் எளிதாக இருந்தது. ஆனால் பொது அறிவு பகுதியில் சில வினாக்கள் கடினமாக கேட்கப்பட்டு இருந்தது’ என்று தெரிவித்தனர். நடப்பு நிகழ்வுகள் பகுதியில் லோக் ஆயுக்தா பற்றியும், மத்திய அரசின் திட்டங்கள் தொடர்பாகவும், சமீபத்தில் கேரளாவில் ஏற்பட்ட வெள்ளப்பாதிப்பு பற்றியும் வினாக்கள் கேட்கப்பட்டு இருந்தன.

    1,199 காலிப்பணியிடங்களுக்கு 6 லட்சத்து 26 ஆயிரத்து 970 பேர் தேர்வு எழுத தகுதி பெற்று இருந்தனர். அவர்களில் சுமார் 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நேற்று தேர்வு எழுதியதாக டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் தெரிவித்தது. அந்த அடிப்படையில் வைத்து பார்க்கும் போது ஒரு பதவிக்கு 500-க்கும் மேற்பட்டோர் போட்டியிடுகின்றனர்.

    எழுத்து தேர்வு முடிவுற்ற நிலையில், இந்த தேர்வு முடிவு விரைவில் வெளியிடப்படும் என்றும், அதனைத்தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பும், நேர்முகத்தேர்வும் நடைபெற இருக்கிறது என்றும் டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் தெரிவித்தனர்.
    டி.என்.பி.எஸ்.சி. தேர்வு நடத்தும் பொறுப்பை தனியாரிடம் ஒப்படைக்க கூடாது என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் நிரூபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #GKVasan #TNPSCExam

    மதுரை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் மதுரை விமான நிலையத்தில் இன்று நிரூபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் நக்சலைட்டுகள் ஊடுருவியுள்ளதாக முன்னாள் மத்திய மந்திரி சுப்பிரமணியசாமி கூறியுள்ளார். இந்த குற்றச்சாட்டுக்கு முதல்-அமைச்சரோ, சம்பந்தப்பட்ட துறையே இதுவரை பதில் அளிக்கவில்லை.

    எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டுவர ஆளும் கட்சிகள் மட்டுமல்ல எதிர்க் கட்சிகளும் இணைந்து குரல் கொடுத்தன. அதன் பயனாகத்தான் நமக்கு எய்ம்ஸ் மருத்துவமனை கிடைத்துள்ளது.

    டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளை தனியார் மூலம் நடத்த அரசு முயற்சிப்பதாக தகவல்கள் வருகின்றன. இதனால் பல குளறுபடிகள் நடக்க வாய்ப்புகள் உள்ளது. இது ஏற்புடையதல்ல.

    மாநில அரசு நிதி நெருக்கடி என கூறியுள்ளது. ஆனால் பல்கலைக்கழக ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவதாக அறிவித்துள்ளது.

    அதற்கு முன் போக்குவரத்து தொழிலாளர்கள், விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையினை உடனே வழங்க வேண்டும்.

    மேற்கண்டவாறு அவர் கூறினார். #GKVasan #TNPSCExam

    டி.என்.பி.எஸ்.சி. முதல்தொகுதி தேர்வுக்கான வயது வரம்பை 40 ஆக அரசு உயர்த்தவேண்டும் என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். #TNPSC
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தும் முதல் தொகுதித் தேர்வுக்கான வயது வரம்பை பொதுப்பிரிவினருக்கு 30 வயதிலிருந்து 32 ஆகவும், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 35 வயதிலிருந்து 37 வயதாகவும் உயர்த்தி தமிழக அரசு ஆணையிட்டிருக்கிறது. இது ஓரளவு வரவேற்கத்தக்க நடவடிக்கை தான் என்றாலும் கூட போட்டித்தேர்வர்களுக்கு முழுமையான பயனை அளிக்காத நடவடிக்கையாகும். தமிழகத்தில் முதல் தொகுதி தேர்வுக்கான அதிகபட்ச வயது வரம்பு 40-லிருந்து 35 ஆக குறைக்கப்பட்ட நிலையில் அதை 37 ஆக மட்டும் உயர்த்துவதால் எந்த பயனும் ஏற்படாது. எனவே முதல்தொகுதி தேர்வுக்கான வயது வரம்பை 40 ஆக அரசு உயர்த்தவேண்டும்.

    தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகத்துக்கு மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா பெயரை சூட்டப்போவதாக தமிழக அரசு அறிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது. ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட ஒருவரின் பெயரை கல்வி நிலையத்துக்கு சூட்டுவது ஏற்கத்தக்கதல்ல. எனவே மீன்வள பல்கலைக்கழகத்துக்கு இப்போதுள்ள பெயரே நீடிக்கும் என தமிழக அரசு அறிவிக்கவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இதேபோல இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “குரூப்-1 தேர்வு எழுதும் மாணவர்களுக்கான வயது வரம்பை உயர்த்தியிருப்பதாக முதல்-அமைச்சர் அறிவித்திருக்கிறார். இடஒதுக்கீட்டு பிரிவு மாணவர்களுக்கு 35-ல் இருந்து 37 ஆகவும், இதர பொதுப்பிரிவு மாணவர்களுக்கு 30-லிருந்து 32 ஆகவும் வயது உச்சவரம்பினை உயர்த்தியுள்ள தமிழக அரசின் அறிவிப்பை வரவேற்கிறேன்” என்று கூறப்பட்டுள்ளது.  #TNPSC #tamilnews 
    ×